Wednesday, February 8, 2012

சிதம்பரம் பேச்சுக்கு தவணை முறையில் மறுப்பு

கூடங்குளம் அணு உலை வேண்டாம் என்ற குரல் இந்தியா முழுவதும் கேட்டபின் நாடு முழுவதும் உள்ள வார இருக்கும் அணு உலைகளை எதிர்க்கும் போக்கை அது ஏற்படுத்துகிறது என்று உணர்ந்த பின், தலைமை மைச்சர் அலுவலகம் விழித்து கொண்டு இதை விடகூடாது என முடிவு எடுத்து அதற்கு பிறகு உள்துறை வசம் அந்த பொறுப்பை ஒப்படைத்துள்ளது. உள்துறை தமிழ்நாட்டு காங்கிரசி தனக்கு செல்வாக்கு இல்லையே என்ற நிலையில் முதலில் இணை மைச்சர் நர்ரயன்சாமியை அனுப்பி எதிர்க்க சொன்னது. அதாவது அணு உலையை ஆதரிக்க சொன்னது. அந்த மனிதன் தன்னை தபால்காரர் போல காட்டி கொண்டதால் தமிழக மக்களிடம் தனிப்பட்டு விட்டார். பிறகுதான் நெல்லை நாடாளுமன்ற தொகுதி எம்.பி.யான வாசன் குழுவை சேர்ந்த ராம்சுப்புவை பிடித்ஹ்டு அணு சக்தி துறை அவருக்கு "காசுகள்" கொடுத்து அவர்மூலம் பல "வேலையற்ற பேச்சாளர்களை" அழைத்து வந்து கூட்டம் போட, பட்டினிப்போர் நடத்த என்று நாடகம் ஆடினார்கள். அதுவும் எடுபடாத நிலையில் சிதம்பரமே நேரில் வர ஏற்பாடு செய்தார்.

பிரதமர் அலுவலக வற்புறுத்தலில் இணை சேராத தமிழக காங்கிரசின் குழுக்கள் இணை சேர்ந்தன.சிதம்பரம் இரண்டாம் அலைகற்றை வரிசை ஊழலில் சிக்கி "மூஞ்சி" வெந்துபோன நிலையில் இந்த பிரதமர் அலுவலக வற்புறுத்தலுக்கு ஒப்புகொண்டார்.அதுவே பாளையம்கோட்டை ஜவர் மைதானம் பொது கூட்டமாக நாலாம் நாள் அதாவது சிங்களர்களின் தேசிய தினத்தில் போடப்பட்டது. அதாவது தமிழர்களுக்கு எதிரானது அந்த அணு உலை என்று உணர்ந்த சிதம்பரம் தமிழர்களுக்கு எதிரானவர்களின் தேசிய நாளை தேர்வு செய்தது பொருத்தமானதே. அந்த கூட்டத்தில் அவர்கள் பேசிய பெசுகளை ஒவ்வொன்றாக எடுத்து கொண்டு பதில் கொடுக்க வேண்டிய பொறுப்பு நமக்கு உண்டு.

முதலில் தேடிபார்த்தும் அந்த காங்கிரஸ் மத்திய மைச்சர்கள் யாருமே "அணு உலை" பற்றிய விவரங்களை பேசவில்லை. அதாவது அணு உலை கூடாது என்போரது வாதத்தையோ, அதற்கு பதிலாக அணு உலை சரிதான் என்ற வாதத்தையோ மக்கள் முன்னே வைக்க அவர்கள் முயற்சிக்க வில்லை.அவர்கல்யருகுமே அது பற்றி தெரிந்திருக்க வில்லை என்றும் எடுத்து கொள்ளலாம். சர்ச்சைக்குள்ளான கேள்விகளுக்கு விடை தெரியாது என்றும் எடுத்து கொள்ளலாம். அணு உலை பற்றி அவர்களுக்கு சந்தேகம் உண்டு என்றும் எடுத்து கொள்ளலாம். நமெகென்ன என்று அக்கறையற்றவர்கள் என்றும் எடுத்து கொள்ளலாம்.மொத்தத்தில் எந்த விதத்திலும் திருநெல்வேலி மக்களை புரிய வைக்கவோ,தெளிவு படுத்தவோ விளக்கம் அழிக்கவோ அவர்கள் அந்த கூட்டத்தை நடத்தவில்லை எனபது மட்டும் தெரிகிறது.

அப்படியானல்தமிழக அரசுக்கு "தலைவலி" கொடுக்கவே அவர்கள் கூட்டம் நடத்தினர் என்பது இதிலிருந்தே தெரிகிறது.இப்படி ஒரு உள்துறை அமைச்சர் நமக்கு கிடைத்துள்ளார்.அடுத்து அனர்த்த சிதம்பரம் அணு உலை எதிர்ப்பு என்ற இருபத்தைந்தாண்டு போராட்டத்தில் இன்று இடிந்தகரை பகுதியில் நாடாகும் அடையாள தொடர் போரில் பெரும் அழுவு மக்கள் பங்கு கொண்டிருக்கும் பொது, அதில்; முன்னணியில் இருப்பவர்களை மட்டும் தனிமை படுத்த முயருள்ளார் எனபது அவரது பேச்சின் முயற்சி.அதற்கு அவர் கைகொண்ட விதம் இப்போது நம்மிடமிருந்து பதிலை தூண்டி விட்டது.அதுதான் இருபத்தைந்து ஆண்டுகாலமாக "சும்மா" இருந்து விட்டு பதின்மூன்று ஆயிரம் கோடிகளை செலவழித்த பிற்பாடு என் எதிர்த்து போராடுகிறீர்கள் என்று கேட்டிருக்கிறார்.அந்த இடத்தில்தான் அய்யா மாட்டிக் கொண்டார். இருபத்தைந்து ஆண்டுகளாக நடந்த போராட்டங்களை நாம் விளக்கபுரப்புடுவோம்.

No comments:

Post a Comment