Wednesday, February 29, 2012

கலைஞர் மீது கோபப்படும் தமிழர்களுக்கு.....

கடைசியாக "பூனை பையை விட்டு வெளியே வந்துவிட்டது".இதுதானே கலைஞர் அவர்களது கூடங்குளம் பற்றிய அறிக்கைக்கு பிறகு தமிழர்களது கருத்து? கூடங்குளத்தில் அணு உலை வரவேண்டும் என்று கலைஞர் கூறியதையும், ஜெயலலிதா என் மொவுனமாக இருக்கிறார் என்று கலைஞர் கேட்டத்தையும், கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்திற்கு ."பின்புல்கமாக" இருக்கிறாரா? என்று ஜெயா பற்றி கலைஞர் கேட்டதையும், கேள்விப்பட்ட தமிழர்கள் அனைவரும் கோபப்படுகிறார்கள். இதுவரை கருத்து சொல்லாத திமுக இப்போதாவது கருத்து கூறியிருக்கிறதே? என்று மகிழ்ச்சி அடையுங்கள். கலைஞருக்கு அணு உலை பற்றி தெரியாதா? அதன் தீமை புரியாதா? ஏற்கனவே இருபத்தைந்து ஆண்டுகள் முன்பு அவரது ஆட்சி காலத்தில் கூடங்குளம் சென்று அணு உலைக்கான அடிக்கல்லை நட்ட முயன்றாரே? அப்போது அதை எதிர்த்து ஆண்டன் கோம்ஸ் தலைமையில் போராட்டம் அறிவிக்கப்பட்டதால் அதை கை விட்டாரே? அதை மறந்துவிட்டாரா? அப்படியொன்றும் இல்லை. அவருக்கு எல்லாம் தெரியும். ஆனாலும் இன்று மின்சாரம் தடை செய்யப்படுவது அதிகரித்துள்ள நிலையில் தமிழக மக்களில் பெரும்பாலோர் எந்த மின்சாரம் பற்றிய அறிவும் இல்லாமல், எந்த ஒரு மின் உற்பத்தி முறைகளை பற்றிய அறிவும் இல்லாமல், கூடங்குளம் அணு உலை உற்பத்தியை ஆரம்பித்தால் போதும், உடனேயே எல்லோருக்கும் ம்ன்சாரம் கிடைத்து விடும் என்ற பொய் பரப்பலை நம்பி அணு உளையாவ்து வரட்டும், மின்சாரம் வேண்டும் என்று எண்ணுகிறார்கள் என்பதை தெரிந்து கொண்டு அடுத்தவர் ஆட்சி மீது "தவறாகா " ஒரு அதிருப்தி கிளம்பினாலும் பரவாயில்லை என்ற "புத்தியை" வைத்து கொண்டு காய் நகர்த்துகிறார்

ஆனால் 1987 இல் நடந்தது என்ன என்பதை நாம் மக்கள் முன்பு சொல்லியாக வேண்டும். அப்போது கூடங்குளம் அணு உலைக்கு எதிரான கருத்துகள் சென்னையில் மையங்கொண்ட நேரம். டாக்டர் சி.என்.தெய்வநாயகம் அந்த அணு உலையை எதிர்த்து அதனால் உருவாகும் "புற்று நோய்களை" விளக்கி "காணொளி" மூலம் எங்களை எல்லாம் உருவாக்கி வந்த காலம். யு.என்.ஐ. செய்தி நிறுவன ஜி.ரமேஷ் ஜார்ஜ் பெர்ணன்டஸ் மூலம் அணு உலை எதிர்ப்பையும் கற்றுக் கொண்டு, எங்களை திரட்டி வந்த நேரம். அப்போது ஜூனியர் விகடனில் ஜி.ரமேஷ் "நாகார்ஜுன்" என்ற பெயரில், ஏ.எஸ். பன்னீர்செல்வம் அணு உலகை ஆபத்தை பற்றி தொடர் எழுதிய காலம். அப்போது திமுக வின் முரசொலி ஏடு, ஒரு வார ஏடு கொண்டு வந்தது. அதற்கு பெயர் "புதையல்" . அந்த ஏட்டிற்கு ஞானி ஆசிரியராக இருந்தார். அந்த எட்டில் அணு உலைகளின் ஆபத்தை பற்றி பக்கம், பக்கமாக எழுதினார். அப்போது முரசொலி மாறனிடம் அணு உலயுகளின் ஆபத்து பற்றி ஞானி பெசினார்ட். மூன்று மணி நேரம் பேசியதாக இப்போதும் நினைவாக கூறுகிறார். அதை முரசொலி மாறன் ஏற்றுக் கொண்டு, திமுக செயற்குழுவில் அணு உலயுகளின் ஆபத்து பற்றி விளக்கினார். அதையொட்டி திமுய்க விற்கும் அணு உலைகளை எதிர்க்க வேண்டும் என்ற எண்ணம் உருவானது. அதையொட்டியே கலைஞர் வழிகாட்டலில் வைகோ நாடாளுமன்றத்தில் அணு உலயுகளின் ஆபத்தை பற்றி உரையாற்றினார். அதன்பிறகு திமுக தனது செயற்குழு தீர்மானத்தில் அடுத்த ஆண்டே "பாதுகாப்பான அணு உலைகள் வேண்டும்" என்று மாற்றி எழுதியது. இந்த சந்தர்ப்பவாத மாற்றம் ஏன் என்று ஞானி முரசொலி மாறனிடம் கேட்டுள்ளார்.அடஹ்ர்கு மாறன் வெளிப்படையாக உங்களுக்கு தெரியாதா ஞானி? மத்திய பாதுகாப்பு அமைச்சரவையிலிருந்து நெருக்கடி கொடுத்து விட்டார்கள் என்று பதில் சொல்லியிருக்கிறார். இந்த தகவலை ஞானியே சென்ற வாரம் நடந்த வழகக்ரிஞர்களின் அணு உலை எதிர்ப்பு கூட்டத்தில் கூறினார். . இதுதான் திமுக.

இப்போது புரிகிறதா? கலைஞர் யார் என்று புரிய நமக்கு இத்தனை தூரம் சென்று நிரூபிக்க வேண்டுமா? இப்போது சிதம்பரம் கலைஞரை தொடர்பு கொண்டு நீங்கள் அணு உலை எதிர்ப்பு நிலை எடுக்காதீர்கள் என்றும், ஜெயாவிற்கு நெருக்கடி கொடுங்கள் என்றும் கூறியதிலிருந்து தான் திமுக களத்தில் இப்போது குதித்து காங்கிரஸ் மத்திய அரசுக்கு எதிராக வரும் புயலை நிறுத்தி வைத்து காங்கிரஸ் அரசை காப்பாற்ற பேசுகிறது. அதில் மக்களின் பின்தங்கிய உணர்வுகளை பயன்படுத்த திமுக எண்ணுகிறது. இது மீனவ மக்களை மட்டுமல்ல, எல்லா தமிழர்களையும் திமுக விற்கு எதிராக மீண்டுமொருமுறை திருப்பிவிடும் என்று கலைஞர் எண்ணி பார்த்தாரா?

Tuesday, February 28, 2012

யாரை குறிவைக்கிறார் கலைஞர்?

திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு தொடக்கவிழா என்பதாக கலைஞர் தலைமையில் அன்பழகன், கி.வீரமணி, சுப.வீரபாண்டியன் ஆகியோர் முழங்க இன்று முரசொலி முக்கியமாக வெளியிட, நமக்கெல்லாம் எதோ வரலாற்று செய்திகளை அளிக்க இருக்கிறார் என்று எண்ணினால், இது வேறு எங்கோ செல்வதுபோல தெரிகிறது. .திராவிடமே தமிழ் என்றும் தமிழே திராவிடம் என்று அப்போது கலைஞர் அறிவித்தார். 1942 ஆம் ஆண்டு மார்ச் எட்டாம் நாள் "திராவிட நாடு" நாளிதழை தொடக்கி வைத்து அண்ணா அதில் எழுதிய ஐந்து நாள் தொடர் தலையங்கத்தில், "தமிழ்நாடு என்றால் திராவிடநாடு என்றும், திராவிடநாடு என்றால் தமிழ்நாடு என்றும்" நாம் எடுத்து காட்டவேண்டிய அவசியம் சிறிதும் இல்லாமல் எத்தனையோ ஆதாரங்கள் இருக்கின்றன, என்பதாக ஆன்னாவை மேற்கோள் காட்டுகிறார் கலைஞர். ஜெம் டிக்சனரி யில் 440 தாவது பக்கம், ஐந்தாவது வரியில் திராவிட என்பதற்கு தமிழ்நாடுஎன்று போடப்பட்டுள்ளது என்றார் கலைஞர். இப்படி பல உதாரணங்களை காட்டி அவர் என் இன்று இந்த அளவு அன்று கூறிய கருத்துகளை கூறி வாதாட தேவை எழுந்துள்ளது?


அதற்கு கலைஞர் வழக்கம்போல பல உதாரணங்களை காட்டுகிறார். அதில் முரசொலி மாறன் எழுதிய திராவிட இயக்க வரலாறு, ராதா மணாளன் எழுதிய திராவிட இயக்க வரலாறு, திருநாவுக்கரசு எழுதிய நீதிக்கட்சி வரலாறு, வரதராஜுலு நாயுடு எழுதிய நீதிக்கட்சி இயக்கம், என்று தொடக்கி பல ஆதாரங்களை காட்டுகிறார். டி.எம்.பார்த்தசாரதி எழுதிய "திமுக வரலாறு" என்ற புத்தகத்தை கலைஞர் கவனமாக மறந்துவிட்டார். அதில் கருணாநிதி பெயர் முக்கிய பெயர்களில் இல்லை என்பதால் அதை கூறமாட்டார் என்று நாம் கூறத்தயாராயில்லை. ஆனால் இன்று தமிழ்நாட்டு இளைஞர்கள் மத்தியில் ஒரு தமிழின அடையாளம் "சரியாகவோ, தவறாகவோ" பறப்பட்டு வருகிறது அதில் "திராவிடர்" என்பது கர்நாடகம், கேரளா, ஆந்திரா ஆகியவற்றை குறிப்பது என்றும் அந்த மாநிலங்கள இப்போது தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர மறுக்கின்றன என்றும் ஆகவே தமிழனை தமிழன் என்றே விளியுங்கள் என்று கூறுவது ஒரு பரிமாணப் போக்கு என்று அவரால் கூறமுடியவில்லை. ஒருபுறம் நூற்று ஆண்டுகளுக்கு முன்பு இங்கே தமிழ்நாட்டில் வந்து தமிழர் ஆண்களையோ, தமிழ் பெண்களையோ மணமுடித்தவர்கள் ஆந்திராவில் இருந்தும், கர்நாடகாவில் இருந்தும், கேரளாவில் இருந்தும் வந்திருந்தாலும் அவர்கள் "தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும்" பயன்படும் அளவிலும், அதற்கான வேலை திட்டத்திலும் பங்கு கொள்ளும்போது தமிழர்கல்லா காணப்பட வேண்டும் என்ற நமது அடையாளப்படுத்தலில் இருக்கும் அறிவியல் கண்ணோட்டத்தை எடுத்து கொண்டு பேச கலைஞர் தயாராக இல்லை. மாறாக அந்த காலத்தில் திராவிடர் என்றால் தமிழர் என்ற புரிதல் இருந்தது என்பதை இந்த காலத்தில் அண்டை மாநிலங்களான திராவிடர் மாநிலங்கள் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பொது அதை விளக்க முடியாமல் பேசுவது, கீறல் விழுந்த இசைத்தட்டாகவும், பழைய கள்ளை கொடுத்து அதில் வெற்றி பெற முடியாமையையும் காட்டும்.

அதேநேரம் டைம்ஸ் ஆப் இந்தியா எட்டில் இன்று ஒரு கட்டுரை கலைஞரது கூற்று பற்றி வெளிவந்துள்ளது. அதில் சாதியை மீண்டும் கையிலெடுத்து கலைஞர் திராவிடம் பேசுகிறார் என்று கூறப்பட்டுள்ளது. அதாவது "பார்ப்பனர், பார்பனர் அல்லாதோர்" என்ற பழைய கால தமிழ் மக்கள் மத்தியில் எழுந்த சரியான, முற்போக்கான முழக்கத்தை மீண்டும் நினைவு படுத்துகிறார் என்கிறது அந்த கட்டுரை. இன்று கலைஞர் குடும்பத்தில் உள்ள பேரங்கள் ஒவ்வொருவரும் பார்ப்பன குடும்பத்தில் பெண் எடுத்திருப்பதை மாட்டும் வில்லாகி பார்க்கிறதா? என்ற கேள்வி எழாத தமிழ் உள்ளங்கள் இல்லை. இது ஜெயலலிதாவை தாக்கிதான் என்று கூறுவாரும் உண்டு,. இல்லை. இது காஷ்மீர் பண்டிட் குடும்பமான நேரு குடும்ப சந்ததிகளை சுட்டி காட்டுகிறது என்று விள்ளக்குவோரும் உண்டு. அப்பப்பா. கலைஞரின் திராவிட யக்க வராலற்றுக்கு இத்தனை விளக்கங்களா?

Thursday, February 23, 2012

திருபாதியை துரத்தும் தனுஷ் பாடல்.

வேளச்சேரியில் ஐந்து வடநாட்டு பையன்களை சென்னை காவல்துறை ஆணையர் திருபாதி சுடச்சொன்னதும், சொன்னார், இப்போது அவரை தனுஷ் பாடல் துரத்திக் கொண்டு இருக்கிறது. ஊடகவியலாளர்களை கண்டாலே தன்னை துரத்தி கொண்டு வருவதாக அவர் அவதானிக்கிறார். அதுவும் ஒவ்வொரு ஊடகவியலாளரும் தன்னை பார்த்து "ஏன் இந்த கொலைவெறி, கொலைவெறி" என்று பாடிக் கொண்டு வருவது போல அவருக்கு தெரிகிறது. இன்று காலை ஆங்கில ஏடுகளில் அவர் நேற்றுய் கொடுத்த செய்திகளை வெளியிட்டிருந்தார்கள். அதில் ஒன்று மகாராஷ்டிரா காவல்துறையிடம் அனுபவங்களை பரிமாறிக் கொண்டு வருகிறோம். அவர்கள் இதே போல கொள்ளையர்களை வங்கிகளில் குறிப்பாக தேசியமயமாகப்பட்ட வங்கிகளில் கொள்ளையடித்தவர்களை பிடித்திருக்கிறார்கள். ஏன் என்றால் தேசியமயமாகப்பட்ட வங்கிகளில் அந்த படம் எடுக்கும் கேமராக்கள் கிடையாது. இப்படியெல்லாம் ஒரு செய்தி. அதில் மறைந்து இருப்பாக்கும் செய்தி இன்னொன்று. என்ன என்றால் மகாராஷ்ட்ராவில் மும்பையில் எந்த கொள்ளையனையும் அவர்கள் பிடித்ஹ்டு பிறகு, "போலி துப்பாக்கி சூட்டில்" போட்டு தள்ளிவிடுவார்கள். இதை ஊடகவியலாளர்கள் புரிந்து கொள்ள வில்லை போலும்.

அடுத்து ஆணையர் கொடுத்த தகவல் அனைத்து சி.சி.டி.வி.கேமராவிலும் ஒரு மனிதனின் படம் மட்டுமே அதிகமாக பதிவு ஆகியுள்ளது. அவன்தான் கொள்ளையர் தலைவன் என்கிறது ஆணையம். இந்த செய்தி எல்லா ஊடகங்களிலும் இன்று காலை வெளியிடப்பட்டு விட்டது. அதாவது அவரது காவல்துறை ஆணையம் புலனாய்வு செய்து குற்றவாளியை அடையாளம் கண்டுவிட்டிடார்கள் என்று பொருள். அதாவது அந்த செய்தியை பார்த்து நீங்கள் காவல் ஆணையத்தை பாராட்டவேண்டும். அந்த செய்தி வெளிவரும் நேரத்தில் அவர்கள் அந்த கொள்ளையர்களை கொலை செய்திருக்க வேண்டும். ஆனால் அந்த கொலை செய்யப்படும் செய்தியை அந்த ஏடுகள் குறிப்பாக அசச்சு ஊடகங்கள் அதிலும் குறிப்பாக ஆங்கில அச்சு ஊடகங்கள் வெளியிடாமல், தான் கொடுத்த குற்றவாளியை கண்டுபிடித்த செய்தியை மட்டுமே வெளியிட்டிருக்க வேண்டும். அதற்காகவே கொடுக்கப்பட்ட நேற்றைய நேர்காணல் அது. அதேசமயம் அவரது அடுத்த ஆபரேஷனான குற்றம் சாட்டப்பட்டவர்களை அல்லது சந்தேகப்பட்டவர்களை போட்டு தள்ளுவது என்ற திட்டத்தையும் நிறைவேற்ற வேண்டும். அதற்காக காவல் ஆணையம் நேரம் பார்த்தூ கொண்டு இருந்திருக்கிறது. அச்சு ஊடகங்கள் குறிப்பாக ஆங்கில அச்சு ஊடகங்கள் அச்சிடப்படும் கடைசி நேரமான இரவு ஒரு மணி வரிக்கும் தங்களது கொலை நடவடிககியை வெளியே விடக்கூடாது. என்னே சூப்பர் ஐடியா?


திட்டமிட்டபடி சம்பவ இடத்திற்கு அதாவது வேளச்சேரி அடுக்கு மாடி குடியிருப்பின் தளப்பகுதிக்கு காவல்துறையினர் இரவு பத்து மணி சுமாருக்கே சென்றதாக தெரிகிறது. பதினோரு மணி சுமாருக்கு அவர்கள் அந்த ஐந்து வாடா இந்தியர்களை போட்டு தள்ளியிருப்பார்கள் என்று தெரிகிறது.ஆனாலும் ஆங்கில அச்சு ஊடகங்களின் அச்சிடும் நேரமான ஒரு மணி வரை அந்த செய்தியை மாநகர காவல் ஆணையம் வெளியிடவில்லை. சூப்பர், திருபாதி அவர்களே என்று நம்மால் கூறாமல் இருக்க முடியவில்லை. அதன்பிறகு இந்த காட்சி ஊடகங்கள் தனகது போட்டிக்காக அனைத்தையும் வேர்லியே கொண்டுவந்து விட்டன. அற்ற்ஹனால் முழு மாநிலமும் இன்று காலையிலேயே அந்த போலி துப்பாக்கி சூடு என்று கருத வாய்ப்புள்ள செயலை வெளியே கொண்டுவந்துவிட்டன. கலையில் எல்லா ஊடகவியலாளர்களும் திருபாதியை மொய்க்க ஆரம்பித்தனர். அவரும் ஜகா வாங்கினார். முதலில் காலையில் ஊடகத்தரை சந்திப்பேன் என்று கூறியவர் பிறகு அதை மாலைக்கு தள்ளி போட்டார். அதற்குள் சிறிது தயார் செய்து கொள்ளலாம் என்பது அவரது அவா. ஆனால் மாலையிலும் அவரால் ஊடகங்களை எதிர்கொள்ள முடியவில்லை. அவசர, அவசரமாக ஊடகங்களுக்கு ஒரு செய்தி அறிவிப்பு போல கொடுத்து விட்டு கேள்விகளை அதிகம் எதிர்கொள்ளாமல் தப்பி ஓட முயன்றுள்ளார். இதுவே அவரை ஊடககார்கள் எல்லாம் தனுஷ் பாடலுடன் படிக் கொண்டே வருவது போன்ற தோற்றத்தை கொடுத்து விட்டது.

காலையில் அரிவாளால் வெட்டியதாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் அல்லது சந்தேகப்பட்டவர்கள் பற்றி கூறிய காவல்துறையினர் தலைவர் அதாவது ஆணையர் மாலையில் அவர்கள் சுட்டார்கள் ஆகையால் நாங்களும் சுட்டோம் என்று மாற்றி சொல்ல வேண்டி வந்து விட்டது. ஊடகத்தார்கள் ஒரு டி.சி. இடம் இறந்தவர்கள் வீடுகளுக்கு தெரிவித்து விட்டீர்களா? என்று கேட்டதற்கு தொலைபேசியை ஆப் செய்த நிகழ்ச்சியும் நடந்தது. அந்த அளவுக்கு அவர்களுக்கு தனுஷ் பாடல் அச்சத்தை ஏற்படுத்தி விட்டது. சுட்ட பிறகு தானே யாரை சுட்டோம் என்று ஆய்வு செய்கிறார்கள்? இது வரலாற்றிலேயே இல்லாத ஒரு போலி துப்பாக்கி சூடு. ஏன் என்றால் இதுவரை காவலர்களுக்கு யாரை பிடித்து சுடுகிறோம் என்று தெரியும். இந்த முறை யாரை சுடுகிறோம் என்று தெரியாமலேயே சுட்டு கொன்று விட்டார்கள். எது எப்படியோ நமக்கு யாரவது சாலையில் ஹிந்தியில் நாலு பேர் பேசிக் கொண்டு சென்றால் இன்றெல்லாம், அவர்கள் கைகளில் ஏதாவது ஆயுதம் இருக்கிறதா? என்று பார்க்க தோன்றுகிறது.

Wednesday, February 22, 2012

சுடப்பட்டது கொள்ளையர்களை தானா?

எதற்காக இந்த நாட்டில் ஒரு அரசியல் சட்டம்? அதன்படிகைதுகள்? அதற்குபிறகு விசாரணை? அதன்பின் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களை நிறுத்துவது? அதன்பின் நீதியரசர் முன்னிலையில் விசாரணை நடத்துவது? குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும் வழக்கறிஞர் வைத்து வாதாட அனுமதிப்பது? அதைகூட குறுக்கு விசாரணை என்று ஒரு நியதியை ஏற்படுத்தி உண்மையை கண்டறிய முயற்சிப்பது? அதன்பிறகே நீதியரசர் தீர்ப்பு கொடுப்பது? அதற்கு பிறகும் மேல்முறையீடு என்று அனுமதிப்பது? அதில் குற்றம் சட்டப்பட்டவர்க்கு "பிணை" கொடுக்கும் வாய்ப்பு? அதன்பின்னும் மேல் நீதிமன்றத்தில்விசாரனை" அதில் ஒரு தீர்ப்பு? அதையும்கூட மேல்முறையீடு செய்து உச்சநீதிமன்றம் கொண்டு செல்ல அனுமதிப்பது? அங்க கொடுக்கும் தீர்ப்பை இறுதி தீர்ப்பு என கூறுவது? இத்தனை வரிசை கிராமமான அனைத்து படிக்கட்டுகளையும் நமது சென்னை மாநகர் காவல்துறை கண்காணிப்பாளர் திருபாதி "தாண்டி, தாண்டி" குதித்து "கொள்ளையர்கள்" என்று வரும், அவரது படையும் கண்டுபிடித்த ஐந்து பேரை ஒரே நேரத்தில் சுட்டு கொன்று விட்டார்களே? இத்தனை படிக்கட்டுகளை தாண்டி செல்லும் அனைத்த் வேலைப்பளுவையும், ஒரே நேரத்தில் குறைத்து விட்டார்களே? அது கெட்டிக்காரத்தனம்தானே? இதைபோய் மனித உரிமையாளர்கள் குறை சொல்கிறார்களே? இது சட்டத்தின் ஆட்சியை கெடுக்கும் என்கிறார்களே?

பொதுமக்களுக்கு தொடர்ந்து கொள்ளைகள் நடக்கிறதே? என்ற கவலை. அதனால் அவர்கள் அப்பாடி, இப்போதாவது கொள்ளையர்களை கொன்று விட்டார்களே? என்று திருப்தி அடைவார்கள். ஆனால் கொல்லப்பட்டது உண்மையான கொள்ளையர்கள்தானா? கொள்ளையர்கள் எங்காவது வீடு எடுத்து தாங்குவார்களா? அவர்கள் வீட்டில் ஒரு கைத்துப்பாக்கி உட்பட நான்கு துப்பாகிகள் இருந்ததை காவல்துறை காட்டுகிறதே? காவல்துறை அதிகாரிகளை அரிவாள் வைத்து தாக்கியுள்ளனர் கொள்ளையர்கள் என்று அடிபட்ட காவலர்களை காவல்துறை காட்டுகிறதே? கையில் ஒன்றுக்கு நாலு துப்ப்பாகிகளை வைத்திருந்த கொள்ளையர்கள், என் முட்டாள்கள் மாதிரி அரிவாள் வைத்து தாகினர்கள் என்று புத்தியில்லாமல் கேட்டுவிடாதீர்கள். சொல்வது காவல்துறை. நம்புங்கள். இல்லாவிட்டால்? ஆமாம். பிடிபட்ட மன்னிக்கவ்ய்ம் கொல்லப்பட்ட கொள்ளையர்கள் தலைவர் எஸ்.ஆர்.எம். என்ற மாபெரும் சுய நிதி கல்லூரியின் முன்னாள் மாணவர் என்கிறார்கள். அதையே அந்த டி.வி.க்கு போட்டி டி.வி. திரும்ப திரும்ப கூறுகிறார்கள். அப்படியானால் அந்த கல்லூரியின் மாணவர் சேர்க்கைக்கு அதிகமாக் கட்டாய கட்டணம் வாங்கும் இடைத்தரகர்கள் பணியை செய்து வந்தவர்கள் இவர்களா? அதனால்தான் கொல்லப்பட்டார்களா? அபப்டியானால் அந்த கல்லூரியின் முதலாளிக்கு ஆதரவாக காவல்துறை அந்த இடைத்தரகர்களை இல்லாமல் செய்து விட்டதா? இப்படி கேள்விமேல் கேள்வி கேட்டுக்கொண்டே போனால் காவல்துறையின் ஈரல் கேட்டு விட்டது என்று முன்னாள் முதல்வர் பாணியில் பேச வேண்டியிருக்கும்.

எப்படியோ இப்போதிந்த நால்வரையும் கொள்ளைகாரர்கள் என்றே வைத்து கொண்டாலும், அவர்களுக்கு ஆதரவாக இங்கே இருந்தவர்களை அதிலும் அதிகாரிகள் இருந்தால் அவர்களையும், காட்டி கொடுக்க இப்போது யாருமே உயிரோடு இல்லை. எல்லா சாட்சிகளையும் கொன்று விட்டார்கள். இதற்கு பெயர் என்ன? இதுதான் சட்டத்தின் ஆட்சியா? வெளிமாநிலத்தின் ஆட்களை கட்டுமான வேலைக்கும், சுய நிதி கல்லூரிகளுக்கும், உணவு விடுதிகளுக்கும் வரவழைத்து தமிழ்நாட்டில் சட்ட-ஒழுங்கை கெடுப்பது யார்? யார்? பட்டியலிடலாமா?

நாமே எல்லாம் என்பதில் யார் வழி இருக்கிறது?

தேமுதிக. என்ற தமிழ்நாட்டின் சட்டமன்ற எதிர்க்கட்சி தனது பொதுக் குழுவை நடத்தி முடித்தது. ஏற்கனவே கட்சியின் தலைவராக இருக்கும் கேப்டன் விஜயகாந்த் மீண்டும் கட்சியின் தலைவர். கட்சி தொடங்கும்போது பொது செயலாளராக இருந்த ராமு வசந்தன் மறைந்த பிறகு அந்த பொறுப்புள்ள பதவியை கேப்டன் விஜயகாந்த் தானே பொறுப்போடு எடுத்து கொண்டுள்ளார். அந்த பொறுப்புக்கும் தேர்தல் நடந்து, அதிலும் கேப்டன் விஜயகாந்த் அவர்களே எதிர்ப்பு இன்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஜனநாயக ரீதியாக இப்படி அவர் இரண்டு பதவிகளை வகிப்பது குறித்து சிலர் கேள்வி கேட்கிறார்கள் அவைத்தலைவராக . பண்ருட்டி ராமச்சந்திரன் இருக்கிறாரே என்று நாம் கேட்டால் அது அவர்களை சமாதனப்படுத்த வில்லை. ஆகவே நாம் வரலாற்றை எடுத்து பல முன்மாதிரிகளை காட்டவேண்டியுள்ளது. கேப்டன் விஜயகாந்த் தன்னை எம்.ஜி.ஆர்.இன் வாரிசு என்றுதானே அழைக்கிறார். அப்படியானால் அந்த மருதூர் கோபால ராமச்சந்திரனின் அடியொற்றி இவரும் ஏதாவது செய்யவேண்டாமா?

எம்.ஜி.ஆர். இடம் உங்கள் கொள்கை என்ன என்று கேள்வி கேட்டார்கள். எம்.ஜி.ஆர்.இடம் பொய் கேள்வி கேட்கலாமா? அவர் உடனடியாக "கேபிடலிசம், சோசலிசம், கம்யுனிசம் அனைத்தும் கலந்ததுதான் அண்ணாயிசம்" என்று ஒரு போடு போட்டாரே பார்க்கலாம். அசந்து போனார்கள் ஊடகத்தார்கள். அதுபோல கருப்பு எம்.ஜி.ஆர். விஜயகாந்த் தனது கட்சியின் பெயரை கூறும்போதே அந்த "வரலாறு" படைத்து விட்டார். "தேசிய" என்று தொடங்கினார். செத்தார்கள் தேசிய கட்சிகள். "திராவிட" என்று தொடர்ந்தார். மூர்ச்சை போட்டார்கள் திராவிட கட்சிகள்.முன்னேற்ற என்று அவர் வாயை மூடும்முன்பே இங்குள்ள முன்னேற்ற கழகத்தினர் காணாமல் பொய் விட்டார்கள். அப்படி ஒரு மாபெரும் கண்டுபிடிப்புடன் கட்சி பெயரை அனைத்து உணர்வுகளையும் ஒருங்கே சேர்த்து அமைத்த ஒரு தலைவர் அந்த கட்சியின் பதவிகளை அதேபோல அனைத்து கட்சிகளின் "நடைமுறைகளையும்" இணைத்து போடா மாட்டாரா? அதுதான் அவரே தலைவர் மற்றும் போதுச்யலாளர் பொறுப்புகளை எடுத்து கொண்ட கண்டுபிடிப்பு.

உதாரணமாக தேசிய கட்சிகள் என்று கூறிக்கொள்ளும் காங்கிரஸ், பா.ஜ.க. ஆகியவை "தலைவர்" பொறுப்பை பெரிதாக மதிப்பார்கள். ஆகவே அவர்களை போல தலைவர் பொறுப்பும் கேப்டனுக்கு வேண்டும். சி.பி.ஐ, சி.பி.ஐ.[எம்] ஆகிய தேசிய பேசும் கட்சிகள் பொது செயலாளர்தான் முக்கியம் என வைத்துள்ளனர். அதனால் அடஹியும் எடுத்து கொண்டார். திராவிட கட்சிகள் என்று கூறும் திமுக போன்ற கட்சிகள் தலைவர் பதவி பெரிது என்கின்றனர். அதிமுக, மதிமுக போன்ற திராவிட கட்சிகள் பொது செயலாளர் தான் முக்கியம் என்று கருதுகின்றன. ஆகையால் யாருடைய மனதும் புண்படாமல், இரண்டு பொறுப்புகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து கேப்டன் இரண்டு பதவிகளையும் எடுத்து கொண்டுள்ளார். இப்போது புரிகிறதா? கேப்டன் எந்த அளவு பொறுப்புகளையும் அளந்து கால்களை முன்வைக்கிறார்? இப்போது சொல்லுங்கள். அவர் எம்.ஜி.ஆர். வாரிசுதானே?

திமுக தலைவர் என்ன செய்வார்?

சங்கரன்கோயில் இடைத்தேர்தல். அதிலாளும்கட்சிதான் வெற்றிபெறும் என்ற புரிதல் திமுக தலைமைக்கும் உண்டு. ஆனாலும்விட்டு விட முடியாது. போட்டி போட்டு "சூடு" கிளப்பினால் மட்டுமே கட்சி அரசியல் நடத்த முடியும். அதற்கு திமுக ஒரு நல்லவேட்பாலரை நிறுத்த வேண்டும். அதற்குள் அவர் எதிர்பாராமலேயே தேமுதிக தலைவருக்கும், தமிழக முதல்வருக்கும் சண்டை சட்டமன்றத்திலேயே தொடக்கி விட்டது. அந்த சண்டையை திமுக பயன்படுத்தி கொள்ள வேண்டும். அதற்காகவே விஜயகாந்த் வெளியேற்றத்தை எதிர்த்து கலைஞரும் பேசிவிட்டார். அதுவே கேப்டனுக்கு திருப்தி என்றார்கள் . அதையும்தாண்டி ஜனநாயக விரோதம் என்று கலைஞர் கூறிவிட்டார். அதுவே பிரச்சனை ஆனது. அதுவும் சட்டமனரத்தில் நடந்த ஒரு நிகழ்வை சட்டமன்ற உற்ப்பினராக உள்ள கலைஞர் வெளியே வந்து விமர்சித்தார். அதுவே சட்டமன்றத்தின் உரிமை மீறலேன்று கூற வாய்ப்பு உண்டு. அதிலும் சட்டமன்ற உரிமைக்குழு எடுத்து அறிவித்த ஒரு முடிவின் மீது சட்டமணர் உறுப்பினரான கலைஞர் ஜனநாயக விரோத செயலென்று வெளியே வந்து விமர்சித்திருப்பது சட்டமணர் "உரிமைக்குழு" முன்பே விசாரிக்க போதுமான தகுதி உள்ள ஒரு பிரச்சனை. இந்த வயதான காலத்தில் கலைஞரை சட்டமணர் உரிமை குழு முன்பு வரவழைத்து விசாரணை நடத்துவது தேவையா? என்று முதல்வர் எண்ணி பார்த்திருக்க வேண்டும். அதனால்தான் பேரவை தலைவர் ஜெயகுமார் ஒரு அறிக்கையை மட்டுமே கலைஞரை எதிர்த்து கொடுத்திருந்தார்.

அந்த அறிக்கை பற்றி செய்திகளும், நிஜங்களும் நிகழ்ச்சியில் பேசும்போது, நாம் அந்த உரிமை குழு முன்பு கொண்டு சென்று கலைஞரை நிறுத்தாமல் வெறும் அறிக்கையை பேரவை தலைவர் கொடுத்துள்ளாரே என்று கூறினோம். அதன்பிறகு மறுநாள் அந்த அறிக்கைக்கு கலைஞர் பதில் கொடுத்தார். பதிலில் தான் வெளியே அவ்ரும்போது சிலபத்திர்கையாளர்கள் நின்று கொண்டு விஜயகாந்த் வெளியேற்றம் பற்றி கேட்டார்கலேன்ரும், தான் பேரவை தலைவரை விமர்சித்து எந்த சொல்லும் கூறவில்லை என்ருமிறங்கி பேசி இருந்தார். அது நமது கருத்து வெளியீட்டால் இருக்கலாம் என்றுகூட நாம் நினைக்க வில்லை. கலைஞரே அந்த வில்லங்கத்தை உணர்ந்துதான் கூறி இருப்பார் என்று நினைத்தோம். இப்போது கலைஞர் ஆலோசனையையும் ஏற்று விஜயகாந்த் நீதிமன்றம் சென்றிருக்கிறார். இப்போது நீதிமன்றம் சட்டமன்றத்தில்னடந்த உரிமைகுழுவிற்குள் நடந்த னைத்து கோப்புகளையும் கேட்குமா? அதில் திமுக,இடது சாரிகள், தி.மு.தி.க. ஆகிய கட்சிகள் தங்கள்கருத்தாக ஒரு புறம் நடந்த சட்டமன்ற நிகழ்வு படங்களை மட்டுமேகாட்டுகிரீர்கள் என்றும் இருபுறம் படங்களைகட்டுங்கள் என்றும் கூறியதாகவும் அதை செய்யாமல் "விஜயகாந்த் இடைநீக்கம்" அறிவிக்கப்பட்டதாகவும் தெரிவித்து நீதிமன்ற நியாயம் கேட்பார்கள். அப்போது நீதிமன்றம் பெரியதா? சட்டமன்றம் பெரியதா? என்ற பிரச்சனை வரும். வானளவு அதிகாரம் படைத்தவர் சட்டமன்ற பேரவை தலைவர் என்ற பி.எச். பாண்டியனின் பழைய வசனம் மீண்டும் பேசப்பட வேண்டுமா?

இத்தனை சிக்கல்கள் மத்தியில் விஜயகாந்த் "நாக்கை" துருத்தி, முறைத்த பேச்சு நீதிமன்றத்தாலேபப்டி பார்க்கப்படும்? நீதியரசர்களின் கோபத்தை ஒரு எதிர்க்கட்சி தலிவர் வாங்கி கட்டிக் கொள்வாரா? கலைஞருக்கு கவலை இல்லை. விஜயகாந்த் அடிபட்டாலும், ஜெயலலிதா அரசு திட்டு வாங்கினாலும் அவருக்கு மகிழ்ச்சி தான். அவரும் எதிர்க்கட்சி தலிவர் காநிராஸ் கட்சியின் பாலகிருஷ்ணனை நெல்லைபாளயம்கோட்டை மாந்ஜொலைஓர்வலத்திந் போது, காவல்துறையிடம் அடித்து கைது செய்து போடும்படி கூறினார் என்ற உண்மை எத்தனை பேருக்கு தெரியும்? இத்தகைய சூழலில் திமுக வின் சங்கரன்கொவில்வேட்பாளர் வழக்கறிஞர் ஜவஹர் முன்னாள் மத்திய அமைச்சர் அருணாசலத்தின் அண்ணன் மகன் என்பதை மட்டுமே கலைஞர் பார்த்தார். ஆனால் அவர் மீது அருணாசலம் குடும்பம் நிலமொசடிக்கான ,உயில் மோசடி வழக்கு போட்டிருப்பது நிலுவையில் இருக்கிறது என்பது அவரை சிக்கலுக்கு உள்ல்லாக்கி உள்ளது. அதற்காகவாவது தி.மு.தி.க. வேட்பாளரை போது வேட்பாளராக என்று கலைஞர் ஆதரிப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Tuesday, February 21, 2012

பலூசிச்தானுக்கு சுய நிர்ணய உரிமை என அமெரிக்கா கூறுகிறதா?

பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருப்பதும், இந்திய அரசை ஆவப்போது காஷ்மீர் பிரச்சனை, ஆப்கானிஸ்தான் பிரச்சனை போன்றவற்றில் இடிப்பதும் அமெரிக்காவிற்கு கைவந்த கலை என்பதுதான் இனாம் எல்லோரும் இதுவரை எண்ணிப்பார்த்து வரும் வரலாறு? அது மாற்றப்படுகிறதா? அமெரிக்காவின் காங்கிரஸ் சபையில் ஒரு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அது பாகிஸ்தானிற்குள் இருக்கும் பலூசிஸ்தான் என்ற தனி இனத்தின் "சுய -நிர்ணய உரிமை" பற்றி பேசியது. மனித உரிமைகள் என்ற பிரச்சனை பற்றி தான் மிகவும் கவலை படுவதாக அமெரிக்க செனட்டர்கள் கூறினார். ஆகா? இது என்னடா புது நாடகம்? என்று கேட்டீர்கள் என்றால் நிறைய கதை பின்னால் இருக்கிறது. கலிபோர்னியாவை சேர்ந்த ஒரு குடியரசு கட்சியின் தானா ரோஹ்ரபாசேர் என்ற உர்ப்பினர்தான் அந்த தீர்மானத்தை கொண்டுவந்தவர். அதை இரண்டு அமெரிக்க குடியரசு கட்சியின் காங்கிரசார் வழி மொழிந்தனர். அவர்களது பெயர்கள் டெக்சாசின் லூஹி கொஹ்மேர்ட், மற்றும் ஐயோவா வின் ஸ்டீவ் கிங் என்பதே. அப்படியானால் அந்த தீர்மானம் குடியரசு கட்சியால் திட்டமிட்டு கொண்டுவரப்பட்டுள்ளது. தற்செயலாக நடந்த ஒன்று அல்ல.

இத்தகைய தீர்மானத்தை காங்கிரசில் கொண்டுவரும் அளவுக்கு அமெரிக்காவிற்கு தொர்யம் இருந்தும், இதுபோல ஒன்றை பல லட்சம் தமிழர்களை கொன்றதாக அமெரிக்காவே ஒப்புக்கொள்ளும் இலங்கை அரசிடம் "தமிழீழ சுய நிர்ணய உரிமை" பற்றி பேச ஒரு தீர்மனாம் கொண்டுவர என் முடியவில்லை? அதுதான் அமெரிக்க தந்திரம். அபப்டி என்ன தந்திரம் இதில் இருக்கிறது? அந்த கலிபோர்னியாவின் காங்கிரஸ் உறுப்பினர் தானா ரோஹேற்பசேர் இதற்குமுன்பு இந்திய அரசுக்கு எதிராக "காஷ்மீர் சுய நிர்ணய உரிமை" பற்றி பேசிவந்தவர். இப்போது பலூச்சி ஒரு வரலாற்று ரீதியான சியா நிர்ணய உரிமை பெறுவதற்கான தன்மை கொண்டது என்கிறார். அது தமிழீழத்திற்கு இல்லையா? பலூச்சியில் அதிகமாக பாக் ராணுவத்தால் கொலைகளும், கொடுமைகளும், சித்திரவதைகளும் நடக்கின்றன என்கிறார். அதுவே தமிழீழத்திலும் உண்மை இல்லையா? இதே தானா ரோஹேற்பசேர் இதற்கு முன்பு காஷ்மீர் சுய நிர்ணயம் மட்டுமல்ல, காலிஸ்தான் சுய நிர்ணயம் பற்றியும் பேசி வந்தவர். அதாவது அவர் இந்திய அரசுக்கு எதிரான் அமெரிக்காவின் வெளிவிவகார கொள்கைகளுக்காக பேசினார். இப்போது இந்திய அரசின் வெளிவிவகார கொள்கைக்கு ஆதரவு கொடுப்பதுபோல பாகிஸ்தானின் இறையாண்மைக்கு எதிராக பேசுகிறார். அதைதான் பாக்சிதனைன் அதிபர் கூறுகிறார். அதற்கு அமெரிக்க ஒபமாவும் ப-அகிச்தானை உடைப்பதை அனுமதிக்காது அமெரிக்க என்று பதில் கூறுகிறார்.


இந்த மற்றம் அந்த குறிப்பிட்ட குடியரசு கட்சிகாரரிடம் ஏன் வந்தது? அமெரிக்கவிற்கும் அந்த தேவை ஏன வந்தது? அமெரிக்க இன்று பாகிஸ்தான் தலிபானுக்கு கொடுக்கும் ஆதரவை எதிர்த்தும், ஆப்கானிஸ்தானை குறிவைத்தும், இரானை எதிர்த்தும் இந்த வட்டாரத்தில் ராணுவ தந்திரங்களை வகுக்க வேண்டி உள்ளது. அதற்கு சரியான தந்திரமாக பலூச்சிச்தானை தன வசப்படுத்தும் தந்திரத்தை எடுக்கிறது. ஏன் என்றால் பலூச்சிஸ்தான் ஒருபுறம் இரான், மறுபுறம் ஆப்கானிஸ்தான், இன்னொருபுறம் பாகிஸ்தானிற்கு உள்ளே என்று இருக்கும் பகுதி. அதனால் அந்த மூன்று சக்திகளையும் அடக்க பலூச்சிச்தானில் "ராணுவ தளம் அமைக்க" அமெரிக்க முயற்சிக்கிறது. இதுதான் இந்த தந்திரத்தின் காரணம். அதற்கு இந்திய அரசு ஒத்துழைப்பது என்பது எரியும் விறகு கட்டையை எடுத்து சொரிந்து கொள்வதற்கு சமம். அதாவது இப்படி ஒரு தேசிய இன பிரச்சனையை வைத்து அமெரிக்க இங்கே நுழையுமானால் அது இந்த வட்டார சக்திகளுக்கு பலவீனமும், அமெரிக்க ராணுவ தந்திரத்திற்கு இந்த வட்டாரத்தில் இடம் கொடுப்பதும் எனப்டதையே செய்யும். அதற்கு நாட்டுபற்றும், தீரமும் வேண்டும்.அதுதான் இந்திய ஆளும் கும்பலிடம் இல்லையே?

கலைஞரை நேரு ஏமாற்றினாரா? கலைஞர் நம்மை ஏமாற்றினாரா?

முன்னாள் அமைச்சரும், திமுக வின் முக்கிய புள்ளியுமான கே.என்.நேரு தனது மகனின் திருமணத்தை திருச்சியில் நடத்தினார். அதில் கலைஞர் கருணாநிதி தலைமை தாங்கி நடத்தி வைத்தார். அப்போது கலைஞர் பேசிய உரை திமுக தொண்டர்களுக்கு ஒரு வரலாற்று பாடமாக அமைந்தது. பெரியார் வழி, அண்ணா வழி என்ற வழக்கமான பாடலுக்கு அங்கங்கே இசை அமைத்து அழகாகவே பாடினார். தமிழ்நாட்டில் கல்யாணம் என்ற சொல்லை இப்போதெல்லாம் திருமணம் என்று சொல்ல வைத்துள்ளது திமுக என்று அவர் கூறும்போது, மகிழ்ச்சியாகவே இருந்தது. ஆசீர்வாதம் என்ற சொல்லின் பழக்கத்தை மாற்றி தமிழில் வாழ்த்துக்கள் என்ற சொல்ல வைத்தது திமுக என கலைஞர் கூறும்போது புல்லரித்தது தமிழர்களின் வரலாறு, பண்பாடு என்பதை எப்படி மீட்டு எடுத்துள்ளோம் என்று அவர் வாயார புகழ்ந்து அதை பெருமைப்பட்டு கூறிய பொது நாமும் பெருமைப்பட்டோம். பெரியார், அன்னமா வழி என்று அவர் கூறும்போது மூடநம்பிக்கைகளை ஒழித்து பகுத்தறிவு வழி என நாம் பெருமைப்பட்டோம். சேர,சோழ, பாண்டிய என்று நமது மூதாதையரை கூறும்போது, தமிழர்களாக அனைவரும் நிற்கிறோம் என்று கலைஞர் கூறினார்.

அதேநேரம் கே.என். நேரு தனது சொந்தங்களுக்கும், வணிக உறவுகளுக்கும் அனுப்பிய திருமண அழைப்பிதழ் நமது கைகளில் தவழ்ந்தது. அதில் தனது மூதாதையரான காலம் சென்றவர்களை "வானிருந்து வாழ்த்தும்" என்று குறிப்பிட்டிருக்கிறார். இது மூட நம்பிக்கை இல்லையா? பெரியார் வழியில் யாராவது வானிருந்து வாழ்த்துவார்களா? அப்படி வாழ்த்துபவர்கள் என்று அச்வரால் அந்த மணவிழா அழைப்பிதழில் குறிக்கப்பட்டவர்கள் அவரது தாத்தாக்களும், கொள்ளு தாத்தாக்களும். அவர்களை நேரு எப்படி அழைக்கிறார் தெரியுமா? சர, சோழ, பாண்டிய வம்சங்களாக தமிழர் பாரம்பரியமாக அழைக்க வில்லை. மாறாக "நாராயணன் ரெட்டியார், லட்சுமணன் ரெட்டியார்" ஆகியோரின் பெயர்த்தான் என தனது மகனையும், லட்சுமண ரெட்டியாரின் பெயர்த்தி என்று அந்த மணப்பெண்ணையும் அந்த மணவிழா அழைப்பில் அச்சிட்டுள்ளார். இப்படி ஒரு அழைப்பிதழை தாங்கள் காணவில்லையே என்று கலைஞர் வீட்டார் கேட்டனர். நேரு அச்சடித்த ஒரு அழைப்பிதழில் "முத்தமிழ் அறிஞர் கலைஞர் முதல் தளபதி ஸ்டாலின் வழியாக கனிமொழி வரை" பெயர்களை அச்சிட்டுள்ளார். அது அந்த திமுக தலைமை குடும்பத்திற்கு காட்டும் விசுவாசம் எனலாம். அப்படியானால் ரெடியார் என விளித்து அச்சிடப்பட்டது யாருக்கு காட்டும் விசுவாசம். அவரது குழுவினரை அடிக்கடி சென்னையில் உள்ள ரெட்டியார் சங்க கூட்டங்களில் கண்டவர்கள் அதை "சாதி விசுவாசம்" என்கின்றனர்.

அப்படி ஒன்று திமுக வில் இருக்கிறதா? வானிருந்து வாழ்த்தும் என்ற நேருவின் நம்பிக்கை பெரியாரின் கருத்துகளுக்கு உள்ள விசவாசமா? மூடநம்பிக்கை கொண்ட சதிகாரர்களுக்கு மேல் உள்ள விசவாசமா? இந்த கேள்விகள் எல்லாமே எழாத வண்ணம் அவர் பெரும் பிளக்ச்களை திருச்சி எங்கும் வைத்த்சு விட்டார். அதில் கலைஞர், தளபதி, அவரது மனைவி சாந்தா, அவரது மகன் உதயநிதி, அவரது மனைவி, அவரது குழந்தை எல்லோரையும் படங்கள் போட்டு பதாகை வைத்து விசுவாசத்தை காட்டியுள்ளார். அதேபோல அழகிரி, அவரது மனைவி காந்தி அவர்களது பிள்ளைகள் என பதாகை. அதேபோல ராஜாத்தி, கனிமொழி என பதாகைகள். கலைஞர் வீட்டில் ஒரு நாய் பாசமாக கண்ணா என எல்லோராலும் அழைக்கப்படுமே அதை அவர் போடவில்லை என்று சில தொண்டர்கள் கூறினார். அவர் ஸ்டாலின் குழு என்பதால் கனிமொழியின் மகன் ஆதித்தனை படமாக போடவில்லை என்று இன்னொரு தொண்டர் சிலாகித்தார். எபப்டியோ, விச்வாசங்கள் திமுகவின் வாடிக்கை என்பதே தெரிகிறது. இந்த இரண்டு அழைப்பிதழ்களை தலிவரிடம் காட்டாமல் நேரு ஏமாற்றினாரா? அல்லது அதுவும் தெரிந்து கலைஞர் நம்மை ஏமாற்றினாரா?

Monday, February 20, 2012

பழம்பெரும் நடிகை மறைவு தரும் மறைக்கப்பட்ட வரலாறு.

எஸ்.என்.லட்சுமி நேற்று நள்ளிரவுக்கு மேல் மரணமடைந்தார். சென்னையில் சாலிகிராமத்தில் அவரது வீட்டில், தேவகி மருத்துவமனையிலிருந்து உடல் கொண்டுவரப்பட்டது. அவர் எங்கள் தோழர் பாவல் சங்கரின் "அத்தை" என்பதால் நாங்களும் அங்கே இன்று முழுவதும் நின்றோம். நடிகர்கள், இயக்குனர்கள் என திரையுலகினர் பலர் வந்து போய்கொண்டு இருந்தாலும், காவல்துறை முதல்வர் ஜெயலலிதா வருவதாக எண்ணி செய்த பரபரப்புதான் அதிகம். மூன்று மணி நேர பரபரப்புக்கு பிறகு முதல்வர் வரவில்லை என தெரிந்த பிறகுதான் அந்த காவல்துறை அடங்கி அவரவர் வேலையை பார்க்க வெளியே சென்றனர். அதுவரை அந்த வீட்டிற்குள் எதுவும் தெரியாவிட்டாலும் வெளியே சாலையில் அவர்கள் பரபரப்பு காணப்பட்டுள்ளது. எப்படி இருந்தாலும் எஸ்.என்.லட்சுமி ஒரு வரலாறு என்பதை அங்கே உணர்ந்தோம். அவர் விருதுநகர் அருகே உள்ள சென்னல்குடி என்ற கிராமத்து பெண். மறவர் சமூக பின்னணி கொண்டவர். அந்த கிராமத்தில் வரத்து சொந்த தோட்டத்தில் அடக்கம் செய்தான் அவரது உடலை இன்று இரவு அங்கே கொண்டு சென்று காலை முதல் மாலை வரை மக்கள் பார்வைக்கு வைத்திருந்து பிறகு அடக்கம் செய்யபோகிறார்கள்.


எஸ்.என்.லட்சுமி ஏற்கனவே கேரளாவிலுள்ள ஒரு சிவானந்தா ஆசிரமத்தில் "வித்தை" வாங்கி இருக்கிறாராம். . அதனால் அவர்கள் முறைப்படி அடக்கம் செய்யப்படும். அவர் தனது பதின்மூன்று வயதில் வீட்டில் சண்டை போட்டு கொண்டு, அதாவது பட்டினி வாழ்க்கையை எதிர்த்து சென்னை வந்தாராம். வந்தவர் நாடக சபாக்களில் நடித்துள்ளார். 1500 திரைப்படங்களில் நடித்ததையும், 5000 க்கு மேல்நாடகங்களில் நடித்ததையும் விட்டார் கூறுகிறார்கள். என்.எஸ்.கே. நாடக மன்றம், கே.பி.யின் அமைச்சூர் நாடக மன்றம், என பல நாட்க மன்றங்களில் நடித்த பெருமை அவருக்கு உண்டு. .ஆயிரத்து தொள்ளாயிரத்து நாற்பதாம் ஆண்டிலிருந்து ஐம்பதாம் ஆண்டிற்குள், சில ஆண்டுகள் அவர் நடத்தி வந்த "பெண்கள் மட்டுமே கொண்ட நாடக குழு" மிகப்பெரிய வரலாறு. இன்று பெண்கள் மட்டுமே கொண்ட நாடகங்கள் முயற்சி செய்யப்படுகின்றன. மங்கை இயக்க வ.கீதா எழுத, பேராசிரியர் சரஸ்வதி தொடங்கி, கவின்மலர், பூங்குழலி, தமிழச்சி, ஓவியா, என எல்லா பெண்ணியவாதிகளும் இணைந்து நடிக்கும் புதிய முயற்ச்சிகளை காண்கிறோம். ஆனால் அன்றே எஸ்.என்.லட்சுமி பெண்கள் மட்டுமே உள்ள நாடக குழுவை நடத்தி வந்தார் என்ற வரலாறு இனிக்கிறது. அன்றைய காலத்தில் ஆண்கள் மட்டுமே பங்கு கொள்ளும் நாடக சபாக்கள் உண்டு. அவற்றில்பேன் வேடத்தில் நடிக்க கலைஞர்களில்லா நிலை. அதனாலான்களே பெண் வேடமிட்டு நடிப்பார்கள். அதுபோல சிவாஜி கணேசன் கூட நடைத்துல்லத்தை கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் பெண்கள் மட்டுமே உள்ள நடாக குழுவில், ஆண் வேடமிட்டு நடிக்க ப்ர்ந்களே முன்வந்து நடித்தது எஸ்.என்.லட்சுமி காலை மன்றத்தில்தான். அதுவும் எஸ்.என்.லட்சுமியே ஆண் வேடமிட்டு நடித்தார்.


எஸ்.என்.லட்சுமியின் அண்ணன் சக்திவேல்தேவர் விருதுநகரில் ஒரு நாடக குழு வைத்திருந்தார். அதில் வந்து எஸ்.என்.லட்சுமி ஆண் வேடமிட்டு நடித்தார். திருமணம் செய்து கொல்லாமல்தனது எண்பத்து ஆறு வயதில் இப்போத்சு தனது உயிரை விட்டிருக்கிறார். சகோதரர்கள் குடும்பதிற்காக வாழ்ந்திருக்கிறார். இடையில் கத்தோலிக்க சபையில் சேர்ந்து சகோதரியாக முயன்றதாகவும், அதிலும் உடன்படாமல் வெளியே வந்து விட்டார் என்றும் கூறுகிறார்கள். ஐந்து நாட்கள் முன்பு தனது சகோதரி மரணத்திற்கு அரியலூர் சென்றவர் விடுதியில் குளியலறையில் தடுக்கி விழுந்ததால் இடுப்பிளுடைய, ச்ஹெனை கொண்டுவந்து தேவகி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டு குணமானது போல இருந்தது என்று அவரத்சு மருமகன் பாவல் சங்கர் கூறினார். நேற்று நள்ளிரவில் திடீரென நிலைமை மோசமானது என்றார். அவர் திரையுலகிற்கு மட்டுமின்றி, வாழ்க்கைக்கும், தனியாக வாழும் பெண்களுக்கும், சவாலை எதிர்கொல்லும்பேன் கலைஞர்களுக்கும், ஒரு முன்னாதாரணம் என்று கூற தோன்றுகிறது. வடிவுக்கரசி வரத்து உடல் அருகே நின்று கொண்டு அழுது கொண்டிருந்தார். எஸ்.என்.லட்சுமியின் தந்தையின் தாயார் ஒரு ஜமீனால்பஞ்சம் பிழைக்க வந்த போது, ஒரு குடும்பத்திற்கு கொடுக்கப்பட்டவர் என்றும் ஒரு வரலாறு இருக்கிறது. அதிகமாக ஆய்வு செய்து இவரது முழு வரலாற்றில்தமிழகத்தின் கிராமப்புற குடும்பங்களின் பொருளாதார் நிலைமையையும், அதிலிருந்து வெளிவரும் குழந்தைகளின் வாழ்நிலை போராட்டமும் அதில் அவர்கள் அடைந்த வெற்றியும் தொகுக்க பட வேண்டும்.

Sunday, February 19, 2012

சிதம்பரத்திற்கு பதில் கொடுத்த ஆண்டன் கோம்ஸ் ?

நேற்று சென்னையில் நடந்த ஊடகவியலாளர் கூட்டத்தில் டில்லியிலிருந்து ஒரு விஞ்ஞானி அதுவும் தமிழர் வந்திருந்தார். அவர் பெயர் ஸ்ரீதர். அவர்தான் வைகோ வுடனும், நீதியரசர் ராஜேந்திர சச்சார் உடனும் , பெண் கவிஞர் மாலதி மயிதிரி ஏற்பாட்டில் சென்ற மாதம் டில்லி ஊடகங்களை சந்தித்து கூடங்குளம் அணு உலை ஏன் கூடாது என்று எடுத்து சொன்னவர். அவரும் நெல்லையை சேர்ந்தவர் என்பதால் அதிக அக்கறை போலும். இந்த ஸ்ரீதர் "அணு சக்தி துறை" என்ற டி.ஏ. ஈ.எனும் சுயாட்சியுடன் யாருக்கும் அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லாமல் தன்னிச்சையாக செயல்படும் மத்திய அரசின் நிறுவனத்தில் பணியாற்றியவர். அந்த அணு சக்தி துறை தான் இன்று அணு உலை ஆதரவாளர்கள் "துள்ளுவதற்கு" ஒரே காரணம். அந்த அணு சக்தி துறையின் விஞ்ஞானிகள் தான் .அணு உலைக்கு ஆதரவாக பொய்களையும், புரட்டுகளையும் அள்ளி வீசுபவர்கள். அந்த அணு சக்தி துறையில் "புவியியல் நிபுணராக" பணியாற்றி மனதுக்கு பிடிக்காமல் வெளியே வந்தவர்தான் இந்த ஸ்ரீதர் என்ற தமிழர். நேற்று அவர் கூறிய பல செய்திகளும் அணு சக்தி துறையால் மறுக்க முடியாத கூற்றுகளாக இருந்தது. அவர் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு " தேர்தெடுத்த மறதி வியாதி" என்று கூறியது நியு இந்தியன் எக்ஸ்பிரசுக்கு செய்தியாக போய்விட்டது. இந்தியாவிற்கு மேற்கத்திய நாடுகளில் காலாவதியான அணு உலை கருவிகளை அவர்கள் தள்ளி விட்டு விடுகிறார்கள் என்று ஸ்ரீதர் கூறினார்.அதை இன்று டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டு இருந்தது. ஐ.எஸ்.ஆர்.ஒ. ஊழல் இப்போது இரண்டு லட்சம் கோடி நட்டம் என்று வெளியே வந்தது போல சீக்கிரத்தில் அணு சக்தி துறையின் ஊழலும் வெளியே வரும் என்று அவர் கூறியவுடன் ஊடகத்தாருக்கு பெரும் அதிர்ச்சி.

அந்த கூட்டத்தில் ஆண்டன் கோம்ஸ் உரையை நான்கு பக்கங்களில் அடித்து கொண்டு வந்து கொடுத்தார். அததனையும் வரலாற்று நிகழ்ச்சிகள் பற்றிய புள்ளி விவரங்கள். அதை சிதம்பரத்திற்கு பதிலடி என்றும், இருபத்தைந்து ஆண்டுகாலமாக நடிபரும் போராட்டம் என்றும் தினத்தந்தி இன்று வெளியிட்டது. சிதம்பரம் எண்பத்து எட்டாம் ஆண்டு என்ன செய்து கொண்டு இருந்தீர்கள் என்று பாளையம்கோட்டை பொது கூட்டத்தில் கேட்டார். அதற்கு ஆண்டனின் பதில் நெத்தியடியாக இருந்தது. 1986 முதலே ஆண்டன் கோம்ஸ் எடுத்த முயற்சிகள் மீனவ கிராமங்களிலும், மற்றும் மற்றைய பகுதிகளிலும் எப்படி ஆலோசனை கூட்டங்களை நடத்தினோம் என்று கூறியிருந்தார். பிறகு "கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு கூட்டபைப்பு" என்ற பெயரில் அடுத்த ஆண்டிலேயே இடிந்தகரையில் பொதுக்கூட்டம் போட்டதையும் அதில் கலந்து கொண்டவர்களையும் வரிசைபடுத்தி இருந்தார். அடுத்த ஆண்டில் தூத்துக்குடி பொதுகூட்டத்தில் திரண்ட மக்கள் கூட்டத்தையும், ஜார்ஜ் பெர்ணனட்ஸ் உட்பட, தி.க, பா.ஜ.க., சி.பி.ஐ.[எம்.எல்.} இந்திய மக்கள் முன்னணி மற்றும் பல அமைப்புகளையும் குறிப்பிடுகிறார். டாக்டர் குமாரதாஸ், அய்யாவழி அடிகளார், மனோ தங்கராஜ் உட்பட பேச்சிபாறை விவாசயிகள் சங்கம் மூலமும், எல்லைகள் எடுப்பு போராட்டத்தையும் நடத்தியதை குறிப்பிடுகிறார். இந்திய மக்கள் முன்னணி நடத்திய சைக்கிள் ஊர்வலம் சந்தித்த இடையூறுகளை குறிப்பிடுகிறார்.

அகில இந்திய கத்தோலிக்க பல்கலைகழக சங்கமான "அய்கப் "மாணவர் அமைப்பு ஆலோசகர் சாமியை குறிப்பிடுகிறார். தினமணியில் டி.என.கோபாலன் எழுதிய கட்டுரை அணு உலையின் ஆபத்தை தனக்கு முதலில் தட்டிவிட்டது என்கிறார். யு.என.ஐ. செய்தி அமைப்பின் நிருபர் ரமேஷ் இன்று ஆம்நெஸ்டி இண்டர்நேசணலில் இருப்பவர் எப்படி தங்களுக்கு அடி எடுத்து கொடுத்தார் என்பதை கூறுகிறார். ஊடகவியலாளர் ஞானி இடிந்தகரை வந்து கூட்டத்தில் கலந்து கொண்டதை கூறுகிறார். நெல்லை ஊர்வலம், மற்றும் பொது கூட்டத்திற்கு தங்கள் அழைப்பின் பேரில் எஸ்.எஸ்.ஐ. என்ற சமுத்துவ சமுதாய அமைப்பை நடத்திவந்த ஓய டேவிட் பெரும் அளவில் பனை மாற தொழிலாளர்களை அழைத்து வந்து கலந்து கொண்டதையும் அதன்பின் அவரும் அணு உலை எதிர்ப்பு இயக்கத்தில் தொடர்ந்து கலந்து கொண்டதையும் குறிப்பிடுகிறார். கூடப்ன்குலத்தில் இன்றைய ஊராட்சி தலைவர் சாண்டல் முத்துராஜ், மற்றும் ரவி போன்ற போராளிகள் கடந்த "ஆறு ஆண்டுகளாக " தினசரி போராட்டம் நடத்துவதை குறிப்பிடுகிறார். கடந்த சில ஆண்டுகளாக இந்த போராட்டத்தில் உதயகுமாரும் இணைத்து கொண்டு இன்று ஒருகினைப்பாலராக பணியாற்றுவதை குறிப்பிடுகிறார். இவற்றையெல்லாம் ராஜ், பாலிமார், தமிழன், வின், போன்ற பல காட்சி ஊடகங்களும் வெளியிட்டன. கலைஞர் டி.வி. குறிப்பாக் ஆண்டன் கோம்ஸ் கூறிய செய்தியான அரசு எந்த முடிவை .எடுத்தாலும் போராட்டம் நிற்காது என்றும், அணு உலையையும் அணு கூண்டையும் நாங்கள் எப்போதும் எதிர்ப்போம் என்றும் அதில் "சமரசமில்லை " என்றும் கூறியதை ஒளிபரப்பியது.

அதேபோல தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் பெரும் அளவு நிலத்தில் விவசாயம் செய்யும் பண்ணையாரும், தொழில் அதிபருமான, சென்னையில் வணிக சங்கத்தில், உணவு பொருள் விற்பனையாளருமான, உலக தமிழர் பேரமைப்பின் பொருளாளரான சந்திரேசன் அந்த ஊடகவியலாளர் கூட்டத்தை ஏற்பாடு செய்து அதில் பேசும்போது, நெய்வேலி அனல் நிலைய உற்பத்தியில் முப்பது விழுக்காடு மட்டுமே தமிழகத்திற்கு கொடுப்பதை, ஐம்பது விழுக்காடு தமிழகத்திற்கு என்று கொடுத்தாலே தமிழகத்தின் மின் தேவை தீர்ந்திடும் என்றார். மொத்தத்தில் "கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு கூட்டமைப்பு" என்ற இருபத்தைந்தாண்டு வரலாறு கொண்ட அமைப்பின் பெயரை முதலிலேயே டேஹ்ரியப்படுத்தி இருந்தால் சிதம்பரங்கள் குட்டையை குழப்பாமல் இருக்க உதவியிருக்குமே? என்று தோன்றியது. எப்படியோ இந்த போராட்ட வரலாற்று உண்மைகளை எடுத்து சொல்ல சிதம்பரம் வந்து தூண்டி விடவேண்டுமா?

Thursday, February 16, 2012

டில்லியில் வெடித்த காந்த குண்டு ஏன்? எதற்காக?

டில்லியில் உள்ள இஸ்ரேல் தூதரக அதிகாரி பிள்ளைகள் படிக்கும் பள்ளி செல்லும்போது பின்னால் சிவப்பு நிற மோட்டார் சைக்கிள் ஒன்றில் ஒருவர் வந்தாராம். அவர் எதோ காந்தம் போன்ற பொருளை அந்த வாகனத்தின் பின்னே ஒட்டினாராம். அதுவே வாகனத்தின் முன்னே இறுகும் பேநெட்டில் வெடித்து சிதறியதாம். அதுவும் இஸ்ரேல் தூதரகம் அருகே, கனடிய தூதரகம் அருகே அதுவும் நமது இந்திய தலைமை அமைச்சர் வீட்டிற்கு அருகே. அய்யகோ, அப்படியொரு ஆபத்தா? இப்படி நாம் அலறி துடிக்கையிலே, நமது அரசாங்கமோ யாரையும் நான்கள் குற்றம் சொல்ல விரும்பவில்லை. எந்த நாட்டையும் இந்த குண்டு வெடிப்புக்கு நாங்கள் குறை சொல்ல தயாராயில்லை. இப்படி அறிவித்துள்ளதே? இந்திய மக்களாகிய நாம் நமது அரசாங்கம் சொல்வதை விடவா அதிகமாக சிந்திக்க முடியும்? ஆனாலும் ஊடகங்களும், பதிக்கப்பட்ட நாடான இஸ்ரேல் உளவு துறையும் என்ன சொல்கிறார்கள் என்பது முக்கியமல்லவா? அப்படி பார்த்தால் அவர்கள் ஈரான் மீது குற்றம் சுமத்துகிறார்கள். ஐ.நா. பாதுகாப்பு சபையில் அமெரிக்காவும், நெஸ்ட நாடுகளும் சேர்ந்து ஈரான் மீது குற்றம் சுமத்தி, படையெடுக்க வேண்டும் என்று கூறும்போது, இந்திய அரசு ஈரான் பக்கம் நின்றதே? அப்படிப்பட்ட இந்தியாவிற்கு "தொல்லை" தர ஈரான் நாடு முயற்சி எடுக்குமா? இப்படி ஒரு சந்தேகமும் நமக்கு எழுகிறது.

சந்தேகப்படுவது இஸ்ரேலும், அமெரிக்காவும். ஆமாம். அதனால் நீங்கள் பதில் சொல்லாமால் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். இப்படி ஒரு விருப்பம் இந்திய தலைமை அமைச்சரின் அலுவலகத்தில் எதிரொலிப்பது உண்மைதான். ஏன் என்றால், இதே ஈரான் நாட்டுடன் "எரிவாயு" வணிகத்தில், குழாய் மூலம் கொண்டு வரும் ஒப்பந்தம் செய்யவேண்டாம் என்று நமது தலைமை அமைச்சர் கூறினாரே? அத்தகைய அமெரிக்க சார்பு பேச்சை கேட்காமல் நட்வர்சிங் ஈரானுடன் ஒப்பந்தம் செய்து குழாய் மூலம் எரிவாயு வரும் என்று அறிவித்தாரே? அதற்காக அவரே தூக்கி அடிக்க பட்டாரே? அந்த முன்னாள் பெற்றோலிய அமைச்சர் என்ற இலாகாவை வைத்திருந்த மணிசங்கர் ஐயர் அதேபோல ஈரானுடன் குழாய் மூலம் வரும் எரிவாயு கொண்டுவரப்படும் என்றாரே? அதற்காக அந்த இலாகாவிலிருந்து அவரும் தூக்கி அடிக்கப்பட்டாரே? இப்படி ஈரான் பற்றிய அமெரிக்க எதிர்ப்பையும் கண்டுகொள்ளாமல் யாராவது பேசினால் அவ்வளவுதான். இப்படி பயமுறுத்தி வைத்திருந்த இந்திய தலைநகரில் எப்படி ஈரானுடன் நல்லுறவு கொள்ள கொள்கை முடிவு எடுக்க முடியும்? அதனால்தான் இப்படி டில்லியை மிரட்டுகிறார்கள் என்று யாரும் எண்ணிப்பார்க்கவில்லை.


ஐநா பாதுகாப்பு சபைஒயில் சிரியா பற்றிய விசாரனையில் அமெரிக்காவுடன் கைகோர்த்த இந்திய அரசு ஈரான் விசயத்தில் மட்டும் எப்படி அமெரிக்காவை எதிர்த்து ஐநாவில் முடிவு எடுக்க முடியும்? அதனால்தான் சி.ஐ.ஏ, மற்றும் மொசாத், போன்ற உலக புகழ் வாய்ந்த அமைப்புகள் இப்படி ஒரு நடவடிக்கையை நடத்தினால் டில்லி ஒழுங்காக வழிக்கு வரும் என்று எண்ணலாம் அல்லவா? . சென்ற ஆண்டு ஈரான் நாட்டின் தலைசிறந்த அணு விஞ்ஞானி இதேபோல இரண்டு பேர் சேர்ந்து வைத்த காந்த குண்டில் காலியானார் என்பதால், அது மொசாத் செய்த வேலை என்று தெரிந்ததால், இந்த டில்லி குண்டும் அதே மொசாத் செய்திருக்கலாம் அல்லவா? என்பதும் ஒரு கேள்வி. ஆகவே இந்த குண்டு வெடிப்புக்கும் ஈரான் பற்றிய இந்திய அரசின் நிலைப்பாட்டிற்கும் உறவு உள்ளது என்பதே புரிய வேண்டிய செய்தி.இப்போது மொசாத் ஆட்டக்காரர்கள் புதிய கதை ஒன்றை கூறுகிறார்கள். அதாவது மொசாத்திற்கே இந்த குண்டுவெடிப்பு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியதாம். சென்ற ஆண்டு ஈரானின் அணு விஞ்ஞானியை கொன்றற்ற்ஹற்கு ஈரான் இந்தியாவில் பழி தீர்ப்பார்கள் என்று இஸ்ரேல் எண்ணவில்லை என்பதே அந்த செய்தி. இதில் சென்ற ஆண்டு ஈரானில் விஞ்ஞானியை கொன்றது மொசாத் தான் என்பதே செய்தி.

உண்மையில் அவர்கள் அதாவது மொசாத் கூறும் ஹிஸ்புல்லா குழுவினர் இருக்கும் இடம் சிரியாதான் ஆகவே ஹிஸ்புல்ல செய்திருந்தாலும் அது சிரியா விசயத்தில் இந்திய அரசு ரஷியா, சீனா அரசுகளுக்கு எதிராக அமெரிக்க அரசுடன் கைகோர்த்து ஐ.நா. பாதுகாப்பு சபையில் ராணுவ நடவடிக்கையை சிரியா மீது கட்டவிழ்த்துவிட உடன்பட்டு போனது. அதுவே காரணம் என்றாலும் தேவை இல்லாமல் எதற்காக் அமெரிக்க ஆதரவை இந்தியா ஐநா சபையில் எடுக்க வேண்டும் ? எதற்காக இன்னொரு நாட்டின் மீது ராணுவ நடவடிக்கையை எடுக்க உதவ வேண்டும்? இத்தகைய அமெரிக்க ஆதரவுதானே உலக பயங்கரவாத சக்திகளிடம் இந்தியாவை பகை நாடாக் ஆக்குகிறது ? இந்திய வெளிநாட்டு கொள்கையில் இப்படி அமெரிக்க சார்பு தேவையா? ஹிஸ்புல்லாவும் ஷியா குழுதான். ஈரானும் ஷியா குழுதான். அதனால்தான் இரண்டையும் போட்டு குழப்ப இஸ்ரேல் அம்ற்றும் அமெரிக்காவால் எளிதாக முடிகிறது. எப்படியோ இந்தியாவிற்கு இது தேவையற்றது.

Tuesday, February 14, 2012

காதலர்களா? கழிசடைகளா?

வாலேண்டினே தினம் என்பதை நம்மூரில் காதலர் தினம் என்று அழைக்கின்றனர். அழைத்து விட்டு போகட்டும். அதை இளம் காதலர்கள் கொண்டாடுகின்றனர். கொண்டாடிவிட்டு போகட்டும். ஆனால் கலாச்சார காவலர்கள் நாங்கள் என்று ஒரு இந்துத்துவா கும்பல் அதை கொச்சைபடுத்துவதும், அண்ணனும் தங்கையும் தெருவில் போனால், தாலியை எடுத்து நீட்டுவதும் செய்யும்போது இந்த பத்தாம் பசலிகளில் யார் யோக்கியம் என்று கேட்க தோன்றும். அவர்களை கர்நாடாக சென்று அவர்களது கட்சியின் அமைச்சர்களை பிடித்து அடிக்க சொல்லுங்கள் என்று கூற தோன்றும். அப்படி கூறிவிட்டு காதலுக்கும், காமத்திற்கும் வேறுபாடு தெரியாதவர்களே என்று நாம் கேட்கும் போதே இன்னொரு மதம் சார்ந்த அமைப்பும் இன்று காலை செய்தி ஏட்டில் போட்டபடி "கழிசடைகள் தினம்"" என்று தங்களது பங்கை செலுத்தியுள்ளனர்.


இவர்களது அவசர குடுக்கைதனத்தை ஆதரிப்பவர்கள் சிலர் கடற்கரையில் என்ன ஆபாசம் செய்கிறார்கள் தெரியுமா? என்று கேட்கிறார்கள். அப்படி செய்பவர்கள் எண்ணிக்கை ஒரு பத்து விழுக்காடு கூட கிடையாதே? ஒரு மதம் சார்ந்த தொண்ணூறு விழுக்காடு சமாதானம் பேசும்போது, பத்து பேர் குண்டு வைத்தால் எப்படி அந்த மதம் சார்ந்தவர்களைஎல்லாம் பழிப்பீர்கள்? என்று கேட்க தோன்றுகிறது. டைம்ஸ் ஆப் இந்தியா ஏட்டில் இன்று ஒரு ஆய்வு கட்டுரை. அதில் இளைஞர்கள் மத்தியில் மதம் தாண்டிய காதல், கல்யாணம் நடக்கிறது என்ற செய்தி. சென்ற ஆண்டு எண்ணிக்கையை விட இந்த ஆண்டு மதம் தாண்டிய திருமணங்கள் தமிழ்நாடு சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் இரண்டு மடங்காக ஆகியுள்ளது என்ற புள்ளி விவரம். அதை பார்த்து கோபப்பட்ட மதவாதிகள் திருமணம் முடிந்தபின், எத்தனை விவாக ரத்து தெரியுமா? என்று கேட்கின்றனர். இந்த கேள்வியை தலக் சொல்லி பிரிவதற்கு உரிமை உள்ள மதம் சார்ந்தோர் பேசலாமா என்று மறு கேள்வி. இப்படியாக இன்றைய சர்ச்சை இந்த சர்ச்சைஎல்லாம் நாங்கள் ஒவ்வொரு நாளும் நடத்தும் சித்திகளும், நிஜங்களும் நிகழ்ச்சியில் நடந்தது என்பதுதான் ஆச்சர்யம்.

நகர்மயமாதலால இளைஞர்கள் மதம் தாண்டி, சாதி தாண்டி காதல் திருமணம் புரிவது அதிகரித்துள்ளதா? அதுவும் ஒரு காரணம். இன்றைய உலகமயமாக்கலின் ஒரு விளைவு கிராமம், நகரம் வேறுபாடு இல்லாமல் இளைஞர்கள் முக்கிய நிரோட்டத்தின் பொருளாதரத்தில் இரங்கி விட்டனர். அதனால் பெற்றோரையும், அவர்கது விவசாய பொருளாதரத்தையும் நம்பி வாழவில்லை. சொந்த பொருளாதரத்தில் வாழ தொடக்கி விட்டனர். அதனால் சொந்தமாகவே தனக்கான வாழக்கை பங்காளியை தேர்வு செய்து கொள்கிறார்கள். அவர்களுக்கு பொருளாதரா வாழ்நிலைதான் முக்கியம். அதில் சாதியையும், மதமும் தலையிட இடம்கொடுப்பதில்லை. அதனால் இன்றைய பொருளாதார தேவைகளை அடிப்படையாக கொண்டு திருமண பந்தங்களை இளைஞர்கள் கட்டமைக்கின்றனர். அதற்கு வேறு வழியில்லாமல் கூட, பெற்றோர் ஒப்புக் கொள்கின்றனர். எல்லாம் போருகாதர தேவைகளிலிருந்து தீர்மானிக்க படுகிறது. அது நகர்மயமாதளால் ஊக்குவிக்க படும்தானே? கிராம, நகர வேறுபாடு நல்லுக்கு நாள் குறைந்து வரும் தமிழ்நாட்டில் அது அதிகமாக நடக்கத்தானே செய்யும்? இப்படியாவது சாதியையும், மதமும் உடையட்டுமே?

Monday, February 13, 2012

சிதம்பரத்திற்கு தக்க பதில் தருவோம்

பாளையம்கோட்டை மைதானத்தில் கூடன்குலமனு உலைகளை ஆதரித்து பிரதமர் அலுவலக கட்டளைக்கு இணங்க மத்திய அமைச்சர்களான வாசன் மற்றும் நாராயணசாமி ஆகியோருடன் ஒரு நீண்ட உரையை நிகழ்த்தி அதன்மூலம் தனது இருத்தலைஉருதி செய்து கொண்ட உள்துறை அமைச்சர் சிதம்பரம் பேசிய முக்கிய விசயமே, இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பே இந்த கூடன்குலமனு உலை வரும் நேரத்தில் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்ற கேள்விதான். இதைதான் திரும்ப, திரும்ப ஊடகங்களும் பரப்பி வருகின்றன. அதை ஒட்டி சில அணுஉலை ஆதரவு என்னத்திற்கு வந்துள்ள மக்களும் கேட்டு வருகின்றனர். ஆகையால் நம் அவர்களுக்கு பதில் கொடுக்க வேண்டிய கட்டாயம் எழுந்து விட்டது.

அய்யா, சிதம்பரம் அவர்களே, நேநேகள் சொன்னதுபோல 1988 இல் என்ன சய்து கொண்டிருந்தீர்கள் என்ற கேள்விக்கு நாங்கள் 1986 இலிருந்தே என்ன செய்துகொண்டிருந்தோம் என்று பதில் கூற கடமைப்பட்டுள்ளோம். அதாவது 1986 இல் இந்த அணு உலை வரப்போகிறது என்ற செய்தியை இந்திய அரசு பரப்பிய உடனேயே, கூடங்குளம் வட்டாரத்தில் இருந்த ஆண்டன் கோம்ஸ் தனது நண்பர்களுடன் சேர்ந்து அதை எதிர்க்க ஆயத்தமானார். அப்போது அவர் ஐக்கிய ஜனதா தளம் என்ற ஜார்ஜ் பெர்ணன்டஸ் கட்சியில் ஆர்வமாக இருந்தார். அந்நேரம் ஜார்ஜ் பெர்ணன்டஸ் அவர்களும் அணு உலைகளை எதிர்த்து கருத்து கூறி வந்தார். அப்போது சென்னையில் இருந்த யு.என்.ஐ.செய்தி நிறுவன ரமேஷ் இந்த கூடங்குளம் அணு உலை பற்றிய ஆராய்ச்சிகளை செய்து அதை வரவிடாமல் செய்ய போராட்டங்களை கட்டமைக்க அன்டன் கோம்ஸ் அவர்களை தொடர்பு கொண்டார். 1987 ஆம் அண்டு இதற்கான பணிகளை கட்டமைக்க ஆர்வலர்கல் நெல்லை,த்க்ஹூத்துகுடி மாவட்டங்களில் திரட்டப்பட்டனர்.


அதை ஒட்டி, 1987 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இருபத்தி இரண்டாம் நாளில் இதே இடிந்தகரையில் வைத்து ஆண்டன் கோம்ஸ் ஏற்பாட்டில் ஒரு பொதுக்கூட்டம் போடப்பட்டது. அதில் சென்னையை சேர்ந்த ஊடகவியலாளர் ரமேஷ், ஞானி போன்றோர் கலந்து கொண்டு பேசினார். அதில் "கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு கூட்டமைப்பு" என்ற பெயரில் ஒரு போராட்ட மைப்பு ஏற்படுத்தப்பட்டு அறிவிக்கப்பட்டது. அதன்பின் 1988 ஆம் ஆண்டு நவம்பர் இருபத்தி ஒன்றாம் நாள் திமுக வின் அன்றைய மாநிலங்கலவை உறுப்பினர் வைகோ ஒரு மாபெரும் எழுச்சி உரையை கூடங்குளம் அணு உலை கொண்டுவரக் கூடாது என்று ஆற்றினார். அப்போது சாட்சியாக காட்டுவதற்கு ஒரு செர்நோபில் அணு உலையின் விபத்து சோவியத் யூனியனில் நடந்து உலகமே அதிர்ச்சி ஆகியிருந்தது. அதன்பின்தான் உங்கள் மத்திய அரசு ௧௯௮௮ ஆம் ஆண்டு நவம்பர் இருபத்தி ஆறாம் நாள் இந்த கேடுகெட்ட கூடங்குளம் அணு உலைக்கான ஒப்பந்தந்த்தை கை எழுத்தாக்கியது.

சிதம்பரம் வர்களே, இந்த சுட்டி காட்டுதல்கள் போதுமா? இன்னமும் வேண்டுமா? உங்களுக்கு அந்த கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு கூட்டமைப்பு ஆண்டன் கோம்ஸ் தலைமையில் தமிழ்நாடு முழுவதும், மற்றும் புதுச்சேரி மாநிலம் முழுவதும், மற்றும் கேரளாவிலும், மற்றுமிலங்கையிலும் எப்படி தகலாது பரப்புரையையும் போராட்டங்களையும் நடத்தியது என்ற சான்றுகளை அளிக்க எப்போதும் தயாராக இருக்கிறோம். என் என்றால் நாங்கள் அன்ற்ஹா கூட்டமைப்பில் பணியாற்றியவர்கள்.அதனால் உங்கள் ஒரே சண்டேஹ்கம் இருபத்தஹிந்து ஆண்டுகளாக சும்மா இருந்துவிட்டு இப்போது போராடுகிறீர்கள் என்பதுதான்.அடஹ்ர்கு விடை அளவுக்கு அதிகமாகவே எண்கள் அவசம் இருக்கிறது. உங்கள் வாயை மூடிவிட்டு, அந்த அனஊளையையும் மூடிவிடுங்கள்.

Sunday, February 12, 2012

பினராய் எறிந்த கல்லில் மாங்காய் விழுமா? கற்கள் விழுமா?

பினராய் விஜயன் கேரளாவின் சி.பி.எம். என்ற மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர். கேரளா சிபிஎம் தமிழ்நாட்டு கட்சி போல அல்ல.அங்கே அது ஆளும்வர்க்க கட்சி. அதாவது மீண்டும், மீண்டும் ஆட்சிக்கு வரும் தகுதி கொண்ட கட்சி. அதனால் அதன் செயல்பாடுகள் உங்களுக்கு ஒரு முதலாளித்துவ கட்சியை போலவே தோன்றலாம்.ஆனாலும் அது சிவப்பு கொடிகட்சி என்பதால் நீங்கள் அப்படி நினைக்க கூடாது. மாநில செயலாளர் பினராய் விஜயனுக்கும், வி.எஸ். அச்சுதானந்தன் என்ற முன்னாள் முதல்வருக்கும் என்ன தகராறு என்று நீங்கள் கேட்க கூடாது. அது "தத்துவார்த்த" பிரச்சனையாக இருக்கலாம் என்று நீங்களே நினைத்துக் கொள்ள வேண்டும். நடந்து கொண்டிருக்கும் மாநில மாநாட்டில் அச்சுதானந்தன் ஒர்ங்கட்டபட்டாரே என்று நீங்கள் கேட்க கூடாது. அச்சுதாநாதன் எழுதிய அறுபது புகார் கடிதங்களும் அரசியல் தலைமை குழுவான பொலிட்பீரோவில் விவாதிக்க பட்டதா? என்று நீங்கள் கேட்க கூடாது. பொதுவுடைமை கட்சியில் விமர்சனம், சுய விமர்சனம் இரண்டும் வரும், போகும் என்று நீங்கள் சும்மா இருக்க வேண்டும். பினராய் விஜயனை கண்டித்து அச்சுதானந்ததிற்கு ஆதரவாக, வந்திருந்த யச்சுரியும், பிருந்தாகரந்தும் பேசினார்ககளே என்று நீங்கள் திருப்தி அடைய வேண்டும். ஐந்தாவது முறையாக மாநில செயலாளராக பினராய் விஜயனை இந்த முறை முன்வைத்ததே அச்சுதானந்தன் தான் என்று நீங்கள் அறிய வேண்டும். அதுதான் கம்யுனிஸ்ட் கட்சியின் தந்திரம் என்று கூறக்கூடாது. அது சிறுபான்மையை வைத்து பெரும்பான்மை கருத்தை சொல்ல வைக்கும் கட்சி வழி என்று புரிந்து கொள்ள வேண்டும்.

இப்போது புதிய பிரச்சனை ஆரம்பமாகி உள்ளது. மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டிற்காக பல கிளைஅமைப்புகளும், வெகு மக்கள் அமைப்புகளும் சுவரொட்டி போடுவார்கள் அல்லவா? அதுபோல ஒரு சுவரொட்டியை சி.ஐ.டி.யு.போட்டுள்ளது. அந்த சுவரொட்டியில் "ஏசுநாதரின் கடைசி விருந்து" என்ற பிரபல விருந்தை பற்றி "மாற்று முகங்களுடன்" அச்சிடப்பட்டுள்ளது. அதாவது ஏசுநாதரும், யோவானும், காஷியசும், எல்லா பதின்மூன்று சிஷ்யர்களும் இணைந்து சாப்பிட்ட உணவு சாப்பிடும் படத்தை அப்படியே மாற்றி அரசியல்வாதிகளை போட்டு அச்சடிக்கபட்டுள்ளது. அதாவது ஏசுநாதர் இடத்தில் அமெரிக்க அதிபர் பார்க் ஒபமா, மாட்டார் சீடர்கள் இடங்களில் சோனியா, மன்மோகன், ராகுல்காந்தி, ஏ.கே.அந்தோணி, ஊமன் சாண்டி, ரமேஷ் சென்னிதாலா, எல்.கே.அத்வானி, நரேந்திர மோடி, பிரான்ஸ் நாட்டு அதிபர் நிகோலஸ் சர்கோசி ஆகியோர் இருப்பது போன்ற படம் அது. அந்த படத்தில் " முதலாளித்துவத்தின் கடைசி விருந்து" என்று எழுதப்பட்டுள்ளது. இது ஏசுநாதரின் கடைசி விருந்து என்ற மிகவும் புனிதமாக் கிருத்துவ மக்களால் உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளபட்ட ஒரு படத்தை அவமானப்ப்டுத்துவது என்ற முழக்கம் இப்போது கிளம்பி உள்ளது.

இந்த சுவரொட்டியை சி.ஐ.டி.யு. பல இடங்களில், குறிப்பாக திருவனந்தபுரத்தில் குன்னபுழா, பேரூர் கோணம், தக்கனபுரம், ஆகிய இடங்களிலும் ஒட்டியுள்ளது. ஊமன் சாண்டி இந்த சுவரொட்டியை கடுமையாக கண்டித்துள்ளார். மத நம்பிக்கைகளை புண்படுத்துகிறது என்றார். கேரளா கத்தோலிக்க திருசசபை, " இந்த கம்யுனிஸ்டுகள் தான் கடைசி உணவு எடுக்கிறார்கள் என்றும், ரஷியா, கிழக்கு ஜெர்மனி ஆகியவை அழிந்து விட்டன என்றும், சீனாவில் இருப்பது கம்யுனிசம் அல்ல" என்றும் கூறியுள்ளார். அதேபோல சிரோ-மலபார் திருச்சபையின் பாதிரியார் பால் தலைக்கா கடுமையாக விமர்சித்துள்ளார். கேரளா கத்தோலிக்க பேராயர்களின் மாநாட்டின் பேச்சாளர் ஸ்டீபன் அலட்ரா கடுமையாக விமர்சித்துள்ளார். அதற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பினராய் விஜயன் இந்த சுவரொட்டி கட்சி தலைமைக்கு தெரியாமலேயே வெளிவந்து விட்டது என்றும் அதை தாங்கள் உடனேயே கிழித்து விட சொல்லி விட்டோம் என்றும் பதிலுரை கூறியுள்ளார்.

நம்முடைய சந்தேகம் எல்லாம் பினராய் விஜயனுக்கு வேண்டாத கட்சிக்குள் இருக்கும் கும்பல் செய்திருப்பார்களோ? ஏன்? எதற்காக் அவர்கள் பினராய்க்கும் கிருத்துவர்களுக்கும் "சண்டை" மூட்ட வேண்டும்? மார்க்சிஸ்ட் கட்சிதான் தன்னை எப்போதுமே மதவாத வாக்குகளை விட்டு கேரளாவில் தூரம் தள்ளி நிற்குமே? இப்போது பினராய் விஜயனுக்கும், கிருத்துவ மதவாதிகளுக்கும் இடையில் எதற்காக புதிய சண்டையை மூட்ட அவரது எதிர் அணி வேலை செய்ய எவ்ண்டும்? அதாவது எர்ணாகுளம் மாவட்டத்தின் பிரவம் தொகுதியில் மானி காங்கிரஸ் ஜேக்கப் இறந்தபின் இடைதேர்தல் வருகிறது. அதில் மானி காங்கிரஸ் தோற்றாலும், வெற்றி பெற்றாலும் அவர்களுக்கு பெரிய லாபமோ, நட்டமோ இல்லை. அதேநேரம் பினராய் விஜயனின் ஆளான முன்னாள் உள்துறை அமைச்சர் கொடியேறி பாலகிருஷ்ணன் { மாநில மாட்டில் அச்சுதானததிற்கு எதிராக செயல்பட்டவர்} மானி இடம் ஒரு ரகசிய ஒப்பந்தம் செய்தாராம். அதில் மானி காங்கிரசின் எட்டு சட்டமன்ற உறுப்பினர்களும் இடதுசாரி கூட்டணிக்கு வந்துவிட்டால், மானிக்கு முதல்வர் நாற்காலி உறுதி என்று கூறியுள்ளாராம். இத்தகைய காய் நகர்த்தல் மூலம் பினராய் விஜயனின் எதிரான அச்ச்தானந்ததை முதல்வராக வர விடாமல் தடுத்து விடலாம். அதேசமயம் இடதுசாரி அரசாங்கத்தை கேரளாவில் ஏற்படுத்தி விடலாம். ஊமன் சாந்தியின் காங்கிரஸ் தலைமையிலான் ஐக்கிய ஜனநாயக கூட்டணி அரசை கலைத்து விடலாம். பினராய் விஜயனும் ஒரு அமைச்சராக வந்து விடலாம். ஒரே கல்லில் எத்தனை மாங்காய்களை வேண்டுமானாலும் அடித்து விடலாம் என்பது அந்த விஜயன் குழுவிற்கு கணக்கு.

மேற்கண்ட கணக்கை முழுவதும் இந்த குறிப்பிட்ட சுவரொட்டி கலைத்து விட்டதா? இந்த சுவரொட்டி அச்ச்தானந்ததிற்கும், ஊமன் சாந்திக்கும் உதவி செய்து விட்டதா? இந்த சுவரொட்டி பற்றி சி.பி.ஐ. கட்சியின் தலைவர் ஒருவர் மார்க்சிஸ்ட் மாநாடு ஒரு "நிகழ்ச்சி மேலாண்மை" என்று கூறி விட்டார். அதற்கு பினராய் அவரை காய்ச்சி எடுத்து விட்டார். அவரோ பதிலுக்கு ஏசுநாதரை உலகம் முழுவதும் கம்யுனிஸ்டுகள் ஒரு புரட்டிசியாளராக பார்கிறார்கள். அவர் படத்தை வைத்தது தவறல்ல. ஆனால் அந்த கடைசி விருந்து சுவரொட்டியில் நீங்கள் எப்படி "முகங்களை மாற்றலாம்?" என்று கேட்டுள்ளார். அதனால் இன்று சென்னை நியு இந்தியன் எக்ஸ்ப்ரெசில் அந்த செய்தி வந்து விட்டது. தோண்டினால் அதற்கு பின்னால் இவ்வளவு செய்திகள் உள்ளன. அதேசமயம் பினராய் விஜயன் மாநாடு தொடங்கும்போதே "ஏசுநாதர் உலகின் முதல் புரட்சியாளர்" என்று வேறு கூறிவிட்டார். அதை உடனேயே மலபார் பேராயர் ஆதரித்து கூறிவிட்டார். இப்படியாக கிருத்துவ வாக்கு வங்கிகளை குறி வைத்து பேசப்படும் பேச்சுகள், நமக்கு மானி காங்கிரசின் வாக்கு வங்கி முழுவதும் கிருத்துவ வாக்கு வங்கி என்ற உண்மையை கூறாமல் இருக்க முடியவில்லை.

Saturday, February 11, 2012

சல்வா சுடும் தலைவரை மாவோவாதிகள் அழித்தார்கள்.

சட்டிஸ்கர் மாநிலத்தில் ஆதிவாசிகள் வாழும் காட்டு பகுதிகளிலும், மலை பகுதிகளிலும் மத்திய அரசின் சதிச்செயலான் "கனிம வளங்களை"களவு செய்யும் கார்போறேட்களை எதிர்த்து போராடும் மக்களுக்கு மாவோவாதிகள் தலைமை தாங்கும் நேரத்தில், அதை எதிர்கொள்ளசட்டிச்கர் காவல்துறை சல்வா சுடும் என்ற கூலி படையை ஆதிவாசிகள் மத்தியில் உள்ள பொறுக்கிகளை வைத்து அமைத்து அதையே ஆதிவாசிகளை எதிர்த்து போராட பயன்படுத்தி வந்தது. அந்த சல்வா சுடும் என்ற பொருக்கி கூலி படைக்கு அனைத்து ஆயுதங்களையும் கொடுத்து காவல்துறை பேணி வந்தது. அந்த கூலி படையும் அனைத்து விதமான் பாலியல் பலாத்காரங்களையும் பெண்கள் மீது கட்டவிழ்த்து விட்டது. பல அப்பாவி ஆதிவாசி மக்களை கொலைகள் செய்துவந்தது. இவை எல்லாமே உச்சநீதி மன்றத்தின் முன்னாள் வைக்கப்பட்டது. உடனேயே அதை நாக்கு அறிந்த உச்சநீதி மன்றம், சல்வா சுடும் கூலி படையை கலைக்க சொன்னது.அதை செய்யசட்டிச்கர் காவல்துறை தயாராக இல்லை.அதனால் அந்த கூலி படையின் ஆட்களையே வைத்து, ஒரு சிறப்பு காவல் அதிகாரிகள் படையென்று ஒன்றை துவங்கியது. இது முழுமையாக் இந்த நாட்டின் அரசியல் சட்டத்தையே மதிக்காமல் செய்யும் போக்கு.


அந்த சிறப்பு காவல் அதிகாரிகள் படைக்கு மீண்டும்தளிவராக அந்த சல்வா சுடும் படையிம்முக்கிய தளபதியான "கார்டோம் சூரியா" என்ற முரடனையே போட்டது. அந்த கார்டோம் சூரியா தனது தலைமையின் கீழ் நூறு சிறப்பு காவல் அதிகாரிகளை வைத்து கொண்டு தனி அராஜக ஆட்சியை அந்த காட்டு பகுதிகளில் நடத்தி வந்தான்.அவன் செய்த கொலைகளையும், பாலியல் வன்முறைகளையும் மக்கள் கணக்கு பார்த்து சொல்கிறார்கள். அந்த அளவுக்கு அரசின் காவல் படை என்ற பெயரில் ஒரு ஆராச கூலி படையை அந்த சட்டிஸ்கர் அரசு பராமரித்து வந்தது. கடைசியாக் அமாவோவாதிகளின் "தோட்டாக்களுக்கு" அந்த கொடியவன் அதாவது அந்த கூலி படை தலைவன் கார்டோம் சூரியா "பலியானான்"என்ற செய்தயு அந்த மக்களுக்கு ஒரு இனிப்பு செய்தியாக இருக்கிறது. நமது ர்டமழ்நாட்டில் இதேபோல பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து ஒரு கீழவென்மனியின் பண்ணையார் கோபாலகிருஷ்ணன் நாயுடு தனது நாற்பத்தி நாலு தேவேந்திர கூலி விவசாயிகளை கொலை செய்த செயலுக்காக பழி வாங்க பட்டதை மக்கள் வரவேற்றார்களோ,மாநிலமெங்கும் இனிப்பு கொடுத்தார்களோ, அதுபோல வரவேற்றிருப்பார்கள் என்று நமக்கு புரிகிறது.

ஐரோப்பிய யூனியனுடன் ஒரு கையும், ஈரானுடன் இன்னொரு கையும்?

மன்மோகன்சிங் ஒரு சிறந்த சர்கஸ் வித்தைகாரர்தான். ஒரு கையில் சாட்டையும் , இன்னொரு கையில் ஆட்டையும் சிங்கத்தின் வாய் அருகே காட்டும் ஒரு சர்கஸ் வீரன் போல நடந்து கொள்கிறாரே? ஐரோப்பிய யூனியனின் ஆணைய தலைவரும், கவுன்சில் தலைவரும் டில்லி வந்துள்ளபோது, நேற்று அவர்களுடன் கை குலுக்குகிறார். சமீபத்தில் அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியனும் சேர்ந்து ஈரானுக்கு எதிராக "பொருளாதார புறக்கணிப்பை" அறிவித்த போது, அதை இந்தியா ஏற்கவில்லை. ஈரானுடன் தான் இந்தியா சமையல் எரிவாயு குழாய்களை அமைத்து செயல்படும் என்றபதில் இந்திய அரசு உறுதியாக உள்ளது. ஐரோப்பிய யூனியன் ராணுவ வழி தீர்வை விரும்பவில்லை என்றும், பொருளாதார தடை மூலம் ஈரானை அதனது அணு சக்தி கொள்கையிலிருந்து இரங்கி வர வைக்கவே விரும்புகிறோம் என்றும் வந்தவர்கள் கூறியும் கூட, மன்மோகன் இந்திய அரசின் கொள்கையாக அத்தகைய ஒரு பொருளாதார தடைக்கு தாங்கள் ஒப்புகொள்ள இயலாது என்றார்

. அதேசமயம் ஈரான் அணு சக்தி விசயத்தில் சிறிது சிக்கலான நிலையை எடுப்பதாகவும், ஆனாலும் இந்தியாவின் முக்கிய எரிசக்தி உதவியாளரும், நண்பனுமான ஈரான் என்றும் கூறினார். இந்தியர்கள் அறுபது லட்சம் பேர் வளைகுடா நாடுகளில் வேலை செய்கிறார்கள் என்பதையும் மன்மோகன் கூறி, ஆகவே சமாதனம்தான் இந்திய அரசு விரும்புவது என்றார்.அதாவது ஐரோப்பிய யூனியனுடன் இந்திய அரசு ஈரான் விசயதில் மாறுபட்டு நிற்பதை டில்லிகாரர்கள் மறுக்க முடியவில்லை. என்னதான் அமெரிக்க அடிவருடியாக இருப்பதையே மன்மோகன் விரும்பினாலும், ஈரான் மூலம் இந்தியாவிற்கு தேவையான எரிசக்தியை தொடர்ந்து பெற்று வருவதால் இந்த டில்லிகாரர்களால் ஈரானை விட்டு விலகி நிற்க முடியவில்லை. ஆனாலும்கூட, நாம் பழைய நிகழ்வுகளை மறக்கமுடியாது. அதாவது ஈரானுடன் எரிவாயு குழாய்களை போடா இந்திய அரசு முயன்ற போது அதை எதிர்த்த அமெரிக்கா அப்போது மன்மோகன் மூலம் எதிர்ப்பை பதிவு செய்தது. இது ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முதல் கட்ட ஆட்சியில் நடந்தது. அப்போது நட்வர்சிங் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி எரிவாயு குழாய்களை போடா திட்டமிட்டதர்காக் அமெரிக்காவால் நிற்பந்தப்படுதபட்டு அமைச்சரவையிளிருந்தே தொக்கி எறியப்பட்டார்.அதேவேலையை அடுத்து எண்ணைவள அமைச்சராக வந்த மணிசங்கர் ஐயர் செய்தவுடன் அவரையும் அமேரிக்கா விருப்பத்திற்காக மன்மோகன் மைச்சர்வையிளிருந்தே நீக்கினார். இரண்டாவது ஐ.மு.கூ. ஆட்சியில் மன்மோகனின் இந்த அமெரிக்க சார்பு நிலைப்பாடு, உலக சூழலின் மாற்றத்தில் எடுபடாமல் போய்விட்டது.

அதேபோல சிரியா விஷயம் வந்தது. அதில் அமெரிக்காவின் நிலைபாட்டை இந்திய அரசு ஆதரிக்கிறது என்றார் மன்மோகன். அதாவது சிரியா மேல்றாணுவ தாக்குதலை கட்டவிழ்த்து விட ஆதரிக்கிறது என்று பொருள்.ஐநாவின் பாதுகாப்பு அவையிலேயே இந்தியா அமெரிக்காவின் நிலைபாட்டை ஆதரித்து சிரியா மீது ராணுவ தாகுதல் நடத்த ஆதரவு கொடுத்தாலும் சீனாவும், ரஷியாவும் அதற்கு தடையாக வீடோ அதிகாரத்தை பயன்படுத்தி விட்டனர். ஆனாலும் இந்திய அரசு ஐரோப்பிய தலைவர்களிடம் தாங்கள் சிரியாவிற்கு எதிராக இருப்பதை மறு உறுதயு செய்துவிட்டார்.இவ்வாறு இந்திய அரசு தனது தன்னலம் காரணமாக தான் சில நேரங்களில் அமெரிகைன் நிலைக்கு எதிர் நிலை எடுக்குமே தவிர எப்போதும் அமெரிக்கா பக்கம்தான் என்பதை மீண்டும் நிரூபித்து வருகிறது.

Friday, February 10, 2012

சிதம்பர கலைஞர் கூட்டு நடவடிக்கை?

கூடங்குளம் அணு உலையை எப்படியாவது கொண்டுவர பிரதமர் அலுவலகம் ஒரு வேலையை உள்துறை சிதம்பரத்திடம் ஒப்படைத்துள்ளது. அதை செவ்வென செய்ய உள்துறையும் கலைஞரை நம்பி அடி எடுத்து வைத்துள்ளது. திமுக கூடங்குளம் அணு உலையை எதிர்க்காமல் இருந்தா போதும் என்றும், தாங்கள் ஜெ அரசுக்கு நிர்பந்தம் தர திட்டமிடலாம் என்றும் சிதம்பரத்திடம் கைஞர் கூறியுள்ளார் என்பதே தகவல். அதற்கு பிரதி உபகாரமாக புதிய தலைமை செயலகத்தை மருத்துவமனையாக மாற்றும் ஜெ வின் திட்டத்திற்கு மதிய அரசின் தடையில்லா சான்றிதழை தடுத்து விடுகிறோம் என்றாராம் அந்த உள்துறை. அதையொட்டியே கலைஞரும் தனது கட்சியின் உயர்நிலை குழுவிலும், பொது குழுவிலும் ஒரு தீர்மானம் கொண்டு வந்தார். அதில் கூடங்குளம் அணு உலையை ஆதரிக்கவும் இல்லை, எதிர்கவும் இல்லை. இவ்வளவு பெரிய கட்சியான திமுக வின் பொது குழுவிற்கு அணு உலை பற்றிய ஒல்கையும இல்லை. கூடங்குளம் பற்றி நிலைபாடும் இல்லை மாறாக தமிழக அரசு விரைவில் முடிவு செய்ய வேண்டும் என்று இருக்கிறது. இதுதான் திமுக வின் உண்மை நிலையா?

1988 இல் இதே கூடங்குளம் அணு உலை வரபோகிறது என்று அரசு முடிவு செய்த நேரத்தில் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு கூட்டமைப்பு என்ற அமைப்பின் அன்றைய தலைவர் ஜி.ஆண்டன் கோம்ஸ் தலைமையில் மாநிலம் தழுவிய போராட்டங்கள் நடந்த போது, முரசொலி ஏட்டின் வார ஏடான "புதைஒயல்" ஏட்டின் அன்றைய ஆசிரியர் ஞானி ஒரு கட்டுரையை கூடங்குளம் அணு உலைக்கு எதிராக எழுதி, அதை படித்த பின் ஞானி முரசொலி மாறனிடம் அது பற்றி பேசி, மாறனும் கலைஞரிடம் எடித்து சொல்லி, அதன் விளைவாகவே அன்றைய கலைஞர் வைகோ விடம் பேசி அவரும் நாடாளுமன்றத்தில் முழங்கியதும அதை அன்றைய கே.பி கந்தசாமியின் தினகரன் ஏடு முதல் பக்கத்தில் அச்சிட்டதும் பசுமையாக நினைவுக்கு வருகிறது. அப்படியானால் எப்படி இப்போது அதே கலைஞரிடமிருந்து இப்படி ஒரு வெளிப்பாடு வருகிறது?

அதுவும் அதிமுக அரசுக்கு நெருக்கடி கொடுத்து மத்திய அரசுக்கு வக்காலத்து வாங்குவது என்பதாக வருகிறது? பிபரவரி ஒன்பதாம் நாள் முரசொலியில் முதல் பக்கத்தில் கலைஞரே எழுதும் கேள்வியும் நானே, பதிலும் நானே பகுதியில் ஒரு செய்தியை எழுதியுள்ளார் கலைஞர். அது கூடங்குளம் அணு உலைக்கு ஆதரவாக மதுரையில் போராடிய காங்கிரஸ் வழக்கறிஞர் பூசை துறையை தமிழக காவல்துறை எப்படி கைது செய்யலாம் என்று கலைஞர் கேட்கிறார். அதை விளக்கும் போது 1986 இல் கூடங்குளம் அணு உலைக்கு அடிக்கல் நாட்டும் போது என் உதயகுமார் எதிர்ப்பு தெரிவிக்க வில்லை என்று ப்பூசைதுரையை சாக்கா சொல்லி கலைஞர் கேட்கிறார். அய்யா கலைஞர் அவர்களே, இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பே எங்களது எதிர்ப்பையும் அதில் உங்களது பங்களிப்பையும் சற்று எண்ணிப்பாருங்கள் அய்யா. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு களிப்னர் அவர்களே நீங்கள் இதை எதிர்க்கும் போதும், தங்கள் வலது கரத்தில் உள்ள ஆசிரியர் வீரமணி அவர்கள் தனது வார ஏடான உண்மையில் கூடங்குளம் அணு உலைக்கு எதிர்ப்பு கொடுத்ஹ்டு பல கட்டுரைகளை வெளியிட்ட போதும், எங்களுடன் அணு உலை எதிர்ப்பு கூட்டமைப்பில் திராவிடர் கழகம் கலந்து கொண்டதும் எந்த அந்நிய பணத்தை வாங்கி கொண்டோ, அல்லது எதிர்பார்த்தோ என்று விளக்க முடியுமா???


இப்போது தமிழக அரசுக்கு நெருக்கடி கொடுக்க எண்ணி கலைஞர் அவர்களே நீங்கள் கோவையில் உள்ள "சிறு தொழில் கூட்டமைப்பை" தூண்டி விட்டு "மின்வெட்டை" எதிர்த்து போராட்டத்தை தூண்டி விட்டு அதை முரசொலியில் பிபரவரி ஒன்பதாம் நாளும், பத்தாம் நாளும், பதினோராம் நாளும் தலைப்பு செய்தியாக போட்டு, அதன்மூலம் "மின்சாரம் வரவேண்டும் என்றால் அணு உலை வரவேண்டும்" என்ற ஒரு "வக்கணையான" சிதம்பரம் சூத்திரத்தை விற்பனை செய்து வருகிறீர்களே? இது நியாயம்தானா? இப்போது தமிழ்க்ஹா மக்களை மின் வெட்டிற்கு எதிராக தூண்டி விட்டு அதையே அணு உலைக்கு சாதகமாக திருப்பி விட இந்த இரு தலைவர்களும் திட்டமிட்டுள்ளார்கள். அதுவே எழுத்தாளர் சோலையின் கட்டுரை வடிவில், நக்கீரனில் இப்போது வெளி வந்துள்ளது. அதிலும் அமெரிக்கா தோண்டலில் என்று எழுதும் சோலை "மன்மோகனும், திமுகவும்" சேர்ந்து தான் அமெரிக்க- இந்திய அணு ஒப்பந்தத்தை ஆதரித்தவர்கள் எனபதை ஏனோ மறந்து விட்டார். இதே நக்கீரனில் பழைய அணு உலை எதிர்ப்பாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வம் திமுகவின் நிலையை ஆதரிக்க வேண்டி, அமெரிக்காவுடனான அணு உலை ஒப்பந்தத்தை ஆதரித்து எழுதினர் எனபதையும் ஏனோ மறந்துவிட்டார். எல்லாமே கலைஞரின் உறவுக்கார, செயலாளர் ராஜமாணிக்கம் கூறியதால்தான் சோலை அப்படி எழுதுகிறார் என்று நாம் எப்படி சும்மா பார்த்து கொண்டு இருக்க முடியும்?

Wednesday, February 8, 2012

சிதம்பரம் பேச்சுக்கு தவணை முறையில் மறுப்பு

கூடங்குளம் அணு உலை வேண்டாம் என்ற குரல் இந்தியா முழுவதும் கேட்டபின் நாடு முழுவதும் உள்ள வார இருக்கும் அணு உலைகளை எதிர்க்கும் போக்கை அது ஏற்படுத்துகிறது என்று உணர்ந்த பின், தலைமை மைச்சர் அலுவலகம் விழித்து கொண்டு இதை விடகூடாது என முடிவு எடுத்து அதற்கு பிறகு உள்துறை வசம் அந்த பொறுப்பை ஒப்படைத்துள்ளது. உள்துறை தமிழ்நாட்டு காங்கிரசி தனக்கு செல்வாக்கு இல்லையே என்ற நிலையில் முதலில் இணை மைச்சர் நர்ரயன்சாமியை அனுப்பி எதிர்க்க சொன்னது. அதாவது அணு உலையை ஆதரிக்க சொன்னது. அந்த மனிதன் தன்னை தபால்காரர் போல காட்டி கொண்டதால் தமிழக மக்களிடம் தனிப்பட்டு விட்டார். பிறகுதான் நெல்லை நாடாளுமன்ற தொகுதி எம்.பி.யான வாசன் குழுவை சேர்ந்த ராம்சுப்புவை பிடித்ஹ்டு அணு சக்தி துறை அவருக்கு "காசுகள்" கொடுத்து அவர்மூலம் பல "வேலையற்ற பேச்சாளர்களை" அழைத்து வந்து கூட்டம் போட, பட்டினிப்போர் நடத்த என்று நாடகம் ஆடினார்கள். அதுவும் எடுபடாத நிலையில் சிதம்பரமே நேரில் வர ஏற்பாடு செய்தார்.

பிரதமர் அலுவலக வற்புறுத்தலில் இணை சேராத தமிழக காங்கிரசின் குழுக்கள் இணை சேர்ந்தன.சிதம்பரம் இரண்டாம் அலைகற்றை வரிசை ஊழலில் சிக்கி "மூஞ்சி" வெந்துபோன நிலையில் இந்த பிரதமர் அலுவலக வற்புறுத்தலுக்கு ஒப்புகொண்டார்.அதுவே பாளையம்கோட்டை ஜவர் மைதானம் பொது கூட்டமாக நாலாம் நாள் அதாவது சிங்களர்களின் தேசிய தினத்தில் போடப்பட்டது. அதாவது தமிழர்களுக்கு எதிரானது அந்த அணு உலை என்று உணர்ந்த சிதம்பரம் தமிழர்களுக்கு எதிரானவர்களின் தேசிய நாளை தேர்வு செய்தது பொருத்தமானதே. அந்த கூட்டத்தில் அவர்கள் பேசிய பெசுகளை ஒவ்வொன்றாக எடுத்து கொண்டு பதில் கொடுக்க வேண்டிய பொறுப்பு நமக்கு உண்டு.

முதலில் தேடிபார்த்தும் அந்த காங்கிரஸ் மத்திய மைச்சர்கள் யாருமே "அணு உலை" பற்றிய விவரங்களை பேசவில்லை. அதாவது அணு உலை கூடாது என்போரது வாதத்தையோ, அதற்கு பதிலாக அணு உலை சரிதான் என்ற வாதத்தையோ மக்கள் முன்னே வைக்க அவர்கள் முயற்சிக்க வில்லை.அவர்கல்யருகுமே அது பற்றி தெரிந்திருக்க வில்லை என்றும் எடுத்து கொள்ளலாம். சர்ச்சைக்குள்ளான கேள்விகளுக்கு விடை தெரியாது என்றும் எடுத்து கொள்ளலாம். அணு உலை பற்றி அவர்களுக்கு சந்தேகம் உண்டு என்றும் எடுத்து கொள்ளலாம். நமெகென்ன என்று அக்கறையற்றவர்கள் என்றும் எடுத்து கொள்ளலாம்.மொத்தத்தில் எந்த விதத்திலும் திருநெல்வேலி மக்களை புரிய வைக்கவோ,தெளிவு படுத்தவோ விளக்கம் அழிக்கவோ அவர்கள் அந்த கூட்டத்தை நடத்தவில்லை எனபது மட்டும் தெரிகிறது.

அப்படியானல்தமிழக அரசுக்கு "தலைவலி" கொடுக்கவே அவர்கள் கூட்டம் நடத்தினர் என்பது இதிலிருந்தே தெரிகிறது.இப்படி ஒரு உள்துறை அமைச்சர் நமக்கு கிடைத்துள்ளார்.அடுத்து அனர்த்த சிதம்பரம் அணு உலை எதிர்ப்பு என்ற இருபத்தைந்தாண்டு போராட்டத்தில் இன்று இடிந்தகரை பகுதியில் நாடாகும் அடையாள தொடர் போரில் பெரும் அழுவு மக்கள் பங்கு கொண்டிருக்கும் பொது, அதில்; முன்னணியில் இருப்பவர்களை மட்டும் தனிமை படுத்த முயருள்ளார் எனபது அவரது பேச்சின் முயற்சி.அதற்கு அவர் கைகொண்ட விதம் இப்போது நம்மிடமிருந்து பதிலை தூண்டி விட்டது.அதுதான் இருபத்தைந்து ஆண்டுகாலமாக "சும்மா" இருந்து விட்டு பதின்மூன்று ஆயிரம் கோடிகளை செலவழித்த பிற்பாடு என் எதிர்த்து போராடுகிறீர்கள் என்று கேட்டிருக்கிறார்.அந்த இடத்தில்தான் அய்யா மாட்டிக் கொண்டார். இருபத்தைந்து ஆண்டுகளாக நடந்த போராட்டங்களை நாம் விளக்கபுரப்புடுவோம்.

Tuesday, February 7, 2012

அரசனும், புருசனும் மன்மோகனுக்கு மாறுவார்களோ?

மன்மோகன்சிங் ஒழுங்காக அமெரிக்கா இட்ட கட்டளைகளுக்கு அடிபணிந்து வேலை செய்யும் ஒரு வரலாறு படைத்த்சவர் என்றுதானே இந்த உயர் பொறுப்பை கொடுதார்கள்? அதைஒழுன்காக் செய்தாரா? அய்யா. நீங்கள்தான் இந்திய மக்கலளால் நேரடியாக தேர்ந்தெடுக்கபடவில்லை. அதனால்நான் என் இந்திய மக்களின் நலனை கருத்தில்கொள்ள வேண்டுமென்று நீங்கள் கேட்கலாம். நியாயம்தான்.நாடாளுமன்ற ஜனநாயகத்தை மதித்து நடக்கும் நாங்கள்தான் முட்டாள்கள்.உங்களுக்கு நாடாளுமன்ற ஜனநாயகதில்னம்பிக்கை இல்லை எனபது எங்களுக்கு புரிகிறது. அதனாலதான் இந்திய வரலாற்றிலேயே இல்லாத முறையில் ஒரு பிரதமர் மீண்டும்,மீண்டும் மாநிலங்களவை மூலம் தேர்ந்தேடுக்கபடுகிறீர்கள்.சரி.நீங்கள் அமெரிக்காவின் ஆள் என்றுதானே புரிய வைத்தீர்கள்?

அமெரிக்க-இந்திய அணு உலைஒப்பந்தம் செய்தீர்கள். இந்திய மத்திய அமைச்கார்வையையோ, நாடளுமன்றதையோ கேட்காமலேயே அமெரிக்காவிற்கு தொண்டு செய்தீர்கள். அப்புறம் அவர்கள் கூறிய அனைத்து நாட்டு அணு சக்தி கழகம் உடன் பேசி அணுசக்தி விநியோக நாடுகளை கெஞ்சிநீர்கள். அவர்கள் கூறிய படி ஒரு "இழப்பீடு" சட்டம்கொண்டு வந்தீர்கள். அதில் இயக்கும் அணுஉலை நிறுவனம் இழப்பீட்டு தொகையில் பங்கெடுக்க வேண்டுமென்ற அம்சத்தை எதிர்க்கும் அமெரிக்க கார்பொரேட் நிறுவனங்களை சமாதனம் செய்ய முயன்றீர்கள் அதற்காக ஒரு விதிகள் என கூறினீர்கள். உங்கள் முயற்சியை அமெரிக்க முதலாளிகள் ஏற்கவில்லை. அதன்பின் திடீரென ரஷியா, ஆஸ்ட்ரேலியா, பிரான்ஸ் என்று அமெரிக்கா அல்லாத நாடுகளிடம் அணு உலை எரிசக்திக்கு பேசினீர்கள். அமெரிகாதானே இறங்கி வருமேன்று எதிர்பார்த்தீர்கள்.

நீங்கள் அரசனை நம்பி புருஷனை கை விடுகிறீர்களே என்று எண்ணினோம். பிறகு பிரான்ஸ் உடன் விமான ஒப்பந்தமேன்று இங்கிலாந்தை கோப படுத்தினீர்கள். சரி.நீங்கள் புருசனைகைவிடுவதால் மாட்டிகொள்வீர்களா ? என்று எண்ணினோம்..இப்போது உங்களுக்கு ஒரு வாய்ப்பு. அமெரிகாதன் ஆதரவு நாடுகளான இங்கிலாந்து,பிரான்ஸ் உடன் சேர்ந்து அய்.நா பாதுகாப்பு சபையில் "சிரியாவை" ரானுவம் கொண்டு தாக்க வழி மொழிந்தது. இந்தியா சார்பாக அதற்கு ஆதரவு கொடுத்து விட்டீர்கள்.ஆனால் உங்கள் அரசனோ.புருசனோ அப்படி இடைக்காலத்தில் இருந்த ரஷியா, சீனாவுடன் சேர்ந்து கொண்டு, அந்த தீர்மானத்தை "தள்ளுபடி" செய்து விட்டது.உங்கள் மூஞ்சியும் கரி பூசப்பட்டு விட்டது. இப்போது ரஷியா, சீனா பகலை, அமெரிக்கா நண்பனா? எதுவும் சாதாரனர்களான எங்களுக்கு புரியவில்லை.

Friday, February 3, 2012

பேச்சும், தாக்கும், ப.சீ..போக்கு

நெல்லை மாவட்ட ஆட்சிதலைவர் அலுவலகத்திற்குள், காங்கிரஸ் ஏற்பாட்டில் இந்துமுன்னணியினர் திட்டமிட்ட தாக்குதலை நடத்துவார்கள். அதை ப.ஜ.க.தலைவர் போன்.ராதாகிருஷ்ணன் ஆதரித்து இந்துமுன்னநியினருக்கு பாதுகாப்பு இல்லை என்று போய் பேசுவார். அதையும் ஆங்கில ஏடுகள் வெளியிடுவர். இன்று மனித நேய மக்கள் கட்சி சட்டமன்ற தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா அந்த கூடங்குளம் அணு உலையை மக்கள் எதிர்க்க காரணம் என்ன என்று விளக்கமாக பேசுவார். அப்போது தாக்கிய இந்துமுன்னநியினரை கண்டிப்பார். உடனேயே கனகிராஸ் எம்.எள்.எ. தாக்கிய இந்துமுன்னநியினரை ஆதரித்து பேசுவார். இந்த எல்லா நிகழ்வுகளும் உள்துறை அமைச்சர் சிதம்பரம் திட்டமிட்டு நடத்தியது என்பது எல்லோருக்குமே தெரியும். சிதம்பரம் திமுக தலைமையிடம் பேசிய பிறகு, இன்று திமுக பொது குழுவில் விரைவில் கூடங்குளத்திற்கு முடிவு சொல் என்று பொதுவானவர்கள் போல ஒரு தீர்மானம் வரும். ஒரு சார்பு நிலையை திமுக எடுத்து கனைராஸ், ப.ஜ.க. பக்கம் நிற்கும். அதையும் அரசியல் என்று நாம் பார்க்காமல் "கண்களை" மூடி கொள்ள வேண்டும்.


சீ.பி.எம். எம்.எள்.ஏ. பாலகிருஷ்ணன் கூடங்குளம் அணு உலையை உடனே திறக்க வலியிருத்துவார். யாரும் அவருக்கு ஜைதாபூர் அணு உலைக்கு எதிராக ஒரு நிபுணர் குழுவை சீ.பி.எம். மற்றும் சீ.பி.அய் சேர்ந்து போட்டிருப்பதை நினைவு படுத்த மாட்டார்கள்.சீ.பி.அய்.யின் தலைவர் த.பாண்டியன் கூடங்குளம் அணு உலை விசயத்தில் தமிழக அரசு நிலை என்ன? என்று கேள்வி கேட்டு வீரம் காட்டுவார். அவர்கள் இருவரும் ரஷியா கொண்டுவறுக் அணு உலை என்பதற்காக ஆதரிப்பது வெள்ளிடை மலை.அவர்கள் கட்சிக்குள் ரஷியாவில் நடந்த தேர்தலில் புதின் ஏமாற்று வேலை செய்து வெற்றி பெற்றுள்ளாரே என்று யாரும் கேட்க மாட்டார்கள். நேநேகள் அந்த மோசடி பேர்வழி புதினது வெற்றியை எதிர்க்கும் ஒரு லட்சம் மக்கள் பேரணி பக்கமா? புதின் பக்கமா என்று கேட்டுவிட மாட்டார்கள்.அங்குள்ள கம்யுனிஸ்ட் கட்சியும் புதினது தேர்தல் வெற்றியை எதிர்கிறதே என்று கேட்கவில்லை..ரஷிய கமுயநிஸ்ட் கட்சியை விட, ரஷிய அரசாங்கம்தான் அதிகமாக எங்களுக்கு உதவுகிறார்கள் என்று இங்குள்ள நாடாளுமன்ற இடதுகளும் பச்சையாக கூறவில்லை.இப்படி ஒரு நாடகம் கூடங்குளம் பற்றி நடக்கிறது.

இன்று பெரியார் திராவிடர் கழகம் ஒரு ஆர்ப்பாட்டத்தை கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்கள் மீது தாக்குதல் நடத்திய இந்துமுன்னநியினரை கண்டித்து நடத்தினார்கள்.அப்போது அதில் நாம் தமிழர் கட்சி சீமான், வேல்முருகன் கட்சியான வாழ்வுரிமை கட்சி, என பலரும் பேசினார்கள். பேராசிரியர் தீரன் இப்போது வேல்முருகன் கட்சியில் இருக்கிறார். அது சார்பாக பேசினார். அணு உண்டு தயாரிக்கத்தான் இந்த அணு உலைகளை கொண்டுவருகிறார்கள் என்று உண்மையை போட்டு உடைத்தார். வேல்முருகன் கிருத்துவ மிஷனரிகள் கல்விக்கு எதனை முக்கியத்துவம் கொடுத்து செயல்படுகின்றன என்று கூறி, அவதரி எதிர்க்கும் இந்துத்துவா மைப்பை சாடினார்.சீமான் அணு உலைகள எப்படி ஆபத்தானவை என்றும், அணு கழிவுகளை முப்பதாயிரம் ஆண்டு முதல் ஐம்பதாயிரம் ஆண்டு வரை பாதுக்கப்பது யார் என்ற கேள்வியை எழுப்பி அருமையாக பேசினார்.நிறைவாக குளத்தூர் மணி இந்துத்துவா மைப்பு மீது காவல்துறை நடவடிக்கை போதாது என்ற பொருளில் பேசினார். காங்கிரஸ் மற்றும் சிதம்பரத்தின் கை பின்னால் இருப்பதை சுட்டி காட்ட மறந்து விட்டனர்.

இப்படிதான் பேச அழைத்து சிதம்பரம் மாவோயிஸ்ட் ஆசாத்தை சுட்டு கொள்ள செய்தார். இப்படிதான் பேச அழைத்து மாவோயிஸ்ட் கிஷஞ்சியை சிதம்பரம் விஜயகுமார் மூலம் சித்தரவதை செய்து கொள்ள செய்தார். இப்போது கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்களுக்கும் அதே பாணியை பின்பற்றுகிறார். இதை நம்மவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

Thursday, February 2, 2012

பிரான்சிட்ட வாங்கினா, இங்கிலாந்து கோபப்படுத்து?

மன்மோகன்சிங் சமீப காலமாக நடத்தும் அரசாங்கத்தை பல அந்நிய நாடுகளின் கார்பொரேட் சந்தைதளமாக காணவேண்டும். அவர் அணு உலைகளை வாங்கவும், அதற்கான எரிபொருளான யுரேனியத்தை வாங்கவும் அமெரிக்காவுடன் முதலில் ஒப்பந்தம் போட்டார்.அதற்கு முன்பே இந்திய அரசு அமெரிக்காவிடம் அந்த காலத்திலேயே தாராபூர் அணு உலை உற்பத்திக்கு யுரேனியம் வாங்கி வந்தது. இந்திரா-வாஜ்பாய் கைங்கரியத்தினால் "அணு குண்டு" சோதனை நடத்தி போக்ரான்களை உருவாக்கி அமெரிக்காவிடமும், மற்ற ஐரோப்பிய நாடுகளிடமும் கேட்ட பெயர் வாங்கினார்கள்.அதனாலேயே அய்.அ.எ.ஏ. என்ற அணைத்து நாட்டு அணு சக்தி கழகத்தின் மூலம் உலக அளவில் அணு குண்டு தயாரிக்கும் இந்தியாவிற்கு, அணு குண்டு சோதனையை தடை செய்யும் உலக ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத இந்தியாவிற்கு, நான் ப்ராளிபெரசன் ஒப்பந்தம், சீ.டி.பி.டி. ஒப்பந்தம் ஆகியவற்றை கையெழுத்திட மறுக்கும் இந்தியாவிற்கு அணு உலைக்கான எரிசக்தி கிடையாது என்று தடை செய்து வந்தன. அது வெள்ளை ஜார்ஜ் புஷ் வசம் பேசி, அமெரிக்காவுடன் ஒரு அணு சக்தி ஒப்பந்தம் போட்டார் மண்ணு மோகன்.அமெரிக்காவை துணைக்கு அழைத்துக்கொண்டு, அய்.ஏ.இ.ஏ.என்ற அந்த அகழகத்தின் நற்பெயரை பெற்று அவர்கள் மூலம் உலகம் முழுதும் உள்ள குறிப்பாக ஐரோப்பாவில் உள்ள அந்த அணு சக்தி விநியோக நாடுகளிடம் யுரேனியம் பெற ஒப்பந்தம் போட்டார்.

அதன்பிறகு அவர்கள் சொன்னபடி,அணு உலை விபத்து இழப்பீடு சட்டம் கொண்டு வந்தார். இங்குள்ள ஊடக அமபலப்படுதளால், அந்த சட்டத்தில் சில வரிகளை சேர்த்து அமெரிக்க கார்போரேட்களின் பங்கை மறைக்க முயன்றும் முடியவில்லை. அதை ஈடுகட்ட ஒரு "விதிகளை" கொண்டுவந்து இந்தோனேசியா சென்று பாலியில் கருப்பு புஷ் ஒபமாவை சந்தித்து அமெரிக்க கார்போறேட்களை சமாதனப்படுத்த முயன்றார்.அதுவும் முடியவில்லை. இந்தியா திரும்பிய பின், அந்த விதிகளை இணைப்பதை இங்கு உள்ள வரத்து அமைச்சரவையே ஒப்புக்கொள்ளவில்லை. இது மன்மோகனுக்கும், சோனியாவிற்கும் உள்ள முரண்பாடு. இந்திய அணு விஞ்ஞானிகளும் மன்மோகனை எதிர்த்து அமெரிக்க சார்பை மறுக்கிறார்கள்.அதனால் வு வழியில்லாமல் "அணு குண்டு" தயாரிக்கும் ஒரே நோக்கத்தில், அடுத்து நான் ப்ராளிபரேசன் ஒப்பந்தத்தை வற்புறுத்தாத "ஆஸ்ட்ரேலியா,ரசியா" போன்ற நாடுகளுடன் அணு ஒப்பந்தம் செய்து எபப்டியாவது யுரேனியம் பெற்று தொடங்கி விட்டால் அமெரிக்கா தானாக வரும் என்ற எதிர்பார்ப்பில் செயல்படுகிறார். அதில்தான் அவருக்கு கூடங்குளம் முக்கியத்துவமாகிறது. என் என்றால் அது ரஷியா சார்பு.அடுத்து பிரான்ஸ் நாட்டையும் இதேபோல சார்கிறார் மன்மோகன். அவர்களிடம் "ஜைதாபூர்" அணு உலைகளை வாங்க ஒப்பந்தம் செய்கிறார்.

அந்த பிரான்ஸ் அப்படியானால் "விமானபடைக்கும்" எங்கள் விமானங்களை வாங்கு என்கிறது. சரி என்றார் மன்மோகன். அதுதான் பிரான்ஸ் நாட்டின் "டசால்ட் ரபேல் "என்ற ரக விமானங்களை வாங்கி குவிக்க முடிவு செய்தது. அதை பிரான்ஸ் அதிபர் சர்கொசிஸ் வரவேற்கிறார். ஆனால் இப்போது இங்கிலாந்து அதிபர் அதாவது பிரதமர் டேவிட் கேமேரான் பயங்கரமாக எதிர்கிறார். இங்கிலாந்து நாடு உங்கள் இந்தியாவிற்கு "பல லட்சம் பவுண்டுகளை" நிதி உதவியாக கொடுத்தோமே? என்று அவர் வினவுகிறார். இங்கிலாந்து நாட்டு "டைபூன்" என்ற ரக விமானத்தை வாங்கு என்று அவர் கூறுகிறார். அதை அவர் அவர்கள் நாட்டு :"ஹவுஸ் ஆப் காமன்ஸ்" சபையிலேயே சொல்லிவிட்டார். அவரது "கண்செவடிவ்" கட்சி இந்தியாவை கடிக்கிறது. "தொழிலாளர் கட்சியும்" அதுபற்றி பேசுகிறது. பிரான்ஸ் நாடு இங்கிலாந்து அளவுக்கு உதவி நிதி கொடுத்தார்களா? என்று அவர்கள் வினவுகிறார்கள். இன்னமும் பிரான்ஸ் நாட்டு "டசால்ட் ரபேல்" உடன் ஒப்பந்தம் செய்யப்படவில்லை என்று இங்கிலாந்தில் சமாதனம் பேசுகிறார்கள். அதேசமயம் தங்கள் இங்கிலாந்து நாட்டு "டைபூன்" ரக விமானத்தையும் இன்னமும் மறுக்கவில்லை எனவும் கூறுகிறார்கள். இப்படியாக உலக சந்தையில் "சந்தை மன்னன்" மன்மோகன் மாட்டிக் கொண்டு முழிக்கிறார். ஆகவே நேநேகள் யாரும் வார ஏதோ இந்தியாவின் நன்மைக்காக பல வெளிநாடுகளுடன் வணிக ஒப்பந்தம் பெசுகயார் என தவறாக அவரது "பொருளாதார் திட்டங்களை" மதிப்பீடு செய்யவேண்டாம். அவர் உலக சந்தையில் எந்த வல்லரசுக்கு அடிமையாக இந்தியாவை ஆக்கலாம் எனு கணக்கு போடுவதில் ஒரு சிறிய "பிணக்கு". அவ்வளவுதான்.

இரண்டு அலைவரிசை உரிமம் ரத்து போதுமா?

உச்சநீதிமன்றம் கடைசியாக ஒரு முடிவுக்கு வந்துள்ளது. நமது ஆ.ராஜா உள்ளே போய் ஒரு வருடம் ஆன பிறகு அனைத்து இரண்டு அலைவரிசை உரிமங்களையும் அதாவது நூற்று இருபத்து இரண்டு உரிமங்களையும் ரத்து செய்யவும், டாடா, ஸ்வான், போறோருக்கு ஐந்து கொடு அபராதமும் மற்றவர்களுக்கு ஐம்பது லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு கொடுத்துள்ளது. இதில் ராஜா கால டாடா குழு வகையாறக்கள் சிக்கி கொண்டனர். தயாநிதி காலத்தில் உரிமம் வழங்கப்பட்ட ரிலையன்ஸ் குழ்மங்கள் தப்பிததுகொள்ளுமா? என்று கேட்டால் நம்மிடம் பதில் இல்லை. சரி. அந்த ரிலையன்ஸ் கும்பலுக்கு எந்த அபராதமும் கிடையாதா? என்று கேட்டாலும் நம்மிடம் பதில் இல்லை. நீதியரசர்கள் அனைத்தும் அறிந்தவர்கள், ஆகவே அவர்களை எதிர்த்து கேள்வி கேட்ககூடாது என்று வேண்டுமானால் நாம் கூறலாம்.


அடுத்து அதே நீதியரசர்கள் இன்னொரு முடிவை அறிவித்துள்ளனர். அதாவது இந்த இரண்டாம் தலைமுறை அலைவரிசை உரிமங்கள் இனி "ஏலம்" மூலம் கொடுக்க பாட வேண்டும் என்று கூறியுள்ளது. அப்படி ஏல முறையில் உரிமங்களை கொடுக்கும்போது, ஏற்கனவே நடந்த பாணியை மீண்டும் பின்பற்றாமல் இருக்க எந்த ஒரு தஹ்டுப்பும் கூறப்படவில்லை. ஆதாவது வெளிநாட்டு கார்பொறேட்களுக்கு உரிமம் கொடுக்க கூடாது என்று கூறப்படவில்லை. உரிமம் பெற்றவர்கள் அந்நியாய வில்லிக்கு வெளிநாட்டு கார்போறேட்களுக்கு விற்பதை "தணிக்கை" செய்யவோ, தடுக்கவோ, வடிகட்டவோ எந்த ஒரு உபாயத்தையும் இந்த நீதிமன்றம் கோரவில்லை. அதுபற்றி கூறவும் இல்லை.

அப்படியானால் அண்டை நாடுகளை சேர்ந்த "முன்னாள் மாக்கள் விடுதலை படையின் தலைவரின் தனியார் நிறுவனமோ", அந்நிய நாட்டின் உளவு நிறுவன தலைவர்களின் தனியார் நிறுவனமோ" இந்த உரிமத்தை ஏலம் எடுத்த சக்திகளிடமிருந்து பெறுவது தவிர்க்க பாட வேண்டும் என்று அவர்கள் கூறவில்லை. அதாவது இந்த அலைவரிசை ஊழலை பயன்படுத்தி எந்த அந்நிய நாடும் இந்தியாவின் ரகசியங்கள் மீது :உளவு: வேலை பார்க்க்க வாய்ப்பு கொடுக்கப்படுவதை தடுக்க கூட அந்த நீதியரசர்களின் சிந்தனை செல்ல வில்லை. எபப்டியோ சிதம்பரம் கதைக்கு இரண்டு வாரத்திற்குள் முடிவு செய்து சீ.பி.அய். நீதிமன்றத்தில் வழக்கு தொடங்கலாம் என்று கோரியுள்ளது. அதனால் "மானம்" பெரிது என்று நினைத்து சிதம்பரம் பதவியை ராஜினாமா செய்வார் என்று நாம் எதிர்பார்க்க வில்லை. அவர் நான்காம் நாள் நெல்லையில் நடக்க உள்ள அணு உலை ஆதரவு பொதுக்கூட்டத்திற்கு எப்படிதொண்டர்களை ஊக்குவித்து வன்முறை மூலம் ஜெயலலிதா ஆட்சிக்கு தொல்லை கொடுக்கலாம் என்று சிந்தித்து கொண்டிருப்பார்.

Wednesday, February 1, 2012

ராஜபக்சே பல்டி.கோதபாயே கெஞ்சல்

இன்று காலை சென்னையிலிருந்து வெளிவரும் ராஜபக்சே ஆதரவு ஆங்கில ஏடு, இதுவரை ராஜபகசெவிற்கும்,இந்திய வெளிவிவகார துறைக்கும் ஆதரவான செய்திகளைமட்டுமே அதாவது தமிழர் விரோத செய்திகளை மாத்திரமே வெளியிட்டுவந்தத ஏடு, ஒரு "மாற்று" செய்தியை வெளியிட்டுள்ளது. அதுதான் தி ஹிந்து ஆங்கில நாளேடு.சிலநாட்கள் முன்னாள் எஸ்.எம். கிருஷ்ணா என்ற இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கை சென்று வந்தார். அவரது பயணம் பற்றி எல்லா ஏடுகளும் ஒரே செய்தியை வெளியிட்டன. அதுவும் எஸ்.எம்.கிருஷ்ணா கொடுத்த செய்தி.அதில் ராஜபக்சே தமிழர்களுக்கு அதிகார பகிர்வு கொடுக்க தயாராக இருக்கிறார் என்று வெளியிட்டன. அதை ராஜபஜ்செவே கிருஷ்ணாவிடம் கூறியதாக கிருஷ்ணா ஊடகங்களுக்கு தெரிவித்த செய்தி அது.

அந்த செய்திய வழக்கம் போல அந்த ஆங்கில ஏடான தி ஹிந்து நாளேடும் பெரும் மகிழ்ச்சியுடன் வெளியிட்டிருந்தது. அதில் பதின் மூன்றாவது சட்ட திருத்தத்தை நிறைவேற்ற தயார் என்று ராஜபக்சே கூறியதாக கிருஷ்ணா கூறியிருந்தார். அதுகண்டு இந்திய ஊடகங்கள் கும்மாளம் போட்டன. இங்குள்ள தமிழீழ அதரவு தராத சக்திகளும் எப்படியோ தமிழர் பிரச்சனை தனி தமிழீழம் கொடுக்காமல் முடிவடைய போகின்றது என்று கொக்கரித்தனர். நாம் அமட்டும் அது ஒரு போய் என்று கூறி பார்த்தோம். ஆனாலும் காங்கிரஸ் காரர்களுக்கு அது தென் போல இனித்தது. அது தென் தடவிய தோட்டா என்பதை நாம் கூறி பார்த்ததோம். அதன்பின் மறுநாளே தமிழக மீனவர்களை அடித்துபிடிப்பதை எடுத்து சொன்னோம். ஆனாலும் மீனவர்கள் மறுபடி விடுதலை ஆனதை காட்டி அவர்கள் மகிழ்ச்சியை தெரிவித்தார்கள்.

இப்போது எல்லாமே அமபலத்திற்கு வந்துவிட்டது. நேற்று ராஜபக்சே சுய ரூபத்தை காட்டி விட்டார். இன்று காலை அதே தி ஹிந்து நாளேடு, ராஜபக்சே பல்டி என்று செய்தியை தலைப்பிட்டு போட்டுள்ளது. இப்படி ராஜபக்சேவை அந்த ஏடு அமபலப்படுத்தியது சமீபத்தில் நன்கு ஆண்டுகளாக நடக்க வில்லை. என் இந்த தடுமாற்றம்? அந்த செய்தியில் ராஜபக்சே பதின் மூன்றாம் சட்ட திருத்தத்தை அமுல்படுத்த முடியாது என்கிறார். நாடாளுமன்ற நிலைக்குழுதான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறியதை போட்டுவிட்டார்கள். அதாவது தமிழ் தேசிய கூட்டமைப்பு தந்து முன்வைப்பை யார், யார் வைக்க போகிறார்கள் என்று கூறவில்லை என்று ராஜபக்சே அதில் கூறியுள்ளார். அதே ராதாகிருஷ்ணன் இதை எழுதியுள்ளார். அப்படி தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ன அதிகார பகிர்வை முன்வைக்கிறார்களோ, தாய் நாடாளுமன்ற நிலை குழு முடிவு செய்யும் என்கிறார் இப்போது ராஜபக்சே.


இலங்கை நாடாளுமன்றத்தில் எத்தனையோ கருத்துகள் இந்த விவகாரத்தில் உள்ளன என்றும், அதனால் நாடளுமன்ற நிலை குழு முடிவு செய்யும் என் இப்ப்போது தெரிவிக்கிறார்.இது பற்றி அந்த ஏட்டின் நிருபர் ராஜபக்சேவிடம் கேள்வி கேட்கிறார். அப்படியானால் நீங்கள் பதின் மூன்றாவது சட்ட திருத்தத்தை அமுல்படுத்தி, அதைவிட அதிகமாக அதிகார பகிர்வு கொடுக்க போகிறீர்கள் என்று எஸ்.எம்.கிருஷ்ணா கூறியது பொய்யா? என்று ராஜபக்சேவிடம் கேட்கிறார்கள். அதற்கு நானா எப்போதும் அதற்காக இருக்கிறேன், ஆனால் இலங்கை நாடாளுமன்றத்தில் பல கருத்துகள் இருக்கின்றன என்று கூறி நாடாளுமன்ற நிலை குழு முடிவு செய்யும் என்கிறார் அவர். அதை எழுதும்போது, 1987 இல் ராஜிவ்காந்தி- ஜெயவர்தனே ஒப்பந்தம் அடிப்படையில் இந்த பதின் மூன்றாம் சட்ட திருத்தும் இருக்கிறது என்று எழுதுகிறார்கள். அதில் "வடக்கு-கிழக்கு" இணைப்பு பற்றி எழுதப்பட்டுள்ளது என்று இப்போது அந்த ஏடு குறிப்பிடுகிறது.அந்த சொல்தான் இன்றைய ராஜபக்செபல்டிக்கு பிறகு இந்திய அரசின் கருத்து என்பதாக நாம் கொள்ளலாம்.

அதாவது நாம் ஏற்கனவே கூறியது போல இந்த மாதம் பிப்ரவரி கடைசியில் அய்.நா. ஆடுகப்பு கூட்டத்தில் ராஜபக்சேவின் போர்குற்றம் பற்றிய விசாரணை வரும்போது, இந்திய எந்த பக்கம் நிற்கும் என்ற கேள்வியை வைத்து, கிருஷ்ணாவின் நிர்பந்தத்திற்கு ராஜபக்சே பணிந்து இவ்வாறு பதின்மூன்றாம் சட்ட திருத்தத்தை விட கூடுதலான் அதிகாரம் தமிழருக்கு என்று "கதை" கூறினாரா? எனத்தான் நாம் நினைத்தோம்.இப்போது அதுகூட இல்லை என்று ஆகிவிட்டது. இதனால் கோபம்வந்த இந்திய அரசு பழைய ஒப்பந்தம் பற்றி ஊடகம் மூலம் பேசுகிறது. அதுமட்டுமின்றி, வேறொரு செய்தியும் வெளியாகி உள்ளது. ராஜபக்சே அய்.நா.முன்னால் "இறுதி யுத்தம் பற்றிய அறிககையை" வைக்க முடியாது என்று கொர்ரியுள்ளார் என்பதும் வெளியாகி உள்ளது. இதுவும் சேர்த்து இந்திய தஹ்ரப்பை கோபம் கொள்ள வைக்கும். இந்த கோபம்தான் அந்த ஏட்டின் மூலம் சிங்களத்திற்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.


சிங்களம் புரிந்து கொண்டு செயல்பட் தொடங்கி விட்டது. இப்போது இலங்கை பாதுகாப்பு செயலாளர் கோத்தபாயே ராஜபக்சே ஒரு குழுவுடன் டில்லி நோக்கி பறந்து வந்துள்ளார். அதாவது கோபம் கொண்ட இந்திய அரசை கேஞ்சியாவ்து சமாதனப்படுத்த விரைந்து வந்துள்ளார். டில்லி இப்போது என்ன செய்ய போகிறது?