Friday, January 27, 2012

அன்றைய ராதாவும், இன்றைய ராதாவும்.

அய்.எஸ்.ஆர்.ஒ. வின் எஸ். பான்ட் ஊழல் இப்போது நாட்டை சுற்றி வரும்போது, அந்த புயலில் அடிக்கப்படும் மாதவன் நாயர் வகையாறாக்கள் கிளப்பும் கேள்விகள் நன்றாகத்தான் இருக்கின்றன. இன்றைய அய்.எஸ்.ஆர்.ஒ.வின் தலைவர் ராதாகிருஷ்ணன், அன்று 2007 மற்றும் 2008 ஆம் ஆண்டின் ஒப்பந்தத்தில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் வணிக பிரிவான ஆன்றிக்ஸ் சார்பாக தனியார் அமிப்பான தேவாஸ் உடன் ஒப்பந்தத்தை போடுவதில் உடன் இருந்தவர்தான் என்று இப்போது அம்பலப்படுத்துகிறார்கள். 2010 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு பிறகுதான் அவர் புரண்டு, தங்களுக்கு எதிராக இப்படி ஒரு முடிவை எடுக்க காரணமாக இருக்கிறார் என்கின்றனர்.


இதுவே அனைத்து அதிகாரிகளும் சேர்ந்துதான் இந்திய திருநாட்டை ஏமாற்றி இருக்கிறார்கள் என்பதை புரிய வைக்கிறது. இந்த அதிகாரிகளுக்கு தனி சுதந்திரத்தை தந்திருப்பது நாட்டின் தலைமை அமைச்சர் அலுவலகம். நாட்டின் மிக முக்கியமான ரகசியங்கள் என்ற பெயரில் இந்த அய்.எஸ்.ஆர்.ஒ.வின் செயல்பாடுகளை எந்த மத்திய அமைச்சரவைக்கோ, அல்லது நாடாளுமன்றத்திற்கோ, அல்லது ஊடகங்களுக்கோ, அல்லது நாட்டு மக்களுக்கோ தெரியவிடாமல், ரகசியமாக வைத்துக் கொள்ள இந்த நிறுவனத்திற்கு அதிகாரத்தை நமது சட்டம் கொடுத்துள்ளது. அதனாலேயே இந்த நிறுவனத்தின் செயல்பாடுகளையும், அதன் நிதி போககுவரத்து கணக்குகளையும், வெளியே தெரியாமல் அதாவது மத்திய அமைச்சரவைக்கோ, நாடாளுமன்றத்திற்கோ, தெரியவிடாமல், தலைமை அமைச்சர் அலுவலகமே பார்த்துக் கொள்ளும் என்பதுதான் அதில் உள்ள விதிமுறை. இந்த அளவுக்கு முக்கியமான ஒரு விஷயம் அது என்றால் அதில் தவறுகள் நடக்கும் பொது, அது எனக்கு தெரியாது என்று கூறுகின்ற ஒரு பிரதமரை நாம் வைத்துக் கொண்டு இருக்கிறோம் என்பது இப்போது அம்பலமாகிறது.

இந்த கூத்தை ஒரு மாதவன் நாயர் மேல் மட்டுமே நடவடிக்கை எடுத்து முடித்துவிடாமல், எப்படி இதன் பொறுப்பை நாட்டின் பிரதமர் மீது கேள்வியாக எழுப்பபோகிறோம்?

No comments:

Post a Comment