Monday, January 30, 2012

உள்துறை என்பது உள்குத்து அமைச்சகமா?

உள்துறை என்பது ஆளும் மத்திய அரசியல் கட்சிகளால மாநில கட்சிகளை எதிர்த்து, சட்ட-ஒழுங்கு பிரச்சனை தொடங்கி, எல்லா விவகாரங்களிலும் "தகராறு" செய்வதற்காக பயன்படுத்தப்பட்டு துறை என்பதே இந்திய அரசின் செயல்பாட்டில் நாம் காணும் உண்மை. அதிலும் சிதம்பரம் என்பவர் அந்த துறைக்கு அமைச்சராக வந்தபின் அதுபோன்ற வேளைகளில் மிகவும் விவேகமாக காய் நகர்த்துபவர் எனபதும் நாட்டிற்கு தெரிந்த உண்மை. அதுவும் இந்தியாவிலேயே தமிழக முதல்வர் மட்டும்தான் டில்லிக்கே சென்று அந்த சிர்தம்பரத்தின் முக மூடியை கிழித்து விட்டார் எனபதும், அதனால் அந்த சிதம்பரம் "பழி" வாங்கும் சிந்தனையில் மட்டுமே இருக்கிறார் என்பது கூட ஊருக்கு தெரிந்த செய்திதான்.

இப்போது அணு உலை எதிர்ப்பு தமிழுகத்தில் கூடுதலாக புறப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் அதை செயல்படுத்த போதிய விவரம் இல்ல நிலையில் தமிழகத்தில் அது இருபத்தைந்து ஆண்டு வரலாற்றுடன் செயல்படுகிறது. கூடங்குளம் பேசப்படும்போது, கல்பாக்கம் அணு உலை ஆதரவு சக்திகளுக்கு ஒரு சான்றாக கட்டப்படுவதால், கல்பாக்கத்திலும் கிளம்பும் அணு உலை எதிர்ப்பு போராட்டம் மத்திய உள்துறையால் தாங்கி கொள்ள முடியாத ஒன்றாக ஆகிவிட்டது. ஆகவே அந்த அமைச்சர் தனது ஆதரவாளரான லதா பிரேமகுமார் என்ற எஸ்.சீ. எஸ்.டி. ஆணையத்தின் அகில இந்திய தலைவர் மூலம் அடுத்த அம்பை எய்துள்ளார். அதாவது கல்பாக்கம் அணு மின் நிலையம் நிர்வாகம் அந்த இடத்தில் உள்ள காவல்துறையை தன்வசம் ஆதரவாக வைத்திருந்தது. அதனால் கல்பாக்கம் பகுதி அணு உலை எதிர்ப்பாளர்களுக்கு சாதாரன் பட்டிநிபோரட்டதிற்கு கூட அனுமதி தராமல் மறுத்து வந்தது. போராட்டகாரர்கள் நீதிமன்றம் சென்று உயர்நீதிமன்ற தலைமை நீதியரசர் மூலமே அனுமதி பெற்று இன்று சனவரி முப்பத்தி ஒன்றாம் நாள் பட்டினி போராட்டம் வைத்திருந்தனர்.


திடீரென்று நேற்று ஒரு சவரிமுத்து தன்னை எஸ்.சீ.எஸ்.டி. கூட்டமைப்பபின் தலைவர் என்று கூறிக்கொண்டு உய்ரநீதிமன்ரத்தில் ஒரு புகாரை போட்டார். அதாவது அவர் ஒரு வாரம் முன்பே காவல்துறை அதிகாரிக்கு ஒரு மனு கொடுத்து அணு உலை எத்ரிப்புபட்டினி போருக்கு அனுமதி வழங்க கூடாதென கேட்டுக் கொண்டதாகவும் அதை மதிக்காமல் காவல்துறை அனுமதி கொடுத்ததாகவும் புகார் எழுப்பினார். அதை கவனித்த இரண்டாம் நிலை நீதியராசர் எலிபீ தர்மாராவ், கிருபாகரனுடன் சேர்ந்து அந்த பட்டினி ஒருக்கு "தடை" கொடுத்து விட்டார். இது ஏற்கனவே தலைமை நீதியரசர் கொடுத்த அனுமதிக்கு எதிரானது. இவாறு நீதிமன்றத்தை ஏமாற்றி சிதம்பரம் வகையறாக்கள் சனநாயக உரிமைகளை கூட தடை செய்கின்றனர்.

அதேபோல வன்முறையற்ற கூடங்குளம் அணு உலை எதிர்ப்ப்பு போராட்டத்தை நடத்தும் போராட்டக்காரர்கள் இன்று காலை நெல்லை மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்திற்கு சென்று மனு கொடுத்தனர். அப்போது சிதம்பரம் தூண்டி விட்ட காங்கிரஸ்காரர்களும், இந்தியாவை அவர்களுடன் சேர்ந்து கொள்ளையடிக்கும் பாஜக வினரும், இந்துமுன்னணியும் சேர்ந்த்து கொண்டு .இந்த வன்முறை வெறியாட்டத்தை நடத்தியுள்ளனர். இன்று உச்சநீதிமன்றத்தில் ஒரு மத்திய அமைச்சரின் எதிர்காலத்திற்கு நான்கு மாதம் கெடு வைக்கப்பட்டால் அந்த அமைச்சர் தனது உள்துறையை, உள்குத்து துறையாக நடத்தி வருவது இதன்மூலம் கண்கூடு.

தலித் பட்டியலில் கிருத்துவர்களையும் சேர்த்த அரசு

இந்திய துணை கண்டத்தில் இருக்கும் மக்களை நமது அரசியல் சட்டம் வேடிக்கையாக பிரிக்கிறது. நீங்கள் முஸ்லிம் அல்லாவிட்டால், நீங்கள் பார்சி அல்லாவிட்டால், நீங்கள் கிருத்துவர் அல்லாவிட்டால் நீங்கள் ஒரு இந்து. இது எப்படி இருக்கு? யோவ். நான் நாத்திகன் அய்யா. என்னை போய் இந்து என்கிறாயே? இப்படி யாரும் கேட்க இடம் கொடுக்கவில்லை இந்த அரசியல் சட்டம். அந்த இந்துகளில் அவர்கள் "தீண்டத்தகாதவர்" என்று முத்ஹ்டிரை குத்தி வைத்திருக்கும் தலித்துகளை கரை சேர்க்க அபப்டி ஒரு இட ஒதுக்கீடு கொடுத்துள்ளார்களாம். சரி. உங்கள் நாட்டின் பார்ப்பனீய பண்பாடு அந்த தலித்துகளை எந்த மதத்திற்கு மாறினாலும் நடைமுறையில் ஒரே மாதிரிதானே கையாளுகிறது? கிருத்துவர்களாக மாறிவிட்ட தலித்துகளை நீங்கள் விட்டு விடுகிறீர்களா?

பஞ்சமிநீல மீட்பு போராட்டத்தில் உங்கள் துப்பாக்கிகள் ஏழுமலையை மட்டுமா பதம் பார்த்தது? ஜான் தாமசையும் சேர்த்து தானே பலி வாங்கியது? கொடியங்குளத்தில் உங்கள் கரங்கள் இந்து தேவேந்திரா வீடுகளை மட்டுமா உடைத்து? கிருத்துவ தேவேன்றாவையும் சேர்த்து நொறுக்க வில்லையா? மான்ஜோளையிலே உங்கள் காவல்துறை இந்து தலித்துகளுடன், இருத்துவர்களையும் சேர்த்து கொள்ள வில்லையா? அதனால் கிருத்துவ தலித்துகளுக்கும் தலித் பட்டியலில் இடம் கொடு. இதுதான் ஈனைத்து கிருத்துவ தேவாலயங்களும் எழுப்பும் முழக்கம்? அதற்கு இந்த மத்திய அரசு இதுவரை செவி சாய்த்ததா? மத்திய அரசின் கொள்கை முடிவை எடுக்காமல் அந்த தலித் பட்டியலில் கிருத்துவ தலித்துகளை சேர்க்க முடியுமா? அதை இந்த்ஹ்டுதுவா ஏற்றுக்கொள்ளுமா? அத்தகைய கோரிக்கைகளை நாமும் இந்த முறை கிருஸ்துமஸ் கொண்டாடிய முதல்வரிடம் சந்தித்த இரண்டு தலித் பேராயர்களும் வைக்க வில்லையே என்று வருந்தினோம்..

அதற்கு உடனடியாக பதில் கிடைத்து. சென்ற மாதமே அதாவது சென்ற ஆண்டின் டிசம்பரிலேயே ஒரு விளம்பரம் வந்தது.அதில் ஆதிதிராவிட மற்றும் பழங்குடி, மற்றும் கிருத்துவ ஆதிதிராவிட மாணவ மாணவிகள் "ஊக்கத்தொகைக்கு" டிசம்பர் கடைசிக்குள் வின்னப்புயக்க்கவும் என்ற விளம்பரம் ஒன்று தமிழ்நாடு அரசு ஆதிதிராவிட நலத் துறையிலிருந்து கொடுக்கப்பட்டது. இப்போது தலித்துகளுக்கான "சிறப்பு சலுகைகளை" அறிவித்திருக்கும் தமிழக அரசு, சென்ற வாரம் அறிவிக்கும் போதே இதே போல "மதம் மாறிய ஆதிதிராவிடருக்கும்" என்று சேர்த்து வெளியிட்டுள்ளது. அதேபோளைன்றைய ஆளுநர் உரையிலும் அதையே குறிப்பிட்டுள்ளது. இதுதான் தலித் கிருத்துவர்களையும் தலித் பட்டியலில் சேர்த்த செயல்.

இந்துதுவா செல்வாக்கு கொண்ட இந்தியத் அரசில் மோதி பயன் இல்லை என்ற சூழலில், தமிழ்நாடு அரசு தனது அவ்ரம்பிற்குள் வருகின்ற "நிதி தரும்" இடங்களிலும், சிறப்பு திட்ட" இடங்களிலும் இப்படி ஒரு தெளிவான வரையறையை சேர்த்திருப்பது அமைதியான ஆனாலதேசமயம் மக்களுக்கு பயன்படும் வகையில் நீண்ட நாள் கோரிக்கைக்கு ஒரு விடையை கண்டுபிடித்ஹ்டுள்ளது என்றே படுகிறது.

விஞ்ஞானிகள் குப்பைக்கு சமமா?

நாம் அறிவியலாளர்களை மதிக்கிறோம். அவர்களை மரியாதை செய்கிறோம். அறிவியலாளர்கள் சொகுசு வாழ்கை வாழ்வதை "தேவை" என்று கருதுகிறோம். அவர்கள் குளிர் சாதன அறைகளில் இருப்பதையோ, குளிர் சாதன வீடுகளில் வசிப்பதையோ, குளிர் சாதன வாகனங்களில் செல்வதையோ, நாம் பெருமையாக கருதுகிறோம்.அது இந்த நாட்டின் அறிவியல் வளர்ச்சிக்கு உதவி புரியும் என்று மனதார நம்புகிறோம். அவர்களது உலகம் தனி உலகம் என்பதை கூட நம்புகிறோம். ஏற்றுக்கொள்கிறோம். அவர்கள் ஏதோ ஒரு வகையில் சாதாரண மக்களால் சாதிக்க முடியாததை சாதிக்கும்திரமைசாளிகள் என்று நாம் க்ருதுகிறோம்.அவர்கள் சோதனை சாலைகளில் நாம் சாதரணமாக சாதிக்க முடியாததை சாதித்து "நிரூபித்தவர்கள்" என்பதால் போற்றுகிறோம். அதில்தான் நமது அறிவியல் விருப்பம் ஈடேறுகிறது.

அப்படிப்பட்ட அறிவியலாளர்களில் அதாவது விஞ்ஞானிகளில் ஒருவகைதான் விண்வெளி ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானிகளும். ஆகவே அவர்களையும் நாம் கேள்விக்கே இடம் இல்லாமல் ஆடஹ்ரிக்கிறோம்.போற்றுகிறோம்.அவர்களுக்கு தனி சிறப்பு தகுதி இருப்பதனால், அவர்களை சிறப்பாக அங்கீகரிக்க வேண்டும் என்றும் விரும்புகிறோம். ஆனால் அவர்கள் நாம் கொடுக்கும் சிறப்பு தகுதிகளை "களவு" செய்வதற்கு பயன்படுத்தினால் என்ன செய்ய? இப்படித்தான் விண்வெளி ஆராய்ச்சி அறிவியலாளர் மாதவன் நாயர் வகையறாக்களின் செயலும் பார்க்கப்படுகிறது. அதனால்தான் அரசு அவர்களுக்கு இனி அரசு பதிவகள் தரவேண்டாம் என்றது.


ஆனால் இந்த அரசின் முடிவு, இந்திய தலைமை அமைச்சரின் அறிவியல் ஆலோசனை குழு தலைவராக இருக்கும் பெரிய அறிவியலாளர் சீ.என்.ஆர். ராவ் அகார்களுக்கு தவறாக படுகிறதே? அவர் இந்த முடிவை "ஜன்னல் வ்ழியே எறியப்படும் குப்பையை" போல எரிந்து விட்டார்களே என்று கூறியுள்ளார். பயோர்கு எப்படி எறிவார்கள்? நேநேகலரசின் நம்பிக்கையை உங்கள்மீது அரசு வைத்திருந்த நம்பிக்கையை உடைத்துவிட்டீர்களே? நீங்கள் இந்திய நாட்டு ரகசியங்களை "காசாக" முனைத்து விட்டீர்களே? நீங்கள் நாட்டு மக்களுக்கே தெரியாத ரகசிய விசயங்களை அந்நிய நாட்டிற்கு விற்க துணிந்து விட்டீர்களே? நீங்கள் நாட்டுக்கு துரோகம் இழைக்க துணிந்த பின் உங்களை என்ன செய்வார்கள்?

சீ.என்.ஆர் ராவை தொடர்ந்து அணு சக்தி விஞ்ஞானி பிரசாத் இதேபோலேரிந்து விழுந்துள்ளார். அணுசக்தி விஞ்ஞானி எம்.ஆர்.சினிவாசன் இதுபற்றி வாய் திறக்க முடியாது என்கிறார்.அதாவது அணுசக்தி விஞ்ஞானிகளும் இதேபோல அரசு கொடுத்துள்ள அனைத்து வசதிகள்தவிர, நாட்டு மக்களுக்கு தெரியாமல், நாட்டின் நாடாளுமன்றத்திற்கும் தெரியாமல் மத்திய மாயச்சரவைக்கும் தெரியாமல், பிரதமரின் கீழ் மட்டுமே அனைத்து திட்டங்களை தீட்டுவதும்,அனைத்து கணக்குகளையும் ரகசியமாக வைத்திருப்பதும் செய்பவர்கள். அதனால்தான் அந்த விண்வெளி ஆராய்ச்சியாளர்களை கேள்வி கேட்கும் பொது, அணு சக்தி விஞ்ஞானிகளுக்கு கோபம் வருகிறது. இதை எப்படி "நாட்டுப் பற்றுடன்" பார்ப்பது?

Saturday, January 28, 2012

கார்பொரேட்களுக்குள் மோதல் கட்சிகளின் மூலம் நடக்கிறதா?

திமுக எம்.பி. ஆதிசங்கர் என்றாவது வாயை திறந்து ஏதாவது பேசியிருக்கிறாரா? அபப்டியே பேசினாலும் யாரையாவது எதிர்த்து பேசிய வரலாறு படைத்திருக்கிறாரா? அப்படியே படித்தாலும் இந்தியாவின் பெரிய கார்பொரேட் நிறுவனத்தை குறை கூறி பேச தைரியம் கொண்டவரா? அப்படியே தைரியம் வந்தாலும், ஆளும் கூட்டணி தலைமை எதிர்க்கும் கேள்வியை கேட்டிருக்கிறாரா? அப்படியே கேட்டாலும் தான் அங்கம் வகிக்கும் "நாடாளுமன்ற கணக்கு குழு" கூட்டத்தில் கேட்கும் அளவு அவருக்கு வீரம் வந்தது உண்டா? இப்படி கேள்விகளை நாம் கேட்கும் அளவுக்கு ஒரு நிகழ்வு நடந்து விட்டது.

ஆந்திராவில் உள்ள கிருஷ்ணா-கோதாவரி படுகையில் அதிகமாக "இயற்கை வாயு" கிடைகிறது என்று முதலில் கண்டுபிடித்தது, நமது நாட்டின் பெரும் பொதுதுறையான"ஒ.என்.ஜி.சீ".என்ற "எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம்". அந்த கண்டுபிடிப்பை ஒரு வெளிநாட்டு நிறுவனத்திற்கோ, அல்லது உள்நாட்டு ஏகபோக நிறுவனத்திற்கோ, விற்று விடுவது இந்த நாட்டின் கேவலமான அரசியல் ஓழக்கம். அவ்வாறு இந்த கிருஷ்ணா மற்றும் கோதாவரி நதிகளின் படுகைகளில் கிடைக்கும் இயற்கை எரிவாயுவை எடுப்பதற்கான குத்தகையை நமது அரசாங்கம் "ரிலையன்ஸ்" நிறுவனத்திற்கு கொடுத்து விட்டது. அதுவே பெரும் சர்ச்சைக்கு இப்போது உள்ளாகியுள்ளது. மத்திய கணக்கு பார்க்கும் குழு சமீபத்தில் அந்த ஒப்பந்தத்தால் நாட்டிற்கு எந்த அளவுக்கு நட்டம் என்பதை கணக்கு போட்டு, அமபலப்படுத்தியது. அந்த அளவுக்கு இந்த கிருஷ்ண-கோதாவரி படுகை எரிவாயு ஒப்பந்தம் அதிகமான குற்றச்சாட்டுகளை தாங்கி வரும் வேளையில், அந்த விவகாரம் நாடாளுமன்ற கணக்கு குழு முன்னும் வந்துள்ளது.

ஏற்கனவே முரளி மனோகர் ஜோஷி இது பற்றி கடும் விமர்சனத்தை காங்கிரஸ் ஆட்சி மீது கிளப்பியுள்ளார். அந்த விவகாரத்தில், இப்போது திமுக வின் ஆதிசங்கரும்,சரத் பவரின் தலைமையிலான தேசியவாத காங்கிரசின் அனவரும் சேர்ந்து ரிலையன்ஸ் மீது குற்றச்சாட்டை எழுப்பியுள்ளனர்.ஏற்கனவே இரண்டாவது தலைமுறை அலைவரிசை ஊழலில் ரிலையன்ஸ் செயல்பாட்டிற்கு எதிராக டாடா நின்றது அம்பலமானது. அப்போது திமுக தலைமை. அதன் பிரதிநிதிகள் ஆ.ராஜா, சரத்குமார் ரெட்டி, கனிமொழி ஆகியோர் டாடா ஆதரவு என்றும் எதிர் தரப்பில் இருந்த தயாநிதி மாறன் ரிலையன்ஸ் ஆதரவு என்றும் அமபலமானது. அந்த அவ்ழக்கில் டாடா ஆதரவு சக்திகளை ரிலையன்ஸ் ஆதரவு சக்திகள் உள்ளே தள்ள ஏற்பாடு செய்ததும் அனைவரும் அறிந்ததே.அதேநேரம் டாடா ஆதரவு என்பது திமுக தலைமையுடன் மட்டுமே நிற்காமல், சரத் பவர் ஆதரவு பெற்ற "ஸ்வான்" நிறுவன பால்வா வும் கைது செய்யப்பட்டு பாதிக்கப்பட்டார்.


இப்போது கே.ஜி. படுகை எரிவாயு ஒப்பந்தத்தில் மாட்டிக் கொண்டிருப்பது ரிலையன்ஸ் நிறுவனம். ஆகவே அய்.மு.கூ. ஆட்சியின் தலைமையான காங்கிரசால் திமுக வும், சரத் பவர் கட்சியும் பாதிக்கப்பட்டதற்கு பதிலாக இவர்களும் மோதல் நடத்த வேண்டும். ரிலையன்ஸ், தயாநிதி மாறன், சோனியா, சீ.பி.அய். ஆகியோர் ஒருபுறமும், டாடா, திமுக, சரத்பவார், ஆகியோர் மறுபுறமும் என்று இந்தியாவிற்குள் நடக்கும் இந்த கார்போரெட் சண்டை இப்போது புது வடிவில் வெளிப்படுகிறது.அதுதான் நாடாளுமன்ற கணக்கு குழுவில் திமுகவும், தேசியவாத காங்கிரசும் என்றாக எழுப்பும் குரல். இப்போது மம்தா, கருணாநிதி, சரத் பவர் ஆகிய மூவரும் சேர்ந்து செயல்பட முயல்வதை நாம் காண முடிகிறது. இவர்கள் மூவரும் மத்திய ஆட்சிக்கு ஒரு முற்று புள்ளியை வைக்க விழைகின்றனர்.அதன் முதல் வெளிப்பாடு இது.

Friday, January 27, 2012

அன்றைய ராதாவும், இன்றைய ராதாவும்.

அய்.எஸ்.ஆர்.ஒ. வின் எஸ். பான்ட் ஊழல் இப்போது நாட்டை சுற்றி வரும்போது, அந்த புயலில் அடிக்கப்படும் மாதவன் நாயர் வகையாறாக்கள் கிளப்பும் கேள்விகள் நன்றாகத்தான் இருக்கின்றன. இன்றைய அய்.எஸ்.ஆர்.ஒ.வின் தலைவர் ராதாகிருஷ்ணன், அன்று 2007 மற்றும் 2008 ஆம் ஆண்டின் ஒப்பந்தத்தில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் வணிக பிரிவான ஆன்றிக்ஸ் சார்பாக தனியார் அமிப்பான தேவாஸ் உடன் ஒப்பந்தத்தை போடுவதில் உடன் இருந்தவர்தான் என்று இப்போது அம்பலப்படுத்துகிறார்கள். 2010 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு பிறகுதான் அவர் புரண்டு, தங்களுக்கு எதிராக இப்படி ஒரு முடிவை எடுக்க காரணமாக இருக்கிறார் என்கின்றனர்.


இதுவே அனைத்து அதிகாரிகளும் சேர்ந்துதான் இந்திய திருநாட்டை ஏமாற்றி இருக்கிறார்கள் என்பதை புரிய வைக்கிறது. இந்த அதிகாரிகளுக்கு தனி சுதந்திரத்தை தந்திருப்பது நாட்டின் தலைமை அமைச்சர் அலுவலகம். நாட்டின் மிக முக்கியமான ரகசியங்கள் என்ற பெயரில் இந்த அய்.எஸ்.ஆர்.ஒ.வின் செயல்பாடுகளை எந்த மத்திய அமைச்சரவைக்கோ, அல்லது நாடாளுமன்றத்திற்கோ, அல்லது ஊடகங்களுக்கோ, அல்லது நாட்டு மக்களுக்கோ தெரியவிடாமல், ரகசியமாக வைத்துக் கொள்ள இந்த நிறுவனத்திற்கு அதிகாரத்தை நமது சட்டம் கொடுத்துள்ளது. அதனாலேயே இந்த நிறுவனத்தின் செயல்பாடுகளையும், அதன் நிதி போககுவரத்து கணக்குகளையும், வெளியே தெரியாமல் அதாவது மத்திய அமைச்சரவைக்கோ, நாடாளுமன்றத்திற்கோ, தெரியவிடாமல், தலைமை அமைச்சர் அலுவலகமே பார்த்துக் கொள்ளும் என்பதுதான் அதில் உள்ள விதிமுறை. இந்த அளவுக்கு முக்கியமான ஒரு விஷயம் அது என்றால் அதில் தவறுகள் நடக்கும் பொது, அது எனக்கு தெரியாது என்று கூறுகின்ற ஒரு பிரதமரை நாம் வைத்துக் கொண்டு இருக்கிறோம் என்பது இப்போது அம்பலமாகிறது.

இந்த கூத்தை ஒரு மாதவன் நாயர் மேல் மட்டுமே நடவடிக்கை எடுத்து முடித்துவிடாமல், எப்படி இதன் பொறுப்பை நாட்டின் பிரதமர் மீது கேள்வியாக எழுப்பபோகிறோம்?

அய்.எஸ்.ஆர்.ஒ. வேண்டாமே?

மாதவன் நாயர் போன்ற ஊழல் சக்திகள்தான் அந்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் "அறிவியலாளர்கள்" என்ற பெயரில் ஆதிக்கம் செலுத்துவார்கள் என்பது இப்போது கண்கூடாக தெரிந்துவிட்டது. இந்த ஊழல் நாயர் இப்போது இருக்கும் அந்த நிறுவன தலைவரான ராதாகிருஷ்ணனை குற்றம் சுமத்துகிறார். தன்னை போட்டுக் கொடுத்து, தங்கள் மேல் அரசு நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்தவர் என்று அவர் இவரை குறை சொல்கிறார். இந்த ஆதிக்கவாதிகள் எப்போதுமே தங்களுக்குள் கள்ள கூட்டணி வைத்துக் கொள்பவர்கள். ஆனால் எப்போது தங்களை விட அதிகாரம் படைத்த அரசாங்கத்தால் ஒரு நடவடிக்கை தங்களுக்கு எதிராக வந்துவிட்டது என்றால், பயந்துபோய், அதற்கு இன்னொரு பலவீனமான சக்தியை குறை சொல்லி விடுவார்கள்.அரசாங்கத்தை அப்போதும் முழுமையாக எதிர்க்க மாட்டார்கள். ஏன் என்றால் இவர்கள் கொள்ளை அடிக்க ஏற்பாடு செய்து கொடுத்ததே அந்த அரசாங்கம்தானே?

இப்போது மாதவன் நாயர், ராதாகிருஷ்ணன் மீது பாய்கிறார். ராதாகிருஷ்ணன் நல்லவர் போல என்று நாம் நினைத்தால், இல்லை என்று மாதவன் நாயரே சான்று கூறுகிறார். தாங்கள் நடத்தும் அதாவது ஒய்வு பெற்ற அய்.எஸ்.ஆர்.ஒ. அதிகாரிகள் நடத்தும் தனியார் நிறுவனமான "தேவாஸ்" உடன் செய்துகொண்ட அன்றிக்ஸ்-தேவாஸ் ஒப்பந்தத்தில் இருந்தவர் என்பதே அந்த குற்றச்சாட்டு.நாட்டு துரோக ஒப்பந்தம் செய்தபோது முதலில் இருந்தவர்தான் இந்த ராதாகிருஷ்ணனும் என்று மாதவன் நாயர் போட்டு கொடுத்து விட்டார். அப்படியானால் அந்த ஆன்றிக்ஸ்-தேவா ஒப்பந்தம் என்பது ஒரு கூட்டு சதிதானோ என்று நாம் புரிந்து கொள்ள உதவிகரமாக உள்ளது. ஆன்றிக்ஸ் என்பது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் வணிக பிரிவின் பெயர். அந்த வணிக பிரிவு, ஒரு தனியாரான பெங்களூருவில் உள்ள தேவாஸ் என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யும்போதுதான் இந்த நட்டங்களும், சிக்கல்களும் அம்பலமாகி உள்ளன.


இப்போது மாதவன் நாயர் என்பவரை ராதாகிருஷ்ணன் என்ற இன்னொரு நாயர் போட்டு கொடுத்து விட்டார் என்பதே செய்தி. அப்படியானால் இந்த நாயர்களும், மேனன்களும், எல்லோரையும் அடிமப்படுத்துவார்கள் என்பதும், அவர்களுக்குள் சண்டை வந்தால் ஒழிய அவர்களை வீழ்த்த முடியாது என்பதும் இதிலிருந்து தெரிகிறது.எப்படியோ இந்திய துணைக் கண்டத்தை இவர்கள் டில்லியில் இருந்து கொண்டு ஆண்டு வரும் போக்கினால், முதலில் "தமிழன்" பலிகடா ஆனான். இப்போது அவர்களுக்குள்ளே குடுமி பிடி சண்டை போட்டுக் கொள்கிறார்கள்.இன்று தினமணியில் ஒரு தலையங்கம். அதில் மேற்கு வங்கத்தில் ஊழலில் பிடிபட்ட ராணுவ அதிகாரிகளின் சலுகைகள், சம்பளம் உட்பட அனைத்தும் பறிக்கப்பட்டன என்றும் ஆனால் இந்த நாயர்களுக்கு இனி அரசாங்க பதவி கிடையாது என்று கூறியதற்கே கொதிக்கிரார்களே என்றும் எழுதியுள்ளார்கள்.


இன்னமும் முக்கியத்துவம் வாய்ந்தது என்ன என்றால், இந்த விண்வெளி ஆராய்ச்சி நிறுவன கணக்குகள் எங்கும் வெளிப்படையாக இருக்க கூடாது என்றும் அது இறையாண்மையின் ரகசியம் என்றும் சட்டம் இருக்கிறது. அந்த சட்டத்தை பபயன்படுத்தி கொண்டுதான் இந்த அதிகாரிகள் தங்கள் விருப்பத்திற்கு ரகசிய புதிய கண்டுபிடிப்புகளை தனியார் பெயருக்கு வாங்குவதும், அதையே அந்நிய நாட்டிற்கு பெரும் தொகைக்கு விற்பதற்கும் முடிந்துள்ளது. அதாவது "நாட்டு துரோகம்" என்ற குற்றப் பிரிவின் கீழ் இவர்கள் கைது செய்யப்படவேண்டும். இந்த விண்வெளி ஆராய்ச்சி நமது நாட்டிற்கு தேவையா? நாட்டில் ஐம்பது விழுக்காட்டிற்கு மேல் வறுமை இருக்கும்போது, பல ஆயிரம் கொடிகளை "விண்வெளி ஆராய்ச்சி" என்ற பெயரில் விரயம் செய்தால் நாடு வல்லரசு ஆகிவிடும் என்பது உண்மையா?


ஐரோப்பாவின் பல நாடுகள், உதாரணமாக டச்சு நாடுகள் எல்லாம் தங்களுக்கு விண்வெளி ஆராய்ச்சி தேவை இல்லை என்று ஒத்துக்கி விட்டார்கள். அவர்கள் தேவைப்பட்டால் பெரும் பணக்கார நாடுகளில் இருந்து வாங்கி கொள்கிறார்கள். அதுபோல தங்களுக்கு செயற்கை கொள் மூலம் தேவைப்படும் புள்ளி விவரங்களை இந்திய அரசும் அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்து காசு கொடுத்து வாங்கி கொள்ளலாமே? எதற்காக அதற்கு தனி துறை என்றும் அதற்கு பல்லாயிரம் கோடி பணம் என்றும், அதை வெளியே தெரியாமல் செலவு செய்யவேண்டும் என்றும் சட்டம் போட்டு நாட்டின் இறையாண்மைக்கு இதுபோன்ற "அதிகார வர்க்க தரகு முதலாளிகளை" பதவியில் வைத்து அவர்கள் மூலமே நாட்டின் அரசு நட்டம் அடைவதும், அவர்கள் மூலமே நாட்டு ரகசியங்களை அன்னியருக்கு விற்கும் "துரோகத்தை" செய்வதும் நடைபெறுகிறது? ஆகவே பட்டினிகள் நிறைந்திருக்கும் நம் நாட்டிற்கு "விண்வெளி ஆராய்ச்சி" தேவையில்லை என்ற முழக்கத்தை நாம் முன்வைக்கலாம். வல்லரசாக ஆய்கொண்டிருக்கிறோம் என்ற மாயையை விடுத்து, நல்லரசாக் ஆக வழிபார்க்க சொல்லுவோம்.

Thursday, January 26, 2012

நீதியரசர்கள் ஒட்டுமொத்த பார்வையையும் பெற்றால்தான் நல்லதோ?

தமிழ்நாட்டில் செவிலியர்களுக்குள் மோதல் என்பதாக ஒரு நீதிமன்ற அறிவிப்பு புது பிரச்னையை ஏற்படுத்தி விட்டது. ஏற்கனவே கல்வி வணிகமான ஒரு நாட்டில், ஏற்கனவே சுகாதார துறையில் தனியார் மருத்துவ கல்லூரிகளையும், தனியார் மருத்துவ மனைகளையும், கட்டவிழ்த்து விட்டு எங்கும் தனியார், எதிலும தனியார் என்ற நிலை ஏற்படுத்தப்பட்டுள்ள நாட்டில், இப்போது தனியார் பயிற்சி பள்ளிகளில் படித்த செவிலியர்களா? அரசு பயிற்சி பள்ளிகளில் கற்ற செவிலியர்களா? யார் சிறந்தவர்கள்? என்றும், யாருக்கு அரசு பணிகளில் இடம் கொடுக்க வேண்டும் என்றும் ஒரு புதிய சர்ச்சையை நீதிமன்றமும், அரசாங்கமும் சேர்ந்து ஏற்படுத்தி உள்ளது.அதாவது அரசு பயிற்சி பள்ளிகளில் கற்று வெளியே வந்துள்ளவர்களை, முக்கியமாக பணிக்கு எடுத்து, அரசு மருத்துவமனைகள் நடந்து வரும் வேளையில், தனியார் செவிலியர் பயிற்சி பள்ளிகளும், அரசின் அங்கீகாரம் பெற்றுத்தானே இயங்கி வருகின்றன? அவற்றில் படித்து முடித்து வெளியே வரும் எங்களுக்கு ஏன் அந்த தகுதி இல்லையா? என்று கேள்வி கேட்க அந்த வேலையில்லா திண்டாட்டத்தால் அவதியுறும் தனியார் பயிற்சி பள்ளிகளின் செவிலியர்கள் தொடங்கினர்.

அதன் தொடர்ச்சியாக அவர்கள் அரசாங்கத்திற்கு எதிராக தங்கள் கோரிக்கையை முன்வைத்து, போராட்டங்கள் நடத்தினர். அதுபோன்ற போராட்டங்களை சென்ற ஆட்சி சந்தித்தது. அதன்பிறகு அவர்கள் உயர்நீதிமன்றம் சென்றார்கள். அங்கே சுகுணா உட்பட நீதியரசர்கள் தனியார் பயிற்சி பள்ளி செவிலியர்களையும் அரசு பணிகளில் அமர்த்தும்படி தீர்ப்பு கூறினர். அதை அரசு அமுல்செய்யாத நிலையில், அரசின் நடவடிக்கைகளுக்கு அதாவது அரசு பயிற்சி பள்ளிகளில் படித்த செவிலியர்களுக்கு மட்டுமே பணி என்ற நிலைக்கு, உச்சநீதிமன்றம் ஒரு தடையை அறிவித்துள்ளது. அதாவது சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை அமுல்படுத்த உச்சநீதிமன்றம் கூறிவிட்டது. அதை ஒட்டி தமிழக அரசும் தனியார் பயிற்சி பள்ளிகளில் பயின்ற செவிலியர்களை அரசு பணிகளில் சேர்க்க ஒரு அரசாணையை அறிவித்தது.

இதுகண்டு அதிர்ச்சி அடைந்த அரசு பயிற்சி பள்ளிகளில் பயின்று செவிலியர்களாக வெளியே வரும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஒரு அச்சம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அரசு செவிலியர் பணியிடங்களில் தனியார் பயிற்சி பள்ளிகளில் படித்த செவிலியர்கள் நிரப்பப்பட்டுவிட்டால், அதுவே அரசு பயிற்சி பள்ளிகளில் படித்து வெளியே வரும் தங்களுக்கு அரசு பணியிடங்கள் கிடைக்காமல் போவதற்கான காரணமாக ஆகிவிடுமோ? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. அதன்விளைவாகவே, இன்று அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் செவிலியர்களும், அரசு பயிற்சி பள்ளிகளில் படித்துவரும் செவிலியர் மாணவ, மனைவிகளும், தெருவில் இறங்கி போராட முன்வந்துள்ளதை காட்டுகிறது.. அதைகண்டு துணுக்குற்று தாங்கள் நீதிமன்றம் சென்று வாங்கி வந்த வேலை வாய்ப்பு தட்டி பறிக்கப்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் ,அந்த தனியார் பயிற்சி பள்ளிகளில் படித்த செவிலியர் மாணவ, மாணவிகளின் சங்கத்தார் அரசு பயிற்சி பள்ளிகளில் படித்த செவிலியர்கள் மீது கோப்பப்படுவதும், அவர்களது போராட்டத்தை கொச்ச்சைப்படுத்துவதும், ஊடகங்களுக்கு வேண்டுமானால் "தீனி" யாக இருக்கலாம். ஆனால் அதுவே இருயதரப்பு செவிலியர்களுக்கும் "வாழ்க்கை உத்திரவாதமாக" இருக்காது. தனியார்துறை படித்தவர்களை, "தகுதி" குறைந்தவர்கள் என்று அரசுத்துறை பயின்றோர் சொல்வதும், பதிலுக்கு அவர்கள் இவர்களை போராடாதீர்கள் என்றும், நீதிமன்றம் செல்லுங்கள் என்றும் கூறுவதும், ஜனநாயக நாட்டில் ஈடுபடக்கூடியது அல்ல.

இரு தரப்பினரும் தங்களது வாழ்க்கை தேவைக்காக பணி தேடி பயில வந்தவர்கள்.இருவருமே வேலையில்லா திண்டாட்டத்தை சந்தித்து வருபவர்கள். இருவருக்குமே செவிலியர் பணிகள் வேண்டும்.இரு தரப்புமே இந்தியாவிற்கு எப்படிப்பட்ட பொருளாதார திட்டமிடல் வேண்டும் என்று சிந்திப்பதை விடுத்து தங்கள், தங்கள் வேலை வாய்ப்புகளுக்கு மற்றவர்களால் பாதிப்பு வருமோ என்று எண்ணியே கோபப்படுகிறார்கள். இந்திய நாட்டில் முக்கிய துறை இந்த சுகாதாரத்துறை. தமிழ்நாட்டில் அந்த துறை பெறும் அளவில் முன்னேறி இருக்கிறது. அதை நேற்று டாக்டர் பினாயக் சென் அவர்களே கூறியுள்ளார். அப்படி இருக்கும்போது ஏன் தமிழக அரசு இந்த பிரச்சனையை சரியாக கையாள முடியவில்லை? ஏன் நீதிமன்றம் இந்த பிரச்சனைக்கு முழுமையான தீர்வை தராமல் இருபிரிவினரையும் "கோர்த்து" விட்டுள்ளது?.ஏன் அந்த தீர்ப்பை சரியாக அமுல்படுத்த தங்கள் யதார்த்தத்தை மனதில் வைத்து அரசுத்துறை பயின்ற மாணவர்களுக்கும் பாதிப்பு ஏற்படாமல் சுகாதாரத்துறை அணுகுமுறையை எடுக்கவில்லை?

இந்தியாவில் தனியார் துறை என்பதே "லாபம்" தேடும் நோக்கோடு உருவானதுதானே? இது நீதிமன்றத்திற்கு ஏன் தெரியவில்லை? சேவைத்துறை என்பது அரசு கைகளில் இருக்கும்வரை அது சேவை மனோபாவத்துடன் செயல்பட்டு வரும்.அதுவே தனியார் கைகளில் செல்லும்போது, சேவையை "வணிகமாக்கும்" லாப நோக்கோடுதானே செயலப்டும்? லாப நோக்கோடு செயல்படும் தனியார் செவிலியர் பயிற்சி பள்ளிகளில் பயின்று வரும் மாணவ, மாணவிகளுக்கு அரசு துறையில் அதேபோல பயின்று வெளிவரும் மாணவ, மாணவிகளின் அளவுக்கு சேவை மனோபாவ அனுபவங்கள் கிடைக்க வாய்ப்பு குறைவுதானே? இந்த உண்மையை ஒப்புக்கொள்ளத்தானே செய்யவேண்டும்? அப்படி இருக்கும்போது, அரசு துறை பயின்ற மாணவ, மாணவிகள் பணி தேடி போராட வருவதையும் நியாயம் என்று ஏன் நீதிமன்றம் பார்க்கவில்லை? இந்த பிரச்சனையின் முழு உணமைகளை நீதியரசர்கள் புரிந்து கொள்ளவில்லை என்று கூறமுடியும் அல்லவா?

நாட்டில் எங்கும் வேலையில்லா திண்டாட்டம் தலை விரித்து ஆடுகிறது. சுகாதார துறையில் இன்னமும் ஏகப்பட்ட செவிலியர்களும், மருத்துவர்களும் தேவைப்படுகிறார்கள். இப்போது பன்னிரண்டு லட்சம் செவிலியர்கள் நாடெங்கும் இருப்பதாகவும், இருபத்திநாலு லட்சம் செவிலியர்கள் மொத்தம் தேவைப்படுவதாகவும் ஒரு கணக்கு கூறுகிறது.அப்படியானால் அரசு மற்றும் தனியார் நிறுவன கல்வி நிலையங்களில் படித்து வெளிவரும் அனைவருக்கும் வேலை கொடுக்க அரசால் முடியும். பின் எதற்காக இந்த "தடை போக்கு"? அரசு மருத்துவமனையில் இருக்கின்ற ஒரு ஐ.சி.யு. என்ற அறையில், அதாவது அவசர சிகிச்சை பிரிவு என்ற இடத்தில் ஒரு நோயாளிக்கு அதாவது ஒரு கட்டிலுக்கு ஒரு செவிலியர் எந்நேரமும் இருக்க வேண்டும். அதாவது மூன்று ஷிப்டுகளிலும் நோயாளியை கவனிக்க செவிலியர் ஒருவர் இருக்க வேண்டும்.ஆனால் அந்த அறைக்கு முழுவதும் சேர்த்தே ஒரே செவிலியர் மட்டுமே இருக்கிறார் என்ற உண்மை இருக்கிறது. ஆகவே செவிலியர் எண்ணிக்கை அரசு மருத்துவ மனைகளில் அதிகப்படுத்தப்பட் வேண்டியது கட்டாயம்.அப்போது இரு பிரிவு செவிலியர்களுக்கும் பணி உத்திரவாதம் கிடைக்கும்.


அரசு மருத்துவமநிகளில் பணியாற்றும் மருத்துவர்கள்தான், தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் பணியை செய்கிறார்கள். ஏன் தனியார் மருத்துவமனைகள் தங்களை போன்ற தனியார் மருத்துவ கல்லூரிகளில் படித்த மருத்துவர்களை தங்கள் மருத்துவமனைகளில் அமர்த்தி கொள்வதில்லை? அவர்கள் திறமை குறைந்தவர்கள் என்று அந்த தனியாரே நினைக்கிறார்களா? தனியார் மருத்துவ கல்லூரிகளில் பயில மாணவர்கள் முப்பது லட்சமும், நாற்பது லட்ச்சமும் கட்டாய நன்கொடை கொடுத்து படிக்கிறார்களே? அவர்கள் எந்த நோக்கத்தில் மருத்துவ தொழிலில் ஈடுபடுவார்கள்? லாபம் சம்பாதிக்கும் நோக்கிலா? சேவை செய்யும் நோக்கிலா? இதே கணக்கு செவிலியர் பயிர்ச்ச்சிக்கும் பொருந்தும் அல்லவா? ஆனாலும் வேலையில்லா திண்டாட்ட நாட்டில், வேலை தேடிவரும் தனியார் பயிற்சி மாணவர்களுக்கும் வேலை உத்திரவாதம் வேண்டும் என்று நாம் நினைக்கிறோம்.


ஆகவே அரசு பயிற்சி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அரசு பணி எப்படி கட்டாயமாக உண்டு என்பதை சுகாதாரத்துறை கூறவேண்டும்.இந்த விசயத்தில் நீதியரசர்களுக்கு விவாதத்தில் உள்ள வழக்கில் வாதம் செய்யபப்டும் வேலை வேண்டும் என்பது மட்டுமே புரிகிறது. அவர்கள் முழு சமூக கண்கொண்டு பார்க்க பயிற்சி பெறவேண்டும். ஏன் இப்படி கூறவேண்டி வந்துள்ளது? இதேபோல "மக்கள் நல பணியாளர்கள்" விசயத்திலும் அதே நீதியரசர் சுகுணா, ஒரு தீர்ப்பை கூறினார். மக்கள் நல பணியாளர்களுக்கு பணி கொடுக்க வேண்டும் என்ற தீர்ப்பு நன்றாக இருக்கிறது. ஆனால் அந்த தீர்ப்பை கொடுக்கும்போது சில வாதங்களை அவர் முன்வைத்துள்ளார். அதாவது அரசு தரப்பு வாதத்திற்கு பதில் என்ற பெயரில், வேலை வாய்ப்பு அலுவலக விதிகளில், மக்கள் நல பணியாளர்களை அதன்மூலம் எடுத்துக் கொள்ளவேண்டும் என்று கூறப்படவில்லை என்பது சுகுணாவின் வாதம். எப்போது வேலைவாய்ப்பு துறை விதிகள் உருவாகின? எப்போது மக்கள் நல பணியாளர்கள் என்ற வேலைப்பிரிவு உருவானது? இப்படி ஒப்பிட்டு பேசலாமா? சரி. வாதத்திற்கு அது சரி என்று வைத்துகொண்டாலும், வேலை வாய்ப்பு அலுவலக விதிகளில் மக்கள் நல பணியாளர்களை எடுக்க கூடாது என்று எங்காவது கூறப்பட்டுள்ளதா? அப்படி இருக்க ஏன் இந்த நீதியரசர் சொதப்புகிறார்?

அடுத்து இட ஒதுக்கீடு மக்கள் நல பணியாளர்கள் விசயத்தில் பின்பற்றப்படவில்லை என்ற வாதம். கிராமத்தில் மக்கள் நல பணியாளர்களாக வேலை செய்பவர்கள் அனைவரும் அடிமட்டத்து மக்கள்தான் என்றும், அதனால் தனியாக இட ஒதுக்கீடு தேவையில்லை என்றும் இந்த நீதியரசர் சுகுணா கூறியுள்ளார். இது அதிகப்பிரசங்கி தனமாக் உள்ளது. நகர்புறத்தில், மேட்டுக்குடி சமூகத்தில் வளர்க்கப்பட்ட சில நீதியரசர்களுக்கு கிராம சூழல் தெரிய வாய்ப்பில்லை. அவர்களுக்கு இட ஒத்துக்கீடு என்பது தங்களுக்கு இல்லாத ஒன்று என்பதுதான் தெரியும். கிராமப்புற இட ஒதுக்கீட்டில், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் என்று பிரிவுகளாக இருக்கிறது எனபதும் அதில் பிறபடுத்தப்பட்டோரின் இடஒதுக்கீடு நிரப்பப்பட்டாலும், தாழ்த்தப்பட்டோரின் இட ஒதுக்கீடு வழமையாக நிரப்பப்படுவது இல்லை என்பதும் இந்த நீதியரசர்களுக்கு, அவர்களின் வளர்ப்பு காரணமாக தெரிந்திருக்க நியாயம் இல்ல. ஆகவே அப்படி தீர்ப்பில் "தவறான" வாதங்களையும் முன்வைத்து விடுகிறார்கள். அதனால்தான் இந்த நீதியரசர்களுக்கு முழுமைப்பார்வை தேவை என்ற எண்ணம் நமக்கு வருகிறது.

Wednesday, January 25, 2012

ஊழல் நாயர் மாட்டிக்கிட்டாரா?

மாதவன் நாயர் என்ற பெயர் ஒரு பெத்த பேரு. அய்.எஸ்.ஆர்.ஒ. என்பது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்.அதுதான் அவ்வப்போது செயற்கைகோள்களை வானத்திற்கு அனுப்பும். நமது சிறி ஹரிகோட்டாவில் இருந்து அப்படி வானத்திற்கு செயற்கை கோள்களை அனுப்பும்போதெல்லாம் நாம் பூரித்து போவோம்.அதாவது இந்தியா வல்லரசாகி வருகிறது என்று நமக்கு அரசியல்வாதிகளும், ஊடகவியலாலகளும் சொல்லிக் கொண்டே இருப்பார்கள்.நாமும் வயிறு பசித்தாலும் பராவாயில்லை, இந்தியா வல்லரசானால் போதும் என்று மகிழ்ச்சியாகவே இருந்து வருகிறோம்.அப்படி செயற்கை கொள் விடும்போதெல்லாம், அந்த வட்டாரத்தில் உள்ள மீனவர்கள் கடலுக்கு போக கூடாது என்று அதிகாரிகள் கட்டுப்பாடு விதிப்பார்கள். அதாவது கட்டாயமாக அந்த பத்து நாட்கள் அந்த வட்டார மீனவர்கள் பட்டினிதான். இப்படியாக நாம் வல்லரசாக ஆகிவரும் போது, அந்த விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் பெறும் ஊழலில் சிக்கி கொண்டார்கள்.


இந்திய நாட்டின் முகத்தையே மாற்றி ஊழல் முகமாக ஆகிய கார்பொறேட்களை விட, இந்த அரசு அதிகார வர்க்க முதலாளிகள் செய்த ஊழல் அளவு கடந்து சென்று விட்டது. அதாவது இரண்டு தலைமுறை அலைவரிசை ஊழல் செய்த நட்டத்தை விட, ஆதர்ஷ் ஊழல் மஹாராஷ்ற்றாவில் செய்த நட்டத்தை விட, காமன்வெல்த் விளையாட்டு செய்த ஊழலை விட, இந்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் செய்த ஊழல் பெறும் ஊழலாக கணக்கு காட்டியது. அதாவது இந்த நிறுவனத்தின் முன்னாள் தலைமை அதிகாரிகள் ஒரு தனியார் நிறுவனத்தை நடத்தி வந்தனர்.தேவா என்று அதற்கு பெயர். அது பெங்களூருவில் இருக்கிறது. அதற்கு இந்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தனது "புதிய" கண்டுபிடிப்புகளை விற்று விட்டது. அதாவது இந்திய மக்களின் வரிப்பணத்தில் ஆராய்ச்சி செய்து உருவாக்கிய கண்டுபிடிப்பை, ஒரு தனியார் நிறுவனத்திற்கு "பகிரங்க ஏலம்" அறிவிக்காமல் விற்று விட்டது. அதுவும் நாட்டு பாதுகாப்பு சம்பந்தப்பட்ட இந்த நிறுவனத்தில் அப்படி ஒரு ஊழல் நடைபெற்றது.

ஆன்றிக்ஸ் என்ற விண்வெளி ஆராய்ச்சி நிறுவன வணிக பிரிவுடன், இந்த ஒய்வு பெற்ற விஞ்ஞானிகளின் தனியார் நிறுவனமான தேவாஸ் என்ற கொள்ளை லாப அமைப்பு போட்டுக் கொண்ட ஒப்பந்தம்தான் ஆன்றிக்ஸ்- தேவா ஒப்பந்தம். விற்றவர்கள் அய்.எஸ்.ஆர்.ஒ. வின் மூத்த அதிகாரிகள். வாங்கியவர்கள் அதே அய்.எஸ்.ஆர்.ஒ.வின் பழைய மூத்த அதிகாரிகள். பழைய அய்.எஸ்.ஆர்.ஒ. அதிகாரிகள் எப்படி இப்படி ஒரு தனியார் நிறுவனத்தை தொடங்கலாம்? யாருக்கும் தெரியாத புதிய கண்டுபிடிப்பை அய்.எஸ்.ஆர்.ஒ. உருவாக்கியிருப்பதை பழைய ஒய்வு பெற்ற அதிகாரிகள் மட்டுமே எப்படி தெரிந்து கொள்ளலாம்? அது நாட்டின் ரஹசியம் இல்லையா? அதை பகிரங்க ஏலத்திற்கு விடாமல் எப்படி அந்த நிறுவன அதிகாரிகள் தங்கள் மூத்த அதிகர்ரிகளின் தனியார் நிறுவனத்திற்கு மட்டும் தெரியப்படுத்தலாம்? அதை வாங்கிய அந்த தனியார் நிறுவனமான தேவா நிறுவனம் எப்படி அதை பல்லாயிரம் கொடி ரூபாய்க்கு அந்நிய நாட்டு கார்பொறேட்களுக்கு விற்கலாம்? இந்த விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இந்திய தலைமை அமைச்சரின் நேரடி பார்வையின் கீழ் இருப்பதால், எப்படி அந்த வியாபார ஒப்பந்தத்தை நமது பிரதமரும் அனுமதிக்கலாம்? இத்தனை கேள்விகள் வரும்போது, அந்த வணிக ஒப்பந்தத்தால் நாட்டிற்கு "இரண்டு லட்சம் கோடி" நட்டம் என்ற கணக்கை "பொது கணக்கு குழு" கொடுத்தது.


அதற்கு பிரதமர் மன்மோகன் தனக்கு இதுபற்றி தெரியவில்லை என்று எளிதாக கூறிவிட்டார். இப்போது அந்த ஒப்பந்தத்தின் கதாநாயகன் "மாதவன் நாயருக்கும், மூன்று அதிகாரிகளுக்கும்" எதிராக ஒரு ஓலை வந்துள்ளது. அதை எதிர்த்து அந்த விஞ்ஞானிகள் பெங்களூருவில் மாதவன் நாயர் வீட்டில் கூடி சதி ஆலோசனை நடத்தி உள்ளனர். எப்படி எங்களை அரசு பதவிகள் எதற்கும் எடுக்க கூடாது என்று முடிவை அறிவிக்கலாம்? என்பதே இப்போது அந்த நாயரின் கேள்வி. அவரை நட்டு துரோகம் என்று குற்றம் சாட்டி சிறையில் அடிக்காததால் இப்படி கேட்கிறாரா? இந்த மாதவன் நாயர்தான் தனது செயற்கை கோளை"காலஹஸ்தி" கோவிலில் மாதிரி என்று கொண்டு சென்று வைத்து பூசை செய்தவர். அதாவது அறிவியலில் நம்பிக்கை இல்லாமல் "கல் சாமியிடம் போய் கும்பிட்டு விழுந்தவர். அந்த குறிப்பிட்ட செயற்கை கோலும் தோல்வி அடைந்து விட்டது. இப்போது போய் அந்த சாமியிடம் கேட்க வேண்டியதுதானே?

Tuesday, January 24, 2012

மொழிப்போர் தியாகிகள் நாளில் உண்மையான சூளுரை.

இந்தி எதிர்ப்பு தியாகிகள் எனப்படுபவர்கள் தமிழ்நாட்டில் "தாய் மொழி தமிழுக்காக" போராடியவர்கள்.தாய் மொழி தமிழை கற்க விடாமல், மாற்று மொழி இந்தியை தமிழ்நாட்டு மக்கள் மீது திணிப்பது என்ற ஒரு தந்திரத்தை மத்திய அரசு எடுத்தபோது, அதை எதிர்த்து வீறு கொண்டெழுந்த போராட்ட வரலாற்றில்தான், தமிழ்நாட்டு அரசியலில் "திராவிட" கட்சிகள் ஆட்சிக்கு வந்தன. தந்தை பெரியார் தொடங்கி வைத்த அந்த போராட்டம் இன்று வரை உயிர் பெற்று நிற்கிறது. அதனால்தான் இன்றும் நாளைய சனவரி இருபத்தைந்தாம் நாளை திமுக, அதிமுக, மதிமுக, நாம் தமிழர், ஆகிய கட்சிகளும் "மொழிப்போர் தியாகிகள் நாளாக ", " வீரவணக்க நாளாக ", மொழிப்போர் ஈகிகள் நாளாக" அறிவித்துள்ளனர்.

முதல் கட்ட மொழிப்போர் 1938 முதல் 1940 வரையும், இரண்டாம் கட்ட மொழிப்போர் 1943 முதல் 1950 வரையிலும் , மூன்றாம் கட்ட மொழிப்போர் 1950 முதல் 1961 வரையிலும், நான்காவது கட்ட மொழிப்போர் 1963 முதல் 1965 வரையிலும் தமிழ்நாட்டில் நடந்தது. அதற்குப்பின் இன்றுவரை அந்த மொழிப்போர் நிகழ்வுகளில், தனித் தானே தியாகம் செய்த தமிழின உணர்வாளர்களின் நினைவாகவும், காவல்துறை துப்பாக்கி சூட்டில் தியாகியான தமிழின உணர்வாளர்களின் நினைவாகவும், நாம் அந்த நாளை தியாகிகள் நாளாக கடைப்பிடிக்கிறோம். இந்த நேரத்தில் ஒரு வாக்குறுதியை நாம் நினைவில் கொள்ள வேண்டியுள்ளது. இந்தியாவின் முன்னால் தலைமை அமைச்சர் ஜவஹர்லால் நேரு ஒரு வாக்குறுதியை தமிழ்மக்களுக்கு தந்தார். அதில் தமிழ் பேசும் மக்களும், இந்தி பேசாத மாநிலத்தின் மக்களும், தாங்களாகவே முன்வந்து, இந்தி மொழியை ஏற்கும்வரை மத்திய அரசு இந்தியை திணிக்காது என்று ஒரு வாக்குறுதியை தந்தார். அந்த வாக்குறுதி "காற்றில்" பறக்க விடப்பட்டது என்பது வேறு ஒரு செய்தி. ஆனால் இப்போது ஆட்சியில் இருக்கும் தலைமை அமைச்சர் கூறியுள்ள வாக்குறுதியையாவது நிறைவேற்ற வேண்டாமா என்ற கேள்வியை நாம கேட்கவேண்டும்.


அது என்ன மன்மோகன் கொடுத்த வாக்குறுதி? 2004 ஆம் ஆண்டு தேர்தலை சந்தித்து வெற்றி பெற்ற பின் , ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பாக ஒரு "குறைந்த பட்ச வேலை திட்டம்" முன்வைக்கப்பட்டது. அதில் தமிழ்மொழியை இந்தியாவின் ஆட்சி மொழி ஆக்குவதற்கு ஒரு வாக்குறுதி கொடுக்கப்பட்டது. அதாவது "அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில்" உள்ள அனைத்து மொழிகளையும் "இந்தியாவின் அட்சி மொழியாக" ஆக்குவதற்கான ஒரு ஆய்வு குழுவை நியமிப்போம் என்று கூறியிருந்தார். அதை மன்மோகன்சிங் 2004 ஆம் ஆண்டு மே ௨௭ ஆம் நாள் வெளியிட்டார்.அதன்படி,டாக்டர் சித்தகாந்த் மகாபத்ரா குழுவை நியமித்தார். அந்த குழுவும் தனது ஆலோசனைகளை மன்மோகன்சிங்கிடம் கொடுத்து விட்டது. அந்த குழு தனது ஆலோசனைகளை கொடுத்து நான்கு ஆன்டுகள் ஆகியும் மத்திய அரசு அந்த அறிவுரைகளை கிடப்பில் ஒட்டு விட்டு சும்மா இருக்கிறது. அதை இப்போது மொழிப்போர் தியாகிகள் நாள் கடைப்பிடிக்கும் திமுக வும் தனது கூட்டணி தலைவர்களிடம் கேட்கவில்லை. ஆகவே இந்த நாளில் நாம் உரத்த குரலில் அந்த சித்தகாந்த் மகாபத்ரா குழு அறிக்கையை வெளியிடு என்று மத்திய அரசை கேட்கவேண்டும். அதுவே இந்த நாளின் "கோரிக்கையாக" எழ வேண்டும். அதுவே "தமிழ்மொழியாயும்" இந்திய அட்சி ம்கொழி ஆக்குவதற்கு இட்டு செல்லும். அது மட்டுமே மொழிப்போர் தியாகிகளின் கனவை நனவாக்க ஒரே வழி.

Friday, January 20, 2012

பெருமை தேடுவது சிறுமைதானே.

ஒரு மனிதர் தனது பொங்கல் விழாவில் சொன்னாராம். தான்தான் தமிழ்நாட்டில் ஆட்சியை மாற்றியவர் என்று கூறினாராம். முதலில் ஒரு தனி மனிதர் ஆட்சியை மாற்ற முடியுமா? அடுத்து அப்படி மாற்ற ஒரு தனி மனிதர் காரணம் என்றால் அவர் "பெரியார்"போல, "அண்ணா" போல, குறைந்த பட்சம் "அண்ணா ஹசாரே"போல அதிக நாட்கள் மக்கள் மத்தியில் அதற்கான பணிகளில் ஈடுபட்டவராக இருக்க வேண்டும். அப்படி ஈடுபட்டவர்கள் கூட தானே வாய் திறந்து அப்படி சொல்லமாட்டார்கள். மக்கள்தான் ஆட்சியை மாற்றும் மந்திரக்கோலை கையில் வைத்துக் கொண்டு அலைகிறார்கள்.அதனால் அத்தகைய பெரிய மனிதர்கள் கூட, மக்களை திசை வழிப்படுத்தினார்கள் என்றுதான் நாமே கூறுவோம் . .

உண்மை அப்படி இருக்கையில் ஒரு தனி மனிதர் தன்னைத்தானே ஒரு ஆட்சி மாற்றத்திற்கு காரணமானவர் என்று பீற்றிக் கொண்டால், ஒன்று அவருக்கு மன நிலை எப்படி இருக்கிறது என்ற கேள்வியும் எழும். இந்த குறிப்பிட்ட மனிதர் "நிழல் மனிதர்" என்றும் ஊடகங்களால் அழைக்கப்பட்டவர்.இவர் யாருக்கு நிழல் என்பதில் சிலருக்கு குழப்பம் இருக்கலாம்.ஆனால் அவர் யாருக்கும்நிழல் அல்ல என்பதும், அவரது சித்து விளையாட்டுக்கள் எல்லாமே இப்போது சமீபத்தில் அம்பலமாகி அவரும், அவரது குடும்பத்தாரும் நிலையில்லா நிலைக்கு வந்ததும் யாவரும் அறிந்ததே. அப்படிப்பட்டவர் ஏன் தன்னை இப்படி ஒருபெரும் வேலையை செய்த திறமைசாலி போல காட்டிக் கொள்கிரார்? "கேழ் விறகில நெய் வடியுதுன்னா, கேட்கறவன் புத்தி எங்க போச்சு" என்று கிராமத்தில் கூறுவார்கள்.

இந்த நாட்டில் இதுபோல பல காரியங்கள் நடக்கும் பொது, இதே போல பல பேர் தாங்கள்தான் அந்த மாற்றங்களுக்கு காரணம் என்று பீற்றி கொல்வது நடக்கிறது. .இந்த "புளுகுன்னி" வேலையை செய்யும் சிலர் "தொண்டு நிறுவன" இயக்குனர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு அதனால் பலன் உண்டு. ஏமாறும் நிதி நிறுவனங்கள் அவர்களுக்கு அந்த கூற்றை நம்பி பணம் கொடுப்பார்கள். சிலர் இதுபோன்ற "பெருமைகளை" கூறி தனகளது "தொழிலை"நடத்துவார்கள். எடு எப்படியோ, இதுபோன்று பெருமை தேடுபவர்கள் செய்யும் அல்லது சொல்லும் செய்திகள் எப்படியானாலும் "சிறுமை"தானே.

Wednesday, January 18, 2012

எஸ்.எம். கிருஷ்ணா தமிழக மீனவர்களின் நிலைமையை புரிந்து கொண்டாரா?

கிருஷ்ணா கொழும்பு சென்றார். தமிழர்களுக்கு அதிகார பகிர்வு பற்றி பேசினார். அதிசயமாக ராஜபக்சே ஒப்புக் கொண்டார். பதின்மூன்றாம் சட்ட திருத்தம் பற்றி வாய் கிழிய பேசினார்கள். அது என்னடா? பதின்மூன்றாம் சட்ட திருத்தம்? ராஜீவ் காந்தியும், ஜெயவர்தனேயும் பேசி, தமிழர்கள் அல்லாத அந்தஇரண்டு மண்டைகளாலும் தமிழருக்கென்று ஒரு ஒப்பந்தம் செய்யப்பட்டதே, அந்த ஒப்பந்தத்தில் உள்ள "வடக்கு-கிழக்கு" ஒன்றுபட்ட பிரதேசமாக இருக்க, அதை "தமிழர் தாயகம்" என்று அழைக்க கூட, சக்தியில்லாத பதின்மூன்றாம் சட்ட திருத்தம் என்ன தீர்வு? கேட்கிறவன் எல்லாம் கிறுக்கனா?

ராஜபக்சே நடத்தும் ராஜாங்கத்தில், ஒவ்வொரு பிராந்தியத்தின் கவுன்சில் அதிகாரத்தின் கீழும், "நிலமும், காவல்துறையும்" வராது என்ற சட்டம் எப்படி சுயாட்சி பற்றி பேசும்? வடக்கிலும், கிழக்கிலும் சிங்கள குடியேற்றம் திருப்ப பெறப்படும் என்று ராஜபக்சே கூறினாரா? அல்லது கிருஷ்ணா அதுபற்றி கேட்டாரா? அப்புறம் எப்படி தமிழருக்கான அதிகாரப்பகிர்வு பற்றி பேச முடியும்? சிங்கள ராணுவம் வடக்கு, கிழக்கிலிருந்து வெளியேற்றப்படும் என்று சிங்கள அரசத்தலைவர் கூறினாரா? அல்லது கிருஷ்ணா அதுபற்றி பேசினாரா? அப்புறம் எப்படி தமிழர்கள் பற்றி பேச முடியும்? இவர்கள் வேறு எதையோ மறைக்க இந்த அதிகாரபகிர்வு என்ற "போலி முகமூடியை" போட்டு கொள்கிறார்கள்.

அதாவது "நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்" ஒவ்வொரு நாட்டிலிருந்தும் அங்கீகாரம் பெற்று விடும் போல உலக சூழல் மாறி வருகிறது. அய்.நா. சபையின் அணித உரிமை கவுன்சிலில் அதன் பிரதிநிதிகள் அமர்கிறார்கள். ஆஸ்திரேலியாவில் நடந்த " காமன்வெல்த் நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள்" மாநாட்டில் "நாடு கடந்த தமிழீழ அரசாங்க வெளிவிவகார அமைச்ச்சர்" அமர்கிறார். அதே மாநாட்டில் ராஜபக்சேவும் இலங்கை சார்பாக அமர்கிறார். அப்படியானால் சிறிது, சிறிதாக இரண்டு நாடுகளுக்கும் இலங்கைக்குள் பிரதிநிதித்துவம் கொடுக்க உலக சமூகம் தயார் ஆகிவிட்டது என்று பொருளா? . இத்தகைய செயல்பாடுகள்தான் இலங்கை சிங்களர்களை அசைத்ததோ இல்லையோ, டில்லியை அசைத்துள்ளதாக தெரிகிறது. அரசியல் போராட்டத்தில் புலிகளும், ஈழத்தமிஹ்ரகளும் வென்று வருகிறார்களே? அதை உடைக்க வேண்டுமே என்று டில்லிகருதி கிருஷ்ணாவை அனுப்பியுள்ளதா?


இந்த வல்லாதிக்க சக்திகளின் எந்த செயலும், உலக தமிழர்களை இனியும் சற்று கூட பின்வாங்க செய்யாது. தமிஹீழம் மட்டுமே ஒரே தீர்வு எனப்தை உரத்த குரலில் கூவி கொண்டே இருப்போம். அய்.நா. தலையீடு வந்துதமிழீழம் கிடைத்து விடக் கூடாது என்று டில்லி அக்கறையாக இருப்பது தெரிகிறது. அடுத்து "இந்து மகா சமுத்திரத்தில்" சரவதேச எல்லையை கடலில் தாண்ட கூடாது என்று பேசியிருக்கிறார்கள். கிருஷ்ணாவிற்கோ, டில்லிக்கோ, மீனவர்கள் என்றால் என்னென்று தெரியுமா? இந்திய- இலங்கை இடையே கடலில் எவ்வளவு தூரம் இருக்கிறது என்று தெரியுமா? அங்குள்ள நிலைமை தெரியுமா? அதில் விசைப்படுகுகள் எவ்வளவு தூரம் தாண்டி மட்டுமே மீன் பிடிக்க முடியும் என்பது தெரியுமா?கட்ச தீவு எவ்வளவு தூரத்தில் இந்திய எல்லையில் இருந்து இருக்கிறது என்று தெரியுமா? கட்ச தீவு ஒப்பந்தத்தில் உள்ள அம்சங்களை இலங்கை அரசு இப்போது மறுத்து பேசுகிறது என்று தெரியுமா? இதெல்லாம் தெரியாமல் இந்த ஆள் எப்படி மீனவர்களை பற்றி பேசலாம்?

Tuesday, January 17, 2012

சோ பேச்சும், நடராசன் பேச்சும் பெரும் நகைச்சுவைகள்?

சோ தனது துக்ளக் இதழின் அண்டு விழாவில் வழக்கம்போல பா.ஜ.க. துதி பாடலும், தனது திறமை என்று அவரும், அவரது ஆதரவாளர்களும் நம்பும் ஒரு "மாயையும்" சொல்லி தீர்த்தார்.இந்த முறை அவரது அவசரம் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் மத்தியில் பாஜகவை அமர வைத்து விட வேண்டும் என்பதே. அதற்கு இந்திய ளவில் பாஜக எந்தளவு தயார் என்று நாம் கேட்டுவிட கூடாது. அவருக்கும் அது தெரியும். காங்கிரஸ் எத்ரிப்பு இந்திய மக்களிடம் பெரும் அளவில் இருக்கும்போது, பாஜக ஆதரவாக துவே இல்லை எனபது கண்கூடு. இது தமிழக முதல்வருக்கும் தெரியும். வருகிற தேர்தல்களில் இது சிலமாநிலங்களில் நிரூபிக்க ப்பட வாய்ப்பு இருக்கிறது.

இப்படி சூழலில் போயஸ் தோட்டத்தில் நடந்த ஒரு மாற்றத்தினால் தங்களுக்கு வாய்ப்பு கிட்டுமா என்று சோ வகையாறக்கள் எதிர்பார்ப்பதுமிருக்கிறது. வெளியேகூட அப்படித்தான் பலரும் பேசுகிறார்கள். ஆனால் அந்த சோ ராமசாமியின் கருத்துகளுக்கு எதிரான, தீர்மானங்களைத்தான் அதிமுக தலைமை சட்டமன்றத்திலும், தங்கள் கட்சியின் பொது குழுவிலும், நிறைவேற்றியிருக்கிரார்கள்.இற்ற்ஹை நாம் ராஜபக்சே போர்குற்றம் பற்றிய விசாரணை கோரிக்கையிலும், மூன்று தமிழர் தொக்கு தணடனையை குறைக்க கூறும் முயற்சியிலும், முல்லைபெரியார் விசயத்தில் தமிழக உரிமையில் நிற்பதிலும், கூடங்குளம் அணு உலையின் அச்சத்தை மக்கள் மத்தியில் போக்காமல் அமுல்படுத்தாதே என்ற தீர்மனாத்திலும் நன்றாக காணலாம்.

அதனால் சோ விற்கு செல்வாக்கு இருக்கிறது என்பது ஒரு பொய்மை கூற்று என்பது தெளிவாகும். அத்தகைய சூழலில்தான் அத்வானியையும், மோடியையும் கூட்டி வந்து அந்த பெரிய மனிதர்களை தமிழக முதல்வர் '' பெயரளவுக்காவது" சந்திப்பார் என்று எண்ணி அதன்மூலம் ஒரு பாஜக கூட்டணி மாயையை ஏற்படுத்த சோராமசாமி முயன்றார். ஆனால் அது பலிக்க வில்லை. முதல்வர் நேர்டம் ஒதுக்கியதாக பரப்பப்பட்டாலும், அது நடக்க வில்லை. அப்போதும் இந்த இந்துத்துவா கும்பல் விடவில்லை. பாஜக அதிமுக வுடன் கூட்டணிக்கு தயாராக இருக்கிறது என்று வந்திருந்த பெரும் தலவர்களை வைத்து பேச செய்துவிட்டார் சோ. அதற்கும் தமிழக முதல்வர் தயாராக இல்லை என்று கூறாமல் "மவுனம்" காத்து விட்டார் ஜெயலலிதா என்று டைம்ஸ் ஆப் இந்தியா எழுதி விட்டது.

அடுத்த கட்டமாக சோ அடுத்த தந்திரம் செய்தார். செல்வி.ஜெயலலிதா தங்கல்கட்சி பொது குழுவில் அறிவித்தபடி, நாடாளுமன்ற டேஹ்ர்தலில் அதிமுக முக்கிய பங்கை செலுத்தும் என்பதை பயன்படுத்த முயன்றார். அதுதான் பாஜக வேட்டிரி பெற்று பிரதமர் நாற்காலியை பிடிக்கா விட்டாலும், பஜகாவிற்கு வெளியே இருக்கும் ஒரே தகுதி உள்ள பிரதமர் செல்வி.ஜெயலலிதா தான் என்று சொபேசி அந்த பாஜக தலிவர்களிடமும் அங்கீகாரம் வாங்கி விட்டார். இதில் மோடியை முன்னால் கொடுவர சோ எடுத்தமுயற்சிகல்தான் இவை என்பதும், அத்வாநியையே வைத்து அவரது வாயாலேயே மோடியை அன்கீகற்றிக்க வைக்கும் சோ மற்றும் குருமூர்த்தியின் தந்திரம் பலித்துவிட்டது. ஆனாலும் அவர்களது இன்னொரு முயற்சியான ஜெயலலிதாவை ஒப்புக்கொள்ள வைப்பது என்பது நிறைவேற வில்லை. காரணம் தமிழ்நாட்டில் பாஜகாவின் வாக்குகள் ஜெயலலிதாவிடம் ஏற்கனவே வந்துவிட்டன. பாஜக அல்லாத கூட்டணியில்தான் இருபது லட்சம் முஸ்லிம் வாக்குகளையும், இடதுசாரிகள் வாக்குகளையும் வாங்க முடியும் எனபதும் ஜெயலலிதாவிற்கு தெரியும்.

அடுத்த பேச்சு நடராசன் உடையது.இவர் சசிகலா வகையறக்களை தோட்டத்திலிருந்து வெளியேற்றிய பிறகு, தஹ்னது முதல் பொது உரையில் தனது உண்மையான விசுவாசத்தை காட்டிவிட்டார். அதில் ஜெயின் சாதியினர் ஆலோசனையின் பேரில் தாங்கள் வெளியேற்ற பட்டதாக கூறுகிறார். அவருக்கு பார்ப்பனர் அல்லாத அதிகாரிகளின் பங்கு முக்கியமாக இருந்தது என்பது டேஹ்ரிந்தாலும், கருணாநிதியின் அரசியல் தந்திரத்தை அவிழ்ழ்துவிட எண்ணுகிறார். அதாவது ஒரு களத்தில் வெற்றி பெற்று இன்று தோல்வி காணும் பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதோர் அரசியல் என்ற தந்திரம்தான் தனது மறு வாழ்விற்கு உதவும் என்று கலைஞர் எண்ணுகிறார். அதோயே நடராஜனும் பயன்படுத்துகயார். அதற்கு கலைஞர் ஐக்கிய முற்போக்கு அரசாங்கத்தை விட்டு வெளியே வந்தால் தான் பின்னால் செல்வேன் என்று கூறுவதன் மூலம் ஒரு எதிர்பார்ப்பை கூறுகிறார்.

அதாவது அழகிரி மூலம் இரண்டு முறை பேசி, மம்தாவிடமும், சரத் பவரிடமும், கலைஞரும் பேசி, அதன்மூலம் திமுக தலைமை அந்த இரு கட்சிகளுடன் சேர்ந்து கொண்டு மத்திய ஆட்சிக்கு கெடு வைக்க இருக்கிறது என்ற செய்தியை தெரிந்து கொண்டு நடராசன் அப்படி கூறியுள்ளார். அதேசமயம் அதிமுக தலைமை பற்றி சோ ராமசாமி, நடராசன் இருவர் கோரியதையும் பொய்யாக்கி வருகிறது ஜெயலலிதா தலைமை. ஒரு பெண் தலைமைக்கு யாராவது ஆலோசகர் தேவை என்ற தவறான புரிதலை அல்லது தவறான "ஆணாதிக்க, பார்ப்பனீய" பார்வையை பொய்யாக்கி வருகிறார் செல்வி.ஜெயலலிதா.

Saturday, January 14, 2012

பாராட்டுக்கள் எல்லாம் மாலதிக்கே

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு எப்படி நகர்மயமாதல் மற்றும் உலகமயமாதலின் விளைவாக அவமான்ப்படுத்தப்படுவதும், ஒழிக்கப்படுவதும் நடைபெறுகிறது என்று கட்டுரை எழுதினோம். "பாரம்பரிய விளையாட்டுகளை கார்பொரேட் விரும்புவதில்லை" என்ற கட்டுரையை "தமிழ்நியுஸ் " நாளேடு வெளியிட்டு, சிறப்பு செய்தது. அதை பலரும் பாராட்டினார்கள். அந்த கட்டுரையின் கடைசி பகுதியில் வெளியான குறிப்பாக, எங்கள் தமிழர்களின் வீர விளையாட்டுகளை தடை செய்யக்கோரும் கார்போறேட்களும், அவர்களது பண்பாட்டை உயர்த்தி பிடிக்கும் நகர்ப்புற நடுத்தர வர்க்க அறிவுஜீவிகளும், தங்களது பொழுதுபோக்கு விளையாட்டான "நாலு வாகன போட்டிகளையும், இரு சக்கர வாகன போட்டிகளையும்" முதலில் மனித உயிரை குடிக்க வரும் விளையாட்டுகள் என்று "தடை" செய்ய முன்வர்வார்களா? என்ற கேள்வியை எழுப்பியிருந்தோம்.

அந்த பகுதியை பலரும் பாராட்டினார்கள். அந்த "பாராட்டுக்கள்" எல்லாம் போய் சேர வேண்டிய இடம் இப்போது டில்லியில் அமர்ந்திருக்கும் பெண் கவிஞர் மாலதி மைத்திரி இடம்தான். ஏன் என்றால் அன்று சும்மா இருந்த என்னிடம் டில்லியிலிருந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு, இந்த ஜல்லிக்கட்டு விளையாட்டை எதிர்க்கின்ற அறிவுஜீவிகள் பற்றி பேசினார். அப்படி பேசும்போது இவர்கள் :"கார் ரேஸ், பைக் ரேஸ்" ஆகியவற்றை தடை செய்வார்களா? என்று கேட்டார். அந்த கருத்தைதான் நான் அந்த கட்டுரையில் எழுதி இருந்தேன். அதனால் அனைத்து பாராட்டுக்களும் போய் சேர வேண்டிய இடம் கவிஞர் மாலதி மைதிரி யிடம்தான்..

Friday, January 13, 2012

எஸ்.எம்.கிருஷ்ணா இப்போது அவசரமாக இலங்கை செல்வதன் மர்மம் என்ன?

இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே, இந்திய அரசை தொடர்ந்து ஏமாற்றி வருவது நாடறிந்த செய்தி..இந்திய அரசிடம் தமிழர் பகுதிகளில் ஐம்பதாயிரம் வீடுகள் கட்டிக்கொடுக்க அனுமதி அளிப்பதாக ஒப்பந்தம் செய்துகொண்ட ராஜபக்சே அரசு, அதற்கான ஏற்பாடுகளை செய்யவிடாமல் தடைகளை ஏற்படுத்தி வந்தது,.தமிழ் மக்களை படுகொலை செய்த போர் குற்றங்களை இழைத்தவர் என்று தமிழ்நாடு அரசால் சட்டமன்றத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் குற்றம் சாட்டப்பட்ட ராஜபக்சே, அதற்கு உதவியாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட இந்திய நடுவண் அரசுடன் சேர்ந்து கொண்டு செயல்பட்டதாக உலக தமிழ் இனம் ஏற்கனவே கடும் கோபத்தில் இருக்கிறது. அததகைய கோபமான எதிர்ப்புகளை நீர்த்துபோக செய்யவும், இந்தியா அமைதிக்கு ஆதரவான நாடு என்பதுபோல காட்டிக்கொள்ளவும் எண்ணிய டில்லி அரசு, இலங்கையின் வடக்கு, மற்றும் கிழக்கு மாகாண தமிழ் மக்களுக்கு மறுவாழ்வு தர ஏற்பாடு செய்யும் நல்லதொரு நாடு என்று உலக சமூகம் மத்தியில் காட்டுவதற்கு இஹ்த்தகைய "வீடு கட்டிக் கொடுக்கும்" திட்டத்தை இந்திய அரசு இலங்கை தமிழர்களுக்கு செய்ய ஒப்புக்கொண்டது. அதை கூட காலம் தள்ளி நிறைவேற்ற விடாமல் தவிர்த்து வந்த ராஜபக்சே அரசு, சமீபத்தில் அததகைய இந்திய திட்டத்திற்கு ஒரு அனுமதியை கொடுத்துள்ளது.


அதைத்தான் இந்திய அரசின் வெளிவிவகார அமைச்சரான எஸ்.எம்.கிருஷ்ணா சமீபத்தில் பெருமையாக அறிவித்தார். அதன் பிறகு, உலக சமூகத்தின் நிர்பந்தத்தினால், இலங்கை அரசு ஒரு "நல்லிணக்க ஆணையத்தை" ஏற்படுத்தி, அதன்மூலம் கூறப்படும் ம்னித உரிமை மீறல்கள் நடந்தது பற்றி ஆய்வு செய்தது.நாலாவது வன்னிப் போரில் நடந்த மனித உரிமை மீறல்களை போர்குற்றங்கள் என்றும், தமிழின அழிப்பு என்றும் நாம் உலகம் முழுவதும் கூறி வரும் நேரத்தில் அதை சாதரணமாக மனிதஉரிமை மீறல்கள் என்றும், அது பற்றி ஆய்வு செய்யும் பொறுப்பு, இலங்கை அரசிடமே கொடுக்கப்படவேண்டும் என்றும் சில உலக நாடுகள் கூறியதை பயன்படுததி அவர்கள் இப்படி ஒரு நல்லிணக்க ஆய்வு செய்தனர். அதை அறிக்கையாக இலங்கை அரசு வெளிப்படுத்ஹ்டியது. அதில் சில கீழ்மட்ட அதிகாரிகளை சில மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்பு என்று முடிவு செய்து அறிவித்தது. அந்த அறிக்கை "திருப்தி" தருவதாக இல்லை என்ற கருத்ஹை இந்திய அரசு கூறியது. அதை ஒட்டி, இலங்கையில் உள்ள "தமிழ்தேசிய கூட்டமைப்பும்" இந்திய நிலைப்பாட்டை ஆதரித்தது. இத்தகைய சூழலில்தான் இந்திய வெளிவிவகார அமைச்சர் கிருஷ்ணா இலங்கை செல்கிறார்.

இலங்கை தீவில் ஏற்கனவே சீனா தனது ஆதிக்கத்தை அங்குள்ள சந்தையில் செலுத்தி வருவது கண்டு, அமெரிக்காவும், இந்தியாவும் வருத்தம் கொண்டன.அப்படி சாந்திக்காக இலங்கையை அனுகிவருவதில், இந்திய-சீன மோதல் போக்குகள் அல்லது போட்டி போக்குகள் இலங்கை தீவில் எதிரொலித்து வந்தன.கூடுதலாக அம்பாத்தோட்டை துறைமுகத்தை சீனா தனது ராணுவ நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தும் என்ற பயம் இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இருந்து வருகிறது.அதனாலேயே அமெரிக்கா தனது ராணுவ தந்திர திட்டத்திற்கு இந்திய அரசை சார்ந்து, இந்தியாவின் தென் பகுதியான தமிழ்நாடு உட்பட்ட பகுதிகளில் தங்களது அஆதிக்க சதி திட்டத்தை அமுலாக சில முயற்ச்சிகளை செய்துவருகிறார்கள்.அதில் ஒன்றுதான் "கூடங்குளம் அணு உலை" திட்டமும். அதாவது மின்சாரம் தயாரிக்க என்ற பெயரில், அணுகுண்டு தாயாரிக்க தென் மாநிலத்தில் ஒரு இடத்தை டேஹ்ர்வு செய்து இந்திய அரசு செயல்பட இது அவர்களுக்கு உதவுகிறது.அதேபோல தேனீ மாவட்டத்தில் உள்ள மலர்களை குடைந்து அதில் "நியுற்றினோ" ஆராய்ச்சி என்ற பெயரில் ஏவுகணைகளை ஏவ எதுவாக சில வேலைகளை செய்ய இந்திய அரசு திட்டமிடுகிறது. இவ்வாறு தமிழ்நாட்டை ராணுவ கேந்திரமாக ஆக்குவதற்கு தமிழ்நாட்டு மக்களுக்கும், தமிழக அரசுக்கும் தெரியாமலேயே இந்திய அரசு திட்டமிடுவதை உணர முடிகிறது.


இத்தகைய சூழலில் கிருஷ்ணா இலங்கை செல்கிறார். அப்போது ராஜபக்சேவுடன் சீன ராணுவ தந்திரத்திற்கு எதிராக அமெரிக்கா-இந்திய ராணுவ தந்திரத்தை வலியுறுத்தி பேசுவார் என்றும் எதிர்பார்க்கலாம். அதுமட்டுமின்றி, இப்போது உலக அரங்கில் இலங்கை அரசு வசமாக மாட்டிக்கொண்டுள்ளது. அதாவது ஐக்கிய நாட்டு சபையின் கூட்டம் ஒன்று பிபரவரி மாதம் வர இருக்கிறது. அதாவது அய்.நா.வின் பாதுகாப்பு சபையின் பத்தொன்பதாவது கூட்டம் ஒன்று பிப்ரவரி மாதம் கடைசியில் கூட உள்ளது. அதில் ராஜபக்சே அரசின் மனித உரிமை மீறல்கள் பற்றி மேற்கத்திய நாடுகள் பிரச்சனையை கிளப்ப உள்ளனர். அந்த கூட்டத்தில் இந்திய அரசு ஒரு முக்கியமான பங்கை வகிக்கும் என்று எத்ரிபார்க்க படுகிறது. அதில் இந்திய அரசு அனுமதித்தால் இலங்கை மீது போர்குற்ற விசாரணை உலக அளவில் நடத்தப்படும். இந்திய அரசு அந்த கூட்டத்தில் இலங்கைக்கு சார்பாக நிலை எடுக்க முடிவு செய்தால் ராஜபக்சே அரசு தப்பித்து கொள்ளும். அதாவது இந்திய அரசுக்கு இலங்கை அரசி நிர்ப்பந்திக்க ஒரு நல்ல வாய்ப்பு இதில் கிடைத்துள்ளது. அதனால் தான நினைத்ததை இலங்கை அரசின் மீது திணித்து விடலாமா என்று இந்திய அரசு நினைக்கிறது.

இதை ஒட்டியே சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யான சுதர்சன நாச்சியப்பன் ஒரு புத்தகத்தை இலங்கை தமிழர்கள் பற்றி எழுதுவதும, அதை காங்கிரஸ் தலைவர்களே வெளியிடுவதும், நடக்கிறது. அதில் ராஜீவ் ஏற்படுத்திய ஒப்பந்தப்படி வடக்கு, கிழக்கு மாகாண இணைப்பு, மற்றும் மாகாணங்களுக்கு அதிக சுயாட்சி என்பது பற்றி பேசப்படுகிறது. அவற்றை ராஜபக்சே ஒப்புக்கொள்ளாவிட்டாலும், அதை இந்திய அரசு வலியுறுத்துவதும், பதின்மூன்றாம் சட்ட திருத்தத்தை வலியுறுத்தி இலங்கை மீது அழுத்தம் கொடுப்பதும் இந்திய அரசின் தந்திரமாக உள்ளது. இதன்மூலம் தமிழர்களுக்கு குறிப்பாக ஈழத்தமிழர்களுக்கு இந்திய அரசு நன்மை செய்வது போல காட்டலாம் என்பது ஒருபுறம். இன்னொருபுறம் உலக அரங்கில் இப்போது வலுப்பெற்று வரும் "தனி தமிழீழம்" என்ற முழக்கத்தையும் குழி தோண்டி புதைக்கலாம் என்று இந்திய அரசு சிந்திக்கும் என்பது சொல்லி தெரியவேண்டிய ஒன்றல்ல.


இந்த நேரத்தில் எதற்காக இலங்கை இந்திய சொல்வதை கேட்க வேண்டும்? உலக அரங்கில் இலங்கைக்கு சாதகமான சூழல் இப்போது நாளுக்கு, நாள் குறைந்து வருகிறது. அமெரிக்காவிலும், ஐர்ப்பிய நாடுகளிலும், அவர்கள் வெளியிடும் ச்டாம்புகளில் பிரபாகரன் படமும், ஈழ தேச வரைபடமும், வீரசாவு அடைந்த தமிழர்களின் படமும் வெளியிடப்படுகிறது என்பது இலங்கையை நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது. இவை எல்லாமே புலம் பெறந்த தமிழர்களின் பங்களிப்பாக நடந்து வருகிறது. ஆகவே இந்திய அரசின் உதவி என்பது இன்றைய ராஜபக்சே அரசுக்கு அவசியம் தேவை என்ற ஒரு சூழலில்தான் கிருஷ்ணாவின் இலங்கை பயணம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று என்ற கருத்து வருகிறது.

Thursday, January 12, 2012

பாரம்பரிய அடையாளங்களை கார்பொரேட் விரும்புவதில்லை.

இப்போது அவர்களது குறி "ஜல்லிக்கட்டு விளையாட்டு" மீது. அவர்கள் கூற்று, "எப்படி விலங்குகளை வதைப்பீர்கள்?". ஆகா. எங்கள் விலங்குகள் மீது இவர்களுக்கு எவ்வளவு அக்கறை? இவர்கள் யார்? நகர்ப்புறங்களில், அறிவுஜீவிகளாகவும், படித்தவர்களாகவும், மனித உரிமையை நுனி நாக்கில் பேசுபவர்களாகவும், அனேகமாக சிவந்த வன்னத்திலுள்ளவர்கலகா இருக்கிறார்கள். விலங்குகளை வதைக்ககூடாதல்லவா? என்று வினவுகிறார்கள். உண்மைதான் விதைக்க கூடாது என்று நாமும் சொல்லிவிட்டால் பிறகு நம்மிடம் நிறைய பேசுகிறார்கள்.அப்போது இவர்களை பற்றி அதிகம் புரிய முடிகிறது. இவர்கள் நீதிமன்றம் செல்கிறார்கள். அங்கே உள்ளவர்களுக்கு "பாரம்பரிய விளையாட்டுகள்" பற்றி என்ன தெரியும் என்பது நமக்கு தெரியாது.

காளையை அடக்க மனிதர்கள் பொங்கல் நேரம் பாய்ந்து வருவது "வீர விளையாட்டு" என்று நாம் புரிந்து வைத்துள்ளோம். அந்த "காளைகளை" விலங்கினத்தில் " அரிதான" ஒன்றாக சேர்த்து விட்டார் ஜெயராம் ரமேஷ் என்றுவேறு கூறுகிறார்கள்.யார் அந்த ரமேஷ்? பெங்களூரு பார்பனரான அவருக்கு நமூர் பாரம்பரிய விளாயாட்டு பற்றியோ, நம்மூரில் காளைகளை எதற்காக பயன்படுத்துகிறோம் என்பது பற்றியோ தெரியுமா? ஒரு காளையை பலர் சேர்ந்து அடக்கலாமா? என்று இவர்கள் கேட்கிறார்கள். ஒருவர்தான் தொடர்ந்து அந்த ஆட்டத்தில் கலையுடன் சண்டை போட்டு அடக்க முடியும்.பலரும் அதை பிடிக்க முயற்சி செய்வார்கள்.அதற்காகவே அந்த கலையை வளர்ப்பவர்கள் அதை தங்கள் வீட்டு குழந்தையை விட அருமையாக வளர்ப்பார்கள்.அதனால்தான் அலங்காநல்லூர் போன்ற சிலகிராமங்களிழ்மட்டுமே அந்த ஆட்டம் நடைபெறுகிறது. மாட்டு போன்களில் கலையை அடக்குவது எங்கள் "தமிழர் பழம் பண்பாட்டில்" இருக்கிறது. இத்தனை விளக்கம் சொன்னாலும் அவர்கள் ஒப்புக்கொள்ள தயாரில்லை.

காளைகளுக்கு "சாராயம்" கொடுக்ககூடாது. ஊசி போட கூடாது. அதை வதைக்க கூடாது. இதையேதானே பாரம்போரிய கலைகளை, விளையாட்டுகளை போற்றுபவர்களும் கூறி வருகிறோம். உங்கள் " ஓட்டப்பந்தயம்" செல்பவர்களும், மற்ற விளையாட்டு வீரர்களும், "போதை மருந்து" பயன்படுத்தும் போது எப்படி உங்களின் விதிகள் அவர்களை தடை செய்கிறதோ அதே போல எங்கள் பாரம்பரிய விளையாட்டிலும் "விதி மீறல்" செய்பவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் உங்களது "உலகமயமாக்கலின்" விளைவே. உங்கள் வணிகமயமாக்கலின் வித்துக்களே. அதனாலத்தில் உள்ள "ஒழுக்கமற்ற" போக்குகளுக்கு நீங்கள்தான் பொறுப்பு. கிராமப்புற மக்களின் பாரம்பரிய விளையாட்டு என்ன செய்யும்? நீங்கள் " உழவு தொழிலுக்கும்" நாங்கள் காளைகளை பயன்படுத்தும்போது என்ன சொல்லபோகிறீர்கள்? வண்டிமாடு இழுக்கனான்கள் காளைகளை பயன்படுத்தும்போது நீங்கள் எப்படி அதை பார்கிறீர்கள்? இப்படி கேட்டால் அது வேறு. இது வேறு. இது தவிர்க்க கூடியது. அது தவிர்க்க முடியாதது. இப்படி கூறுகிறார்கள்.


விளையாட்டு ஆட கலைகளை பயன்படுத்துவது உங்களுக்கு பொறுக்கமுடியவில்லை என்றால் அது ஏன்? ஒன்று நீங்கள் நகர்ப்புற நடுத்தர வர்க்க, அல்லது முற்பட்ட சாதி மனிதராக இருந்து கொண்டு, இந்த ஆட்டத்தை கிராமப்புற "பிற்பட்ட" சமூகத்தின் ஆட்டம் என்று பார்கிறீர்கள். இப்படி கேட்கலாம். இந்த ஆட்டம் அடிப்படையில் தலித் சமூக மக்களையும் சேர்த்துக்கொண்டு ஆட வேண்டிய ஆட்டம். ஆனால் தமிழ்நாட்டில் எல்லாமே கடந்த முப்பது ஆண்டுகளாக "பிற்பட்டோர்" ஆளுகை என்று போய் விட்டதால், இந்த ஆட்டத்திலும் தலித் சகோதரர்களை ஈடுபடுத்த தயங்கும் பிற்பட்டோரை காண்கிறோம். அதற்கு ஏன் முற்பட்டோரின் பழக்கங்களுடன் சேர்ந்து கொள்ள வேண்டும்? மாறாக "நாங்களும் தமிழர்கள்தான்". என்றும், "எங்களையும் காளைகளை அடக்க" விடுங்கள் என்றும்,தலித் மக்கள் சண்டை போட வேண்டும். வீரத்தை நிரூபிக்கும் தலித் சகோதரனை பிற்பட்டோர் சமூகம் ஏற்றுக்கொண்டு போற்ற வேண்டும். அதுதானே பெரியார் வழியில் உள்ள தமிழர் பண்பாடு?

சரி. உங்கள் வாதத்திற்கே வருவோம். மனிதர்களை நாம் முதன்மையாக நேசிக்கிறோம் என்று கூறும் இந்த மனிதர்கள் "மனித வதைகளையும்"எதிர்க்க வேண்டும் அல்லவா? அதனால் "நாலு சக்கரவாகன ஓட்டம்", "இரு சக்கர வாகன " ஓட்டம் ஆகியவற்றை "தடை" செய்து விட்டு பிறகு இந்த ஜல்லிக்கட்டு பக்கம் வாருங்கள் என்று கூறலாமா? அந்த நாலு சக்கரவாகன ஓட்டத்திலும்" இரு சக்கரவாகன ஓட்டத்திலும்" மனித உயிர்கள் அதிக ஆபத்தை சந்திக்கின்றன என்பதால் அவற்றை தடை செய்ய முதலில் ஏற்பாடு செய்யுங்கள். அது உங்கள் கார்போரேட்களின், பெரு முதலாளிகளின், நடுத்தர வர்க்கத்தின், "வீர விளையாட்டு" என்றால் இந்த " மஞ்சு விரட்டு" என்ற விளையாட்டுதான் எங்கள் தமிழர்களின் பாரம்பரிய வீர் விளையாட்டு.

Tuesday, January 10, 2012

உழவர் எழுச்சியை ஏற்படுத்திய பசுபதியின் மரணம்

பசுபதி பாண்டியன் திண்டுக்கல் அருகே அவரது வீட்டில் அடையாலம்கட்டாத எதிரிகளால் நேற்று இரவு ஏழரை மணிக்கு படுகொலை செய்யப்பட்டார். தேவன்றகுல வேளாளர் கூட்டமைப்பு நிறுவன தலைவர் என்ற பெயருடன் அவர் செயல்பட்டு வந்தார். ஒன்பதாம் நாள் தேனியில் முல்லை பெரியார் பிரச்சனைகாக ஒரு பட்டிநிபோராட்டத்தை நடத்தி விட்டு வந்திருந்தார். அவருக்கும் மூலக்கடை பண்ணையார் குடும்பத்திற்கும் உள்ள மோதல் பற்றி எடுகள் வெளியிட்டுள்ளன. அவரது நடவடிக்கைகளினால் பண்ணையார் பக்கத்தில் பலர் மரணம் அடைந்ததையும், அவரது செயளால மேலும் பலர் கொலை செய்யப்பட்டதையும் கவனமாக கூறும் காவல்துறை, பசுபதி பக்கத்தில் "பண்ணையார் குடும்பத்தால்" கொல்லப்பட்டவர்கள் "பதிமூன்றுபேர்" என்பதை கூறுவதில்லை. ஏன் என்றாலவர்கள் "தாழ்த்தப்பட்டவர்கள்".

தேவேந்திரகுல வேளாளர்கள் தமிழ்நாட்டு உழவர் பெருங்குடி மக்களின் போர்குணமிக்க முன்னணி படை. அந்த படையின் ஒரு முன்னோடி கொல்லப்பட்டதனால், டென்றா எழுச்சி திர்ஹேன் மாவட்டங்களில் இப்போது சாலையெங்கும் திரண்டு நிற்கிறது. பசுபதியின் உடலை ஏந்திய வாகனம் பெருமூர்வலமாக தூத்துக்குடி நோக்கி கொண்டு செல்லப்பட்டுக்கொண்டு இருக்கிறது. சாலையெங்கும் திரண்ட தேவேந்திர கூட்டம் ஆண்களும்,பெண்களும் தங்கள் தலைவனை காண கிராமங்களில் இருந்து வெளியே வந்து நிற்கின்றனர். திண்டுக்கல், கொடை ரோடு, மதுரை, அருப்புகோட்டை, எட்டையபுரம், எப்போதும் வென்றான், தூத்துக்குடி என்று அந்த மாபெரும் உழவர் எழுச்சி பேரணி சென்று கொண்டு இருக்கிறது. மதுரை விமான நிலையத்தில் காத்திருந்து டாக்டர் கிருஷ்ணசாமி, மலர் வலயம் வைத்து ஊர்வலத்தில் கலக்க, எட்டயபுரத்தில் பசுபதிக்கு மரியாதை செலுத்தி இணைய ஜான் பாண்டியன் தயாராய் நிற்க இந்த உழவர் பெரும் எழுச்சியை தேவேந்திரா சமூகம் இனி மறக்க முடியுமா? .

இனியாவது உழவு தமிழன் தனது போர்குணத்தை காட்ட தனக்குள்ளேயே எத்ரியை தேடாமல் பண்ணை திமிங்கிலங்களின் கைகளில் கலாவடப்பட்டிருக்கும் நிலங்களை எல்லாம் தனாதாக்கி நாட்டு மக்களுக்கு "உழுது, பயிருட்டு, சோறு போடும் பெரும் கூட்டமாக உருவாகுமா? என்ற ஏக்கம் நமக்கு.

நக்கீரன் வெற்றி பெற்றதா? இல்லையா?

நக்கீரன் சனிக்கிழமை இதழிலேயே அடுத்த இதழ் "பத்தாம் நாள் செவ்வாய் கிழமை" வெளிவரும் என்று பிரச்சனைக்குரிய கட்டுரை வெளியான பக்கத்திலேயே போட்டிருந்தார்கள். அதாவது பொங்கலை முன்னிட்டு, முன்கூட்டியே என்பது அதன் பொருள்..அதற்காக அவர்கள் அடுத்த இதழை தயார் செய்வதில் ஏற்கனவே கவனம் செலுத்தி வந்தனர். ஞாயிற்று கிழமையும் அந்த இதழை முடிப்பதில் வேகம் காட்டி முடித்து விட்டனர். சனிக்கிழமை தாக்குதலால் அடுத்தட இதழ் "தயாரிப்பு ஒரு சவாலாக" நக்கீரன் இதழுக்கு ஆகிவிட்டது. இந்த லாவுக்கு காவல்துறைக்கு அந்த இதழின் விரைவான செயல்பாட்டு சூழல் பற்றி தெரிய வாய்ப்பில்லை. அதனால் அவர்கள் தங்களுக்கு வந்த புகார்களின் அடிப்படியில், நக்கீரன் கொடுத்த புகாரையும், கணக்கில் எடுப்பதிலும், எண்ண செய்யவேண்டும் என்று அந்த புகார்கள் பற்றி முடிவு எடுப்பதிலுமே கவனமாக இருந்தனர்.

அதற்குள் நக்கீரன் குடும்பத்தினர் தங்களது அடுத்த் இதழ் தயாரிப்பில் வேகம் காட்டி , அதை அடித்து, பயிண்டு பண்ணி, பார்சல் கட்டி எல்லா ஊர்களுக்கும் அனுப்புவதில் கவனம் செலுத்தி அதிலும் வெற்றி அடைந்து விட்டனர். அதேபோல செவ்வாய் கிழமை காலையில் கடைகளில் போடுவதிலும் வெற்றி பெற்று விட்டனர். அந்த வெற்றி சென்னையில் எல்லா இடங்களிலும் கிடைக்கவில்லைதான்.அதாவது சென்னையில் உள்ள கடைகளில் அதிமுகவினர் முந்திய இதழை பிடுங்கி எரிக்கும்போதே வட சென்னை போன்ற இடங்களில் உள்ள கடைகளில் இனி நக்கீரன் விற்க கூடாது என்று மிரட்டியது இந்த இரண்டு நாட்களுக்குள் வேலை செய்யத்தானே செய்யும்? அதனால்தான் சென்னையில் போதுமான அளவில் கிடைக்க வில்லை. ஆனாலும் நாம் செவ்வாய் காலையில் கொடுத்த தொந்திரவின் பேரில், வின் தொலைக்காட்சி ஊழியர்கள் போய் கடைகளில் சண்டை போட்டு வாங்கி வந்து விட்டனர்.

அதனால்தான் நேற்று "செய்திகளும், நிஜங்களும்" நிகழ்ச்சியில் எங்களால் நக்கீரனின் "நேற்றைய செவ்வாய் கிழமை இதழ்" பற்றி பேச முடிந்தது. அந்த இதழை பார்த்த போது, அதில் முழுமையாக எப்படி அதிமுக வினர் அராஜகத்தில் ஈடுபட்டனர் என்ற புகை படங்களும், விளக்கங்களும், மட்டுமே இருந்தன. ஏற்கனவே சென்ற இதழான "சிக்கலில்" மாட்டிய இதழில் எப்படி "அதிமுக செயற்குழு, பொதுகுழுவில் பொன்னையன் பேசியதை" ஜெயலலிதா பாராட்டினார் என்று ஒரு தவறான செய்தியை வெளியிட்டிருந்தார்களோ,அதேபோல நடிகர் விஜயின் அம்மா போஎஸ் தோட்டத்தில் இருப்பதாக ஒரு தவறான செய்தியை வெளியிட்டு இருந்தார்கள். இதுபோன்ற தவறான செய்திகளை தருவதற்கு ஏற்ற மனிதர்கள் அந்த இதழுக்கு நெருக்கமாக இருப்பதும் தெரிந்தது. அதிமுக வின் செயற்குழு, பொதுக்குழுவின் படங்களை பார்த்து விட்டு, மேடையில் அமர்ந்திருக்கும் பொன்னையனும், வளர்மதியும் பேசி இருப்பார்கள் என்று எண்ணி "மேசை எழுத்தில்" அது அப்படி எழுதப்பட்டுள்ளது தெரியவருகிறது. பொன்னையன் மேடையில் உட்காரவைக்கப்பட்டிருந்தார் என்றாலும் பேசவில்லை என்று அதிமுக வட்டாரம் கூறுகிறது. வளர்மதி தீர்மானங்களை மட்டுமே வாசித்தார் என்றும் பேசவில்லை என்றும் கூறுகிறது.


அதாவது அந்த சிக்கலான் இதழில், உள்ள சிக்கல்னா கட்டுரையில், ஜானகி அணியின் பொன்னையனும் , வளர்மதியும், பழைய சேவல் அணியான ஜெயலலிதா அணியை சேர்ந்தவர்களை விட விசுவாசமாக இருப்பதாக "ஜெ" கூறியதாக இட்டு கட்டப்பட்ட கட்டுரை வெளிவந்துள்ளது. இதுபோன்ற தவறுகள் "அறை,குறையாக" சிலர் தங்களுக்கு தெரிந்த விவரங்களை பரப்பி, அதிக ரகசியம் தெரிந்தவர்களாக காட்டிக் கொள்வார்கள். அதை சோதித்து பார்க்க வேண்டியது ஏடுகளின் பணி.அத்தகைய தெரிந்தவர்கலேன்று நம்பப்படுபவர்கள் எம்.நடராசனும், திருச்சி வேலுசாமியும் என்பது அனைவருக்கும் தெரிகிறது.

அதாவது செவ்வாய் கிழமை வெளிவந்த இதழில், திருச்சி வேலுசாமி நேர்காணலும், நடராசன் பற்றிய செய்திகளும் இடம் பெற்றுள்ளன. படங்களுடன் அந்த செய்தி வேலுசாமி-நடராசன் பெயர்களுடன் வெளிவந்துள்ளது. அதுமட்டுமின்றி, நக்கீரனுக்கு மிகவும் வேண்டிய மூத்த ஊடகவியலாளர் எ.எஸ்.பன்னீர்செல்வம் தனது கருத்தை புதிய தலைமுரைடி.வி.யில் கூறும்போது, ஒரு ஆட்சி தனது செயல்களை பகிரங்கமாக வைக்காதபோது, ஒரு ஊடகம் அதை யூகம் செய்துதான் எழுத முடியும் என்றும், அதற்கு அந்த ஆட்சிக்கு நெருக்கமாக்கைருந்தவர்களிடம்கேட்டுதான் எழுத முடியும் என்றும் கூறி "பூனையை, பையை விட்டு வெளியே " எடுத்து போட்டு விட்டார். இப்படித்தான் அந்த தோட்டத்திலிருந்து வெளியேற்றப் பட்டவர்களின் மீது "சந்தேகம்" எழுந்துள்ளது. எப்படியோ வெளியே ஓடிவந்தவர்களுக்கும், தேர்தலில் தோற்ற முன்னாள் முஹல்வரின் கட்சிகாரர்களுக்கும் மட்டுமே இதனால் பலன். நக்கீரனுக்கு பலனா? பலவீனமா?

நக்கீரனை கைவிட்ட திமுக?

நக்கீரனை கைவிட்ட திமுக?
நக்கீரன் "ஜெ"வை தாக்கி எழுதினால் அதற்கு ஆதரவாக திமுக தலைமை வரவேண்டும் அல்லவா? அதுதானே தமிழ்நாட்டு அரசியல்? இந்த முறையும் நக்கீரன் அலுவலகத்தை அதிமுக வினர் களை முதல் மாலைவரை தாக்கும்போது, திமுக தலைவர் மதியத்திலேயே ஒரு கண்டன அறிககையை கொடுத்தார் அல்லவா? ஆனால் கலிஞர் அறிக்கையே பல கேள்விகளை எழுப்பிவிட்டன. இந்த பழம் பெறும் அரசியல்வாதி ஏன் தனது மகன் மாத்திரை தினகரனை ஆள் வைத்து எரிக்கும்போது, சும்மா இருந்தார்? அப்போது ஏன் இவர் தனது மகனிடம் இதே அறிவுரையை, அதாவது " வழக்கு" போடலாம், தாக்குதல் கூடாது என்று கூறவில்லை? என்றும் கேள்விகளை பொதுமக்கள் கேட்டார்கள். ''ஊடகத்தை தாக்குவது ஜனநாயக நாட்டில் தவறான செயல் " என்று அப்போது ஏன் இவர் கூறவில்லை? என்றும் கேள்விகள் எழுந்தன.

கலைஞர் வழக்கமாக தேர்தல் நேரத்தில் திமுக வேட்பாளர்கள் பற்றி ஒன்றை கூறுவார். ''சரக்கும் முறுக்கு, செட்டியாரும் முறுக்கு " என்பார். இந்த இடத்தில் நக்கீரன் என்ற சரக்கு முறுக்காக இருந்தாலும், அதை பற்றி கருத்தை விற்பனை செய்ய வந்த செட்டியார் கலைஞராக இருந்ததால், அது "திருப்பி" அடிக்கிறதோ? ஹைதர் அலி ஒன்றை கூறினார். அதாவது பா.ஜ.க. கட்சியின் அலுவலகத்தை திமுக முற்றுகையிட்டு, தாக்கும்போது, திமுக மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகனும், பரிதி இளம்வழுதியும் முன்னே நின்று தலைமை தான்கினார்களே? அது சரியா? என்று நம்மிடம் கேட்டார். யார் செய்தாலும் தவறுதானே? மாட்டு மாமிசம் சாப்பிடுபவர்கள் உலகமெங்கும் பல கொடி இருக்கிறார்கள்: அவர்களை இழிவாக சித்தரிகிரார்களா? என்றும் வினவுயனார். அதேபோல முஸ்லிம், தலித் தோழர்கள் சிலரும் இதையே கேட்டனர். ஜெயலலிதாவை இழிவு படுத்துவதாக எண்ணிக்கொண்டு, அவர்கள் உணவு பழக்கத்தை இழிவுபடுத்தி விட்டார்கள் என்பதே வரகளது வாதம்.

ஆனால் கலைஞர் எப்படி அறிக்கை விட்டார் தெரியுமா? நக்கீரனிடமிருந்து ஒரு வேண்டுகோள் வந்த பிற்பாடு, வலியுறுத்தல் வந்த பின்பே, வெளியிட்ட செய்தியை பற்றி கோபப்பட்டு விட்டு, பிறகே அவர் அறிக்கை தந்தார் என்கிறது ஒரு செய்தி. சரி. அதன்பிறகு, நக்கீரன் அலுவலகத்தார் "தளபதி ஸ்டாலினை" அணுகி அவர் வந்து உடைக்கப்பட்ட அலுவலகத்ஜ்தை பார்வையிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாகவும், அடஹ்ர்கு அவர் "மறுமொழியே" சொல்லவில்லை என்றும் ஒரு செய்தி வந்துள்ளது. அப்படியானால் நக்கீரனை திமுக கை விட்டு விட்டதா?

நக்கீரன்ல உள்ள நல்லாதானே இருக்கு

அன்று சனிக்கிழமை. சனவரி ஏழாம் நாள். புதுக்கோட்டையில் இருந்தேன். அப்போதுதான் சென்னையிலிருந்து வாடகை காற்றில் திருச்சி வழியாக வந்து இறங்கினோம். பண்ருட்டி வழியில் தானே புயலுக்கு பின்னால் இரவில்; செல்ல முடியாது என ஓட்டுனர் கூறிவிட்டதால், திருச்சி வழிதான் எங்களுக்கு கிடைத்தது. மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் ஷெரீப் ஏற்பாடு செய்து கொடுத்த விடுதியில் தங்கினோம். அம்பேத்கர்-பெரியார் மக்கள் கழகம் தலைவர் செல்வன் அழைத்தாரே என்று "கரம்பக்குடி" கூட்டத்திற்கு வந்திருந்தோம். கடைகளில் தொங்கிய நக்கீரன் தலைப்பி கொஞ்சம் கண்ணை ஈர்த்தது. " மாட்டு மாமிசம் சாப்பிடும் மாமி நான்" என்று தலைப்பிட்டு "விவரிக்கிறார் ஜெயலலிதா" என்று எழுதி இருந்தது. அவரே சொல்கிறாரா? என்பது நமது கேள்வியாக எழுந்தது.ஆர்வம் இருந்தும் பிறகு வாங்கிகொள்ளலாம் என்று இருந்து விட்டேன். விடுதியில் படுத்து எழுந்த பின்னால் அனகில எட்டிலிருந்து ஒரு நண்பர் தொலைபேசினார். நக்கீரன் அலுவலகம் தாக்கப்படுகிறது என்றார். ஊடகவியலாளராக வருத்தப்பட்டார்.நானும்தான்.

அடுத்து கலைஞர் டி.வி. பார்த்தேன். அதில் நக்கீரன் அலுவலகம் உள்ளே தாக்கப்பட்ட காட்சிகளை, வெளியே ஆர்ப்பாட்டம் செய்யும் காட்சிகளை காட்டினார்கள். அடஹ்ர்குள் த.ம.மு.க. போது செயலாளர் ஹைதர் அலி தொலை பேசினார். நக்கீரன் என்பதால் எனக்கு பேசினார். மாட்டு இறைச்சி ச்டப்பிட்டால் இழிவா? என்ற தோரனையில் இருந்தது அவரது குரல். கலைஞர் அறிக்கை கலிஞர் டி.வி.யில் கட்டப்பட்டது என்றேன். எண்ண சொன்னார்? என்றார். நீதிமன்றம் சென்று அவதூறு வழக்கு போடவேண்டியதுதானே? என்று கேட்டிருக்கிறார் என்றேன். இதே கருத்தை தனது மகனுக்கு ஏன் அவர் "மதுரை தினகரன்" தாக்கப்பட்ட போது கூறவில்லை? என்று கேட்டார். அதுவும் சரியாகத்தானே இருக்கிறது என எண்ணினேன்.அடுத்து உடனேயே நக்கீரன் அலுவலகம் தொடர்பு கொண்டு காமராஜிடம் பேசினேன். உள்ளே "பாசிடிவாகத்தான்" எழுதியிருக்கிறோம் என்றார். எண்ண எழுதி இருக்கிறீர்கள்? என்றேன். மாட்டு இறைச்சி சாப்பிடுவது பற்றி எம்.ஜி.ஆர். கூறியதை ஜெயலலிதாவிற்கு ஆதரவாகத்தான் போட்டிருக்கிறோம் என்றார்.


அ[ப்படியானால் ஏன் அட்டையில் "நெகடிவாக" போட்டீர்கள்? என்றேன்.மாவிற்கு, மா போடவேண்டும் என்று எண்ணியதால் "கெடுத்துக்கொண்டோம்" என்றார். அவர் நக்கீரனின் இணையாசிரியர். அவரது கூற்றை அதிகாரபூர்வமாக எடுத்துக் கொண்டேன். அப்போது அவரது தொலைபேசி மூலம் வெளியே முழக்கம் போடும் சத்தம் கேட்டது. மதுசூதன் ஆட்கள் இப்போது வந்து முழக்கமிடுகிறார்கள் என்றார். "வெளியே காவலர்கள் காட்சி ஊடகத்தில் நிற்பது தெரிந்ததே? எப்படி உள்ளே வந்து உடைத்ததை களைஞர் டி.வி. காட்டினான் "என்றேன்.. முதலில் பத்து பேர் வந்து உள்ளே நுழைந்து எங்கள் வாகனங்களை உடைத்து அலுவலகம் உள்ளே வந்து பல பொருட்களையும் உடைத்து போட்டு விட்டனர். நாங்கள் அவர்களை வெளியே தள்ளி கதவை ப[ஊட்டி விட்டோம் என்றார். அதற்கு பிறகுதான் காவல் துறை வந்தது. வாசலில் நிற்கிறது.ஆனாலும் அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்கிறது என்றார். ஒவ்வொரு கூட்டமாக அதிமுக வினர் வந்து முழக்கமிட்டு, கள் எரிந்து விட்டு போகிறார்கள் என்றார்.

அதிமுக வினர் மாநிலமெங்கும் நக்கீரன் புத்தகத்தை கடைகளில் பிடுங்கி எரித்து வருகிறார்கள் என்றார். அதேபோல பிற இடங்களிலிருந்தும் கேள்விப்பட்டேன். மறுநாள் காலை தி ஹிந்து, தினத்தந்தி, போன்ற ஏடுகள்; உட்பட திமுக வினர் செய்த அராஜகத்தை படம் பிடித்து வெளியிட்டனர். அன்று காவல்துறை அதாவது ஞாயிற்று கிழமை சிறிது "அடக்கி" வாசித்தாங்க போலிருக்கிறது. உள்ளே போட்டதை படித்து பார்த்து வெளியே போட்டதை ஓரந்தள்ளி பார்க்க அரசியல் கட்சிகாரர்களுக்கு "பொறுமையில்லையோ?". அது அவர்கள் வேலையில்ல்யோ? சரி.இப்படித்தானே மதுரை தினகரன் அலுவலகம் தாக்கப்பட்ட போது, முதலில் மேயர் தேன்மொழி தனது படையுடன் சென்று வாசலில் முழக்கமிட்டு சென்றார். அடுத்து வந்த திமுக குழு வந்து கள் எறிந்துவிட்டு சென்றது. அடுத்து வந்த அட்டாக் பாண்டி குழு உள்ளே புகுந்து அடித்து நொறுக்கி, மூன்று பேர் சாகா காரணமாக ஆகிவிட்டது. இரு கட்சியிலும் தலைமைக்கு விசுவாசம் கட்ட ஒவ்வொரு குழுவாக இப்படித்தான் வந்து தாக்குதல் நடத்திவிட்டு செல்லவேண்டுமோ?

Thursday, January 5, 2012

கருணை எனபது ஒரு ஆளின் பெயரா?-நூல் ஏற்படுத்திய சர்ச்சை.

நேற்று தமிழச்சி தங்கபாண்டியன் என்ற பேரா சுமதியின் கவிதை தொக்குப்பான "அருகன்" நூல் வெளியிடப்பட்டது. வழக்கம்போல தமிழச்சி, சந்திரசேகர், மற்றும் நண்பர்கள் வரவேற்க, வழக்கம்போல , சிற்றுண்டி,தேநீர் ஆகியவற்றுடன் அவர்கள் குடும்ப வழமை உபசரிப்பில் சிக்கியபின், மாடி ஏறி அரங்கிற்குள் நுழைந்தோம். கலாப்ரியா என்ற சோமசுந்தரம் முதல், ஓவியர் மருது,வி.மங்கை,அரசு,தங்கம் தென்னரசு, ஜெயராம், ஆயிரம்வில்லக்கு ஹுசைன்,அமீர் அப்பாஸ்,லல்லி, சரஸ்வதி, ராஜேந்திரன், பாமரன், அமுதன்,கார்திகைசெல்வன், கோசல்ராம், எஸ்.பி.லட்சுமணன்,இளையபாரதி, எல்லோரையும் ஒருசேர கண்ட மகிழ்ச்சியை விட, ஸ்ரீஜித் தான் டில்லி நாடக பள்ளியில் செர்கப்பட்டுள்ளேன் என்று கூறிய செய்தி அதிகம் இனித்தது.

உள்ளே பேரா.ராமானுஜம் நடத்திய அரங்கேறும் கவிதைகளின் "நிகழ்த்துகலை" வழக்கம் போல உள்ளம் கவர்ந்தது. பின்னால் பேசிக் கொண்டு இருந்தவர்கள், கைபேசியில் உரக்க பேசியவர்கள் ஆகியோரை வழக்கம்போல வி.அரசு கோபப்பட்டு திட்டியதும் ஒரு சுவைதான்.ரவி தனது கர்நாடக இசை வழியில்,ஒரு கவிதையை பாட கொஞ்சம் மெய்மறந்தோம். நடிகை ரோகினி கவிதையை வாசிக்க முயன்றார்.அதுவும் ஒரு அழகுதான். அதன்பின் ராமானுஜத்தின் மாணவ, மாணவிகள் அவர் வீட்டு குழந்தைகள் ஆடி, பாடி ஒவ்வொரு கவிதையையும் உயிர் கொடுத்து அவைக்கு காட்ட, அதை மங்கை எடுத்து சொல்ல, எனக்கு பக்கத்தில் அவர்கள் ராமானுஜத்தின் பயிற்சி பெற்ற எங்க ஊர் { தஞ்சாவூர்} குழந்தைகள் என்று அரசு கூறி கொண்டே இருந்தார். நால்லாதான் இருந்தது.

புத்தகம் வாங்கிய உடனே கலாப்ரியா என்னிடம் தான் முன்னுரை எழுதியிருக்கிறேன் என்று கூறியிருந்ததால் அதை முதலில் படித்தேன்."வார்த்தைகளால் கவரப்பட்ட மவுனம்" என்ற தலைப்பில் எழுதியிருந்தார்.கவிதை நூலிற்குள் சென்றேன். "மியூசிகல் சேர்" என்ற கவிதை "காளியாய் இருக்கின்ற இருக்கைகள்" என்று தொடங்கி , எழுதப்பட்ட ஒவ்வொரு வரியும் ஆங்கில பேராசிரியராய் இருந்தவர் தலைவர் கூறியதை நம்பி, கழகத்தில் சேர்ந்து, முதல் தொடக்கமே இளைஞர் மாநாட்டில் எங்கள் ஊரில் {நெல்லையில்} கொடி ஏற்றி பெருமை சேர்த்தாலும், அதன்பின் வந்த ஒவ்வொரு வாய்ப்பிலும் இருக்கைகளை தவற விட்டதை எண்ணி பார்த்ததால் அது இதற்கு பொருந்துமா என பார்ப்பது "அதிகப் பிரசங்கித்தனம்" என்பதால் எனக்கு அந்த பொருத்தி பார்க்கும் வேலை வேண்டாம் என இருந்து விட்டேன்.

அந்த மே 18 2010 கவிதை முந்தைய ஆண்டின் நிகழ்வை நினைக்காமல் அன்றாட வாழ்க்கையை இயந்திரம் போல கழிக்கும் நடுத்தர வர்க்கத்தை "தன் சாடல்" செய்வதை அமைந்திருந்தது. "அன்றும் எழுந்தோம், பல் துலக்கி, உடை உடுத்தி," என்று துவங்கும்போது, ஜூலியஸ் பூசிக் தனது "தூக்குமேடை குறிப்புகளில்" சிறைக்கு வெளியே நடக்கும் மனிதர்கள், சந்தை, ஆகிய அன்றாட வாழ்க்கை பற்றிய விவரிப்பு நினைவுக்கு வந்தது. "முள்ளிவாய்காலை மறந்து" என்று அவர் கூறியிருந்தாலும் அரசியல் நிகழ்வுகள் உலகில் அதை மறக்க விடவில்லை. "எள்ளுபூ நாசியும், அரேபிய தேசத்தின் வாசனை திரவியமும்" என்ற கவிதையில், அந்த ஆப்கான் "ஆயிஷா" பாலின உறவுக்காக "மூக்கறுபட்டதை" நிகழ்த்து கலையில் அப்படியே காட்டி கவிதை உரையில் இரத்தம் உறைய வைத்து விட்டார்."எங்கெல்லாம் ஒரு பெண் அநீதியாக வதைக்கப்படுகிறாளோ ", "அங்கெல்லாம் அறுபட்ட உனது மூக்கின் எச்சங்கள் நீதிக்கு முன்னால் சென்று முறையிடட்டும் " என்ற வரிகள் "கவித்துவம்" இருக்கிறதா என்ற கவலையை விட்டுவிட்டு, "ஆவேசம்" இருத்தல் வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்துகின்றன. செய்திகளில் இருந்து எடுத்து "வழித்து போடுவது" அவரது பாணி. "எங்கள் சூர்பனகையின் அறுபட்ட முலையும், மூக்கும், இத்தனை யுகங்களுக்கு பின்னரும் உன்னில் தொடரும்" என்ற வரிகள் "எல்லா காலத்திலும் , எல்லா நாட்டிலும் இப்படிதானா?" என்று எண்ணுவதற்கு பதில் "அந்த இராமாயண காலநிலம்தானே இன்றைய ஆப்கானும் " என்று என்ன தோன்றுகிறது. அதில் ஒரு ஆரிய வாடை இருக்கிறதோ? அதைத்தான் பார்பனீயம் என்று நாம் "பாலின ஒடுக்கலாக" புரிந்து கொள்கிறோமோ? இத்தனை சிந்தனைகளை அந்த வரிகள் நமக்கு எடுத்து கொடுத்தது.


" இலக்குவனின் ஆண்திமிரை ,அரேபிய தேசத்தின் அத்தனை வாசனை திரவியங்களும் மறைக்கமுடியாது தோற்றோடும்". இப்படி எழுதியவர் இன்று சவுதியில், இராக்கில், இரானில், சூடானில் என பெண்கள் வாகனம் ஒட்டவும், வாக்கு அளிக்கவும், அதிகாரத்திற்கு போட்டி போடவும எத்தனை கடினங்களை சுமந்து போராடி அந்த உரிமைகளை பெற்று இருக்கிறார்கள் என்று எண்ண தோன்றுகிறது.முள்ளிவாய்க்கால் குறித்து மேக்கப் கவிதை எழுதியதாக குறிப்பிட்ட தோழருக்கு என்று ஒரு கவிதை.அதன் பெயர் "கழு மரம்". "ஏன் கண்ணீரின் உப்பை கண் மையை கொண்டு வடிகட்டாதீர்கள்". " உள்ளக் குமுறலை உதட்டு சாயத்தை வைத்து அளவிடாதீர்கள்". "ஏன் கவிதையை மட்டும் கொஞ்சம் தணிதிருக்க விடுங்கள்".இப்படி எழுதிய சுமதியை யார் புரிந்து கொள்ளாவிடினும் அந்த ஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந்தாலும் புரிந்து கொண்டுள்ளனர்..


பேரறிவாளன் அம்மா அற்புதமாளுக்கு என்று " அவ்வெண்ணிலவில்"என்று தலைப்பிட்டு எழுதியுள்ளார். அதில் "தன் இளமையை தனிமையில் தொலைக்கப்போவதர்கான அறிகுறிகள் அற்று, அவன் தனது பத்தொன்பதாவது பிறந்த நாளை கொண்டாடி இருந்தான். முன்னேச்சரிக்கையற்ற இருட்குகை ஒன்றில்,எதிர்காலம் இடறிவிழுந்தபோதும் கூட, அவனது அடுத்த பிறந்த நாளுக்கான இனிப்பை அவனது அம்மா நம்பிக்கையோடு தயாரித்த படி, இருந்தாள்". இந்த வரிகள் "அற்புதம்மாலை" அப்படியே படம்பிடித்து காட்டுகின்றது. "கருணை மனுக்கள் மீதும் நம்பிக்கை இழந்த அவள்,இறுதியாக தன் வயோதிகத்தை கொஞ்சம் தள்ளிப் போடும்படி காலத்திடம் கருணை கூறியிருக்கிறாள்". இந்த வரிகள் தமிழச்சிக்கு ஒரு குறிப்பிட்ட நிலைமையை சொல்லுமானால், நமக்கு, அதுவும் "தெருப்பாடகனுக்கு" வேறு வார்த்தைகளை "கோர்த்து " கொடுக்குமல்ல்லவா? "கருணை ஒரு ஆளின் பெயர் அல்ல. அது சட்டப்பேரவை தீர்மானம். கருணை நிதியை என்றுமே தேடவில்லை.அது நீதிமன்றத்தில் அரசின் பதில்மனுவாக வந்து விழுந்தது".இது தெருப்பாடகனின் கூற்று. அது "வந்து விழுந்த திசையை நோக்கி, இன்று அந்த தாய் கண்ணீர் மல்க நன்றி சொல்கிறார்". இதுதான் அந்த "எசப்பாட்டின்" குரல்..


"அவங்கவங்க வீட்டுக்கு, அவரைக்காய் சோத்துக்கு".இப்படிஒரு தலைப்பு. "அக்கரையில் இருக்கும் அத்தீவில் எள் அள்ளி தெளிக்காப்ல, எங்கேயும் விதவைகள் தானாம்""கருப்பைகளும், முலைகளும் அற்ற ஒரு மொண்ணை பிறப்பிருந்தா, ஒரு வேளை, கோநேஸ்வரியும், பென்னம்பேரியும்,அங்கே அச்சமின்றி மீண்டும் பிறக்கலாம். காதலை போல, போருக்கும் வயதில்லை. கைமைக்கும் கூடத்தான்".இந்த வரிகள் அங்கே உள்ள போரின் விளைவில் பெண்களை, விவதைகளை எப்படி கூட்டம், கூட்டமாக ஆக்கி கொடுத்துள்ளது என்பதை நம் கண் முன்னால் கொண்டுவந்து நிறுத்தி நிலை குலைய வைக்கிறது. இந்த அளவுக்கு இந்த தொகுப்பு அன்னை எழுத வைத்து விட்டது..


"e

Wednesday, January 4, 2012

ஆங்கில ஏடுகளின் பாலின இம்சை.

இன்று காலை ஏடுகளில் வந்துள்ள செய்திகளில் டில்லி பாடியாலா ஹவுசில் இருக்கும் சீ.பி.அய். நீதிமன்றத்தில் நடக்கும் இரண்டாவது அலைவரிசை ஊழல் வழக்கில் சிறைக்குள் உள்ள ஆ.ராஜாவை பற்றி அவரது முன்னாள் உதவியாளர் ஆசிர்வாதம் ஆசாரி கூறிவரும் செய்திகளையும், அவற்றை ராஜா மறுப்பதையும், சீ.பி.அய். மீது ராஜா குற்றம் சாட்டுவதையும், அதற்கு ஆசீர்வாதம் மறுப்பு கொடுப்பதையும் ஒட்டி, எழுந்துள்ள வாத, பிரதிவாதங்களை "சூடாக" போடுவதில், தொடர்ச்சிகாட்டியுள்ளன. சரி. அவர்களுக்கு அந்த ஊழல் சம்பந்தப்பட்ட வழக்கும், அதன் விசாரணையும் "சுவை" யானதாக இருக்கும் அதனால் அவற்றை வெளியிடுகிறார்கள். அதுபோன்ற சுவைகளை வாசகர்களும் ஆர்வமாக படிப்பார்கள், அதனால அவற்றை வெளியிடுவதில் இரட்டிப்பு மகிழ்ச்சி என்பது நமக்கும் புரிகிறது.

அந்த விவாதத்தில் இன்று ராஜா, அந்த ஆசீவாததிடம் கூறியதாகவும், அல்லது ராஜா சென்ற இடமெல்லாம் தனக்கு தெரியும் என்ற ரீதியில் ஆசீர்வாதம் எடுத்த "வாந்தியையும்" எழுதியிருக்கிறார்கள். சரி. அதுவும்கூட, ராஜா மீது குற்றம் சாட்டும் கூட்டத்திற்கு தேவைதான் என்பதால் எழுதுகிறார்கள் என்று வைத்து கொள்வோம். இந்த ஆசீர்வாதம் பற்றி ஏற்கனவே சென்ற ஆண்டே அதாவது 2009 இலேயே நாம் எழுதி இருந்தோம்.அதாவது இந்த ஆசீர்வாதம் உண்மையில் ராஜாவின் உதவியாளராக இருந்த போது, ரயில்வே துறையில் அதிகாரியாக இருந்தவர் என்பதும், ஏதோ தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்பதால் ராஜா அவரை நம்பி தனது உதவியாளராக போட்டார் எனபதும், அவர் திருச்சி மாவட்ட லால்குடி ஊரை சேர்ந்த உடையார் சமூக பின்னணி கொண்டவர் எனபதும், அவரை "தயா" அழைத்தார் எனபதும், அவரும் ராஜா வீட்டில் உள்ள போடோ படங்கள் உட்பட வெளிநாட்டு காரர்கள் உடன் ராஜா எடுத்து கொண்ட படங்களுடன் "தயா தயவு" நாடி சென்று விட்டார் எனபதும் நாம் ஏற்கனவே அப்போதே எழுதி இருந்தோம். அவரைத்தான் இப்போது சீ.பி.அய்.கொண்டுவந்து ராஜாவிற்கு எதிராக நிறுத்துகிறது என்பதிலிருந்து நீங்களே புரிந்து கொள்ளவேண்டியது ஏராளம்.


ஆனால் அதற்காக இன்று ஏடுகளில் நேற்று நீதிமன்றத்தில் ஆசீர்வாதம் கூறியதாக, ஆ.ராஜா யாரையெல்லாம் நேரில்போய் அவ்வப்போது சந்திப்பார் என்ற விவரங்கள் கூறப்பட்டுள்ளன. அதில் பல திமுக எம்.பி.களையும் அவ்வப்போது சந்திப்பார் என்றும், கோயங்கா உட்பட, கார்பொரேட் முதலாளிகளையு, அதிகாரிகளையும் சந்திப்பார் என்றும் கூறியுள்ளார். அப்பை கூறும்போது, கனிமொழியையும் அவரது வீட்டில் போய் சந்திப்பார் என்றும்கூறியுள்ளார். இதில் ராஜா சந்தித்த திமுக எம்.பி.கள் பட்டியலில் கனிமொழியும் வருகிறார். இதில் ஒன்றும் புதிய செய்தி இல்லை. ஆனால் கனிமொழி திமுக தலிவரின், மற்றும் தமிழக முதல்வரின் மகள் என்ற காரணத்தால் அந்த சந்திப்பில் "ஆரசியல் சதி" இருக்கலாம் என்று கூற எத்தனிப்பதும் கூட நடக்கும். ஆனால் அந்த ஆச்செர்வாதம் என்ற ஒய்வு பெற்ற ரயில்வே அதிகாரி கூறும்போது, கனிமொழியை வீட்டில் சந்திக்க போகிறேன் என்று ராஜா சொல்லி சென்றுள்ளார் என்றும் கூறுகிறார். அது ராஜாவின் "தந்திரம்" என்று யாரும் எண்ணிப்பார்க்கவில்லை.


தான் செய்யும் காரியங்களுக்கு ஒரு அமைச்சர் அதனது தலைவரின் "ஒப்புதல்" இருக்கிறது என்று காட்ட விரும்பி இருக்கிறார். அது இந்த " மூட கிழவனுக்கு" புரிந்ததா என்பது நமக்கு தெரியாது. ஆனாலும் ஏன் ஒரு அரசியல் முக்கியத்துவ பிரமுகரை சந்திக்க செல்வதை ராஜா என்ற மனிதர் சொல்லி செல்கிறார் என்று எண்ணினால் புரிந்து விடும். அதையும் தாண்டி, ராஜா கனிமொழியை சந்திக்க செல்லும்போது, "தொந்திரவு" செய்யவேண்டாம் என்று கூறியதாக இந்த ஆசீர்வதாம் கூறியுள்ளார். இந்த கூற்றில்தான் "பாலின இழிவுபடுத்தல்" இருக்கிறது. ஒரு ஆண், ஒரு பெண்ணை சந்திக்க சென்றால் இந்த "ஆணாதிக்க" உலகத்திற்கு அது "வக்கிரபுத்தியுடன் தான்" தெரியும். அதிலும் ஒன்று ஆசீர்வாததினுடைய புத்தியோ, அல்லது அவர் சொல்வது உண்மையானால் ராஜாவினுடைய புத்தியோ "வக்கிர" சிந்தனைக்கு வழி வகுக்க வேண்டும் என்றே கூறப்பட்டதாக இருக்க வேண்டும். திமுக கட்சிக்குள்ளும், ஆட்சியிலுள்ள அய்.மு.கூ. ஆட்சிக்குள்ளும் தான் முக்கிய பிரமுகர்களுடன் நெருக்கமான தொடர்பில் இருப்பதாக காட்டிக் கொல்வது ராஜாவிற்கு "தேவைப்ப்பட்டிருக்கலாம்".

அதாவது தான் செய்யும் "கள்ள" காரியத்தை மறைக்க ராஜாவிற்கு முக்கிய இடத்தில் தான் இருக்கிறேன் என்று கூறவேண்டிய "கட்டாயம்" இருந்தது என்பது நமக்கு புரிகிறது. ஏன் அப்படி? முதலில் "தான்தான்" அந்த அய்.டி.அமைச்சராக வந்து "கால்வாங்க" போகிறோம் என்றால் அபப்டி ஒரு "தேவை" வந்திருக்காது. ஆனால் ஏற்கனவே இந்த "தொழிலில்" கேட்டிகார்ராக செயல்பட்ட "தொழிலில் வெற்றி பெற்ற" ஒரு அமைச்சர்னா தாயாவிடம் இருந்து தலைவர் கலைஞர் "தன்னிடம்" இந்த களவாணி இலாகாவை "பிடிங்கி" கொடுத்துள்ள நிலையில் அதில் களவான்கும் போது, தான் பெரிய இடத்து "ஆள்" என்று காட்டவேண்டிய புத்தி ராஜாவிற்கு இருக்கும் என்பதை நாம் புரிந்துய் கொள்ள வேண்டும்.அதனாலேயே ராஜா, கனிமொழி வீட்டிற்கு செல்லும்போது அப்படிகூற முற்பட்டுள்ளார். ஆனால் அதை இந்த ஏடுகள் எப்படி புரிந்து கொள்ளவேண்டும்?

ஆணாதிக்க வெறி பிடித்த ஆங்கில ஏடுகளும், அதில் சில குறிப்பிட்ட ஏடுகளில் உள்ள அரசியல் சக்திகளின் எடுபிடிகளும் அந்த செய்தியை படு அசிங்கமாக் போட திர்ஹயர எனபதை காட்டியுள்ளன. உதாரணமாக டெக்கான் கிரோனிகள் என்ற ஆங்கில ஏடு இன்று காலையில், அந்த செய்தியை முதல் பக்கத்தில், " தொந்திரவு செய்யாதீர்கள், அவர்கள் ஒன்றாக இருக்கும்போது" என்பதாக வெளியிட்டுள்ளது. இது கேவலமான ஒரு "ஆணாதிக்க வெறி பிடித்த" அரசியல் சதிகாரர்களின் செயல்பாடு எனபது எத்தனை பேருக்கு தெரியும்? இத்தகைய வெளிப்பாடு. வரும்போது, அதை இந்த சமூகம் எதிர்க்க வேண்டும். தளபதி ஸ்டாலினுக்கு வேண்டியவர்கள் அந்த குறிப்பிட்ட ஏட்டில் இருக்கலாம். அது வேறு. அந்த ஏட்டின் முக்கிய ஆள், கனிமொழியுடன் ஒரு காலத்தில் நண்பராக இருந்தவர் இல்லையா? என்றும் மக்கள் கேட்கிறார்கள். அப்படி இருந்தும் ஏன் இப்படி எழுதுகிறார்கள்?


ஒரு பெண் பிரபல அதிகாரம் படைத்த குடும்பத்தில் இருந்து வரும்போது, அவர் எளிதில் சாதரணமாக மக்களுடன் பழகும் நற்குணத்தை கொண்டிருக்கும் போது, அவருடன் "இலக்கியம்" பேசிக்கொண்டும், "பெண்ணுரிமை" பேசிக் கொண்டும் ஒரு ஆண் தன்னையும் பிரபலமாக ஆக்குவதற்கு பழக முடியும். அது "அறிவுஜீவிகளின்" நட்பு என்று இந்த ஆணாதிக்க உலகம் சொல்லிவிடும். அதே பெண் அதிகாரம் இழந்ததாக் கருதப்படும் சூழலில், "திஹார் சிறையில்" மாட்டும் போது, அவரை பற்றி இழிவாக எழுத,பேச இந்த உலகம் தயார் என்றால் இது எப்படிப்பட்ட உலகம்? ஒரு எழுத்தாளன் அந்த பெண் பெயரை சொல்லி தன்னை பிரபலப்படுத்தி கொள்வான், அதேசமயம் அந்த பெண் சிறையில் வாடினால் நக்கல் செய்து எழுதுவான். அவன் எந்த வகை? இப்போது இப்படி ஆங்கில ஏட்டில் எழியுல்லவர் எந்த வகை? அத்தகைய சூழலை ஏற்படுத்தி தான் செய்யும், அல்லது செய்த தவறுகளுக்கு "பிரபல பிரமுகர்களுடன் நெருக்கம்" என்ர்பதுபோல சித்தரிக்கும் அரசியல்வாதி எந்த வகை? இவர்களை கேள்வி கேட்டு "திணறடித்து" அதன்மூலம் அம்பலப்படுத்தும் வேலையை செய்தால் மட்டும்தான் "பெண்ணியம்" பேசும் பெரியார் மண் நிம்மதி பெறும்.

Monday, January 2, 2012

தானே வந்ததா? தானே கொண்டுவந்ததா?

"தானே" என்றொரு புயல் வந்தது. ஜெ ஆட்சியில் இந்த புயலினால் வந்த சேதங்களை ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளவில்லை என்பது முரசொலியின் அறிவிப்பு. நமக்கு தெரியும் இந்த முறை மட்டும்தான் புயல் வ்ருவதற்கு இரண்டு நாட்கள் முன்பே, அரசு அறிவித்து குறிப்பிட்ட நாளில் புயல் வரும் அதுவும் ஒவ்வொரு கடற்கரை ஓரமும் எந்த அளவில் வரும் என்று "எண் கூண்டு எட்டு, பத்து, பதினொன்று" இப்படி அறிவிப்பு கூண்டுகள் ஏற்றப்பட அதை காட்சி ஊடகங்கள் படம் பிடித்து காட்ட, நாமும் அடஹ்ற்கான விளக்கத்தை எடுத்து சொல்லி வந்தோம். இப்படி முன்கூட்டி சொல்லியும் கூட, இயற்கை தனது கோபாவேசத்தை கட்டாமல் விட்டு விட்டதா? என்றால் இல்லை.

அந்த புயலால் அதிக பாதிப்பு புதுச்சேரிக்கு என்றால், அதன் ஒட்டிய பகுதியான கடலூருக்கு அதிக பாதிப்பு இருந்தே ஆகும் என்பது கண்கூடு. ஆதியோ சிறிது பார்ப்போமா? குள்ளஞ்சாவடி, குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, சமுட்டிகுப்பம், ராமாபுரம், வழிசொதனை, பாளையம், ஆகிய ஊர்களில் முழுமையாக "முந்திரி தோப்புகள்" மழை வெள்ளத்தில் அடியோடு அழிக்கப்பட்டு, இனி இருபது ஆண்டுகளுக்கு முந்திரி தோப்பே இருக்காது என்ற ம்னயுலமை உருவாக்கி உள்ளது. இது விளையாட்டல்ல. முந்திரி தோப்புகள் எப்போதுமே நடப்பட்டு, இருபது ஆண்டுகள் கழித்துதான் விளைச்சலை கொடுக்கும்,. இப்போது இருக்கும் முந்திரி தோப்புகளின் அழிவு என்பது அடியோடு வேரோடு பிடுங்கி அழிந்திருக்கும் நிலையில், இனி அடுத்த தலைமுறை அந்த முந்திரி தோப்பையே காண முடியாத ஒரு சூழல் ஏற்பட்டுள்ள்து. ஆண்டுக்கு அறநூறு மூட்டை முந்திரி விளைந்துவந்த ஒரு பகுதியில் அது அழிக்கப்படுவ்து எத்தனை பெரிய விஷயம்? இது மாபெரும் இழப்பு
.

இது தவிர பண்ருட்டி பகுதியில் "பலா மரங்கள்" அடியோடு சாய்ந்துள்ளன. நெல் வயல்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன,. பலா, வாழை தோட்டங்கள் அப்படியே கவிழந்துள்ளன.தாழங்குடா என்ற மீனவ கிராமத்தில் "நூறு கண்ணாடி இழைப்படுகுகளை" காணவில்லை. மழையும், புயலும் அடித்து கொண்டு சென்று விட்டன. தேவனாம்பட்டினம் என்ற இன்னொரு மீனவ கிராமத்தில், 5000 தலைக்கட்டு மீனவர் வீடுகள் உள்ளன. அவை அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன. அனைத்து படகுகளும் அழிக்கப்பட்டுள்ளன. வளைகள அனைத்ஹ்டும் காணாமலும், அழிக்கப்பட்டும் போய்விட்டன. கண்ணாடி இழைப்படகுகள், பெய்ய படகுகள் எனப்படும் "நாற்பத்திரண்டு அடி " படகுகள் அழிக்கப்பட்டுள்ளன. "ஆயிரத்து இரநூறு" வலைகள் அழிக்கப்பட்டுள்ளன. மீனவர் வாழ்வாதாரம் முழுமையாக அழிக்கப்ட்டுள்ளது.


ஒரு வலை நாற்பதாயிரம் ரூபாய் என்ற விலையுள்ள "சுருக்கு வலைகள்" ஐந்து கோடி ரூபாய்க்கான வலைகள் அழிந்துள்ளன. ஆனால் அவை அதாவது சுருக்கு வலை என்ற வலைகள் "தடை" செய்யப்ப்பட்ட வலைகள். அதாவது அவை கடலில் எல்லாவற்றையும், அதாவது மணல் வரை அரித்து, எடுத்து கொண்டு வந்துவிடும். ஆகவே அது பயன்படுத்துவது "கடல் செல்வத்தை" அழிக்கும் போக்கு என்பதால் தடை செய்யப்பட்டுள்ளது. இது மீனவர்களுக்கும் தெரியும். தேவனாம்பட்டு மீனவ கிராமத்தில் அந்த தடை செய்யப்ப்பட்ட சுருக்கு வலைகளை பயன்படுத்த கூடாது என்றுதான் முதலில் கடுமையாக நிறுத்தி வைத்தார்கள். அதை எதிர்ஹ்து வந்தார்கள். ஆனால் "மீன்வள துறை"யின் முழுமையான் அஆதரவில் சில மீனவர்கள் மட்டும் அதை பயன்படுத்தி வந்தார்கள்;. அதாவது மீன்வள துறையின் அதிகாரிகள் சிலர் செய்த சேட்டை அது. அதனால் மற்ற மீனவர்கள் பாதிப்புக்கு உள்ளாகினர். அதன் பிறகே வேறு வழி இன்றி அந்த கிராமத்தில் பல மீனவர்களும் இந்த இயற்கைக்கு விரோதமான வலையை பயன்படுத்த தொடங்கினர்.



முழுக்க, முழுக்க, அரசு அதிகாரிகளின் ஊழல் போக்கால் ஏற்பட்ட இந்த விபத்தை இப்போது வந்த "தானே" விபத்திற்கு பிறகாவது "கைவிட" வேண்டும் என்று மீன்வள துறை கடுமையான் அண்டவடிக்கையை எடுக்குமா? அரசியல்வாதிகளும்,. அதிகாரிகளும் "லாபம்" ஈட்ட தடை செய்யப்ப்பட்ட வலைகளான, "சுருக்கு வலை, இரட்டைமடி வலை" ஆகியவற்றை பயன்படுத்த அனுமதிக்கும் கடல் பற்றிய சிந்தனையே இல்லாத மீன்வள திர்ஹுறை அதிகாரிகளை கண்டித்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இப்போதைய மீனவ நட்பு அரசு நடவடிக்கை எடுத்து கடலை காலம் பூராவும் பயன்படுத்த மீனவர்களுக்கு உதவும் பொருட்டு "தீவிரமாக" செயல்பட வேண்டும்.

Sunday, January 1, 2012

இந்தி ஒரு அந்நிய மொழி-உயர்நீதிமன்ற உத்தரவு.

பெரியார் மண்ணான தமிழ்நாட்டில் 1938 ஆமாண்டு தனத்தை பெரியாரால் துவங்கி வைக்கப்பட்ட இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம், 1965 இல் மாணவர்களால் நடத்தப்பட்டு, அதனாலேயே ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, அதன்பின் இன்றுவரை இந்தி மொழியை உள்ளே விடாத தமிழ்நாட்டின் நீதிமன்றங்கள் அப்படி ஒரு உத்தரவை போட தீரமிக்க நிலையில் உள்ளதாக நீங்கள் தப்பு கணக்கு போட்டுவிட வேண்டாம். தமிழ்நாட்டில் உய்ரநீதிமன்ர நீதியரசர்களாக அதுவும் தலைமை நீதியரசர்களாக வருபவர்கள் அனேகமாக வட இந்திய இந்தி பேசும் மாநிலத்தவர்களாக ஐருப்படு வழமை. ஆனால் இந்த உத்தரவு குஜராத் நீதிமன்றத்திலிருந்து வந்துள்ளது.


ஐந்து நாட்கள் முன்னால், சென்ற ஆண்டின் கடைசி நாட்களில் டிசம்பர் 29 இல் குஜராத் நீதிமன்றத்தில் நீதியரசர் வி.எம்.சஹாய், இப்படிஒரு தீர்ப்பை கொடுத்துள்ளார். அதாவது இந்தி மொழி ஒரு அந்நிய மொழி. குஜராத்தில் நம்ம ஊர் போலவே "தேசிய நெடுஞ்சாலை துறை" இரண்டு வழி சாலையை நான்கு வழி சாலையாக மாற்ற ஒரு திட்டத்தை முன்வைத்தது. அந்த திட்டத்தை பணம் படைத்தவர்கள், அந்த வட்டாரத்தில் செல்வாக்கு மிக்கவர்கள், ஜனகத், ராஜ்காட் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த நெடுஞ்சாலை ஓரத்தில் நிலங்களை அனுபவிப்பவர்கள், அரசிடம் கூறி அல்லது லஞ்சம் கொடுத்து, மாற்றி பல ஏழை விவசாயிகளுக்கு மட்டும் பாதிப்பு வரும் வகையில், புதிய திட்டத்தை அறிவ்த்தார்கள். அதை அந்த இந்திய தேசிய நெடுஞ்சாலை அதிகாரம் என்ற என்.எச்,ஏ.அய். கிராம மக்களுக்கு புரியும் குஜராத் மொழியில் அனுப்பாமல் இந்தியிலும், ஆங்கிலத்திலும் அனுப்பி உள்ளனர்.

அதை விளங்கி கொள்ள முடியாத ஜனகத் மாவட்ட சரகடா கிராம விவாசயிகள் தேசிய நெடுஞ்சாலை சட்ட பிரிவு மூன்றில் "அ " பிரிவில் மூன்றாம் எண்ணில் கூறியுள்ளபடி,வட்டார மொழியில் உத்தரவு இருக்கவேண்டும் என்ற உரிமையை கோரி நீதிமன்றம் சென்றார்கள். அதற்குதான் அந்த நீதியரசர் சஹாய், குஜராத்தில் ஆரம்ப பள்ளிகளில் கற்று கொடுக்கும் மொழி குஜராத்தி மொழிதான் என்றும் ஆகவே அந்த மக்களுக்கு புரியாத மொழியான இந்தி மொழி அவர்களுக்கு அந்நிய மொழி என்றும் தீர்ப்பு கூறி, இந்தியில் வெளியான ந்த நெடுஞ்சாலை துறையின் உத்தரவை செல்லாது என அறிவித்து விட்டார். பழைய திட்டத்தை நிராகரிக்கவும் மறுத்து விட்டார்.

இது இந்தி பேசாத மாநிலங்களுக்கு ஒரு வாய்ப்பான தீர்ப்பு.உடனேயே இந்தி பேசாத தென் மாநிலங்கள், வட கிழக்கு மாநிலங்கள், மேற்கு மாநிலங்கள், வடக்கு மாநிலங்கள் ஆகியவற்றின் எம்.பி.கள் இணைந்து குரல் கொடுத்து இந்தி மொழி திணிப்பை எதிர்த்தால் அவர்கள் கோரும் மாநிளுரிமைகளில் ஒரு சிறு முன்னேற்றம் கிடைக்கும்.