Thursday, November 17, 2011

நார்வே வெளியிட்ட அறிக்கைப்படி டில்லியும் ஒரு போர்குற்றவாளியே

நார்வே வெளியிட்ட அறிக்கைப்படி டில்லியும் ஒரு போர்குற்றவாளியே
இரண்டாண்டுகளுக்கு முன்பு தமிழீழ விடுதலைப் புலிகளை வென்றதாக கொக்கரிக்கும் இலங்கை அரசு, வன்னியில் ஒரு தமிழின அழிப்பு போரை நடத்தியது என்பது இன்று அனைத்துலக சமூகத்தால் ஏற்றுக் கொல்லப்பட்ட செய்தி. அந்த்ச இன அழிப்பு போரில் ஈடுபட்ட எழு நாடுகளை பற்றிய செய்தியும் வெகுவாக அம்பலமாகி உள்ளது. அந்த எழு நாட்டு பின்புலத்தில், தெற்காசியாவின் வல்லரசு நாடாக இருக்கும் இந்திய அரசின் செயல்பாடும், மவுனமும் எந்த அளவுக்கு ஈழ இன அழிப்பு போரில் செயல்பட்டுள்ளது எனபதை நார்வே நாடு இப்போது தனது அறிக்கையாக கொடுத்துள்ளது.

அந்த அறிக்கை இந்திய பேரரசை நேரடியாக குற்றம் சாட்டியுள்ளது. ஈழ விடுதலை போரில் பல ஆண்டுகளாக சமாதான முயற்சியில் ஈடுபட்ட நார்வே நாட்டின், அமைச்சர் எரிக் சொல்டீம் இந்த அறிககையை முன்வைத்துள்ளது சாலப் பொருத்தமானது. முக்கிய நேரங்களில், போரின் முக்கிய நேரங்களில், இந்திய அரசு தலியிட்டு, விடுதலைப் புலிகள் காப்படர்ப்பட்டுவிடக் கூடாது என்பதில் இந்தியா கவனமா ஐருன்தது என்பதே நார்வேயின் வெளிப்படுத்தல். காங்கிரஸ் அரசு வந்த பிற்பாடு, ஈழ விடுதலையை ஒடுக்குவதில் காங்கிரஸ் அரசு அதிக கவனத்தை எடுத்துக் கொண்டது என்பதும் நார்வே அரசின் அம்பலப்படுத்தல். குறிப்பாக தமிழக அரசியல்வாதிகள் எப்படி தங்கள் சொந்த நலன், சொந்த விருப்பம், சொந்த மதிப்பீடு ஆகியவற்றை வைத்துக் கொண்டு அந்த போரின் கடைசி க்ட்டத்தில் விடுதலைப் புலிகளையும், தமிழீழ மக்களையும் தனிமை படுத்தி சாகடிப்பதில் கவனமாக இருந்தது எனபது அந்த அறிக்கையில் வெளிப்படுகிறது.


இனி போர்க்குற்றவாளி மஹிந்த ராஜபக்சே என்று மட்டும் கூறுவதை விடுத்து, இந்திய அரசையும் சேர்த்து நாம் முழங்க வேண்டும் என்று நம்மை அழைப்பது போல இந்த நார்வே அறிக்கை அமைந்திருக்க வில்லையா?.