Wednesday, November 2, 2011

தந்தை செல்வாவின் சிலையின் "தலையறுத்த" சிங்களம் போருக்கு அழைக்கிறதா?

எங்கள் தம்பிகள் "துவக்குகளை" மௌனித்து விட்டார்கள். அது தற்காலிகமானதுதான். இன்று உலக அரசியல் அரங்கில் தம்பிமார்கள் "தலை" நிமிர்ந்து நிற்கிறார்கள். சிங்களமே, உனக்கு தமிழீழத்தின் அரசியல் போராட்டம்தான் அதிக "அச்சுர்த்தலை" ஏற்படுத்துகிறது எனபது எங்களுக்கு தெரியும். சிங்களமே, நீ எங்கள் ரத்தங்களின் "வடக்கையு, கிழக்கையும்" ஆக்கிரமித்து கொண்டுள்ளாய் என்பதை நாங்கள் மறக்கவில்லை. நீ தமிழர்களின் வரலாற்றை நினைவு படுத்தும் "கலைப்போருல்களை" களவாண்டு விற்பது எங்களுக்கு தெரியும். நீ தமிழர் "காணிகளில்" ஆக்கிரமித்து கொண்டு இருப்பதும் எங்களுக்கு தெரியும்.

இந்திய பேரரசு தனது பசிக்கு தமிழர உயிரை புசித்து தின்றது என்பதை உலக அரங்கில் நாங்கள் சொல்லி வருகிறோம். அதனால் திணறிப் போன இந்திய அரசு ௫௦௦௦௦ வீடுகளை கட்டி தருவதாக வாக்கு கொடுத்தது. அதை நிறைவேற்ற விடாமல் "மகிந்தா" அரசாங்கம் சித்து விளையாட்டு விளையாடியதையும் நான்கள் அறிவோம். வீடு கட்டினால் அதை தமிழரிடம் கொடுத்தால் மீண்டும் தமிழ்ர் நிலம் "தாய் நிலம்" ஆகிவிடுமோ என்று சிங்களம் பயந்ததா என்பது எங்களுக்கு தெரியாது. அதனால் வீடு அகட்டி கொடுப்பதற்கு பதில் அதையே "பணமாக" கொடுத்து விடுங்கள் என்று சிங்களம் கேட்டதாம். இந்திய அரசும் ஒப்புக் கொண்டதாம். எண்ண வேடிக்கை. இந்தியாவே வாக்கு கொட்த்தபடி வீடுகளை கட்டி கொடு என்ற குரல் எழும்பட்டும். பணத்தை ஏழ்மையில் இருக்கும் தமிழர்கள் "வடக்குக்கும், கிழக்குக்கும்" வந்தேறிய "சிங்கள வணிகர்களிடம்" கொடுத்து விட்டு வெறும் கைகளுடன் நிரப்பர்கள் எனபது சிங்களத்தின் சதியா? அல்லது இந்திய அரசு சொல்லிக் கொடுத்த சதியா?

இப்போது கிழக்கு மாகாணமான திருகோணமலையில் திருஞானசம்பந்தர் வீதியில், சிவன்கோயில் அருகே, "தந்தை செல்வா" சிலையின் தலையை "ஆக்கிரமிப்பு சிங்கள ராணுவம்" வெட்டி எடுத்து கீழே போட்டுள்ளது. இது தைமிழர் அடையாளங்களை அடியோடு நீக்க சிங்களம் செய்யும் சதியே தவிர வேறெதுவும் அல்ல. இதை உலக தமிழர்கள் கண்டிக்க வேண்டும். உலகெங்கும் அரசியல் போராட்டங்களில் வென்று வரும் தமிழர் கூட்டம், "பொதுநல வாயை மாநாட்டிலும்" கலந்து கொண்டு தன் கருத்தை கூறியதை சிங்களம் பொறுத்து கொள்ளுமா? நாடு அக்டந்த தமிழீழ அரசாங்க பிரதிநிதிகள் அந்த "காமன்வெல்த்" நாடுகளின் மாநாட்டில் வெளிவிவாகார அமைச்ச்சராகா கலந்து கொண்டது சிங்களத்திற்கு தாங்க முடியாத சவுக்கடி. அதை ஜூனியர் விகடன் வெளியிட்டிருப்பது அதை விட பெரிய அடி.தமிழர்களின் அரசியல் போராட்டம் சிங்களத்தின் தலைமுடியை பிடித்து இழுக்கிறது. அதனால்தான் தமிழர்களின் அரசியல் போராட்டங்களுக்கு முதல் அடையாளமாக திகழ்ந்த "தந்தை செல்வா" வின் தலையை அவர்கள் வெட்டி எரிந்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்ஹ்டிருக்கிரார்கள். சிங்களமே, நீ ஒரு சிலையின் தலையை ஒரு நாள் வெட்டலாம். தமிழர்கள் தங்களுக்கென்று நிலம் பிடித்து, அதில் தமழர் தலிவர்களின் சிலைகளையும், தலைகளையும் நிறுவும் நாள் தூரத்தில் இல்லை.