Sunday, October 30, 2011

விவசாயிகள் தற்கொலை பதினாறு ஆண்டுகளில் மூன்று லட்சம்

இந்திய திருநாட்டில் அதாவது ஒரு பெரிய விவசாய நாட்டில், கடந்த பதினாறு ஆண்டுகளில் மட்டும், இரண்டரை லட்சத்தை தாண்டி, விவசாயிகளின் "தற்கொலைகள்" நடந்துள்ளன என்றால், இதற்கு யார் "பொறுப்பு?". இந்தியாவின் ஆட்சியாளர்கள் பொறுப்பு இல்லையா? குறிப்பாக மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திர பிரதேசம், மத்திய பிரதேசம், சட்டிஸ்கர் ஆகிய மாநிலங்களில் இந்த தற்கொலைகள் நடந்துள்ளன. அதாவது சிறு நில விவசாயிகளும், நடுத்தர விவசாயிகளும், சில பணக்கார விவசாயிகளும் இந்த கணக்கில் அடங்குவர். என் அவர்கள் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்?

அரசாங்கம் இத்தகைய விவசாயிகளுக்கு வங்கி கடன் கொடுக்கிறது. அதே அரசாங்கம் இந்த விவசாயிகளுக்கு "மான்சாண்டோ" என்ற அமெரிக்கா கம்பனியின் "மரபணு மாற்று பருத்தி விதிகளையும்" அளிக்க ஏற்பாடு செயகிறது. அந்த பருத்தி விதைகளை பயிரிட்டால் அதிகமாக பருத்தி விளையும் என்று அந்த தனியார் நிறுவனம் பரப்புரை செய்கிறது. அப்பாவி விவசாயி அதிகமாக லாபம் பேரா எண்ணி இதற்கான கடனையும் வாங்குகிறான். அத்தைகைய பருத்தியையும் வாங்குகிறான். பருத்தி விளைந்த பின் போதுமான மகசூல் இல்லையே என்று வருந்துகிறான். ஆனால் அவன் கடன் வாங்கிய வங்கிக்காரன் விடுவாதாக இல்லை. வீடு தேடி வந்துவிட்ட வங்கிகாரனை "ஈட்டிக்காரன்" போல விவசாயி எண்ணுகிறான். அவனது வருகையால் இவனது "மானம்" அந்த கிராமத்தில் கப்பல் ஏறுகிறது. விவசாயி தனது குடும்பத்திற்கே பதில் சொல்ல முடியாமல் திணறுகிறான்.

அதன் விளைவு "தற்கொலைதான்" என முடிவு கட்டுகிறான். சிலர் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளுகின்றனர். கொத்து, கொத்தாக மஹாராஷ்ட்ராவிலும், ஆந்திராவிலும் இத்தகைய தற்கொலைகளை நாம் தொடர்ந்து கேள்விபட்டோம். இப்படி கடன் மூலம் விவசாயியை "திவாலா" ஆகிய குற்றத்தை அரசு செய்யும்போது, பஞ்சாப்பின் சீக்கிய விவசாயி இந்திரா காந்தி களத்தில் கொந்தளித்து எழுந்தான். அவனை அமைப்பாகக அப்போது அங்கே "பாரதீய கிசான் சபா" இருந்தது. ஆனாலும் அரசு அந்த விவசாயிகளின் எழுச்சியை அடக்கியது. காவல்துறை மூலம் அடக்கினால், அதை எதிர்த்து போராடுவோம் என சீக்கிய இளம் விவசாயிகள் முடிவு செய்தனர். உடனே அரசு "ராணுவம்" கொண்டு ஒடுக்கியது. இனி பொறுப்பதில்லை என சீக்கிய விவசாயிகளும்,"ஆயுதம் தாங்கி பிரிண்டவாலே" பின்னால் அணி திரண்டனர்.

அது இந்திரா காந்தி காலம். இப்போதுள்ள மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா விவசாயிகள் அததகைய ஆயுதம் தாங்கும் நிலையை எடுக்காமல், "தற்கொலை" வழியை எடுத்துள்ளனர். இந்த செய்தியை கேள்விப்படும் இளம் விவசாயிகள் இனியும் ஏன் பொறுமையாக இருக்க வேண்டும் என எண்ண மாட்டார்களா? பதினாறு ஆண்டுகளில், கிட்டத்தட்ட மூன்று லட்சம் விவசாயிகளை ஒரு அரசு தற்கொலைகள் மூலம் கொல்ல வைத்தால் அந்த அரசுக்கு என்ன பெயர்? "உலகிலேயே பெரிய ஜனநாயக அரசு" என்று பெயர்.

பிரபலங்களின் இரங்கல் நிகழ்வுகளில் படிப்பினைகள்.

.
மூன்று நாட்கள் முன்னால், ஏ.அய்.டி.யு.சீ. என்ற அகில இந்திய தொழிற்சங்க மைய கவுன்சிலின் அதாவது சீ.பி.அய். கட்சியின் மைய தொழிற்சங்கத்தின் தமிழ்நாடு செயலாளர் தோழர் டி.ஆர்.எஸ்.மணி திடீரென காலமானார்.அவரது இறுதி ஊர்வலம் அவர் தங்கியிருந்த தொழிற்சங்க அலுவலகம் இருக்கும் சிந்தாதரிப்பேட்டை கோவூர் வைத்தியநாதன் தெருவிலிருந்து புறப்பட்டு, மைலாபூர் மின் இடுகாட்டில் எரித்தளுக்காக கொண்டு செல்லப்பட்டது. அங்கே இந்திய கம்யுனிஸ்ட் கட்சியின் அகில இந்திய செயலாளர் தோழர் டி.ராஜா, மாநில செயலாளர் தோழர் தா.பாண்டியன், கட்சியின் கட்டுப்பாட்டு குழு தலைவர் தோழர் ஆர்.நல்லகண்ணு, ,அதேபோல சீ.பி.எம். கட்சியின் மைய தொழிற்சங்கமான சீ.அய்.டி.யு. வின் மாநில பொதுசெயலாளர் தோழர் ஏ.சவுந்தரராஜன், சீ.பி.அய்.[எம்.எல்.} கட்சியின் தொழிர்ச்சனகமான ஏ.அய்.சீ.சீ.டி.சீ. தொழிற்சங்கத்தின் ஏ.எஸ்.குமார், திமுக வின் மைய தொழிற்சங்கமான தோ.மு.ச.வின் கோபால், ஆகியோர் பேசினர்.

எல்லோரும் மறைந்த டி.ஆர்.எஸ்.மணி அவர்களின் "குணா நலன்களை" பாராட்டி பேசினர். அதில் டி.ஆர்.எஸ்.மணி எப்படி தனது வாழ்க்கையையே கம்யுனிஸ்ட் கட்சிக்காக உழைத்தார் என்று கூறினார்கள். அவர் எப்படி "திருமணம் செய்துகொள்ளாமலேயே" கட்சிக்காக முழு வாழக்கையையும் அர்ப்பணித்தார் என்றும் கூறினார்கள். அவர் தனதுஉறவுக்காரர்களுடன் பெரும் ஊடாடல் வைத்துக்கொண்டவர் அல்ல என்றும், கட்சியின் முழு நேர பணியாளராக கட்சியையே சார்ந்து வாழ்ந்தார் என்றும் பாராட்டினார்கள். ஆனால் அவரது உடலை அவரது உறவுக்காரர்களிடம் விட்டுவிட்டு கட்சி தலைவர்கள் வெளியேறினர். அந்த உடலை வைத்து கொண்டு, மறைந்தவரின் உறவினர்கள் பூசைகள், சடங்குகள் செய்ய தொடங்கிவிட்டனர். இவையெல்லாம் டி.ஆர்.எஸ் மணி உயிரோடு இருக்கும் போது ஏற்றுக் கொண்ட "சம்பிராதயங்களா?"

ஒரு மனிதர் தன் வாழ்கையை எப்படி வாழவேண்டும் என்று தீர்மாநித்து, அதன்படி வாழ்ந்து மடிகிறார். அவரது மரணத்திற்கு பிறகு, அவரது விருப்பங்களை நிரப்புவதுதான் அவருக்கு மடர்வர்கள் செய்யும் மரியாதை. அதனால் மறைந்த மனிதரின் "கொள்கைகளை" கடைப்பிடித்து அவரது இறுதி அஞ்சலி செய்யப்படவேண்டும். இதுதானே "மானுடம்?". அதை விடுத்து மறைந்த மனிதரின் "விருப்பங்களுக்கு " எதிராக அவரது உடலை அவரது சொந்தங்களிடம் ஒப்படைப்பதும், அந்த குடும்பத்தினர் தங்களுக்கு தெரிந்த ஒரே அறிவான "சடங்குகளையும், சம்பிரதாயங்களையும்" கடைப்பிடிப்பதையும் எப்படி ஒரு இயக்கம் அங்கீகரிக்க முடியும்?

குறிப்பிட்ட விசயத்தில், சம்பந்தப்பட்டவர் கம்யுனிஸ்ட் கட்சியின் "கட்டுப்பாட்டு குழுவின்" உறுப்பினர் வேறு. அபப்டி இருக்கையில், கம்யுனிஸ்ட் கட்சியின் ஒரு முழு நேர ஊழியரை அவரது மரணத்திற்கு பிறகு "செங்கொடி போர்த்தி " இறுதி அஞ்சலி செய்யும் கட்சி நடைமுறையை மட்டுமே கட்சி தலைமை செய்திருக்க வேண்டும். அதை விடுத்து வீட்டில் உள்ள உறவினர்கள் கேட்டார்கள் என்று காரணம் காட்டி, அவரது உடலை அவர்கள் கைகளில் ஒப்படைப்பது எப்படி சரி? அவர்களும் மறைந்தவறது உணர்வுகளை மதிக்காமல் தங்களது உணர்வுகளை முதன்மை படுத்தி, "சடங்குகள்" மூலம் அவரது உடலை அடக்கம் அல்லது எரியூட்டல் செய்வத்க்ஹு முறையாகுமா? இந்த கேள்வியை நான் தோழர் நல்லகண்ணு வசம் அந்த இடுகாட்டிலேயே கேட்டேன். இயக்கங்கள் தோழர்களது மறைவிற்கு பிறகு, குடும்பத்திற்கும் இயக்கத்திற்கும், கொள்கை அளவில் முரண்பாடு வந்தாள் எப்படி அதை கையாள்வது என்பது பற்றிய தெளிவை பெற்றிருக்க வேண்டும். என்ற் "படிப்பினையி" இதன் மூலம் நாம் பெறவேண்டும்.


அதேபோல இன்று வேறு ஒரு தோழரின் இருதுய் நிகழ்வில் படிப்பினை கிடைத்தது. அது கடைசியாக திமுகவில் இறக்கும்போது மறைந்த க.சுப்புவின் இறுதி நிகழ்வு. இந்த எரியூட்டல் நிகழ்வும், சுப்புவின் " லாயிட்ஸ் சாலை வீட்டிலிருந்து" புறப்பட்டு, மைலாபூர் மின் இடுகாட்டில் எரியூட்டலுக்கு கொண்டு வரப்பட்டது. அங்கே திருச்சி சிவா, சீ.பி.அய். கட்சியின் எஸ்.எஸ்.தியாகராஜன்,, நக்கீரன் காமராஜ், தையல் தொழிலாளர் சங்கத்தினர், மீ.து.ராஜ்குமார், ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பை சேர்ந்த சுகு, ஆகியோருடன் நானும் கலந்து கொண்டு பேசினேன். கூட்டம் குறைவாக இருந்தது. ராஜபாளையம் சட்டமன்ற உற்ப்பினராக, சீ.பி.அய். யில் இருந்ததையும், திமுக சென்றதையும் அங்கே பிரபல பேச்சாளராக இருந்ததையும், பிரபல தொழிர்ச்சங்க தலைவராக செயல்பட்டு பல தொழிலளர்களுக்கு சுப்பு உதவிகள் செய்ததையும் அவரவர் நினைவு கூறினர்.

அன்னாரது மறைவிற்கு குறைந்த்தது தங்களது "இறுதி மரியாதையை "கூட செலுத்துவதற்கு தமிழர்கள் மத்தியில் " மனித தன்மை குறைவாக" இருக்கிறதே என்று திருச்சி சிவா அவ்ருத்தப்பட்டார். இதுதான் நாம் அங்கே கற்றுக் கொள்ள வேண்டிய "படிப்பினையாக" இருந்தது.