Tuesday, October 18, 2011

சோ.அய்யர் எடுத்த முடிவு மதுரை வாக்களர்களது உரிமையை பாதிக்க வில்லையா?

எல்லா இட்ங்களிலும் உள்ளாட்சி தேர்தல நடத்தப்படுகிறது. ஒரு இடத்தில் ஒரு வேட்பாளர் இறந்துவிட்டால் அங்கு தேர்தல் தள்ளிவைக்கப்படும். இது வழமைதான். ஆனால் மதுரை மாநகராட்சிக்கும் தேர்தல் மேயருக்கும், ஒவ்வொரு வட்ட உறுப்பினருக்கும் நடந்தது. அதில் 15 ஆவது அவ்ட்டத்தில் நின்ற ஒரு வேட்பாளர் மரணமடைந்து விடுகிறார்.அதற்காக அந்த குறிப்ப்பிட்ட வட்ட தேர்தலை "தள்ளி" போடுவது நியாயம்தான். ஆனால் கெடுவாய்ப்பாக அதே நேரத்தில் அதே வாக்குசாவடியில், அதே வாக்காளர்களை வைத்து "மேயர்" டேஹ்ர்தலும் நடத்தப்படும் சூழலில், ஒரு தேர்தல் ஆணையம் "விவேகமாக" என்ன செய்திருக்க வேண்டும்?

எல்லா வாக்கு சாவடிகளிலும் மேயர் டேஹ்ர்தல் நடப்பது போல அந்த "குறிப்பிட்ட" வாக்கு சாவடியிலும் மேயர் டேஹ்ர்தல் நடத்த எந்த "தஹ்டையும்" இல்லை. அந்த குறிப்ப்பிட்ட "வட்ட மாநகர உறுப்பினர்" டேஹ்ர்தல் மட்டுமே தள்ளிப் போடப்படவேண்டும். ஆனால் சோ.அய்யரின் "அறிவார்ந்த" மூளை,அந்த குறிப்பிட்ட வட்டத்தில் உள்ள மேயர் டேஹ்ர்தளையும் சேர்த்து "தள்ளிப்"போட்டுள்ளது. ஒரே வாக்கு சாவடிக்குள் இரண்டு டேஹ்ர்தளையும் "தனி, தனியாக" நடத்த புத்திசாலித்தனமாக முடிவெடுத்த திரு.சோ.அய்யர் அவர்கள், ஏன் அதே புரிதலில், அந்த குறிப்பிட்ட வட்டத்தின் வாக்கு சாவடிகளில், இரண்டில் ஒரு டேஹ்ர்தலை நடத்த "அனைத்து ஏற்பாடுகளும்" தயாராக இருந்த போது, அதை செய்யாமல் "வாட் ஆருப்பினர்" டேஹ்ர்தலை தள்ளி போடும் போது, மேயர் டேஹ்ர்தளையும் அந்த குறிப்பிட்ட வட்டத்திற்கு தள்ளி போட்டார்?

இது அந்த குறிப்பிட்ட வட்டத்தின் "வாக்கலர்களது" உரிமையை பறித்த செயலாக அல்லது "தள்ளி" போட்ட செயலாக அல்லது மற்ற மதுரை வாக்களர்களுடன் சேர்ந்து தாங்களும் வாக்களிக்க உரிமை மறுக்கப்பட்ட நிலையாக ஆகிவிடாதா? இதை புரிந்து கொள்ளும் அளவுக்கு சோ.அய்யர் இருக்கிறாரா? ஏன் என்றால் ஒரு புதிய ஊடகத்திற்காக சோ.அய்யரை நேர்காணல் எடுத்தார்கள். அப்போது சென்னை மாநகராட்சிக்கான டேஹ்ர்தல் அன்டந்து கொண்டிருந்தது. திமுக தலைமை "வேப்காமரா" வைக்கவில்லை என்று புகார் கொடுக்கிறார்களே? என்ற கேள்வியை ஊடகவியலாளர் ஒருவர் கேட்கிறார். அதற்கு பதில் சொல்கிறேன் என்று சோ.அய்யர் " பொதுமக்கள் யாரும் புகார் கூறவில்லை" என்று பதில் சொல்கிறார். அபப்டியானால் திமுக என்ற எதிர்கட்சி கொடுக்கும் புகாரை அவர் "புறம் தள்ளுகிறாரா ?".அல்லது அரசியல் கட்சிகளுக்கு "புகார்" தர உரிமையில்லை என்று உள்ளாட்சி தேர்தல் பற்றி புதிய விளக்கத்தை மறைமுகமாக கொடுக்கிறாரா? அப்படியானால் ஏன் அரசியல் அக்ட்சிகளை அவர்களது சின்னங்களுடன் நிற்க அவர் சம்மதித்தார்? "பொதுமக்கள்" என்று ஒரு "அருவமான" விஷயத்தை கூறி தப்பித்து கொள்ள முயல்கிறாரா? பெரிய தலைவலிதான் இந்த தேர்தல் ஆணையர் போல?

மரணதண்டனை ஒழிக்க ஊடகவியலாளர் பட்டினி போர்.

மரண தண்டனையை சட்டத்திலிருந்து அறவே நீக்குவதற்கும், மூன்று தமிழர் உயிர் காப்பதற்கும், "மரண தண்டனை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு" கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே உள்ள "இரண்டாவது சிக்னலில்" தொடர் ப்ட்டினிப் போரை ஒரு மாத காலம்மாக நடத்தி வருகிறது. அதில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அமைப்புகள் பங்கு கொண்டு வருகிறார்கள். நாளை அக்டோபர் 19 ஆம் நாள் ஊடகவியலாளர்கள், கல்லூரி மாணவர்களையும், கலைஞர்களையும இணைத்துக் கொண்டு, பட்டினிப போரை நடத்துகிறார்கள்.காலை 10 மணிக்கு பட்டினிப் போரை "அன்னையர் முன்னணியின்" தலைவரும், "நாடு கடந்த தமிழீழ அரசாங்க தோழமை மையம்" அமைப்பாளருமான பேராசிரியர் சரஸ்வதி, தொடங்கி வைத்து துவக்க உரையாற்றுகிறார்.

தமிழ்நாடு சட்டமன்றம் மரணதண்டனையை பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு குறைக்க வேண்டி, இந்திய குடியரசு தலைவருக்கு வேண்டுகோள் விடுத்து ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அந்த தீர்மானம் இந்திய அரசியல் வானில் ஒரு விவாதத்தை கிளப்பிவிட்டுள்ளது. காஷ்மீர் சட்டமன்றத்தில் இதேபோன்ற ஒரு தீர்மானத்தை "அப்சல் குருவின்" மரணதண்டனையை குறைக்க வலியுறுத்தி போடவேண்டும் என்ற முயற்சி நடைபெறுகிறது.பஞ்சாபை சேர்ந்த காலிஸ்தான் போராளி "தேவேன்றபல்சிங் புல்லார்" மரணதண்டனையை குறைக்க வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள வழக்கில், நீதியரசரால் "தமிழக சட்டமன்றத்தின் ஏகமனதான தீர்மானம்" மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.அத்தகைய தாக்கத்தை இந்தியா முழுவதும் அரசியல் வானில் ஏற்படுத்தியுள்ள அந்த தமிழக சட்டமன்ற தீர்மானத்தை வலுப்படுத்தவும், மரண தண்டனையை சட்டத்திளிருந்தே நீக்கவேண்டும் என்ற 2007 ஆம் ஆண்டு,மற்றும் 2008 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம்நாள் "அய்.நா. பொதுசபையின்" தீர்மானத்தை செயல்படுத்தவும், ஊடகவியலாளர்கள் தங்கள் சிறிய பங்களிப்பாக இந்த பட்டினி போரை நடத்துகிறோம். அதில் கலந்துகொண்டு பணகளிப்பு செலுத்துங்கள் என்று ஊடகவியலாளர் ஏற்பாட்டாளர் ஜீவசகாப்தன் கேட்டுக் கொண்டுள்ளார்.