Monday, October 17, 2011

சோ அய்யர் "விவரம்" உள்ளவாரா?

தமிழ்நாடு தேர்தல் ஆணையர் என்ற பொறுப்பில் அமர்த்தப்பட்டிருக்கும் சோ.அய்யர், எப்படி நடந்து கொல்கிறார் என்று பார்த்தால் வேடிக்கையாக உள்ளது. ஊடகவியலாளர்கள் கேட்டா கேள்வி, திமுக தலைமை தேர்தல் நடத்தும் விதம் பற்றி கொடுத்த புகாரை பற்றியது. சோ.அய்யரின் பதிலில், பொதுமக்கள் எந்த புகாரையும் கொடுக்க வில்லையே என்பது. அந்த குறிப்பிட்ட ஊடகவியலாளர் "ஏன் கேள்விக் கென்ன பதில்?" என்று கேட்டிருக்க வேண்டும். அதை கேட்கவில்லை. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளை அவற்றின் சின்னங்களுடன் நிற்க ஆனுமதி அளித்துள்ள தேர்தல் ஆணையர் சோ.அய்யர் அவர்களே, பெரிய கட்சியான திமுக கொடுத்த புகாருக்கு ஒழுங்காக பதில் சொல்ல முடிந்தால் சொல்லுங்கள். மாறாக பொதுமக்கள் புகார் சொல்லவில்லை என்பது எத்தகைய "நழுவல்வாதம்?"

எந்தெந்த இடத்தில் வாக்காளர்கள் இரண்டு வாக்கு போடவேண்டும், எந்தெந்த இடத்தில் நான்கு வாக்கு போடவேண்டும் என்று சோ.அய்யர் அவர்களே நீங்கள் எத்தனை நாள் முன்பு மக்களுக்கு தெரிவிக்க ஊடகங்களையும், அதில் வெளியிடப்படும் விளம்பரங்களையும் பயன்படுத்தினீர்கள்? இன்று தேர்தல் அனர் காலையில் சில ஊடகங்களில் இருந்து உணகளிடம் கேட்டதற்கு இப்போது அனுப்பி வைக்கிறேன் என்று கூறும் நீங்கள் உண்மையில் மக்களுக்கு இந்த உள்ளாட்சி டேஹ்ர்தல் பற்றி முன்கூட்டியே டேஹ்ரிவிக்கவேண்டும் என்றோ, விளக்கம் அளிக்க வேண்டும் என்றோ நினைக்க வில்லையா? .பெரும்பாலும் மக்கள் இந்த உள்ளாட்சி டேஹ்ர்தலில் வாக்கு அளிக்காததற்கு காரணமே நீங்கள் அது பற்றிய விளக்கத்தை முன்கூட்டியே ஊடகங்கள் மூலம் கொடுக்காமல் தாமத படுத்தியதுதான் என்று உங்களுக்கு தெரியுமா?

வாக்கு சீட்டுகளில் வழக்கமாக "சட்டமன்ற, நாடாளுமன்ற" டேஹ்ர்தல்களுக்கு, பெயர்களை அச்சிடும்போது " ஆங்கிலத்தில் உள்ள அகர வரிசையில்" அதுவும் முதலில், "அங்கீகரிக்கப்பட்ட" கட்சிகளின் அகர வரிசை, பிறகு " அங்கீகரிக்கப்படாத" பதிவு செய்யப்ப்பட்ட கட்சிகளின் ஆக்ரா வரிசை, பிறகுதான் சுயேட்சைகளின் அகர வரிசை என்று வரும். இப்போது மட்டும் எல்லா வேட்பலகளையும் ஒரே பாணியில், அகர வரிசையில் வாக்கு சீட்டில் பெயர்களை அச்சடித்து விட்டீர்களே? ஏன்? உனக்க்கு விளங்கவில்லையா? பிறகு எதற்காக "அங்கீகரிக்கப்பட்ட" அக்ட்சிகள் தங்கள் சின்னங்களில் நிற்க அனுமதித்தீர்கள்? அதை அனுமதித்தவர் அவர்களுக்கு முதலில் வரிசையில் பெயர் எழுதப்பட்ட சீட்டுகளை வாக்கு சீட்டுகளாக கொடுக்க வேண்டாமா? நேநேகள் சட்டமன்ற, நாடாளுமன்ர் தேர்தல்களில் வாக்கு சீட்டுகளை பார்த்தது இல்லையா?

இப்படி குழப்பி கொண்டு ஒரு தேர்தலை நடத்த உங்களை எப்படி ஆணையாராக போட்டார்கள்? எந்த தஹ்குதியை கொண்டு உங்களை தேர்வு செய்தார்கள்? "தேவர்" சமூகத்தை சேர்ந்தவர் என்பது மட்டுமேதான் உங்களுக்கு உள்ள தகுதியா? உள்ளாட்சி டேஹ்ர்தல் எனபது சட்டமன்ற, நாடாளுமன்ற டேஹ்ர்தல்களை விட "பொதுமக்களுக்கு" முக்கியமானது என்பது உணகளுக்கு டேஹ்ரியுமா? கலையில் உங்கள் "வாக்கு சாவடி அதிகாரிகள்" எத்தனை பேர் 'எட்டு மணிக்கும்" ஒன்பது மணிக்கும் வாக்கு சாவடிக்கு வந்தார்கள் தெரியுமா? அதற்கெல்லாம் நீங்கள்தான் பொறுப்பு? அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பீர்களா? மேயர் வேட்பாளருக்கான ஏஜெண்டு அந்த "வட்டத்தை" சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்று தேர்தல் விதிமுறை தெறியாமல் உங்கள் அதிகாரிகள் "தூத்துக்குடியில்" சண்டை போட்டது உணகளுக்கு தெரியுமா? ஏதாவது நடவடிக்கை எடுத்தீர்களா?