Sunday, October 16, 2011

அணு உலையில் தலையைவிட்ட இந்திய பிரதமர்.

அணு உலைகள் மின்சாரம் தரும் என்று நாட்டு மக்களை ஏமாற்றி விட்டு, அமெரிக்காவுடன் ஒரு அணு சக்தி ஒப்பந்தத்தை பொட்டுக் கொண்ட நமது பிரதமர், இப்போது கூடங்குளம் மக்கள் போராட்டம், ஜைதாபுரில் வர இருக்கும் அணு உலைகளை தயார் செய்யும் பிரான்ஸ் நாட்டு முதலாளியின் "பாதுகாப்பற்ற " நடவடிக்கைக்கு நீதிமன்றத்தின் "அபராதம்" ஆகிய செய்திகளால் "நிலை குலைந்து" இருப்பது ஒருபுறம். இப்போது "முன்னால் அதிகாரிகளால்" போடப்பட்ட அவ்ழக்கில் "இந்நாள் பிரதமர்" மாட்டிக் கொண்டார் என்பது புது கதை.

முன்னாள் அமைச்சரவை செயலாளர் டி.ஆர்.எஸ்.சுப்பிரமணியம், முன்னாள் கடல்படை தலைவர் அட்மிரல் எல். ராமதாஸ், மத்திய தேர்தல் ஆணைய முன்னாள் தலைவர் கோபால்சாமி, அறிவு ஆணைய முன்னாள் உறுப்பினர் பி.எம்.பார்கவா, பிரதமரின் முன்னாள் செயலாளர் ஆர்.வேணுகோபால், ஆகியோரும் இணைந்து ஒரு வழக்கை உச்சநீதிமன்றத்தில் அணு உலைகளுக்கு எதிராக போட்டுள்ளனர். இந்த வழக்கு அணு உலைகளை செயல்படுத்தும்போது, வருகின்ற "ஆபத்துகளில்" பாதிக்கப்படும் மக்களுக்கு "நட்ட ஏஅடு" கொடுப்பதற்காக் போடப்பட்ட "சட்டம்" நியாயமாக இல்லை என்று குற்றம் சாட்டுகிறது. இந்திய ஆரசியல் சட்டத்தின் அடிப்படையில், அணு உலை ஆபத்தினால் பாதிக்கப்படும் மக்களுக்கு "இழப்பீடு" கொடுப்பதில் ,அணு உலையை "இயக்கிய" அந்நிய நாட்டு முதலாளிக்கும், அதை "விநியோகம்" செய்த தனியார் முதலாளிக்கும் "பொறுப்பு" அதிகம் உண்டு என்று இந்த வழக்கு குற்றம் சாட்டுகிறது.

ஏற்கனவே போடப்பட்ட "இழப்பீடு" சட்டம் போததாது என்றும், அணு உலைகளை இறக்கும் மற்றும் விநியோகிக்கும் தனியார் ஏகபோக கார்பரேட் முதலாளிகளை "முக்கிய" பொறுப்பு ஏற்க வைத்து அவர்களை " முக்கிய நட்ட ஈட்டை" கட்ட வைக்க வேண்டுமே ன்று இந்த வழக்கு கூறுகிறது. இந்த "கூற்று" இதிய நீதிமன்றங்களிலும், இந்திய மக்களின் மனங்களிலும், இந்திய நாட்டு பற்றாளர் மத்தியிலும், ஏகமனதாக வரவேற்கப்படும். ஆகவே இந்த அவ்ழக்கும் இன்னொரு தலைவலியை "மத்திய அரசுக்கு" ஏற்படுத்தும் என்பதை அணு உலை எதிர்ப்பாளர்கள் புரிந்து கொண்டு அதையே மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.

உள்ளாட்சியில் உள்ள மகிமை.

உள்ளாட்சியில் உள்ள மகிமை.
உள்ளாட்சி தேர்தல் "திங்கள் அன்றும், புதனன்றும்" தமிழ்நாடெங்கும் நடக்கும். அதில் பத்து மாநகராட்சிகள், மற்றும் அறுபது நகராட்சிகள் முதல் கட்டத்திலும் மீதி இரண்டாம் கட்டத்திலும் நடக்கும். மாநகராட்சிகளிலும், நகராட்சிகளிலும், பேரூராட்சிகளிலும், ஒவ்வொரு வாக்காளரும், "இரண்டு" வாக்குகளை அளிக்க வேண்டும். ஒன்று அந்த மாநகராட்சி தலைவர் அல்லது நகராட்சி தலைவர், அல்லது பேரூராட்சி தலைவர் என்ற பொறுப்புக்கு போடப்பட வேண்டிய வாக்கு. இன்னொன்று தாங்கள் வாக்காளராக இருக்கும் வட்டத்தில், நிற்கின்ற மாநகராட்சி உறுப்பினருக்கோ, நகராட்சி உறுப்பினருக்கோ, பேரூராட்சி உறுப்பினருக்கோ போடப்பட வேண்டிய வாக்கு.

இந்த பகுதிகளை தாண்டி,உள்ளாட்சியில் கிராமங்களில் இருக்கும் வாக்காளர்கள், "நான்கு" வாக்குகளை போடவேண்டும். அதாவது தங்கள் "மாவட்ட ஊராட்சி உறுப்பினருக்கும், தங்கள் ஒன்றிய உறுப்பினருக்கும், தங்கள் ஊராட்சிமன்ற தலைவருக்கும், தங்கள் ஊராட்சிமன்ற உறுப்பினருக்கும் என நான்கு வாக்க்குகளை ஒவ்வொரு வாக்காளரும் போட வேண்டும். இந்த விளக்கத்தை எந்த அளவுக்கு "தமிழ்நாடு தேர்தல் ஆணையம்" புரிய வைத்துள்ளது என்பது நமக்கு தெரியாது. ஆனால் கண்டிப்பாக இந்த "உள்ளாட்சிதேர்தல்" எந்த வகையில் "சட்டமன்ற, நாடாளுமன்ற" தேர்தல்களில் இருந்து "வேறுபட்டது" என்பதை புரிய வைக்க வில்லை என்பது நமக்கு தெரியும்.


சட்டமன்ற தேர்தலில் நிற்கின்ற வேட்பாளர் வெற்றிபெற்றால் "சட்டமன்ற உறுப்பினராக" ஆகிறார். அவர் சட்டமன்றம் சென்று தனது "தொகுதி மக்களுக்கு" என்ன செய்ய முடியும்? தங்கள் தொகுதியை பற்றி, தொகுதி மக்களது கோரிக்கைகளைபற்றி சட்டமனரத்தில் "வாய்ப்பு" கிடைத்தால் பேச முடியும். ஆனால் அவற்றை "நிறைவேற்றும்" அதிகாரம் அவருக்கு கிடையாது. அது "அமைச்சரவைக்கு" மட்டுமே உண்டு. அதேபோல "நாடாளுமணர் தேர்தலில்" நிற்கின்ற வேட்பாளர் "நாடாளுமன்ற உறப்பினர்" ஆகிறார். அவரும் நாடாளுமன்றத்தில், தங்கள் தொகுதி பற்றியோ, தொகுதி மக்களது கோரிக்கைகள் பற்றியோ, "பேசத்தான்" முடியும். அவற்றை அவரால் செய்ய முடியாது. அங்கும் "அமைச்சரவைதான்" அவற்றை நிறைவேற்ற முடியும். அதனால்தான் "புரட்சியாளர் லெனின்" இந்த நாடாளுமன்ற பாதையை " அரசுக்கும், மக்களுக்கும் மத்தியில் இடப்பட்டிருக்கும் ஒரு திரை" என்று குறிப்பிட்டார்.


ஆனால் இந்த உள்ளாட்சி தேர்தல்கள் வித்தியாசமானவை. அவை தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களுக்கு "திட்டமிடும் அதிகாரத்தை" கொடுக்கிறது. அதாவது வாக்காளர்களால் தேர்ந்தெடுக்கப்படும் "மாநகராட்சி உறுப்பினரோ, நகராட்சி உர்ப்பினரோ, பேரூராட்சி உறுப்பினரோ, மாவட்ட ஊராட்சி உறுப்பினரோ, ஒன்றிய ஊராட்சயுருப்பினரோ, ஊராட்சி தலைவரோ, ஊராட்சிமன்ற உறுப்பினரோ" தான் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதி மக்களின் "நலனுக்காகான" திட்டங்களை தீட்டுவதற்கு அந்த அவைகள் இடம் கொடுக்கின்றன. அத்தகைய திட்டங்களுக்கான "நிதியை" ஒதுக்க அவர் சம்பந்தப்பட்ட அவைகளில் கருத்து தெரிவித்து "பெற்று கொள்ள" வசதி செய்கினறன. உள்ளாட்சிகளில் தேர்ந்தெடுக்கப்படுகின்ற "ஒவ்வொரு உறுப்பினரும்" அவர் தலைவராக இருந்தாலும், உறுப்பினராக இருந்தாலும் "திட்டமிடவும்,.நிதி ஒதுக்கவும்" அவர்களுக்கு உரிமை இருக்கிறது என்ற "அதிகாரத்தை" அந்த உள்ளாட்சி அமைப்பு அளிக்கிறது.


ஆகவே உள்ளாட்சி அமைப்புகள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களை விட, "கூடுதலான" அம்க்களுக்கு தேவையான "அதிகாரத்தை" பெற்றிருக்கிறார்கள். இந்த செய்தியை தேர்தல் ஆணையம் கூட மக்களுக்கு எடுத்து சொல்வது இல்லை. உள்ளாட்சிகளுக்கு "அதிகாரத்தை பரவலாக்க" நாடாளுமன்றம் "பண்ச்சாயத் ராஜ், நகர்பாளிகா" என்ற சட்டத் திருத்தங்களை கொண்டு வந்த போது, முதிர்ச்சி பெற்ற மாநில கட்சிகளின் தலைமைகள் அதை "ரசிக்கவில்லை". தங்களிடம் உள்ள "திரை" போன்ற அதிகாரத்தை மக்களுக்கான அதிகாரம் என்று "ஏமாற்றி கொடு" இருக்கும் போது, உண்மையான "அதிகார பரவலாக்கலை" மக்களுக்காக இந்த உள்ளாட்சிகள் கொண்டு வந்து விடுமே என்றும், அதனால் "தங்கள் அதிகாரம்" குறிக்கப்பட்டு விடுமே என்றும் அந்த கட்சி தலைமைகள் எண்ணி பார்த்ததில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

ஆகவே இந்த உண்மையை "உள்ளாட்சிகளின் உணமையான் ஆதிகாரத்தை" மக்கள் மத்தியில் கொண்டு சென்றால், அதை விளங்கிய பிறகு மக்கள் எங்காவது "குழுக்கள் முறையில்" அல்லது "குத்தகை" முறையில் அல்லது "ஏல முறையில்" தங்கள் ஊராட்சி தலைவர்களை தேர்வு செய்வார்களா? உள்ளாட்சியில் நிற்கும் வேட்பாளர்களிடம் "காசும், பொருளும்" வாங்கி கொண்டு வாகளிப்பார்களா? உண்மை அதிகாரம் தங்கள் உறுப்பினருக்கு இருப்பது தெரிந்தால், அதை பயன்படுத்த "சரியான" வேட்பாளரை தேர்வு செய்யவேண்டும் என்ற "அவா" கூடாதா? அதன் மூலம் "ஊழல்" குறையாதா? அது கூடாது என்பதற்காகவே இந்த தேர்தல் ஆணையர்களும், அரசியல்வாதிகளுடன் சேர்ந்து கொண்டு உள்ளாட்சி அதிகாரம் எப்படி வேறுபட்டது என்று கூராமால் இருக்கிறார்களா?