Wednesday, September 28, 2011

முதல் போர்குற்றவாளியின் "குற்றப்பட்டியல்"

நமக்கு தெரிந்த அளவில், அந்த "போர்க்குற்றவாளி" வட இந்தியாவிலிருந்து வந்திருந்தாலும், தமிழ்நாட்டு "அய்.பி.எஸ். அதிகாரியின்"மகளை திருமணம் செய்தார்.பிறகு இவரது "கொடுமை" தாங்க முடியாமல் "மனைவி" சித்தரவதைகளுக்கு "விடை" கொடுக்க, விலகி நின்றார். மாமியார் காங்கிரஸ் கட்சியில் நின்று "ச.ம.உ." ஆனார். இது "பெண்களுக்கு எதிராக" அய்யா செய்திருக்கும் "முதல் குற்றம்".

ஆண்டு:-1996 . அய்யா "மணிமுத்தாறு ஆயுதப் படையின்" தலைவராக இருந்தார். தூத்துக்குடியில் மீனவர் கோரிக்கைகளுக்கான "சாலை மறியல்" நடந்தது. அப்போது "துணை ஆட்சித் தலைவராக" இருந்த டாக்டர். ராதாகிரூஷ்ணனின் பேரன் இப்போது கூப்பிட்டாலும் "சாட்சி" கூறுவார். அந்த "சப்-கலெக்டர் " மாட்டிக்கொண்டார் என்பதே அப்போது "காவல்துறையின்" குற்றச்சாட்டு. ஆனால் "மீனவர்கள்தான்" தன்னை காப்பாற்றினார்கள் என்று "அந்த சப்-கலெக்டர்" கூறினார். அதற்குள் "தேவாரம்" வழக்கம் போல உத்தரவிட்டார். ராஜெஷ்தாஸ் "மீனவர்கள் மீது" சுட்டார். நிராயுதபாணியான மீனவ இளைஞர் "குண்டடி" பட்டு செத்தார். நாடு சாலையில், இறந்த தன் தபியின் உடலை எடுத்து மடியில் வைத்துக் கொண்டு, அண்ணன்காரன் "ராஜெஷ்டாசை" நோக்கி கேள்வி கேட்கிறான். அவர் "அண்ணன்காரனின்" நெற்றியில் தனது "துப்பாக்கியால்" குறி பார்த்து "சுட்டுக் கொல்கிறார்" இது "இரண்டாவது" குற்றச்சாட்டு.

ஆண்டு:- 1997 . சட்டமன்ற உறப்பினர் டாக்டர். கிருஷ்ணசாமி "தேனீ மாவட்டம்" செல்கிறார். அங்கே ராஜெஷ்டாச்தான் அப்போது "மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்". "கண்டமனூர்" ஊரில் உள்ள "தேவர் சிலையை" அகற்ற கிருஷ்ணசாமி வருகிறார் என்று சொல்லி திடீரென "எஸ்.பி. ராஜெஷ்தாஸ் " கிருஷ்ணாசாமியை அதிகாலை 'தேனீ விடுதியில்" இருந்து வெளியே வரும்போது "கைது" செய்கிறார். தென்மாவட்டங்கள் எங்கும் "பேருந்துகள்" நிருத்தபடுகின்றன. கோவில்பட்டி அருகே " ரயில்வண்டி" நிறுத்தப்படுகிறது.". நாடே 'அல்லோல, கல்லோல" படுகிறது. தேனியிலிருந்து "இரபத்தாறு" கிலோமீட்டர் தூரத்தில் உள்ள "கண்டமநூருக்கு" கிருஷ்ணசாமி போக வேண்டிய தேவையே இல்லை என்ற "வாதம்" போராட்டக்காரர்களால் முன்வைக்கப்படுகிறது. ஏற்கனவே கண்டமநூருக்கு "எட்டுகிலோமேட்டர்" அருகே உள்ள கிராமத்திற்கு சென்று விட்டுத்தான் முந்திய நாளே "கிருஷ்ணசாமி" தேனிக்கு "திரும்பி" வந்துள்ளார் என்பது நிரூபிக்கப்படுகிறது. அந்த "ஆதாரங்களை" பெற்றவர் அன்றைய "புலனாய்வுதுறை துணைத்தலைமை அதிகாரியும், இன்றைய காவல்துறைத் தலைவருமான" பெரிய அதிகாரி.அது "மூன்றாவது குற்றம்".

மறுநாளே இந்த "உண்மைகள்" முதல்வர் கலிஞர் வசம் "கொண்டுசெல்லப்படுகின்றன". அன்றைய "உளவுத்துறை தலைவர்" அலெக்சாண்டர் "ராஜெஷ்டாசை" தொலைபேசியில் திட்டுகிறார். "பச்சை பனியன் " பொட்டுக் கொண்டு ஏன் கிருஷ்ணசாமியை கைது செய்தாய்? என்று கேட்கிறார். "உடுப்பு" போட்டுக்கொண்டு வேலை செய்ய தயாரில்லையா? என்று வினவ்புகிறார்.இவாறு கடமையை செய்ய மறுக்கும் "ராஜெஷ்தாஸ்" செய்தது " நான்காம்" குற்றம். உன் வீட்டு முன்பு "காவல் அரண்" போட்டு "தடுப்பு" வைத்திருகிராயாமே? என்று மீண்டும் அலெக்சாண்டர் திட்டுகிறார். அதிலிருந்து "உள்ளூர் உளவுத்துறையில்" மேலே செய்திகளை சொல்லும் அதிகாரிகளை வைத்துக் கொள்ளக் கூடாது என்று ராஜெஷ்தாஸ் "கற்றுக் கொளகிறார்".

அடுத்து மீண்டும் தூத்துக்குடிக்கு "ராஜெஷ்தாஸ் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளராக" மாற்றப்ப்டுகிறார்.அப்போது அந்த நகரில், 'பசுபதிபாண்டியன்" வசித்த தெருவில், அவரது சகோதரர், "வின்சென்ட்" என்ற "நகராட்சி உறுப்பினர்" காவல்துறையின் "காவலில்" மரணமடைகிறார். அவரை "கொன்றது" எஸ்.அய். ராமகிருஷ்ணன் என்பதை மக்கள் 'குற்றமாக" சொல்கிறார்கள். மாவட்ட ஆட்சித் தலைவர் முன்பு, "பஞ்சாயத்து" நடக்கிறது. கொலைகார ராமகிருஷ்ணனை "எஸ்.பி.ராஜெஷ்தாஸ் " நியாயப்படுத்துகிறார். அவர் "காசு" வாங்காதவர் என்கிறார். அப்போது "மனித உரிமையாளர்கள்" அடித்துக் கொள்ளும் "மனித உரிமை மீறல்" காசு வாங்குவதை விட மோசமான "ஊழல்" என்று பதில் கொடுக்கிறார்கள். ராஜெஷ்தாஸ் "பத்தி சொள்ளவழியிலாமல்" மௌனமாகிறார். அது அவர் செய்த "ஐந்தாவது" குற்றம்.

இப்போது "இம்மானுவேல் சேகரன்" நினைவு நாள் வருகிறது என்று "வன்முறை" செய்ய தயார் ஆகிறார். திட்டமிட்டு "ஜான்பாண்டியனை" நெல்லையிலேயே " தனது தென்மண்டல அய்.ஜி. பதவியை" பயன்படுத்தி தடுக்கிறார்.வன்முறையை எதிர்பார்த்து "டி.அய்.ஜி.அய். தயார்"செய்கிறார். அதை மேலிடத்திற்கு "சொல்லவிடாமல்" பரமக்குடியில் "உளவுத்துறை எஸ்.அய். யாக இருந்த சுபாஷ் என்பவரை" உச்சுப்புளிக்கு மாற்றுகிறார். "துப்பாக்கி சூடு" முடியும்வரை சென்னையில் உள்ள " உள்துறை செயலாளருக்கு"செய்தியை சொல்லவிடாமல் தடுக்கிறார். சென்னையில் உள்ள "உளவுத்துறைக்கும், டி.ஜி.பி.க்கும் " செய்தி போகவிடாமல் தடுக்கிறார். இந்த "குற்றவாளி" செய்தது தேவேந்திரகுல மக்கள் மீதான "போர்குற்றம்" அல்லாமல் "வேறென்ன?"..

.

"போர்" அறிவித்துள்ளார்களா " அதிகாரிகள்?".

பரமக்குடியில் நடந்த "இனப் படுகொலை" ஏதோ சாதாரணமாக "காவல் துறை" நடத்தும் "அழக்கமான" படுகொலைகளை ஒத்தது அல்ல. "தேவேந்திர குல வேளாளர்" மக்கள் ஒரு "போர்குணமிக்க உழவர் படை". அந்த போர்குணமிக்க "உழவர்கள்" தமிழ்நாட்டில் இருக்கும் "உழவர் கூட்டத்திலேயே" முன்னோடிகளான உழைக்கும் மக்கள். தமிழர் திருவிழா என்று "பொங்கல்"நாளை கொண்டாடும் வழக்கமே, அது " அறுவடைத் திருநாள்" என்பதால்தான். அந்த அறுவடைத் திருநாளுக்கு "யாருக்கு" நன்றி சொல்லவேண்டும் என்று தமிழர்கள் எண்ணும் போதெல்லாம் "உழவர்களுக்கு " என்று பதில் வரும். அத்தகைய "உழவர்களில்", நிலமற்றவர், சிறு நிலம் உடையவர், நடுத்தர விவசாயி, பணக்கார விவாசாயி என்ற வகைகள் இருக்கிறார்கள். அவர்களில் இந்த "தேவேந்திர குல வேளாளர்கள்" எனப்படுவோர், "உழைக்கும் விவசாயிகளாவர்". அதாவது அவர்கள் "சிறு, நடுத்தர, பணக்கார விவசாயிகளின்" பிரிவுகளில் வருவார்கள். அவர்களில் "நிலமற்றவர்கள்" இருந்தாலும், அனேகமாக " சிறிய அளவு நிலம் வைத்திருக்கும்" விவசாயிகள் "அதிகமாகவே" இருப்பார்கள்.


அப்படிப்பட்ட "ஒரு போர்குணமிக்க" விவசாயிகளுடன் "நீ" மோதுகிறாய் என்பதை, சம்பந்தப்பட்ட "அதிகாரிகளுக்கும்", அவர்களைப் பாதுகாக்கும் "அரசுக்கும்", அந்த மக்களின் "வாக்குகள்" மூலம் "ஆட்சிக்கு" வந்திருக்கும் கட்சிக்கும் நாம் தெரிவிக்க வேண்டியிருக்கிறது. அத்தகைய "உழைக்கும் விவசாயிகளின்" உழைப்பால் தானே "உன்னுடைய" வீட்டில் "அரிசி" உலையில் வேகவைக்கப்படுகிறது? இந்த கேள்வியை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் நாம் கேட்க வேண்டும். "உழவன் சேற்றில் கால் வைக்காவிட்டால்", நீ "சோற்றில் கை வைக்க முடியாது" என்று வீர வசனம் பேசும் "ஏ,தமிழகமே" நீ பரமக்குடி துப்பாக்கி சூட்டில் எழு பேர் அன்னிய்யயமாக "படுகொலை " செய்யப்ப்பட்ட போது எங்கே போயிருந்தாய்? விவசாயத்தை பாதுகாக்கும் ஒரு "படையை" நீ புறக்கணித்தால் "நாளை" சோறு, தண்ணீ இல்லாமல் அலையமாட்டையா? மானங்கெட்டவன் மட்டுமே இன்னமும் "நிம்மதியாக" தூங்குவான். மரமண்டை மட்டும்தான் "மனித உரிமையை" சிந்திக்காமல் இருப்பான். இப்போது "அரசுக்கும், தேவேந்த்ரகுல மக்களுக்கும்" நடக்கும் "போரில்" நீ எந்தப் பக்கம்?



நிலம் "சார்ந்த" உழைப்பு, அதனால் வரும் "சுயம் சார்ந்த" நினைப்பு, அதனால் வரும் "சுய மரியாதை" இருப்பு, அதனால் "எழும்" "வீரமிகு" விறைப்பு, அத்தனையும் கொண்ட ஒரு "உழவர் குடியிடம்" விளையாடுகிறாய்? மண்ணில் நிற்பவன், "மண்ணுக்கு சொந்தக்காரன்". "வந்தேறிக்கூட்டம்" கையில் "துவக்கு" இருப்பதால், "காக்கை, குருவியை" சுடுவதுபோல, "எத்தனை நாள்" சுட்டுவிடும்? பார்ப்போமா? இதுதான் அன்று, "வெள்ளையன்" வேட்டைக்காடாக "தமிழ்மண்ணை" ஆக நினைத்தபோது, வீரபாண்டியக் கட்டபொம்மனுக்கு ஒரு "தளபதியை" மாவீரன் "சுந்தரலிங்க குடும்பன்" தனியாகவே "படை" நடத்தினான். தன் மாமன் மகள் "வடிவுடன்" வெள்ளைக்காரனின் "ஆயுதக் கிடங்கில்" வெடியாகி "எரித்து" அழித்தான். அவன் "முதல் தற்கொலைப்படை போராளியாக" இன்று வரை பாராட்டப்படுகிறான். அந்த " முதல் கரும்புலியின்" வாரிசுகள்தான் இப்போது, "தேவேந்திர குல" மக்களாக "பரிணமிக்கிறார்கள்". எண்ணிப்பார்க்க வேண்டாமா? சிவகங்கை சீமையை ஆண்ட " வேலு நாச்சியார்" படையில் வெள்ளையனை எத்ரித்து, களம் புகுந்து, "வீரச்சாவை" எட்டிய " பெண் கரும்புலி" யார்? அவர் "குயிலி" என்ற தேவேந்திர குல வீர மங்கை. தெரியுமா உனக்கு என்று அந்த "சின்னப் புத்தி" அதிகாரிகளை கேட்காமல் இருக்க முடியுமா?


தென் மண்டல "அய்.ஜி. ராஜேஷ் தாஸ்" இந்த 'அருவெறுக்கும் போரின்" முதல் குற்றவாளி. ராமநாதபுரம் டி.அய்.ஜி. என்ற "சந்தீப் மிட்டல்" இந்த "போர்குற்றத்தின்" இரண்டாவது குற்றவாளி. அவர்களுக்கு "எடுப்பு வேலை" செய்த "செந்தில் வேலன்" மூன்றாவது குற்றவாளி. இந்த "போர்குற்றவாளிகளை" கூண்டிலேற்றாமல், எந்த "மனித உரிமையும்" தமிழ்நாட்டில் "மயிரைக் கூட" பிடுங்க முடியாது. இப்போது அதிகாரிகள் அறிவித்திருக்கும் "போரை" எத்ரிகொள்ள மக்கள் "தயார்". எந்த அளவுக்கு உங்கள் நாட்டின் 'அரசியல் சட்டமும், ஜனநாயகமும்" தயார் என்பதை "வெளியே" வந்து அரசியல் கட்சிகள் கூறட்டும். இனி நாமும் "வேடிக்கை" பார்பவர்களாக இருந்தால் "கூண்டோடு " அழிந்து விடுவோம்.