Friday, September 23, 2011

பலி வாங்கியவர்கள், பழி வாங்குகிறார்கள்.

காங்கிரச்காரரகளுக்கு அது தனி "கலைதான்". அவர்கள்தான் ராஜிவ்காந்தியை "பலி வாங்கினார்கள்" என்று ஒரு கருத்து "பலமாகவே" இருந்து வருகிறது. ராஜீவ் கொலை நேரத்தில் "செத்துபோனவர் எல்லாம் போலீஸ்காரன்" "காங்கிரஸ்காரன் எங்கே போனான்" என்று தமிழ் உணர்வாளர்கள் எப்போதும் தெருக்களில் முழக்குவார்கள். காங்கிரஸ் தலைவர்கள் யாரும் அப்போது அந்த "விபத்தில்" அல்லது அந்த "கொலையில்" சிறிய "காயம்" கூட படாமல் தப்பிவிட்டார்கள். இறந்துபோன் அ"இரண்டு" தொண்டர்களின் "குடும்பங்களை" நாடி வந்த போதெல்லாம் இத்தனை ஆண்டுகளாக "மதிக்காமல்" எந்த "உதவியும் " செய்யாமல் அவர்களை இப்போது "காட்சிகள்" போல ஊடகவியலாளர்களிடம் காட்டி, " தூக்கு தண்டனைக்கு" தூண்டி விட பயன்படுத்தும் "இழி" செயலை சில கான்க்கியர்ச்காரர்கள் ச்ய்துவருவது அனைவரும் அறிந்ததே.

ராஜீவ் கொலையில் எப்படி "சீ.டபிள்யு. சீ." எனும் "காங்கிரஸ் பணிக்குழு" சம்பந்தப்பட்டிருக்கிறது என்று அத நேரத்திலேயே "வெளிவந்தது". மரகதம் சந்திரசேகறது வீட்டிற்கு "ராஜீவ்" வருவதை அன்றைய "உளவு துறை" தடுத்த பிறகும், சீ.டபிள்யு.சீ. யில் அலுவலக செயலாளராக இருந்த "கல்யாண ராவ்" எப்படி ராஜீவ் வருகையை திரு பெரும்புதூருக்கு "உறுதி" செய்தார் என்ற் கதைகள் யாவரும் அறிந்ததே. இப்போது வேண்டும் என்றே " மூன்று தமிழர் மரண தண்டனையை" எதிர்க்கும் இன உணர்வாளர்களை எதிர்க்க நினைக்கும் காங்கிரஸ்காரர்கள், "எதிர் பட்டினிப்போர்" நடத்துகிறார்கள். அதனால் ஆத்திரப்படும் இன உணர்வாளர்கள் இந்த நேரத்தில் " பல" உண்மைகளை போட்டு உடைக்க புறப்பட்டுவிட்டனர். அதில் "ராஜிவ்காந்தி" இலங்கைக்கு அனுப்பிய "இந்திய மைதிப்படை" என்னவெல்லாம் அட்டூழியங்கள் செய்தன என்பது உலகுக்கு "அம்பலமாகிக் கொண்டு" இருக்கிறது.

சேவ் டமில்ஸ் அமைப்பும் வழக்கறிஞர்களும் நடத்திய "கூட்டங்களில்" இந்த விவகாரம் முக்கியத்துவம் பெற்றது. "பெரியார் திராவிடர கழகம்" நடத்திய "பயணத் தொடக்க விழாவிலும்" கீற்று ரமேஷ், வழக்கறிஞர் பாண்டிமாதேவி, விடுதலை ராஜேந்திரன்,கொளத்தூர் மணி, வைகோ ஆகியோர் இந்த விவகாரங்களை எடுத்து விட்டதில், "ராஜீவ் காந்தியின்" "போர் குற்றங்கள்" அமபலத்துக்கு வந்தன. அதனால் ராஜீவ் "ஒரு போர்க்குற்றவாளி" என்ற விவாதம் இப்போது தமிழ்நாட்டில் தொடங்கி உள்ளது. கனகிரச்காரர்கள் "சும்மா" இருந்திருந்தால் தமிழர்கள் அந்த "பழங்கதையை" நினைவு படுத்தியிருக்க மாட்டார்கள். தமிழர்கள் "மரண தண்டனை ஒழிப்பு" என்ற உலக மனித உரிமை கருத்தை "மனித உரிமை" தளத்தில் நின்று எழுப்பும்போது, கனகிரச்கார்ர்கள் இப்பை குட்டையை குழப்பி விட்டார்கள். அதுவும் "நல்லதாகப் போயிற்று".

ராஜிவ்காந்தி உயிரை "பலி" வாங்கிய காங்கிரச்கார்ர்கள், இப்போது அவரது "போர்குற்ற" நடவடிக்கைகையும் "நினைவு" படுத்தவைத்து, அவரை "பழி" வாங்குகிறார்கள். இதுவும் "நல்லாத்தான்" இருக்கு.

செங்கொடி படத்திறப்பும், மரண தண்டனை எதிர்ப்பும் நடத்தும் மக்கள் மன்றம்.

செங்கொடி படத்திறப்பும், மரண தண்டனை எதிர்ப்பும் நடத்தும் மக்கள் மன்றம்.

நாளை சனிக்கிழமை மாலை சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலை, ஹேமமாலினி கல்யானமண்டத்தில், "மக்கள் மன்றம்" செங்கொடி படத்திறப்பும், மரண தஹ்ண்டனை எதிர்ப்பு கூட்டமும் நடத்துகிறது. பேரா.சரஸ்வதி தலைமை தாங்க, கொளத்தூர் மணி "செங்கொடி" படம் திறக்க, வைகோ, ஆர்.நல்லகண்ணு,டாக்டர் கிரூஷ்ணசாமி.ச.ம.உ., பழ.நெடுமாறன், இயக்குனர் மணிவண்ணன், த.வெள்ளையன், ஜான் பாண்டியன், பேரா.தீரன், சிந்தனை செல்வன், வடிவேல் ராவணன், அற்புதம்மால், தியாகு, டி.எஸ்.எஸ்.மணி மக்கள் மன்றம் மகேஷ், மேகலா, மகா ஆகியோரும் கலந்துகொள்ளும் கூட்டம் நடைபெறும். மக்கள் மன்றம் கலை நிகழ்சிகள் நடைபெறும். மாலை ஐந்து மணிக்கு முன்பு நிகழ்ச்சி தொடங்கிவிடும். உணர்வாளர்கள் வருக.