Friday, September 16, 2011

பல "கறைகளை" இடிந்தகரை "கழுவிவிடும்"

நேற்று நேரில் சென்றிருந்தேன்.சில மீனவ சங்க தலைவர்களை "சென்னையிலிருந்து " கிளப்ப முயற்சித்து நான்கு நாட்களாக " தோல்வி" கண்ட பிறகு, நானே "ஒரு வாகனத்தை " பதிவு செய்துகொண்டு, கூடங்குளம் அணு உலை .எதிர்ப்பு போர் இன்று மையம் கொண்டிருக்கும் "இடிந்தகரை" மீனவ கிராமத்திற்கு சென்றிருந்தேன். சென்னை மீனவ சங்கத் தலைவர்களால் " அம்மாவிற்கு நன்றி" சொல்லி 25000 ரூபாய்க்கு , " விளம்பரம்" கொடுக்க பணம் இருக்கிறது: ஆனால் "கூடங்குளம் சென்று வர" பத்தாயிரம் ரூபாய் பணம் இல்லை என்ற "செய்தியை" கேள்விப் பட்ட பின்பே நானே "பணம் இல்லாவிட்டாலும்" கடன் வைத்துக்கொண்டு "வாடகை வாகனம்" எடுத்தேன். " ஞாயிற்றுக்கிழமை " தொடங்கிய "பட்டினிப் போர்" ஒவ்வொரு நாளும் அதிகமான "மக்கள் திரளை" திரட்டிக் கொண்டிருக்க, நான் சென்ற "வியாழக் கிழமை" பெறும் கூட்டமாக "அனைத்து சமூக" மக்களும் "திரண்டிருந்தார்கள்"

அந்த நான்கு நாட்களுக்குள் "வைகோ", தூத்துக்குடி கத்தோலிக்க பேராயர் யுவான் அம்புரோஸ், "பாலபிராஜாதிபதி அடிகளார்", "வெள்ளையன்", குமாரதாஸ், சீ.எஸ்.ஐ. பேராயர்கள், மாட்டார் கத்தோலிக்க பேராயர்கள், மித நேய மக்கள் கட்சியினர், இவாறு பல பிரமுகர்கள் வந்து ஆடஹ்ரவு டேஹ்ரிவித்த வண்ணமாய் இருந்தனர். தொடக்கத்தில் இருந்தே "அன்டன் கோமஸ்" என்னிடம் அன்றாடம் பேசிக்கொண்டே இருந்தார்.அதேபோல "பேராசிரியர் பாத்திமா பாபுவும்" ன்லமைகளை அன்றாடம் விளக்கிக் கொண்டே இருந்தார். " அடிகளார்" உடனே கூடங்குளம் வரும்படி "அழைத்துக் கொண்டே " இருந்தார். முதலில் "சனிக் கிழமை" இரவு "லிட்வின்" தொலைபேசியில் தொடர்பு கொண்டு "நிலைமை" அன்றாக இல்லை எனபதை கூறினார். அப்போது அவர் அருகே "உதயகுமாரும்" இருப்பதாக கூறினார். லிட்வின் "பெண்கள் இணைப்பு குழுவை" சேர்ந்தவர். உதயகுமார் சமீபத்திய ஆறு ஆண்டுகளாக "கூடங்குளம் எத்ரிப்பு" இயக்கங்களில், தன்னையும் "இணைத்துக் கொடவர்". உதயகுமார் "நாங்கள்" கூடங்குளம் எதிர்ப்பு இயக்கத்தை கட்டவிழ்த்து விட்ட "காலங்களில்" அதாவது "இருபத்து மூன்று" ஆண்டுகளுக்கு முன்பு, "அமெரிக்காவில்" அறிவியலாளராக இருந்தாராம். அவர் இங்கு வந்த காலம் தொட்டு தொடர்ந்து "ஒவ்வொரு கூட்டங்களிலும்" அவரே அதைச் சொல்லி நான் கேட்டிருக்கிறேன். பாதிப்பட்ட ஒருவர் நமது "அணு உலை எதிர்ப்பிற்கு" வந்துலாறே என்று நாங்கள் எல்லாம் பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

1988 இல் "கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு" இயக்கமாக உருவான போது, அன்டன் கோமசிற்கு உதவி செய்ய "சில அறிவியலாளர்கள்" இருந்தனர். அவர்கள் வியாழக்க் கிழமை நடந்த போராட கூட்டத்தின் மேடையில் "பேச்சாளர்களால்" நினைவு படுத்தப் பட்டார்கள். எழுத்தாளர் "கோணங்கி" தான் எப்படி " அறிவியலாளர் நாகார்ஜுனா" உடன் போராட்டத்தில் ஈடுபட்டேன் என்று விளக்கினார் அப்போது "அணு உலையை ஆதரித்தவர்கள்" அண்டத்திய கூட்டத்தில் தாங்கள் இருவரும் போய் "துனடரிக்கை" கொடுத்து "அடிவான்கினோம்" என்றும் விளக்கினார். அந்த "நாகார்ஜுனன்" என்ற பெயரில் எழுதிவரும் எழுத்தாளரான "அறிவியல்லாரனா" நண்பர்தான் "ஜி.ரமேஷ்". அவர் அப்போது "ஊடவியலாளராக" சென்னையில் "யு.ஏன்.ஐ. செய்தி நிறுவனத்தில்" பணியாற்றி வந்தார். அவர்தான் பிறகு "லண்டன் அனகேரில்" பி.பி.சீ. நிறுவனத்தில் சேர்ந்து பணியாற்றி இப்போது, லண்டனில் " அம்னெஸ்டி இன்டர்நேஷனல் " என்ற உலக பொதுமன்னிப்பு சபையின் "தெற்காசிய ஆராய்ச்சி போருப்பாலார்க்க" செயல்பட்டு வருகிறார். சமீபத்திய " மரணதண்டனை ஒழிப்பு" என்ற மூன்று தமிழர் உயிர் காக்க "அம்னெஸ்டி" அனுப்பிய அறிக்கைக்கு பின்னால் இருப்பவர். சமீபத்திய " சட்டீஸ்கர், ஒரிஸ்ஸா மாநில" கனிம வலக் கொள்ளையை அம்பலப்படுத்தும் "ஆராய்ச்சி புத்தகத்தை" அம்னெஸ்டி அசார்பில் வெளிக் கொண்டு வருவதில் முழுமையாக செயல்பட்டவர். வரத்தான் எனக்கு முதலில், நான் "பதின் மூன்று ஆண்டுகள்" தலைமறைவு வாழ்க்கைக்கு பிறகு வெளியே வந்தவுடன் " மயிலாப்பூரில்" இந்த அணு உலை எதிர்ப்பை சொல்லிக் கொடுத்தவர்.

அந்த ரமேஷ்தான் " ஜார்ஜ் பெர்னாண்டசை" எங்களுக்கு அறிமுகம் செய்தவர்.'அன்டன் கோமசையும்" எனக்கு ரமேஷ்தான் அறிமுகம் செய்தார். அப்போதுதான் "ஜார்ஜ் " எங்களுக்கு "அணு உலை ஆபத்தை " வ்குப்பு எடுத்துள்ளார்.சென்னையில் டாக்டர் சீ.ஏன்.தெய்வ நாயகம் எங்களுக்கு "அணு உலையின்" ஆபத்துகளை, அதன் விளைவாக ஏற்படும் "புற்று நோய்" கோளாறுகளை மருத்துவ ரீதியாக சொல்லிக் கொடுத்தவர். அதற்காக " காணொளி" மூலம் "கல்பாக்கம்" அணு உலையின் " உடல் பத்திப்புகளை" அங்குள்ள தொழிலாளர்களிடம் " சோதனை செய்த" புள்ளி விவரங்களை "பட்டியல்போட்டு" ஆதாரபூர்வமாக கற்றுக் கொடுத்தவர். இப்படி பல்வேறு அனுபவங்களை அங்கே "நண்பர்களுடன்" பரிமாறிக் கொள்ள முடிந்தது.

வியாழக் கிழமை " இருபத்தைந்தாயிரம்" மக்கள் இடிந்தகரையில் "பட்டினிப் ஓராட்ட" மைதானத்தில் கூடி இருந்தனர். நான் போன பிறகு, "அமலிநகர்" வருகிறார்கள்." கூடங்குளம் மக்கள்" வருகிறார்கள். "செட்டிகுளம்" மக்கள் வ்ருகிரார்கள் "கூட்டன்குழி மீனவ மக்கள்" வ்ருகிரார்கள்." கூட்டப்புளி கிராமமே" திரண்டு வருகிறது. இப்படி அறிவிப்புகள் அதையொட்டி "மக்கள் கூட்டமும்" அவனது கொண்டே இருந்தது. இந்த "மாபெரும் மக்கள் திரளை" யாரும் பார்த்திருக்கவும் முடியாது. இதை புரிந்து கொள்ளாத "ஆட்சியாளர்கள்" தொடர்ந்து "மக்களது மனங்களில்" நிலைத்திருக்கவும் முடியாது எண்பதை அந்த "கூட்டம்" கட்டியம் கூறியது.