Friday, September 9, 2011

உள்துறை " வண்டிக்கு பின்னால் குதிரையை" கட்டுகிறதே?

குதிரை வண்டியை வைத்தே நமது "கிராமங்களில்" பல "பழமொழி" சொல்வார்கள். ஆங்கிலத்தில் கூட, " கம்பும், கேரெடடும் " என்று ஒரு பழமொழி உண்டு. அதாவது, "குதிரைக்கு" முன்னால் "கேரெட்டை" கட்டிவிட்டு, அதை நோக்கி அந்த குதிரை ஓடிக்கொண்டே இருக்க, தானாகவே அந்த குதிரையில் கட்டியுள்ள வண்டி நகரும்.என்பதுதான் அதன் பொருள். அதை அப்படியே பயன்படுத்தி, ஆங்கிலத்தில் "கம்பும், கேரெட்டும்" கொள்கையை "ஆள்வோர்" பின்பற்றுகிறார்கள் என்பார்கள். அதாவது "ஒருபுறம் அடித்துக் கொண்டே" இன்னொரு புறம் "சலுகை" கொடுப்பது என்று பொருள். அதேபோல "குதிரைக்கு முன்பு வண்டியை கட்டுகிறார்கள்" என்றும் ஒரு பழமொழி உண்டு.

அந்த "பழமொழியை" நமது சிதம்பரத்தின் உள்துறை இப்போது பயன்படுத்துகிறது என்று தெரிகிறது. அதாவது சிதம்பரத்தின் "உள்துறை அமைச்சகம்" மூலம் அவர் முதலில் "அப்சல் குருவிற்கு" மரணதண்டனையை அறிவிக்கும் ஏற்பாட்டை "குடியரசு தலைவர்" மூலம் செய்தார். அடுத்து உடனேயே, "தமிழ்நாட்டில் உள்ள மூவருக்கும்" மரணதண்டனையை உறுதிப் படுத்த ஏற்ட்பாடு செய்தார். அதை அடுத்து "பஞ்சாபில்" உள்ள சீக்கியரான தேவ் புல்லாருக்கு மரன தண்டனை உறுதிப் படுத்தினார். அதில் "தமிழகம்" முதலில் விழித்ஹ்டுக் கொண்டு, "சட்டமன்ற தீர்மானம்" போட்டு "மரண தண்டனையை". குடியரசு தலைவரே "ஆயுள் தண்டனையாக" குறையுங்கள் என்று கேட்டுக் கொண்டது. உடனேயே அதுவே "காஷ்மீர் சட்டமனரத்தில்" வெடித்தது. அது அப்படியே "பஞ்சாபிற்கும்" நீளும். ஜனநாயக ரீதியாக "தனது முடிவுகளுக்கு" எதிர்ப்பு வருவதை சிதம்பரம் விரூம்பவில்லை.

அதன்விளைவே "டில்லி வெடிகுண்டு" வெடித்தது. அவசர, அவசரமாக "ஏற்பாடு "செய்ததநாளோ என்னவோ, இதுவரை "யார்" குண்டு வைத்தார்கள் என்று வெளியே சொல்லமுடியாமல் உள்துறை திணறுகிறது. இதுபோன்ற "வில்லங்கமான " நிலைமைகள் வரும்போதெல்லாம், "காங்கிரஸ் கட்சியில்" எதிர்ப்பு இருந்தாலும், சிதம்பரத்திற்கு "பா.ஜ.க." உதவி செய்வது உண்டு. "அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம்" விசயத்திலும் அதுபோல "நடந்திருகிறது" ஒன்று இந்த டில்லி குண்டுவெடிப்பை 'சிடஹ்ம்பரதிற்கு" உதவும் பொருட்டு, பாஜக கும்பல் வைத்திருக்க வேண்டும். அல்லது 'உள்துறையின்" நேரடி கை இதில் இருக்க வேண்டும் எண்பதை நாம் கடந்த "இரண்டு" கட்டுரைகளில்" தெளிவுபட கூறியிருந்தோம். இப்போது அடுத்த கட்ட "ஊடக பரப்புரையை" சிதம்பரம் அவிழ்த்து விடுகிறார்.

முதலில் "ஹுஜி" அடுத்து "இந்திய முஜாஹுதீன்"> அடுத்து "ஜெய்ஷே முகமது". அடுத்து "லஷ்கர் ஈ தொய்பா". இப்படி எல்லாமே "காஷ்மீர் அமைப்புகள்". ஆகவே "அப்சல் குரு" மீது "தீவிரவாத" முத்திரை குத்தி விடலாம். அடுத்து "தமிழ்நாட்டின் மூன்று தமிழருக்கு" என்ன செய்? என்று சிதம்பரம் சிந்திக்கிறார். இப்போது ஆங்கில ஊடகங்களில் "விடுதலைப் புலிகள்" விசயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று எல்லா மாநிலங்களுக்கும் சொல்லியிருகிராராம். ஆரம்பிச்சுட்டாரா? அவரது வேலையை? அடுத்து "பஞ்சாபின் புல்லாரா" விசயத்திற்கு என்ன செய்? உடனே "பாபர் கல்சா" இயக்கம் மீதும் சண்டேஹ்கம் உள்ளது என்று கிளப்பி விடுகிறார். எல்லாமே "மரண தண்டனை "அறிவிக்கப்பட்டுள்ள கைதிகள் பற்றிய "குற்றப்பத்திரிகை" குற்றச்சாட்டுகள்தான் இப்போது புரிகிறதா? டில்லி குண்டு யார் வைத்தது? எதற்காக வைத்து என்று? எல்லாம் 'சிதம்பர ரக சியம்"தான்.

சரி. மரண தண்டனையை அறிவித்து விட்டு பிறகு இந்த "குண்டுவெடிப்புகள்" பற்றிய "கருத்து குண்டுகளை" போடும் சிதம்பரம் அண்ணாச்சி, உங்களுக்கு "வண்டிக்கு பின்னால் குதிரையை" கட்டுகிறோம் என்பது தெரியவில்லையா?

அண்ணா ஹசாரே "மாயையை " உடைத்த "அருணா ராய்"

அண்ணா ஹசாரே "மாயையை " உடைத்த "அருணா ராய்"
நேற்று "அருணா ராய்" சென்னை வந்தார். முதலில் காலையில் " தேசிய தொழிலாளர் கவுன்சில்" சார்பாக நடந்த "ஊழலை எதிர்த்து போராட" என்ற தலைப்பில் , "ரூத் மனோரமாவும்", சாமியும் ஏற்பாடு செய்த கூட்டத்தில் பேசினார். அதில் முக்கியமாக "ஊழல் என்பது பொருளாதார் ஊழல் மட்டும்தானா?" என்ற கேள்வியை முன்வைத்தார். " அதிகாரத்தை தவறாக பயன்படுத்தலும்" ஊழல்தானே என்று சிந்திக்க வைத்தார். குஜராத்தில் "அதிகாரத்தை பயன்படுத்தி மோடி முஸ்லிம்களை கொலை செய்ததும்" ஊழல்தானே என்றார். "தலித் மற்றும் பழங்குடியினரை அதிகாரத்தின் மூலம் இழிவுபடுத்துவதும்" ஊழல்தானே என்றார். "இட ஒதுக்கீட்டை" அதிகாரம் மூலம் "அப்புறப்படுதினாலும்" ஊழல்தானே என்றார். அரசாங்கம் முன்வைத்த "லோக்பால்" வரை நகலும் "சரியில்லை" என்றார். அதனால்தான் மக்களது எதிர்ப்பு அரசுக்கு எதிராக வந்தது என்றார்.

" சட்டமாவதற்கு முன்பு மக்கள் கருத்தறிவது" என்பது இந்த "ஊழல் தடுப்''பு" சட்டம் ப்வ்விசயத்தில் நடந்துள்ளது "'நல்லது" என்றார். அதைதான் தாங்கள் "தகவல் பெரும் உரிமை சட்டத்திற்காக" செய்தோம் என்றார். அருணா ராய் 1968 இலிருந்து 1974 வரை, ஐ.ஏ.எஸ். ஆக பணியாற்றியவர். அதன்பின் வேலையை தூக்கி எறிந்துவிட்டு, ராஜஸ்தானில் உள்ள " எம்/கே.எஸ்.எஸ்." என்ற " தொழிலாளர்-விவசாயிகள்-போராடும் அமைப்பில்" முழுமையாக பணி செய்தவர். அப்போதுதான் " என்.சீ.பி.ஆர்.ஐ." என்ற "தேசிய தகவல் பெறும் மக்கள் உரிமை பிரச்சாரம்" எனும் அமைப்பில் உருவாக்கி இயக்கினார். அதில் இரணூற்று ஐம்பது௦ உறுப்பினர்கள் இருகிறார்கள். "தகவல் பெரும் உரிமை சட்டம்" கொண்டுவர மூலகாரணமாக இருந்த இவரை, சோனியா காந்தி தனது "தேர்தல் பரப்புரைக்கு" பா.ஜ.க. வை தோற்கடிக்க "மதசார்பற்ற" தன்மை என்ற 'வண்ணத்தை " தக்கவைக்க பயன்படுத்தினார். அதனாலேயே சோனியா தலைமையிலான ' தேசிய ஆலோசனை கவுன்சிலில்" அருணா ராய் முக்கிய இடம் வகித்துள்ளார்.

இப்போது "அரசாங்கம் வைத்துள்ள லோக்பாலுக்கு", அண்ணா ஹசாரே வைக்கும் "ஜன்லோக்பால்" வரை நகல் பெரும் "'இடரை" ஏற்படுத்தியுள்ளது. அந்த நேரம் பார்த்து " தே. த.பெ.ம.உ.பி." முன்வைக்கும் "ஊழல் தடுப்பு வரை நகல்" ஒரு " அப்பாடா" நிலைமையை ஆள்வோருக்கு ஏற்படுத்தி உள்ளது. இதில் '' நீதித்துறையை சுதந்திரமாக செயலபட விடமாட்டீர்களா? என்று இவர் கேட்கிறார். அண்ணா ஹசாரே கும்பலின் "இந்துத்துவா" சாயத்திற்கு "சரியான பதிலடி" கொடுக்கிறார். "நாடாளுமனறத்தை" எப்படி ஓரம்கட்டி, "மக்கள்" என்ற பெயரில் 'மேட்டுக்குடியை மட்டும் "பேஸ் புக்" " ட்விட்டர்" மூலம் திரட்டி, இந்தியாவின் "ஜனநாயக" நெறிமுறைகளை உடைக்கலாம் என்று இவர் கேட்கிறார். "அரசாங்க" அதிகாரிகள் மட்டும்தான் ஊழல் புரிகிறார்களா? என்ற வினாவை எழுப்புகிறார். "'குடிமக்கள்" என்று அன்னா ஹசாரே குழுவினர் கூறுவது, "அடிப்படை மக்களை" சேர்க்கவில்லை'ய' என்று வின்வுகிறார்.

அன்னா ஹசாரே குழுவில்' உள்'ள்' ஐந்துபேர் " மக்கள் பிரதிநிதிகளா?" என்ற கேள்வியை எழுப்புகிறார். நாடாளுமன்ற "நிலைக் குழுவிற்கு" அனைத்து "வரை நகல்களும்" சென்றுள்ளது நல்லது என்கிறார். நிலைக் குழு அதிக "அதிகாரம்" கொண்டது என்கிறார். நிலைக் குழுவில் எல்லா கட்சிகளின் "பிரதிநிதிகளும்" வந்துவிடுவார்கள் என்றார். நாடாளும்னறம் "தவிர்த்து சட்டம் இயற்ற முடியுமா? எனக் கேட்டார். அன்னா ஹசாரே "பாணியை" அனுமதித்து "மேட்டு குடிகளை" தெருவில் திரட்டி, "கொள்கைகளை" தீர்மானிக்க "அனுமதித்தால்" நாளை " மத சார்புள்ள நாடு" என்றும், இட ஒதுக்கீடு வேண்டாம் என்று'ம அந்த மேட்டு குடி கும்பலை" தெருவில் திரட்டியே "'உருவாக்கி விடுவார்கள் என்றார். 'உதித்ராஜ்" என்ற தலித் தலிவர் ஒரு " பஹுஜன் லோக்பால்"'' வரை நகலை வைத்துள்ளார் என்றார்.தலித்,சிறுபான்மை,பெண்கள் ஆதிவாசி"ஆகியோராது "பிரதிநிதிகள் இல்லாத " தயாரிப்பு' குழுவை எப்படி ஏற்பது என்றார். இவரது "வாதங்கள் " பா.ஜ.க.வின் " சாயம்"தான் அண்ணா ஹசாரேவிடம் இருக்கிறது என்பதாக " அம்பலப்படுத்தியது".


எல்லா வரை நகல்களையும் "நிலைக்குழு" ஆய்வு செய்து "'மக்களது கலந்தாலோசனையுடன் " ஒரு சரியான''ஊழல் தடுப்பு வரை நகலை" உருவாக்க வேண்டும் என்றார்அருணாராய்.இது"'தொலைநோக்கில்"இந்திய மக்களுக்கு பயன்படுவதாக "தோற்றம் " அளித்தாலும், உடனடியாக அன்னா ஹசாரேவால் வளர்ந்துவரும் பா.ஜ.க. மாயையை" மட்டுப்படுத்த உதவும். இதுதானே "சோனியா" விரும்புவதும். ஆனாலும் "அடிப்படை மக்களை" ஓரந்தள்ளி "அண்ணா ஹசாரே வாழ்க" என்று முழக்கமிட்ட "அறிவுஜீவிகளுக்கு" ஒரு நல்ல சூடு. சென்னையில் இதுவரை நடந்த " ஐ.ஏ.சீ." என்ற : ஊழல் எதிர்ப்பு இந்தியர்கள்" அமைப்பு "தமிழர்களை" இணைப்பதில் "கவனம்" செலுத்துவதை விட, "மார்வாடிகளை" அரவணைப்பதிலேயே "''கவனம்" செலுத்தியது என்ற உண்மையை நாம் மறக்க முடியாது.அதனால்தான் அவர்கள் சென்னையில் "இந்தியில்" முழக்கம் போட்டு "தனிமைப்பட்டார்கள்".." அன்னா ஹசாரே வாழ்க" என்று முழக்கமிட்டு " ஊழல் எதிர்ப்பை" பின்னமே தள்ளினார்கள் எண்பதை நாம் நினைவுபடுத்தி பார்க்க முடிகிறது.

அதிகமாக ' "பேசுபவர்களை" , செயலிலே ஈடுபட''அருணா ராய்" கேட்டுக் கொண்டார். சிறிய செயலில் கூட ஈடுபடாத "அறிவுஜீவிகள்" பலரும் "அண்ணா ஹசாரே"' பின்னால் திரண்டதை நாம் எண்ணிப் பார்க்க முடிந்தது. அதிர்ச்சி செய்தியாக அருணா ராய் " ஒரு தமிழச்சி" என்பதையும் வெளிப்படுத்தினார். தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்து பிறகு, வடக்கே போய்விட்டதால், "தமிழை"'' சரளமாக பேச மறந்து விட்டவர் என்று தெரிந்தது

டில்லி குழப்பினால், மக்கள் குழம்புவாரா?

நேற்று "டில்லிக்கு" அடுத்த "சான்று" இன்னொரு இணைய அஞ்சல் கிடைத்துள்ளது. இது "வெடி வைத்தது" நாங்கள்தான் என்று "இந்திய முஜாஹுதீன் " என்ற அமைப்பும் ஒரு "இணைய அஞ்சலை" அனுப்பியுள்ளதாக "கொடுக்கப்படும் தகவல்". இந்த "அமைப்பு" பற்றியும் நமது "மத்திய "உளவுத்துறைகள்" ஒவ்வொரு "வெடி விபத்திலும்" கண்டுபிடிக்க முடியாத "கட்டங்களில்" சொல்லிவந்ததுதான் "நமக்கு" தெரியும். "இந்திய முஜாஹுதீன்" என்ற அமைப்பின் செயல்பாடுகளைஆற்றி ஒன்றும் "அறியாது" இருக்கும் நமக்கு, நமது "உளவு துறைகள்" அவ்வப்போது தருகின்ற "புலனாய்வு" தான் புலப்படுத்தியுள்ளது. :ஹுஜி" பற்றியும் நமக்கு "உளவு துறைகள்" சொல்லித்தான் தெரியும். இந்த இஅரண்டு அமைப்புகளையும் "பயங்கரவாத" அமைப்புகள் என்று "திரும்ப, திரும்ப" சொல்லி, உளவு துறைகள் "கவனமாக " கசியவிட்ட செய்திகளை "அப்படியே" அள்ளிக் கொண்டு, ஏடுகளும், காட்சி ஊடகங்களும் "வெளியிட" அதையே "நம்பி" வாழும் அப்பாவி பொதுசனம்தானே நாம்?

இப்போதாவது "செய்திகளுக்கு" இடையில் உள்ள "உண்மைகளை" ஆராய்ச்சி செய்ய முயற்சிக்கலாமா? அதாவது இதுவரை எத்தனையோ "குண்டு வெடிப்புகள்" இந்தியாவில் நடந்தும்கூட, அவற்றில் "பலவற்றை" இன்னமும் "யார் செய்தார்கள்" என்று கண்டுபிடிக்காத நிலைதான் உள்ளது. அதிலும் "முக்கியமாக" டில்லி உயர்நீதிமன்றத்தில், மே மாதம் 25 ஆம் நாள் "நடந்த" குண்டுவெடிப்பு பற்றி இன்னமும் "கண்டுபிடிக்கவில்லை". கண்டுபிடிக்காதது மட்டுமில்லை,அந்த "இடத்தில்" ஒரு "சீ.சீ.டி.வி. கேமெரா " கூட வைக்கவில்லை. "யாரும்" அந்த வெடிப்பில் சாகவில்லை" என்பதுதான் "காரணமா?" அல்லது "தன்களுக்கு" தெரிந்த "சக்திகள்தான்" வைத்தார்கள் என்பது "காரணமா?" அதேபோல இதுவரை ஏன் "டில்லி ஜூம்மா மசூதி" முன்னால் நடந்த ' குண்டுவெடிப்பையும்' , யார் செய்தார்கள் என்று இதுவரை "கபடு பிடிக்கவில்லை". மசூதி முன்னால் நடந்த "குண்டுவெடிப்புக்கு" எந்த "இந்துத்துவா" அமைப்பையும் "குற்றம்" சாட்டாத இந்த "உளவு துறையினர்" எதற்காக "உயர் நீதிமன்ற " குண்டு வெடிப்புக்கு, "அவசர, அவசரமாக" முஸ்லிம் அமைப்புகளின் பெயர்களை "வெளியிடுகிறார்கள்?". அதையும் நமது "ஊடகங்கள்" பெரிதாக விளம்பரப்படுதுகிறார்கள்?

"கண்டுபிடிக்க முடியாத" குண்டு வெடிப்புகளுக்கு "ஹுஜி" அமைப்பையும், "இந்திய முஜாஹுதீன்" அமைப்பையும் "உடனடியாக" குற்றம் சாட்டும் நிலையை "உறவாககும்" உளவு துறையினர், இந்த இரு மைப்புகளையும் "கற்பனையில்" உருவாக்கி வைத்துள்ளனரா? அல்லது இவை இரண்டும் உணமையிலேயே இயங்கி வருகின்றனவா? என்ற கேள்விகூட நமக்கு எழுகிறது. இன்று காலை அந்த "அண்ணாசாலை ஆங்கில ஏடு" ஒரு ஆய்வு கட்டுரையே வெளியிட்டுள்ளது. அதாவது "இந்திய முஜாஹுதீன்" அமைப்பு ஒரு "அரசியல் அறிககையை" வைதுக்கொண்டுள்ளதாம். அதில் அவர்கள் "இந்தியாவில் இயங்கும் நீதிமன்றங்கள், முஸ்லிம்களுக்கு எதிராக தீர்ப்பு" கொடுக்கின்றனர் என்று கூறியுள்ளனராம். அய்யா, அதை சொல்வதற்கு ஏன் "இந்திய முஜாஹுதீன்" வரவேண்டும். முறையாக ஏடுகள் படகும் "யாரும்" இந்த கருத்தைதானே சொல்வார்கள்? அதுமட்டுமின்றி, "முஸ்லிம்களே, இன்னமும் இந்தியாவில் உள்ள ஆர்சியல்வாதிகளையும், நீதிமன்றங்களையும்" நம்பிக் கொண்டு இருக்காதீர்கள் என்று அந்த அறிக்கை கூறுகிறதாம். இதே "கருத்தைதானே" நாம் எல்லோரும் சொல்லிக் கொண்டிருக்கிறோம்? முச்ளிம்குக்கு மட்டுமா, எல்லா ஏழை ம்க்களுக்கும் இதைத்தானே "சொல்லவேண்டி " இருக்கிறது.

அடுத்து இன்று "அங்கில ஏடுகளில்" குற்றம் சாட்டப்படும் "ஹுஜி" அமைப்பு, :ஜைஷே முகமது" என்ற "காஷ்மீர் விடுதலை அமைப்புடன் " தொடர்பு கொண்டு இதை செய்திருக்கலாம் என்ற "சந்தேகத்தை" விதைதிருகிரார்கள். அதேபோல, சந்தேகிக்கப்படும் "ஹுஜி" அமைப்பு, "லஷ்கர் ஈ தொய்பா"வுடன் இணைத்து இந்த "குண்டுவெடிப்பை" செய்திருக்கலாம் என்று "ஒரு சந்தேக குண்டை" போட்டிருகிறார்கள். இதில் "லஷ்கரும், ஜைஷே முகமது"வும் "பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் " என்று இந்திய அரசு கூறும் "விடுதலை பெற்ற காஷ்மீர்" பகுதியில் இருந்து செயல்படும் "காஷ்மீர் விடுதலைக்கான" ஆயுதம் தாங்கிய அமைப்புகள்.அவர்கள் ஏன் "டில்லி உயர் நீதிமன்றத்தில்" குண்டு வைக்க வேண்டும் என்பது ஒரு புரியாத "புதிர்". இவ்வாறு "டில்லி குண்டுவெடிப்பை" எப்படியோ "காஷ்மீர் விட்தளையுடன்" முடிச்சு போட்டு விட்டோம் என்று ஆள்வோர் திருப்தி படலாம். ஆனால் மக்கள் நம்ப வேண்டுமே?