Wednesday, September 7, 2011

ஒருவரை ஒருவர் குற்றம் சாட்ட மீண்டும் டில்லி குண்டு.

ஒருவரை ஒருவர் குற்றம் சாட்ட மீண்டும் டில்லி குண்டு.
நாம் சந்தேகப்பட்டது "பாதி" சரி என்பதுபோல, "நிகழ்வுகள்" நடந்துகொண்டு இருக்கின்றன. இப்போது "ஹுஜி" என்ற அமைப்பு "தான்தான்" வெடிகுண்டு வைத்ததாக ஒரு "இணைய அஞ்சல் " அனுப்பியுள்ளது என்பது ஒரு செய்தி.இந்த "ஹுஜி" அமைப்பு பற்றி நாம் சொல்லியாக வேண்டும். சமீப காலமாக இந்தியாவிற்குள் நடந்த ஒவ்வொரு வெடிகுண்டு விபத்திலும், "கண்டுபிடிக்க முடியவில்லை" என்ற நிலையில் இந்திய உளவுத்துறைகள் கடைசியாக அது "ஹுஜி" அமைப்பின் "கைவரிசை" என்று குற்றம் சாட்டியுள்ளனர். அந்த "ஹுஜி" அமைப்பு என்பது, "ஹர்கத் -உள்-ஜிஹாத் இஸ்லாமி"என்று விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த அமைப்பு "வந்காலதேசதிளிருந்து" இயங்குகிறது என்றும் தொடர்ந்து கூறி வருகிறார்கள். இப்போது வங்காள தேசம் சென்ற தலைமை அமைச்சர் மன்மோகன்சிங், "கைதிகள் பரிமாற்றம்" என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டதால் "பதிக்கப்படும்: இயக்கங்கள் இந்த வெடிகுண்டை வைத்திருப்பார்களா என்ற கேள்வியை நாம் சென்ற "கட்டுரையில்" கேட்டிருந்தோம். அதையொட்டியே அந்த "இணைய அஞ்சல்" அனுப்பியவர்களும் சிந்தித்ததால் அப்படி கூறிவிட்டனரா?

அடுத்து "அப்சல்குரு"வின் மரண தண்டனையை "ஆயுள் தண்டனையாக " குறைக்க "காஷ்மீர்" சட்டமன்றம் "தயார்" ஆகிவரும் நேரத்தில் இந்த "குண்டு" வெடித்துள்ளதால், மரண தண்டனையை "அப்சல் குருவிற்கு" கொடுக்க விரும்பும் "சக்திகள்" இதை செய்திருக்கலாம் என்று நாம் சந்தேகப்பட்டோம். இப்போது அந்த "இணைய அஞ்சல்" உண்மையானதுதானா என்று சோதிப்பதாக இந்தியாவின் "தேசிய ஆய்வு அஜென்சி " தலைவர் கூறியுள்ளார். ஆர்.எஸ்.எஸ். இந்த "குண்டை" வைத்திருந்தால் அதை " ஒரு பயங்கரவாதி" அமைப்பு மேல் போடும் தந்திரத்தை "காங்கிரஸ் சார்பு தேசிய ஆய்வு அஜென்சி" ஏற்றுக் கொள்ளாது. அதுமட்டுமின்றி, எல்லோருக்கும் தெரிந்த பகுத்தறிவு என்ன என்றால், "அப்சல்குரு" வை "தூக்கில் போட" விரும்பும் சக்திகதான் இந்த "குண்டை" வைத்திருக்க முடியும். அதுவும் வந்த "இணைய அஞ்சல்" அப்சல் குருவை தூகிலட்க் கூடாது என்று எழுதியுள்ளதாம். இந்த "கதையை" நம்ப இதியாவில் மட்டுமல்ல உலகிலேயே எந்த "முட்டாளும்" இன்று இல்லை. ஏன் என்றால் அப்சல்குருவிற்கு "தூக்கு" போடுவதை எதிர்த்து, சட்ட ரீதியாக, ஜனநாயக ரீதியாக ஒரு "சட்டமன்றமே" தயார் ஆகும்போது, யாராவது "மடையன்" ஒரு குண்டை போட்டு அதை கெடுப்பானா? அதனால் "ஹுஜி" ஒன்று இயங்குவது உண்மையாக் ஐருந்தாலும் அவர்கள் இந்த "நேரத்தில்" இந்த குண்டை போட மாட்டார்கள்.

அடுத்து மாட்டுபவர் "சிதம்பரம்"தான். அவர்தான் "உள்துறை". அவரது உளவுத்துறை என்ன வேலை செய்கிறது என்று கேள்வி எழுந்துள்ளது. அவர் தனது "உள்துறை டில்லி காவலருக்கு: ஜூலையிலேயே இப்படி ஒன்று நடக்கும் என்று கூறிவிட்டோம் என்கிறது. அப்படியானால் இவர்களுக்கு தெரிந்துதான் இது நடந்துள்ளது. அப்புறமும் ஏன் 'டில்லி இயற்நீதிமன்றத்தில்" கேமராக்கள் பொருத்தவில்லை என்று அடுத்த் அக்கேள்வி எழுந்துள்ளது. அதற்கு பொறுத்த திட்டம் உள்ளது என்கிறார்கள். அப்படியானால் "இந்த குண்டை" முதலில் வைத்துவிட்டு, பிறகு "கெமர" பொருத்தலாம் என்று இருந்தார்களா? அப்படியானால் "குண்டு" வைத்தவர்களும், "கேமரா" போருத்தவேண்டியவர்களும் ஒரே இடதிளிருந்துய் "இயங்குபவர்களா?" அப்பப்பா, இந்தியாவினின் "தலைநகரில்" உள்ள "பார்ப்பனீய சக்திகளின்" கைவண்ணங்கள் "தலையை" சுற்றுகின்றன.

காஞ்சியில் பரபரப்பை ஏற்படுத்திய "சுவரொட்டி".

காஞ்சியில் பரபரப்பை ஏற்படுத்திய "சுவரொட்டி".
தினமலரின் "திருகு தாளத்திற்கு" பதில் கொடுக்க, காஞ்சியில் "இந்திய மக்கள் முன்னணி", : நாட்டுப் பற்றாளர் கழகம்", "அம்பேத்கர் பாசறை" ஆகிய மைப்புகள் இணைந்து ஒரு "சுவரொட்டியை" இன்று காலை ஒட்டி இருக்கிறார்கள். அதில் " கொலைகாரர்களான ஜெயேந்திரன், சுப்பிரமனியாசாமி, சந்திராசாமி, ஆகியோருக்கு "தூக்கு தண்டனையை " நிறைவேற்ற, தினமலரே, துக்ளக் சோவே, குரல் கொடுப்பீர்களா?" என்று அச்சிடப்பட்டுள்ளது. இது உண்மையை உலகுக்கு சொல்வதாக இருக்கிறது. இதற்கு பிறகு, தினமலர் தனது "கொச்சை" கட்டுரையை இணைய தளத்திலிருந்து நீக்கி விட்டதாக ஒரு செய்தி வந்துள்ளது.

டில்லி வெடிகுண்டு ஆர்.எஸ்.எஸ். வைத்ததா?

சமீபத்திய நடவடிக்கைகள், உதாரணமாக அது "சீ.பி.ஐ. சோதனையாக இருக்கட்டும், சீ.பி.ஐ. கைதாக இருக்கட்டும், குண்டு வெடிப்பாக இருக்கட்டும், அதற்கான கைதாக இருக்கட்டும், உள்துறை செயலாக இருக்கட்டும், குடியரசு தலைவரின் கருணை நிராகரிப்பாக இருக்கட்டும்" எல்லாமே "ஏதாவதொரு அரசியல் காரணங்களுகாக" செயப்படும் செயல்கள் என்பது அம்பலமாகி வருகிறது. ஒன்று "அரசியல் கட்சிகளுக்குள்" அல்லது "ஆளும் கட்சியின் கோஷ்டிகளுக்குள்", அல்லது "மாநில ஆட்சிகளுக்கு" எதிராக, அல்லது "அண்டை நாட்டுக்கு" எதிராக என்பதாக அம்பலப்பட்டு வருகிறது. இதில் இன்றைய டில்லி வெடிகுண்டு வெடிப்பு எந்த " ரகத்தை" சேர்ந்தது?" என்பதே கேள்வி.

உச்சநீதிமன்றத்தில் வெடிகுண்டு வெடித்து பத்துக்கு மேற்பட்டோர் பலி என்ற செய்தி நிச்சயமாக அதிர்ச்சி தருகிறது. டில்லி இப்போது " ஐக்கிய அசாம் விடுதலை முன்னனி" என்ற "தடை" விதிக்கப்பட்ட புரட்சிகர அமைப்புடன் பேசிக்கொண்டிருக்கிறது. அதாவது "பேச்சுவார்த்தை" நடத்திக் கொண்டிருகிறது. அதற்கு "குந்தகம்" விளைவதுபோல டில்லியின் கரங்களில் உள்ள " இரண்டு உளவுத்துறைகளும்" வெடி வைக்கும் வேளையில் இறங்குவார்களா? என்பது சந்தேகத்தை கொடுகிறது. அந்த குறிப்பிட்ட பேச்சுவார்த்தையில் "கலந்துகொள்ளாத" தலைமறைவு அமைப்புகள் இதை செய்திருப்பார்களா? உல்பா வுடனான பேச்சுவார்த்தையை உடைக்க இப்படி செய்வார்களா? என்றால் அதற்கு அதிக " நியாயம்" இல்லை. அதேசமயம் வங்காள தேசம் சென்ற தலைமை அமைச்சர் மன்மோகன் சிங் " கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தில்" கைஎழுதிட்டிருகிறார். இது "வட கிழக்கில்" உள்ள அணைத்து "தலைமறைவு ஆயுதம் தாங்கிய" அமைப்புகளையும் "நெருக்கடிக்குள்" தள்ளும் முயற்சி. அதனால் அவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இப்படி செய்திருப்பார்களா? என்றால் அதற்கும் அதிக "நியாயம்" இல்லை. ஏன் என்றால் "ஒவ்வொரு" அமைப்பாக பேச்சுவார்த்தை நடத்த டில்லி "தயார்" என்ற் அறிவிததிருகிறது.

அப்படியே இருந்தாலும் "வட கிழக்கின்" எந்த ஒரு அமைப்பும் அவர்கள் பகுதியில்தான் இப்படி "வெடிக்கும்" வேலையை செய்வார்கள். அப்படியானால் "யாருக்கு மேற்கண்ட பேச்சுவார்த்தையால்" அதிக கோபம்? அது "இந்துத்துவா" அமைப்புகளுகுதான். ஏன் என்றால் அவர்கள்தான் சமீப காலமாக "வட கிழக்கில்" மீன் பிடிக்க நுழைந்தவர்கள். அதுமட்டுமின்றி, " காஷ்மீர்" இப்போது பற்றி எரிகிறது. "அப்சல்குரு" வின் நியாயங்கள் எதிரகட்சியான "மக்கள் ஜனநாயக கட்சி" தலைமையான "மக்பூபால்" பேசபடுகிறது. சட்டமன்ற தீர்மானம் வரை "அப்சல் குருவை" காப்பாற்ற பரிசீலிகப்படுகிறது. இதை "அதிகம்" விரும்பாதவர்கள் "இந்துத்துவா" வாதிகள். அரசியல் ரீதியில் விரும்பாதவர் இந்த "மரண தண்டனைகளை" நிறைவேற்ற துடிக்கும் "சிதம்பரம்". இந்த இருவரில் யாரோ இப்படி "டில்லியில் குண்டுவைத்து" இந்திய மக்களின் மனப்போக்கையே திருப்பிவிட முயற்சிக்கலாம்.

அதன்மூலம் "பயங்கரவாதிகளை" தூக்கில் போடவேண்டும் என்ற "கிளிப்பிள்ளை" படத்தை திரும்ப படிக்கலாம். அல்லது "பயங்கரவாதிகளுடன்" பேச்சுவார்த்தை வேண்டாம் என்ற "கிளிப்பிள்ளை" பாடத்தை திரும்ப படிக்கலாம். பொறுத்திருந்து பாப்போம். யார் மீது ஆள்வோர் குற்றத்தை சுமத்துகிறார்கள் என்று.

நீதி கேட்கும் இரண்டாம் வகை காங்கிரஸ்காரங்க...?'?

இன்று சென்னை ஊடகவியலாளர்கள் மத்தியில், இரண்டு காங்கிரச்கார்ர்கள் ஏற்பாட்டில், ராஜீவ்காந்தியுடன் கொல்லப்பட்ட இரண்டு காங்கிரஸ்காரர்களின் "பிள்ளைகளை" கொண்டுவந்து நிறுத்தினார்கள். அவர்களும் "எங்களுக்கு நீதி வேண்டும்" என்று சொல்லிக்கொடுத்த வாய்ப்பாட்டை " கிளிப்பிள்ளை" போல உச்சரித்தனர். நமது ஊடகவியலாளர்கள் அத்துடன் "திருப்தி" அடையவில்லை. அவர்களிடம் சில கேள்விகளை "தனியாக" கேட்டபோது, "பல விசயங்கள்" வெட்டவெளிச்சமாகி உள்ளன.

அதாவது இத்தனை நாள் அல்லது இத்தனை ஆண்டுகள் "எங்கே போயிருந்தீர்கள்?" என்ற கேள்விக்கு, "பத்தொன்பது" ஆண்டுகளாக "காங்கிரஸ்" தலைமையிடம் "எங்களுக்கு நீதி வேண்டும்" என்று முறையிட்டு வ்ந்தோம்.என்கிறார்கள். அந்த "பலியான" குடும்பங்களுக்கு " இருபது ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் தலைமை ஒரு அரசு வேலை கூட போட்டுக் கொடுக்கவில்லை" என்ற குமுறலை வெளிப்படுத்தினார்கள். வழக்கமாக இதுபோன்ற விபத்துகளில் மரணம் அடைந்தவர் "குடும்பத்திற்கு" அவர்களது "வாரிசுகளுக்கு" அரசு வேலை கொடுத்து, "ஆற்றுப்படுத்தல்"' செய்வார்களே? ஏன் இவர்கள் விசயத்தில் செய்யவில்லை?

ராஜீவ் காந்தி கொலையால் "லாபம்" பெற்ற நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் கட்சி, அவ்வாறு "நன்றி" அறிவிக்கும் செயலை செய்ய விரும்பவில்லையா? ராஜீவ் கொலைக்கு காரணமான, அமெரிக்காவும், அவர்களது அடிவருடியான "சுப்பிரமணிய சாமியும், சந்திராசாமியும்" தியாகியாக ஆகிவிட்ட "தமிழ்நாட்டு" காங்கிரச்காரர்களுக்கு, நன்றி தெரிவிக்கும் முகமாக அவர்களது "வாரிசுகளுக்கு" அரசு வேலை தருவதை "தடை"செய்தார்களா?" அல்லது ராஜீவ் கொலைக்கு பின்னாலிருந்து ஏற்பாடு செய்த "காங்கிரஸ் பணிக்' குழு" வின் அலுவலக செயலாளராக அந்த நேரத்தில் இருந்த ஆந்திராவை சேர்ந்த "கல்யாண ராவ்" என்பவர் " உடன் சென்ற காங்கிரஸ்காரர்கள் "தியாகிகள்" ஆனதை "பதிவு" செய்ய விரும்பாததால்,அவர்களதுகுடும்பங்களை ''அனாதையாக நடுத்தெருவில் விட்டுவிட்டார்களா?

அல்லது "தமிழ்நாட்டு காங்கிரஸ் தலைவர்கள்" யாரும் ராஜீவ் உடன் "கொல்லப்படவோ" அல்லது "காயம்படவோ" இல்லையே என்ற "கருத்து"' மக்கள் மத்தியில் "அம்பலமாகிவிடக்கூடாதே" என்பதற்காக உண்மையில் இறந்த "'''தியாகிகள் பற்றிய செய்தியை "மறக்கடிக்க" அவர்களது "''வாரிசுகளை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார்களா? இறந்த "காங்கி'ர'ஸ்காரர்கள்" குடும்பத்தில் உள்ள வாரிசுகள், ''கோபத்தில்"' தலைவர்களைப் பார்த்து, " நீங்கள் மட்டும் எப்படி தப்பித்தீர்கள்?' என்று கேட்டுவிடுவார்கள் என்பதற்காக அந்த " வாரிசுகளை" இத்தினை ஆண்டுகளும் " கண்டுகொள்ளாமல்" விட்டார்களா? அல்லது அதில் சில " வாரிசுகள்" அந்த நேரத்திலேயே அப்படி கேள்விகளை கேட்டுவிட்டதால், அவர்களை " நடுத்தெருவில்" விட்டார்களா?

அப்படியானால் தெருவில் இறங்கி " மூன்று தமிழர் உயிர்காப்பு " என்று போராடும் தமிழர்கள், " ராஜீவ் கொலையில் செத்துப்போனவர் எல்லாம் போலீஸ்காரன். எங்கே போனான் காங்கிரஸ்காரன்?" என்று கேள்வி முழக்கம் எழுப்புகிறார்களே? அதில் உள்ள "சூட்சுமம்" இப்போதுதானே புரிகிறது. அப்படியானால் காங்கிரஸ் கட்சியில் "இரண்டுரகம்" இருக்கிறார்கள். ஒன்று "உயிர் தியாகம் செய்து நடுத்தெருவில் " நிற்பவர்கள். இரண்டாவது " சதி செயல் தெரிந்து உயிரை காப்பாற்றிக் கொள்ள" ஓட்டம் பிடித்தவர்கள்.

இதில் இரண்டாவது ரகம்காரர்கள், முதல் ரகம்காரர்களின் ''வாரிசுகளுக்கு" பட்டை நாமம் போட்டுவிட்டு, இப்போது அவர்களை ''தங்கள் துருப்பு சீட்டுகளாக" பயன்படுத்துகிறார்கள். இவையெல்லாமே "அரசியல் காரணங்களுகாக" மூன்று பேர் தூக்கை ''துரிதப்படுததும்" சிதம்பரத்தின் " சித்து விளையாட்டுகள்".