Friday, August 26, 2011

தங்கையை உள்ளேயே சிறைவைக்க விரும்பும் அண்ணனா?


அப்பா "தலைவராக" இருக்கிறார். மூத்த அண்ணன் "மத்திய அமைச்சராக" ரசாயனத்துரையை பார்த்தும், பார்க்காமலும் இருக்கிறார். பேரங்கள் வணிகத்தில் முன்னேறி விட்டனரே. அதில் இளைய பேரன் கேட்டார் என்று, தலைவர் அந்த " தொலை தொட்பார்பு துறையை" வாங்கி தருகிறார். அதில் புதிய பணக்காரர்களான அம்பானிகளுக்கு, இளையவர் எல்லாம் செய்கிறார். பழைய பாரம்பரிய முதலாளி தனக்கு "டாடா" காட்டியதாக கோபபடுகிறார். டாட்டா, தாத்தாவிடம் வ்ருகிறார். அமைச்சரவை "கை" மாறுகிறது. கை நிறைய தங்கள் "பொம்மை" மூலம் குடும்பம் லாபம் பெறுகிறது. குடும்பத்தில் விழித்திக்கொண்டவன் கெட்டிக்காரன். வணிக சகோக்கள் உறவில் இருக்கும் " இளையவருகுதான்" அந்த வாய்ப்பு கிடைக்கிறது. அவரை " ஊடக சகோகளின்' வைக்கோல் கன்னுக்குட்டி என்றும் ஒரு "நக்கல் சொல்"உண்டு.

அதனால் தாத்தா தொடங்கிய புதிய "காட்சி ஊடகத்தில்" பயன் பெற்ற " பால்வாக்கள்" பணம் போட முயன்ற போது, தம்பிகாரரே அதை பெற்றுக்கொண்டார் என்பது பால்வா தரப்பு செய்தி. ஆனால் பணம் பெற்றதாகவும், காட்சி ஊடகத்தில் முக்கியத்தர் என்றும் "தங்கைகாரி" குற்றம் சாட்டப்பட்டு உள்ளே போகிறார். அடஹியே உணமியாக்கி அவரை உள்ளேயே தாலி, வெளியே வரவிடாமல் செய்ய இந்த "இளைய அண்ணனுக்கு" அப்படி ஒரு ஆசை. அதற்கு ஏற்றார்போல,ஒடகத்துரையை பெற்றுள்ள அமைச்சர், "பிணை வாங்க" உச்சநீதிமன்றம் செல்ல வற்புறுத்தி, அதுவே தங்கைக்கு எதிராக போய்விட்டது. அப்போதும் "தன்கைகாரியின்" கருத்தான "பிணை பெற உச்சநீதிமன்றம்" செல்ல வேண்டாம் என்ற கருத்து எடுபடவில்லை. இப்போது தனக்கு சம்பந்தமில்லாமல் " பிரதமரைய்டும், உள்துரையையும்" சாட்சிகளாக கூப்பிட தனது வழக்கறிஞர் கூறியது, தங்கைக்கு எதிராக போய்விட்டது. அதவே "பட்டத்திற்கு" துடிக்கும் அண்ணனுக்கு மகிழிச்சியை கொடுக்கிறது.

கனிமொழிக்கு முரண்பட்டு , அவரது வழக்கறிஞர் பேசினார்.


டில்லி "பாட்டியாலா நீதிமன்றம்" சீ.பி.ஐ. வழக்கை "பரபரப்புடன்" நடத்தி வருகிறது. திஹார் சிறையிலிருந்து, கனிமொழியும், ஆ.ராஜாவும், சரத்குமார் ரெட்டியும் நீதிமன்றம் வருகிறார்கள். ஆ.ராஜாவிற்கும், கனிமொழிக்கும் ஒரே வழக்கறிஞரை, "சுஷில் குமாரை" திமுக தலைமை நியமித்துள்ளது. முக்கிய குற்றவாளியாக முத்திரை குத்தப்பட்ட வழக்கறிஞர் ராஜாவிடமே , சுஷில் குமாரும் கலந்து பேசி, "வாதங்களை" தயார் செய்து கொள்கிறார். ராஜாவும்தனக்கு " தர்காபிர்கான" விவரங்களை எடுட்டிஹ்து கொடுத்து வருகிறார். இது இயல்பாகவே நடக்கக் கூடிய ஒன்றுதான். ராஜா மீது கூறப்பட்டுள்ள "குற்றச்சாட்டில்" அவர் "முதலில் வருபவருக்கு முதலில்" கொடுப்பது என்ற கொள்கையை பின்பற்றினார் என்பது முக்கிய குற்றச்சாட்டு. அந்த "முடிவை" எடுத்ததில் பிரதமரும், சிதம்பரமும் சேர்ந்துஎடுத்த முடிவு என்பது ராஜாவின் வாதம். அதாவது கொள்கை முடிவு எடுக்கும் போது, அன்றைய நிதி அமைச்சர் சிதம்பரமும், அன்றைய பிரதர் மன்மோகனும் இருந்து " கூட்டத்தின் குறிப்புகள்" எழுதப்பட்டு எடுத்த முடிவு அது.


அந்த "கூட்ட குறிப்புகளை" ஆ.ராஜா வழக்கறிஞரிடம் கொடுக்கிறார். அதே வழக்கறிஞர் கனிமொழிக்கும் பேசுவதால், கனிமொழி பற்றி பேசும்போது அந்த வாதத்தையும், அந்த "கூட்ட குறிப்புகளையும்" வழக்கர்டிஞர் சுஷில் குமார் நீதிமன்றம் முன்னால் வைக்கிறார். அது "ஊடகங்களில்" வெளியாகிறது. நாடாளுமன்றத்தில் அதைவைத்தே "பா.ஜ.க." பிரதமர் மீது பிரச்சனையை கிளப்புகிறது. மறுநாள் அதே பிரச்சனையை அதாவது, "பிரதமரும், சிதம்பரமும்" சாட்சிகளாக விசாரிக்கப்பட வேண்டும் எண்பதை ராஜா சார்பாக அதே வழக்கறிஞர் நீதிமன்றம் முன் வைக்கிறார். ராஜா மீது வைக்கப்பட்டுள்ள "குற்றச்சாட்டுகளுக்கு" அந்த வாதம் பொருத்தமானது. ஆனால் "கனிமொழி மீதான குற்றச்சாட்டுகளுக்கு " அது பொருத்தமானது அல்ல. கனிமொழி மீது "கலிஞர் டி.வி.க்கு" வந்த இருநூறு கோடி ரூபாய் பணம் சம்பந்தப்பட்ட வழாக்குதான் இருக்கிறது. அடஹ்ர்கு பிரதமரும், உள்துறையும் வரவேண்டிய அவசியம் இல்லை. இது வழக்கறிஞர் செய்த தவறு. இதிலும் தனக்கு சம்பந்தமே இல்லாமல் கனிமொழி மாட்டிக்கொண்டார். தேவை இல்லாமல் "பிரதமரையும், உள்துரையையும்" பகைத்துக்கொள்ளும் நிலைமை. அதில் அவருக்கு "நிலை தடுமாறிய நிலைமை".

முரண்டுக்கு மூக்கணாங்கயிறு கட்டணும்.


மரணதண்டனையை மூன்று தமிழருக்கு குறைப்பதோ, அல்லது நிர்வாக தடையை போடுவதோ, தமிழக அரசால் முடியும் என்ற சூழலில், புதிய தமிழகம் டாக்டர் கிரிஷ்ணசாமி, எழு கட்சி உறுப்பினர்களிடம் கையெழுத்து வாங்கி கொடுத்த "கவன ஈர்ப்பு தீர்மானத்தை" தான் ஒரு வார காலமாக எடுக்கவில்லை. தமிழக முதல்வரின் கட்டளைப்படி, பேரவைத் தலைவர் செயல்படட்டும். இன்று மீண்டும் எழுந்து தனது தீர்மானம் எடுப்பது பற்றி கிரிஷ்ணசாமியை பேசவிடவில்லை. அவரும் கோபத்தில், "வெளிநடப்பு" செய்துவிட்டார். இதுற்ற்ஹான் தமிழக சட்டமன்றத்தின் நிலைமை. முன்பே வந்த " மரணதண்டனை அமுலாக்கல் உத்தரவை" தமிழக உள்துறை ஒரு வார காலமாக "கிடப்பில்" வைத்திருந்தது. மத்திய அரசின் "நிர்ப்பந்தம்" மீண்டும் வார, அதை எடுத்து " சிறை அதிகாரிக்கு" அனுப்பியுள்ளது. அதை "முருகன், சாந்தன், பேரறிவாளன்" ஆகியோரிடம் சிறை அதிகாரி கொடுத்துவிட்டார். அவரும் "செப்டம்பர் ஒன்பதாம் நாள்" உங்களுக்கு "தூக்கு" என்றும் கூறிவிட்டார்.

தமிழக அரசை "மரணதண்டனைக்கு எதிராக" செயல்படுத்த, எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்தும் "கவன ஈர்ப்பு தீர்மானம்" கொடுத்து விட்டார். அற்டஹியும் இன்று வரை எடுக்கவில்லை. அப்படி ஒரு "முரண்டா?" இந்த முரண்டை அடக்க "மூக்கணாங்கயிறு" எது? வருகிற "உள்ளாட்சி தேர்தலில்" தூக்கி எதிர்க்காதவர்கள் "ஒட்டுமொத்த தமிழகளின்" எதிரிகளாக அறிவிக்கப்படுவார்களே? வருகிற " நாடாளுமன்ற தேர்தலில்" இப்போது மூன்று தமிழர் தூக்கி எதிர்ப்பவர்கள் "ஒட்டுமொத்த தமிழர்களின்" எதிரிகளாக சித்தரிக்கப்படுவார்களே? அந்த " மூக்கணாங்கயிறு" இந்த ஆட்சியாளர்களுக்கு தெரியுமா? எத்தனை தூரம் "போற்குற்றங்களுக்கு துணை" போயிருந்தாலும், இப்போது "நாடாளுமன்றத்தில்" ஈழத்து இனப்படுகொலைகளை எதிர்த்து பேசி திமுக நற்பெயர் பெற்றுவருகிறதே? அந்த திமுக இந்த "தூக்குகளை" பயன்படுத்தி " மீண்டும் எழ" வாய்ப்பு இருக்கிறதே?

வருகிற தேர்தல் மட்டும்தான் இவர்களுக்கு "மூக்கனாங்கயிரா?" அல்லது "தமிழக இளைஞர்கள்" சிந்திப்பது போல "முத்துகுமார்களாக" அவர்களை ஆயிரக்கணக்கில் மாற்றுவது " மத்திய ஆட்சியாளர்களின்" திட்டமா?