Wednesday, August 24, 2011

"மரணதண்டனை ஒழிப்பு" ஒரே குரலாக ஒலிக்கட்டும்.

"மரணதண்டனை ஒழிப்பு" ஒரே குரலாக ஒலிக்கட்டும்.
மூன்று தமிழர் உயிர் காக்க ஒவ்வொரு தமிழரும், மனித உரிமை ஆர்வலர்களும் பெரு முயற்சிகளை தொடர்ந்து எடுத்து வருவது வேகப்பட்டுள்ளது. அவரவர் பாணியில் " முறையிடுவது", வேண்டுகோள் விடுப்பது", " கெஞ்சுவது", "நினைவு படுத்துவது" , "சட்ட நியாயங்களை சொல்வது", "முன்னுதாரணங்களை காட்டுவது", உணர்சிகரமாக பேசுவது", உணர்ச்சி முழக்கங்களை இடுவது", "வழக்கின் முடிவுறாதன்மையை சுட்டிக் காட்டுவது", "சாட்சிகளை வர்ணிப்பது", "குற்றம் சட்டப்பட்டவருக்காக வாதாடுவது", "இன உணர்வோடு குரல் கொடுப்பது", "விடுதலை செய்ய கோருவது", " பதிலுக்கு எதிரிகள் மீது பாய்வது", " அழுது புலம்புவது" , " ஆத்திரப்படுவது", இப்படி பல முறைகளிலும் இன்று குரல்கள் கிளம்பி வருகின்றன. அவதரி "ஒருங்குபடுத்தி", இன்றைய " சாத்தியப்பாடான கோரிக்கையான" "மரணதண்டனையை" "ஆயுள் தண்டனையாக குறையுங்கள்" எண்பதை தொடர் முழக்கமாக முன்வைக்க வேண்டிய தருணம் இது. மனித உரிமை தளத்தில் நின்று கொண்டு அவ்வாறு எழுப்பும் கோரிக்கைக்கு உலகம் செவி சாய்க்க முடியும். "மரணதண்டனை ஒழிப்போம்" என்ற உலக முழ்ஜக்கத்துடன் நாமும் சேர்ந்து கொள்வோம்.