Tuesday, August 16, 2011

மரண தண்டனையை ரத்து செய்ய பேரணி.

மரண தண்டனையை ரத்து செய்ய பேரணி.
இன்று மதியம் பெரியார் திராவிடக் கழகத் தலைவர் தோழர் குளத்தூர் மணி, பேராசிரியர் சரஸ்வதி ஆகியோர் "உள்நாட்டு அடக்குமுறை எதிர்ப்பு கூட்டமைப்பு" சார்பாக, கூட்டமைப்பின் அமைப்பாளர் தோழர் வேளுசாமியுடன் "ஊடவியலாலர்களை" சந்தித்தனர். அப்போது " பேரறிவாளன், சாந்தன், முருகன்" ஆகியோரின் மரண தண்டனையை நிறைவேற்ற திட்டமிட்டு, உள்துறை அமைச்சர் பா.சிதம்பரம் பரிந்துரையின் பேரில், குடியரசு தலைவர் பிரதீபா பாட்டில், "கருணை மனுவை" நிராகரித்த கொடுமையை கண்டிக்க "போராட்டங்களை" அறிவித்தனர். அதில் முதலில், ஆகஸ்டு 19 ஆம் நாள் காலை, பதினோரு மணிக்கு, சென்னை கடற்கரை சாலையில், "கலங்கரை விளக்கிலிருந்து" புறப்பட்டு, "உழைப்பாளர் சிலை" வரை "வேண்டுகோள் பேரணி" ஒன்று நடத்தப்படும் என்று கூறினர். அதில் "தமிழக அரசு" தனது பரிந்துரை மூலம் "மரண தண்டனையை" ரத்து செய்ய ஆளுநருக்கு ஆலோசை அனுப்பினால், அந்த "மூன்று தமிழகளின்" உயிர்கள் பதுகாகப்படுமேன்றனர். அதற்கு முன் உதாரணங்கள்" இருக்கின்றன என்றனர. சீ.ஏ.பாலன் வழக்கில், கேரள நம்பூதிரிபாட அமைச்சர்வை கொடுத்த "ஆலோசனையை" ஏற்று மத்திய அரசு "தன்ப்டனையை ஆயுள் தண்டனையாக" குறைத்தது என்று கூறினர். அதேபோல "தயா சிங் " வழக்கில் கருணை மனு குடியரசு தலைவரால் நிராகரிக்கப்பட்ட பிறகு, உச்சநீதி மன்றம் தணடனையை குறைத்தது என்றனர். மேற்கண்ட கோரிக்கைகாக அடுத்து "ரயில் மறியல்" போராட்டம் வரை திட்டமிட்டு உள்ளோம் என்றனர்.மேற்கண்ட "வேண்டுகோள் பேரணிக்கு" திரண்டு வரக் கோரினர். .