Wednesday, August 3, 2011

கெய்ரோ வழியில் கொழும்பு போகவேண்டும்

எகிப்து நாட்டில் இதுவரை "எதேச்சதிகாரியாய்" கோலோச்சி வந்த "போச்னிக் முபாரக்" மக்கள் புரட்சியின் முன் நிற்கமுடியாமல், ஆர்ப்பாட்டகாரர்களை "சுட்டுக் கொன்றதற்கும்" சேர்த்து, தனது மக்களையே தனது நாட்டு சொத்துகலையே ஊழல் செய்து கொள்ளை அடித்ததர்காகவும், இன்று "கெய்ரோ நீதிமன்றத்தில்" கைதியாக நின்றுகொள்ள முடியாத நிலையில் படுத்துக் கொண்டு விசாரணையில் கலந்து கொள்ளள வைக்கப்பட்டுள்ளான். "முபாரக், அவனது இரண்டு மகன்கள், அவனது உள்துறை அமைச்சர், அவர்களது ஆறு உதவியாளர்கள்" அனைவரும் அந்த "கைதிகள் கூண்டில்" பூட்டப்பட்டுள்ளனர். இந்த "காட்சியை" நாம் காணும்போது, "கொழும்பை" எண்ணிப்பார்க்கிறோம்.

நாட்டின் சொத்துகளை"கொள்ளை" அடித்த "ராஜபக்சே சகோதரர்கள்" இதே நிலையைத்தானே இலங்கையில் ஏற்படுத்தி உள்ளனர்? "தமிழின அழிப்பு" ஒன்றை திட்டமிட்டு நடத்திய " மகிந்தா, அவனது தம்பிகள் கோத்தபாயே, பசில்" ஆகியோரும் இதே "இழிநிலையை" விட மோசமான "இனப்படுகொலையை" நடத்தியதை, இன்றும் "இன சுத்திகரிப்பை" நடத்திக்கொண்டு இருப்பதை உலகம் நன்று அறியும்.ஆகவே "முபாரக்கை விட மோசமான ஒரு விசாரணை" இந்த மகிந்தா கொம்பளுகாக காத்திருகிறது.."கெய்ரோ வழிகொளும்பில்" கோலாகலமாக அரங்கேறும் நாளை எதிர்பார்த்து ஒவ்வொரு "தமிழர் உள்ளமும்" எங்கிவருகிறது