Monday, July 25, 2011

ஏக மகிழ்ச்சியில் கலைஞர்

கருணாநிதி வாழ்க்கையில் சமீபத்தில் அதாவது ஐம்பது ஆண்டுகளாக அடையாத மகிழ்ச்சியை இரண்டு நாட்களாக அடித்துள்ளார் என்றால் அது ஆச்சர்யமான செய்திதானே? திமுக வின் செயற்குழுவும், பொதுக் குழுவும் ,கடுமையான "தேர்தல் தோல்விக்கு" பிறகு கூடும் பொது கலைஞரின் கையாளுதல் "புதிய அணுகுமுறையை" எடுத்தது. "சிறப்பு அழைப்பாளர்கள்" வரிசையில் இதுவரை இலாத முறையில் "ராஜாத்தி அம்மாளை" அமர வைத்திருந்தார். "கனிமொழி" இருக்கவேண்டிய செயற்குழு, பொதுக்குழுவில் ராஜாத்தி மறந்திருக்கிறார் என்பது எல்லா திமுக காரர்களுக்கும் புரிந்தது. ஆனாலும் "இதை எப்படி ஸ்டாலின்" பொறுத்துக் கொள்ள முடியும்? இதை பார்த்தும் எப்படி "தயாநிதி மாறன்" சும்மா இருப்பார்? இதை "அழகிரி ஏற்ற்க்கொல்கிறாரா?"இப்படி கேள்விகள் எல்லாம் திமுக காரகளுக்கு இருந்தது.

அதேபோல "தயாளு என்ன எண்ணுவார்?" என்பது சிலரை அச்சுறுத்தியது. ஏன் என்றால் இந்த ஐம்பத்தொரு ஆண்டு வரலாற்றில், "ராசாத்தியை" கோபாலபுரம் "தயாளு அம்மாள்" என்றுக் கொண்டதே கிடையாது. இப்போது ச்ய்ரகுழு நடக்கும் பொது, "ராஜாத்தி சிறப்பு அழைப்பாளர்" என்ற செய்தி கோபாலபுரத்துக்கார அம்மையாருக்கு எட்டியது. அதை "வில்லங்கமாக" ஒரு சக்தி அங்கே போய் கேட்டது. அதற்கு தயாளு கொடுத்த பதில்தான் எல்லோரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. " ஏன் அவர்களுக்கு தகுதி இல்லையா? ராஜாத்தி சிறப்பு அழைப்பாளராக சென்றது சரிதான்" என்று தயாளு அம்மையார் வாயிலிருந்தே வந்துவிட்டது. "மனைவிக்கும்,துணைவிக்கும்" மத்தியில் திணறி வந்த தலைவர் இந்த செய்தி கேட்டு ஒரே மகிழ்ச்சி அடைந்துள்ளார். கலைஞரைப்போலவே சிந்திக்க மனைவியை தயார் செய்ய இத்தனை ஆண்டு ஆகிவிட்டது போலும்.

திமுக செயற்குழு, பொதுக் குழு படிப்பினைகள்.

வரப்போகிறது. அண்ணன் அழகிரிக்கும், தம்பி ஸ்டாலினுக்கும் தகராறு என்று ஆர்ரோடம் கூறிய எத்ரித்தர்ப்பு செய்திகளுக்கு மத்தியில் கடைசியாக திமுக தனது செயற்குழுவையும், பொதுக்குழுவையும் வெற்றிகரமாக திருச்சியில் நடத்தி முடித்திருக்கிறது. எண்பத்து எட்டு வயதிலும், கலைஞர் அந்த இரண்டு குழுக்களையும் நடத்தி, முரண்பாடுகளைக் கையாண்டு வெற்றிகரமாக திரும்பி உள்ளார். தனது அன்பு மகள் கூட்டணி கட்சியின் "நரித்தந்திர வழியால்" பின்னப்பட்டு "திகார் சிறையில்" அவதிப்படுவதை தாங்க முடியாத ஒரு தந்தை அதையும் நெஞ்சில் ஏந்தி, இந்த இரண்டு பெரும் கூட்டங்களையும் நடத்தி முடித்திருக்கிறார்.

ஸ்டாலினுடைய ஆட்கள் திட்டமிட்டு, "செயல்தளைவராக" ஸ்டாலினை கொண்டு வார எடுத்த முயற்சிகள் முதல் நாள் "செயற்குழு" வில் "பொன்முடி, த.எ.வேலு"மூலம் வெளிப்பாட்ட போதும், "பொதுக் குழு"வில் கோவை ராமநாதன் மூலம் வெளிப்பட்ட போதும் "ஒரு உரத்த குறளை" கிளப்பி தலைவர் அதை அடக்கி விட்டார். அடஹ்ர்கு பேராசிரியர் அன்பழகனும், துரைமுருகனும் துணை செய்தனர். அழகிரி பேசவேண்டிய அவசியமே இல்லாமல் ஸ்டாலினது " பட்டத்துக்கு வரும் முயற்சியை" தலைவரே கையாண்டு தீர்த்து வைத்து விட்டார். அற்ற்ஹை தீர்மானிக்க ஒரு "குழுவை" போட்டு விட்டார். அது "தொடர்ந்து வெடிக்கும்" என்பது வேறு செய்தி. இப்போதைக்கு, "இப்போ, இல்லாட்டா எப்போ" என்று பாட்டு பாடிவந்த ஸ்டாலின் குழுவினருக்கு தோல்விதான். இதுதான் கலிஞர் என்பது நிரூபணமானது மீண்டும்.

புலம் பெயர்ந்த தமிழர் வலைப்பின்னல் தொடங்கியது.

தமிழர்கள் பத்து கோடிபேர் உலகம் முழுவதும் இருந்தாலும், ஈழத் தமிழர்களின் செயல்பாடுகள் மட்டுமே உலகை பேசவைத்துள்ளன. புலம் பெயர்ந்த தமிழர் என்ற சொல்லுக்கு கூட, ஈழத் தமிழர்கள் புலம் பெயர்ந்த நாடுகளில் வாழ்ந்தாலும் விடாமல் தமிழின உணர்வை வெளிப்படுத்தி வருவதை உலகம் அறியும். இந்தியாவின் எல்லைகளுக்கு உட்பட்டு இருக்கும் தமிழ்நாட்டிலிருந்து வெளியேறி உலகம் முழுவதும் சிதறிக்கிடக்கும் தமிழர்களின் நிலைமைகளை ஒருங்கிணைக்க எண்ணி, "உலகத் தமிழர் அமைப்பு" என்ற ஒன்றை ஏற்படுத்தியுள்ள ராஜ்குமார் பழனிச்சாமியும், இரா.செழியனும் ஒரு கருத்தரங்கை சென்னையில், ஈழப்படுகொலை நாளான ஜூலை 23 ஆம் நாள் கூடினார்கள்.

அதில் "இந்தியாவிலிருந்து புலம் பெயர்ந்து சென்றுள்ள தமிழர்கள்" நிலைமை பற்றியும் பேச பலரையும் அழைத்திருந்தார்கள். ஆனாலும் அங்கே "ஈழத் தமிழர் " பற்றிய கருத்துக்கள்தான் அதிகம் வெளிப்பட்டன. முதலில் சென்னை பல்கலைக் கழகப் பேராசிரியர் மணிவண்ணன், ஒரு உரையை நிகழ்த்தினார். அது "ஈழத் தமிழர் இனப்படுகொலை" பற்றியது. அடுத்து நாவே நாட்டிலிருந்து வந்த பிரபு கண்ணனும், மனித உரிமை ஆர்வலர் டி.எஸ்.எஸ்.மணியும், " புலம் பெயர்ந்து இருக்கும் இந்தியத் தமிழர்களது" நிலை பற்றி பேசினார்கள். அதில் "தமிழர்களின் அடையாளம்" பற்றியும் பேச்சு வந்தது. "தமிழர் விரோத சக்திகள் இன்று திட்டமிட்டு, மத ரீதியாக தமிழர்களைப் பிரிக்கிறார்கள்" என்ற செய்தியையும் சொன்னார்கள். முஸ்லிம் தமிழர்களையும், கிறித்துவ தமிழர்களையும், தமிழின அடையாளத்திலிருந்து பிரிக்க ஒரு "சதி" நடப்பதாகவும், அதற்கான "பரப்புரை" செய்யப்படுவதாக்கவும்கூட கருத்துக்கள் வெளிவந்தன.

அத்தகைய முயற்சிகள், "சிங்கள சூழ்ச்சி" என்பதாக இலங்கையில் வர்நிக்கப்படவேண்டும் என்றும், இந்திய அரசின் உளவுத்துறை சூழ்ச்சி என்று காணப்படவேண்டும் எனவும் அங்கே கூறப்பட்டது. அதுதவிர "தமிழ்நாட்டில் ஆயிரம் ஆண்டுகளாக இரண்டறக் கலந்துவிட்ட, தெலுங்கு, கன்னட, மலையாள அடிப்படையை" ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கொண்டிருந்த அல்லது பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு இடம் பெயர்ந்த மக்கள், தம்ழ்நாட்டு தமிழர் பண்பாடுகளுடன் இரண்டறக் கலந்து "தமிழர்களாகவே" மாறிவிட்ட போதும் அவர்களை "மாற்று மொழியினர்" என்று முத்திரை குத்தி உடைக்கும் போக்கு இருக்கிறது என்றும் கூறப்பட்டது. அத்தகைய போக்கு டில்லி அரசால் அவர்களது உளவுத்துறையால் வரவேற்கப் படுகிறது என்பதும் எடுத்து வைக்கப்பட்டது. அதாவது பல பத்து ஆண்டுகளாக "தமிழர் வாழ்வியலுக்காக" போராடிவரும் சக்திகளை புறந்தள்ள இப்படி ஒரு சூழ்ச்சி செய்யப்படுகிறது என்றும் அங்கே கூறப்பட்டது.

அதனால் "தமிழர் அடையாளத்தை" புரிந்து கொள்வதில் ஸ்டாலின் கோரியுள்ள விளக்கம் எடுத்துக் கொள்ளப்படவேண்டும் எனக் கோரப்பட்டது. அதில் "ஒரே எல்லைக்குள், ஒரே பொருளாதார முறையில், ஒரே பண்பாட்டில், ஒரே மொழியில் இணையும் மக்கள் கூட்டம்" ஒரே தேசிய இனம் என்று கோரப்பட்டது நினைவு கூறப்பட்டது.அந்த கூட்டத்தில் உரையாற்றிய மருத்துவர் எழிலன், " பார்ப்பன சக்திகளிடம்" எச்சரிக்கையாக இருக்கவேண்டும் எண்பதை வலியிருத்தினார். இந்திய அரசு இப்போது "ஒற்றையாட்சியை நோக்கி" செல்கிறது என்றார். பார்ப்பனர் அல்லாத சக்திகளும் "தமிழர் விரோத பார்ப்பனீய அணுகுமுறைகளை" எடுத்துள்ளதை வழக்கறிஞர் பாண்டிமாதேவி நினைவு படுத்தினார். திருமுருகன் காந்தி பேசும்போது, " ஹிலாரி கிளிண்டன், ஜெயலலிதா, ராஜபக்சேவின் பிரதிநிதியாக இருக்கும் ஏன்.ராம்" ஆகியோர் செய்யும் செயல்களை கவனம் வேண்டும் என்றார். ராஜபக்சேவை போர்க்குற்றவாளி என அறிவிப்பதை விட, தமிழீழம் வேண்டும் என்பதே நமது குறிக்கோள் என்று அவர் கூறினார்.

பேராசிரியர் சரஸ்வதி பேசும்போது, " ராஜபக்சேவை போர்குற்றவாளி என்று அறிவிப்பதும், தமிழீழம் அடைவதும்" எதிர் எதிரானது அல்ல என்றும், இரண்டும் "ஒரே நாணயத்தின் இரண்டு வெவ்வேறு பக்கங்கள்" என்றும் கூறினார். ஹெட்லைன்ஸ் டுடே ஊடகத்திலிருந்து வந்த " ராஜேஷ் சுந்தரம்" ஊடகங்களில் "சாதகமான" சக்திகளை புரிந்து கொண்டு அவர்கள் மீது செயலாற்ற வேண்டும் என்றார். விடுதலைப் புலிகளின் " கொரில்லா தந்திரமும், போர் தந்திரமும்" ஊடககங்கள் இடையேயும், பரப்புரையிலும் கையாளப்படவேண்டும் என்றார். "தமிழர்களுக்கான கல்வி' என்ற தளிப்பில், வழக்கறிஞர் பாண்டிமாதேவியும், காரை மைந்தனும் பேசினார்கள். " "தாய் தமிழ் பயிற்றுமொழிக் கல்வியை" அவர்கள் வலியுறுத்தினர். கல்வி கற்றவர்கள் இன உரிமை விசயத்தில் முன்னே நிற்க வேண்டும் என்று பாண்டிமாதேவி வலியுறுத்தினார்.

கடைசியாக தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன. அவற்றில் " தமிழர்கள் மதம் தாண்டி சிந்திப்பதும், பழமை பண்பாட்டை உடைப்பதும் அவசியம்" என்று கூறப்பட்டது."சாதிகளை உடைப்பதும், பெண்ணடிமைத்தனத்தை உடைப்பதும்" தேவை என்பது வலியுறுத்தப் பட்டது.தமிழ்நாட்டு சட்டப்பேரவை கொண்டுவந்த " போர்குற்றவாளிகளை தண்டிப்பதையும், பொருளாதார தடையை இலங்கைக்கு அறிவிப்பதையும்" வரவேற்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 1981 ஆம் ஆண்டு எம்/ஜி.ஆர். அறிவித்த "உலகத் தமழ்ச் சங்கம்" பத்து கோடி நன்கொடையை அப்போது பெற்றதாயும், அதற்கு பதினாலு ஏக்கர் நிலம் மதுரையில் நீதிமன்றம் முன்னால் வழங்கப்பட்டதையும், அவை தஞ்சை தமிழ்ப் பலகலைக் கழகத்தின் க்கட்டுப்பாட்டில் இருப்பதையும், அதை மாற்றி களைஞர் ஆட்சி " உலகத் தமிழ் செம்மொழி தொல்காப்பியர் பேரவை" என்று ஏற்படுத்தியதையும் சுட்டிக் காட்டி, அதில் எம்.ஜி.ஆர்.செய்த திட்டத்தை இன்றைய தமிழக அரசு மீண்டும் கொண்டுவர கூட்டம் கேட்டுக் கொண்டது.

"நாடு கடந்த தமிழீழ அரசு "பற்றிய விளக்கத்தை பேரா.சரஸ்வதி அளித்தார். அப்போது அந்த "நாடு கடந்த தமிழீழ அரசாங்க தோழமை மையம்' இந்தியாவில் ஏற்படுத்தி செயல்படுகிறோம் என்பதையும் எடுத்துக் கூறினார். திருமுருகன் தனது உரையில் " நிறுவனங்களை தமிழர் நாளுக்காக" ஏற்படுத்துவது பற்றி கூறினார். மொத்தத்தில் ஐமப்துக்கு மேற்பட்ட தமிழின ஆர்வலர்கள் கலந்து கொண்ட கூட்டமாக அது இனிது நிறைவுற்றது.

குட்டிமணி,ஜெகன்,தங்கத்துரை கொலைகள் சென்னையில் நினைவு.

1983 ஆம் ஆண்டு 25 ஆம் நாள் வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழ்க் கைதிகளை, சிங்கள காடையர்கள், சிங்கள கைதிகள், சிங்கள ராணுவத்தினர் இணைந்து சிறைக்குள் அவர்களது அறைகளுக்குள் புகுந்து தாக்கினார்கள். வெட்டினார்கள். கண்களைப் பறித்தார்கள். படுகொலை செய்தார்கள். அதில் டெலோ இயக்கத்தின் தலைவர்களாக இருந்த "குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன்" ஆகியோர் குறிப்பாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர்.குட்டிமணி தனது மரணதண்டனையை எதிர்பார்த்து இருக்கும்போதே, தனது கண்களை தானம் செய்ய விரும்புவதாகவும், தன் கண்கள் மாறப்போகும் "தமிழ் ஈழத்தை" காணவேண்டும் என்றும் கூறியிருந்தார். அதனாலேயே அவர்களது "கண்களை சிங்களக் காடையர்கள்" பறித்து எடுத்து அவர்களை கொலை செய்தனர்.

இந்த நாளில், அந்த தமிழீழத் தியாகிகளின் நினைவாக, சென்னை மயிலாப்பூர் நொச்சிக்குப்பத்தில் அவர்களது படங்களை வைத்து, அனைத்து இந்திய மீனவர் சங்கங்களின் கூட்டப்பினர்" மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். அதில் "நாடு கடந்த தமிழீழ அரசாங்க தோழமை மையம் அமைப்பாளர் பேரா.சரஸ்வதி" , "உலகத் தமிழர் பேரமைப்பு பொருளாளர் சந்திரேசன்" , அகில இந்திய பாரம்பரிய மீனவர் சங்க தலைவர் எஸ்.எ.மகேஷ், மனித உரிமை ஆர்வலர் டி.எஸ்.எஸ்.மணி, வழக்கறிஞர் அருள், தமிழ்நாடு மீனவர் முன்னேற்ற சங்கம் தலைவர் கபடி.மாறன், பெரியார் திராவிடர் கழகம் தென் சென்னை மாவட்ட எயலாளர் தபசி குமரன், மற்றும் மீனவர் சங்க முன்னோடிகள் கலந்து கொண்டார்கள். ஆர்வம் மிகுதியால் அங்கே வந்த காவல்துறை அதிகாரிகளும் முதலில் திகைத்துவிட்டு பிறகு "குட்டிமணி, ஜெகன்" பற்றி கேட்டு தெரிந்து கொண்டது வித்தியாசமாக இருந்தது.