Friday, June 24, 2011

முதல்வரின் தீர்மானத்திற்கு வலுச்சேர்க்க மெரினாவில் கூடுவோம்.

ஜூன் 26 என்பது "அனைத்து நாட்டு சித்திரவதைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நாள்". அந்த நாள் இன்றைய சூழலில், ராஜபக்சேவின் "தமிழின அழிப்பு உலகம் முழுவதும் அம்பலமாகி உள்ள" நேரத்தில், முக்கியத்துவம் பெறுகிறது. அதாவது இலங்கையின் திர்க்கட்சியாக இருந்தாலும், "சிங்கள பௌத்த பேராண்மை கொள்கையை" உறுதியாக தூக்கிப் பிடிக்கும் ரணில் விக்ரமசிங்கே சென்னை விமான நிலையத்தில் ஊடகவியலாளர்களிடம், " ஐ.நா. போர்விதி மீறல் ஒப்பந்தத்தில் கையெழுத்து போடாத இலங்கை அரசை எந்த ஒரு போர் விதி மீறல் தீர்மானமும்" கட்டுப்படுத்தாது என்று கூறினான்.


அதேசமயம் உலகம் முழுவதும், "ஐ.நா.வின் சித்திரவதை எதிர்ப்பு ஒப்பந்தத்தில் "இலங்கை கையெழுத்து போட்டுள்ளது என்ற குரல் எழும்பியது. அந்த " சித்திரவதைக்கு எதிரான அனைத்து நாட்டு ஒப்பந்த நாள் " ஜூன் 26 இல் வருவதால், அதே நாளில், தமிழின உணர்வாளர்கள் ஒன்று கூடி, சென்னை கடற்கரை மெரினாவில், கண்ணகி சிலைக்கு பின்புறம் கடற்கரை மணலில், மாபெரும் "மெழுகுவர்த்தி ஏந்தல் நிகழ்வினை" நடத்த திட்டமிட்டுள்ளனர். இது "தமிழக சட்டப்பேரவை நிறைவேற்றிய தீர்மானத்தையும்? வலுப்படுத்துவதாக அமையும். டில்லியின் முழுமையான "தலையீடுகளையும்" தாண்டி, முதல்வர் செல்வி.ஜெயலலிதா நிறைவேற்றிய "தனித் தீர்மானமான" போர்குற்றம் செய்தவர்களை, "போர் குற்றவாளிகள்" என்று அறிவிக்க கோருவது, தில்லியையும், கொழும்பையும் அச்சுறுத்தி உள்ளன.


டில்லியும், கொழும்பும் அந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பை மறைமுகமாக கொடுத்து வரும்போது, "சட்டப் பேரவை தீர்மானத்திற்கு முழுமையாக தமிழக மக்கள் மன்றம் வலுச் சேர்கிறது" எண்பதை இந்த ஞாயிறு கடற்கரை அணிதிரட்டல் மூலம் தமிழ் மக்கள் நிரூபிப்பார்கள்.

நிரூபமா ராவ் அமெரிக்காவின் எடுபிடியா?

நிருபமா ராவ் இந்திய வெளிவிவகார செயலாளராக வந்தார். முக்கியமாக இலங்கை அரசின் தமிழின அழிப்பு வேலைகளை செய்வதற்கு துணை சென்றார். அதில் இந்திய அரசின் நலனை நிலை நிறுத்தினார். இலங்கையில் தமிழின அழிப்பை நடைமுறைப்படுத்த, அந்த போருக்கு முழு உதவியையும் செய்தது இந்திய அரசு என்றால், அதற்கான டிப்படையை போட்டுக்கொடுத்து, உலக அளவிலான " பயங்கரவாதத்திற்கு எதிரான போர்"என்ற பெயரைக் கொடுத்தும் அமெரிக்காவின் கைங்கரியம்தான். ஐரோப்பிய நாடுகளிலும், இங்கிலாந்திலும்,இந்தியாவிலும், "புலிகளை பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தி" தடை செய்ய ஏற்பாடு செய்ததும் அமெரிக்காதான் என்பது இப்போது பகிரங்கமாகி உள்ளது.


இத்தகைய சூழலில், நிரூபமா ராவ் அமெரிக்காவின் எதிர்பார்ப்பிற்கு இணங்க " இலங்கை-இந்திய உறவை" பேணி பாதுகாத்தார் என்பதால், அதில் இலங்கையை சீனா பக்கம் முழுமையாக சார்ந்து நிற்க விடாமல் கையாண்டார் என்பதால் அது அமெரிக்காவின் நலனை பேணுவதில் உள்ள கெட்டிகாரத்தனம் என்றுதான் புரியப்படவேண்டும். அதுமட்டுமின்றி "இந்தியாவில் முக்கிய பதவிகளுக்கு வருவோரை" தேர்வு செய்யும்போது, சிறந்த உளவுத் துறை வைத்திருப்பதாக டில்லியால் நம்பப்படும் அமெரிக்கா சொல்கின்ற நபர்களை அந்த பதவிகளில் போடுவது இந்திய அரசுக்கு வாடிக்கைதான்.


அவ்வாறுதான் "எம்.கே.நாராயணனும், சிவசங்கர மேநோனும், நிரூபமா ராவும் தேர்வு செய்யப்பட்டார்கள். அன்ஹா விசவாசத்தை நிரூபமா அராவ் முறையாக காட்டுவார். இப்போது "காஷ்மீர் பிரச்சனயை" அமெரிக்கா விரும்பும் பாணியில் கையாளத் தொடங்கியுள்ளார். பாகிஸ்தானுடன் உள்ள நட்பை அமெரிக்கா விரும்பும்படி பேசி வருகிறார். அதேபோல "அமெரிக்கா விரும்புவது போல, மியான்மரில், சூ கியூ வுடன் பேசச் சென்று அவரை நிதானப்படுத்தி அங்குள்ள ராணுவ ஆட்சியாளர்களையும் காப்பாற்றி உள்ளார். இத்தகைய வேலைகளை அவசர் அவசரமாக செய்வதன் மூலம், தான் அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரக தூதுவராக போக தகுதி உள்ளவர் எண்பதை நிரூபித்து கொண்டுள்ளார்