Thursday, June 23, 2011

கனிமொழிக்கு அன்று கோபம், தணித்தார் கலைஞர்

கனிமொழிக்கு உச்சநீதிமன்றத்தில், பிணை கிடைக்கவில்லை. அது பெரியதொரு இழப்பு. ஏன் என்றால் சிறையில் உள்ளவர்கள் எப்போதுமே பிணிக்கு, மேல் முறையீடு என்று அடுத்த கட்ட உயர்ந்த நீதிமன்றத்திற்கு செல்ல அவசரப்பட மாட்டார்கள். ஏன் என்றால் உயர்ந்த நீதிமன்றத்தில் ஒரு முறை பிணை மறுப்பு வந்துவிட்டால், அடுத்து பிணை போட மிக தாமதமாக ஆகும்.இது உள்ளே இருய்க்கும் எல்லா கைதிகளுக்கும் தெரிந்த செய்தி. வெளியே உள்ளவர்களுக்கு தெரியாது, விளங்காது. அதே விசயம்தான் கனிமொழி விசயத்திலும் நடந்தது.


கனிமொழியும், சரத் குமார் ரெட்டி யும், தங்களுக்கு உச்சநீதிமன்றத்தில் பிணிக்கு முறையிடக்கூடாது என்பதில் உறுதியாக கூறி வந்தனர். அவர்களுக்கு இந்த ரகசியம், சிறைக்குள் சென்ற உடனேயே பல கைதிகளின், மற்றும் சிறைத்துறை காவலர்களின் ஆலோசனைகளில் தெரிந்து விடும், தெரிந்து விட்டது. அதனால் அதில் உறுதியாக இருந்தனர். ஆனால் அமைச்சர் ஜகத் ரட்சகனும், டில்லியில் ராஜாத்தி குழுவிற்கு உதவி வரும் துறை என்பவரும் அதற்கு எதிராக ஏதோ தாங்கள் அதிக அக்காரை கொண்டவர்களாக காட்டிக்கொண்டு, உச்சநீதிமன்றம் செல்ல வற்புறுத்தினர். அவர்களுக்கு இதன் விவரம் தெரியாது. களிஞருக்கும், ராஜாத்திக்கும் விவரம் புரியவில்லை. ஏற்கனவே இவர்களை ஏமாற்றி ஒரு பெரிய அதிகாரி இப்போது அகதிகள் முகாமிற்கு அனுப்பப் பட்டவர் பல பத்து கோடிகளை சம்பாதித்து விட்டார் என்ற கருத்தும் இருய்க்கிறது.


உச்சநீதிமன்றம் மறுத்தது மட்டுமின்றி, குடர்ப்பத்திற்கை தாக்கலான பிறகுதான் கீழ் கோர்டில் பிணிக்கு அணுக வேண்டும் என்று வேறு கூறி விட்டது. இது பெரிய அடி. சிறைக்குள் உள்ளே இருப்பவர்களுக்கு தான் அதன் அருமை தெரியும். கனிமொழிக்கு பயங்கர கோபம். தந்தையிடம் கடுமையாக பேச எண்ணி இருந்தார். அது களிஞருக்கும் தெரிந்து விட்டது. அதனால்தான் அவர் முதலில் கனிமொழியை தனியாக பத்து நிமிடம் சந்தித்தார். அப்போது முதலில் கலிஞர் கண்ணீர் விட்டு விட்டார். பாவம். மகளும் கண்ணீர் விட்டு விட்டார். திட்டு .வாங்காமல் தான் தஹ்ப்பித்த பிறகுதான், ராசாத்தியை உள்ளே அனுமதித்து அவருடன் பத்து நிமிடங்கள் மகளை சந்தித்து உரையாடினார்.


எப்படியோ, கனிமொழியை பழிவாங்க எண்ணிய குடும்பத்தின் பிற உர்ப்பினர்களுக்கு இது திருப்தியைத் தந்திருக்கும். ஆனால் அவர்களுக்கும் வருகிறது வரலாறு என்று கணிம்ழிகுழுவினர் கூறுகிறார்கள்.