Wednesday, June 1, 2011

சிங்கள வணிகர்களின் கைக்கூலியா கருணா?

வடக்கிலும், கிழக்கிலும் தமிழர் பகுதிகளில், சிங்களவன் குடியேற்றம் எப்படி சரி? தமிழர் பகுதி கடைகளை சிங்களவன் ஆக்கிரமிப்பு செய்வது எப்படி முறை? நல்லூர் முருகன் கோவிலில் கூட , வணிகம் செய்ய சிங்களவன் நுழையலாமா? இது தமிழரின் வாழ்வியல், பண்பாட்டு, நடைமுறைகளுக்கு ஆபத்தல்லவா? கோவிலை புனிதமாக என்னும் தமிழரின் பண்பாட்டிற்கு இழுக்கு அல்லவா? இப்படி உலகத் தமிழர் அனைவரும் குரல் எழுப்பும் வேளையில், ஒரு துரோகியின் குரல் மட்டும் வேறுபட்டு கேட்கிறது.


கொழும்பு நகரில் இதுவரை தொண்ணூறு விழுக்காடு தமிழ் முஸ்லிம்கள் வணிகம் செய்து வந்தனர். போருக்கு பிறகு சிங்களம் அந்த முஸ்லிம் தமிழர்களை விரட்டி விட்டு, சிங்கள வணிகர்களால் நிரப்பி வருகிறது. இப்போது கொழும்பு நகரில் அறுபது விழுக்காடுதான் முஸ்லிம் தமிழர்கள் வணிகம் செய்கிறார்கள். இதை எதிர்த்து தமிழர்கள் குரல் கொடுத்தால், அதற்கு விரோதமாக ஒரு தமிழர் துரோகி, குரல் எழுகிறது. அந்த குரல், "கொழும்பில் தமிழர்கள் வணிகம் செயயலாம் என்றால், வடக்கில் ஏன் சிங்களர்கள் வணிகம் செய்யக்கூடாது" என்று வினவுகிறதாம். அந்த பெரிய துரோகக் குரலுக்கு சொந்தக்காரர்தான் " கருணா " என்ற துரோகி.

ஒன்று செய்யலாம். வடக்கு கிழக்கிலிருந்து சிங்களர்களை கருணாவே விரட்டிவிடு. கொழும்பிலிருந்தும் தமிழர்களை நாங்கள் திரும்பப் பெற்றுக் கொள்கிறோம். சரிதானே. உன் இனத்துடன் வாழை முடியாது என்பதற்காகத்தானே விடுதலை கேட்கிறோம்.

தன்வினை தன்னைசுடும். ஓட்டப்பம் வீட்டைசுடும்--அறிவாலயம் முனகல்.

நாலாவது வன்னிப்போரை நடத்துவதிலும், தமிழினத்தை அழிப்பதிலும் அவர்களுக்குள் இணைப்பு இருந்தது. ஆனால் அதன்பிறகு, அவர்கள் தங்களுக்குள்ளே "பனிப்போர்" நடத்தத் தொடங்கினர்.அதுவே " பழிப்போர் " ஆக மாறியது. ஒருவரை ஒருவர் ஸ்பெக்ட்ரம் ஊழலில் தாக்கிக் கொண்டனர். குடும்பக் கழகத்திற்குள்ளே இந்த" கூத்து " நடந்தது. குடுமத் தலைவர் அவ்வப்போது, "பலியாடுகளுக்கு" வக்காலத்து வாங்கி வந்தார்." பலியாடுகள் " இரண்டும், " பட்டி" யில் அடைக்கப்பட்டன. " ஆடுகளைப் பார்க்க " ஊடக பெருச்சாளிகள், தங்கள் குடும்ப " ஓநாய்களை" அனுப்பி வைத்தன. ஓநாய்களும் பறந்து சென்று அங்கே " பட்டியிலிருக்கும் " ஆடுகளை, அதிலும் பெண் ஆட்டை பார்த்து, பார்த்து கண்ணீர் விட்டன.

மனதிற்குள் " பலியாடுகள் மூன்றும்" பழிவாங்கிய பெருச்சாளிகளை முறைத்துப் பார்த்துக் கொண்டே இருந்தன. "சமயம் உங்களுக்கும் வரத்த்தானே செய்யும்" என்று பலியாடுகளும், தாய் ஆடும் கருவிக் கொண்டன. "பாரம்பரிய முதலாளி" விடுவதாய் இல்லை. எழு ஆண்டுகளுக்கு முன்னால் " இளைய பெருச்சாளி" இலாக்க வாங்கியபோது, போட்டியில் தோற்றத்தை மறந்து விடவில்லை அந்த முதலாளி. அதை அந்த " குடும்பத் தலைவரிடம்" போட்டுக் கொடுத்துத் தானே இலாகாவையே பறிக்க முடிந்தது. இப்போது தனக்கு பொருள் குவித்தவர்கள் " பலி ஆடுகளாக" " பட்டி" யில் அடைக்கப் பட்டதற்கு " பழி வங்க" அந்த "பாரம்பரிய முதலாளி" காய் நகர்த்த மாட்டாரா?

வசமாக மாட்டிக் கொண்டனர் " பெருச்சாளி சகோதரர்கள்". எல்லா ஊடகங்களிலும் "எச்சரிக்கை மணி" அடித்து விட்டார்கள். அடுத்து " பெருச்சாளி சகோக்களுக்கும்" தலைநகரிலேயே " பட்டி" தயாராகி விடும். இது மேலிடக் கட்டளையாம். இவர்கள்தானே " நாலு ஆண்டுகளுக்கு முன்பு தங்கள் " அச்சிலும், காட்சியிலும்" அமப்லப்படுத்தியவர்கள். அதன்மூலம் " போட்டியாளர்களை " முதல் பலி" கொடுக்க ஏற்பாடு செய்தவர்கள். இப்போது, " ஆட்டை கடித்து, மாட்டை அக்டித்து, மனிதனை" கடிக்க அந்த மேலிடம் வருகிறதே. " வினை விதைத்தவன் வினை அறுப்பான்" " திணை விதைத்தவன் திணை அறுப்பான்" பட்டினத்தார் சொன்னார்- " ஓட்டப்பம் வீட்டைச் சுடும்" இதுதான் இப்போது " அறிவாலயத்தின் அகமகிழ்வு"