Sunday, May 22, 2011

சின்னக்குத்தூசி உடல் எரியூட்டப்பட்டது.

ஒரு பிரபல எழுத்தாளன் உடல் இன்று மாலை ஐந்தரை மணிக்கு மயிலாப்பூர் மயானத்தில் எரியூட்டப்பட்டது. நக்கீரன் அலுவலகத்தீலிருந்து புறப்பட்ட "இறுதி ஊர்வலத்தில்" , முன்னாள் துணை முதல்வர் மு.க. ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி, இந்நாள் மேயர் மா.சுப்பிரமணியம், தி.க.தலைவர் கி.வீரமணி, மதிமுக மல்லை சத்தியா, நக்கீரன் கோபால், காமராஜ், ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள், பெரியார் திக. விடுதலை ராஜேந்திரன், மற்றும் கட்சி எல்லைகளைத் தாண்டி பல பெரியார் தொண்டர்கள், நடந்து வந்தனர். மயிலாப்பூர் இடுகாடு வரை வந்த அனைவரும், சின்னக் குத்தூசியின் " அர்ப்பணிப்பை" பற்றியே பேசிக் கொண்டு வந்தனர்.


ஆண்ட திமுக தலைவரான முதல்வருக்கு மிக, மிக, நெருக்கமாக் இருந்தும்கூட, ஒரு சிறிய துரும்பைக் கூட தனக்காக பெற்றுக் கொள்ளாத பெருந்தகை என்பதையே எல்லோரும் கூறினர். பல ஊடகவியலாளர்கள் அவரது " அறையை" " நூல் நிலையமாகவும்" " ஆவண காப்பகமாகவும்" பாவித்ததை நினைவு கூறினர்.சின்னக் குத்தூசியின் " நினைவாற்றலை" பயன்படுத்தி, அவரிடம் வரலாற்று செய்திகளை கற்றுக் கொண்டவர்கள் அங்கே பரிமாறிக் கொண்டனர். பெரியார் பெருந்தொண்டர் என்று குறுஞ்செய்திகள் அவர் பற்றி பறந்தன. நக்கீரன் இதழ் சார்பாக, இரண்டு வித சுவரொட்டிகள் அவருக்கு அஞ்சலி செலுத்தின. " தினமணி", "தினமலர்" ஏடுகளுக்கு பதில் கொடுக்க, அவர்களை " பார்ப்பனர்கள்" என்று திட்டுவதற்கு, கடந்த ஓராண்டாக முதல்வர் கலைஞருக்கு, சின்னக் குத்தூசியின் எழுத்துக்கள் பயன்பட்டன என்றும் அதற்காகவே " முரசொலியில்" அவரது கட்டுரைகள் எழுதப்பட்டன என்றும் ஒரு மொத்த பெரியார் தொண்டர் எடுத்துச் சொன்னார்.


வருகிற மே 29 ஆம் நாள், " மாலை ஐந்தரை மணிக்கு, "பெரியார் திடலில்" சின்னக் குத்தூசிக்கு நினைவேந்தல் நிகழ்வு நடத்தப்படும், அவ்வமயம் அவரது படத்திறப்பும் நடைபெறும் என்று நக்கீரன் கோபால் அறிவித்தார்.

கலைஞர் வருந்தினால் தாங்காமல் உயிர் நீத்த நண்பர் சின்னகுத்தூசி.

இன்று காலை அந்த மாபெரும் எழுத்தாளர் திடீரென மாரடைப்பு வந்து மறைந்துபோனார். மருத்துவமனையில் ஓராண்டாகவே படுக்கையில் இருந்தாலும், ஒவ்வொரு நாளும், தவறாமல் "முரசொலிக்கு" கட்டுரைகள் எழுதிக் கொண்டே இருந்தார் சின்னக் குத்தூசி அய்யா. அய்யாவின் இயற்பெயர் "தியாகராஜன்" அவர் கலைஞரின் பால்ய கால நண்பர். அவரது ஊர்காரர். கலைஞர் மீதான அவரது ஈடுபாடு அளவற்றது. கலைஞரின் குடும்பத்திலோ, கழகத்திலோ இந்த அளவுக்கு அய்யா சின்னக் குத்தூசி வைத்த அளவுக்கு கலைஞர் மீது பாசத்தை, நேசத்தை, வைத்திருப்பவர் உண்டா என கேள்வியே கேட்கலாம்.


அப்படிப்பட்ட " சின்னக் குத்தூசி" மறந்துவிட்டார். அவர் முரசொலியில், " கொக்கிரகுளம் சுல்தான் முகமது" என்ற பெயரிலும் பல கட்டுரைகளை எழுதியுள்ளார். பெரியார் கருத்துக்களை ஏற்றுக் கொண்டு, திமுக வின் வரலாற்றை மனதில் கொண்டு, அவர் கலைஞர் எடுக்கும் எந்த நிலைப்பாட்டையும் ஆதரித்து எழுதி வந்தவர். கலிஞரின் " பகுத்தறிவு" கொள்கையை கடைசிவரை நம்பி வாழ்ந்துவந்தவர். கலைஞருக்கு யார் கேள்வி எழுப்பினாலும், கலைஞருக்கு யார் பதில் கொடுத்தாலும், சின்னக் குத்தூசி அய்யாவின் எழுத்தாணி அவர்களை, மறுநாளே "முரசொலியில்" பதம் பார்த்துவிடும்.

அந்த " சின்னக் குத்தூசியால்" கலைஞர் இப்போது பெற்ற மாபெரும் தேர்தல் தோல்வியை தாங்கிக் கொள்ள முடிகிறதா எண்பதை விட, அந்த தோல்வி கலைஞரை பாதிக்குமோ என்ற கவலை சின்னக் குத்தூசியாய் பாதித்திருக்கும். கனிமொழி கைது செய்யப்பட்டது பாதித்திருக்குமா என்பதைவிட, கனிமொழி கைது கலைஞரை பாதித்து விட்டதே என்று, சின்னக் குத்தூசியாய் பாதித்திருக்கும். அதுவே அவருக்கு, " மாரடைப்பாக" வந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. இப்படி கலைஞர் மீது " பாசம்" ம்ட்டுமே வைத்திருந்த ஒரு உண்மை நண்பர் சின்னக் குத்தூசி தனக்கு என்று திமுக ஆட்சியிலோ, கலைஞர் குடும்பத்திலோ பெற்றதில்லை.


அவரது எழுத்துக்களை வெளியிட்டு வந்த " நக்கீரன்" ஏடுதான் அவரது வாழ்க்கையை அதாவது உணவு, மருத்துவ செலவு என்ற அடிப்படை தேவைகளுக்கு பார்த்துக் கொண்டது. இப்போது அவரது உடலையும் நக்கீரன் அலுவலகம்தான் தாங்கி வருகிறது. திருமணம் செய்து கொள்ளாத சின்னக் குத்தூசி, ஒரு சிறிய அறையில் திருவல்லிக்கேணியில் வசித்து வந்தார். அவரை பல, பல ஊடகவியலாளர்கள் சென்று எப்போதும் சந்தித்து பல செய்திகளை கேட்டவண்ணம் இருப்பார்கள். பல ஊடகவியலாளர்களுக்கு வரத்தான் ஆசான் என்றால் சரியாக இருக்கும். தனது அறையில் எப்போதுமே பல பத்தாண்டுகளாக வெளிவந்த "செய்திகளை" ஆவண காப்பகம் போல வைத்திருப்பார். அதிலிருந்து எடுத்து நிறைய பேருக்கு வரலாற்றை புள்ளி விவரத்துடன் கொடுப்பார்.

அந்த "சின்னக் குத்தூசி" ஒருமுறை கலைஞருடன் சிறிய மாறுபாடு கொண்டபோது, கோபத்தில் கலிஞர் அவரி வராதே என்று கூறிவிட்டாராம். அது நண்பர்களுக்குள் நடக்கக் கூடிய ஒரு ஊடல்தான். ஆனால் அதை வெளிப்படுத்திய கலிஞர் என்ன சொன்னாராம் தெரியுமா? அந்த "பாப்பானை" என்று திட்டினாராம். ஆமாம், சின்னக் குத்தூசி பிறந்தது பார்ப்பனக் குடும்பத்தில்தான். ஆனால் அவர் அந்த குடும்பத்துடன் வாழாமல் தன்னை கலைஞரது அரசியலுக்காக, அதாவது கலைஞரின் " பார்ப்பன எதிர்ப்பு அரசியலுக்காக" அர்ப்பணித்துக் கொண்டவர். அப்படிப்பட்டவரை இப்படி திட்ட யாரால் முடியும். கலைஞர் கோடுள்ள " மனப்பான்மையால்" மட்டுமே முடியும்.

தயாவின் ஆசையில் மண் போட்டாரா கலைஞர்?

தயாநிதியைப் பொறுத்தவரை, ஆ.ராஜாவை உள்ளே தள்ளியாச்சு. அரசியல் போட்டியாக தாத்தாவால் கொண்டுவரப்பட்ட கனிமொழியையு, உள்ளே தள்ளியாச்சு. சோனியா வகையராக்களிடமும், நற்பெயர் எடுத்தாச்சு. திமுக வின் ஆங்கில அர்த்தமே, "தயாநிதி முன்னேற்ற கழகம்" என்று தான் காங்கிரஸ்காரர்களிடம் கூறியதையும் வலுப்படுத்தியாச்சு. கோபப்பட்ட தாத்தாவிற்கு மனம் மகிழ, "ஹெட்லைன்ஸ் டுடே" யில் கருத்துக் கணிப்பு என்ற பெயரல் பொய்யையும் வெளியிட்டாச்சு. இனி எல்லாமே தான்தான் என்று இருக்கும் போது, இந்த "சீ.என்.என்.--ஐ.பி.என். தனது வெளியீட்டில் அடுத்து வரும் "ஸ்பெக்ட்ரம் குற்றப்பத்திரிகையில்" தயாநிதி பெயரும் வர இருக்கிறது என்று போடுவது கண்டு தயாநிதி கோபப்பட்டாராம்.


அந்த காட்சி ஊடக பொறுப்பாளரிடம், தொலைபேசி, திட்டினாராம். எஸ்.சீ.வி. யில் சீ.என்.என். ஐ காட்டமாட்டோம் என்றாராம். அவரும் வெட்டிவிடுங்கள், நாங்களும் உங்கள் பங்கு ஸ்பெக்ட்ரம் ஊழலில் என்ன எண்பதை வெளியிடுகிறோம் என்றாராம். இப்போது திமுக தலைவர் தனது மகள் கைது ஆனபின்பு, அதிக மனவருத்தத்தில் இருக்கும்போது, ஐ.மு.கூ. அரசின் ஆண்டு விழாவிற்கு யார் போவது அல்லது போகாமலிருப்பது என்று முடிவு செய்வதற்கான "ஆலோசனை" கலைஞர் வீட்டில் நடந்தது. அதில் தாவும், ஸ்டாலினும் எதிர்பார்த்தது போல, " தயாநிதி மாறன் ஐ.மு.கூ. ஆண்டு விழாவிற்கு செல்லேண்டும்" என்ற கருத்து எடுபடவில்லை.



காங்கிரஸ் செய்த "துரோகம்" விவாதிக்கப் பட்டது. அதனால் ஐ.மு.கூ. அரசின் ஆண்டுவிழாவிற்கு திமுக சார்பாக யாரும் செல்லக் கூடாது என்று கலைஞருக்கு சார்பான கருத்துக்கள் வந்தன. தயாவும்,ஸ்டாலினும் வற்புறுத்தி, காங்கிரசை இந்த நேரத்தில் பகைத்துக் கொள்ளக் கூடாது என்று ஆலோசனை கூறிய பிறகு, குடும்பத் தலைவர் செவி மடுக்கிறார். ஒரு பிரதிநிதியை திமுக, ஐமுகூ ஆண்டுவிழாவிற்கு அனுப்பலாம் என்று முடிவாகிறது. தன்னை அனுப்புவார்கள் என்று தயா எதிர்பார்க்கிறார். அதன்மூலம் தனது கனவை நனவாக்கலாம் என்று எண்ணுகிறார்.


ஆனால் "குடும்பத் தலைவருக்கு" அந்த சூழ்ச்சியும் தெரியும். ஆகவே கழகத்தின் ஒரே பிரதிநிதியாக, டி.ஆர்.பாலுவை அனுப்ப முடிவு செய்கிறார். அதற்கு ஒரு விளக்கமும் கொடுக்கிறார். டி.ஆர்.பாலு, நாடாளுமன்ற திமுக கட்சித் தலைவர் என்ற கோதாவில் சென்று கலந்து கொள்ளட்டும் என்கிறார். மாட்டார் திமுக மத்திய அமைச்சர்கள் எல்லோரும் அந்த விழாவில் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று அறிவிக்கிறார். தான் டில்லி சென்று கனிமொழியை சிறையில் பார்க்க கழகத்த்தலைவர் விரும்புகிறார். அதற்கான பயணம், திங்கள் கிழமை என்கிறார். அப்போது சோனியாவை சந்திக்க மாட்டேன் என்கிறார்.

சோனியா தான் சீ.பி.ஐ. மூலம் தனது குடும்ப உறுப்பினர்கள் மேல் கைதுகளை ஏவி விடுபவர் என்ற உண்மை, கழகத்தளைவருக்கு தெரியும். அதேநேரம் கூட்டணியில் குழப்பமில்லை என்று கூறுவதும் அவருக்கு தெரியும். அதே பாணியை தானும் எடுத்து இந்த முடிவை எடுக்கிறார். சோனியாவிற்கு இந்த ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் உதவி செய்துவருபவர் தயாநிதிதான் என்பதும் கலைஞருக்கு தெரியும். இப்போது " தயாநிதியால் பாதிக்கப்பட்ட டாட்டா, தனது ஆட்களை உள்ளே அனுப்பிய தயாநிதியையும் உள்ளே அனுப்ப ஏற்பாடு செய்வதும் தாயாவிற்கு தெரியும். இப்ப எப்புடி இருக்குது?