Tuesday, May 10, 2011

தேர்தல் முடிவை முன்கூட்டி கணிப்பதில், ஊடகங்களின் போட்டியா? அரசியல்வாதிகளின் சதியா?

மே பத்தில் மேற்குவங்க தேர்தல் முடிவடைந்தது. அதனால் அதற்கு பிறகு உங்கள் ஊடகங்களின் கருத்து கணிப்புகளை வெளியிடலாம் என்றும், அதனால் எந்த பாதிப்பும் யார்க்கும் ஏற்பட்டுவிடாது என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதையே "சாக்காக" கொண்டு "ஹெட்லைன்ஸ் டுடே " சீ.என்.என்-ஐ.பி.என்., நியூஸ் எக்ஸ், சீ.வோட, என்று ஆளாளுக்கு ஆங்கில காட்சி ஊடகங்கள், தமிழ்நாடு மட்டுமின்றி, மேற்கு வங்கம், கேரளா, அஸ்ஸாம், என்று தேர்தல் முடிந்த இடங்களில் யாருக்கு வாக்களித்தார்கள் என்று ஒரு புள்ளிவிவரக் கணக்கை எடுத்துள்ளனர்.


இதில் தமிழ்நாட்டை பொறுத்தவரை, ஹெட்லைன்ஸ் டுடே தவிர யாருமே திமுக வெற்றிபெறும் என்று கூறவில்லை. சிஎன்என்- ஐபிஎன் நை பொறுத்தவரை, அதிமுக கூட்டணி மொத்தமே 132 இடங்களை பிடித்து ஆட்சியை அமைக்கும். ஆனால் நியூஸ் எக்ஸ், மற்றும் சீ வோட்டை பொறுத்தவரை, அதிமுக என்ற தனிக்கட்சி மட்டுமே 133 இடங்களை பிடிக்கும். அதிமுக கூட்டணி ஒட்டுமொத்தத்தில் 176 க்கு மேல் தொகுதிகளை பிடிக்கும். இவ்வாறு எங்கோ வடக்கே உள்ள அந்த இரண்டு நிறுவனங்களும் கணிக்க வேண்டிய அவசியம் என்ன? ஹெட்லைன்ஸ் டுடே யை பொறுத்தவரை, அவர்கள் நல்ல தொகைக்கு கலாநிதியை சார்ந்து வாழ் வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்பது புரிகிறது. அந்த கணிப்பை "கலைஞர் டி.வி. தனது கட்டாயத்தில் வெளியிட்டால், ஏன் அதையே "சன் டி.வி". வெளியிடவில்லை? அவர்களுக்கு இந்த தேர்தலை விட, தங்கள் வியாபாரம்தான் முக்கியம். தங்கள் வணிகத்தில் நேயர்கள் தொடர்ந்து ஆதரவு தரவேண்டியது அவர்களுக்கு கட்டாய தேவை. போய் செய்தியை தேர்தல் முடிவுகளில் வெளியிட்டு விட்டு, பிறகு எந்த முகத்தோடு நேயர்களிடம் செல்வது? என்பது அவர்களது கேள்வி.

மற்ற வட இந்திய ஊடகங்கள் சரியாகவே கணித்ததால், அதிமுக, மற்றும் அதன் கூட்டணியின் ஏகபெரும்பான்மை வெற்றி இங்கே அறுதியிடப்பட்டு விட்டது.அதேசமயம் தங்கள் ஆதரவு தமிழ் ஏடு மூலம் திமுகவும் தனது விருப்பங்களை வெளியிட்டு ஊரை ஏமாற்றுகிறது. தமிழ்நாடெங்கும் பெரும் அலை ஒன்று அதிமுகவிற்கு சாதகமாக அடித்துள்ளது என்பது மீண்டும் இங்கே உறுதியாகிறது.

காஸ்ட்ரோவை, கிலானி தாண்டினால், இருவரையும் சாம்ஸ்கி தாண்டுகிறார்.

நோம் சாம்ஸ்கி ஒரு அமெரிக்க குடிமகன். ஆனால் உலகில் ஒவ்வொரு மூலையிலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட மாபெரும் மனித உரிமை ஆர்வலர். அவரது தொழிலில், "மொழியியலில் " உலகத்திற்கே மாபெரும் வழிகாட்டி. இந்த உலகில் எந்த நாட்டில் மொழியியல் வல்லுனர்கள் உருவானாலும், அவர்கள் நோம் சாம்ஸ்கியை அல்லது அவரது புத்தகங்களை குருவாக ஏற்றுக் கொண்டுதான் அந்த மொழியியல் பற்றி, அதன் கட்டமைப்பு பற்றி கற்றுக் கொள்ள முடியும். " மொழி" எப்படி ஒரு அடிப்படை கருவியாக ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் இருக்கிறதோ, அதேபோல உலகளாவிய மொமொழிகளின் அடிப்படை கட்டமைப்பு, வரலாற்று ரீதியான " மானுட வளர்ச்சியின்" அடிப்படை எண்பதை நோம் சாம்ஸ்கி விளக்கினால் கேள்விகேட்காமல் புரிந்து கொள்ளும் நிலையில் இந்த உலகம் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு மகத்தான மார்க்சிய அடிப்படை கொண்ட, மனித உரிமை ஆர்வலர் அவர்.


அந்த நோம் சாம்ஸ்கி, அமெரிக்காவால் பின் லேடன் கொலை செய்யப்பட்டது குறித்து தெரிவத்துள்ள கருத்துக்கள் சாட்டையால் அமெரிக்க் வல்லரசின் மனஹ்சாட்சியை அடித்தது போல தெரிகிறது. " ஆப்கானிஸ்தானை சேர்ந்த ஒரு அதிரடி படை, திடீரென அமெரிக்காவில் இருக்கும் ஜார்ஜ் புஷ் வீட்டிற்குள் புகுந்து, அவரை சுட்டுக் கொன்று, அவரது உடலை அட்லாண்டிக் கடலில் வீசி எறிந்தால், அமெரிகராகிய நாம் தாங்கி கொள்வோமா?" என்று அந்த நோம் சாம்ஸ்கி வினவுகிறார். இவரது கேள்விகள் வெள்ளை மாளிகையின் பளிங்குகளில் படிந்த்ள்ள கரைகளையும், காயங்களையும், இரத்தங்களையும் காட்டுவதாக உள்ளது. அதனால்தான் காஸ்ட்ரோ கூற்றை, கிலானி மிஞ்சி விட்டாரே என்று நாம் நினைத்தால், அதையும்கூட நோம் சாம்ஸ்கி தாண்டி விட்டார்.

சிதம்பரம் செய்த தமிழர் விரோத துரோகம் அமபலமாகிறது.

வன்னி இறுதிக்கட்டப் போரின் போது தமிழீழ விடுதலைப்புலிகளை முற்றாக ஒழித்துக் கட்டுவதற்கு இந்திய அரசு சார்பாக செயற்பட்டவர்களுள் காங்கிரஸ் அமைச்சரான சிதம்பரத்திற்கு மஹிந்த ராஜபக்ஸ வழங்கிய கையூட்டு தொடர்பான தகவல்கள் கசிந்துள்ளன. தமிழர்களுக்கு சார்பாக செயற்பட்டு விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் தொடர்பில் தகவல்களைக் கறந்து சிங்கள அரசிற்கு வழங்கியதுடன் சர்வதேச மனிதாபிமான நடவடிக்கைகளையும் முடக்கவும் துணை போயிருந்தார். சிதம்பரம் பொறுபேற்றுள்ள "உள்துறை" அதை செய்ய அவருக்கு பெரிதும் உதவியுள்ளது.


இதற்காக மஹிந்த ராஜபக்ஸ அமைச்சர் சிதம்பரத்தின் மனைவி பெயரில் நளினி தொழில் நிலைக்கூட்டு நிறுவனத்திற்கு இலங்கையின் எரிபொருள் அகழ்ந்தெடுக்கும் உரிமையை வழங்கியுள்ளார். அந்த கூட்டு நிறுவனத்தை, சிதம்பரம் மனைவி நளினி, மலேசியா சென்று, அங்கே அந்த நிறுவத்தை தொடங்கி, அதன் மூலம் மகிந்தாவிடம் பேசி, அதற்கான ஒப்பந்தத்தை வாங்கி பிறகு அதையே சீனாவிற்கு விற்றிருக்கிறார. நளினி கூட்டு நிறுவனம் அதன் உரிமையை பல கோடி இலஞ்சம் பெற்றுக் கொண்டு ரஸ்யாவிற்கும் மலேசியா ஊடாக சீனாவிற்கும் விற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய அரசியல்வாதிகள் யாருமே சிங்கள அரசத்தலைவர் மகிந்தாவிற்கு, சும்மா உதவிடவில்லை. வேண்டிய அளவில் பணம் பெற்றுக் கொண்டு, வணிக ஒப்பந்தங்களை பெற்றுக் கொண்டுதான் அவர்கள் சிங்கள அரசின் தமிழின அழிப்பு போருக்கு உதவி செய்துள்ளனர்.


சிதம்பரமும், நளினியும் தமிழ்நாட்டை சேர்ந்த தமிழர்கள் என்பதால், நாம் இனி வட இந்தியர்களை குறை சொவதற்கு லாயக்கற்றவர்கள் ஆகிறோம். அதேபோல நம்முள் பலர், இந்தியாவிற்கு எதிராக சீனாவிற்கு, மகிந்தா பல ஒப்பந்தங்களை கொடுத்திருக்கிறார் என்று கோபமாக கூறுவதும் இந்த இடத்தில் அடிபட்டு போகிறது. நளினி சிதம்பரம் சிங்கள அரசிடம் பெற்ற ஒப்பந்தத்தை சீனாவிற்கு விற்றிருப்பது இப்போது அம்பலத்திற்கு வந்திருப்பதால், இதில் இந்திய அரசியல்வாதிகளுக்கும், சீன அரசிற்கும், வேறுப்பாடு இல்லாமல் வணிகம் செய்யும் மகிந்தா ராஜபக்சேவும், இந்த "சீன போட்டி" என்ற மோடி வேலையை காட்டி தமிழ் மக்களை ஏமாற்ற நினைக்கும், இந்திய அரசின் உளவுத்துறையும் இங்கே அமப்லமாகி உள்ளன.


இதைவிட மஹிந்த அரசாங்கம் காங்கிரஸ் அரசில் உள்ள பல இராஜதந்திரிகளுக்கு முதலீடுகளுக்கு இலங்கையில் நீண்டகால குத்தகைக்கு காணிகள் வழங்குதல், கறுப்புப் பணத்தை முதலீடாக மாற்றுதல், சீனா மற்றும் பல நாடுகளில் தொழில் ஒப்பந்தங்களைப் பெற்றுக் கொடுத்தல் ஆகிய உதவிகளை செய்து வருகின்றமை தெரியவந்துள்ளது.

ஏகபோகம் தமிழ்நாட்டில் மட்டுமா? இந்தியா பூரா?

சன் காட்சி ஊடக குழுவினரின் ஏகபோகம், ஊடகத்துறை தவிர, திரைத்துறை தவிர, திரையரங்குகள் தவிர, விநியோகத்தர் தவிர, எங்கும் நீடிக்கிறதே என்று பலரும், பல தொழில் செய்பவர்களும் தமிழ்நாட்டில் அதிர்ந்து போவதும் அவர்களே அதற்காக தேர்தலில் மாற்று வாராதா என்று என்குபவர்கலாகவும் இருப்பதை நாம் காண்கிறோம். ஆனால் வருகின்ற செய்திகளை தாமதமாக கண்கானித்தால், அதாவது ௨௦௦௯ ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்ததை கணக்கெடுத்தால், அந்த கலாநிதி மாறன் வகையறா, இந்தியா முழுவதும், இந்தி பேசும் மாநிலங்கள் உட்பட தனது ஊடக வலைப்பின்னலை விரிவாக்கி தனது கையில் போட்டுவருகிறார் எனபது புரியும்.


கிடைத்திருக்கும் தகவல்களின் ஆதாரப்படி, எப்.எம்.என்று அழைக்கப்படும் " ரேடியோ" வலைப்பின்னலில், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, என்ற தென்னிந்திய மாநிலங்கள் தவிர, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், குஜராத், மத்திய பிரதேசம் ஆகிய வட மற்றும் மேற்கு மாநிலங்களிலும் தனகளது "சேவைகளை" விரிவு படுத்தியுள்ளனர். ரெட் எப்.எம். என்றுஅழைக்கப்படும் அந்த "ரேடியோ வலைப்பின்னல்" பொருளாதார பிரச்னைக்கு உள்ளான போது, அவர்களுக்கு நூறு கோடி கொடுத்து, அந்த அலைவரிசைகளில் அதாவது நிறுவனங்களில் 48 .9 விழுக்காடு பங்கை, கலாநிதி மாறன் வாங்கிவிட்டார். அதுதவிர அந்த நிறுவனத்தின் சிறுபான்மை பங்குகள் ஹைதராபாத்தை சேர்ந்த ஐ.டி. நிறுவனத்திற்கும், என்.டி.டி.வி. என்ற இருபத்திநாலு மணிநேரமும் ஒளிபரப்பப்படும் அலைவரிசையான காட்சி ஊடகத்திற்கும், மலேசியாவில் உள்ள அனந்த கிரிஷ்ணனுக்கு சொந்தமான ஆஸ்ட்ரோ நிறுவனத்திற்கும் சொந்தமாக உள்ளன.


இப்போது மேற்கண்ட பெரும் ஊடக நிறுவனகளுக்கு, சன் குழுமத்துடன் உள்ள வணிக உறவுகள் ஒன்றுக்குள், ஒன்று என்பது புரியப்பட முடியும். இந்த என்.டி.டி.வி. காட்சி ஊடகம்தான், ஸ்பெக்ட்ரம் ஊழலில் பிரதமர் பெயர் உச்சநீதிமன்றத்தில் சிக்கிக் கொண்ட பிறகு, காங்கிரஸ் கட்சியின் வாய் போல செயல்படும் ஊடகம் என்பதால் சில சித்து வேலைகளை செய்தது. அதாவது கபில் சிபில் என்ற வழக்காடும் வல்லமை பெற்ற மத்திய அமைச்சரை, பர்கா தத் என்ற ஊடகவியலாளர் மூலம் கேள்விகளை துளைத்து கேட்கச் சொல்லி, அவற்றிக்கு திறமையாக கபில் சிபல் பதில் கூறினார் என்ற தோற்றத்தை ஏற்படுத்தி பிரதமர் முகத்தை காப்பாற்ற பகீரத முயற்சி எடுத்துக்கொண்டனர். இ[பொது சோனியா குழுவில், ஊடகபெருந்தலை, தாயநிதிக்கு இருக்கும் செல்வாக்கு புரிய முடியும்.


இந்த ரெட் எப்.எம்.என்ற வலைப்பின்னலில் உள்ள ரேடியோக்களை, 93 .5 என்ற மெகா ஹெற்சில் கேட்கலாம். அது, மும்பை, கொல்கத்தா,கான்பூர், ஜாம்ஷெட்பூர், போபால்,ஜபல்பூர், இன்டோர், நாசிக், ஔரந்கதாபாத், நாகபுரி, பெங்களூரு, மைசூர்,மகளூர்,குல்பர்கா, கொச்சி, திருவனத்தபுரம், திருச்சூர்,கண்ணனூர், கோழிக்கோடு, ஹைதராபாத், விஜயவாடா, விசாகப்பட்டினம், வாரங்கல், ராஜமுந்திரி, திருப்பதி, அகமதாபாத்,வடோதரா, லக்னோ,ஐஸ்வால், அலகாபாத், வாரணாசி, ஜெய்பூர், புவனேஸ்வர், அசன்சால், சிலிகுரி, கான்க்டக், கவ்ஹதி, சில்லாங் ஆகிய உட்பட நாற்பது ரேடியோக்களை கட்டுப்படுத்துகிறது. அவை முதலில் 2002 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதை எழு ஆண்டுகள் கழித்து அதன் நலிவு நேரத்தில் நூறு கோடிகளை விட்டெறிந்து சன் குழுமம் கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் பங்குகள்" இந்தியா டுடே" நிறுவனத்திலிருந்து 2006 ஆம் ஆண்டு பல சிறு நிறுவனகளால் வாங்கப்பட்டது. அதில்பெரும் பங்கை சன் குழுமம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிவிட்டது.

இதே காரணம்தான் அந்த "இந்திய டுடே" நிறுவனத்தின் "ஹெட்லைன்ஸ் டுடே" யில் இப்போது ஒரு போய் கருத்து கணிப்பை வெளியிட்டு முதல்வரை திருப்தி படுத்தும் வேலையையும் தயாநிதி பார்க்க முடிந்தது. 2009 ஆம் ஆண்டு அகஸ்ட் 14 இல் "சூரியா எப்.எம்." இந்த ரெட் எப்.எம். இற்குள் கொண்டுவரப்பட்டது. 38 நகரங்களில் அது தனது ஒளிபரப்பை செய்யத் தொடங்கியது. முதலில் ஆங்கிலத்திலும், இந்தியிலும் , இருந்த அந்த ஒலிபரப்புக்கள், முழுமையாக இந்தி ஓயல்பரப்பாக மாற்றப்பப்ட்டன. அவை இசை, திரப் பாடல்கள் என்று ஒலிபரப்பிவருகின்றன. தமிழ்நாட்டை தவிர அனைத்து மாநிலங்களிலும், இது "ரெட் எப்.எம். என்ற பெயருடனே இயங்கிவருகிறது. அதன் முதலாளிகளாக கலாநிதி மாறனும், ஹன்ஸ்ராஜ் சக்செனாவும், அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன் தொலை தொடர்பு என்று சன் கேபிள் விசனும், சன் டி.டி.எச்.உம அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுதான் இன்றைய உண்மை கதை. ஆகவே சன் குழுமத்திடம் எந்த இந்திய அரசியல்வாதியும் தப்ப முடியாது. அந்த அக்டோபஸ் முன்னால் அடங்கிப் போயி ஆகவேண்டும் என்று அவர்கள் எதிர்பார்கிறார்கள். இது எப்புடி? .

காஸ்ட்ரோ 8 அடி பாய்ந்தால், கிலானி 16 அடி........,

அமெரிக்காவின் மாபெரும் சாதனை என்று பீற்றிக் கொள்ளும், அபோதாபாத்தில் ஒரு வீட்டில் இறங்கி சிலரை சுட்டுக் கொன்றது என்பது இருக்குமானால், அப்படி ஒரு ஐ.நா.வின் உறுப்பு நாடு ஒன்றில், இன்னொரு உறுப்பு நாடு இறங்கி திடீரென ஆய்தத் தாக்குதலை நடத்துவது, அமெரிகாவில்வர இருக்கும தேர்தலுக்கு வேண்டுமானால் வெற்றியாக இருக்கலாம். ஆனால் மானுடத்திற்கு, அது பின்பற்றிவரும் கொள்கைகளுக்கு, உலக நாடுகளின் இறையாண்மைக்கு, பிரிதொரு நாட்டிற்குள் தலையிடாமை என்ற கொள்கைக்கு, நிராயுதபாநியரை கொள்ளக் கூடாது என்ற அங்கீகரிக்கப்பட்ட விதிகளுக்கு, மனைவி,மக்கள்முன்பு ஒருவரை கொல்வது சரியா என்ற கேள்விக்கு, மாபெரும் தோல்வி என்றுதான் கொள்ளவேண்டும்.


காஸ்ட்ரோ எழுதியதில் இருந்த நியாயத்தை ஏற்கனவே பார்த்தோம். இப்போது கொலை நடந்து சில நாட்கள் கழித்து, பாகிஸ்தான் அதிபர் கிலானி, பேசுகிறார். அவர் உலக சமூகத்தை சிறிது பின்னால் சென்று பார்கச்சொல்கிறார். கடந்த 90 ஆம் ஆண்டுகளின் நிகழ்வுகளை நினைவுக்கு கொண்டுவருகிறார். சீ.என்.என். மூலம் ஆவணமாகி உள்ள அந்த செய்திகளை கவனத்திற்கு கொண்டு வருகிறார். ஆப்கானிஸ்தானில், அமெரிக்க உயர் அதிகாரிகள் நின்று கொண்டு, அவர்களே உதவி செய்து, இஸ்லாத்தின் பெயரிலும், நாட்டு பற்றின் பெயரிலும், "புனிதப் போர்" நடத்த வீடுகளுக்கும், மசூதிகளுக்கும் செல்லுங்கள் என்று அனுப்பப்பட்ட நிகழ்வுகளை கோடிட்டு காட்டுகிறார். அரேபியா தொண்டர்களை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி "புனிதப் போரை" நடத்தவைத்ததை குறிப்பிடுகிறார்.அதன்மூலம் ஒசாமா பின்லாடேனையும், அல் கொய்தா இயக்கத்தையும் அமெரிக்கா தோற்றுவித்தது என்கிறார் கிலானி.


அடக்குமுறை, ஒடுக்குமுறை, ஆகியவற்றால் கோபமும், விரக்தியும் அடைந்துபோன மக்களை பயன்படுத்தி, எப்படி ஒசாமா பின்லேடன் உலக அரங்கில் "பயங்கரவாதத்தை" நிகழ்த்தினார் என்றும் கூறுகிறார். அந்த கோபமும், விரக்தியும் இன்னமும் பதில் சொல்லப்படாமலே இருந்தால், அதுவே இன்னொரு வடிவில் வெடிக்கும் என்கிறார். சீனாவிற்கு ஆறுதல் தந்ததற்கான நன்றியை சொல்கிறார். பாகிஸ்தான் ராணுவத்தையும், உளவுத்துறை ஐ.எஸ்.ஐ.யையும் மட்டுமே குறை கூறுவதை கேள்வி கேட்கிறார் கிலானி. உலக உளவுத்துறைகள் அனைத்துமே தோற்றுவிட்டன என்பதுதான், அபிதாபாத்தில் பின்லேடன் இருந்த செய்தி காட்டுகிறது என்கிறார். கிலானியின் இந்த பாய்ச்சல் அமெரிக்காவின் கொடு முகத்தை மப்லப்படுத்துவதாக அமைந்துள்ளது.