Wednesday, May 4, 2011

பூந்தமல்லி சிறைவாசிகளுக்கு தீர்வா?

நேற்று துணை மாவட்ட ஆட்சி தலைவர் கொடுத்த வாக்குறுதிகளை ஒட்டி, பட்டிநிபோரில் ஈடுபட்டிருந்த ஈழ அகதிகள் சிறைக்குலேயே பட்டினிபோரை முடிவுக்கு கொண்டுவந்தனர். தொடர்ந்து தமிழக அரசு, ஈழ அகதிகளை பூந்தமல்லி சிறப்பு முகாம் என்ற பெயரில், சிறையில் அடைத்து வைத்திரு எதிர்த்து சிறைக்குலேயே பட்டினிப்போர் நடத்தி, பலமுறை வாக்குறுத் அடிப்படையில் அதை முடித்துக் கொண்ட சிறைவாசிகள் இந்த முறை அங்கள் போராட்டத்தை சாகும்வரை நீடிப்பதாகவும், வருகிற பதினைந்தாம் நாளுக்குள் பதில் வராவிட்டால் உயிரை விட முடிவு செய்திருப்பதாகவும் செய்திகள் வெளிவந்தன.

அதையொட்டி அவர்களுக்கு ஆதரவாக வெளியே தமிழ் உணர்வாளர்கள் ஏற்பாடு செய்த ஒரு போராட்டத்திற்கு, " நாடு கடந்த தமிழீழ அரசு தோழமை மையம்" அமைப்பாளர் பேராசிரியர் சரஸ்வதி தலைமை தாங்கியபோது கைது செய்யப்பட்டு, விடுதலையானதும், தமிழக அரசுக்கு புதிய தலைவலியை கொடுத்தது. அதையே வின் காட்சி ஊடகத்தில் விளக்கும் போது, நேற்றைய நிகழ்ச்சியில், கலைஞர் ஆட்சியின் கடைசீ காலத்திலாவது, மனித உரிமைகளை மதித்து நடக்க கூடாதா? என்று வினவி இருந்தார்கள்.தங்கள் மீதான வழக்குகளில் குற்ற பத்திரிக்கை அளிக்க கோரியும், பிணையில் விடுவிக்க கோரியும் தானே ஈழ அகதிகள் போராடுகிறார்கள் என்றும் எடுத்துரைத்து இருந்தனர்.உலக தமிழர்கள் மத்தியில் இதிலாவது கலைஞர் நற்பெயர் வாங்க முயற்சிக்க கூடாதா என கேட்டிருந்தனர். ஊடக பரப்புரைகளை கவனமாக கவனிக்கும் தமிழக முதல்வர், தான் டில்லியுடன் சண்டை போடும் நேரத்தில், மே ஆறாம் நாளும், மே பதின்மூன்றாம் தனது தலைக்கு மேல் வாளாக தொங்கும் நேரத்தில், இந்த ஈழ அகதிகள் விசயத்திலும் தொடர்ந்து மத்திய அரசை மகிழ்விக்க வேண்டி, தமிழர் விரோத போக்குகளை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டுமா? என்று எண்ணினாரோ தெரியவில்லை.

நேற்றே சிறையில் உள்ள ஒரு சந்திரகுமாருக்கு குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்துவிட்டு, மற்ற இருவருக்கு சில நாட்களில் தாக்கல் செய்யப்படும் என்றும், வழக்கே இல்லாத ஒருவருக்கு விடுதலை செய்யப்படும் என்றும் உறுதி கொடுத்துள்ளனர். இதுவே அந்த சிறைவாசிகளை பட்டினி போரை திரும்ப பெற செய்துவிட்டது.