Friday, April 29, 2011

அதென்ன ஹெட்லயன்ஸ் டுடே கண்டுபிடிப்பு?

அய்யா தளர்ந்து போனார். செய்திகள் சாதகமா இல்லை. ஸ்பெக்ட்ரம் ஊழல் குற்றச்சாட்டும் வீட்டிற்கு உள்ளேயே வந்து குவியுது. பேரன் என்று சொல்லிக்கொல்பவரை அழைத்து மனதார திட்டினார். சீ.பி.ஐக்கு தூண்டுதல் வேலை பார்கிறாயா என்று குற்றம் சாட்டினார். தேர்தல் முடிவுகள் இப்போதே கவிழ்கின்றன என்று நினைத்தார். தொண்டர்கள் சோர்வு பற்றி கேள்விப் பட்டார். வருத்தப்பட்டார். ஏதாவது செய்யவேண்டும் என்றார். யாரிடம் ஊடகம் இருக்கிறதோ அவர்தானே செய்ய முடியும் என்றனர். இது அகில இந்திய ஊடகம் மூலம் மட்டுமே முடியும் என்றார்.

முடிவு திமுகவிற்கு சாதகம் என்றால், டில்லி அதிகாரிகல்பயப்படுவர் என்றார். அடஹ்ர்கு ஏற்பாடு செய்கிறேன் என்று இளைய அமைச்சர் தயாநிதி கூறினார். ஏற்கனவே தயாளு மீது, கனிமொழி மீது குற்றச்சாட்டுகள் வரும்போது, காங்கிரஸ் தலைமை மீது செல்வாக்கு செலுத்த யாரை அனுப்ப என்ற விவாதம் கிளப்பப்பட்டது. டி.ஆர்.பாலுதான் இருக்கிறாரே என்று குடும்ப தலை கூறியது. தயாவை அனுப்பு என்று மூத்த மகள் கூற, அவன் எவ்ண்டாம் என்றது தலை. நம்பிக்கை இன்னமும் தம்பி மீது வரவில்லை என அவரது ஆதரவு கும்பல் குடும்பத்திற்குள் முனு, முணுத்தது. செய்துகாட்டுகிறேன் என்ற அந்த இளைய அமைச்சர் அதற்கான வேலைகளை எடுத்தார். அதில் ஒன்று ஏற்கனவே தனது பணம் நூறு கோடி கொடுத்து வைத்த அந்த தேசிய அலைவரிசை பயன்பட்டது.

ஏற்கனவே அவர்கள் எடுத்துவைத்த ஒரு ஆய்வில் ஆறாயிரம் பேரை சந்தித்து இருந்தனர். அதை அடிப்படையாக வைத்து இப்போது அணைக்கு ஒன்றை இறக்கிவிடலாம். அது முதலில் தொண்டர்களின் மன உணவை எழுப்பிவிடும்.யாரும் பாதியிலேயே வாக்கு எண்ணிக்கை இடத்திலிருந்து இடம் பெயர் மாட்டார்கள். அடுத்து டில்லி கொஞ்சம் அடக்கி வாசிக்கும். அதன்மூலம் ஸ்பெக்ட்ரம் கதையை தள்ளிப் போடலாம். அடுத்து பெரியவருக்கு திருப்தியை கொடுத்து, அதன்மூலம் உற்ச்சாகம் மூட்டலாம். இதற்கு பெயர் கார்பொரேட் பாணி கணக்கு, மற்றும் விதைத்தல். அது இங்கும் அமுலாகிவிட்டது.

பிறகு எதற்காக அந்த காட்சி ஊடக நேர்காணலிலேயே, நீங்கள் வெற்றி பெற்று வந்தால் முதல்வர் யார் என்ற கேள்விக்கு இதுவரை சொல்லிவன்ம்த நான்தான் என கூறவேண்டியதுதானே? அதைமட்டும் திமுக போது குழு முடிவு செடியும் என்று என் கூறுகிறார். அவருக்கு தெரியும் இது திருப்தி படுத்த வெளியிட்ட கணக்கு என்று. அது என்ன கணக்கு? திமுக.கூட்டணி 129 இடங்களை பிடிக்கும் என்ற கணக்குதான்.

ராஜபக்சேவை மே தினத்திற்கு முந்திய நாளே சென்னை எதிர்க்கிறது.

தமிழின படுகொலையை, தமிழின அழிப்பை கொடூரமாக நடத்தி, இன்னமும் அதே வெறியுடன் தமிழின சுத்திகரிப்பை தமிழீழத்தில் நடத்திவரும் கொடியவன் ராஜபக்சே, தன்னை ஐ.நா. மன்றம் "போர் குற்றவாளி" என்று முத்திரை குத்துவதற்கான முகாந்திரத்ஜ்தை வெளியிட்டு விட்டதே என்று ஆத்திரப்பட்டு, அதை மே முதல் நாள் அன்று கொழும்பு நகரில் அரங்கேற்ற ஒரு பேரணியை வைத்துள்ளது கண்டு தமிழுள்ளங்கள் வெதும்பின. அதன்விளைவு, தமிழ்நாட்டில் சென்னையில் ஒரு நாள் முன்பு ஏப்ரல் 30 இலேயே ஒரு பேரணியை ஏற்பாடு செய்ய "நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தோழமை மையம்" முடிவு செய்தது.

தோழமை மையத்தின் அமைப்பாளர் பேராசிரியர் சரஸ்வதி தனது அறிக்கையில் அதை தெரிவித்துள்ளார்.மாலை நான்கு மணிக்கு கடற்கரை உள்சாளையிளிருந்து பேரணி புற[ப்படும். அது உழைப்பாளர் சிலை வரை செல்லும். அங்கே நான்கு மீனவர்கள் ராமேஸ்வரம் தங்கச்சி மடத்தை சேர்ந்தவர்கள் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து அவர்களுக்கு நினைவு அஞ்சலி நடத்தப்படும். மீனவர் குழந்தைகளும், மீனவ பெண்களும் மற்றும் ஆர்வமுள்ள தமிழின ஆதரவு அமைப்புகளும் அந்த பேரணியில் கலந்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள். பரவலாக கொடுக்கப்பட்டுள்ள துனடரிக்கைகள் மூலம் thaமிழர்களே அணிதிரளுங்கள் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். பேரணி ஐ.நா.வின் நிபுணர் குழு அறிககையை அமுலாக சொல்லியும், கிரிக்கெட் ஆட்டத்தின் உலகக் கோப்பையை இந்தியா வென்றதால் ஆத்திரப்பட்ட சிங்கள கடற்படை கொடூரமாக கொன்று குவித்த நான்கு தமிழ் மீனவர்களுக்காகவும் முழக்கங்களை எழுப்பிய வண்ணம் பேரணி செல்லும் என்றும் தெரிவிக்கிறார்.