Sunday, April 24, 2011

எஸ்.பொ.விற்கு இயல் விருது, இயல்பானது.

எஸ்.பொ. இந்த பெயர் ஈழத்தமிழ் எழுத்தாளர்களிடையே ஒரு எழுத்து போராளியை, ஒரு சமரசமற்ற கருத்தாளியை, தமிழ் கூறும் நல்லுலகுக்கு அறிமுகம் செய்கிறது. எஸ்.பொன்னுத்துரை அவரது பெயர். இப்போது வயது எண்பதை
தாண்டுகிறது. மட்டகிளப்பு நகரில் பிறந்து வளர்ந்தவர். பொதுவுடைமை இயக்கத்தில் ஆசிரியர் பணியில் இருக்கும்போதே ஈடுபாட்டுடன் பணியாற்றியவர். தமிழின உணர்வுகளில் ஈடுபாட்டுடன் அவர் செயல்பட்டதால், பொதுவுடைமை இயக்கத்திற்குள் கருத்து போராட்டத்தை நடத்தியவர்.

எஸ்.பொ. தனது எழுத்துக்களால் தமிழினத்தின் மீது பகைமை கொண்ட, இந்திய அமைதிப்படையின் முகமூடியை கிழிக்க முடிந்தது. ஆஸ்திரேலியா நாட்டில் குடியுரிமை பெற்றவராக இப்போது இருக்கும் எஸ்,பொ.விற்கு அவரது எழுத்துகளுக்காக கனடா நாட்டு தமிழர்கள் அறிவித்துள்ள விருதுதான், " இயல் விருது". அது 2010 ஆம் ஆண்டிற்கானது. அறிவிக்கப்பட்ட அந்த விருதை அவர் விரைவில் பெற்றுக்கொள்ள இருக்கிறார். அதற்குள் அந்த விருது பெற்றமைக்காக அவருக்கு பாராட்டு விழா நடத்தலாம் என்றுதான் சென்னையில், கன்னிமரா நூல் நிலையத்தில் ஒரு பாராட்டு விழாவை, படைப்பாளிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.

சூரியதீபனின் முயற்சி அது. உணர்ச்சி கவிஞர் காசி அனந்தன்,பழ.நெடுமாறன், சீ.பி.ஐ.மகேந்தரன், பேரா.சரஸ்வதி,பண்ஜாங்கம், பாமரன் ஆகியோர் பேசினர். மகேந்தரன் தான் எஸ்.பொ.பற்றி கொண்டிருந்த பழைய கருத்துக்களை மாற்றிக் கொண்டதை குறிப்பிட்டார். முற்போக்கு எழுத்தாளர் சங்கம் இங்கு போலவே அங்கம் பொதுவுடைமை கட்சியின் புரிதலுக்கு உட்பட்டே இருந்திருக்கிறது. அவர்கள் தமிழின தேசியத்தின் இருத்தலையோ, விடுதலையையோ வர்க்க போராட்டத்திற்கு எதிரானதாக பார்த்திருக்கிறார்கள். அதுவும் இங்குள்ள மாதிரியே என்கிறீர்களா?

அந்த இயக்கத்தில் இருந்த எஸ்.பொ. அதில் முரண்பட்டிருக்கிறார். "நற்போக்கு எழுத்தாளர் சங்கம்" என்று ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறார். அதன்மூலம் வர்க்க போராட்டத்தை காணும் மார்க்சிசம் எப்படி இன விடுதலையையும் கறாராக பார்க்கிறது என்று எடுத்து சொல்லியிருக்கிறார். அங்குள்ள் கம்யுனிஸ்டுகள் அதை புரிந்து கொள்ள சக்தியற்று இருந்திருக்கிறார்கள். எஸ்.பொ. தனது ஆசிரியர் பணிக்கு இடையே தமிழினம் அடக்கப்படுவதை உணர்ந்து அதற்கான பணிகளையும் மேற்கொண்டிருந்திருக்கிறார். கவிஞர் காசி அனந்தன் எஸ்.பொ.வுடன் ஒரே அறையில் தங்கி கல்வி கற்றலை தொடர்ந்திருக்கிறார்.அதே பள்ளியில் அவரும் மாணவர்.ஆனால் எஸ்.பொ. இவருக்கு நேரடியாக ஆசிரியர் அல்ல.

மட்டகிளப்பில் எஸ்.பொ., காசி அனந்தன், பாலு மகேந்த்ரா எல்லோருமே ஒரே பகுதியில் அடுத்தடுத்த தெருக்களில் வாழ்ந்தவர்கள். காசி அனந்தன் தமிழரசு கட்சியிலும், எஸ்.பொ. பொதுவுடைமை இயக்கத்திலும் இருந்திருக்கிறார்கள். அதை காசி அனந்தன் அந்த 23 ஆம் நாள் சனிக்கிழமை கூட்டத்தில் விளக்கினார். தமிழரசு கட்சியில் இருந்துகொண்டே சாதியில் தாழ்த்தப்பட்டவர்களுக்காகவும், பேசும் வித்தியாசமான வராக காசி அனந்தனும்,பொதுவுடைமை இயக்கத்தில் இருந்துகொண்டே தமிழின விடுதலையை பேசும் வித்தியாசமானவராக எஸ்.பொ.வும் இருந்ததை குறிப்பிட்டார்.

மூன்றாம் உலகம் பற்றி அதாவது மண்ணுக்கு நெருக்கமான உலகம் பற்றி, வளராத நாடுகளின் நிலைமை பற்றி எஸ்.பொ. எழுதியுள்ளார் என்பது எல்லோர் பேச்சிலும் வெளிப்பட்டது. மூன்றாம் உலகம் என்பது ஒரு தத்துவமாக மாவோவால் வழிநடத்தப்பட்ட கொள்கை.அதாவது அமெரிக்காவும், சோவியத் யூனியனும், உலகை பங்கு போடும் வல்லரசுகளாக மாவோவால் வர்ணிக்கப்பட்ட போது, அதை முதல் உலகம் என்று மாவோ கூறினார். அதற்கு அடுத்து வளர்ந்த நாடுகளான முதலாளித்துவ நாடுகளை இரண்டாம் உலகம் என்றார். வளராத அல்லது வளர்ந்துவரும் நாடுகளை, சோஷலிச நாடுகள் உட்பட மூன்றாம் உலகம் என்று மாவோ கூறினார். அன்றைய மார்க்சிசவாதிகளுக்கு,அதிலும் மாவோவை பின்பற்றி மார்க்சிசத்தை கற்றவர்களுக்கு இதில் பரிச்ச்சயம் உண்டு.அதுவே
எஸ்.பொ. எழுத்தில் தொநித்திருக்க வேண்டும் என்று நான் எண்ணுகிறேன்.


எஸ்.பொ.அவர்களது மகன் போருக்கு புலிகளுடன் சென்றவர். நெடுமாறன் தனது ரகசிய ஈழப்பயனத்தில் காணொளி எடுத்தவர் எஸ்.பொ. மகன்தான் என்பதை அங்கே பதிவு செய்தார். அந்த புலி தம்பி இப்போது நம்மிடையே இல்லை. அவர் தனது தாய் நாட்டிற்காக வீரச்சாவை தழுவிவிட்டார். இதுவே எஸ்.பொ.வை மேலும் ஒரு போராளியாக படம் பிடித்து காட்டியது. பேராசிரியர் சரஸ்வதி, நாடு கடந்த தமிழீழ அரசு தோழமை மையத்தின் அமைப்பாளர். அவர் ஐ.நா. நிபுணர் குழுவின் அறிககையை சுட்டிக்காட்டி வருகின்ற முள்ளிவாய்க்கால் நினைவு பற்றி விளக்கினார்.இன்குலாப் தனக்கு கருணாநிதி அரசு அளித்த கலைமாமணி விருதை, எப்படி முள்ளிவாய்க்கால் படுகொலையை ஒட்டி அரசுக்கே திருப்பி கொடுத்தார் என்று சரஸ்வதி சுட்டி காட்டினார். அவ்வாறு எழுத்தாளர்கள் முதுகெலும்புடன் இருப்பது அரிது என்றாலும், அதில் ஒருவர் எஸ்.பொ. என்றார்.


எஸ்.பொ. ஒரு இலக்கியம் என்றால், அவரது மகன் ஒரு வரலாறு என்று காசி அனந்தன் கூறும்போது அவையே அமைதியானது. சென்னை இப்படி ஒரு போராளி எழுத்தாளருக்கு பாராட்டு நடத்தியதை எண்ணி பெருமை கொண்டது.

ரா.சு.நல்லபெருமாள் பிரபாகரனுக்கு எழுதிய கடிதம்

தமிழ்நாட்டின் எழுத்துலக மேதைகளில் ஒருவரான, நெல்லை தந்த நல்முத்து, ரா.சு.நல்லபெருமாளது மறைவு தமிழக எழுத்தாளர்களை மட்டுமல்ல, தமிழக வாசிப்பாளர்களை மட்டுமல்ல, உலகம் முழுவதுமுள்ள தமிழ் கூறும் நல்லுலகின் அனைத்து வாசகர்களையும் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியது என்பதுதானே நமக்கு இதுவரை தெரியும். ஆனால் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரனை இந்த எழுத்தாளனது மரணம் எப்படி பாதிக்கும் என்பது நமக்கு தெரியாது அல்லவா?

ரா.சு. நல்லபெருமாளின், " கைக்குள் ஈரம்" என்ற புதினம் அந்த போராளி பிரபாகரனை குலுக்கி இருந்தது. அதை தனது கைப்பட பிரபாகரனே , எழுத்தாளர் ரா.சு.நல்லபெருமாளுக்கு எழுதி பாராட்டியிருந்தார். யாழ்ப்பனவாசிகள் எப்போதுமே இலக்கிய பற்று அதிகம் கொண்டவர்கள். வாசிப்பு அவர்களது கைவந்த கலை. தமிழ் இலக்கியம் அவர்களுக்கு அல்வா சாப்பிடுவது போல. அதிலும் மட்டகிளப்பு வாசிகள் தங்களது, அருகே நீரும், அதில் துள்ளும் மீன்களையும் பார்த்து பார்த்து பரவசமடைபவர்கள். அதை எழுதி ரசிப்பவர்கள். யாழ் குடாநாட்டில் பிறந்து, மட்டக்கிளப்பில் வளர்ந்த பிரபாகரனுக்கு கேட்கவா வேண்டும்.

அந்த போராளிக்கு உள்ளே ஒரு மனிதம் முழித்துக்கொண்டே இருந்தது என்பதால்தான் ரா.சு.நாவின் எழுத்தை, கல்லுக்குள் ஈரத்தை அந்த போராளி கண்டிருக்கிறார்.பிரபாகரனது கடிதத்திற்கு இந்த தமிழ்நாட்டு எழுத்தாளர் நல்லபெருமாள், பதில் கடிதம் அனுப்பினார். அப்போது பிரபாகரன் அரசால் தேடப்பட்டுக்கொண்டிருந்த நேரம். காடுகளில் கலங்களை அமைக்க பயணம் செய்து கொண்டிருந்த காலம். அவர் அருகே அப்போது, உணர்ச்சி கவிஞர் காசி அனந்தன் இருந்திருக்கிறார். ரா.சு.நல்லபெருமாள் தனக்கு எழுதிய கடிதத்தை, போராளி பிரபாகரன், இந்த கவிஞரிடம் உள்ள நெகிழ்வோடு எடுத்து காட்டியிருக்கிறார்.

கடிதம் பிரபாகரனுக்கு வந்து சேர்ந்த நேரத்தில், காடுகளில் அவருடன் தானும் பயணத்தில் இருக்கும் போது, அதை வாங்கி படித்து காட்டினார் பிரபாகர என்பதை அந்த உணர்ச்சி கவிஞர் கூறும்போது அவர் கண்கள் மட்டுமல்ல, நமக்கும் கண்கள் பணித்திவிட்டன.

ஜெயலலிதா அறிக்கைக்கு ஈழத்தமிழர் பாராட்டு.

திடீரென அதிமுக தலைவி செல்வி ஜெயலலிதா அளித்த அறிக்கை, ஐ.நா. நிபுணர் குழுவிற்கு ஒரு கை கொடுத்தது. தமிழ்நாட்டில் அத்தகைய கைகொடுத்தால் தேவை என்று புலம் பெயர்ந்த தமிழர் சமூகம் எண்ணுகிறது. ஈழத்தமிழர் இனப்படுகொலைக்கு பங்களிப்பு செலுத்திய சோனியா அரசையும், அதற்கு ஆதரவு கொடுத்த கருணாநிதி அரசையும் உலக தமிழர்கள் மன்னிப்பதாக இல்லை. ஆனாலும் தனது சித்து விளையாட்டுக்களால், களிஞரும் அவரது தொண்டரடிப்பொடி அரசியல் அடியாட்களும், அவ்வப்போது தாங்கள் செய்ததை சொல்வதைவிட, ஜெயலலிதா எப்படியெல்லாம் ஈழத்தமிழருக்கு எதிரானவர் என்பதை பட்டியல் போட தயங்கவில்லை.

சென்ற நாடாளுமன்ற தேர்தலின் போது, ஈழத்தமிழர்களது படுகொலைகள பகிரங்கமாக நடந்து வந்த நேரம். அப்போது அந்த போரை எதிர்த்து உலகமே கொந்தளித்தபோது, தமிழகமும் தனது பங்கிற்கு கொந்தளிக்காமல் இல்லை. அந்த நேரம் நடந்த இரண்டு கூட்டணி அரசியலும் அழத்தமிழர்களை பற்றியும், அந்த போர் தவறு என்பதை பற்றியும், அந்த வன்னி போர் நிறுத்தப்படவேண்டும் என்பதை பற்றியும் நிறையவே பேசிவந்தனர். அதுநேரம் செல்வி.ஜெயலலிதாவும், தமிழீழம் ஒன்றே ஈழத்தமிழருக்கு தீர்வு என்று பேசிவந்தார். அந்த பெச்ச்சை திமுக கிண்டல் செய்தது. தேர்தல் நேர சித்து விளையாட்டு என்று குறை கூறியது. அதையும் பலர் நம்பினார்கள்.

குறைந்த பட்சம் ஜெயலலிதா பற்றி ஒரு குழப்பத்தை அன்று கருணாநிதியால் ஈழத்தமிழர் பிரச்சனையில் ஏற்படுத்தமுடிந்தது. ஆனால் இப்போது செல்வி.ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிககையை யார் குறை கூற முடியும்? ஆனாலும் கருணாநிதி குறை கூறுகிறார் என்பதும், அது எள்ளி நகையாடப்படுகிறது என்பதும் வேறு செய்தி. ஈழத்தமிழர்களில், முக்கிய அறிஞர்கள், போராளிகளுடன் இரண்டற கலந்து இணைத்து செயல்பட்டவர்கள் இந்த ஜெயலலிதா அறிக்கை பற்றி என்ன கூறுகிறார்கள் என்று வினவினோம்.

ஜெ.அறிக்கை மிக சிறப்பாக இருப்பதாக கூறினர்.அது மட்டுமின்றி, இந்த அறிக்கை தேர்தல் முடிந்த பிறகு வந்திருப்பதுதான் முக்கிய சிறப்பு என்று கூறினார். இது உணமையிலேயே ஜெ.க்கு கிடைத்த பாராட்டுதான்

கல்வெட்டில் உன்பெயர் வர,கல்லறையில் எம் பெயரா?

அய்யா, கலைஞர் அவர்களே, உங்கள் பெயர் எல்லா இடத்திலும் கல்வெட்டுகளில் வரவேண்டும் என்பதற்காக, நீங்கள் ஆட்சியில் தொடர்ந்து இருக்கவேண்டும். அதற்காக மத்திய அரசை தாங்கள் தொங்கி பிழைக்கவேண்டும். இன்று காலை முதல்வர் கலைஞர் திறந்து வைத்ததாக எழுதப்பட்ட கல்வெட்டை, கடற்கரையில் கண்டேன். கண்டவுடன் எனக்கு இப்படி எழுத தோன்றியது. பல நாள் உங்கள் பெயர் கொண்ட கல்வெட்டுகளை , கடற்கரையிலும, வள்ளுவர் கோட்டத்திலும், கன்னிமரா நூல் நிலையத்திலும், அன்னா நூற்றாண்டு நூல் நிலையத்திலும், ஒவ்வொரு புதிய மேம்பாலங்களிலும், புதிதாக கட்டப்பட்டு இன்னமும் முடிக்கப்படாத [ அதற்குள் அவசரப்பட்டு தமிழ்மக்கள் ஆட்சி மாற்றத்தை கொண்டுவருகிறார்கள்] புதிய சட்ட பேரவை வளாகத்திலும் இன்னும் இன்னபிற இடங்களிலும், கண்டுகொண்டுதான் இருக்கிறோம்.

ஆனால் உங்கள் ஆசையான தாங்கள்தான் ராஜ ராஜ சோழனின் வாரிசு, என்பதும், கேரளாவின் மாவேலி அரசரின் வழி வந்தவர் என்பதாகவும் உள்ள கற்பனை வளத்தை செயல்படுத்த , மத்திய அரசு தமிழர் விரோத வேலைகளை எங்கு சென்றாலும் அதற்கு முழு மனதோடு ஆதரவு கொடுத்து வந்துள்ளீர்கள். அந்த செயல்பாடுகளில், ஈழத்தில் ஒரு லட்சம் தமிழர்களை இனப்படுகொலை செய்ததை ஆதரித்து, அங்கீகரித்த காரணத்தால் உங்கள் பெயரை கல்வெட்டுகளில் பதிக்க முடிந்தது. ஆனால் எங்கள் தமிழர்கள் அதற்காகவே கல்லறைகளில் பெயர் பதிக்கப்படும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார்களே.

அதேபோல தமிழ்நாட்டு மீனவர்கள் தொடர்ந்து சிங்கள கடல் படையால் கொலை செய்யப்பட்டு, அவர்களது பெயர்கள் கல்லறைகளில் பதிக்கப்பட்டு வருவதற்கு காரணமே, கலைஞரே உங்கள் பெயர் கல்வெட்டுகளில் பதிக்கப்பட்டதனால்தானே

தங்கச்சிமடத்திற்கு கொலை, வடமராச்சிக்கு தாக்குதல், வல்வெட்டித்துறைக்கு கைது?

தமிழன் எங்கிருந்தாலும், இந்தியா இலங்கையை உலக கோப்பை போட்டியில், மட்டைபந்து விளையாட்டில் வென்றதால், அடியும், உதையும், கைதும் வாங்கவேண்டும். மரணத்தை சந்திக்கவேண்டும். இது என்னடா கொடுமை? நம்மூர் இந்திய தமிழர்கள் மீனவனாக பிறந்ததால், மீன் பிடிக்க சென்ற போது, அவர்களை பிடிக்கும் சிங்கள கடல்படை. இந்தியா இலங்கையை இரண்டாம் நாள் வென்றால், இரவிலேயே அந்த தமிழக மீனவர்களை, நிராயுதபாணியானவர்களை, நகத்தால் கீரியும், வாளால் வெட்டியும், கட்டையால் அடித்தும், கையை வெட்டியும், கழுத்தை அறுத்து, தலையை வெட்டி, முண்டமாகியும் கொலை செய்வார்கள் சிங்கள படைகள்.

அதற்கு இந்திய அரசு எந்த கேள்வியும் கேட்காது. எந்த வழக்கும் தமிழக அரசு இலங்கை படை மீது போடாது. ஆனால் அதே மட்டைபந்து ஆட்டத்திற்கு ராஜபக்ஷேவை இந்திய அரசு கூப்பிட்டு கௌரவிக்கும். அந்த ஆட்டத்தில் ஆடிய வீரர்களுக்கு இந்திய அரசும், தமிழக அரசும் கோடி கணக்கில் நிதி கொடுக்கும். அந்த விளையாட்டினால் ஏற்பட்ட மரணத்தை தழுவிய தன் சொந்த நாட்டு குடிமக்களான தமிழக மீனவர்களுக்கு சில லட்சங்களை இரையாக போட்டு அவர்கள் உயிர்களை மீன் பிட்க்க அனுமதிக்கும். இத்தகைய இந்திய அரசையு, தமிழக அரசையும் தண்டிக்க எந்த சட்ட நிபுணர்களும் புறப்பட மாட்டார்கள்.

இங்கே உள்ள தமிழனுக்கு மட்டுமா என்று இன்றைய அங்கில ஏடான, "டெக்கான் குரோனிகல்" அம்பலப்படுத்தியுள்ளது. இந்தியா வெற்றி பெற்றதை ஈழத்தமிழர்கள் மகிழ்ச்சி போங்க வரவேற்று இருக்கிறார்கள். உடனே அங்கிருந்த சிங்கள ராணுவம் வடமராச்ச்சி பகுதியில் அவர்களை அடித்து நொறுக்கியுள்ளது. அதேபோல, வல்வெட்டித்துறை கிராமத்தில் [ அது தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரனது சொந்த ஊர் ] இந்திய வெற்றியை கொண்டாடிய தமிழர்கள் மீது சிங்கள ராணுவமும், காவல்துறையும் சேர்ந்து கைது நடவடிக்கையை எடுத்துள்ளது.

இந்தியாவே நீ வெற்றி பெற்றால் அதனால் அதாக்கப்படுவதும் தமிழர்கள்தான். அவர்கள் எந்த நாட்டு தமிழர்கள் என்பது அல்ல பிரச்சனை. இந்தியா வென்றால், மட்டைபந்து ஆட்டக்காரருக்கு கொடிகள் குவியும். எங்கள் தமிழர் இல்லங்களில் அழுகுரல் குவியும். இந்த உண்மையை யாராவது அந்த மட்டைபந்து ஆட்டக்காரர்களுக்கு தெரிவிப்பார்களா? அவர்களாவது கண்விழிப்பார்களா? மத்திய, மாநில அரசுகள் இந்தியாவில் தமிழர்களை கைவிட்டு விட்ட நிலையில் நாங்கள் மட்டைபந்து ஆட்டக்காரர்களை மட்டுமே இப்போது இதற்கு பதில் கேட்கும் நிலையில் இருக்கிறோம்.

ஊழல் தடுப்பு சட்டம் உயிருள்ளதா?

ஊழல் தடுப்பு சட்டம் உயிருள்ளதா?
அன்னா பற்றி கண்ணா,பின்னா?
அன்னா ஹசாரே ஒரு புயலை கிளப்பினார். அதை உணமையல்ல என்று கூற முடியுமா? அன்னா ஹசறேக்கு உண்மையில் ஊழலை ஒழிக்க எண்ணமில்லை என்று வேண்டுமானால் யாரும் கூறலாம். ஆனால் அவர் கிளப்பிய அந்த புயல் நாடெங்கும் நடுத்தர வர்க்கம், படித்த வர்க்கம், மற்றும் தொழிலாளி வர்க்கம் மத்தியல் விழிப்புணர்வை ஏற்படுத்த வில்லை என்று கூற முடியுமா? சில மேதாவிகள் அவர் மீதான தங்கள் கேள்விகளை அல்லது குற்றச்சாட்டுகளை எடுத்து வைத்து முளையிலேயே இப்படி ஒரு ஊழலுக்கு எதிரான மக்கள் விழிப்புணர்வை காயடிக்க அதீத அறிவுஜீவிகளாக செயல்படுகின்றனர். அவர்களுக்கு வர்களது அடையாள நெருக்கடி. என்ன செய்ய?

தாங்கள் மட்டும்தான் ஊழலை எத்ரிக்கும் சிகாமணிகள் என்று அவர்கள் ஒரு சிறிய வட்டத்திற்குள் கூறிவந்தார்கள். இப்போது ஒரு பெறும் கூட்டம் அன்னா ஹசாரே பின்னால் திரள்கிறதே என்று அவர்களுக்கு கலக்கம் வந்துவிட்டது. தங்கள் அடையாளம் போய்விடுமோ என்று வருந்தி, வயத்தெரிச்சலில் எதையோ எழுதுகிறார்கள். ஆனாலும் அவர்கள் தங்கள் வாதம் வெற்றி பெற சில, பல உண்மைகளை தேடி கண்டுபிடித்தாவது எழுதிவிடுகிறார்கள். அவற்றையும் நாம் புறம் தள்ள முடியாது. உதாரணமாக அன்னா ஹசாரே பற்றி தமிழ்நாட்டில் உள்ள அரசியல்வாதி ஹண்டே குறை கூறினார் என்று நாம் கூறினோம். ஹண்டே சுதந்திர கட்சியில் தொடங்கி, அதிமுக, பிஜேபி, என்று பயணம் செய்த அரசியல்வாதியாக இருக்கலாம். அதற்காக சந்தர்ப்பவாதம் என்று கூறி அவரது கருத்தை மறுக்க நாம் தயாராக இல்லை.

என் என்றால் அன்னா ஹசாரே தனது ராணுவ ஓட்டுனர் பதவியில் தொடங்கி, மகாராஷ்ட்ராவில் சினிமா கொட்டகையில் சீட்டு எடுத்து விற்றவர் என்றுகூட கூறுகிறர்கள். அது அன்றைய அவரது பொழைப்பாக கூட இருக்கலாம். இந்த நாட்டில் எல்லா இளைஞர்களுக்கும் அரசால் வேலை கொடுக்க முடியாதபோது, சினிமா சீட்டு விற்பதுகூட ஒரு பொழைப்புதான். அதற்காக இளைஞர்களை குறை கூறாதே. அரசை குறை கூற கற்றுக்கொள் என்று நாம் சொல்ல வேண்டும். அடுத்து அன்னா ஹசாரே ஒரு பிளாக் மெயில் செய்பவர் என்று சரத் பவர் சொன்னாராம். சரத் பவர் ரொம்ப யோக்கியர் என்பதால் நாம் அதை மறுக்க விரும்பவில்லை. அன்னாவே அடஹ்ர்கு பதில் சொல்லிவிட்டார். நான் செய்வது பிளாக் மெயில் என்றால் தொடர்ந்து அதை செய்வேன் என்கிறார்.

அதாவது அரசை பிளாக் மெயில் செய்து, ஊழலுக்கு எத்ரிப்பாக ஒரு சட்டத்தை பற்களுடன் அதாவது அதிகாரத்துடன் கொண்டுவர அண்ணாவால் முடிந்தால் அதற்கு பிளாக் மெயில் என்று பெயர் வைத்தால் அந்த வேலையை தொடர்ந்து செய்வேன் என்பது அவரது வாதம். அது சரிதானே. அடுத்து அன்னா வுடன் கரைசேர்ந்த சாந்தி பூஷன் பற்றியும், பிரஷாந்த் பூஷன் பற்றியும் வருகிறது. அவர்ஹல் பேசிய குறுந்தகடு உண்மை என்றும், உணமையில்லை என்றும் இரண்டு வாதங்கள். அதில் அமர்சிங் களம் இறங்குவது பற்றி நமக்கு அதிகம் அக்கறை இல்லை. என் என்றால் ஏற்கனவே அமர்சின்க்தான் அண்ணாவை எத்ரித்து இந்த குறுந்தகடு விவரத்தை முன்பே பிரச்சனை செய்தவர். ஆனால் திக்விஜய்சிங் இறங்கியிருக்கிறார். அவர் சோனியாவின் விசுவாசி.

சோனியாகாந்தி அன்னாவின் ஊழல் எதிர்ப்பை ஆதரிக்கிறேன் என்கிறார். அதற்காக தனது தலைமையில் உள்ள தேசிய ஆலோசனை குழுவை இறக்கி விடுகிறேன் என்கிறார். அது அவருக்கும் பிரதமாத் பொறுப்பில் உள்ளவருக்கும் உள்ள மோதலால் என்று புரிந்து கொள்ளலாம். ஆனால் எதற்காக திக்விஜயசிங்கை, ஆனவிற்கு எத்ரிராக சோனியா இறக்கிவிடவேண்டும்? மன்மோகன் வசமாக ஊழல் குற்றச்சாட்டுகளில் மாட்டிய நாட்டின் பிரதமர் என்ற பெயரில், அசிங்கப்பட்டு நிற்கிறார். அந்த கெட்ட பெயரில் இருந்து காங்கிரசை காப்பாற்ற சோனியா மன்மோகன் மீதே அனைத்து குற்றங்களையும் போட்டுவிட்டு தப்பிக்க மன்மோகன் எத்ரிப்பு காய்களை நகர்த்தலாம். காமன்வெல்த் போட்டி ஊழல், ஆதர்ஷ் வீட்டுவசதி வாரிய ஊழல், ஐ.எஸ்.ஆர்.ஒ. ஊழல், ஸ்பெக்ட்ரம் ஊழல் அனைத்திலுமே நேரடியாக சிக்குவது மன்மோகன்தான்.


அவரது அமெரிக்கா சார்பு நிலையை நியாயப்படுத்த விரும்பும் சக்திகள் சு.சாமி மூலம் மன்மோகனை காப்பாற்ற ஒருபுறம் நீதிமன்ற வக்காலத்து மூலமும், இன்னொரு புறம் சோனியா--ராகுல் கூட்டுதான் அனைத்து ஊழலுக்கும் காரணம் என்றும் போட்டுக்கொடுகின்றன. இந்த நேரத்தில்தான், 2002 ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள போஸ்டன் நகரில் ராகுக் காந்தி ஐந்து கோடிக்கு இந்திய பணத்திற்கான டாலர்களுடன் சிக்கியதை, வாஜ்பாய் எடுத்துவிட்ட கதையை மீண்டும் வெளியிட்டு ஒரு கூட்டம் மகிழ்கிரரகள். அப்படியானால் இந்தியாவின் ஆளும் கட்சி குடும்பம் ஊழலில் சிக்கினால், அதை அடுத்த ஆளிம்வர்க்க கட்சி தலைமை எடுத்துவிடும் என்பதுதானே பொருள். அதாவது ஊழலில் பிரதமர் வேறு, ஆளும் குடும்பம் வேறு, ஆளும் வர்க்க எத்ரிகட்சி வேறு என்பது அல்ல என்பதுதானே பொருள். அப்படியானால் இந்த ஊழல் எத்ரிப்பு சட்ட வரைவுநகல் உண்மையில் நல்ல படி வெளிவந்தாலும் அதனால் பயன் உண்டா?


உலகை இன்று ஆளும் கார்பரேட்கள் தனியார் லாப நோக்கம் கொண்ட நிறுவனங்களாக இருப்பதால், அவற்றின் நலன்களுக்காக எப்படியும் அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும், லஞ்சம் கொடுப்பார்கள். அதற்கு பெயர் வணிக தர்மம் என்று கூறுவார்கள். அதற்காக உலகம் முழுவதும் உள்ள கார்பரேட்கள் ஒரு தனி பிரிவை தன்கள் நிறுவனத்தில் ஒதுக்கி அதன்மூலம் கமிஷியன் கொடுப்பது என்ற பழக்கத்தை தொழில் வழக்கமாக வைத்துக்கொண்டுள்ளார்கள். இப்போது அல்லோலகல்லோல படும் ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கிய நீரா ராடியா கூறுவதுபோல, தனது நிறுவன லாப ஊடாடல் உலகம் முழுவதும் பன்னாட்டு மூலதன நிறுவனகளால் செயல்படுத்தப்படும் பழக்கம்தான் என்று தெளிவாகிறது. அப்படியானால் இதை தடுக்கவே முடியாதா?

முடியும். இப்போதுள்ள உலங்கை பிடித்துள்ள உலகமயமாக்கல் கொள்கையால்தான் இந்த ஊழல் வழக்கமாகி உள்ளது. தனியார்துறை இருக்கும்வரையில் இப்படி ஊழல் இருக்கத்தானே செய்யும் என்று வாதம் செய்பவர்களும் உண்டு. தையர்துரையை சீனா உட்பட நாடுகள் இன்று பயன்படுத்தி வருகின்றன. உடனடியாக இத்தகைய ஊழல்களை தடுக்க என்ன வழி என்று நாம் சிந்திக்கலாம். இந்தியாவில் பொதுத்துறைக்கு அதிக முக்கியத்துவம் இருந்த நேரு காலத்தில், தனியாரதுரையை கட்டுக்குள் வைக்க ஒரு சட்டம் இருந்தது. அதற்கு " ஏகபோக தடுப்பு சட்டம்" என்று பெயர். அந்த சட்டத்தை 1991 ஆம் ஆண்டு நரசிம்மராவ் ஆட்சியில் டங்கள், காட் என்ற திட்டங்கள் மூலம் உள்ளே நுழைந்த அமெரிக்க் பொருளாதார கொள்கைகள், நாளடைவில் தாராளமயமாக்கல், என்று வளரும்போது, அந்த "ஏகபோக தடுப்பு சட்டத்தை" நீர்த்துபோக வைத்துவிட்டார்கள். அதனால் மட்டுமே " அந்நிய தனியார் மூலதனம்" கண்டபடி இந்த நாட்டிற்குள் நுழைய முடிந்தது.

அப்படி ஒரு சட்டத்தை , " கார்பரேட் தடுப்பு சட்டம்" என்று கொண்டுவந்து, அதனுடன் சேர்த்து இந்த" ஊழல் தடுப்பு சட்டம்" வருமானால் அது உறுப்படும் என்று புதிய மாற்று ஏற்பாட்டை நாம் முன்வைக்க வேண்டும். அப்படி வைக்கும்போது இப்போது கிளம்பியுள்ள மக்களது ஊழல் எத்ரிப்புக்கும் அர்த்தம் இருக்கும். மக்களுக்கும் விளங்கிக்கொள்ள முடியும்.. மாறாக இது நொள்ளை, அது சொள்ளை, என்று கூறினால், எந்த நல்லது வந்தாலும் இந்த ரிவுஜீவிகள் புறம் சொல்லத்தான் செய்வார்கள் என்ற பெயர் தான் வரும். தவிர இந்த சொல்லப்படும் அறிவுஜீவுகளுக்கு அப்படி ஒன்றும் பெரிய அக்கறை இந்த நாட்டில் புதிய வழிகளை அக்ண்டுபிடித்து ஊழலை ஒழிக்கவேண்டும் என்று அக்கறை இருப்பதாக தெரியவில்லை. தங்கள் பெயர் வித்தியாசமாக பேசினார், எழுதினர் என்று வரவேண்டும் எனத்தான் நினைக்கிறர்கள்.