Wednesday, April 20, 2011

கோடீஸ்வர குடும்பத்திற்கு எதிராக.......

எதுக்கய்யா இந்த மாதிரி எல்லோரும் சேர்ந்து இரட்டை இளைக்கும், அதன் தோழமை கட்சிகளுக்கும் ஒட்டுமொத்தமாக வாக்களித்தீர்கள் என்று சாமான்ய தமிழனை கேட்டால், அது ஒன்னும் அந்த ம்மா மீதுள்ள பற்றினால் அல்ல என்கிறான் தமிழன். அப்பா எதற்கு ன்று வினவினோம். அது ஒண்ணுமில்ல. அந்த கோடீஸ்வர குடும்பம் செய்யும் அலும்பு தாங்களா என்கிறான். அது எண்ண அலும்பு? என்றோம். ஒன்றா? இரண்டா? எடுத்து சொல்ல என்கிறான்.

ஒரு முதலமைச்சர் போனமுறை கலைஞர் ஆளும்போது இருந்தார். ஓஹோ. 1996 முதல் 2001 வரை உள்ள ஆட்சியை சொல்றீங்களா? ஆமாம். அப்பவே தமிழ் மக்கள் அந்த ஆட்சியின் சாதனைகளை வைத்து வாக்கு போடல்ல. ஆட்சியை மாத்திட்டாங்க. அந்த முறை கலைஞர் உணமையிலேயே ஊழலை பல தட்டுகளிலும் குறைத்து சாதனை செய்தார். இந்த முறை ஆட்சியில் அவர் ஒருவர் மாட்டுமா முதல்வராக இருந்தார்? பத்து பேர் முதல்வராக இருந்தனர். காவல்துறையில் யார், யாரை எங்கே போடவேண்டு என்று முடிவு பண்ற இடத்தில் அந்த துறையை கவனித்த கலைஞர் இல்லையே?

துணை முதல்வர் தளபதி அனேகமாக உளவு துறையை கையாண்டார் என்றால், அதில் உள்ள ஜாபர் சேட் மூலம் பெரிய காய் நகர்த்தல்களைத்தானே கலைஞர் செய்து வந்தார்? என்றார்கள். சரி. மதுரை மண்டல காவல் அதிகாரிகளை மாற்றுவதில் தளபதி தலையிட்டாரா என்றால், அதுதான் இல்லை. அடுஹு அண்ணன் பகுதி.என்று தளபதியே பின்வாங்கவில்லையா? என்கிறார்கள். சரி. தன்னால் முடிந்த அளவு ராசாத்தி அமமையாரும் காய் நகர்த்தலை செய்தாரே என்கிறார்கள். அதனால்தானே ஜாங்கிட் ஆட்சி சென்னை மற்றும் புற நகர்களில் நடந்தது என்கிறார்கள். ஓஹோ. அதனால்தான் ஜாபரையும், ஜாங்கிட்டையும் தேர்தல் ஆணையம் மாற்றிவிட்டதோ என்று கேட்கதொன்றியது. எல்லாம் திமுக காரர்களே பேசுவதுதான்.

சரி. ஒரு தொழிலை சுதந்திரமாக விட்டார்களா? திரை தொழிலில் நுழைந்து அதையும் ஆக்கிரமித்தார்கள். ஏற்கனவே சின்னத்திரை அவர்களது குடும்பம் கையில்தான். அதை வைத்து விளம்பரம்செய்துதங்கள் படங்களை ஓடச்செய்யட்டும் .அதற்காக திரை அரங்குகளை கையில் எடுத்துக்கொண்டு, அதில் தங்கள் படங்கள் தவிர மற்றவர் படங்களை திரையிட மறைமுக தடை விதிப்பது கோபத்தை கொடுக்காதா? என்கின்றனர். அதோடு நிறுத்தாமல் குறிப்பிட்ட கலைஞர்களுக்கு தடங்கல்கள் செய்வது என்ன நியாயம்? என்று கேட்கிறார்கள்.

சரி. அடுத்த திட்டம் அந்த தனியார் பேருந்துகளை கை வைப்பதாமே? என்று கேட்டார்கள். அது என்ன? என்றோம். கலாநிதி, தயாநிதி சகோதரர்கள் எண்ணூறு பேருந்துகளை பயங்கர உயர் தொழில் நுட்பத்துடன் ஏற்பாடு செய்து தயார் செய்து வைத்துள்ளதாகவும், அவற்றை இப்போது இரவில் பல ஊர்களுக்கும் செல்லும் ஆம்னி பேருந்துகளின் தடங்களில் இறக்க இருப்பதாகவும் வந்த தகவல் அடுத்த அதிர்ச்சியாக இருக்கிறது. இப்படி தமிழ்நாட்டையே ஒரு கோடீஸ்வர குடும்பம் வாங்கி, தன்கள் கைகளில் வைத்து கொள்வதை, தமிழ் மக்கள் ஏற்கத்தாயாரக இல்லை என்று முடிக்கிறார்கள்.

அப்பா போட்ட வாக்குகள் அம்மா வரணும், என்பதைவிட, யார் வரக்கூடாது என்பதுதான் என்கிறீர்களா? என்றால் ஆமாம் என்கிறார்கள்.அதனால்தான் மத்திய உளவு துறையினர் சமீப கணக்கு, அதிமுக 126 என்றும், அவர்கள் கூட்டணி 186 என்றும் கணக்குசொல்கிறார்களா?