Tuesday, April 19, 2011

பூந்தமல்லி சிறையில் பட்டினி போர்.

போர் குற்றங்கள் செய்த ராஜபக்சே அரசை, மானுடத்திற்கு எதிரான குற்றங்கள் இழைத்ததாக ஐ.நா. நிபுணர் குழு ஒரு அறிககையை வைத்தவுடன் அதை எதிர்த்து மகிந்தா அரசு கொந்தளித்தது. ஐ.நா. காட்டியுள்ள போர் குற்றங்களுக்காக ராஜபக்சே அரசை பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உலகமெங்கும் குரல்கள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில் அந்நியாயமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்கள் அதே கோரிக்கைக்காக பட்டினி போர் தொடங்கி உள்ளனர்.

பூந்தமல்லி சிறப்பு முகாம் பெயரில் உள்ள சிறைக்கூடத்தில், இன்று காலை ஒன்பது மணிக்கு தொடங்கி பட்டினி போரை, அமலன் அப்பாதுரை[33 ], கங்காதரன் நடராஜா [ 42 ], ஜெயமோகன் விரைஜா [ 30 ], சந்திரகுமார் மாரி [38 ] ஆகியோர் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு உலக தமிழர்கள் அனைவரும் ஆதரவு தந்து,ராஜபக்சே மீது நடவடிக்கை எடுக்க இந்திய அரசையும் நிர்ப்பந்திக்க வேண்டும்.

மீனவர் கொலைக்கு பட்டினி போராட்டம் பதிலா?

நான்கு மீனவர்களை சிங்கள கடல் படை கொடியவர்கள் கொலை செய்தார்கள் என்றால் இந்தியா இலங்கையை மட்டைபந்து போட்டியில் வேற்றதனால்தான் என்ற உண்மையை உலகம் அறியும் முன்பு அறிந்தவர்கள் நமது இந்திய-தமிழக அரசுகள். ஏப்ரல் இரண்டாம் நாள் கடலுக்கு சென்ற TN / 10 / MFB / 262 என்ற எண்ணுள்ள விசைப்படகில் சென்ற விக்டஸ் [36 ], ஜான்பால், அந்தோணிராஜ், மாரிமுத்து ஆகிய மீனவர்கள் கடுமையாக சிங்கள படையால் அடித்து, சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு, அவர்களது உடலங்கள் ஒவ்வொன்றாக கிடைக்கின்ற நிலையில் கடலில் வீசப்பட்டுள்ளது. ஒவ்வொரு உடலமும் கிச்டைக்கும் போது அவற்றில் இருந்த காயங்கள் எப்படி உடலெங்கும் அவர்கள் தாக்கப்பட்டுள்ளனர் என்பதற்கான ஆதராமாக இருந்தது.

கடைசியாக கிடைத்த உடலில் தலயும் வெட்டப்பட்டு, கையும் வேட்டப்பட்டதிளிருந்து திட்டமிட்டு சிங்களர் செய்த அட்டூழியம் என்பது பச்சையாக புரிகிறது. இந்த கொலைகள் நம்பி தங்கியிருந்த தமிழ்நாட்டு மீனவர்களை சிங்களம் சித கொலைகள்தான் என்பதும் டேஹ்ளிவாகிறது. நான்காம் நாள் நடந்த மட்டைபந்து விளையாட்டில் இந்தியா, இலங்கையை வென்றதால் ஆத்திரப்பட்ட சிங்களர்கள் செய்த அட்டூழியம் என்று தெரியவருகிறது. அப்படி அவர்கள் செய்த நாள் ஏப்ரல் நான்காம் நாள் இரவில். அதாவது நான்கு மீனவர் படுகொலையும் ஏப்ரல் நான்காம் நாள் நள்ளிரவில் நடந்துள்ளது. உடனடியாக ஐந்தாம் நாள் அதிகாலையிலேயே டில்லிக்கு செய்திகள் வந்துவிட்டன. டில்லி அதிகார மையம் ,சென்னை அதிகார மையத்தை தொடர்ப்பு கொண்டுள்ளது. இரண்டு அதிகார மையங்களுக்குள் விவாதம் நடந்துள்ளது. ஆலோசனைகள் பரிமாறப்பட்டுள்ளன.

வருகிற பதின்மூன்றாம் நாள் தேர்தல் நாள் என்பதால் இந்த படுகொலைகளை தற்போதைக்கு மறைத்து விடுவது என்று அதிகார மையங்கள் முடிவு செய்துள்ளன. இதுபோன்ற மறைப்பது, திசை திருப்புவது போன்ற செயல்களில் திறமை கொண்ட ஜாபர் சேட் இடமும் ஆலோசனை கேட்கப்பட்டுள்ளது. அதன் பிறகே நான்கு இறந்து போன மீனவர்களுக்கும் ஆளுக்கு, தலா ஐந்து லட்சம் தமிழக அரசு தானம் செய்துள்ளது. அதுகூட வழக்கமாக இறந்தவர்களுக்கு ஏழு ஆண்டு முடிந்த பின்புதான் நிதி வழங்குவது வழக்கம். இப்போது மட்டும் ஏன் எட்டே நாட்களுக்குள் வழங்கவ்ண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது. தேர்தலை கணக்கில் கொண்டு என்று சொன்னாலும், கடைசி பிணம் கிடைக்காத நிலையில் எப்படி அர்சுக்குமட்டும், காணாமல்போன மீனவர்கள் சிங்கள அரசின் கைகளால் கொல்லப்பட்டது தேரோயும்? என்ற கேள்விக்கு விடையில்லை.

அப்படியானால் ஐந்து மீனவர்களும். கொலை செய்யப்பட்டார்கள் என்ற செய்தி ஐந்தாம் நாள் காலையிலேயே மத்திய-மாநில அரசுகளுக்கு தெரிந்து விட்டது என்பது புரிகிறது. அதற்கு எண்ண செய்யலாம் என்ற் விவாதத்தில் இரண்டு நாட்களை கலைஞர் ஓடவிட்டார். அதன் பிறகே இப்போதைக்கு தேர்தல் நேரத்தில், மரணம் அடைந்தவர் வீடுகளுக்கு பணம் கொடுப்பது என்று முடிவாகிறது. மீனவர் படுகொலைகளை முன்கூட்டியே தெரிந்திருந்தும் மக்களிடம் உண்மையை சொல்லாமல் இருந்த கலைஞரும் குற்றவாளிதானே என்று மீனவர்கள் கேட்கிறார்கள்.

கொலை குற்றத்தை ராஜபக்சே மீதும், அதை மூடி மறைத்த குற்றத்தை கலைஞர் மேலும், சோனியா மேலும் போடவேண்டும் என்று இன்று மீனவர் தலைவர்களான, ரூபேஷ், தயாளன், கபடி-மாறன் ஆகியோருடன் பத்து மீனவர்கள் அகில இந்திய வானொலி நிலையம் முன்பு பட்டினி போராட்டம் இருந்தார்கள். அவர்களை ஆரசின் காவல்துறை கைது செய்தது.