Monday, April 18, 2011

மீனவர்களை கொன்ற சிங்கள கடல்படை..?

அப்ரப் இரண்டாம் நாள் வழமையாக கடலுக்கு செல்லும் அரநூற்றுக்கு மேற்பட்ட படகுகள் ராமேஸ்வரம் கரையிலிருந்து புறப்பட்டு மீன் பிடிக்க கடலுக்கு சென்றன. அதை வழமையாக சிங்கள கடல்படையினர் பிடிப்பது போல இப்போதுனம் பிடித்தனர். இப்போது அவர்களிடம் நல்ல முறையில் உரையாடிக்கொண்டு இருக்கிறார்கள் என்று பிடிபட்ட மீனவர்கள் கைபேசியில் சொந்தங்களுக்கும், நண்பர்களுக்கும் பேசியிருக்கிறார்கள். அடுத்தநாள் மூன்றாம் நாள் அன்று இந்திய-இலங்கை மட்டைபந்து விளையாட்டு சூடு பிடிக்கிறது. அப்போதுவரை இலங்கை வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் சிங்க படையினர் இருக்கிறார்கள்.

இலங்கை தோற்றால் உங்களுக்கு இருக்கு என்று அந்த நான்கு இந்திய மீனவர்களிடம் சொல்லியிருக்கிறார்கள். பிடிபட்ட நால்வரும் மட்டை பந்து ஆட்ட உலக கோப்பை விளையாட்டில் இந்தியா வெற்றி பெற கூடாது என்று இறைவனிடம் வேண்டிகொள்கின்றனர். விளையாட்டில் யார் வெற்றி பெற்றால் எண்ண, தங்களது உயிர் போய்விட கூடாது என்பதில், இந்திய மீனவர்கள் உறுதியாக இருந்தனர். அதேபோல எப்போதெல்லாம் இந்தியா-இலங்கை மட்டை பந்து நடக்கிறதோ அப்போதெல்லாம் தமிழ்நாட்டு கரையோரம் இருக்கின்ற கடலாளிகள் ஆண்டவரை வேண்டிக்கொள்கின்றனர். அதில் இந்தியா விளையாட்டில் வெற்றி பெற கூடாது என்று வேண்டுதல் முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்த முறை கடலுக்கு சென்று இலங்கையிடம் மாட்டிக்கொண்ட மீனவர்கள் நாலு பெறும், நன்றாக நீச்சல் அடிக்க தெரிந்தவர்கள்.அப்படஈருக்கும் போது எப்படி அவர்கள் ஒவ்வொருவராக கடலில் மூழ்கி மரணம் அடைய முடியும்? என்ற் கேள்வி எழுந்துள்ளது. முதல் சடலம் விட்சனுடையது அது நெடுந்தீவு அருகே இலங்கையின் வடக்கு பகுதியில் வருகிறது. அந்த உடலில் விரல் நகங்களால் நிறைய கீறல்கள் விழுந்துள்ளன. உடலெங்கும் விடுபட்ட தடங்கள் பதிந்துள்ளன. ஒவ்வொரு மீனவர் உடலங்களும் அடிபட்ட தழும்புகளுடன் மட்டுமே கிடைக்கிறது.கடைச்யாக கிடைத்துள்ள சடலத்தில் தலை இல்லை என்பது பகிரங்க அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அதை எதிர்க்க இன்னமும் தமிழர்களுக்கு உணர்ச்சி வரவில்லை என்ற சூழலில், ஒருவர் அதையே தனது அரசியலுக்கு பயன்படுத்துகிறார்.

காங்கிரஸ் கட்சி தலைவர் தங்கபாலு இதை ஒரு பிரபலமான முறையில் பேர் வாங்க செயது விட்டார். அவர் மக்களை கூட்டி இலங்கை தூதரகத்தை முற்றுகை இட்டுள்ளார். ஆகையினால் தமிழர்களே சிங்களவன் தமழ் மீனவனின் கையை, காலை, தலையை வெட்டி கடலில் போடுகிறான். தமிழன் உணர்ச்சியற்று இருக்கிறான். இதுதான் தமிழ்நாடு உலகுக்கு சொல்லும் செய்தியா? தேர்தல் பரப்புரைக்காக சென்னைக்கு சோனியா வந்தபோது, அந்த தீவுத்திடல் மேடையிலேயே, கலைஞர் சோனியாவிடம் மீனவர்கள் உரிம்மைக்காக கூட அல்ல, அவர்களது உயிருக்காக போராடுகிறார்கள் என்று சொல்ல, உடனே சோனியா, " இனி ஒரு துப்பாக்கி சூடு கூட நடக்காது" என்று உறுதி கூறினார், அவர்கள் எண்ண, " இனி சுடாதே. வெட்டி கொன்றுவிடு" என்று மறைமுகமாக கூறிவிட்டார்களா? அப்படியானால் சோனியாவும், கருணாநிதியும் இந்த நாலு மீனவர்கள் வெட்டி கொலை செய்யப்பட்டதற்கு பொறுப்பு ஏற்கவேண்டும் அல்லவா?