Saturday, April 2, 2011

தேத்தல் அதிகாரிக்கு மக்கள் அமைப்புகள் ஆதரவு.

மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அந்தந்த மாவட்டங்களின் தேர்தல் அதிகாரிகளாக இருப்பார்கள். அந்த வகையில் சகாயம் என்ற நேர்மையான அதிகாரி மதுரை மாவட்டத்தின் தேர்தல் அதிகாரியாக உள்ளார். அவர் தேர்தல் ஆணையம் மேலிருந்து கூறியுள்ள அனைத்து விதிகளையும் பின்பற்ற வேண்டும் என்று கண்டிப்பாக இருக்கிறார். அதாவது மதுரை என்பதால் அங்குள்ள குருநிலமன்னருக்கும், அவரைத் தொண்டரடிப்பொடி அடியாட்களுக்கும் பயப்படாமல் செயல்பட்டு வருகிறார்.

மதுரையில் தொடர்ந்து சக்கரவர்த்தி முதல்வர் குடும்பத்தின் மூத்த அரசர் சொல்படி நடக்கும் அராஜகங்களை கண்டு மனம் நொந்து இருக்கின்ற அமைப்புகளும், அறிவு ஜீயகளும் ஒரு பதினைந்து அமைப்புகள் இணைந்து இன்று காலை பி.யு.சீ.எல். என்ற மக்கள் சிவில் உரிமை கழகம் என்ற அகில இந்திய பிரபல மனித உரிமை அமைப்பின் முக்கிய பங்குடன் ஒரு முடிவு செய்துள்ளார்கள். தங்கள் மதுரைக்கு ஒரு நல்ல, நேர்மையான அதிகாரி இப்போதுதான் மாவட்ட ஆட்சியராக கிடைத்துள்ளார். அவரை நீக்க, அவரை இழிவு படுத்த ஆளும் கூட்டம் எடுக்கும் முயற்சிகளை எத்ரித்து தேர்தலை பயம் இன்றி நடத்த இதுபோன்ற நல்ல, நேர்மையான அதிகாரிகளை ஆடஹ்ரிக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளனர்.பியுசியல் மாவட்ட தலைவர் பேராசிரியர் முரளி இதை தெரிவிக்கிறார்.

காங்கிரஸ் பணம் கொடுத்தால் தேர்தல் ஆணையம் பிடிக்காதா?

இன்று [ 02 -04 -2011 ] மாலை 6 -30 மணிக்கு காரைக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஊஞ்சனை கிராமத்தில் வைத்து, காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் கே.ஆர்.ராமசாமியின் மகன் கரு.மாணிக்கம் தலைமையில் வந்த மூன்று கார்கள் மூன்று லட்சம் ரூபாயுடன் பிடிபட்டன. அதை பாஜக வேட்பாளர் நேரில் பார்த்திருக்கிறார். உயர் மட்ட காவல்துறையும் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். ஆனா அதற்குள் அந்த மாவட்டத்தில் சுற்றுலா செய்யும் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அதில் தலையிட்டு பிடிபட்டவர்களை விடுதலை செய்யவைத்துள்ளார்.

அதன்பிறகு தேர்தல் ஆணையம் ஊடகத்தாரிடம் புது கஹையை சொல்லியிருக்கிறார்கள். அந்த கதையில் ஒரு கார் பிடிபட்டதாகவும் அதில் துண்டுகள் மட்டுமே இருந்ததாகவும் அதில் வேட்பாளர் மகன் கரு.மாணிக்கம் இல்லை என்றும், பொய் செய்தியை கூறமுடியும் என்றால் சிதம்பரத்தின் தலையீடு எந்த அளவுக்கு தமிழ்நாட்டில் நேர்மையாக தேர்தல் நடத்தக்கூடாது என்பதில் இருக்கிறது என புரிய முடியும். ஏற்கனவே சிதம்பரம் இன்று சிவகங்கை மாவட்டத்தில் தனது தேர்தல் சுற்றுப்பயணத்தில் ஒரு ஆலோசனையி ஊடகங்களுக்கு மிரட்டலுடன் கூறியுள்ளார். தேர்தல் என்றால் திருமண வீடு போல இருக்க வேண்டும் என்றும், அதில் திருவிழா களை கட்டவேண்டும் என்றும், சுவர் எழுத்து, சுவரொட்டி, கொடிகள் தோரணங்கள் ஆகியவற்றை தெர்தலானையம் தடுக்க கூடாது என்று கூறிவிட்டு, இந்த விசயத்தில் ஊடகங்கள் தேர்தல் ஆணையத்தை எத்ரிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

கே.ஆர்.ராமசாமி ஏற்கனவே ஊஞ்சனைகிராமத்தில் 1980 ஐந்து தலித் விவசாயிகள் கொல்லப்பட்டதற்கு காரணமாக இருந்த கரிய.மாணிக்க அமபலத்தின் மகன். மற்றும் தொடர்ந்து "நாடு" என்ற பெயரில் சாதி ஆதிக்கத்தை அங்கு தலைமைதாங்கி வருபவர். அவருக்கு எப்போதும் உதவியாக இருக்கும் ஊஞ்சனை ராமசாமி என்பவர், தான் சைக்கள நடராஜனுக்கு நெருக்கம் என்று கூறி கொண்டு, அதேசமயம் காங்கிரஸ் வேட்பாளர் கே.ஆர்.ராமசாமிக்கு அனைத்து வேலைகளையும் செய்துவருபவர்.அதிமுக சார்பாக ஒரு கள்ளர் சமூகத்தினரான சோலை.பழநிச்ச்காமியை அங்கே நிருத்தியிருந்தும் கூட, இந்த ஊஞ்சனை ராமசாமி போன்றோர் கே.ஆர்.ராமசாமியையே தங்கள் சமூக தலைவராக பார்க்கிறார்கள்.

இப்போது திமுகவிற்கு பணப்பட்டுவாடா விசயத்தில் தடை செய்ய முயலும் தேர்தல் ஆணையம் காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் அதை செய்ய முற்படவில்லையே என்று திமுகவினர் கூட கேட்கிறார்கள். வருகிற ஐந்தாம் நாள் சோனியா வந்தபிறகு, ராகுலும் தமிழக தேர்தலுக்கு தங்கள் கூட்டணிக்கு ஆடஹ்ரவு கேட்டு வந்த பிறகு, தேர்தல் ஆணையம் இதே நேர்மையுடன் நடந்துகொள்ளுமா? அப்படி நடக்க காங்கிரஸ் தலைமை அனுமதிக்குமா? சிதம்பரத்தின் தலையீடு தனது சொந்த மாவட்டத்தில் தொடங்கி விட்டதே?

மும்பையில் காவல்துறை கெடுபிடி.

.
இலங்கையில் தமிழின அழிப்பை கொடூரமாக செய்த அரச தலைவர் ராஜபக்சேவை பாதுகாக்க மும்பை காவல்துறை வரிந்து கட்டிக்கொண்டு இறங்கியுள்ளது. நேற்றிரவே தான் திருப்பதி மலையில் தங்க இருப்பதாக பொய் தகவலை கொடுத்த ராஜபக்சே, அது இன்று ஆங்கில ஏடுகளில் வெளிவர செய்துவிட்டு, அதேசமயம் மும்பைக்கு நேற்று இரவே வந்திறங்கி ஐந்து நட்சத்திர விடுதியில் தங்கிவிட்டான். அது மாத்திரமின்றி ராஜபக்சேவை பாதுகாக்க மும்பை காவல்துறை எடுத்துக்கொண்ட செயல்பாடுகள் கணக்கில் அடங்கா.

நூறு மீட்டர் தூரத்திற்கு முன்னூறு காவலர்களை மும்பை காவல்துறை போட்டு அராஜகமான மிரட்டலை செய்தது. அவை அனைத்துமே இந்திய மத்திய அரசின் வழிகாட்டலில் செய்யப்பட்டுள்ளது. அதுவும் சிதம்பரம் என்ற துரோகம் செய்ய அஞ்சாத ஒரு தமிழனின் நேரடி ஏற்பாட்டில் மத்திய அரசின் உள்துறை செய்த வேலை என்று தெரிய வருகிறது. முதலில் வந்த செய்தியான விமான நிலையத்தில் தமிழர்களின் எதிர்ப்பு என்ற செய்தி தவறானது என்றும், உணர்ச்சி வசப்பட்ட தமிழர்கள் பொய் செய்த்கிகளை தரவேண்டாம் என்றும் நாமும் கேட்டுக்கொள்ள வேண்டியிருக்கிறது.

இந்த கெடுபிடிகளுக்கு மத்தியில் மும்பை தமிழர் அமைப்புக்கள் எல்லோரும் சேர்ந்து அந்தேரி என்ற இடத்தில் உள்ள விமான நிலையத்திலிருந்து ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஒரு இடத்தில் முன்னூறு பேராக கூடி ஆர்ப்பாட்டம் செய்ய முற்பட்டபோது அதையும் மும்பை காவல்துறை தடுத்து விரட்டி விட்டது. அதன் பின், மும்பை தமிழ் சங்க கட்டிடம் முன்பு அனைவரும் மீண்டும் கூடி சிறப்பாக ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர்.

கொடியவன் ராஜபக்சேவுக்கு வால்பிடிக்கும் காங்கிரஸ் கட்சியின் மகாராஷ்டிரா அரசையும் , மத்திய அரசையும் கண்டித்து தமிழர்கள் விழிப்புடன் இருக்க இந்த நிகழ்வுகள் எடுத்துக்காட்டாய் அமைந்துவிட்டன

இந்திய சாமிக்கு அல்வா கொடுத்த ராஜபக்சே

ரத்தகறையோடு ராஜபக்சே திருப்பதி வந்தான். அங்குள்ள சாமியிடம் வேண்டிக்கொண்டான். போர்குற்றத்தில் பிடிப்பட கூடாது என வேண்டியிருபான். அங்குள்ள சாமி இந்திய சாமிதானே. அதனிடமே அவன் சிங்களம் இந்தியாவை மட்டை பந்து போட்டியில் வெல்லவேண்டும் என வேண்டியுல்லான். அப்படியானால் இந்திய ஆசாமிகளை போலவே இந்திய சாமிகளுக்கும் மானம் கிடையாதா?

ஆனால் இந்திய புரட்சியாளர்களுக்கு மானம் உண்டே? அதனால்தான் அந்த ரத்தகரை பிடித்த ராஜபக்சே அந்த திருப்பதி மலையை இட்டு கீஹி இறங்காமல் இரவும் திருப்பதி மலையிலேயே தங்கினானாம். அவன் ஒரு மனன்கேட்டவேன் என்றால், அவனுக்கு அழைப்பு விடுத்த இந்திய அரசும், அவனுக்கு பாதுகாப்பு கொடுத்த இந்திய அரசாங்கமும் மானம் கெட்டதுதானே?