Friday, April 1, 2011

டில்லியே பதில் சொல்

1974 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா நாட்டுடன் டேவிஸ் க்ளப் போட்டி நடப்பதாக இருந்தது. அப்பது தென்னாபிரிக்காவை ஆண்டு வந்தது வெள்ளை இனவெறியர்கள். அவர்களை எதிர்த்து நெல்சன் மாண்டலே தலைமையில் " ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ்" ஆடுதப்போராட்டம் போராடி வந்தது. அந்த கறுப்பர்களின் ஆயுதப்போராட்டத்தை ஆதரித்த இந்திய அரசு அந்த டேவிஸ் க்ளப் போட்டியில் கலந்துகொள்ள மாட்டோமென அறிவித்தது.

அதேபோல இப்போது சிங்கள இனவெறி ஆரசு தமிழர்களை இன அழிப்பு செய்து வருகிறது. தமிழர்கள் நேரடியாக இந்தியாவிற்கு சம்பந்தப்பட்டவர்கள். ஆனாலும் இந்திய அரசு நெல்சன் மண்டலேவிற்கு கொடுத்த ஆதரவு போல அல்லாமல் இலங்கையின் சிங்கள பேரினவாத அரசு நடத்திய இன அழிப்பு போருக்கு எதிராக போராடிய பூகள் அமைப்பை ஆதரிக்காமல் அழிக்கவே உதவியது. அதுமட்டுமின்றி இப்போது அந்த இலங்கை தமிழின அழிப்பை நடத்திய சிங்கள செரியன் ராஜபக்சேக்கு சிகப்பு கம்பளம் விரித்து மும்பையில் நடக்கும் போட்டியில் கலந்து கொளிறது.வெட்க கேடு. வெட்க கேடு

கீழவெண்மணியின் 44 தியாகிகள் நினைவு தேர்தலில் மீண்டும் எழுகிறது.

கீழ வெண்மணி கிராமம், 1968 ஆம் ஆண்டு டிசம்பர் 25 ஆம் நாள் உலகம் முழுவதும் ஒரு அதிர்ச்சி தகவலை கொடுத்தது. செழுமையான விவசாயத்தை கட்டிக்காத்துவந்த உழவர் பருன்குடி மக்களான தாழ்த்தப்பட்ட விவசாயக்கூளிகளை சுரண்டி கொழுத்துவந்த ஆதிக்க சாதி வெறி கொண்ட பண்ணையார்களின் சங்கத்தலைவன் கோபாலக்ருஷ்ண நாயுடு, காவல்துறையுடன் சேர்ந்துகொண்டு அறுவடைக்கு அதிகக்கூலி கேட்ட அந்த அடிமட்ட ஏழை மக்களை விரட்டி, வெண்மணி கிராமத்திலேயே ஒரு குடிசைக்குள் தள்ளி கதவை தாளிட்டு அவர்களது வாழ்க்கைக்கும் தாளிட்டுவிட்டான். அனைத்து கூலி மக்களும் அவன் வைத்த வெந்தீயில் எரிந்து சாம்பலாயினர். அந்த கொடூரக்காட்சியை பார்த்துகொண்டு கைகள் தேர்தல்களால் கட்டப்பட்டநிலையில் மார்க்சிஸ்ட் கட்சி கண்ணீர் விட்டது. அந்த மார்க்சிஸ்ட் கட்சி சார்பாக இப்போது கீழ்வேள்ளூர் தொகுதியில் ஒரு மகாலிங்கம் நிற்கிறார்.

கீழ வெண்மணியை கொண்ட இந்த கீழ்வெள்ளூர் தொகுதி புதிதாக சமீபத்திய தொகுதி மறுபரிசீலனையில் உருவாக்கப்பட்ட புதிய தொகுதி. அதுவும் தலித் இனத்திற்கான ஒதுக்கீட்டு தொகுதி. கீழ வன்மைநீல் நடந்த கொடூரக்கொளைகளுக்கு எதுவும் செய்யமுடியாமல் சாபிடாமல் மட்டுமே இருந்த முதல்வர்தான் திமுகவின் முதல் முதல்வரான அண்ணாதுரை. அந்த திமுக சார்பாக இப்போது அந்த தொகுதியில் அமைச்சர் மதிவாணன் நிற்கிறார். அந்நாள் வெண்மணி படுகொலையை நினைவு படுத்தி நிற்கின்ற இளம் பெண் மாணவி தேவகி அனைவராலும் கவனிக்கப்படுகிறார். ஏன் என்றால் அவர் மட்டுமே வெண்மணி படுகொலைகள் பற்றி பேசக்கூடியவராக இருக்கிறார். இனி இப்படி கொடுமைகள் நடைபெறாவண்ணம் தடுக்கவேண்டும் என்ற எண்ணத்தை முன்வைத்து தனது தேர்தல் பயணத்தை அந்த இளம் பெண் துவக்கியிருக்கிறார்.

ஆட்சியாளர்களும், நீதிமன்றமும், மார்க்சிஸ்ட் கட்சியும் படுகொலைகளுக்கு தீர்ப்பு எழுதாத ஒரு சூழலில், நக்சல்பாரி இயக்கம் அந்த படுகொலைகள் நடந்து பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து கொடியவன் கோபாலக்ருஷ்ண நாயுடுவை அழித்தொழித்தது. அந்த அழித்தொழிப்பை நடத்திய சி.பி.ஐ.-எம்.எல்.. இயக்கத்தை அன்று வினோத் மிஸ்ரா தலைமை தாங்கினார். அந்த அழித்தொழிப்பை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட தோழர்களில் ஒருவர் கண்ணையன் என்ற ராமசாமி. அந்த ராமசாமியின் தம்பி மகள்தான் இந்த தேவகி என்ற சுயேச்சை வேட்பாளர்.

இந்த சுயேச்சை வேட்பாளர் தேவகி, மயிலாடுதுறை ஏ.வி.எம். கல்லூரியில் எம்.ஏ.படிக்கும் மாணவி. பறையர் நல பேரவையின் தலைவர்.அவருக்கு "பள்ளர் நல பேரவை" "சக்கிலியர் நல பேரவை"ஆகியவை ஆதரவு தருகின்றன.இன்றைய தேர்தல் போட்டியில் இப்படி ஒரு சமூக கொடுமையை மையப்படுத்தி பரப்புரை செய்வது பெரும் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது. அதில் கோபலக்ருஷ்ண நாயுடுவின் படுகொலைக்கு காரணமானவர் என்றும், தலைமை தாங்கியவர் என்றும் காவல்துறையால் குற்றம் சாட்டப்பட்ட வெண்மணி குமரன் என்ற சுப்பிரமணியன் இந்த தேர்தல் களத்தில் " தேவகி" க்கு ஆதரவாக இறங்கியுள்ளார் என்ற செய்தி செவிமடுக்கவே மகிழ்ச்சியை தருகிறது.

ராஜபக்சே வருகையால் திமுக கூட்டணிக்குள் குழப்பமா?

மும்பையில் உலக மட்டைப்பந்து விளையாட்டு போட்டியின் இறுதி ஆட்டம் நடைபெற நாளை தயார் ஆகிவருகிறது. அது இந்தியாவிற்கும், இலங்கைக்கும் ஆன ஆட்டம். ஆகவே அதை பெருமையாக இருபுறமும் நினைப்பார்கள். பாவம் தமிழர்கள். இந்த ஆட்டத்திற்கு, மகிந்தாவை இந்திய அரசு அழைத்திவிட்டது. அவரும் வருகிறார். தமிழின அழிப்பில் அறுபதாயிரம் தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சே மும்பை வருகிறான். அடஹ்ர்கு ஏற்பாடு செய்யும் இந்திய அரசு இலங்கை அரசத்தலைவர் மகிந்தாவுடன், இந்திய குடியரசு தலைவர் பிரதீபா பாட்டீல்தான் அமரவேண்டும் என்று முடிவு செய்துள்ளது.

இது பிரதமர் மன்மோகனை காப்பாற்றி தமிழ்நாற்ற்டு தேர்தலில் வரை இறக்கிவிட ஒரு திட்டமா என்று விளங்கவில்லை. ஆனாலும் பிரதமரும், அன்னை சோனியாவும், இளைய பட்டத்தரசர் ராகுலும், மும்பை செல்லாமல் இருக்கமுடியாது. மகிந்தாவை காணாமல் உறக்கம் வராது. அவருடன் கைகுலுக்காமல் இருக்க மாட்டார்கள். அந்த ரத்தக்கறை படிந்த கைகள் இவர்களது கைகளில் படியாமல் இருக்காது. அந்த ரத்தக்கைகளுடன் சோனியாவும், ராகுலும் தமிழ்நாட்டிற்கு வருவார்கள். அந்த ரத்தம் படிந்த, தமிழரின் ரத்தம் படிந்த கரங்களை பற்றாமல் எங்கள் ஊர் தாத்தா, மூத்த அரசியல்வியாதி இருக்கமாட்டார்.

மும்பையில் கொலைகாரன் ராஜபக்சே வருகையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் அல்லது போராட்டம் நடத்த அனுமதி இல்லை. எங்கு பார்த்தாலும் ராணுவம் வளம் வருகிறது.அடஹ்னால் இனமான உணர்வுள்ள தமிழர்கள், வழமையாக ஆர்ப்பாட்டம் நடத்தும் { காவல்துறையிடம் முன்கூட்டியே அனுமதி பெறாமல் நடத்த இருக்கும் அனுமத்திக்கப்பட்ட இடம்} விக்டோரியா டவர் என்ற இடத்தில் ஆர்ப்பாட்டம் செய்ய இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் தமிழர் உணர்வாளர்கள் என்ன செய்வார்கள்?


தமிழர்களின் ரத்தத்தில் இத்தனை விசேசம் இருக்கிறதா என்று தமிழ்நாட்டு வாக்காளர்கள் சிந்திக்கவேண்டும். அதேநேரம் வைகோ தனது படை, பட்டரன்களை அதிமுக தோல்விக்கு வேலை செய்ய கட்டளையிட்டுள்ளார். அதை அப்படியே தொண்டர்களும் பின்பற்றுவர். திமுக, காங்கிரஸ் கட்சிகளுக்கு வேலை செய்யும்படி வைகோ கொடுத்த உத்தரவால் மதிமுக தொண்டன் சமீபத்தில் நிலை குலைந்துவிட்டார்கள்.ராஜபக்சே வரவை திமுக வரவேற்கட்டும். பாமக, விசிக,இரண்டும் இரண்ட்டாட்டில் ஒராடு போல விழிக்கிரார்

ஜெயலலிதாவை சந்தித்த முஸ்லிம் தலைவர்கள்

இன்று மதியம் இந்திய தௌஹித் ஜமாஅத் தலைவர்கள் எஸ்.எம்.பாக்கர், முனீர், சித்திக், இக்பால், அந்தோணியப்பா,ஆகியோர் ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் சந்தித்தனர். இருபுறமும் அகமகிழ்வுடன் வரவேற்றுக்கொண்டனர். முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அறிவித்ததற்கு அவர்கள் நன்றி சொல்ல, அதையும் தாண்டி முஸ்லிம்கள் பிரச்னைக்கு இந்திய தௌஹித்துகள் கூறியவற்றை செல்வி.ஜெயலலிதா ஆர்வமாக கேட்டார். பொது விசயங்கள் பற்றியும் பேசினர்.

ஜே கூட்டணிக்கு அமோக ஆடஹரவு மக்கள் மத்தியில் இருப்பதாக இருபுறமும் பரிமாறிக்கொண்டார்கள். போகிற [போக்கை பார்த்தால் அதிமுக கூட்டணி முக்கால் வாசி தொகுதிகளையும் கைப்பற்றிவிடும் போலிருக்கிறதே?