Monday, March 28, 2011

எதிர் வேட்ப்பாளரை தேர்வு செய்த கருணாநிதி.

திருவாரூரை கருணாநிதி தேர்வு செய்து நிற்பது ஒரு விபத்தா? அல்லது முன்பே திட்டமிட்ட ஒரு செயலா? முன்பே திட்டமிட்டு எதிர் வேட்பாளரையும் தயார் செய்தார் கருணாநிதி என்று உண்மைகள் கூறுகின்றன. அதிமுக வேட்பாளராக குடவாசல் ராஜேந்திரன் நிற்க வைக்கப்பட்டவுடன் அதிமுகவில் பல தொண்டர்களும் அதிர்ச்சி அடைந்தனர். ஏன் என்றால் ராஜேந்திரன் தனது அடாவடியை அங்கே உள்ள தலித் மக்களிடமும், மற்ற சமூகங்களிடமும் தொடர்ந்து காட்டியவர் முதல்வர் என்பதற்காக மக்கள் வாக்கு அழித்துவிடுவார்கள் என்று கலிஞர் நினைக்கவில்லை. சிபிஎம் கட்சி செல்வாக்கு தன்னை பாதிக்கலாம் என்றும் வருக்கு தெரியும்.

அதனால் எதிர் வேட்பாளரை அதிமுகவிலிருந்து நிறுத்தும் பொது தனக்கு அதில் தேர்வு செய்ய வாய்ப்பு கிடைக்கவேண்டும் என்று விரும்பினார். ஓராண்டு முன்பே அதற்காக நிழல் மனிதரை கலாட்சேத்ரா காலனியில் சிறப்பு உளவு துறை மூலம் நேருக்க தொடங்கினார். அவர்களது மிடாஸ் நிறுவனத்திற்கு கட்சி வேறுபாடு பார்க்காமல் சாராய வர்த்தகத்திற்கு வழிச்ய்த்து கொடுத்ததை எடுத்து சொல்லசெய்தார். அந்த நேரம் குடவாசல் ராஜேந்திரன் திமுகவில் சேர அறிவாலயம் வரை வந்துவிட்டார். அவர் தங்கள் கட்சிக்குள் வந்தால் ஏற்கனவே தங்கள் ஆட்சியில் கோளை வழக்கு போடப்பட்டவர் என்பதால் அவப்பெயர் தனக்கு வரும் என்று கூறி கூட்டி வந்த திமுக தலைவர் பூண்டி கலைசெல்வனிடம் மறுத்துவிட்டார். அந்த இருவரும் சொந்தங்கள் என்பதை நாடறியும்.

குடவாசல் ராஜேந்திரன் தலித் மக்களால் மட்டுமல்ல, மற்ற கொலை போன்ற வன்முறை வழக்குகளை கொண்டவர் என்பதால் அவரே தன்னை எதிர்த்து தோல்வி அடைய சரியானவர் என்று கருணாநிதி கணித்தார். . ஒரு பார்ப்பன பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவர் என்ற பெயரும் இருப்பதை கருணாநிதி அறிந்தே இருந்தார். இத்தகைய ஒருவர் தன்னை எதிர்த்தால் தான் எளிதாக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெல்லலாம் எனவும் கணித்தார். எதிர் தரப்பில் தனது ஆட்கள் மூலம் முதல் வேட்பாளர் பட்டியலை அம்மாவிற்கு தெரியாமல் வெளியிட்ட பாணியிலேயே இதையும் செய்தார். இப்போற்ற்ஹு தைறியமாக இருக்கிறார். ஐந்து ஆண்டுகளாக எந்த அரசியலிலும் ஈடுபடாத ராஜேந்திரன் கடைசியாக அறிவிக்கப்பட்டார். நல்ல முறையில் அவரை கவனிக்கவும் கருணாநிதி பூண்டி கலைச்செல்வனிடம் கூறியுள்

சோனியாவை ஏமாற்றிய தங்கபாலு.

சோனியாவை தமிழ்நாட்டு சட்டமன்ற தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்ப்பாலர்களை தேர்ந்தெடுப்பவர் என்று வெளியே சொல்லிவிட்டு, சோனியாவிற்கும், ராகுலுக்கும் புரியாத ஒரு புதிய தந்திரத்தை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு இப்போது அரங்கேற்றிவிட்டார். அதாவது காங்கிரஸ் கட்சிக்குள் இருக்கும் எதிர்ப்பில் தனது பெயரை வேட்பாளராக அறிவிக்காமல், தனதுமனைவிஜெயந்திபெயரைஅறிவிக்கச்செய்துவிட்டு,அதற்கு எதிரப்பு வந்தும்கூட கண்டுகொள்ளாமல் கடந்த சனிக்கிழமை அன்று காலையிலிருந்து மாலைவரை விசிக,காங்கிரஸ்,திமுக,பாமக, என்று ஒவ்வொரு கட்சியின் மயிலை கிளை பொறுப்பாளர்களையும் அழைத்து சித்திரக்குளம் அருகே கல்யாணமண்டபத்தில் வைத்து, ஒவ்வொரு கட்சியின் ஒவ்வொரு பகுதி அமைப்பிற்கும் பத்தாயிரம் ரூபாயை அளித்து, மொத்தம் 150 அமைப்புகளுக்கு ஒன்றரை கோடி ரூபாயை விநியோகம் செய்தார்.

மனைவி ஜெயந்திக்காக இவ்வளவு தூரம் செய்பவரா பரவாயில்லையே என்று காங்கிரஸ் பெண்கள் மகிழ்ந்திருக்கும் வேளையில் இப்போதுதான் அதன் உண்மை முகம் வெளிவந்ததுள்ளது. இத்தனை திட்டங்களும் தங்கபாலு முன்கூட்டியே போட்டுவைத்திருந்ததுதான் என்று காங்கிரஸ்காரர்கள் கூறுகிறார்கள். அதையொட்டி உள்துறை அமைச்சர் சிதம்பரம் கடுமையான ஒரு குறிப்பை காங்கிரஸ் தலைமைக்கு இன்று காலை அனுப்பியுள்ளார்.இவ்வாறு சோனியாவையும், ராகுலையும் ஏமாற்ற தங்கபாலு யார் தைரியத்தில் செய்கிறார் என்ற கேள்விக்கு எந்த குழந்தையும் கலைஞர் தைரியத்தில்தான் என்று கூறிவிடும்.இனியும் தொடராது காங்கிரஸ் உறவு என்று எண்ணிய கலைஞர் தங்கபாலுவை தனது கைக்குள் வைத்துக்கொண்டுள்ளார். ஐந்து கல்லூரிகளை ஆளும் தங்கபாலு, அதுதவிர ஒரு காட்சி ஊடகத்தை நடத்தும் தங்கபாலு,அதற்கே உரித்தான ஆள் பலம், பண பலம், தந்திரம் இல்லாமல் இருப்பாரா? ஞாயிறு இரவு தான் வாழும் கஸ்தூரிபாய் நகரில் மின்வெட்டு ஏற்பாடு செய்துவிட்டு, அந்நேரம் பணத்தை கட்டு, கட்டாக தனது வீட்டிலிருந்து வெளிஎடிர்நார் என்பது தனது தேர்தல் வேளைக்கு அவர் செய்த தயாரிப்புதானே?

காங்கிரஸ் தலைமையை தனது வேட்பாளர் தேர்வில் மட்டும்தான ஏமாற்றினாரா தங்கபாலு? கிரிஷ்ணகிரி வேட்பாளர் டேஹ்ர்விலும் இதே[போல தலைமையை ஏமாற்றினார். கிரிஷ்ணகிரிக்கு தனது காட்சி ஊடகத்தில் அழகியல் கலை கற்றுத்தரும் ஹசீனசய்யதை காங்கிரஸ் வேட்பாளராக கொண்டுவந்தார் தங்கபாலு. பெண் முஸ்லிமுக்கு முஸ்லிம்கள் வாக்கு கிடைக்காது என்று எதிர்தரப்பு காங்கிரசார் புருடா விட, உடனே அதுபற்றி கெட்ட காங்கிரஸ் தலைமைக்கு தானே ஒரு ஆண் முஸ்லிம் வேட்பாளரை தருகிறேன் என்று திருவல்லிகேநியிளிருந்து மக்பூல் ஜான் என்பவரை போடவைத்தார். தங்கபாலுவின் மிரட்டலில் பயந்த மக்பூல் ஜான் கிரிஷ்ணகிரிக்கு வேட்பு மனு தாக்கல் செய்யவே செல்லவில்லை. தாமதமாக தனக்கு உத்தரவு கிடைத்ததால் தயார் செய்து குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்லமுடியவில்லை என்று கூறிவிட்டார். ஹசீனாவிடம் தங்கபாலு ஐம்பது லட்சம் வாங்கி, அதில் பத்து லட்சத்தை மபூளுக்கு கொடுத்து எம்மற்றிவிட்டார் என்று காங்கிரஸ் பெண் கவுன்சிலர் தேர்தல் ஆணையத்திடம் புகார் கூறியுள்ளார்.

இது ஒரு புதிய முறையில் கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளரை மாற்றும் தந்திரம். மயிலாப்பூரில் நடந்தது இன்னொரு புதிய தந்திரம். இவையெல்லாமே இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தில் உள்ள தேர்தல் முறைகளில் உள்ள ஓட்டைகளை புரிந்துகொண்டு அதற்கு தகுந்தாற்போல காய் நகர்த்தும் தந்திரம்.தனக்கு பின்னால் கட்சியில் பெருத்த செல்வாக்கு இல்லாத தங்கபாலு இதுபோன்ற தந்திரங்களை கையாண்டுதான் பெரிய கோஷ்டிகளான சிதம்பரம்,வாசன் கோஷ்டிகளை தோற்கடிக்கமுடியும் என்பது அவர்களது வாதம்.


இதுபோன்ற தந்திரங்களை தங்கபாலுவிற்கு கற்றுக்கொடுத்தது திமுக தலைமை. ஏன் என்றால் விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி ஒரு தந்திரம் செய்துள்ளார். தனது வேட்புமனு நிராகரிக்கப்படுமோ என்ற பயத்தில் மாற்று வேட்பாளராக கட்சியின் இன்னொரு நபர் வந்துவிடக்கூடாதே என்பதற்காக தனது மனைவியையே மாற்று வேட்பாளராக போட்டுவிட்டார். திமுக காரர்கள் தன்காளுக்குள் புழுங்கிகொண்டார்கள். ஏன் என்றால் அது கட்சி தொண்டர்களுக்கே எத்ரிராக, கட்சி வழக்குக்கே எதிரப்பாக,நடத்தப்பட்ட செயல். ஆனால் தலைவர் கலைஞரிடம் கேட்டுக்கொண்டு செய்த செயல் என்று பொன்முடி தரப்பு கூறுகிறது. அதே தந்திரத்தை தனது கைத்தடியாக இருந்துவரும் தங்கபாலுவிற்கும் கலைஞர் சொல்லிக்கொடுத்துள்ளார் என்பதுதான் கவனிக்கத்தக்கது.

கூட்டணியில் இருந்துகொண்டே காங்கிரஸ் கட்சி தனது செல்வாக்கில் உள்ள சிபியை மூலம் ராஜாவை கைது செய்து சிறையில் தள்ளி, தாயாளு, கனிமொழி மீது குற்றப்பத்திரிகை தயார் செய்ய ஏற்பாடு செய்யும்போது, திருச்சி சிவாவை பொது கணக்கு குழு தேர்தலில் தோற்கடிக்க செய்யும்போது, ஏன் சோனியா அறிவித்த வேட்ப்பாலர்களை தங்கபாலு மூலம் திமுக தலைமை தந்திரங்களை சொல்லிக்கொடுத்து மாற்றக்கூடாது என்பதே அந்த
கோஷ்டியின் கேள்வி. இவாறு தமிழ்நாட்டு டேஹ்ர்தலில் ஒவ்வொருவரும் அடுத்தவருக்கு எத்ரிராக காய் நகர்த்தல் வேலையை செய்துவருகிறார்கள்.