Friday, March 25, 2011

மிரட்டுகிறார் ஜாபர் சேட்..........

ஜாபர் சேட் பெயர் இப்போது தமிழ்நாட்டு அரசியல்வாதிகளைவிட, அதிலும் ஊழல் புகாரில் சிக்கியவர்களைவிட, குடும்ப அரசியலால் முழ தமிழ்நாட்டையும் கட்டிப்போட்டவர்களைவிட, உருட்டியும், சீராடியும கூட்டணியை சாதித்தவர்களைவிட, பெரிதும் பேசப்படும் மர்மம் என்ன? ஒரு உளவுத்துறை பெரிய அதிகாரியைப்பற்பற்றி ஏன் இவ்வளவு தூரம் ஊடகங்கள் எழுதவேண்டும்? அவர் தேர்தலில் நடத்தப்படும், நடத்தப்பட இருக்கும் தில்லுமுல்லுகளுக்கேல்லாம் ஆசானாக செயல்படுகிறார் என்பது மட்டும்தானா? ஜாபரை பொறுத்தவரை அவர் கடமை ஆற்றுவது என்பதையும் தாண்டி எதையாவது செய்தால் அதற்கு சன்மானம் வாங்காமல் போகமாட்டார். கடந்த ஐந்து ஆண்டுகளில் அதற்கான பல உதாரணங்களை அவரே செயல்படுத்தி காட்டியுள்ளார்.

திருச்சியில் பெரிய அதிகாரியாக இருக்கும் போதே, முட்டை ரவி, குற சிவா, என்று போளிம்தல் சாவுகளை நடத்தி காண்பித்த ஜாபர், பிறகு சென்னைக்கு உளவுத்துறைக்கு மாற்றலான பிறகு தனது சட்டவிரோத காரியங்களை, எளிதாக செய்துவந்தார். நெடும் அளவிலான வேண்டுகோள்களுக்கு பின்னும் மணல்மேடு சங்கர் கொலையை அரங்கேற்றினார். அவை எல்லாவற்றிற்கும் சிறந்த அளவில் சன்மானங்கள் பெருக்கொண்டதுதான் முக்கிய செய்தி. ஒவ்வொரு சாதிக்காரர்களிடமும் அடுத்த சாதிக்காரனை தீர்த்துக்கட்ட என்று சன்மானம் கிடைக்கும். அது அந்த பணக்காரர்கள் தங்கள் உயிர் பாதுகாப்பிற்கு என்று எண்ணி ஜாபரின் வார்த்தைகளை நம்பி கொடுக்கும் சன்மானம். ஜாபர் இயல்பிலேயே பணக்காரர் அவர் ஏன் சன்மானம் வாங்க வேண்டும் என்றும் பரப்புரியை ஒருபுறம் கிளப்பிவிடுவார். இன்னொரு புறம் வாங்குவதை வான்க்கிக்கொள்ள அது எளிதாக இருக்கும். அந்த போலி மோதல் சாவுகள் வரிசையில் குற நடராஜையும் போட்டு விட்டார். இவையெல்லாம் ரவுடிகளை போடலாம் என்ற " காக்க, காக்க" படவரிசையில் சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்டவை

சரி. எழத்தமிழரை கொள்ளலாமா? அது எந்த சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்டது? டில்லியில் உள்ள ஒற்றையாட்சி மனோபாவம் உள்ள அதிகாரவர்க்க கும்பலால், அதாவது எம்.கே.நாராயணன், சிவசங்கர் மேனன் வகையராக்களால் அங்கீகரிக்கப்பட்டது. அது போதும் ஜாபருக்கு. அவர் எம்.கே.நாராயணன் மனோபாவத்தால் செயலபடுத்தப்பட்டார். எழத்தில் நடத்தப்பட்ட தமிழின அழிப்பை எம்.கே.நாராயணன் ஆதரித்தார். ஜாபர் அவர் வழி செயல்பட்டார். தமிழின அழிப்பை தடுக்கும் வல்லமை தமிழ்நாட்டு மக்களுக்கு உண்டு. ஆனால் தமிழ்நாட்டு மக்களை திசை திருப்பும் வல்லமை ஜாபருக்கு உண்டு என்று டில்லி நம்பியது. பல முறைகளை ஜாபர் தமிழ்நாட்டு மக்களது எழுச்சியை தடுத்து நிறுத்தினார். ஒருபுறம் ஈழ பிரச்சனைகளுக்கு போராடினால் அனுமதி மறுப்பு.இன்னொரு புறம் இன அழிப்பு ஆதரவு தலைவர்களுக்கு இன ஆதரவு முத்திரை பெருவதற்கான தயாரிப்பு. அதுவே ஜாபர் ஆலோசனையில் கருணாநிதி தலிமையில் அமைந்த இலங்கை தமிழர் பாதுகாப்பு பேரவை. அதற்கு கொடுக்கப்பட்ட விளம்பரத்தால் அந்த இன அழிப்பு தலைவர்களின் முகங்கள் காப்பாற்றப்பட்டன.

முத்துகுமார் நிகழ்ச்சி ஜாபருக்கு விழுந்த பெரிய அடி. அதையும் சமாளித்தார் ஜாபர். மாணவர்கள் கைகளில் கொடுக்கவிடாமல், அரசியல்வியாதிகள் கைகளில் முத்துகுமாரின் உடலை பெற்றுத்தர ஏற்பாடு செய்தார். அதன்படி முத்துகுமாரின் விருப்பத்திற்கு எதிராக அவரது உடலை உடனடி அடக்கம் செய்ய துடித்தார். அடக்க ஊர்வலத்தின் திசையை மாற்ற பாடுபட்டு வெற்றிபெற்றார். அதன்மூலம் எழ இருந்த தமிழக மக்களின் எழுச்சியை அடக்குவதில் வெற்றிகண்டார். அதற்கெல்லாம் சன்மானமாக டில்லி மட்டுமல்ல, கொழும்பும் உவகையுடன் லண்டனுக்கு கூப்பிட்டு கொடுத்தது பல கோடி என்ற செய்தி விசாரிக்கப்படவேண்டும். பின்னல் இருந்த அம்சா வ்ஹேன்னையில் இருந்தாலும் லண்டனில் இருந்தாலும் ஜாபரின் ஆலோசகர். இத்தனை திறமை உள்ள அதாவது சூழ்ச்சிகள், சதிகள் செய்வதில் திறமை உள்ள ஜாபரை, எப்படி தேர்தல் ஆணையம் கூப்பிட்டு விசாரித்து மேற்கு வங்கத்திற்கு மாற்றமுடியும்? அதை இப்போது ஊடகங்கள் மூலம் கேட்கவைத்துள்ளார் ஜாபர்.

டில்லிக்காரர்களிடம் ஜாபர் எதில் மாட்டிக்கொண்டார்? அரசரைவிட அரசு செலுத்துவதில் விசவாசம் காட்டிய ஜாபர், தமிழ்நாட்டு மன்னர் குடும்பத்தின் தயவிற்காக, இலங்கை அமைச்சர் ஆறுமுக தொண்டைமானின் உதவியுடன், மன்னர் மகளுக்கு நுவரிலியாவில், நிலம் வாங்கி கொடுத்தார். தனது மனைவியின் பெயருக்கு, முதல்வர் கையெழுத்துடன் வீட்டு வசதி வாரிய வீட வாங்கி கொண்டார்.சுத்தமான கை என்றால் இந்த வீடு வாங்கியிருக்க கூடாதே? அப்படி மன்னர் குடும்ப விச்வாசத்திர்க்காக தமிழர் விரோத போக்குடன் சென்னை உயர்நீதி மன்றத்தில் வாநிப்போரின் ஒத்திகையை நடத்திக்காட்டினார். அதில் சில பெரிய அதிகாரிகளைக்கூட பகைத்துக்கொள்ள தயங்கவில்லை. கடைசீயில் ஆ,ராஜா சிக்கிய ஸ்பெக்ட்ரம் விவாகரத்தில், மன்னர் குடும்பத்தை காப்பாற்றுவதர்க்காக சாதிக் பாட்சா மரணம் என்று ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. சாதிக்கின் சாவுக்கு முன்பு ஒருமணிநேரம் முன்பு ஜாபர் சாதிக்கை சந்தித்தார் என்ற செய்தி ஒன்று இருக்கிறது.அது கொலையா என்ற சீ.பி.ஐ.யின் கேள்விக்கு பதில் சொல்ல டில்லியழைக்கப்பட்டார். ஆனால் தான் அழைக்கப்பட்டது தேர்தல் விதி மீறல் பிரச்சனை என்று ஊடகங்களில் திசைதிருப்பும் வேலையை செய்துவருகிறார்.

இப்போது டில்லியையே மிரட்டும் வேளையில் இறங்கியுள்ளார். அதுதான் இப்போது சோனியா, ராகுல் போன்ற தலைவர்கள் வரும்போது பாதுகாப்புஆபத்து இருக்கிறது என்று புதுகரடி விடுகிறார். அதற்குதான் தான் ஐ.ஜி.ஆக இருக்கவேண்டும் என்று டில்லியை அல்லது தேர்தல் ஆணையத்தை மிரட்டுகிறார்.புகழேந்திரன் மாஸ்டர் என்று ஒரு நபரை டில்லி உளவு துறை தமிழ்நாட்டில் உலவவிட்டு, அதன்மூலம் தமிழ்நாட்டு சட்ட,ஒழுங்கை கேள்விக்குறியாக்க முயல்வதும் ஜாபருக்கு தெரியும். அதைத்தான் இலங்கை நாடாளுமன்றத்தில் அதன் பிரதமர் ஜெயரத்னே கூறியிருந்தா. அந்த கூட்டத்தில் சிலர் யாழ்ப்பணத்திற்கு இந்திய உளவுத்துறையான "ரா" மூலம் சென்று இருப்பதுள் ஜப்பாருக்கு தெரியும். ஏன் என்றால் ஜாபர்தான் " ராமு" என்ற சரணடைந்த போராளியை பயன்படுத்தி இந்திய உளவுத்துறை படம் காட்டிய போது அதை தனது ஆதரவில் உள்ளவர்கள் ஓலம் தமிழ்நாட்டு பிரபா ஏட்டில் கொண்டுவரவைத்தவர்.இப்போது தான் த்மியாஹ்னாட்டில் பதவியில் இருந்தாலும்,இல்லாவிட்டாலும் வெளிநாடுகளில் இருந்த படியே உயர் தொழில்நுட்பம் மூலம் தமிழ்நாட்டு தேர்தலில் தில்லு முள்ளு செய்யமுடியாதா என்று டில்லியில் மிரட்டினார் என்று அவரது நண்பர் மூலம் வார இருமுறை ஏட்டில் எழுதவைத்துள்ளார். இப்போது ஜாபருக்கு ஆதரவாக கலைஞர் அரசு கொடுத்துள்ள வினாக்கள் கடைசியில் பூனை பையை விட்டு வெளியே வந்து விட்டதை காட்டுகிறது.
எப்படியும தமிழ்நாட்டு தேர்தலில் திமுகவிற்கு ஆதரவாக தில்லுமுல்லு செய்ய தயாராக இருக்கும் ஜாபரை எப்படி அம்பலப்படுத்தவோ, தடுக்கவோ, அவர் செய்ய உள்ள வெடிவைக்கும் நிகழ்ச்சிகளை தடுக்கவோ முடியும் என்பது தேர்தல் ஆணையத்திற்கும், எதிர்க்கட்சிகளுக்கும், மக்களுக்குசவாளாக அமைந்துள்ளது.