Friday, March 18, 2011

கெட்டிக்காரர் கருணாநிதிதானே?

அய்யா. அ.தி.மு.க.வின் வேட்பாளர் பட்டியல் என்பதாக ஒன்று 160 பேருடன் வெளிவந்தது. அதில் தேமுதிக,சீ.பி.ஐ.,சீ.பி.எம்.,புதிய தமிழகம், போன்ற கட்சிகள் கேட்டிருந்த விருப்ப தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்களை அறிவித்திருந்தார்கள்.அதனால் அவர்கள் கடும் கோபத்திற்கு உள்ளானார்கள். அவர்கள் அனைவரும் தேமுதிக அலுவலகத்தில் கூடினார்கள். அவர்களுக்குள் ஒரு மூன்றாவது தனி அணியை கட்டிக்கொள்ளலாமா என்று பேசத்தொடங்கினார்கள்.அவை அனைத்தும் ஊடகங்களில் வந்துகொண்டே இருந்தது. அம்மா அதுபற்றி தெரியாதவராக இருந்தார். திடீரென ஒரு ஆங்கில காட்சி ஊடகம் பார்த்தார். அதில் தனது உருவபொம்மையை மதிமுகவினர் எரிப்பதை பாரதத்தார். அதன் பிறகே கேள்விப்பட்டு அதிமுக தன்னிச்சையாக ஒரு வேட்பாளர் பட்டியலை அறிவித்ததை தெரிந்து கொண்டார் என்கிறது ஒரு கதை. இந்த கதை சோ தயார் செய்து வெளியிட்டது என்றும் கூறுகிறார்கள்.

அந்த கதையை விவரமாக தினமலர்,தினமணி ஆகியவை வெளியிட்டன. அதன்படி ஜெயலலிதா சிசிகலாவின் உறவினர் ராவணனிடம் ஒரு அதி முக முதல் பட்டியலை 70 பேருக்கு தயார் செய்து கொடுத்ததாகவும், அதை மறைத்துவைத்துவிட்டு ராவணன், இன்னொரு பட்டியலை அதாவது 160 பேர்கொண்ட முழு அதிமுக பட்டியலை வெளியிட்டுவிட்டார் எனவும் அந்த ஏடுகள் கூறின.அப்படி ஒரு சதிகார பட்டியலை தயாரித்தவர்கள் என்று புதிய பார்வை நடராசன், திவாகரன், டி.டி.வி.தினகரன்,டாக்டர் வெங்கடேஷ் என்ற சசிகலாவின் உறவினர்கள் அந்த ஏடுகளில் குற்றம் சாட்டப்பட்டிருந்தனர். அதாவது நடராசன் தலைமையிலான ஒரு கும்பல் என்பதாக அது அம்பலமானது.அதனால் தான் சீ.பி.ஐ.,சீ.பீ.ம், ஆகிய கட்சிகளின் அகில இந்திய தலைமையுடன் நல்லுறவு கொந்த அல்லது நல்லுறவு வேண்டி நின்ற ஜெயலலிதா இப்படி அவர்கள வென்று வந்த தொகுதிகளையும் அவர்களிடமிருந்து பிரிப்பாரா என்ற சந்தேகம் எழுந்த ஒரு நாளுக்குள் சதிதான் என அம்பலப்பட்டுவிட்டது.

எதற்காக நடராசன் இப்படி செய்யவேண்டும்? சசிகலா குழுவினரின் "மிடாஸ்" என்ற சாராய தொழிற்ச்சாலையில் இருந்து, பல்லாயிரம் கோடிகளுக்கு கருணாநிதி அரசு டாச்க்மாக் என்ற அரசு சாராய கடைகளுக்கு மது வாங்கிவருகிறது. அதன்மூலம் போயஸ் தோட்டத்தில் ஆதிக்கம் செலுத்தும் சசிகலா கும்பலுக்கு அதிகமான அளவில் வணிகம் கொடுத்துவருகிறது. இவாறு கருணாநிதி அரசு கொடுத்துவருவது சசிகலா கும்பலை கருணாநிதியின் விசுவாசத்திற்கு கொண்டுசென்றுள்ளது. இதுதவிர புதிய பார்வை நடராசன் வைத்திருக்கும் வங்கி கணக்கை கருணாநிதியின் காவல்துறை ஓராண்டிற்கு முன்பே கணக்கு பார்த்து பல்லாயிரம் கோடி எப்படி வந்தது என்றும் அதன் வட்டியாக பல, பல லட்சங்களை நடராசன் பெற்றுவருவதையும் கண்காணித்து கொடுக்கி போட்டது. அதன்விளைவாக நடராசன் கருணாநிதியின் காவல்துறைக்கு விசவாசம் செய்பவராக ஆகிவிட்டார். அப்போதிலிருந்தே அவர் அதிமுக கட்சிக்கு உள்ளிருந்து வரும் முரண்பாடுகளை கேட்டறிந்து அவற்றை கருணாநிதி கட்சி தலைமைக்கு கூறி அதன்மூலமே பல பிரமுகர்களை கட்சி மாறி தி.முக விற்கு தாவ வழி செய்தார்.

இவாறு ஓராண்டாக செய்துவரும் ஒரு நிழல் மனிதர் தன்னைப்பற்றி எப்போதும் அதிமுக தலைக்கு வழிகாட்டிக்கொண்டிருப்பதாக போய் கூறிவருவார். அதை நம்பிய மதிமுக தலைவர் வைகோ, நடராஜனது வீட்டு முன்பே பத்து நாட்களாக தவம் கடந்ததால், அவருக்கு தோட்டம் அழைப்பு இடிக்கவில்லை. நடராஜனை எதிரி என்று தெரிந்திருந்த ஜெயலலிதா அவரது கும்பல் செய்யும் வேலைகளை அறிந்திருக்கவில்லை. உதாரணமாக் நடராசன் தம்பி ராமச்சந்திரன் தோட்டத்தில் நல்ல பெயர் வாங்கி நம்பிக்கைக்குரியவர் என்று அங்கீகரிக்கப்பட்டவர். அவர் அண்ணன் நடராஜனுடன் எப்போதும் தொடர்பிலேயே இருந்துவருகிறார். ஒவ்வொரு கட்டத்திலும் விசுவாசம் கேட்டவர் என்று அடையாளம் காணப்பட்டு ஜெயலலிதாவால் வெளியேற்றப்பட்ட திவாகரன், டிடிவி தினகரன், டாக்டர் வெங்கடேஷ், ஆகியோர் சேர்ந்து தயார் செய்த பட்டியலில் தங்கள் குழுவிடம் காசு கொடுத்த தங்கள் சமூக தாவது முக்குலத்தோர் பட்டியலை ராவணன் என்ற தங்கள் சொந்தம் மூலம் தயார் செய்தனர்.84 அதிமுக வேட்பாளர்கள் அந்த சமூகத்தவர் என்றும் கூறுகிறார்கள்.

இவ்வாறு எதிர்கட்சிக்குள் கலக்கம் ஏற்பாடு செய்த கருணாநிதி கெட்டிக்காரர் தானே? இப்போது தோட்டத்திற்குள் சண்டை என்றும், சசிகலாவிடம் ஜெயலலிதா கோபம் என்றும் வருகின்ற செய்திகள் யாருக்கு என்ன லாபம்? கருணாநிதி எப்போதும் தான் தோற்றுப்போவோம் என்று முடிவுக்கு வந்தால் இப்படித்தான் சதி செய்து அடுத்த கட்சியின் சோலியை முடிப்பார். அடுத்த கட்சியாக சாதிக் பாட்சசாவும் இருக்கலாம், ஜெயலலிதா கட்சியும் இருக்கலாம்.