Friday, March 4, 2011

தி.மு.க.வை குத்தும் காங்கிரஸ்.

குத்து குத்து கும்மாங்குத்து குத்தராங்கலேப்பா காங்கிரஸ். இது ஆட்டை கடிச்சு மாட்டை கடிச்சு மனிதனை கடிக்கும் கதையா? முதலில் ஈழத்தமிழர்களை போராட விடாமல் சிங்களத்திற்கு உதவியது காங்கிரஸ்.பிறகு ஈழத்தமிழரின் விடுதளிக்கு போராடும் விடுதலை புலிகளை தடை செய்தது காங்கிரஸ். பிறகு விடுதலை புலிகளின் தலைவர் மீது கோளை குற்றத்தை சுமத்தியது காங்கிரஸ். பிறகு விடுதலை புலிகளின் இருத்தலே போர்க்க மாட்டாமல் அழிக்க முழு உதவியை சிங்கள பவுத்த பேரினவாத போர் வெறியர்களுக்கு செய்தது காங்கிரஸ். பிறகு ஈழ தமிழ் தேச்டிய இனத்தையே அழிக்க னைத்து உதவிகளையும் செய்தது காங்கிரஸ். அதேபோல தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய முல்லை பெரியார் அணைக்கட்டு தண்ணீரை உச்சநீதிமன்றம் கொடுத்தான் கூட அதை கேரள சட்டமன்ர்டம் மூலம் தீர்மானம் போட்டு தடுத்தது காங்கிரஸ். கர்நாடக மூலம் காவேரி தண்ணீரை நடுவர் மன்ற தீர்ப்பை கூட மீறி தடுத்தது காங்கிரஸ். ஆந்திராவில் பாலாற்றுக்கு நடுவே தடுப்பணைகளை கட்டி தமிழ்நாட்டிற்கு தண்ணீர் வராமல் தடுத்தது காங்கிரஸ்.

இத்தனையும் நடக்கும் போதெல்லாம் காங்கிரஸ் தலைமையை ஆதரித்த தி.மு.க. தலைமையை இப்போது போட்டு வாட்டி வதைக்கிறது காங்கிரஸ்.தி.மு.க தலைவர் கூறுவது போலவே தேர்தல் ஆணையம் மூலம் ஏப்ரல் பதிமூன்றே தேர்தலை வைத்து தானே கூட்டணி பேச்சுவார்த்தையை இழுத்துக்கொண்டு போய், திக்கு முக்காட வைக்கிறது காங்கிரஸ். டில்லியிலிருந்து வந்த ஆசாத் முதலில் என்பது என்றார். பிறகு ஐம்பத்து எழுவரை ஒப்புக்கொண்டார். அறுபது என்று தி.மு.க. வந்த பின்பும் இப்போது அறுபத்து மூன்று என்கிறது காங்கிரஸ். மத்திய அரசை விட்டு வெள்யே வருகிறோம் என்று கருணாநிதி இப்போது சிந்திக்கிறார். இடையில் கருணைதி, அன்பழகன், ஆற்காட்டார், துரைமுருகன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட கருணாநிதி மேலவை திட்டம் வைத்திருந்தார். அதையும் காங்கிரஸ் தனது தேர்தல் ஆணைய வழக்கறிஞர் மூலம் பேசவைத்து முறியடித்து விட்டது.

அதேசமயம் ராஜாவை உள்ளே தள்ளி அவர் மீது அன்னிய நாட்டு உலவி துறைக்கு உதவிய வழக்கை போட முடிவு செய்கிறார்கள்.இது எல்லாமே கருணாநிதிக்கு திட்டமிட்டு காங்கிரஸ் கொடுக்கும் தொல்லைகள்தான். தமிழினத்தை பகைத்துக்கொண்டாலாவது, தனது குடும்ப நலனை பெரிதாக எண்ணிய ஒரு கிழவயது அரசியல்வாதிக்கு டில்லி கொடுக்கும் சித்திரவதை இது மட்டுமா, இன்னமும் போகுமா என்று தமிழினம் எண்ணிப்பார்கிறது

தீபஞ்சி அம்மன் கோயில் குருக்கள் மூன்று வயது சிறுமையை பாலியல் பாலாத்க்காரம்

காஞ்சி நகரில் கோவில்கள் அதிகம். அதிலும் இந்து மதத்தவர்களால் அதிகமாக ஆராதிக்கப்படும் கோவில்கள் அதிகம். அதனால் அந்த கோவிகளை வைத்து கொள்ளை அடிக்கும் கூட்டத்திற்கு கொண்டாட்டம். கலைஞர் "பராசக்தி" படத்திற்கு வசனம் எழுதியது போல, கோவில்கள் கூடாது என்பதற்காக அல்ல, கோவிகள் கொடியவர்களின் கூடாரமாக ஆகிவிடக்கூடாது என்பதற்காக,அவற்றை பற்றி நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியுள்ளது. இப்போது காஞ்சியிலிருந்து மக்கள் மன்றத்திலிருந்து வருகின்ற செய்தி அதிர்ச்சியாக இருக்கிறது. இது ஏற்கனவே எரிந்து கொண்டிருக்கும் நெருப்பில் மேலும் எண்ணையை ஊற்றுவதாக உள்ளது.இன்று காலை அது நடந்துள்ளது. காஞ்சிபுரத்தில் உள்ள தீபஞ்சி கோவிலில் அந்த இழி செயல் நடந்துள்ளது.

ஏற்கனவே அங்கே உள்ள பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோவிலில் வைத்து அதன் மேலாளர் பாடுகளை செயப்பட்டார். அதற்கு முக்கிய காரணமான சுப்பிரமணி என்ற சங்கராச்ச்காரியார் குற்றம் சாட்டப்பட்டு கைதானார். ஆனால் இன்றைய அரசாங்கத்தின் ஆதரவை பெற்றதால் அவருக்கு எதிரான சாட்சிகள் உடைக்கப்பட்டு விடுதி ஆகப்போகிறார். அதுபோல ஒரு குருக்கள் தேவநாதன் என்ற பெயரில் கற்பக்கிரகத்தையே தனது பள்ளியறையாக ஆகினார். அவரும் கைது செய்யப்பட்டு வழக்கு நிலுவையில் இருக்கிறது. இப்போது இந்த தேவராஜன் என்ற பெயருள்ள தீபஞ்சி கோவில் குருக்கள் மூன்று வயது சிறுமையை பலாத்காரம் செய்து மாட்டிக்கொண்டுள்ளார். அதை விஷ்ணு காஞ்சி கவக் நிலையத்தில் கொண்டு சென்று புகார் செய்யும் போது இப்போது நூறு பார்ப்பனரல்லாத பக்தர்கள் காவல் நிலையம் சென்று மரிக்கிறார்கள். இதுதான் இந்த நாட்டின் நீதியா?இந்த பாலியல் வெறியனான குருக்களையும் கருணாநிதி அரசு விடுதலை செய்ய துடிக்குமா?

பார்வதியம்மாள் ஒரு அடையாள குறியீடு.

வருகிற மார்ச் ஏழாம் நாள் புலிக்குட்டியை பெற்றெடுத்த தாய்ப்புலி பார்வதியம்மாளின் பதினாறாவது நாள் காரியம். பார்வதியம்மாள் சைவ நம்பிக்கை கொண்டவர். சைவ நம்பிக்கை கொண்டவர்கள் பதினாறாம் நாள் காரியத்தை கவனமாக கடைப்பிடிப்பார்கள். நாம் வைணவராகவோ,கிறித்துவராகவோ, இஸ்லாமியராகவோ,மதம் அற்றவராகவோ, நாத்திகராகவோ இருக்கலாம். ஆனால் அனைவரும் தமிழர்கள் அனைவரும் தமிழீழம் அடைவதை வாழக்கையின் ஒரு முக்கிய லட்சியமாக கொண்டிருக்கிறோம்.அதிலும் அதற்காக புறப்பட்ட புலிப்படையின் சாகசங்களையும், சாதனைகளையும்,மனதில் நிறுத்தி ஒவ்வொரு நாளும் அகமகிழ்கிறோம்.அதற்கு காரணமான அந்த மகத்தான தமிழீழ தேசியத்தலைவரை எண்ணி, எண்ணி,பஐவகை அடைகிறோம். உலகில் எந்த ஒரு தேசிய இன விடுதலை போராட்டத்திலும் தரைப்படையை தாண்டி, கடல் படையையும்,வான் படையையும் கட்டி வெற்றிகரமாக வழிநடத்தியதாக சரித்திரம் இல்லை. அப்படிப்பட்ட சரித்திரத்தை படைத்த ஒரு தலைவரை தனது கருவில் சுமந்து பெற்ற அந்த தாயார் பார்வதியம்மாளின் காரியம் என்றால் அதில் தமிழர்களின் பதிவு வேண்டும்.

பார்வதியம்மாள் இன்று ஒரு அடையாள குறியீடாக ஆகி உள்ளார்.அதாவது அவரது இறுதி அஞ்சலி நிகழ்ச்சிக்கு கூட சிங்கள வெறியர்களின் தலைமையை ஏற்றுள்ள ஒட்டு குழுவினர் தடை செய்தார்கள். அம்மாளின் சிதையில்கூட அவர்கள் உடைப்பு வேலை செத்தார்கள். சாம்பலை கூட விட்டுவைக்க தயாரில்லை.பார்வதியம்மலின் சாம்பலில் கூட நாய்களை அறுத்து போட்டனர். கருவிலே புலியை சுமந்த ஒரு தாயாரின் சாம்பல் கூட தமிழின எதிரிகளுக்கு அச்சத்தை உருவாக்கி உள்ளது. அதால் பார்வதியம்மாள் ஒரு அடையாள குரீடாக ஆகிவிட்டார்.

சென்னையில் திரைத்துறை கலைஞர்கள் மற்றும் மீனவர் சங்கங்களின் முன்முயர்ச்சியில், நாடு கடந்த தமிழீழ அரசு தோழமை மையமும் சேர்ந்து அத்தகைய காரியத்தை நடத்திட பல இடங்களில் திங்கள் கிழமை பார்வதியம்மாள் படத்துடன் ஏழைகளுக்கு உணவு அளித்தால் என்ற காரியத்தை செய்ய இருக்கிறார்கள்.அதற்க்கான பணியை துவங்கி விட்டார்கள். நீங்கள் என்ன செய்யப்போகிரீகள்.