Thursday, February 10, 2011

இதுதான் அதிகாரவர்க்க முதலாளித்துவம்.

ஐ.எஸ்.ஆர்.ஒ.வும், தேவாஸ் மல்டிமீடியாவும் செய்துகொண்ட ஒப்பந்தம் இன்று ஊரெல்லாம் கிழிந்து தொங்குகிறது. அதை தாங்கள் ரத்து செய்யப்போகிறோம் என்று அவர்களே அறிவிக்கும் நிலைக்கு அது பொய் சேர்ந்துள்ளது. அதில் முதல் தகவல்படி,அல்லது மேலோட்டமான ஒரு கணிப்புப்படி, இரண்டு லட்சம் கோடி அரசுக்கு நட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பதுதான் நாட்டை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய செய்தி. அந்த பணம் யாருடையது? இந்திய மக்களது பணம் இல்லையா?
இந்திய மக்கள் இன்னமுஜ்ம் ஏழ்மையில் வாழ்கிறார்களே? அவர்கள் தாங்கள் செலுத்திய நேரடி வரி மற்றும் மறைமுக வரி மூலம் இந்த நாட்டின் அரசு செயல்பட உதவி வருகிறார்களே? நேரடி வரி என்பது நமது நட்டு மக்களது, அதாவது உங்களையும், என்னையும் சேர்த்த இந்திய மக்களது நேரடி வரி என்றுதானே பொருள். அதை பல்வேறு விதமான வரிகள் மூலம் நாம் செலுத்தி வருகிறோமே?
மறைமுக வரி என்பது நாம் வாங்கும் ஒவவொரு பொருள் மீதும் இந்த அரசு போட்டுள்ள விற்பனை வரி, மதிப்பு கூடுதல் வரி, ஆகியவை அனைத்தும் நமது மக்களின் பைகளிலிருந்து ஒவ்வொரு நாளும் மத்திய மாநில அரசுகளின் கஜானாவிற்கு எடுத்துசெல்லப்படுகிறது. அப்படியானால் அந்த பணம்தானே இந்த விண்வெளி ஆராய்ச்சி மையத்தால் செலவழிக்கப்படுகிறது? ஐ.எஸ்.ஆர்.ஒ. எனபது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் என்று தமிழில் பொருள்படும். அவர்கள்தான் இந்த இரண்டு லட்சம் கோடியை அரசுக்கு நட்டம் ஏற்படுத்த காரணமானவர்கள். அதிலும் இந்த விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் தலைவர்கள், வெள்யே வந்தபின் தேவாஸ் மல்திமேடிஆ போன்ற நிறுவனங்களை ஏற்படுத்துவதும், அவர்களுக்கு உள்ளே இருக்கும் நிறுவன தலைவர்கள் இத்தகைய ஒப்பந்தங்களை வேறு வெளி ஆட்களுக்கு தெரியாமல் போட்டுக்கொடுப்பதும் ஏன் நிகழ்கிறது?
இத்தகைய அதிகாரிகளுக்கு வானளாவிய அதிகாரத்தை யார் கொடுத்தது? தலைமை மாயச்ச்சரின் அலுவலகத்திற்கு கீழே இருக்கும் இந்த விண்வெளி ஆராய்ச்சி நிலையம் எப்படி தலைமை அமைச்சருக்கும் கூட தெரியாமல் இப்படிப்பட்ட அரசுக்கு பெரும் நட்டத்தை ஏற்படுத்தக்கூடிய ஒப்பந்தங்களை போடமுடிகிறது? இந்திய அரசில் அதற்க்கான ஏற்பாடு எங்கே இருக்கிறது? இப்போது அம்பலமாகி இருப்பது உள்ளபடியே ஐ.எஸ்.ஆர்.ஒ.அதிகாரிகள் தாங்கள் உருவாக்கிய புதிய எஸ்.பாண்டு திட்டத்தை வெளியே அறிவிக்காமல் அதற்கான டெண்டர் விடாமல், பலரும் போட்டியில் கலந்துகொள்வதை தடுத்து தங்களது மூத்த அதிகாரிகள் ஒய்வு பெற்று வெளியே இருப்பவர்கள் மூலம் அத்தகைய ஒப்பந்தங்களை போட்டிருக்கிறார்கள் என்பது இப்போது தெரியவந்துள்ளது.
ஏன் இந்த அதிகாரிகள் இவ்வாறு இந்தியாவின் எந்த விதியையும் மீறி, தங்கள் லாபங்களுக்காக செயலபடுகிரார்கள்? பெரிய மத்திய அரசின் நிறுவனங்களில் இருக்கும் உயர் அதிகாரிகள் இவ்வாறு இந்தியாவின் பொருளாதாரத்தை அல்லது இந்திய அரசின் மூலதனத்தை தங்கள் கைகளில் வைத்துக்கொண்டு ஆட்டிப்படைக்கிரார்களே? இது எப்படி நிகழ்கிறது? இந்திய அரசை ஆளுகின்ற வர்க்கங்களில் முக்கியமாக இந்த அதிகாரவர்க்க முதலாளிகள் இருக்கிறார்கள். ஆமாம். இவர்களுக்கு பெயர் அதிகார வர்க்க முதலாளிகள். இந்திய அரசின் மூலதனத்தை பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் ஆளுகின்ற இந்த அதிகாரிகள் அதிகாரவர்க்க முதலாளிகள் என்று அழைக்கப்படுகிறார்கள். இந்த அதிகாரவர்க்க முதலாளிகள் அந்நியநாடுகளுடன் பல ஒப்பந்தங்களை அந்நியநாட்டு நலன்களுக்கும், அந்நியநாட்டு நிறுவனங்களான பன்னாட்டு மூலதன நிறுவனங்களுக்கும், இந்திய நாட்டு செல்வங்களை பகிர்ந்துகொள்ள உதவியிருக்கிறார்கள் என்பதுதான் இதில் புரியப்படவேண்டிய செய்தி.அவ்வாறு இவர்கள் செயல்படுவதால் இவர்கள் தரகு அதிகாரவர்க்க முதலாளிகள் என்று அழைக்கபடுகிரார்கள்.
இவ்வாறு இந்த கொள்ளையடிக்கும் அதிகாரிகளை தரகு அதிகாரவர்க்க முதலாளிகள் என்று அழைப்பது சீ.பி.ஐ.எம்.எல். என்ற நக்சல்பாரி இயக்கம்தானே என்று கேட்கலாம். ஆம். அதுதான் உண்மை. இந்தியாவை ஆள்வது தரகு அதிகாரவர்க்க முதலாளிகள் என்று நக்சல்பாரி இயக்கம்தாம் உறுதியாக கூறியது. யார் கூறியிருந்தாலும் உண்மை அதுதானே? அதனால் அவர்கள் கூறுவதுபோல தரகு அதிகாரவர்க்க முதலாளிகளான இந்த ஐ.எஸ்.ஆர்.ஒ. அதிகாரிகள் இந்தியாவை கொள்ளை அடித்ததை இப்போது மக்கள் புரிந்துகொள்ளும் கட்டம் வந்துவிட்டநிலையில் அவர்களை தரகு அதிகாரவர்க்க முதலாளிகள் என்று அழைக்க நாமும் பழகிக்கொள்ள வேண்டும்.