Monday, January 31, 2011

கருணாநிதி ஆட்சி காவல்துறை ஆட்சியாக மாறுவ்து ஏன்?

கருணாநிதி ஆட்சி என்றாலே காவல்துறை தனது அத்துமீறல்களை அதிகமாக செய்துவரும் எனபது வழமையான ஒன்றாக ஏன் ஆனது? கருணாநிதி அந்த ளவுக்கு மக்கள் மீது கோபம் கொண்டவரா? இல்லையே? காவல்துறை மீது நம்பிக்கை கொண்டவரா? அதுவும் இல்லையே? அப்படியானால் இது ஒரு பொய்யான புனைவா? அப்படியும் சொல்லிவிடமுடியவில்லையே? கருணாநிதி ஆட்சியில்தான் கடந்த ஐந்து ஆண்டுகளில் அதிகமாக காவல்நிலைய மரணங்கள் நிகழ்ந்துள்ளன. அதுமட்டுமின்றி மோதல் சாவுகள் என்று அழைக்கப்படும் போலி மோதல் சாவுகள் நடந்துள்ளன. அப்படியானால் கருணாநிதி ஆட்சி காவல்துறையின் ஆட்சி என்பது உண்மைதான். ஆனால் காவல்துறையின் இதயம் கீடுவிட்டது என்று துறவை மொழிந்ததும் கருணாநிதிதான். ஏன் இப்படி ஒரு நிலை ஏற்படுகிறது?
தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள்தான் ஆட்சி அதிகாரத்தில் அமர்கிறார்கள். அவர்கள்தான் காவல்துறையை தலைமை தாங்கவேண்டி உள்ளது. அல்லது வழிகாட்டவேண்டி உள்ளது. தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுபவர்களில் ஒவ்வொருவரும் ஆட்சிக்கு வந்த உடன் வெவேறு மாதிரி நடந்துகொள்வது ஏன்? அதாவது சிலர் காவல்துறையை சார்ந்து ஆட்சி நடத்துகிறார்கள். சிலர் காவல்துறை கையில் வைத்துக்கொண்டு ஆட்சி நடத்துகிறார்கள். சிலர் காவல்துறையை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு ஆட்சி நடத்துகிறார்கள். இப்படி வேறுபட்ட நிலைகளை அணுகுமுறைகளாக வெவேறு ஆட்சியாளர்கள் வைத்திருப்பது எதனால்? இதில் கருணாநிதி எத்தகைய முறையை கையாள்கிறார்? எம்.ஜி.ஆர். எந்த முறையை கையாண்டார்? ஜெயலலிதா எந்த முறையை கையாண்டார்? கையாளும் முறைகள் சம்பந்தப்பட்ட மனிதர்களால் தேர்ந்தேடுக்கப்படுகிறதா? அல்லது அவர்களது நிலைமைக்கு ஏற்ப அவர்கள்மீது திணிக்கப்படுகிறதா?
நிர்வாகத்தை நடத்துவதற்கு அவர்கள் அதாவது ஆட்சியில் முதல்வர்களாக வீற்றிருக்கும் நபர் தனது தகுதிக்கு அல்லது தனது சிந்தனைக்கு ஒப்ப தேர்ந்தெடுக்கும் அணுகுமுறைகளில் இந்த காவல்துறையை கையாள்வது என்பதும் வருகிறது. எம்.ஜி.ஆர். தமிழ்நாட்டு மக்களது ஏகோபித்த ஆதரவுடன் தேர்தல்களில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனால் அவர் தனது வேருப்பத்திர்க்கு ஒப்ப அல்லது புரிதலுக்கு ஒப்ப காவல்துறையை கையாண்டார். அதாவது இந்திய அரசியல் சட்டம் என்ன சொல்கிறது என்பதைப்பற்றிக்கூட கவலையின்றி எழப்போராளிகளுக்கு தான் நினைத்த மாததிரத்தில் காவல்துறையில் உள்ள துப்பாக்கி ம்ற்றும் தோட்டாக்களை எடுத்து கொடுக்க அவரால் உத்திரவிட முடிந்தது. ஜெயலலிதா காவல்துறையின் அதிகாரிகளை கேள்வி மேல் கேள்வி கேட்டு தனது உத்திரவுகளை அமுல்படுத்த முடிந்தது.ஆனால் கருணாநிதியோ காவல்துறை அதிகாரிகள் சொல்வதை கேட்பதையே தாரக மந்திரமாக கொண்டுள்ளார். இது ஏன் என்பதே இப்போதுள்ள கேள்வி.
எம்.ஜி.ஆர். கட்சியை விட்டு வெளியேற்றப்பட்டதிலிருந்தே கருணாநிதி தனது வாக்கு வங்கியை வெகுவாக இழந்து விட்டார். அதனால் ஒவ்வொரு தேர்தலிலும் தனது கட்சியை பல கட்சிகளுடன் கூட்டணியாக இனத்து மாட்டுமே அவரால் தேர்தல்களில் போட்டிபோட முடிகிறது. காலப்போக்கில் இந்த தந்திரத்தையும் எம்.ஜி.ஆர ,ஜெயலலிதா இருவரும் பின்படர் தொடங்கி விட்டார்கள். ஆனாலும் கருணாநிதி தலைமையிலான தி.மு.க.விற்கும், ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க.விற்கும் வாக்கு வங்கியில் ஒரு பெரும் வேறுபாடு இருந்து கொண்டே உள்ளது. நாளுக்கு நாள் சுருங்கிவரும் வாக்கு வங்கியை கொண்ட கருணாநிதி அதை வைத்துக்கொண்டு ஆட்சிக்கு கூட்டனஈ மூலமோ, எதிர் தரப்பு வாக்குகள் பிரிந்ததை பயன்படுத்தியோ ஆட்சிக்கு வந்துவிடுகிறார். ஜானகியும், ஜெயலலிதாவும் வாக்குகளை பிரித்துக்கொண்டபோது ஒருமுறை இது நடந்தது. பிறகு விஜயகாந்த், கிருஷ்ணசாமி, கார்த்திக் என்று சிலராலும் அவ்வப்போது இது நடந்தது. எப்படி இருந்தாலும் குறைவான வாக்கு வங்கிகளையே கொண்ட கருணாநிதி ஆட்சிக்கு வந்த உடன் ப்ரோவித பயத்திலேயே ஆட்சிக்கட்டிலில் அமர்கிறார். அந்த இடத்தில்தான் அவரது காவல்துறை பற்றிய அணுகுமுறை தீர்மானிக்கப்படுகிறது.
பலவீனமான வாக்கு வங்கி கொண்ட கருணாநிதி காவல்துறையை முழுமையாக சார்ந்து நிற்க வேண்டி இருக்கிறது. ஆனால் காவல்துறை அதிகாரிகள் மீது கருணாநிதிக்கு நம்பிக்கை இருப்பதில்லை. அதனால் ஒவ்வொரு செயல்களை பற்றியும் காவல்துறை உயர் அதிகாரிகளிடம் கேட்டுவிட்டு, அதை நம்பாமல் மேலும் நான்கு பேரிடம் கேட்கிறார் என்று ஒரு முறை ஒரு உளவுத்துறை உயர் அதிகாரி சொன்னது நினைவுக்கு வருகிறது.இந்த பலவீனத்தை பயன்படுத்தி அவருக்கு ஏற்றார்போல பொய்கூறும் உயர் அதிகாரிகளும் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஏக தடபுடல்தான். இத்தகைய சூழலில்தான் கருணாநிதி காவல்துறை அதிகாரிகளை முழுமையாக சார்ந்து இருக்கிறார். இது தவிர தன்னுடைய வாக்கு வங்கி பலவீனத்தால் அவர் எப்போதுமே தனது கட்சிக்காரகளை சார்ந்து நிற்கிறார். கட்சிக்காரர்கள் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் தங்களது தர்பாரை நடத்த தவறுவது இல்லை. இதனால் கட்சிக்காரகளின் ஊதுகுழல்களாக காவல் நிலையங்கள் ஆகிவிடுகின்றன.
அதனாலேயே அப்பாவி மக்களுக்கு எதிராக காவல் நிலையங்கள் நடக்கின்றன. காவல் அத்துமீறல்கள் அதிகமாகின்றன. காவல் சித்திரவதைகள் கூடுகின்றன. காவல் நிலைய சாவுகளும் அடிக்கடி நிகழ்கின்றன. உச்சநீதிமன்ற வழிகாட்டல்களையும், தேசிய மனித உரிமை ஆணையத்தின் ஆலோசனைகளையும் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் ஒட்டி வைத்ததாலும் அதை எந்த காவல் அதிகாரியும் பின்பற்றுவது இல்லை. கட்சிக்காரர்கள் கூறுவதை ஒட்டியே புகார்களும், கைதுகளும் செய்யப்படுகின்றன. அப்பாவிகள் தொடர்ந்து பாதிக்கப்படுகிறார்கள்.
கட்சிக்காரகளின் ஆதிக்கம் போதாது என்று மூன்று ஆண்டுகளாக முதல்வரின் குடும்பத்தை சேர்ந்த ஒவ்வொருவரின் ஆதிக்கமும் அதிகமாகி வருகிறது.ஒரு முதலமைச்சருக்கு பதில் பத்து முதலமைச்சர்கள் இங்கே தலையிட்டு காவல்துறை அதிகாரிகளுக்கு கட்டளைகளை பிறப்பிக்கிறார்கள். முதல்வர் குடும்ப ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகமாகத்தொடங்கியது. ஆட்சியில் உள்ளவர்களிடம் நற்பெயர் பெற்றால்தான் தான் விரும்பிய இடத்தில் பணி செய்ய முடியும் என்று காவல் அதிகாரிகளும் நினைக்கிறார்கள். அதனால் முதல்வர் குடும்பமே அனைத்து காவல் நிலையங்களிலும் கோலோச்சுகிறது. சட்டமும், ஒழுங்கும் அதனால்தான் முழுமையாக கெடுகிறது. அதன்விளைவாக காவல்துறை அதிகாரிகள் தாங்கள் வைத்ததே சட்டம் என்ற நிலைக்குய் சென்று விடுகிறார்கள். தங்களுக்கு தெரிந்த ஒரே மொழியான வன்முறையையே கைதிகளிடம் காட்டுகிறார்கள் அதுவே காவல்நிலைய மரணங்களை அதிகரிக்கவைக்கிறது.
இது போதாதென்று சமீப காலமாக அதிகரித்துவருவது போலி மோதல் சாவுகள்.
துப்பாக்கி சண்டை நடந்ததாக படம் காட்டி காவல்துறை அதிகாரிகள் தாங்கள் விரும்புகிரவர்களைஎல்லாம் தீர்த்து கட்டிவிடுகிறார்கள். அதிலும் முதல்வர் குடும்பத்திலிருந்து சில நேரங்களில் பட்டியல் கொடுக்கப்படுகிறது. மோதல் சாவுகள் எப்ப்தேல்லாம் போலி மோதல் சாவுகள் என்று சந்தேகிக்கப்படுகிறதோ, அல்லது நிரூபனமாகிறதோ, அல்லது நம்பப்படுகிறதோ அப்பதேல்லாம் அவை சட்டவிரோத காவல் சாவுகளாக ஆகிவிடுகின்றன. அதாவது காவல் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நபர்களை கையில் பிடித்து வைத்துக்கொண்டு அதை சட்டப்படி பதிவு செய்யாமலேயே போலி ம ஓதல் சாவுகளில் அவர்களை கொன்றுவிடுகிறார்கள். அதனால் அவையும் காவலில் கொள்ளப்பட்டதாகவே எடுக்கப்படவேண்டும். அவை சட்டப்படி காவலை பதிவு செய்யாத நபர்களை காவலில் கொள்ளும் முறை. அதிவும் தமிழ்நாட்டில் அதிகப்பட்டுவிட்டது.
ஆகவே நிர்வாகத்தில் அமர்ந்திருப்பவரின் அரசியல் உறுதி சம்பந்தப்பட்டதாக இந்த காவல்துறையின் அத்துமீறல்கள் புரியப்படவேண்டும். அதானால் பலவீனமான வாக்கு வங்கிகளை கொண்ட ஒரு நபர் ஏதோ ஒரு முறையில் ஆட்சிக்கு வந்துவிட்டால் அவரது போக்கு காவல்துறையை சார்ந்த ஒன்றாக மாறிவிடுகிறது. அதனாலேயே கருணாநிதியின் ஆட்சி காவல்துறையின் ஆட்சி என்று வர்ணிக்கப்படுகிறது. சென்ற முறைக்கு முன்முறை கருணாநிதி ஆட்சிக்கு வந்த போது இதையே தேசிய மனித உரிமை ஆணையத்தின் அன்றைய தலைவராக இருந்த முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதியரசர் ரெங்கநாத் மிஸ்ரா கருணாநிதி ஆட்சி பாற்றி குறிப்பிட்டார்.