Friday, January 28, 2011

கார்பரேட் நலனை கழட்டிவிடமுடியுமா ராகுலால்?

மகாராஷ்டிரா சென்று இன்று புரட்சிகரமாக பேசுகிறாரே ராகுல், அவரால் அனைத்து ஊழலுக்கும் காரணமான கார்பொரேட் நலனை கழட்டிவிட முடியுமா? என்னை கலப்பட கும்பலை விடக்கூடாது என்று அவுரங்கபாத்தில் இப்போது கூறிவரும் ராகுலுக்கு, அதன்பின்னே நிற்கும் காங்கிரசு சக்தி தெரியாதா? கருப்பு பணம் பற்றி கவலைப்படும் ராகுல், இந்திய அரசு அதை எதிர்த்து நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறும் ராகுல், மன்மோகனையும், பிரணாப் முகர்ஜியையும் குறை கூறுகிறாரா? அல்லது தனது தாயார் சோனியாவையே குறைகூறுகிரரா? அரசியல் கட்சிகளில் ஜனநாயகம் யில்லை என்று கூறும் ராகுல் நூறாண்டு காங்கிரசை தானே முதலில் குற்றம் சொல்லவேண்டும்? காங்கிரஸ் கட்சி தலைமை தங்கள் குடும்பத்திலே தங்கி இருப்பது ஜனநாயகம் என்கிறாரா?
நாட்டில் உற்பத்தியாகும் செல்வம் எல்லாம் ஏழைகளுக்கானது என்று கூறும் ராகுல், அதை அந்த ஏழைகள்தான் கல்வி மூலம், வேலை மூலம், உணவு மூலமனுபவிக்க வேண்டும் என்று கூறும் ராகுல், தனியார் கைகளில் கல்வியும், வேலையும், உணவும் போய்விட்டதை உணர்ந்துள்ளாரா? அதற்கு தங்கள் கட்சியின் கொள்கைகள்தான் காரணம் என்பதை புரிந்து கொண்டுள்ளாரா? எதற்க்காக இளைஞர்களை அரசியலுக்கு அழைக்கிறார்? அவர்களையும் ஊழல் படுத்தவா? அல்லது தனியார், கார்பரேட் கொள்ளைகளை நடத்தும் கொள்கைகளை குழிதோண்டி புதைக்கவா? தெளிவா வெளிய வாங்க ராகுல் அவர்களே. ஆறு மாதத்திற்குள் ஒவ்வொரு ஊழலுக்கும் நாவடிக்கை கோரும் ராகுல் அவர்களே, முதலில் காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஊழலுக்கும், ஆதர்ஷா ஊழலுக்கும், ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கும், காரணமான காங்கிரஸ் காரர்கள் மீது நடவடிக்கை எடுத்து விட்டு பேசுங்கள் ஐயா.