Friday, January 21, 2011

கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவி பாடும், ராஜா வீட்டு திண்ணை நாயும் தொடர்ந்து கொலைக்கும்.

ஆ.ராஜாவிற்கு ஆதரவாக ஸ்பெக்ட்ரம் ஊழல் ஒன்றுமே இல்லை என்று சொல்வதற்காக சென்ற வருடம் கடைசியில் ஒரு கூட்டத்தை சென்னை தியாகராயநகரில் போட்டிருந்தார்கள். அதில் தமிழ் ஊடக பேரவை என்று பெயர் போட்டு அந்த அமைப்பின் தலைவர் அனுமதி பெறாமலேயே போட்டிருந்தார்கள். அது வேறு விஷயம். அதில் ஊடகத்தில் இல்லாத சிலர், அதாவது ஊடகவியலாளர்களுக்கு இருக்கும் கடினங்களை உணராத சிலர்கூட, ஊடகம் பற்றி பேசினார்கள். அதுவும் வேறு விஷயம். ஏ.எஸ்.பன்னீர்செல்வத்தை தவிர, ஒரு காலத்தில் வெரிதாஸ் வானொலியில் இருந்ததாலும் கஸ்பரும் ஊடகவியலாலராக பேசினார். அதுவும் பரவாயில்லை. ஆனால் இன்று கலைஞர் டி.வீ.யிலும், அன்று சன் டி.வீ.யிலும் ஒரு நிகழ்ச்சியில் தொடர்ந்து உட்கார்ந்த காரணத்தாலேயே ஊடகம் பற்றி தெரியும் என்று நினைத்துக்கொண்டு ரமேஷ் பிரபாவும் பேசினார். பேசிவிட்டு போகட்டும். பெற்ற லாபத்திற்கு ஒரு பெரம்பலூர்காரர்,இன்னொரு பெரம்பலுர்காறரை ஆதரித்து பேசுவது வியப்பில்லை.
அதற்காக ஊடகவியலாளர்களின் பணியை பற்றி புரியாமல் குறை சொல்ல அவருக்கு உரிமையில்லை என்பது அவருக்கு புரியவில்லை. அதுவும் ஒரு பெண் பத்திரிகையாளரை பற்றி இழிவாக பேச ரமேஷ் பிரபாவிற்கு மட்டுமல்ல எந்த கொம்பனுக்கும் உரிமையில்லை. டேய், இது பெரியார் பிறந்த மண்டா, வாயை மூடு என்று யாரும் கேட்கவில்லை என்பதால் அப்படி அந்த உருவம் அன்று பேசியது. ராஜா விமானநிலையம் வரும்போது, ஒரு பெண் ஊடகவியலாளர் மேலே விழுந்து கேள்வி கேட்டார் என்று திரித்து, அந்த மறித்து கேட்ட நிகழ்வை, எல்லோரும் காட்சி ஊடகத்தில் கண்ட நிகழ்வை, கொச்சைபடுத்தி அந்த உருவம் அன்று பேசியது. அதற்குப்பின் அந்த ஆளை ஊடவியலாளர்கள் கண்டித்துள்ளனர். நானும் காட்சி ஊடகத்தில் எனது நிகழ்ச்சியில் கண்டித்து பேசினேன். நான் பணி செய்த வாரஇதழில் இந்த ரமேஷ் பிரபாவின் கண்ணியக்குறைவான பேச்சை கண்டித்து எழுதினேன்.அதற்குபிறகு அதேபாணியில் பெரியார்திடல் கூட்டத்தில் பேசியிருக்கிறார்.

இப்போது அண்ணாசாலையில் உள்ள தேவநேயபாவாணர் இல்லத்தில் இன்று[21st jan] நடந்த ராஜா அதரவு கூட்டத்தில் மீண்டும் இந்த ஆளு அதேபோல இன்னும் மோசமாக பேசியிருக்கிறான். அதாவது விமானநிலையத்தில் கூச்சமில்லாமல் ஒரு பெண் ஊடகவியலாளர் வந்து ராஜா மீது விழ்குந்தார் என்று இந்த ஆளு பேசியிருக்கிறான். இவன் பெர்டம்பளுரில் ராஜா மூலமாக தனது சொந்த நலனுக்கு பல நன்மைகள் பெற்றவன் என்பதனால், அதற்காக சீ.பி.ஐ. விசாரணை இன்னும் இவனுக்கு வரவில்லை என்பதனால், இப்படி கண்ட இடத்தில் கண்டபடி காநியக்குரைவாக பெண்களை பற்றியும், ஊடகவியலாளர்களின் பொறுப்பு மற்றும் தொழில் பற்றியும் பெசுகிராப்ன் என்றால் தமிழ்நாட்டில் நிலவம் கேவலமான ஜனநாயகமற்ற சூழலும், ஆள்வோரும் அடாவடித்தனமும் இவனுக்கு ஊக்கம் கொடுத்துள்ளது. இவன் ஒரு ஆளே இல்லை என்தால் இவன் பாற்றி பேசி பெரிய ஆளாக ஆக்கக்கொடாது என்பது உண்மைதான். அன்று விமானநிலையத்தில் நடந்தது பற்றிய உண்மை பலரும் காட்சி ஊடகத்தில் கண்டதுதான். ராஜாவை கேள்வி கேட்க முற்பட்ட பெண் நிருபரை ராஜாவின் அடியாட்களாக நினைத்துக்கொண்டு செயல்பட்ட செயலாளர்கள் தள்ளிவிடவும், மிரட்டவும் செய்தார்கள் என்பது இந்த முட்டாளுக்கு தெரியுமா அல்லது புரியுமா?
இப்படிப்பட்ட இழிவான பேச்சாளர்களை ராஜா வீட்டு திண்ணை நாயும் தொடர்ந்து கொலைக்கும் என்று சொல்வதை தவிர வேறு என்ன சொல்ல?