Tuesday, January 18, 2011

ஜி.ஆரை குத்தவா, தனக்குதானே குத்தவா? 5000 விவசாயிகள் தற்கொலை

தமிழ்நாட்டில் விவாசாயிகளின் தற்கொலைகள் பற்றிய புள்ளிவிவரம் பொங்கல் வாழ்த்து செய்தியில் சீ.பி.எம்.செயலாளர் ஜி.ராமகிரிஷ்ணனால் கொடுக்கப்பட்டது. அதில் 5000 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். அதுவும் 2005 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை உள்ள புள்ளிவிவரம் அது. அதுவும் சீ.பி.எம். கட்சி எடுத்த புள்ளி விவரம் அல்ல அது. தேசிய குற்ற பதிவு காப்பகம் கொடுத்துள்ள புள்ளிவிவரம். அதை எடுத்துகூரியிருப்பதுதான் ஜி.ஆர். ஆனால் அதுவே நமது முதல்வருக்கு அடிவயிற்றை கலக்கிவிட்டது. எதிர்க்ல்கட்சி கூட்டணியில் இருப்பதால்தான் ஜி.ஆர். இப்படி எழுதுகிறார் என்பதாகவெல்லாம் அங்கலாய்த்து இருக்கிறார். முரசொலி நாளேட்டில் சனவரி-பதினெட்டாம் நாள் இதற்கு பதில் சொல்வதாக எண்ணிக்கொண்டு, மன்னிக்க முடியாத பொய் என்று பெரிய அளவில் கட்டம் போட்டு எழுதியிருக்கிறார். பெயர் போடாமல் எழுதப்பட்ட அந்த கட்டுரைக்கு கலைஞர்தான் பொறுப்பு என்பது அனைவருக்கும் தெரியும்.
ஜி.ஆர் . மேற்கோள் காட்டுவதற்கு முன்பே தி.மு.க. தலைமைக்கு அந்த தேசிய குற்றபதிவு காப்பகம் கொடுத்த புள்ளிவிவரம் ஒரு சவாலாக மாறிவிட்டது. அதனால் தற்கொலை என்றால் காவல்துறையின் பதிவேட்டில் பதிவாகி இருத்தல் வேண்டும் என்பதை அடிப்படையாக கொண்டு தன்னால் நியமனம் செய்யப்ப்பட்ட காவல்துறையின் தலைவரான டி.ஜி.பி. லத்திகா சரணை கொண்டு ஒரு மறுப்பு அறிககையை கொடுக்க வைத்துள்ளார். அய்யோபாவம் லத்திகா சரணும் அரசியல் தெரியாத நிலையில் அந்த அரசியல் அறிககையை வெளியிட்டுள்ளார். அதை நாம் உட்பட யாருமே கவனிக்காமல் இருந்துவிட்டோம். ஆனால் அதை எடுத்து இப்போது ஜி.ஆருக்கு பதில் என்ற பெயரில் முரசொலியில் போட்டு அந்த லத்திகா சரண் அறிககையை எல்லோர் கவனத்துக்கும் கலைஞர் கொண்டுவந்துவிட்டார்.அதில் தேசிய குற்றபதிவு காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் உள்ள தற்கொலைகளை பாற்றி ஆய்வு செய்துள்ளார். அதாவது ஐந்து ஆண்டுகளில் 5000 விவசாயிகள் தற்கொலை தமிழ்நாட்டில் நடக்கவில்லை என்று அதில் லத்திகாச்சரனும் கூறவில்லை; முதல்வரும் மறுக்கவில்லை. ஆனால் அது எதற்க்காக நடந்தது எனபதில்தான் இவர்ககளுக்கு வேறுபாடு இருப்பதாக காட்டிக்கொண்டுள்ளார்கள்.
"வறுமை காரணமாகத்தான் விவசாயிகள் தற்கொலை செய்துகொல்கொண்டார்கள் என்று சொல்லியிருப்பது உண்மையின் அடிப்படையிலோ, புள்ளி விவரங்களின் அடிப்படையிலோ தயாரிக்கப்பட்ட விவரம் அல்ல. தெரிவிக்கப்பட்டுள்ள எண்ணிக்கை தற்கொலைக்கு என்ன காரணம் என்பதை பற்றி விசாரிக்காமலேயே தரப்பட்டுள்ளது.எனவே விவசாயிகள் வறுமை காரணமாக தற்கொலை செய்துகொண்டார்கள் என்றும், வேளாண்மை நடவடிக்கையின் போது, ஏற்பட்ட விரக்தியில் தற்கொலை செய்துகொண்டார்கள் என்றும் கூறுவது முற்றிலும் தவறானது.திண்டுக்கல் மாவட்டத்தில் இடியாபட்டி என்று கிராமம் இல்லை, இடியாகொட்டை என்றுதான் கிராமம் உள்ளது." என்ற ஒரு அரசியல் கலப்புள்ள அறிககையை லத்திகா சரண் மூலம் தாங்கள் வெளியிட்டதை இப்போது முதல்வர் தம்பட்டம் அடித்துள்ளார். இது தனக்குத்தானே குத்திக்கொல்வதாக இல்லையா?

டி.ஆர்.பாலு பெயரைக்கேட்டாலே டில்லி நடுங்குகிறது

புதிய ஆண்டு தொடங்கியதும், பல ஊழல்களில் மத்திய காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியின் அரசியல் மரியாதை சர்ச்சைக்குள்ளானதும் சேர்ந்து தேவையை ஒட்டியும் அமைச்சரவையில் மாற்றங்கள் விவாதிக்கப்பட்டன. தலைமை அமைச்சர் பொறுப்பிலும், உள்துறையிலும், நிதிதுறையிலும், வெளிவிவகாரதுறையிலும், பாதுகாப்புதுறையிலும், எந்த மாற்றமும் கிடையாது என்றனர். ஆ.ராஜா, இருந்த அமைச்சர் பொறுப்பில் இன்று கபில்சிபல் அமர்ந்திருப்பதால் அந்த இலாக்கா பாற்றி விவாதம் எழவில்லை. மாறாக தி.மு.க.விற்கு இருந்த ஒரு மத்திய அமைச்சர் பொறுப்பை அதே கட்சியில் யாருக்கு கொடுப்பது என்ற சர்ச்சை எழுந்துள்ளது. சசி தரூர் இருந்த வெளிவிவகார துறை இணை அமைச்சர் பொறுப்பில் யாரை அமரவைப்பது என்பது காங்கிரஸ் கட்சியின் தலைவலி. மகாராஷ்ட்ராவின் முதல்வர் ஆதர்ஷ் வீட்டு வசதி வாரிய வீடுகள் ஊழலில் சிக்கி வெளியே போனபிறகு, அந்த இடத்தில் பிரதமரின் அலுவலக பொறுப்பில் இருந்த பிருதுவிராஜ் சவான் மகாராஷ்டிராவின் முதல்வர் பொறுப்பில் அமரவைக்கப்பட்ட
பிறகு, அந்த இடம் காலியானது. அதற்கும் காங்கிரசில் ஆள் பார்க்கும் படலம் ஆண்டின் புதிய படலமானது. கபில் சிபல் கையில் முக்கிய இரண்டு இலாக்காகலான ஐ.டி.யும், மனிதவள மேம்பாடுமா என்றும் கட்சிக்குள் கேட்கப்பட்டது.
வருகிற சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற இருக்கும் மாநிலங்களில் உத்தரபிரதேச மாநிலம் காங்கிரசின் குறிப்பாக சோனியா மற்றும் ராகுலின் நேரடி கவனத்தில் இருப்பதால், அந்த மாநிலத்தை சேர்ந்த வாக்கு வங்கிகளை குறிவைக்க ஒரு முஸ்லிம் மற்றும் ஒரு இந்து பிரமுகர்களுக்கு மத்திய அமைச்சர் பொறுப்புகளை கொடுத்து அவர்கள் மூலம் வாக்கு வங்கிகளை திடப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி நினைக்கிறது. அதற்காக தங்கள் கட்சி தலைமையின் விசுவாசிகளான மத்திய துணை அமைச்சர்கள் இருவருக்கு அதாவது உத்தரபிரதேசத்திலிருந்து வந்தவர்களுக்கு அப்படி பொறுப்புகளை கொடுக்கவும் திட்டமிட்டார்கள். அதில் சல்மான் குர்ஷித் பெயரும், ஸ்ரீ மகேஷ் ஜெய்ஸ்வால் பெயரும் அடிபட்டது. அதேபோல ஆந்திர மாநிலத்தில் ஜகன் மோகனின் விலகலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் அதை சரிசெய்ய, தெலுங்கானாவிற்கு ஒரு அமைச்சர், கடலோர ஆந்திராவிற்கு இன்னொரு அமைச்சர் என்று பிரித்து கொடுப்பது பற்றியும் விவாதிதித்தார்கள்.
தமிழ்நாட்டிலிருந்து ஒரு தி.மு.க. மத்திய அமைச்சரை தேர்வு செய்ய கட்சிக்குள் டி.ஆர்.பாலு, டி.கே.எஸ்.இளங்கோவன், மற்றும் ஏ.கே.எஸ்.விஜயன் என்ற பெயர்கள் அடிபட்டாலும், பிரதமர் டி.ஆர்.பாலுவை விரும்பவில்லை என்பது பகிரங்கமாக தெரிந்து விட்டது. ஏற்கனவே டி.ஆர்.பாலு இருந்த கப்பல் துறை மூலம் அவர் சேது சமுத்திர திட்டம் என்ற பெயரில் கடலில் போட்டேன் என்று கூறி முந்நூறு கோடியை முழுங்கியதை பிரதமர் அலுவலகம் மறக்கவில்லை. அதற்குமுன்பு சுற்று சூழல் அமைச்சரவை என்ற பெயரில் அடித்த காசுகளையும் கனகு பார்க்கிறார்கள். ஆகவே புதிய ஆள்களை டில்லிக்கு காட்டவேண்டிய நிலைமையில் கலைஞர் இருக்கிறார். அதனால்தான் சாதி பிரநித்தித்த்துவம் என்ற பெயரில் ஆ.ராஜாவிற்கு பதில் ஏ.எஸ்.கே. விஜயன் சரியாக இருக்கும் என்ற பார்வை கருணாநிதி கருதுவதாக தெரிகிறது.

தமிழீழ அரசுக்கு அங்கீகாரம். /./ டில்லி அதிர்ச்சி

தென் சூடான் விடுதலை பெறுகிறது. அதன் விடுதலை நிகழ்வில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. தனிநாட்டிற்கான வாக்கதேப்பு முடிவடைந்தவுடன் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை தென் சூடானுக்கு வருமாறு சூடான் மக்கள் விடுதலை இயக்கம்[ எஸ்.பி.எல்.எம்.] அழைத்துள்ளது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விஸ்வநாதன் உருத்திரகுமாரன் அதுபற்றி கொடுத்த அறிக்கையில்," இது அரசாங்கத்திற்கான அங்கீகாரம் மட்டுமின்றி ஈழ விடுதலை போராட்டத்திற்கான அங்கீகாரமும் ஆகும் என்றார். விடுதலை பெற்ற தென் சூடான் மக்களின் மகிழ்ச்ச்சியை ஈழத்தமிழர்கள் தெளிவாக புரிந்துகொள்வதுடன் அதில் இணைந்துகொள்கிரார்கள் என்றார். இந்த உறவு புதிதல்ல. மே 2009 இல் பிலடல்பியா நகரில் நடந்த நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிகழ்வில் சூடான் மக்கள் விடுதலை இயக்க பிரதிநிதி கலந்துகொண்டார். தென் சூடானின் விடுதலை போராட்டத்திற்கும், தமிழீழ விடுதலை போராட்டத்திற்கும் உள்ள ஒற்றுமை பற்றியும், விடுதலை போராட்டங்கள் சந்திக்கும் சவால்கள் பற்றியும், ஈழத்தமிழ் மக்களுடனான தங்கள் திட வோற்றுமையுனர்வை குறிப்பிட்டு உரையாற்றினார்.வடக்கு சூடானிலிருந்து, தெற்கு சூடான் மக்கள் விடுதலை பெற போராட்டத்தை சூடான் மக்கள் விடுதலை இயக்கம் நடத்திவந்தது. சுதந்திர தென்சூடான் அரசை அமைக்கவுள்ளது.
ஒரு தனிநாடு உதயமாவதன் மூலம் தென் சூடான் மக்கள் நீண்டகாலமாக அனுபவித்த துன்பங்கள் தொலைந்துபோகும். அவர்களது போராட்டத்தின்போது சுமார் இருபது லட்சம் மக்கள் மடிந்திருக்கிறார்கள். பொதுமக்கள் மருத்துவ உதவியின்றியும், பட்டினியாலும், கூட்டாக படுகொலை செய்யப்பட்டும், இறந்துபோனார்கள். தென் சூடான் போலவே தமிழீழமும் விரைவில் விடுதலை பெரும் என்ற நம்பிக்கை பிறக்கிறது. 1977 நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின்போது, வட்டுக்கோட்டை தீர்மானத்திர்க்கமைய தமிழீழ தனியரசினை அமைப்போம் என்று வாக்கு கேட்ட கட்சிகள் ஈழத்தில் அறுதிபெரும்பான்மை வாக்குகளை பெற்றன. ஆயுதப்போராட்டம் ஸ்ரீ லங்காவில் ஆரம்பிப்பதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, ஈழத்தமிழர்கள் தங்கள் நிலைப்பாட்டினை இவ்வாறு அமைதியாகவே வெளிப்படுத்தினார்கள்.புலம் பெயர்ந்த மக்கள் அண்மையில் பல்வேறு நாடுகளிலும் நடத்திய வாக்கெடுப்பின் மூலம் தமது தாயகத்தில் இறைமையுள்ள தனிநாடு ஒன்றை அமைப்பதற்கான தமது அரசியல் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளனர். 2009 இல் நடந்த இறுதிப்போரின்போது நடைபெற்ற தமிழின படுகொலை தமிழருக்கென தனிநாடு உருவாவது மட்டுமே அவர்கள் உயிருடன் வாழ்வதை உர்திசெய்யும் ஒரே தீர்வாகும் என்பதை தெளிவாக்கி நியாயப்படுத்தியுள்ளது. அடக்குமுறை அரசுகளான சூடானின் ஆட்சியாளருக்கும், இன்றைய ஸ்ரீ லங்காவின் ஆட்சியாளருக்கும் சீனாவே சர்வதேச பாதுகாவலார்க்க செயல்பட்டுவருகிறது. சூடானின் அரசதலைவர் பஷீர் இனப்படுகொலை குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள அதேவேளை, ஸ்ரீ லங்கா அரச தலைவர் ராஜபக்சே இனப்படுகொலை குற்றவாளியாக சில காலத்தில் அறிவிக்கப்படவுள்ளார். தென் சூடானிய மக்களுக்கும், அவர்களது சூடான் மக்கள் விடுதலை இயக்கத்திற்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும், தமிழீழ மக்களும் வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன் என்று உருத்திரகுமார் தெரிவித்துள்ளார்.