Monday, January 10, 2011

அவர் ஒன்று சொல்ல, நாம் ஒன்று நினைக்க....

தி.க. நடத்திய நாத்திக மாநாட்டில், பேரா.நாகநாதன் பேசினார். அதை முரசொலி ஏட்டில் ஜனவரி-பத்தாம் நாள் ஆறாம் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். கிறிஸ்து பிறப்பதற்கு 325 ஆண்டுகளுக்கு முன்பு, இந்திய துணைக்கண்டத்தின் வடமேற்கு பகுதியில் அலக்சாண்டர் படைஎடுத்தபோது, சமண அறிஞர்கள் அவரை புறக்கணிக்க, அதற்கான காரணம் கேட்ட அலக்சாண்டரிடம் அவர்கள், "மன்னர் அலக்சாண்டர் அவர்களே, ஒவ்வொரு மனிதனுக்கும் இந்த புவிப்பரப்பில் இருப்பதற்கு நாங்கள் நின்று கொடிருக்கின்ர இடமே போதுமானது. நீங்களும் எங்களை போன்று ஒரு மனிதர். இருப்பினும் நீங்கள் எப்போதுமே ஓய்வில்லாமல் சுற்றி சுழன்று கொண்டு இருக்கிறீர்கள்.எந்த பயனுமில்லை " என்று அவர் வெற்றி பெற்ற நிலங்கள் பற்றி கூறினார்களாம். அதுவேதான் நமக்கும் தோன்றுகிறது. கலைஞர் அவர்களே, நீங்கள் ஒரு மன்னர் போல ஆண்டுவருகிறீர்கள். நீங்கள் வாங்க குவித்த நிலங்கள், தமிழ்நாட்டில் மட்டுமின்றி, கர்நாடகாவிலும், கேரளாவிலும் மட்டுமின்றி, இலங்கை தீவிலும், மல்ய்சிய அருகிலும், மௌரீஷியாசிலும், ஏன் இருக்கின்றன. இதுதான் இப்போது மக்களது