Friday, December 30, 2011

லோக்பால் மசோதா எதை அம்பலப்படுத்தியது?

மக்களவையில் யார் எதிர்த்தாலும், எத்தனை பேர் "காணாமல்" போனாலும் நிறைவேரவைப்போம் என்ற காங்கிரசின் அழுத்தத்தை அமபலப்படுத்தியது. அதையும் தாண்டி, ராஜீவ் முயற்சித்து தோற்றது போல ராகுலும் முயற்சித்து தோற்றது "அரசியல் சாசன" அங்கீகாரத்தை லோக்பால் மசோதாவுக்கு பெற முடியவில்லை எனபதை அம்பலப்படுத்தியது. அதேபோல மாநிலங்களவையில் என்ன முயன்றாலும், காங்கிரஸ் கட்சியின் கூட்டணி கட்சிகளே "காலை"வாருவார்கள் எனபதை அமபலப்படுத்தியது.

லோகாயுக்தா என்ற மாநிலங்கள் என்ன செய்யவேண்டுமென்பதை மத்திய அதிகார குவிதல் முடிவு செய்யமுடியும் எனபதை அனைத்து மாநில கட்சிகளும் எதிர்க்கும் என்பதை அமபலப்படுத்தியது. அந்த வரிசையில் அதிமுக, பகுஜன் சமாஜ் கட்சி, சமஜ்வாதி கட்சி, ராஷ்ட்ரிய லோக்தள் கட்சி, ஆகியவற்றுடன் அய்.முகூ. அரசின் கூட்டணி கட்சிகளான மம்தாவின் திருணாமுல் காங்கிரசும், திமுகவும் சேர்ந்து கொண்டு அவற்றுடன் சீ.பி.எம். கட்சியும், பா.ஜ.க.வும்கூட இணைந்து நிற்குமென்பதை அமபலப்படுத்தியுள்ளது. திமுகவும, அதிமுகவும் ஒரே நிலை எடுத்து மாநிலங்களின் உரிமை பற்றி பேசுகின்றன என்பதை அமபலப்படுத்தியுள்ளது. மாநிலங்களின் உரிமை என்று வரும்போது மம்தாவும், சீ.பி.எம். கட்சியும் கூட சேர்ந்து நிற்குமேன்படஹியும் அமபலப்படுத்தி உள்ளது.

அதேபோல ஏகபோக மத்திய அரசின் ஒற்றையாட்சி கோட்பாட்டில் காங்கிரசும், ஆன்னா ஹசாரே யும் ஒரே இடத்தில் ஒரே அணியில், ஒரே மனப்பான்மையில் இருக்கிறார்கள் என்பதை அமபலப்படுத்தி உள்ளது. அதன் மூலம் அவர்கள் இருவரும் சேர முடியாத துருவங்கள் அல்ல என்பதை அமப்லப்படுத்தி உள்ளது. அவர்கள் இருவரும் இரு துருவம் போல ஏமாற்றி, மக்களையும் ஈடுபடுத்தி இந்த லோக்பால் சட்டத்திற்கு உரூவாக்க, ஒரு மக்கள் பங்களிப்புடன் அவர்களது தெருவிலிறங்கி போராடிய பங்களிப்புடன் . அங்கீகாரம் கிடைக்க வப்பதில்வேற்றி என்ற மிதப்பை பகிர்ந்து கொள்கிறார்கள் எனபதை அமப்ள்ளப்படுத்தி உள்ளது. அதன்மூலம் கார்பொரேட் களின் உதவியினால் தான் இந்த ஆள்வோர், மற்றும் அண்ணா வகையறா வேலைகள் நடந்தன என்பதை அம்பலப்படுத்தி உள்ளது.

இனி கார்போரேட்கள் தைரியமாக் இந்தியாவிற்குல்தங்களது மூலதனத்தை இறக்கலாம் என்றும், இந்திய மக்கள் கவலை பாட மாட்டார்கள் என்றும் அமபலப்படுத்தி உள்ளது..சட்டம் வதை விட்டது என்றும், இனி ஊழல் நடக்காது என்றும் பொதுமக்கள் தங்கள் "சொந்த காரியத்தை" பார்க்க போய் விடுவார்கள் என்றும் அமபலப்படுத்தி உள்ளது. இதற்காக தான் இத்தனை நாடகமும் அரங்கேறியது எனபதை அமப்லப்படுத்தி உள்ளது. கார்பொரேட்களால்தான் இத்தனை ஊழலும் நடந்தது என்று கார்போரேட்கள் மீது கோபம் கொடிருந்த மக்களை ஒருமாதிரி "சமாதனப்படுத்த" இந்த மசோதா, சட்டம் பற்றிய விவாதம் அகிலைந்திய அளவில் நடத்தி ஆகி விட்டது என்று கார்போரேட்கள் மகிழ்ச்சி அடைந்திருப்பதை அமபலப்படுத்தி உள்ளது.

கார்போரேட்கள் மீண்டும் இந்தியாவை கொள்ளை அடிக்க அந்நிய மூலதனத்தை உள்ளேகொன்டுவர, பொதுமக்கள் எதிர்ப்பார்களே என்பதற்காக இந்த நாடகத்தை நடத்தினர் எனபதை அமபலப்படுத்தி உள்ளது. ஒரு சட்டத்தை உருவாக்க இந்திய மக்களை ஈடுபடுத்தி ஒரு எழுச்சியை காட்டி பிறகு சட்டம் வந்தால் அந்த மக்கள் ஏமாந்து போவார்கள் என்று கார்போரேட்கள் சரியாகவே கணித்தனர் என்பதை அமபலப்படுத்திஉல்லது. எதை எடுத்தாலும் மத்திய ஒற்றையாட்சியை பலப்படுத்தத்தான் காங்கிரசும், கார்போறேட்களும் விரும்புவார்கலேனப்தை அமப்லபப்டுத்தி உள்ளது. கார்போரேட்களின் கைப்பாவைதான் அண்ணா ஹசாரேயும் எந்பதையுமமபலப்படுத்தி உள்ளது. யப்பா, இத்தனை அம்பலமா?.

Tuesday, December 27, 2011

இது என்னடா புது குழப்பம்?

இப்போது கேரளவிவாசாயிகள் ஒரு புதிய கோரிக்கையை பரிசீல்யுங்கள் என்று கூறுகிறார்களாமே? அவர்களது தலைவர்களைஎல்லாம் திட்டுகிறார்களாமே ? புதிய நை கட்ட வேண்டிய அவசியமில்லை என்று கூறுகிறார்களாமே ? பழைய முல்லை பெரியார் அணையை உடைக்க வேண்டிய அவசியமில்லை என்றும் கூறுகிறார்களாமே? அப்படியானால் என்னதான் அவர்கள் சொல்லுகிறார்கள்?

முல்லைபெரியார் அணையில் இப்போது இருக்கும் 136 அடியை 120 ஆக குறைக்க கேரள அரசு சொல்கிறதா? இந்த விவசாயிகள் அதை ஏற்று கொள்கிறார்களாம்.அதேசமயம் இப்போது நீர் வெளி செல்லும் மதகுகள் 105 ஆவது அடியில் இருக்கிறதாமே? அதை 150 வரை உயர்த்த கேட்கும் தமிழ்நாடு கேட்பது மீதி நாற்பத்தைந்து அடியில் உள்ள தண்ணீர்தானே என்று இந்த விவசாயிகள் கேட்கிறார்களாம். சரி என்று வைத்து கொண்டால் என்னதான் சொல்கிரார்கலேன்று கேட்டோம். அதற்கு "நீர் வெளி செல்லும் மதகுகளை" நாற்பத்தைந்து அடிக்கு குறைத்து விடுங்கள் சரியாக போய்விடும் என்று இவர்கள் கூறுகிறார்களாம். அப்படி செய்தால் 105 அடி நீர் இருக்கும்போதே அறுபது அடி தண்ணீர் தமிழ்நாட்டிற்கு கிடைக்கும் நேரும் கூறுகிறார்களாம். அணை பாதுகாப்பிற்கு பயப்படும் கேரளகாரர்களுக்கு பாதுகாப்பு இருக்கும் என்கிறார்களாம். இது என்ன புது குழப்பம்?

இது சாத்தியப்படுமா? நீர் அளவு ஒரு நிலை வரை இருந்தால்தானே அது மதகு மூலம் வெளியேற முடியும்? அது எப்படி நாற்பத்தைந்து அடி உயர மதகிலிருந்து வெளியே வரும்? சுத்தமாக தமிழ்நாட்டிற்கு தண்ணீர் வராமல் ஆகிவிடாதா? அல்லது இதுவும் ஒரு விவாத பொருளா? விவரம் இல்லாமலவர்கள் பேசுகிறார்களா? கேரள விவாசாயிகள் புதிய அணை டேஹ்வை இல்லை என்று கூறுவது நியாயம்தான். பழைய முல்லை பெரியாரை உடைக்க வேண்டாம் என்று கூருவதும்நியாயத்தை புரிந்ததால்தான். ஆனால் கேரள அரசியல்வாதிகளின் சதிகள் கண்டு அச்சப்பட்டு ஒரு சமர்சம்செய்ய இப்படி கூறுகிறார்களா? அது ஆபத்தானதுதானே? நமக்கு விளங்கவில்லை. எபப்டியோகுட்டையை குழப்பி மீன் பிடிக்க அரசியல்வாதிகள் கேரளாவிலும், டில்ல்யிலும் ஏராளம் என்று மட்டும் தெரிகிறது.

அரசியல் விளையாட்டுக்கு தமிழ்நாடா கிடைத்தது?

அடப்பாவிகளா? உங்க ஊர்ல தேர்தல்ல நேனேகா அதிக தொகுதில வெற்றி பெரலேனா நாங்கதான் கிடைச்சோமா? உங்களுக்குள்ள காங்கிரஸ், மார்க்சிச்டுன்னு வேறுபாடு இல்லாம "நம்பர் விளையாட்டு" விளையாடினா அதுக்கு நாங்கதான் கிடைச்சோமா? கேரள்ளவிலேருந்து வர்ற செய்திகள் இப்போ அப்படித்தான் கேட்க தூண்டுது. பிரவம் தொகுதில இடைத்தேர்தல் வருது.அதுக்காக காங்கிரசும், சிபிஎம்மும் மாறி, மாறி மக்களை தூண்டி விட்டு வாக்கு பெரமுல்லை பெரியார் பெரிதும் உதவுது என்று மட்டும்தான் நினைசசுகிட்டு இருந்தோம்.அடஹியும் தாண்டி இந்த சிபிஎம் காரங்க போயிட்டாங்கன்னு தெரியும்போது அப்பாடி பயமாத்தான் இருக்குது.

மோனி ஏதோ உமன் சாண்டிய மிரட்ட வருகிற ஜனவரி ௧௫ ஆம் தேதிக்குள் புதிய நை பற்றி முடிவு எடுக்காவிட்டால் விட்டேனா பார் என்று கூறுவதை அவருக்கு இருக்கும் ஒன்பது தொகுதியில் ஒரு தொகுதியான பிரவம் தொகுதி எம்.எல்.எ. ஜேகப் இறந்து விட்டதால் வரும் இடை தேர்தலில் வெற்றி பெறா விட்டாலும், எங்களுக்கு இன்னொரு அமைச்சர் பதவி வேண்டுமென்று சண்டை போடுகிறார் என்று மட்டும்தான் எண்ணிக் கொண்டு இருந்தோம். அங்கே அய்.யு.எம்.எல்.கட்சி 22 எம்.எல்.எ.க்களை வைத்து கொண்டு தனைகளுக்கு நன்கு அமைச்சர்கள் போதாது என்றும், ஐந்தாவது அமைச்சர் கொடுத்தால்தான் உண்டு என்றும் குன்ஜாலன்குட்டி சண்டை போடுவது ஒரு பக்கம்.இந்த மோனி தனது கேரள காங்கிரஸ் கட்சியில் நான்கு கேரள காங்கிரஸ் களை இணைத்து கொண்டு , ஊமன் சாந்திக்கு ஆதரவு கொடுத்துள்ளார். அதனால்தான் அவரது கட்சி எண்ணிக்கை ஒன்பது ஆனது. அதில் ஒருவர்தான் ஜேகப் பர்வம் தொகுதி எம்.எல்.ஏ. இறந்து விட்டார். ஜோசப் அமைச்சராக உள்ளார். அதனால்தான் அவர் பட்டினி போர் நடத்தினார்.இப்போது மோனிக்கு பதவி வெறி பிடித்து விட்டது.


அந்த பதவி வெறிக்கு "தூபம்" போட சீ.பி.எம். கட்சியின் முன்னாள் உள்துறை அமைச்சர் கொடியேறி பாலகிருஷ்ணன் முன்வதுள்ளார். அவர் மோனி கனகிராஸ் உடன் பேசி வருகிறார். மோனி கூட்டணி மாறினால் அவரை "முதல்வர்" ஆக்குயறேன் என்று கொரிஎரி ஆசை காட்டி விட்டார். அதில் அவருக்கு ஒரே கல்லில் இரண்டு மாங்காய். ஒன்று காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்து இடது சாரிகள் ஆட்சியை கொண்டுவரலாம். இன்னொன்று வி.எஸ்.அச்சுதானந்தத்தை முதல்வர் ஆகாமல் தஹ்டுத்து விடலாம்.மோனிக்கு முதல்வர் பதவி கொடுத்து விடலாம்.அதை கட்சியின் அரசியல் தலைமை குழுவும் ஏற்று கொள்ளும். ஏன் என்றால் கொடியேறி பாலகிருஷ்ணன் "பினாராய் விஜயனின்" ஆள். அதாவது வி.எஸ். இன் எதிரியான விஜயனின் ஆள்.

அதற்காகத்தான் ஊமன் சாந்திக்கு இப்படி ஒரு தலைவலியை கொடுக்கிறார் மோனி. ஏற்கனவே குடாநாடு நீர்தேக்க மதகுகளை திறந்துவிட்டதால் விவசாயம் அழிவை சந்தித்துள்ளது. நெல் விளைந்தது எல்லாம் நீரில் மூழ்கி விட்டது. ஏழு கோடி ரூபாய் நட்டம் என்று விவசாயிகள் புலம்புகிறார்கள். ஆள்வாய் மாவட்டத்தில் இந்த அழிவால் ஏழு எம்.எல்.ஏ.களாக இருக்கும் கிருத்துவர்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். அதனால் கிறித்துவர் வாக்குகள் பிரவம் தொகுதியில் காங்கிரஸ் கூட்டணிக்கு கிடைக்காது.அத்தகைய சூழலில்தான் மோனி கொடிஎரியுடன் பேசி,முதல்வராக ஆவதற்கு சதி செய்கிறார். அதற்கு ஊமன் சாந்திக்கு நெருக்கடி கொடுக்க முல்லை பெரியாரை பயன்படுத்துகிறார். அமைச்சர் ஜோசப் "குளோபல் கம்பனியிடம்" கொடேசன் வாங்கு என்று நெருக்கடி கொடுக்கிறார்.இவர்களது தேர்தல் அரசியல் விளையாட்டிற்கு தமிழ்நாடு பலியாக வேண்டுமா?. .

Monday, December 26, 2011

மகப்பேறு உதவி கிடைக்க எட்டு மாதம் காணாதா?

சென்ற வருடம் எங்களுக்கு மகப்பேறு கிடைத்தது. முதல்வர் பன்னிரெண்டாயிரம் ரூபாய் என உதவி தொகையை உயர்த்தியதாக செய்தி கிடைத்தது. ஆனா அந்த உதவிதான் கிடைக்கவில்லை. இது தமிழ்நாஎன்கும் மகப்பேறு பெற்ற தாய்மார்களின் குரல்.முந்தைய முதல்வர் அறிவித்திருந்த தொகையை விட, இந்த முதல்வர் அதிக தொகையை அறிவித்திருக்கிறாரே? என்று நாம் கேட்டால், அறிவித்து என்னய்யா பிரயோசனம்? என்று பதில் வருகிறது. மே மாதம் மகப்பேறு பெற்றவர்களுக்கு கூட இன்னும் பணம் வந்து சேரலையே? என்கிறார்கள்.ஏன் இந்த வில்லங்கம்? என்று ஆராய்ந்தோம்.

டாக்டர் முத்துலட்சுமி மகப்பேறு உதவி திட்டம் இனி 12000 ௦௦௦ ரூபாயை கொடுக்கும் என்று முதல்வர் அறிவித்தார்.அந்த திட்டத்தில் பயன்பெறுவோர் பற்றிய குறிப்புகளை இணைய தளத்தில் போட்டுவிடவேண்டும் என்றும் முதல்வர் உத்திரவிட்டார். அந்த பட்டியலில் உதவி பெரும் "தாய் மற்றும் சேய்" ஆகியோரின் நிலை பற்றி எழுத வேண்டும். பிரசவம் நடந்த தேதி மற்றும் விவரங்களையும் எழுத வேண்டும். அவர்களுக்கு போடப்பட்ட "தடுப்பூசி" பற்றியும் எழுத வேண்டும். மொத்தத்தில் "நூற்றி எழுபது" கேள்விகளுக்கு பதில் எழுத வேண்டும்.இந்த நடைமுறை நல்லதுதான். ஆனால் அதை செய்வதற்கான ஏற்பாடு என்ன என்ற கேள்வி எழுகிறது.

மேற்கண்ட விவரங்களை எழுத "ஆரம்ப சுகாதார நிலையங்களில்" உள்ள கணினிகளை பயன்படுத்த வேண்டும். அங்குள்ள கணினி, எந்த நிலையில் உள்ளது? ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும் ஒரு கணினிதான் இருக்கிறது. அதில்தான் கிராம சுகாதார செவிலியர்களும், சுகாதார ஆய்வாளர்களும், மற்றும் அங்கு பணியாற்றும் பிற ஊழியர்களும் தங்கள் பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும். அது சாத்தியமா? அதனால்தான் அத்தனை விவரங்களையு போட முடியாத நிலையில் "மகப்பேறு தாய்மார்கள்" உதவி கிடைக்கப்பெறாமல் தவிக்கின்றனர். தமிழ்நாட்டில் 1510 ஆரம்ப சுகாதார நிலையங்கள் இருகின்றன.அவற்றிற்கு ஒவ்வொரு நிலையத்திற்கும் "ஒரு கணினி இயக்குபவரை" வேளைக்கு எடுத்தால் அவரே அனைத்து ஊழியர்களின் பணிகளையும் கவனித்து தினசரி இணையத்தில் ஏற்றிவிட மாட்டாரா? இதை செய்வதற்கு அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் ஒரு கணினி இயக்குனரை வேளைக்கு மரத்த ஏன் இந்த "சுகாதார செயலாளர்" ஆலோசனை கூறவில்லை?


யாரிடமும் எதுவும் ஆலோசனை கேட்காமல் தானாகவே செய்யும் குணம் என்ற மாபெரும் கெட்டிகாரத்தனம் படைத்தவர் ஏன் இதை சிந்திக்க வில்லை? இப்போது எட்டு மாதங்களா முத்துலட்சுமி மகப்பேறு திட்ட உதவிகள் பொய் சேராமல் அரசாங்கத்திற்கு எவ்வளவு கேட்ட பெயர்? ஸ்கேன் எனப்படும் நிழல் படம் எடுக்க தனியாரிடம் எந்த சுகாதார ஊழியரும் செல்ல கூடாது என்று ஒரு உத்தரவு இருக்கிறது? அரசாங்க மருத்துவமனையில் உள்ள ஸ்கேன் அனேகமாக வேலை செய்வதில்லை. அப்படியானால் ஊழியர்கள் என்ன செய்வார்கள்? அவற்றை வேலை செய்யவைக்க என்ன செய்யப் போகிறார்கள்? இவையெல்லாம் சேர்ந்து தானே அரசாங்க அதிகாரிகளின் அன்றாட கடமை? அதைவிட அந்த கிராம சுகாதார செவிலியர்கள் வேலை செய்வது, "துணை சுகாதார் நிலையங்களில்". அதாவது ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு கீழே உள்ள துணை நிலையங்களில்.அங்கு இத்தகைய வசதிகள் கூட கிடையாது. அப்படியானால் அவர்கள் என்ன செய்வார்கள்?

இத்தகைய கேள்விகளுக்கு சுகாதார அமைச்சர் விடை தேடினால்தான் அரசாங்கம் கிராம மக்களிடம் நற்பெயர் பெற முடியும்.

கொறடாவுடன், இன்னொரு கொறடாவும் போக கூடாதா?

இந்தியாவின் தலைமை அமைச்சர் சென்னை வருகிறார். அதிக பிரயாசைபட்டு, தலைமை அமைச்சர் அலுவலகம் தமிழ்நாட்டு முதல்வரின் சந்திப்பை உறுதி செய்தது. ஆனால் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உயள்ளவர்கள் போட்டி போட்டு கொண்டு அவரை சந்திக்கும் நிகழ்வுகள் நடந்தேறின. டி.ஆர்.பாலு பிரதமரை சால்வை போர்த்தி விமான நிலையத்திலேயே வரவேற்பதும், கூட்டணி கட்சியின் நாடாளுமன்ற கட்சி தலைவர் வரவேற்காமல் யார் வரவேற்பார்கள் என்று கூறி விடலாம். அமைச்சர் அழகிரி பொய் சாலவை போடுவதை அவரது மத்திய அமைச்சர் அழகிரி போகாவிட்டால் யார் போவார்கள் என்றும் கூறிவிடலாம். ஆனால் எப்படி மத்திய அமைச்சரவையிலிருந்து அகற்றப்பட்டுள்ள, சீ.பி.அய். சோதனையை எதிர்கொண்ட, உள்ளேயா, வெளியேயா என்று இன்னமும் முடிவு செய்யப்படாத தயாநிதி பொய் சாலவை போர்த்தினார் என்ற கேள்விக்கு சரியாக பதில் சொல்ல முடியவில்லை.

அதற்குள் கலையில் கலைஞர் சென்று பார்க்கும்போது அதேபோல கேள்வி எழாமல் இருக்க ஒரு விளக்கமும் வந்துள்ளது. அதாவது சிறையில் இருந்து மீண்ட கனிமொழி உடன் சென்று பார்ஹ்த்ததைதான் கூறுகிறோம். ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஒரு அங்கமான திமுக வின் மக்களவை கொறடா டி.கே.எஸ்.இளங்கோவன் திமுக தலைவருடன் பிரதமரை சென்று காணும்போது, மாநிலங்களவையின் கொறடா வன கனிமொழி உடன் செல்வது ஒரு முறைதானே? இந்த பதில் நல்லா இருக்குதா?,

Sunday, December 25, 2011

கிரிஜா வைத்தியநாதன் எனும் அதிகார வர்க்கம்

தமிழ்நாடு அரசாங்கத்தின் சுகாதாரத்துறை பிரபலம் என்கிறார்கள். அதில் இயற்றப்பட்ட சட்டம் என்ன என்று மகாராஷ்டிரா, கர்நாடகா,குஜராத் ஆகிய மாநிலங்கள் உட்பட கேட்டு வருகிறார்களாம். ஆங்கிலேயன் காலத்து சட்டத்தையே இன்னமும் சுகாதாரத்துறை பேணி வருவதால், தமிழாட்டின் வளர்ச்சி நாடெங்கும் போற்றப்படுகிறது. "பொது சுகாதார துறை" என்ற டி.பி.எச். அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. அதில் வருகின்ற இயக்குனர்கள் எப்போதுமே அதன் அடியாழத்தை புரிந்து அடிமட்ட ஊழியர்களை ஊக்குவித்தல் என்ற பணியை செய்வதை விட, உலக வங்கி கூறுகின்ற திட்டங்களை அமுல் படுத்துவதில் கவனமாக இருப்பார்கள்.அப்போதுதான் உலக வங்கி உதவியுடன் இயங்கும்"தேசிய மருத்துவ சுகாதார இயக்கம்"என்ற பெயரில்வரும் வெளிநாட்டு கொடிகளை கையாளும் பதவி கிடைக்கும் என்ற எண்ணம்.

கடந்த இரண்டு நாட்களில் இந்த சுகாதார துறை பற்றி வெற்றி செய்திகளை மட்டுமே அதன் செயலாளர் கொடுத்து வருகிறார். இந்த கிரிஜா வைத்தியநாதன் ஒய்.ஜி.பார்த்தசாரதி குடும்பத்திலிருந்து வந்தவர். அதனால் அவருக்கு அடிப்படை மக்களின் பழக்க வழக்கங்கள் தெரியாமலிருக்கலாம். அவர் அதிகம் படித்தவர்கள் மத்தியில் வளர்ந்து வந்ததால், வேலையை செய்வதை விட, அடஹிப்பற்றி பேச அதிகமான நேரம்வேண்டும் என்று நினைக்கலாம். தான் அதிகம் விஷயம் டேஹ்ரின்தவர் என்ற கருத்து அந்த பின்னையிளிருந்து வந்ததால் இருக்கலாம். அதனாலேயே துறை அதிகாரிகளை கூட்டி, கூட்டம் போட்டு தான் அதில் பேசிவிட்டால் வெற்றி கிடைக்கும் என்று நம்பலாம். ஆனால் அவை எல்லாமே அடிப்படை ஊழியகளையும் மகளிடம் அவர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதையும் பொறுத்தது என்பது இந்த ஆமாவிற்கு தெரிய வாய்ப்பு இல்லை.


அதனால் அவர் கிராம சுகாதார செவிலியர்களை தாங்கள் எடுத்த புள்ளிவிவரங்களை எல்லாம் உடனுக்குடன் இணைய தளத்தில் ஏற்ற சொல்லலி கட்டளை இட்டுவிட்டார். ஆனால் அந்த கிராமப்புற செவிலியர்கள், தாங்கள் வேலை செய்யும் இடங்களில் எந்த ஒரு கணினி வசதியும் இல்லாதபோது, அருகே உள்ள பெரிய கிராமத்திற்கோ, அல்லது நகரத்திற்கோ சென்றுதான் கணினி கடை டேஹ்டி அதை இணையதளத்தில் அனுப்பமுடியும்.அதுவும் சம்பந்தப்பட்ட செவிலியருக்கு கணினி பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்.அப்படி வெளியே வருவதனால், அவர்களது பகுதியில் உள்ள "தாய் சேய் நல பணியையோ, பிரவச பணியையோ,தடுப்பூசி பணியையோ, அவர்கள் கவனிக்க முடியாது. அந்த கிராம சுகாதார செவிலியர்கள்தான் ஒரு அரசாங்கத்தின் முக்கிய முதுகெலும்பான . அவர்களை வேலை செய்யவிடாமல் கணினி மயமாக்கம் என்று மேட்டுக்குடி பாணியில் கிரிஜா வைத்தியநாதன் செயலப்டுவதால் என்ன பயன்?


கிராம சுகாதார செவிலியர்களை மதித்து பணி செய்பவர்களே அரசாங்க திட்டங்களை மக்கள் மத்தியிலேடுத்ஹ்டு செல்ல முடியும். அதிகாரிகளுடன், அன்றாடம் மனிக்கனக்கில்கூட்டம் நடத்தி அறிவுரை கூறிவிட்டால், எல்லாமேனடந்துவிடும் என்று எண்ணும் கிரிஜாவிற்கு நாமெதை கூறினாலும் விளங்குமா? அது அவர் வந்த அல்லது வளர்க்கப்பட்ட முறையில்கத்தார் அனுபவங்கள். ஆகவே அது எளிதில் அவரை விட்டு நீங்காது. இப்படி அதிகாரிகளை அவித்துக் கொண்டு எப்படி ஏழை, எளிய கிராமப்புற மக்களுக்கு சேவை செய்ய முடியும் என்று யாரும் தைரியமகா கேட்கவில்லை என்பதாலெல்லாம் ஓடுகிறது.

காந்தி படத்தை இப்படி தொடங்கு....

நேற்று அண்ணாசாலை நூல்நிலைய கட்டிட அரங்கில் "எஸ்.ராமகிருஷ்ணனின் ஐந்து நூல்கள்" வெளியீடு நடந்தது. அதில் நிறைவில் இலக்கிய பேருரை நிகழ்த்தினார் எஸ்.ரா. அந்த உரைக்கு தலைப்பு, "மகாத்மாகாந்தி எனும் எழுத்தாளர்". காந்தி திரைப்படம் அவர் சுடப்பட்டதிளிருந்து தொடங்குகிறது. இது கோட்சே பாணி. அதாவது படம் செய்த இங்கிலாந்து நாட்டுகாரனுக்கு கோட்சே பாணிதான் பிடித்ததோ என்று நாம் கேட்டு கொண்டோம். ஆனால் காந்தி பாணி என்று எஸ்.ரா. ஒன்றை கூறினார். அதுதான் புதியதாகவும், ஆச்சர்யமனதாகவும் இருந்தது. எழுத்தாளர் திரைப்பட இயக்குனருக்கு ஒரு வித்தியாசமான அறிமுகத்தை காந்தி பற்றி கொடுத்தார்.


சுதந்திரம் அறிவிக்கப்படும் நாள் இரண்டு நாட்களில் வரும் நேரம். நேரு டில்லியில் இருக்கிறார். அதற்கான ஏற்பாட்டில் இருக்கிறார். காந்தி கொல்கத்தாவில் இருக்கிறார். கொல்கத்தாவில் அப்போது இன மோதல் நடந்து வருகிறது. அதற்கு மத்தியில் அது பற்றி கவலைப்பட்டுக் கொண்டு காந்தி இருக்கிறார். சாந்தியையும், சமாதானத்தையும் ஏற்படுத்த அந்த மக்கள் மத்தியில் காந்தி வலம் வருகிறார்."சாந்தியும், சமாதானமும் இப்போது முஸ்லிம்களின் கூட்டத்தில் மட்டுமே கேட்கிறோம்" நேரு ஒரு மனிதரிடம் ஒரு கடிதத்தை காந்திக்கு கொடுத்து விடுகிறார். காந்தி இரவு ஒன்பது மணிக்கு படுக்கைக்கு போகும் பழக்கம் கொண்டவர். காலையில் நாலு மணிக்கு எழும்பும் பழக்கமும் கொண்டவர். அந்த கலவர பூமியில் இரண்டரை மணிக்கே எழுந்து விடுகிறார் என்றும் கூறுவார்கள். கடிதம் கொண்டு வந்த நபரோ இரவில் போய் கல்கத்தா சேருகிறார். நள்ளிரவிலும் காந்தியை எழுப்பி கடிதம் கொடுக்கிறார்.

கடிதத்தை பிரிக்காமலே வந்தவர் சாப்பிட்டாரா என்று காந்தி வினவுகிறார். அவரை முதலில் சாப்பிட சொல்கிறார்.அதன்பிறகு கடிதத்தை பிரிக்கிறார். அதில் இந்தியா சுதந்திரம் அடையும் நாளில் நீங்கள் டில்லியில் இருந்து நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்த வேண்டும் என்று நேரு கேட்டுக் கொண்டுள்ளார். காந்தி அதை ஒப்புக்கொள்ளவில்லை கல்கத்தா இன மோதலில் ரத்தத்தில் மிதக்கும்போது டில்லி வார முடியாது என்கிறார். கடிதம் கொண்டுவந்தவருடன் மரத்தின் அடியில் காந்தி நிற்கிறார். ஒரு காய்ந்த இல்லை வந்தவரின் கையில் விழுகிறது. அதுதான் சுத்திர இந்தியாவிற்கு எனது பரிசு என்கிறார் காந்தி. அதை கேட்டு வந்தவர் கண்களில் கண்ணீர். அந்த கண்ணீர் துளிகள் அந்த காய்ந்த இலையில் விழுகின்றன. இந்த கண்ணீருடன் இணைந்த காய்ந்த இலைதான் டில்லியில் இருக்கும் நேருவிற்கு நான் கொடுத்ததாக நேநேகல்கொடுக்க வேண்டிய இந்திய சுதந்திரத்திற்கான பரிசு என்று காந்தி கூறுகிறார். இவ்வாறு ஒரு துளியை எஸ்.ரா. கூற வந்திருந்தவர்கள் எல்லாம் வாய் பிளந்து நின்றோம்.இதுதான் எழுத்தாளரின் மாண்பு.


உண்மையா,பொய்யா என்று நினைத்து பார்க்க கூட முடியாத ஒரு நிகழ்வை காந்தி பற்றி எழுதி வைத்திருப்பதனால் எஸ்.ரா. கூற முடிகிறது. நேரு என்பவர் வெறும் அரசியல் அதிகாரத்தை பற்றி மட்டுமே சிந்திப்பவர் என்றும், காந்திதான் இந்த நாட்டின் அடிப்படை மக்களின் வாழ்நிலை பற்றி சிந்திப்பவர் என்றும், நாம் நினைக்க எத்தனையோ நிகழ்வுகளை அங்கே எஸ்.ரா. சுட்டி காட்டினார். எஸ்.ரா. கூறும்போது நன்றாகத்தான் இருக்கிறது. நமக்கு பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகிய மூவரின் தூக்கை நீக்க இரவின்பிரபுவிடம் சொல்ல சொல்லி நேரு மன்றாடியதையும், அதற்கு காந்தி என்ற அந்த "தூய்மையான " உருவம் அமைதியாக ராட்டை சுற்றிக் கொண்டு இருந்ததையும், அதனாலே அந்த மூவர் தூக்கு நிறைவேறியதையும் இன்றைய மூவர் தூக்கு பற்றியே நினைத்துக் கொண்டு இருக்கும் தமிழன் எண்ணிப்பார்த்துவிட்டால், அதற்கு எழுத்தாளர் எஸ்.ரா. என்ன செய்ய முடியும்? ஒன்றை பேசும்போது பிறிதொன்றை ஏன் இழுக்கிறீர்கள் என்றா கூறமுடியும்?


அம்பேத்கர் படம் பார்த்த உங்கள் அனுபவத்தை இந்த இடத்தில் எண்ணிப்பார்த்து, காந்தி அம்பேத்கரிடம் "தலித் இட ஒதுக்கீடு" தனிவாக்காளர் தொகுதியாக வரக்கூடாது என்ற முன்வைப்போடு, வருமானால் தான் உயிரை விடுவேன் என்று எரவாடா சிறையில் பட்டினி கிடந்ததை நினைத்து பார்த்து பதிலடி சிந்தனைக்கு சென்று விடாதீர்கள். அது உங்களை காந்தி ஒரு ஆதிக்கசாதிகளின் நலன் ஆதரிப்பாளர் என்று சிந்திக்க தூண்டி விடும். அது காந்தியை பார்ப்பனிய நஞ்சு என்று நீங்கள் எண்ண வைத்து விடும்.அது எஸ்.ரா. கூற முனைந்த காந்தி என்ற உருவத்தை குலைப்பதில் கொண்டுபோய் விட்டுவிடும்.உங்களால் எஸ்.ரா கூற முனைந்த காந்தியை கண்டுபிடிக்கவே முடியாமல் போய்விடும். எஸ்.ரா. இந்தியாவின் எளிய மக்களை பற்றியே காந்தி சிந்தித்தார் என்பதை உங்களுக்கு சொல்ல வந்துள்ளார். டில்லியில் அதிகாரத்திலுள்ளவர்கள் அரசியல் அதிகாரம் ப்ற்றியே எண்ணும்போதும், காந்தி எளிய மக்கள், மத நல்லிணக்கம் ஆகிய கோட்பாடுகளை உயர்த்தி பிடித்ததை கூற முனைந்துள்ளார். அது இன்றைய இந்தியாவின் இதய பகுதியில் உள்ள பழங்குடிகள் பற்றிய எண்ணத்தை நமக்கு கொடுவர வேண்டும். காந்தி இருந்தால் இது நடக்குமா என்று நாம் எண்ண வேண்டும்.


காந்தியின் முக்கிய முடிவுகள் தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டவை என்பதையும் , எஸ்.ரா சுட்டினார்.மதுரையில் காந்தி தனது உடம்பை எளிய தோற்றத்திற்கு மாற்றியதை குறிப்ப்பிட்டார். . டால்ஸ்டாய் எழுத்துகளில் காந்தி கண்ட உண்மைகளை விளக்கினார். மறுபிறவி பற்றி மூடநம்பிக்கை அற்ற டால்ஸ்டாயின் எழுத்துகளை, காந்தி எப்படி மாற்றி, இந்தியாவின் மூட நம்பிக்கைகளிலும் சார்ந்து நின்று நமது மக்கள் நல்ல சிந்தனைகளை கொள்கிறார்கள் என்று டால்ஸ்டாயையே காந்தி பின்வாங்க வைத்தார் எனபதையும் மகிழ்ச்சியோடு எஸ்.ரா. கோடிட்டு காட்டினார். அதனால் இவர்களை எல்லாம் நீங்கள் மூட நம்பிக்கை வாதிகள் என்று எண்ண கூடாது. மூட நம்பிக்கையாக இருந்தாலும் அடிப்படை மக்கள் சார்ந்து சிந்திப்பவர்கள் என்று எண்ணி பெருமைப்பட வேண்டும்.எங்கிருந்து நீதி பற்றி அறிந்தீர்கள் என்று காந்தி டால்ஸ்டாய் இடம் கேட்டபோது, அவர் தமிழிலுள்ள "திருக்குறளில்" இருந்து என்று கூறியதை எஸ்.ரா சுட்டும்போது நமது மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.


எஸ்.ராவின்"புத்தனாவது சுலபம்" என்ற புத்தகத்தை பற்றி பர்வீன் சுல்தான் பேசினார். பெண்களை எப்படி அன்று முதல் இன்று வரை இழிவாக நடத்துகிறர்கள் என்பதை எஸ்.ரா அதில் கூறுவதாக தனது விளக்கங்களை அவர் கூறும்போது ஒரு புதிய தோற்றம் அந்த புத்தகத்திற்கே கிடைத்தது. அப்பா எப்படி மகனை பார்கிறார் என்று பல உதாரணங்களுடன் பர்வீன் விளக்கும்போது புத்தகம் பற்றி "சுவை" ஏறிவிட்டது. நகைச்சுவையுடன் பர்வீன் பேசுவார் என்ற காரணமும், அவரை கூப்பிட கூடுதலாக காரணமோ என்று எண்ண தோன்றியது. பாலகிருஷ்ணன் அய்.ஏ.எஸ். அனுபவித்து பேசினார். அவரது வீட்டு விவகாரங்கில் சிங்கபூர் மாப்பிள்ளைக்கு " அசைவ உணவு" தயாரித்து கொண்டுபோனதை நமது நாக்கு ஊற, சொல்லி தீர்த்தார். "கூழங்கர்களை பாடவைத்து" எப்படி எஸ்.ரா எழுதினார் என்று கபிலன் வைரமுத்து கூறி தனது பேச்சு திறமைக்கு ஒரு பாராட்டை பெற்று கொண்டார். டாக்டர் ராமானுஜம் "பேசி கடந்த தூரம்" புத்தகம் பற்றியும், பேராசிரியர் ராமகுருனாதன் "எனதருமை டால்ஸ்டாய்" பற்றியும் புத்தக விமர்சம் கூறினார்கள்.மாடசாமியும் தனது பங்கிற்கு "எஸ்.ராவின் எழுத்துலகம்" பற்றி பேசினார். ராமனுஜம் திருநெல்வேலி ராயல் சினிமா கொட்டகையிலிருந்து பாளையம்கோட்டை மருத்துவகல்லூரி விடுதிக்கு நடந்து நள்ளிரவில் சென்றதை சொல்லும்போது கணக்கு பார்த்து ரசிக்க முடிந்தது.

எப்படியோ இந்த கூட்டத்தில் தலைமை தாங்கியவர் சென்ற வாரம் மாலன் செய்தது போல தனது சொந்த "விருப்பு, வெறுப்பை" காட்டி வெளியிடும் புத்தகத்தை பற்றி குறைகளை கூறி அசிங்க படுத்தவில்லை. அது சென்ற வார " உயிர்மை" என்று சொல்லிவிடலாமா? அல்லது நீங்கள் கண்ட சென்ற ஆட்சியின் உயிர்மை வேறு, இப்போது வேறு என்று கூறி தப்பிவிடலாமா?

Friday, December 23, 2011

இளவரசி குடும்பத்திற்கு மன்னிப்பா?

சசிகலாவின் அண்ணி என்று ஊர் அறிந்த இளவரசி எப்போதுமே சசிகலாவிடமிருந்து விளகிநிற்பவர் என்பது போன்ற ஒரு தோற்றத்தை காட்டி வந்தார் அல்லது சிலரால் அப்படி காட்டப்பட்டது. எல்லாவற்றிற்குமே காரணம் இல்லாமலா இருக்கும்?. இராமாயண காவியத்தில் ஜவகர்லால்நேரு எழுதியது போல,வட இந்திய மன்னர், தென்னிந்திய மன்னரை போர் தொடுத்த கதை என்பதில் தோன்றும் தென்னிந்திய மன்னன் தமிழ்மன்னன். அவனது பெயரை தாங்கினால் சரியாகிவிடுமா என்று இப்போது காவல்துறை அதிகாரிகள் கேட்கிறார்கள். உள்ளே இருக்கும்போது செய்த அட்டூழியங்கள், இப்போது வெளியே வந்த பிறகு வணடவாளம் ஏறும் அல்லவா? அதில் மாட்டி ஒருவர் அறுபது கோடி என்று கூற, ஒருவர் நூற்று ஐம்பது என்று கூற உள்ளே இருப்பதாக்க கூறுபவர் நானூறு கோடி எடுக்கப்பட்டது என்கிறார், எப்படியோ அந்த பெண்களை ஒடுக்கியதும் வெளிவருகிறது இப்போது. ஆனால் நெஞ்சு வலி என்று பொய்கூறி அந்த மயிலாப்பூர் கிறித்துவ மருத்துவமனையில் படுத்து விட்டாரே?

சரி.அப்படியானால் இளவரசி மீது எந்த தவறுமில்லை என்று கூறிய வாரம் இருமுறை ஏடு வந்து, உடனேயே அவரது சம்பந்தி நீக்கப்பட வேண்டுமா? நினைவு படுத்தி விட்டுட்டீங்களே அய்யா? என்று முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு கேட்கலாம்.ஏன் என்றால் அவர்தானே அவரது தாயார் மறைந்தபோது, அடக்கம் எல்லாம் கவனித்தவர். எதற்காக? அவர்தானே அந்த ஐந்து ஆண்டு ஆட்சியில் மணல் வணிகத்தில் பங்காளி? இப்படி இருந்தால் ஆட்சி மாறி என்ன பயன்? அதனால்தான் இந்த நீக்கங்கள்.ஓகோ? அந்த காட்சி ஊடகத்திலும் அப்படியே. இன்னும் எங்கெங்கு எத்தனை பேர் பதுங்கி இருக்கிறார்கள் என்று யாருக்கு தெரியும்?

சீ.பி.அய். விசாரனைக்கு பரமகுடி துப்பாக்கிசூடு

இன்று காலை மதுரை உயர்நீதிமன்றம் பரமக்குடி துப்பாக்கி சூடு விசாரணையை சீ.பி.அய். விசாரணைக்கு உத்தரவிட்டது. இது துப்பாக்கி சூடு நடந்த செப்டம்பர் ௧௪ ஆம் நாள் கழிந்த இரண்டே நாட்களில் வழக்கறிஞர் ரத்தினம் போட்ட வழக்குடன், புதிய தமிழகம் வழக்கறிஞர் பாஸ்கர் சேர்ந்துகொண்ட பிறகு, பலரும்செர்ந்து, கடைச்யாக இரண்டு நாட்களுக்கு முன்பு திருமாவளவன் எம்.பி.யும சேர்ந்து போட்ட வழக்கின் தீர்பாகைன்று வெளிவந்துள்ளது. அதனால் தமிழக அரசு அறிவித்த செயல்படாமல்திரும்பி வந்த சம்பத் ஐயர் விசாரணை இனி அந்த மக்களைகொடுமை படுத்த முயலாது என்று நம்பலாம். ஆனால் சீ.பி.அய். இந்த துப்பாக்கி சூட்டின் பின்புற உண்மைகளைவெளியே கொண்டு வருமா?

நாம் கொண்டுவரூவோமா? கொடியங்குளம் கொடூரத்தை அரங்கேற்றிய ஜெ ஆட்சியில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சி தலைவர் பன்னீர்செல்வம் அய்.ஏ.எஸ். செய்த திட்டமிட்ட வேலை இப்போது நினைவில் கொள்ளதக்கது.1995 ஆம் அண்டு ஜெ முழுமையாக சசிகலாவசமாட்சியின் பெரும்பொறுப்பை கொடுத்து விட்டு வேடிக்கை பார்த்து ரசித்து வந்த காலம். சிகளா வீட்டுகாரர் ம.நடராசன் தனது ஆட்களை எங்கணும் மாநிலமெங்கும் அமர்த்தி,ஆட்சியை ஊடகவியலாலர்களிடமிருந்து காப்பாற்ற பிரயாசை செய்து வந்த நேரம். ஐந்து ஆண்டுகளும் அடிக்க வேண்டிய கொள்ளைகளை அடித்து குவித்த அந்த கும்பல் ஆட்சியின் இறுதி நேரத்திலும் தங்களது "சாதி வெறியை" தணிக்காமல் அராஜகம் செய்துவந்தனர். அதை கிழித்த நக்கீரன் எட்டை, அதன் ஆயரியரை வழக்கு மேல் வழக்கு போட்டது மட்டுமின்றி, ஒல்லேர்பாடு செய்தனர் என்பது ஒரு சிறிய கதை. நக்கீரன் அச்சகத்தார் கணேசன் அந்த தாக்குதலில் பலியானது பழைய கதை. எல்லாவற்றிலும் நடராஜனின் ஆதிக்கம்.


நடராஜனுடன் அண்ணாமலை பலகலை கழகத்தில் படிக்கும்போதே இந்தி எதிர்ப்பு தியாகி ராஜேந்திரனுக்கு சிலை வைக்க அவர்கள் இருவரும் சேர்த்த வசூல்கணக்கு இன்னமும் மாணவர்களுக்கு தெரியவில்லை. அந்த பண்நீர்செல்வம்தான் தூததுகுடி மாவட்ட ஆட்சி தலைவராக வந்து கொடியன்குலம் கிராமததிற்கு சென்றார். ஆடுய்தப்படையுடன் சென்ற பன்னீர்செல்வம், என்கல்தஞ்சையில் குடிசையில் வாழும் பள்ளர், பறையரின்கேகான்கிரீத் வீடுகளில் எப்படி வாழ்கிறார்கள் எனு கேட்டு அந்த வீடுகளை தகர்க்கசொன்னார் எனபதே பழங்கதை. அதே பன்னேர்செல்வம் இப்போது ஆட்சிக்கு ஜெ வந்த உடனே "சிற்ப்பு பணி அதிகாரி" ஆக நியமிக்கப்பட்டார். அதுவும் அவரது ஒய்வு காலத்தில் விடுவாரா அந்த சாதி வெறியர்?


ஏற்கனவே புதிய தமழகத்துடன் அதிமுக கூட்டணி வைத்து அவர்களுக்கும் அங்கீகாரம் கொடுத்ததை கண்டு கொதித்துபோனவர் இந்த பன்னீர்செல்வம். அதுமட்டுமின்றி தேவர் குரு பூசைக்கு சமமாக இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை ஆக்குகிரார்களே என்று அவ்ருத்தப்பட்டு பாவம் சுமந்தவர்தான் இந்த பன்னீர்செல்வம். கூட்டம்கூடும் அந்த நாளை ஒரு சாவு ஓல நாளாக ஆக்கவேண்டும் என்று திட்டமிட்டார். வசமாக் கிடைத்து விடுதலையாகி வெளியே வந்த ஜான் பாண்டியனும், கிருஷ்ணசாமியும் வெவேறு முகம் வைத்து கொண்டு தேவேந்திரர மத்தியில் உள்ள வழமையான விவாசாய குணத்துடன் ஒத்து போகவில்லை என்ற செய்தி. அதை பயன்படுத்தலாம் என்று எண்ணி அவர்களிருவர் குழுவினருக்கும்மோதல் அவரும் என்று கிளப்பி விட்டவர் இந்த பன்னீர்செல்வம்.


தலைமை செயலாளருக்கு சமமாக அல்லது கூடுதலாக அதிகாரம் அப்டித்த இந்த போருப்பைவாங்கி வைத்திருப்பதால், அதை அவித்து ஏற்கனவே அந்த சாதி மீது கோபம் உள்ள ராஜெச்தாஸ், சந்தீப் மிட்டல், செந்தில்வேலன் என்ற அதிகாரிகளை பயன்படுத்த ஏற்பாடு செய்தார் என்று கூறுகிறார்கள். அதனால்தான் குறைவான கூட்டத்தை தடியடி மூலம் கலைக்காமல் துப்பாக்கி இவைகளை பயன்படுத்தி நன்கு உயிர்களையுமடித்து கொன்று இரண்டு உயிர்களையும் கொள்ள முடிந்தது. அதைபாடிர்யா சட்டமன்ற பெச்சில்முதலவ்ருக்கு அது ஒரு இன மோதல் என்று இல்லாத ஒரு செய்தியை உருவாக்கி எழுதி கொடுத்ததுமிதே மனிதர்தான் என்கிறார்கள்.

அந்த மனிதர் பன்னீர்செல்வம் இருபது நாட்களுக்கு முன்னாலக்ற்றப்படும் சூழல் வந்தது. அதே சிறப்பு பணி அதிகாரியாக வருவதற்கு அமெரிக்காவில் இருந்து எம்ஜிஆர் விசுவாசி பிச்சாண்டி அய்.ஏ.எஸ். வரவழைக்கப்பட்டார். அவர் கொடுத்த ஆலோசனையில், பரமக்குடி துப்பாக்கி சூட்டில் இறந்த ஆறு பெற்குட்ம்பத்திற்கும், கூடுதலாக் நான்கு லட்சமும், வீட்டிற்கு ஒருவருக்கு அரசு வேலையும்முதல்வரால் அறிவிக்கப்பட்டது. இது பதினைந்து நாட்கள் முன்னாள் நடந்தது. அதுதான் பண்நீர்செலவ்திற்கு கொடுக்கப்பட்ட பதிலடி என்று கூறினார்கள்.ஆனால் இந்த அரசியல் சதி கதையை எந்த விசாரணையாவது வெளியே கொண்டு வருமா?.

Thursday, December 22, 2011

கிஷன்ஜி கொல்லப்பட்டது பற்றிய உண்மைகள்

மாவோவாத புரட்சிகர இயக்கத்தின் அரசியல்பிரிவு தலைவர்களில் ஒருவரான கிஷன்ஜி என்ற மல்லேசுலு கோடீஸ்வர ராவ் கொலை செய்யப்பட்டார் என்ற செய்தி அனைவரையும் கடந்த நவம்பர் மாதம் 24 ஆம் நாள் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அதனால்தானே தருமபுரி மாவட்ட பார்த்திபன் தோழர் கொல்லப்பட்டார் என்று தமிழ்நாட்டு தோழர்கள் வினவினார்கள். பார்த்திபன் சில ஆண்டுகளுக்கு முன்னாள் கொல்லப்பட்டது, அடஹ்ர்கும் முன்பு தோழர் ரவீந்திரனை தர்மபுரியில் "மோதல் சாவு" என்ற பெயரில் காவலர்கள் கொன்றதை எதிர்த்து வழக்கு போட்டு காவல்துறைக்கு நெருக்கடியை ஏற்ட்படுத்தியதால் என்று அறியப்பட்டது. அவ்வாறு தமிழ்நாட்டில் "மோதல் துப்பாக்கி சண்டை" என்ற பெயரில் பல புரட்சியாளர்களையும், ரவுடிகளையும் காவல்துறை சென்ற ஐந்து ஆண்டுகளில் மட்டுமே இருப்பந்தைந்து பேரை கொன்றுள்ளது என்று கோவை ஈஸ்வரன் அந்த அறைகூட்டத்தில் கூறினார். அங்கே வந்திருந்த ஆந்திரபிரதேச சிவில் உரிமை கவுன்சில் பொது செயலாளரான சந்திரசேகர் பல உண்மைகளை கிஷன்ஜி கொலை பற்றி எடுத்து வைத்தார்.


மேற்கு மிதினாப்பூர் மாவட்டத்தில் பரிசொலே மற்றும் கோசை பந்த் என்ற கிராமங்களில் உள்ள குக்கிராமமான சோரகட்டாவுக்கு உண்மையறியும் குழு சென்றது. அந்த இரு கிராமங்களின் மக்களிடமும், உண்மையறியும் குழு பேசினார்கள். அதேபோல ஐம்போனி காவல்நிலைய துணை ஆய்வாளர், உதவி துணை ஆய்வாளர் ஆகியோரிடமும் பேசினர். நவம்பர் இருபத்தினாலாம் நாள், கிஷன்ஜி மோதல் சாவில் இறந்ததாக கூறப்பட்ட இடத்தையும்நேரிலாய்வு செய்தார்கள்.சொரகட்டாவிளிருந்து 300 மீட்டர் தொலைவில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. துப்பாக்கிசூடு நடந்ததாக கூறப்பட்ட இடத்தில் அவரது உடல்கடந்த இடத்திற்கு மிக அருகே ஒரு "பெரிய கரயான் புத்து" அப்படியே எந்த பாதிப்புமில்லாமளிருன்தது. அதாவது உண்மையில்மொதல்துப்பாக்கி சூடு நடந்திருந்தால் அந்த புற்று உடைந்திருக்கும்.தொட்டாக்களந்த புற்றை துளைத்திருக்கும். அருகேயுள்ள மரங்களில் தோட்டாக்களின் துவாரங்கள் காணப்பட்டாலும்,அவற்றிலேரிந்துபோன அடையாளங்களில்லை. அதாவது வேகமான துப்பாக்கி சூடுஒன்று நடந்து முடிந்த இடத்திற்கான எந்த ஒரு அடையாளமும் இல்லை.

அந்த கிராமமக்களிடம்களையில்வந்து,காவல்துறையினர் வீடுகளைவிட்டு வெளியே வராதீர்கலேன்று கூறியதை அவர்கள் கூறினார்கள். அதாவது அது ஒரு நாடகபாணியில் செய்யப்ப்பட்ட செயலேனப்து தெரிந்தது. இதுபோலொரு நாடகத்தை விஜயகுமார் ஏற்கனவே தமிழ்நாட்டில் வீரப்பன் மரணத்தை ஏற்படுத்தியதில் செய்திருக்கிறார் என்பது நமக்குதான் தெரியும். வெங்கடேச பண்ணையார் மரணத்தை ஏற்படுத்தியதில் அவர் செய்த தவறும் அவருக்கு தெரியும்.ஆகவே இந்த முறை கிஷஞ்சிக்கு வரும்போது திட்டம் போட்டு "போலி துப்பாக்கி சண்டையை" நாடகம் போல நடத்துவதில் எத்தனை ஏற்பாடுகளும் செய்தும்,பல விசயங்களில் "கோட்டை" விட்டு விட்டார். .அதனால்தான் நாமிப்போது அதை அக்ண்டுபிடித்து விட்டோம்.

அடுத்து கிஷஞ்சியின் உடலைபார்த்தால்யாருமே அது ஒரு சித்திரவதை செய்து கொள்ளை செய்யப்ப்பட்ட உடல் எனபதை மறைக்கமுடியாது. தலைபகுதியில் காயங்களிருக்கின்றன. விழி குழியிலிருந்து வலது கண் தொங்கிக் கொண்டிருக்கிறது. இதுவே அவரை பிடித்து கண் விழிகளை பிடிங்கியுள்ளனர் எனபதை காட்டுகிறது.முகத்தில் கீழ் தாடை பகுதி முழுமையாக உடைக்கப்பட்டுள்ளது. இது துப்பாக்கி பட என்ற பின்புறத்தால் தாடையில் ஓங்கி இடத்தால்தான் ஏற்படும். அதை ஒரு புரட்சியாளரை பிடித்து கட்டிப்போட்டுதான் செய்யமுடியும். அதேசமயம் தாடையில் எரிந்த அடையாளம் காணப்படுகிறது.. அதாவது எதையோவைத்து அவரது தாடை பகுதி எரிக்கப்பட்டுள்ளது.இதை ஒரு மனிதரை கட்டி போட்டபின்புதான் செய்யமுடியும். இத்தனை கொடூரங்களை செய்பவர் ஏற்கனவே இதுபோன்ற சித்திரவதைகளை செய்வதில் கை தேர்ந்தவராக இருக்க வேண்டும். அபப்டி கைதேர்ந்தவர் விஜயகுமார்.


தலையின் பின்பகுதியில் மண்டை ஓடு காணப்படவில்லை. அதாவது அவரது மூளையை கண்டு பயந்த ஆளும்வர்க்கம் அவரது மூளையை வெட்டி எடுத்து "பரிசோதனைக்காக " அனுப்பி உள்ளனர் எனபது தெரிகிறது. இது மேலிட முடிவாக இருந்தால்தான் அபப்டி நடக்க முடியும். அதாவது உள்துறை இப்போது இதில் தப்பிக்க முடியாது. முகத்தில் நான்கு இடங்களில், அதாவது மூக்கின் இருபோர்மும், மூக்கிற்கு கீழே கன்னத்தில் என்று "துப்பாக்கியின் பேண்ட் பகுதியின் கூர் ஆயுதத்தால் குத்தப்பட்டது தெரிகிறது. இது கட்டி போடப்பட்ட ஒரு நபரை அதிக பட்ச சித்திரவதை செய்வடஹியே காட்டுகிறது. அந்த காயங்கலத்தை நிரூபித்து நிற்கின்றன. தொண்டை பகுதியில் கூர் ஆயுதத்தால் வெட்டி சிதைக்கப்பட்டுள்ளது தெரிகிறது. அவரது வலது முன்கை உடைக்கப்பட்டுள்ளது. ஆனால் கையின் மேல் பகுதியில் எந்த வெளிக்காயங்களும் இல்லை. அதாவது உள்காயமடையுமளவில் அந்த சித்திரவதை செய்யப்பட்டுள்ளது.


வலது கையில் மூன்று துப்பாக்கி குண்டுகல்துளைத்த காயங்களுள்ளன. இஅரண்டு கனுக்கால்களுமுடைக்கப்பட்டுள்ளன. பாதத்தில்பாதி உடைந்து தொங்கி கொண்டிருக்கிறது. இடது கால்பகத்தில் தோள்கள் காணப்படவில்லை. இடது கையில் ஆள்காட்டி விரலில் மூன்றில் ஒரு பகுதி வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. இது எப்படி மோதல் சாவில் இறந்த ஒருவரது உடலில் ஏற்படும்? உடலின் முன்பக்தி முழுவதும் பெனட்களால் குத்தப்பட்டு முப்பது இடங்களில்காய்நகல் உள்ளன. அந்த அளவுக்கு உயர்ந்தபட்ச சித்திரவதைக்கு கிஷன்ஜி உள்ளாகியுள்ளார். அவரி அந்த அளவுக்கு ஆளும்வர்க்கம் வேருத்துள்ளது. அவர் மீது அந்த அளவுக்கு பகைமை பர்ராட்டி உள்ளது. அது ஏன் என்ற கேள்வி எழ வேண்டும்?


கிஷன்ஜி சில மாதங்களுக்கு முன்பு பெச்ச்கிவார்த்தைக்கு தயார் என கூறும்போது, உள்துறை அமைச்சர் சிதம்பரம் மூன்று மாதம் போர் நிறுத்தம் அறிவியுங்கள் என்றார். அதற்கு கிஷன்ஜி மூன்றே நாட்கல்போர் நிறுத்தம் போதுமேன்ருமடஹ்ர்குள் தங்கல்தரப்பை எடுத்து கூறி பெசமுடியுமேன்ரும் நம்பிக்கை தெரிவித்தார். ஆயுதப் புரட்சி செய்யும் கிஷஞ்சியே "அரசியல் போராட்டத்தில்" இத்தனை தூரம் நம்பிக்கை வைத்திருப்பது கண்டு ஆளும் கூட்டம் அதிர்ச்சி அடைந்தது. கிஷன்ஜி பக்கத்தில் இருக்கும் நியாயங்கள் ஊடகம் மூலம் பேச்சுவார்த்தை நேரத்தில் அம்பலமாகி விடும் என்று ஆள்வோர் பயந்து விட்டனர். ஜிண்டால் என்ற கார்பொரேட் நிறுவன நலன் காக்க எண்ணிய ஆளும் கூட்டம் இந்த மனிதரை உயிருடன் விட்டால் ஆபத்து என கணக்கு போட்டனர். ஜிண்டால் நிறுவனத்திற்கு எடுக்கும் நிலங்கள் ஆதிவாசிகளின் நிலங்கள். அதை எதிர்த்து பழங்குடி மக்கல்போராடி வ்ருகின்றனர். அந்த ஜிண்டால் நீருவனம் உட்பட கார்போறேட்களுகாக தான் நிதி மைச்சராக இருக்கும் போதே உரிமம் வழன்கியவர்தான் சிதம்பரம். ஆகவே இந்த கிஷஞ்சியை உயிருடன் விடுவது தன்கள் நலனுக்கு உகந்தது அல்லேன்று சிதம்பரம் எண்ணுகிறாரா?


அதேபோல அரசின் ஒவ்வொரு திட்டத்தஹியும் அந்த வட்டாரத்தில் அதாவது மிதுனாபூர் பகுதியிழ்மக்களை திரட்டி கிஷன்ஜி எதிர்த்து வந்தார். சிறு குழந்தைகளை விட்டு, "மாமா, சிதம்பரமே, எங்கள் பள்ளிகளை திறன்கள். அன்குள்ளுங்கள் ராணுவத்தை அகற்றுங்கள்" என்று கடிதங்களை எழுத வைத்தார். இதுபோன்ற நேர்மையான அரசியல்விளையாட்டுகளை சிதம்பரம் ரசிப்பதாய் இல்லை. அவரது வழிகாட்டலில்,விஜயகுமார் செயல்பட்டார் போல தெரிகிறது. கிஷன்ஜி கொல்லப்பட்டபின்பு, விஜயகுமார் ஒரு அறிக்கை வெளியிடுகிறார்.. அதில் பதில் தாக்குதல் வரும் என்று கூறுகிறார். எத்தனை எதிர்பார்ப்பு அவருக்கு? ஆகவே இது ஒரு விடுதலை பகுதியில் " கார்பொரேட் அரசுக்கும், மக்கள் அரசுக்கும் நடந்த மோதலே" தஹ்விற வேறு எதுவும் இல்லை. கார்பொரேட் களுக்கு உதவும் நாடாளுமன்ற அரசியலுக்கு எதிராக, நாடாளுமன்றத்திற்கு வெளியேதான் உண்மையான எதிர்க்கட்சி அதாவது மாவோவாதிகள் செயல்படுகிறார்கள் என்று நம்மை இந்த நிகழ்வுகள் சொல்ல வைக்கின்றன.

Wednesday, December 21, 2011

மக்கள் மனங்களில் ஒருவித விடுதலை.?

கலைஞரை பிடிக்காதவர்கள் எம்ஜிஆரிடம் சென்றார்கள்.எம்ஜிஆரிடம் சென்றவர்கள் ஜெயலலிதாவிடம் வந்தார்கள். ஏதோ கலைஞர் மட்டுமே நாட்டில் கெட்ட அரசியல்வாதி என எண்ணியவர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா என பற்று கொண்டார்கள். கலைஞர் மீது கோபம் கொண்ட தமிழின உணர்வாளர்களும் கடைசியாக ஜெயலலிதாவிடம் நல்லது நடக்காத என ஏங்கி வந்தார்கள். காங்கிரஸ் என்பது எதிரி என கணக்குபோட்ட தமழின உணர்வாளர்கள் ஏதாவதொரு திராவிட் அக்கட்சியிடம் தானே எதிர்பார்க்க முடியும் என்று கூறினார்கள். வன்னிப்போரால் புண்பட்ட தமிழ் இதயங்கள் கலைஞரை வெறுத்ததால், ஜெயலலிதா புண்ணுக்கு மருந்து என்று கூறினார்கள். அதை நிரூபிக்கும் முகத்தோடு அந்த அமமாவும் "போர்குற்றம் விசாரணை", "மீனவர் மீது துப்பாக்கி சூடு","காங்கிரஸ் எதிர்ப்பு" "ப.சிதம்பரம் எதிரி", " நூன்று பேர் தூக்குதண்டனை குறைப்பு", என தமிழ் இன உணர்வாளர்களுக்கு நிறைய "கடலை போட" சரக்கு கொடுத்தார்கள்.


சாதாரண மக்களோ கலைஞர் குடும்பம் கொள்ளை அடித்தது என்று தங்களுக்கு தெரிந்ததையும், தெரியாததையும் கூறி அரசியல் பேசினார்கள். அவர்கள் எல்லோரும் "ஒரே விசயத்தில்" மனம் வருந்தினார்கள். அதுதான் "சசிகலா குடும்பம்" செய்யும் ஆதிக்கம். திமுக கட்சியின் வளர்ச்சிக்காக தங்கள் உழைப்பை கொடுத்த "ஸ்டாலின், அழகிரி, கனிமொழி, ஊடகம் மூலம் தயாநிதி, ஆகியோரையே தாங்கிகொள்ளாத தமிழினம், அதிமுக வளர்சிக்கு எந்த உழைப்பையும் போடாமல், அதன்மூலம் தனைகளுக்கு வருமானம் மாத்திரமே பெற்று வந்த ஒரு சசிகலா குடும்பம் பற்றி வாய் திறக்க முடியாமல் புலம்பி வந்தார்கள். அந்த கும்பலை கண்டு பயந்தார்கள். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அதிமுக கட்சியின் சிறிய பதவிக்கும் பணம் வாங்கி கொண்டு பொறுப்பு கொடுக்கும் குடும்பத்தை அப்ற்றி வாய் திறக்க வழி இன்றி தவித்தார்கள்.

இப்போது எல்லோருமே ஒரு பெருமூச்சு விடுகிறார்கள். அப்படா. கடைச்யாக அம்மா சசிகலா குடும்பம் மீது நடவடிக்கை எடுத்தார்களே என்று வாய் விட்டு கூறுகிறார்கள். அதனால் அந்த ஆள் இதை செய்தான், இந்த ஆள் அதை செய்தான் என்று வெளியிடுகிறார்கள். அதில் அதிக பக்கங்கள் அந்த ராமாயண தமிழ் மன்னன் பெயரை கொண்டவர் தோட்டத்தில் இருந்து கொண்டு, பணமும், பெண்களும் என மிரட்டி வாங்கி குவித்த மர்மங்களை எல்லாம் மூட்டை மூட்டை மூட்டையாக இப்போது அவிழ்த்து விடுகிறார்கள். மக்கள் இதன் மூலம் மன விடுதலை பெற்று வெளியே பேச வருகிறார்களே...அது ஒரு முதல் கட்ட நன்மைதான். இனி யாரும் அந்த குடும்பம்தான் காரணம், முதல் மனுஷி நல்லவர்கள் என்று "சப்பை கட்டு" கட்ட முடியாது அல்லவா?

Monday, December 19, 2011

சமரசம் ஆகிவிடும என்று யார் சொன்னது?

அதிமுக விலிருந்து சசிகலா விளக்கப்பட்டாரா? போயஸ் தோட்டத்திலிருந்து சசிகலா வகையறாக்கள் வெளியேற்றப் பட்டார்களா? எல்லாம்சும்மா. வெறும் நாடகம். இப்படி பல பேர் கூறி திரிகிறார்கள்.இதற்குமுன்பு இப்படி பலமுறை அந்த இருவருக்கும் "சண்டை" என்று சொல்வார்கள், பிறகு மீண்டும் கூடி குலாவுவார்கள் என்றும் கூறுகிறார்கள்.ஜெ-சசி கூட்டு உடையாது என்று இந்த வாய் பேசுபவர்கள் கூறி,கூறி, அலுத்துவிட்டது. இவை எல்லாம் உண்மையா? இப்படித்தானே கலைஞருக்கும், ஸ்டாலினுக்கும், கலைஞருக்கும், அழகிரிக்கும், கலைஞருக்கும், தயாநிதிக்கும் "சண்டை" என்று சொல்வார்கள் பிறகு ஒன்றுகூடி விடுவார்களே? இவ்வாறு வியாக்ஞானம் வேறு செய்கிறார்கள்.

அப்படிப்பட்டதா இந்த முரண்பாடு? நாம் கேட்க விரும்புவது "இதுவரை எத்தனை முறை இந்த குடும்ப உறுப்பினர்களை"ஜெ வெளியேற்றி விட்டு திரும்ப சேர்த்துக் கொண்டுள்ளார்? இந்த கேள்விக்கு எல்லோருமே மேலோட்டமாக சிந்தித்து "பலமுறை" என்று பதில் சொல்கிறார்கள். அவர்களுக்கு நாம் சில கேள்விகளை கேட்கவேண்டும்.
அய்யா, பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு ம.நடராஜனை கட்சியை விட்டும், தோட்டத்தை விட்டும் வெளிஎற்றினார்களா ? இல்லையா? அதற்குபிறகு இன்றுவரை ஜெ அவரை மீண்டும் அனுமதித்தாரா? அவர் எல்லோரிடமும் தான்தான் எல்லாம் என்று சொல்லிக் கொண்டு இருந்திருக்கலாம். ஆனால் ஜெ அனுமதித்தாரா?


அடுத்து திவாகரனை வெளியேற்றிய பிறகு மீண்டும் சேர்த்த வரலாறு உண்டா? சரி. போகட்டும். சுதாகரனை வெளியேற்றி யாரும் தொடர்பு வைக்காதீர்கள் என்று கூறிய பிறகு மீண்டும் எடுத்துக் கொண்டாரா? அடுத்து டி.டி.வி.தினகரனை நம்பி எல்லாம் கொடுத்து, எம்.பி.ஆகி அவரும் நம்பிக்கை துரோகம் செய்தார் என்று நீக்கிய பிறகு, மீண்டும் சேர்த்து கொண்டாரா? அதுவும இல்லை. அடுத்து தினகரனுடன் உறன்பட்ட மகாதேவனை கொண்டுவந்து, பிறகு அவரும் சரியில்லை என்று வெளியேற்றி பிறகு மீண்டுமவரை சேர்த்தாரா? அதற்கு பிறகு வந்த டாக்டர் வெங்கடேசை நம்பி அவரிடம் அனைத்து பொறுப்பையு கொடுத்து பிறகு அவரையும் தவறு என வெளியேற்றிய பிறகு, மீண்டும் அவரை சேர்த்தாரா? அதுவும் இல்லை.

அதன்பிரகுதானே ராவணனையும், ம.ராமச்ச்னடிரனையும் நம்பி அவர்களும் அப்படித்தான் என்று தெரிந்த பிறகுதானே இப்போது வெளியேற்றி இருக்கிறார். ஒவ்வொரு ஆளையும் சரியில்லை என தெரியு போதும், அடுத்த ஆல் அவரும்போதும், ஜெ அன்ம்பியது சசிகலாவை மட்டும்தானே? அந்த சசிகலா, எம்.என். வெளியேற்ற படும்போது, "அக்கா, மாமா ரொம்ப மோசம். திவாகரனை நம்பலாம்".என்றும், அவரும் தவறு என ஆகும்போது, "அய்யய்யோ அக்கா, திவாகரன் மோசம். தினகரனை நம்பலாம்" என்றும், அவரும் அம்பலமாகும்போது, "அக்கா, தினகரன் மோசம், அவனுக்கு எதிராக இருக்கும் மகாதேவனை நாம் நம்பலாம்" என்றும். மகாதேவனும் அதேபோல நடக்கும்போது, "அக்கா, இவன் இப்படி செய்வான்னு நான் எதிர்பார்க்கவே இல்லை.டாக்டர் வெங்கடேசன், அறிவாளி, அவனை நம்பலாம்" என்றும் கூறினார். ஒவ்வொரு முறையும் "பாவம், சசி, தவறாக கணித்துவிட்டார்" என மன்னிக்கப் பட்டது.

அதற்குபிறகு டாக்டர் வெங்கடேசன் தனது முனைப்பை மட்டும் காட்டி லாபம் தேட, அவரையும் வெளியேற்ற வேண்டி வந்தது.அப்போது சசிகலா அடையாளம் காட்டிய " ராவணன், ம.ராமச்சந்திரன்" இருவரையும் ஜெ நம்பும்படி செய்தார்கள். ம.ராமச்சந்திரன் தனது அண்ணனுடன் எந்த தொடர்பும் இல்லை என்று நம்பும்படி பேசிவந்தார். அதுவும் இப்போது அம்பலமாகி விட்டது. தங்க உதட்டை போடும் வாத்தை அறுத்து பார்க்க அந்த குடும்பம் நினைத்தது. அதன் விளைவு "உள்ளதும் போச்சு, நோல்லைகன்னா" என்று ஆகிவிட்டது. இந்த குடும்பம் கட்ச்சியை அழிப்பதாக தொண்டர்கள் எண்ணினார்கள். இப்போது தொண்டர்களும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைகிறார்கள். அதை கொண்டாடுகிறார்கள். அதனால் இதுவரை வெளியே அனுப்பப்பட்ட யாரையும் மீண்டும் மன்னித்த வரலாறு கிடையாது. இதுவரை ஆயிரம் உறன்பாடு ஏற்பட்டிருக்கலாம். ஆனால் சசிகலாவை கட்ச்சியை விட்டோ, தோட்டத்தை விட்டோ வெளியேற்றிய வரலாறு உண்டா? அதனால் மக்கள் சஞ்சலப்படவேண்டாம்.

மாளிகை புரட்சி சதி முறியடிப்பா?

சசிகலா வகையாறாக்கள் அந்த ஆளும்கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டனர். அந்த பட்டியலில் சசிகலா,ம.நடராசன், மன்னார்குடி திவாகரன், டி.டி.வி.தினகரன், பாஸ்கரன், டாக்டர் வெங்கடேசன், சுதாகரன், ராவணன்,குலோத்துங்கன், மோகன் போன்றோர் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சசிகலா அதிமுக கட்சியின் உயர் செயற்குழு உறுப்பினர் என்பது முக்கிய செய்தி.ம.நடராஜன், சுதாகரன் போன்றவர்கள் ஏற்கனவே நீக்கப்பட்டவர்கள்தானே என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் இது நபர்களை நீக்குவதற்காக வெளியிடப்பட்டஅறிவிப்பு அல்ல என்பதை அந்த அறிவிப்பின் அணுகுமுறையே வெளிப்படுத்துகிறது. இவர்களுடன் கட்சியில் யாரும் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ள கூடாது என்றும் வழக்கம் போல அறிவிப்பு உள்ளது.

மேற்கண்டோர் மட்டும்தான் விலக்கப்பட்டார்களா? அவர்கள் மட்டும்தான் இன்று காலையில் போயஸ் தோட்டத்தை விட்டு வெளியேறினார்களா? என்று கேட்டால் இல்லை. சமையல்காரர் உட்பட குறிப்பாக மன்னார்குடி குடும்ப உறுப்பினர்களும்,உறவுகளும், வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்களில் முக்கியமாக அதிமுக பொதுசெயலாலருக்கு பாதுகாப்பிற்காக ஏற்பாடு செய்யப்ப்பட்ட "தனியார் பாதுகாப்பு படை" வெளியேற்றப்பட்டுள்ளது. அதாவது இப்படி ஒரு படையை "பழனி" தலைமையில் "தரணி" உடன் சேர்த்து, மூன்று தஞ்சைகாரர்களும், இரண்டு மேலூர் காரர்களும் ஒரே "சாதியை" சேர்ந்தவர்களாக இருந்தார்களே, அவர்கள் ஐந்துபேரும் "கள்ளத்தனாமாக" நடராஜனின் கட்டளைக்கு என்னவேண்டுமானாலும் செய்ய துணிந்தவர்கள் என்று "உளவுத்துறை" கூறிவிட்டதால் வெளியேற்றப்பட்டுள்ளனர். எல்லோரும் "மூட்டை, முடிச்சை" தூக்கி கொண்டு "சூட்கேசுகளுடன்" மதியத்திற்குள் வெளியேறினர்.


அந்த இடங்களை "சிறப்பு காவலர்கள்" நிரப்பினர். சசிகலா வகையறா இரண்டு "ஸ்கார்பியோ" வாகனங்களில் வெளியேறினர். ஆனாலும் "தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை" மாவட்டங்களில் இருந்து நேற்றே நிலைமையை கேள்விப்பட்டு, "சசி குழு "அழைப்பின்" பெயரில் சென்னை வந்துள்ள கள்ளர் சமூக முன்னோடிகள் இன்று "தனியாக" சென்னையில் கூடி விவாதிக்கின்றனர். அவர்கள் மீண்டும் "சமரசம்" பேச வாய்ப்புள்ளதா என்று பேசிக்கொள்கிறார்கள். அதை எதிர்க்கட்சி டி.வி. மூலம் ஒளிபரப்புகிறார்கள். ஏன் இந்த குழப்பம்? பெங்களூரு நீதிமன்றத்தில் வைத்து முதல்வர் போகாத கடந்த வாரம் "சசிகலாவும், இளவரசியும், சுதாகரனுக்கு இருபுறமும் அமர்ந்து கொண்டு "ரகசியம்" பேசியதும், அங்கே நேரில்வராத நடராசன் விடுதி அறையில் இருந்து வழிகாட்டியதும் உளவுத்துறை மூலம் முதல்வருக்கு தெரிந்தது. அதுமட்டுமின்றி தங்களுக்குள் "தொடர்பு இல்லை" என்று கூறி வந்தவர்கள் பெங்களூரில் ஒன்றாக கூடி குசலம் விசாரித்ததில் தன்னிடம் "சசி உட்பட" பொய் கூறியுள்ளார்கள் எனபதும் முதல்வருக்கு வெளிப்பட்டு விட்டது.


சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறை சென்றுவிடுவார், அதனால் தன்னை முதல்வராய் ஆக்கு, அல்லது தான் காட்டும் நபரை ஆக்கு என நடராசன் உளவு துறையின் ஏ.டி.ஜி.பி. ராஜேந்திரன் என்ற காரைக்குடிகாரர் வசம் பேசியதை கேள்விப்பட்டுதான் அந்த ராஜேந்திரனை மாற்றினார் முதல்வர். இது இரண்டு மாதமாக நடக்கும் பிரச்சனை.அதற்கு பிறகு போடப்பட்ட "பொன்மாநிக்கவேலும்" ஸ்டாலின் கைது விவகாரத்தில் செயல்படாததை அறிந்து அதற்கும் "நடராசன் விசுவாசம்"காரணமா என ஆராயப்பட்டது. அவரும் அதனால் மாற்றப்பட்டார். அதற்குள் பெங்களூரு நீதிமன்ற "சந்திப்புகள்" உண்மை சதியை அம்பலப்படுத்தின. "சதி" கேள்விப்பட்ட உடனேயே "உளவுத்துறையினர்" தனியார் பாதுகாப்பு படை முதல்வரை சுற்றி நிற்பது "ஆபத்து" என உணர்ந்தனர். அவர்களும் "அதே" கும்பல்தானே என்பதால் "எதையும் செய்வார்கள்" என்று எண்ணினார்கள். ஆகவே அவர்களும் "காலி". பூங்குன்றன் மாத்திரம் "காத்திருப்போர்" பட்டியலில் தோட்டத்தில் வைக்கப்பட்டுள்ளார்.

இத்தனை விவாகரமும் "நமது எம்.ஜி.ஆர்" இதழிலும், "முரசொலியிலும்" மறைமுகமாக வந்து கொண்டுதான் இருந்தன. அதை யாரும் "துருவி" பார்க்கவில்லை. டிசம்பர் முதல்வாரம் நமது எம்ஜிஆரில் "ஐந்து மாவட்ட செயலாளர்கள்" மாற்றப்பட்டனர். இன்றைய இதழில் அத்தனை மாற்றமும் "தவறு" என்றும் பழைய மாவட்ட செயலாளர்களே தொடர்வர் எனவும் வந்துள்ளது. இன்று "முரசொலியில்" ஒரு கட்ட செய்தி வந்துள்ளது. அதில் " முதல்வரை காப்பாற்றிய சிறுமிக்கு பரிசு" எனும்போது அந்த சிறுமி "உங்களை காப்பாற்றியதற்கு" எனக்கு அவர்கள் "தூக்கு தண்டனை" கொடுக்கலாம் என கூறியது வெளியாகியுள்ளது. அதை ஆளும் கட்சியின் ஏடு "முந்தா நாள்" வெளியிட்டுள்ளதாக முரசொலி கூறியுள்ளது. அதாவது முதல்வரின் உயிருக்கு "ஆபத்து வார" உள்ள வாய்ப்பை அப்படி முரசொலி எழுதியதும் இப்போது தெரிகிறது.


அப்படியானால் முரசொலியை நடத்தும் திமுக தலைமைக்கு ஏற்கனவே "எல்லாம் " தெரியுமா? ஆமாம். தெரியும். எப்படி? மூன்று ஆண்டுகளுக்கு முன்பே அந்த நிழல் மனிதரின் நடவடிக்கைகளை உளவு துறை மூலம் கணக்கெடுத்த அன்றைய முதல்வர் "அந்த கலாட்சேத்ரா காலனி" வாசியை பிடிக்குள் கொண்டுவந்து விட்டார். அவரது "வங்கி கணக்குகளை" எடுத்து வைத்து கொண்டு, அவரை "கிடிக்கி பிடி" போட்டு "ஜாபர் செட்" மூலமே அதிமுக உடைக்கும் படலத்தை தொடங்கி விட்டார். அப்படி வெளியே வந்தவர்கள்தான் "செல்வகணபதி, முத்துசாமி" போன்றோர். அந்த "உள்ளே-வெளியே" விளையாட்டை அப்போதிலிருந்தே இந்த கூட்டம் செய்து வந்துள்ளது. உள்ளேயிருந்து விளையாடியவர்களின் "நடிப்பு" அந்த அதிமுக பொது செயலாளரை நம்ப வைத்து விட்டது.


இந்த சதியை அதனால்தான் "கருணாநிதியின் சதியை முறியடித்ததாக" ஆள்வோர் பேசிக் கொள்கிறார்கள். ஏற்கனவே காவல்துறைக்குள் இருக்கும் "குழுவாதம்" இந்த சதிகளுக்கு உதவி விட்டது. அதாவது "ஜாங்கிட் குழு". இது திமுக விசுவாச குழு. ஜாங்கிட் ராஜாத்தி அம்மையாருக்கும், ஸ்டாலினுக்கும் "முறைவாசல்" செய்தவர். அவருக்கு எதிர்குழு "ராஜெச்தாஸ், பொன்மாணிக்கவேல்,குழு".இவர்கள் ஜான்கிட்டால் "பழி வாங்கப்பட்டவர்கள்". இந்த குழு விளையாட்டில் "சிவனாண்டி" சிக்கி கொண்டார். சென்ற அதிமுக ஆட்சியில் சசிகலா விசுவாசி, பிறகு திமுக ஆட்சியில் அழகிரி மூலம் உள்நுழைவு, பிறகு மீண்டும் சசிகலா மூலம் முயற்சி, ஆனால் இப்போது ஜெயாவால் "வாங்கிய குட்டு". இதேபோல ம.நடராஜனின் நண்பர் பன்னீர்செல்வம் அய்.ஏ.எஸ். அவர் நல்லவர் போல நடந்து எல்லா "சேட்டைகளையும்" அரங்கேற்றியவர்.அம்பலம் ஆனதும் அவரது உயர்ந்த பதவியான " சிறப்பு கடமை அதிகாரி" என்ற ஒ.எஸ்.டி. பறிபோனது. அந்த இடத்தில் எம்.ஜி.ஆர்.கால விசுவாசி "பிச்சாண்டி அய்.ஏ.எஸ்." வந்துவிட்டார்.

இத மாற்றங்கள் "அதிகாரிகளின் ஆலோசனைப்படி" நடக்கின்றன. அதை புரியாமல் எது "கள்ளரை எதிர்த்து" என்று எண்ணிக்கொண்டு, சில "பார்ப்பன விற்ப்பன்னர்கள்" தோட்டத்தில் நுழைய முயற்ச்சித்தார்கலாம். ஆனால் ""மூக்குடைபட்டு" திரும்பினார்களாம். அதனால் பார்ப்பனர்களுக்கு இந்த "மாற்றம்" பயன்படாது. தமிழர்களுக்கே பயன்படும் எனபது "கூடங்குளம், முல்லைபெரியார்" விசயங்களிலும், "மூன்றுபேர் தூக்கு , ஈழத்தமிழர்" விசயங்களிலும நிரூபனமாகி வருகிறது. காஞ்சி "மடசங்கரங்கள்" செய்யும் "நீதியரசருக்கு லஞ்சம் கொடுக்கும்" செயல்களும் தண்டிக்கப்படும். மத்திய அரசின் "தமிழ்நாடு மீதான போர் நடவடிக்கையும்" ப.சிதம்பரத்தின் சதிகளும் முறியடிக்கப்படும்.

Saturday, December 17, 2011

ஏண்டா, முல்லபெரியாரா?

வேண்டும் என்றே "முல்லைபெரியாரை" முல்லா பெரியார் என்று எழுதி அப்படியே உச்சரித்து மலையாள உச்சர்தஈபு என்பதாக காட்டி, இந்தியா முழுவதும் ஊடகங்களில் உள்ள "கூமுட்டைகளுக்கு" புரியாமல் இருக்கும்போதே ஒரு "சித்து விளையாட்டை" செய்துவரும் கெட்டிகாரர்கலே,நீங்கள் அந்த அணையின் பெயரை மலையாளத்தில் போட எண்ணினால் என்ன செய்யவேண்டும் தெரியுமா?

மலையாளத்தில் "முல்லை நதி" என்பதுதான் அப்படி அழைக்கப்படுகிறது. அந்த முல்லை நதியை நீ, முல்லா" என்கிறாய். சரி. சொல்லிவிட்டு போ. மீதம் உள்ள "பெரியாரை" ஏன் அப்படியே அழைக்கிறாய்? "பெரிய ஆறு" என்பதுதான் அங்கே பெரியாறு" என்று அழைக்கப்படுகிறது. நீ அதையும் மலையாளத்தில் கூறு. அதாவது "வல்லிய புழா" என்று கூறு. மொத்தத்தில் "முல்ல வல்லிய புழா" என்றுதான் நீ அழைக்க வேண்டும். உனக்கு சம்மதமா? சென்னை பதிப்பான டைம்ஸ் ஆப் இந்தியா, தி ஹிந்து, ஹெட்லைன்ஸ் டுடே ஆகியவை திருந்துவார்களா?

முல்லைபெரிராஉ அணை இருக்கும் தேவிகுளம், பீர்மேடு பகுதிகள், 1879 இல் பஞ்சா என்ற தமிழ்மன்னன் வசம் இருந்ததும், 1885 இல் . கண்ணன் தேவன் எஸ்டேட் உடன் ஒப்பந்தம் போட்டதும் வரலாற்றில் ஆவணமாக உள்ளது. அதற்குப்பின்தான் "திருவிதாங்கூர்" சமஸ்தானம் அந்த இடத்தை குத்தகைக்கு எடுத்தது. ஆங்கிலேயன் முட்டாள்தனமாக தமழ்நாட்டு பகுதிக்கு "திருவிதாங்கூர்" மன்னனுடன் ஒப்பந்தம் போட்டு விட்டான். இந்த உணமைகளை நாகர்கோவில் எம்.பி. நேசமணி, ௧௯௫௫ ஆம் ஆண்டு டிசம்பர் பதினாலாம் நாள் நாடாளுமன்றத்தில் பேசி உள்ளார். அப்போது அவர் "திருவிதாங்கூர் காங்கிரஸ் கட்சி தலைவர் ".

பொய்குண்டு போடும் தலப்பாக்கட்டு.

தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னையில் போலி உணவுவிடுதிகள் தங்களை உண்மை "தலப்பாக்கட்டு பிரியாணி" என்று வணிகம் செய்வதாக நீதிமன்றத்திற்கு வழக்கு வந்தது. அதனாலோ, என்னவோ, நமது "தலைப்பாகை தலைமை அமைச்சரை" தலப்பாகட்டு என்று அழைக்க தொடங்கிவிட்டார்கள். ரஷியா சென்றார் தலப்பாக்கட்டு. கள்ள ஒட்டு போட்டுஆட்சிபிடித்த புதின்அரசுடன் கைகோர்த்துகொண்டு அந்த அரசிடம் கொஞ்சினார் தலப்பாக்கட்டு. அப்படி கெஞ்சும்போது பல்வேறு ஒப்பந்த்தங்களில் "அணு உலைகள்" பற்றிய ஒப்பந்த்தம் முக்கியமாக . போடப்பட்டது. அதில் "கூடங்குளம்" பற்றியும் பேசினார். இரண்டு வாரத்தில் முதல் அணு உலையை கூடங்குளத்தில் "ஓடவிடுவோம்" என்று அவர் அப்பது கூறினார். கூடங்குளம் மக்களும், தமிழக அரசும் தனைகளை "ஓடவிட்டுவிடுவார்கள்" என்பது அவருக்கு நன்றாக தெரியும். அப்படி இருந்தும் ஏன் பொய் பேசினார்?

இந்திய ஊடகங்களும், ஊழல் அரசியல்வாதிகளும், ஒப்பந்தங்கள் எடுக்கலாம் என்று கனவுகாணும் திடீர் பணக்காரர்களும் "அணு உலை ஆதரவு" முழக்கங்களை எழுப்பி வருவதால் அவர்களுக்கு "தலைமை அமைச்சரின்" அறிவிப்பு "தெம்பை" கொடுக்கலாம். அணு உலை எதிர்ப்பு ஆர்வலர்களுக்கு இதுவே "மனச்சங்கடத்தை" கொடுத்திருக்கலாம். ஆனால் உண்மை நிலையை நாம் எடுத்து சொல்ல வேண்டும். இன்று ஏடுகளிலே :கூடங்குளம்அணுஉலைநிர்வாகஅதிகாரி"கேஸ்வந்த் பாலாஜி பிரதமர் கூறுவது போல உடனே அணு உலை இயங்க வாய்ப்பில்லை என்று கூறிவிட்டார். போராட்டம் முடிவுக்கு வந்தபின் "ஆறு மாதத்தில்" தயாராகும் என்று கூறியுள்ளார்.


இதுவே பிரதமர் கூறியது "ஒரு பித்தலாட்டம்" என்பதை உறுதியாகிவிட்டது. எதற்காக பிரதமர் அப்படி ஒரு பொய்யை சொல்ல வேண்டும்? அடுத்து இரண்டு நாள் முன்பு கோவையில் ஒரு கலந்துரையாடல் நடந்தது. அதில் கல்பாக்கத்தில் பணியாற்றி இந்திய அணு உலைகளுக்கு வழக்கமாக வக்காலத்து வாங்கும் எம்.ஆர். ஸ்ரீனிவாசன் என்ற விஞ்ஞானி கேள்விகளுக்கு பதில் சொல்லி கொண்டிருந்தார். அப்போது டாக்டர் ரமேஷ் ஒரு கேள்வியை கேட்க, விஞ்ஞானி தினறிவிட்டார். கூடங்குளம் திட்டம் வருவதற்கு முன்பு அந்த இடத்தில் "எரிமலை, சுனாமி ஆய்வுகள் நடந்ததா?" என்று ரமேஷ் கேட்டார்.இதற்கு இங்கே பதில் சொல்ல முடியாது, வேண்டுமானால் இணைய அஞ்சலில் பதில் சொல்கிறேன் என்றார் விஞ்ஞானி. அடுத்து கூடங்குளம் அணு உலைக்கு எங்கிருந்து தண்ணீர் எடுக்க போகிறீர்கள் என்று கேட்டனர். அதற்கு "பேச்சிபாறை அனையிளிருந்துதான்" எடுக்க வேண்டும், ஆனால் தமிழக அரசு அதற்கு அனுமதி தரவில்லை என்று அவர் கூறினார். அதாவது தண்ணீர் இல்லாமல் அணு உலையை குளிரூட்டுவது பற்றி சிந்திக்கவே முடியாது. அதற்கே ஏற்பாடு செய்யாத நிலையில் எப்படி உலைகள் இரண்டு வாரத்தில் தொடங்கும்?

அதனால் ரஷியாவில் தலப்பாக்கட்டு கூறியது "கலப்பற்ற பொய் ". அதை ஏன் கூறினார்? என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி.அதாவது அணு உலை எதிர்பாளர்களை மிரட்ட கூறினாரா? மக்களை மன உறுதி கேடவைக்க கூறினாரா? தமிழக அரசை மிரட்ட கூறினாரா? அனைத்து காரங்களும் ஓரளவு இருந்தாலும் அதற்காகவெல்லாம் கூறியதாக தெரியவில்லை. பிறகு எதற்காக தலைமை அமைச்சர் பொய் கூறினார்? ஒரு புறம் அமைச்சர் நாராயணசாமியை வைத்து போராட்டத்திற்கு பணம் வருகிறது என்று கூற சொல்லி விட்டார்கள். அதனால் அது பெரிய அளவு போராட்டத்தை அடக்காது என்பதையும் தெரிந்தே வைத்துள்ளார்கள்.ஒரு காங்கிரஸ் தொழிற்சங்க வாதியை வைத்து "மணல் அள்ளுபவர்கள்" அணு உலையை தஹ்டுக்கிரார்கள் என்றும் இன்று சொல்ல வைத்து விட்டார்கள். சென்னையில் ஒரு குழுவை வைத்து "சான்பிரான்சிச்கொவிளிருந்து" தொலைபேசி மிரட்டல் வந்தது என்றும் குற்றச்சாட்டு சொல்லி விட்டார்கள். ஆகவே எல்லா குற்றச்சாட்டுகளும் மத்திய காங்கிரஸ் அரசால் "தமிழக அரசிற்கு" எதிரானதாக கிளப்பப்பட்டுள்ளன.

அதாவது மத்திய காங்கிரஸ் செல்வி.ஜெயலலிதா அரசை எதிரியாக பார்த்து குறிப்பாக அதன் உள்துறை அமைச்சர் "தனிப்பட்ட முறையில்" இறங்கி இதுபோன்ற "காரியங்களை" தூண்டி விடுகிறார் என்பது பட்டவர்த்தனமாக தெரிகிறது. அதனால் அது உள்துறையின் "பழிவாங்கும்" போக்கு. ஆனால் பிரதமர் மன்மோகன் ஏன் கூடங்குளம் அணு உலை பற்றி "பொய்யான தகவலை" கூறவேண்டும்? சமீபத்தில் அமெரிக்காவிற்கும், மன்மோகனுக்கும் இடையில் உள்ள 'சர்ச்சை" எதன மீது?. அணு உலை ஆபத்து நட்ட ஈடு சட்டம் மீது எனபது நினைவுக்கு வருகிறதா? அதாவது அணு உலைகளுக்கு அந்நிய நாடுகளிடம் கையேந்தி சென்ற மன்மோகன் அமெரிக்காவின் வெள்ளை புஷ் வசம் சென்றது நினைவுக்கு வருகிறதா? அதன்மூலம் இந்திய நாடாளுமனரத்திற்கு தெரியாமல், மத்திய அமைச்சரவைக்கு தெரியாமல் மன்மோகன் புஷ் உடன் "கையெழுத்திட்டு" அமெரிக்கா -இந்திய அணு சக்தி ஒப்பந்தம் உருவானதா?

அந்த ஒப்பந்தத்தை வைத்து மேலை நாடுகளான அணு சக்தி நாடுகளிடம் கையேந்தி, கெஞ்சி கூத்தாடி, அமெரிக்கா ஒத்துழைப்பால் அய்.ஏ.ஈ.ஏ. என்ற அனைத்துநாட்டு அணு சங்கதி கழகம் என்ற அமைப்பின் ஒப்புதலை வாங்கினார் அல்லவா? அவர்கள் நான் ப்ராளிபரேசன் ஒப்பந்தம் என்ற "அணுகுண்டை சோதனைக்காக வெடிக்கமாட்டோம்" என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்து போட நிர்ப்பந்தம் செய்தார்களா? இல்லையா? அதற்கு இந்தியா "தயாராக இல்லை" என்பதும் புரிகிறதா? அதன்பிறகு அந்த மேலை நாடுகளான அணு சக்தி நாடுகள், தங்கள் நாட்டை போலவே, "சீ.எஸ்.சீ. என்ற 'அணு விபத்து நட்ட ஈடு சட்டம்" கொண்டு வார வர்புருத்தினார்களா? இல்லையா? அதற்காக ஒரு மசோதாவை மன்மோகன் அரசு நாடாளுமன்றத்தில் கொண்டுவந்ததே? அதில் சில அமெரிக்க கார்பொரேட் அணு உலை முதலாளிகளுக்கு சாதகமான வார்த்தைகளை நீக்க "தி ஹிந்து" ஊடக அமபலப்படுத்தளினால், பாஜக நாடாளுமன்றத்தில் கத்திய பிறகு, அவற்றை நீகினார்களா? இல்லையா?

அப்படி நீக்கியதால் "அந்நிய அணு உலை முதலாளிகள்" இறக்குமதி செய்யும் உலைகள் ஆபத்தில் சிக்கினால், மக்களுக்கு கொடுக்கும் "நட்ட ஈட்டில்" அந்த இயக்குனர்களும் "பங்கு" செலுத்தவேண்டும் என்று இருந்ததே? அதை அமெரிக்க கார்பொரேட் அணு உலை முதலாளிகள் ஏற்றுக் கொள்ளவில்லையே? அந்த சட்டத்தை மாற்றி அமெரிக்க கார்பொரேட் அணு உலை முதலாளிகளை "திருப்தி"படுத்த அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் இரண்டு முறை டில்லி வந்து பேசி பார்த்து "ஏமாந்து" போனாரே? மன்மோகன் அமெரிக்க போகும்போதும் இரண்டு முறை இதுபற்றி பேசி ஏமாந்து போனார்களே? அதே பியார்ச்ச்னையை அதாவது "அணு உலை ஆபத்து நட்ட ஈடு சட்டம்" பற்றி சென்னை வந்தபோது, முதல்வரிடம் ஹிலாரி பெசியதகாவும் வந்ததே?அவர்களை "திருப்தி" படுத்த ஒரு "விதிகளை" அந்த சட்டத்திற்காக எழுதி, அமைச்சரவை ஒப்புதலுடன் அதை மாலி சென்று "அமெரிக்காவின் கருப்பு புஷ் இடம்" காண்பித்து அதன்மூலம் அமெரிக்க அணு உலை உற்பத்தி நிறுவங்களை 'சம்மதிக்க" வைத்து விடுவேன் என்று மன்மோகன் கூறினாரே? அப்போதும் அவர்கள் சம்மதிக்கவில்லையே? இந்திய நாடாளுமன்றமும் அந்த "விதிகள்" அணு உலை ஆபத்து நட்ட ஈடு சட்டத்தை "நீர்த்துபோக" செய்யும் என்று பேச தொடங்கி விட்டார்களே?


இத்தகைய சூழலில்தான் மனோகன் பிரான்ஸ் நாட்டு அதிபருடன் இரண்டு வாரம் முன்பு 'அணு உலை மற்றும் யுரேனியும் " வாங்க சம்மதம் பெற்று அதை ஊடகங்களில் பெயர்த்து படுத்தினார். அதேபோல இப்போது ரஷியா சென்று அணு உலை பெற, சம்மதம் பெற்றேன் என்கிறார். அதேநேரம் அமெரிக்கா தனது நாட்டு "தனியார் முதலாளிகளது" உலைகளுடன் ஒப்பந்தம் போட சொல்கிறது. ஆனால் பிரான்சும், ரஷியாவும், அந்தந்த 'அரசாங்கங்களுடன்" ஒப்பந்தம் போட தயாராக இருக்கிறது என்றும் ஊடகங்கள் மூலம் கருத்தை பரப்புகிறார். நான் ப்ராளிபரேசன் ஒப்பந்தம் போட்டு இந்தியா "அணுகுண்டு சோதனை" செய்யகூடாது என்று அமெரிக்காவும், மேலை நாடுகளும் கூறும்போது, அப்படிப்பட்ட ஒப்பந்தத்தை பிரான்சும், ருசியாவும் "நிர்பந்திக்கவில்லை" என்று கூறுகிறார். அதை ஒட்டியே "கூடங்குளம் அணு உலை இரண்டு வாரத்தில் செயல்படும்" என்று பொய் செய்தியை குண்டாக போட்டுள்ளார். அதாவது இது தனது நிரந்தர முதலாளி அமெரிக்காவை "நிர்ப்பந்தம்" செய்ய போடப்பட்ட "பொய் குண்டு".

இப்படி பொயகுண்டு போடும் "தலப்பாக்கட்டு" உண்மையில் அணு உலை மூலம் "மின்சாரம்" தயார் செய்யும் கொள்கை கொண்டவர் அல்ல. மாறாக அணு உலைகள் மூலம் "அணு குண்டு" செய்ய பல வழிகளிலும் ஏற்பாடு செய்பவர். அதனால்தான் அனுகுண்டின் ஆதரவாளர் "அப்துல்கலாம்" இங்கே வந்து வேண்டும் இந்த அணு உலை என்று கூறி சென்றார். இந்த அதலப்பாகட்டின் "இரட்டைவேடம்" அமப்லப்படுத்தப்படவேண்டும்.

Friday, December 16, 2011

சென்னை ஊடகமே கேரள அரசின் பொய்யை பரப்ப உதவுவதா?

சென்னை ஊடகமே கேரள அரசின் பொய்யை பரப்ப உதவுவதா?
கடந்த சில நாட்களாக சென்னையிலிருந்து வெளிவரும் ஒரு இணையதளத்தின் மீது சென்னையிலிருந்து வெளிவரும் ஒரு ஆங்கில ஏட்டிற்கு பெறும் கோபம் வந்துவிட்டது. அந்த இணைய தளத்தில் எழுதப்பட்டிருந்த ஒரு கட்டுரையை காரணம் காட்டி, அந்த கட்டுரையாளர் மீதும், அதன் ஆசிரியர் மீதும், அதன் வெளியீட்டாளர் மீதும் அவதூறு வழக்கு தொடுப்போம் என அந்த பிரபல நாடு தழுவிய ஆங்கில ஏட்டின் சென்னை பதிப்பிலிருந்து வழக்கறிஞர் அறிக்கை அனுப்பப் பட்டுள்ளது. அதில் முதல் அறிக்கையில் ஒரு கோடி ரூபாய் நட்டஈடு கேட்டும், இரண்டாவது அறிக்கையில் "நூறு கோடி" நட்ட ஈடு கேட்டும் மிரட்டல் விடப்பட்டுள்ளது.

அந்த இணைய தளம் பெயர் வீகென்ட் லீடர். { www .weekendleader .com } அந்த கட்டுரையார் பெயர் "ராதிகா கிரி". அவர் statesman என்ற ஆங்கில ஏட்டின் சிறப்பு ஊடகவியலாளர். அவர் தனது கட்டுரையில் ஏன் இந்த சென்னை ஆங்கில ஏட்டில் முல்லைபெரியார் விசயத்தில் " சார்பற்ற நிலை" எடுக்காமல் கேரள சார்பு நிலை எடுக்கிறார்கள்? என்று வினவி இருக்கிறார். அதற்கு அந்த டைம்ஸ் ஆப் இந்தியா ஏட்டின் சென்னை பிரிவில் எல்லா பொறுப்புகளிலும் "மலையாளிகள்" இருப்பதுதான் காரணமா? என்றும் கேட்டிருக்கிறார். முல்லை பெரியார் பெயரையே ஏன் அவர்கள் முல்லபெரியார் என்று மலையாள உச்சரிப்பில் போடவேண்டும் என்றும் கேட்டிருக்கிறார். ஏற்கனவே எம்ஜீஆர் காலத்திலேயே 1978 இல் திட்டமிட்டு கேரள மலையாள மனோரமா ஏட்டில் "பீதியை" உருவாக்க எழுதியதையும் அப்போது அந்த கருத்தை கேரள மின்சார வாரிய தலைவர் பரமேஸ்வரன் நாயர் கூறியதையும் எடுத்து காட்டி இருக்கிறார்.

இத்தகைய உண்மை கருத்துக்களை கொண்ட கட்டுரை சென்னை ஆங்கில ஏடான "டைம்ஸ் ஆப் இந்தியா" ஏட்டிற்கு "சூட்டை" கிளப்பி விட்டது. அதனால்தான் அவர்கள் வீகன்ட்லீடர் இணைய தள ஏட்டிற்கு மிரட்டலாக "நூறு கோடி" நட்ட ஈடு கேட்டு வக்கீல் நோடிஸ் அனுப்பி இருக்கிறார்கள். ஆனால் அந்த சென்னை பதிப்பு டைம்ஸ் ஆப் இந்தியா தனது "சார்பு நிலையை" மாற்றிக் கொள்ள தயாராக இல்லை. அதை இன்று அவர்களது ஏட்டின் வெளியீடுகள் காட்டிவிட்டன. அதை வின் காட்சி ஊடக செய்திகளும், நிஜங்களும் நிகழ்ச்சியில் நாங்களும் சொல்லிவிட்டோம்.

இன்றைய இதழில், எல்லா நாளேடுகளும், ஆங்கில ஏடுகளான தி ஹிந்து, நியு இந்தியன் எக்ஸ்ப்ரஸ், டெக்கான் கிரநிகள் உட்பட தமிழ் ஏடுகளும், "சட்டசபை தீர்மானத்தை" முதல் செய்தியாக வெளியிட்டுள்ளன. அதாவது முல்லைபெரியார் பற்றிய
தமிழக சட்டமன்ற தீர்மானம் ஒரு வரலாற்று ரீதியான முக்கியத்துவம் கொண்டது என்று புரிந்து கொண்டு அதற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளனர்.எல்லா கட்சிகளும் ஒட்டுமொத்தமாக் சேர்ந்து தமிழக முதல்வரின் தீர்மானத்திற்கு "துணையாக" நிற்கும் மகத்தான நிகழ்வை நாட்டு மக்களுக்கு எடுத்து சொல்ல வேண்டிய "ஊடக கடமையை" சரியாக செய்துள்ளன. ஆனால் இந்த சென்னை பதிப்பு "டைம்ஸ் ஆப் இந்தியா" மட்டும் அந்த செய்தியை "ஒன்பதாம் பக்க" செய்தியாக ஆக்கி, அதற்கு முதல் பக்க கீழ்பகுதியில் ஒரு "தொடர்பை" கொடுத்துள்ளது. ஏன் இந்த விபரீத புத்தி? இது "மலையாள இனஉணர்வா?" இப்படி ஒரு கேள்வியை அனைவரும் எழுப்ப எதுவாக அந்த செய்தி வெள்யீடு உள்ளது.

அந்த ஏட்டின் சென்னை பதிப்பை பார்த்து நாம் சில கேள்விகளை கேட்க வேண்டும். செல்வி.ஜெயலலிதாவின் "கொடும்பாவியை" எரித்த கேரள வெறியர்களுக்கும் இதற்கும் என்ன வேறுபாடு? எங்கள் முதல்வரது தீர்மானம் உங்களுக்கு அவ்வளவு "கசக்கிறதா?". இந்த செய்தியை "ஓரங்கட்டி" வெளியிடும் அளவு கூட "கேரளாவிலிருந்து தமிழக தேவாரம் பகுதிக்கு" ஓடிவந்த தமிழர்கள் செய்தியை நீங்கள் மட்டும் வெளியிட வில்லையே? அது ஏன்? தி ஹிந்து கூட அதை வெளியிட்டதே? அதேபோல இதே சென்னை பதிப்பான நியு இந்தியன் எக்ஸ்ப்ரஸ் ஏட்டில் வெளியிடப்பட்ட "கேரள மனித உரிமை ஆணைய" கருத்தையோ, கேரள அரசு வழக்கறிஞரின் கருத்தையோ, கேரள உயர்நீதி மன்றத்தில் நிபுணர் குழு சார்பாக "பரமேஸ்வரன் நாயர்" முன்வைத்த கருத்தையோ இந்த சென்னை பதிப்பு "டைம்ஸ் ஆப் இந்தியா" ஏன் வெளியிடவில்லை? அவை எல்லாமே கேரளாகாரர்களால் கூறப்பட்ட "தமிழக அரசின் நிலை சார்பான" கருத்துக்கள என்பதனாலேயே?

இப்படி ஒரு ஏடு "ஒரு சார்பு நிலை" எடுக்கலாமா? தமிழ்நாட்டில் விற்க வேண்டும் என்று கருதிகூட அந்த இதழால் "சார்பற்ற நிலை எடுத்து உண்மைகளை" போட முடிய வில்லையே? அது ஏன்? அதற்கு "இன வெறி" காரணமாக இருக்கிறதா? சரி. அப்படி உண்மை செய்திகளை சார்பற்ற நிலையில் வெளியிட முடியவில்லை. கேரள டிரச்போர்ட் போன்ற விளம்பரங்கள் வாங்கி போடுவதற்காக என்றுகூட நாம் இறங்கிவந்து ஏற்றுக்கொள்வோம். ஆனால் வீகன்ட்லீடர் இணைத்தளம் மீது அனுப்பிய வக்கிள்நோடிசில் கூறியுள்ளபடி அவர்களிடம் "தேசிய உணர்வு, நாற்றுபற்று" இருப்பதாகவும் தெரியவில்லையே? இன்று அவர்களது ஏட்டில் முதல் பக்கத்தில் அவர்கள் முதல்வரின் சட்டபேரவை தீர்மானத்தை வெளியிடவில்லை என்ற் அக்குற்றம் இருக்கும்போதே, வண்ண, வண்ண படங்களுடன் முதல் பக்கத்திலேயே, "சென்னையில் மலையாள படங்களுக்கு சினிமா கொட்டகைகள் தடை" என்று போட்டு பயந்துபோய் தடை செய்துள்ள சென்னை சினிமா கொட்டகைகளை " கலவரம்" மூட்டும் நோக்கத்தோடு அசிங்கப்படுத்தி செய்தி வெளியிடிருக்கிரார்களே? அது ஏன்?

அவர்களுக்கு செல்வி.ஜெயலலிதா தலைமையிலான அரசின் "சட்ட ஒழங்கை" கெடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறதா? தலைநகர் சென்னையில் மட்டும்தான் "தமிழர்-மலையாள" பிரச்சனை அடிதடி ஆகாமல் இருக்கிறது என்ற "நல்லெண்ணத்தை" கெடுக்க எண்ணுகிறார்களா? பிரதமரும், உச்சநீதிமன்றமும் கூறிய பிறகு, ஊமன் சாந்தியே அமைதியாகி விட்டார். ஆனால் இவர்கள் சென்னையில் ஊடகத்தை வைத்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டார்கள் போலிருக்கிறதே? இங்கே ஒரு "ரத்த மோதலுக்கு" தயார் செய்கிறார்களா? இதுபோல்தானே "டேம் 999 " எடுத்த ஷோகன் ராய் அண்ணன்காரன் "விமல் ராய்" இங்கே சென்னை "ஆசிய நெட்" தலைவராக இருந்துகொண்டு அந்த ஊடகத்திலே "பீதியை" கிளப்புகிற வேலையை செய்ததையும், அவர் தம்பி மூலம் படம் எடுத்து கேரள மக்களை பீதி அடைய செய்ததையும் "தாமதமாக " நாம் உணர்ந்து "திட்டமிட்ட சகோதரர்களின் "சதியா" என்று வினாவை எழுப்பி
வருகிறோம். அதேபோல்தான் இவர்களும் செய்கிறார்கள்.

இந்த லட்சணத்தில் அந்த ஏடு, சென்னை மாநகர காவல் ஆணையரிடம் எதற்காக "பாதுகாப்பு" கேட்டார்கள்? தாங்கள் "தவறான, தமிழ் மக்களுக்கு விரோதமான" செய்திகளை வெளியிடுகிறோம் என்று அவர்களுக்கே தெரிந்ததால்தானே கேட்டார்கள். மதுரையில் இருந்து இன்னொரு ஆங்கில ஏட்டின் நிருபர் "கேரளாவில் விரட்டப்பட்ட" தமிழர்கள் பற்றி எழுதினால் எதற்காக இவர்களது சென்னை பதிப்பின் அலுவலகத்திலிருந்து அவரை "மிரட்ட வேண்டும்?". இப்படி சென்னையில் அமர்ந்துகொண்டே "தவறுகள் செய்யாதீர்கள்" என எச்சரிக்கை செய்கிறோம்.

இதே ஏட்டில் இருக்கின்ற ஒரு முக்கிய ஆசிரியர் "யாழ் சென்று போர் நேரத்தில்" நேர்மையான செய்திகளை வெளியிட்டதையும் நாங்கள் மறக்கவில்லை. ஆகவே எல்லா இன மக்கள் மத்தியிலும் "நல்லவர்கள்-கெட்டவர்கள்" இருவரும் இருக்கிறார்கள். நாங்கள் இந்த எட்டிலும் நல்ல, நேர்மையான சார்பற்ற ஊடகவியலாளர்களை எதிர்பார்க்கிறோம்.

Monday, December 12, 2011

இடுக்கி மாவட்டத்தை தமிழ்நாட்டோடு இணைத்துவிடு

ஏன் இந்த கூச்சல்? எதற்காக முல்லைபெய்யார் அணை உடையுமா? என்று இல்லாத ஆராய்ச்சியைஎல்லாம் மலாயளிகள் கிள்ளப்பவேண்டும்? மின்சாரம் தங்கள் தேவைக்கு தகுந்தாற்போல இடுக்கி அணையிலிருந்து கிடைக்க வில்லை என்ற வருத்தம் மட்டுமே காரணமா? பிரவம் தொகுதியில் எர்ணாகுளத்தில் இடைத்தேர்தல் வரப்போகிறதே என்று "தயாரிப்பு ஏற்பாடு" மட்டுமே காரணமா? அணை 999 என்ற சினிமா படத்தை எடுத்த ஷோகன் ராய், இந்த பீதியை அதிகமாக கிளப்பிவிடும் " ஆசியா நெட்" என்ற டி.வி.யின் சென்னை தலைமையான "விமல் ராய்" இன் சகோதரர் என்பதனால் மட்டுமா காரணம்? கடலுக்கு வீணாக போகும் நீரை தமிழ்நாட்டிற்கு கொடுக்க மாட்டோமென அடம்பிடிக்க என்ன காரணம்?

அந்த அணையின் அடியில் ஐந்தாயிரம் ஏக்கரில் "உள்ளாச்விடுதிகள், சுற்றுலா வாசங்கள்" வைத்துள்ளவர்களை சார்ந்து வாழும் அரசியல்வாதிகள் மட்டமா காரணம்? இவை எல்லாவற்றிற்கும் அடிப்படை காரணம் தமிழ்நாட்டை சேர்ந்த "தேவிகுளம், பீர்மேடு" பகுதிகளை காமராசர் காலத்திலேயே தமிழர்கள் கேட்ட போது, அப்போதுள்ள காங்கிரஸ் கட்சிகாரர்கள், "குளமாவது, மேடாவது,போ" என்று பூகோள அறிவு, நில உரிமை அறிவு சிறிதும் இல்லாமல் கூறியது தானே அடிப்படை காரணம்? அந்த வட்டாரம் தமிழ்நாட்டிற்கு சொந்தம் என்று இப்போது "முரசொலியில்" எழுதும் ரஹ்மான்கான் கட்டுரையை வெளியிடும் கலைஞர் அந்த செய்தியை "தான் ஆட்சியில்" இருக்கும் போது கூறாதது ஏன்?

இப்போது அடுத்தவர் ஆட்சிக்கு சிக்கல் வரட்டும் என்று எண்ணியாவது தமிழர் நலனுக்கான இந்த உண்மையை முரசொலியில் வெளியிட்டாரே? அதற்காக பாராட்டலாம். தனக்கு ஏக இந்தியா அடுத்தவருக்கு தமிழ்நாடு என்ற அவரது கொள்கை வாழ்க. இப்போது பெரியகுளம் நாடாளுமன்ற தொகுதி எம்.பி. ஜெ.எம். ஹாரூன் ஒரு புதிய "கோரிக்கையை" முன்வைக்கிறார். அது "இடுக்கி மாவட்டத்தை தமிழ்நாட்டிற்கு"கொடுத்துவிடு.என்பதே. அறுபது விழுக்காடு மக்கள்தொகை தமிழர்களாக இருக்கும் இடுக்கி நமக்கே. எழுபது விழுக்காடு சபரிமலை பக்தர்கள் தமிழர்களே எனபதும் அந்த கோரிக்கையை வலுப்படுத்தும்.

வளமான தமிழ்நாட்டோடு சேரவேண்டுமா? அல்லது வரட்சியான கேரளாவில் இருக்க வேண்டுமா? என்ற முழக்கத்தை இடுக்கி மாவட்ட மக்கள் மத்தியில் வைக்கலாம் என்கிறார் ஹாரூன்.இது நல்லாதானே இருக்கு?

Sunday, December 11, 2011

உலைக்கு எதிராக உலக உரிமை நாளில்....

டிசம்பர் பத்து உலக மனித உரிமை நாள். அன்று சென்னையில் "கூடங்குளம் அணு உலைகளுக்கு எதிராக" பட்டினி போராட்டம் நடத்தப்பட்டது பொருத்தமானதே. ஆனால் கூவம் கரை ஓரம் இடம் ஒத்துக்கிய மாநகர காவல்துறையை திட்டாதவர்களே இல்லை. இரண்டு நாள் முன்பே மனோ தகராஜ் ஊடகங்களுக்கு கூட்டம் நடத்தினார். அதில் அவருடன் இடிந்தகரை இவாரிஸ், ஆர்ம்ச்டிரான்க், பாதிரியார் ராஜன், ஆவின் பாபு, சங்கீதா ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். இதேபோல சென்ற இருபத்தி ஆறாம் நாள், வணிகர் சங்க பேரவை வெள்ளையன், உலக தமிழர் பேரமைப்பு பொருளாளர் சந்திரேசன், மனித நேய மக்கள் கட்சி போது செயலளார் அப்துல் சமது, இந்திய தௌஹித் ஜமாஅத் தலைவர் எஸ்.எம்.பாக்கர், பறையர் பேரவை ஏர்போர்ட் மூர்த்தி, மக்கள் சிவி உரிமை கழக டி.எஸ்.எஸ்.மணி, மீனவர் சங்க மாறன், மகேஷ், தமிழர் பண்பாட்டு நடுவம் ராஜ்குமார் பழனிசாமி,போன்றோர் கலந்துகொண்டு,"சென்னை மாநகர அணு உலை எதிர்ப்பாளர்கள் களம்" என்ற பெயரில், விஞ்ஞானி வி.டி.பி. மூலம் பவர் பாயிண்ட்விளக்கம் கொடுத்தனர். இப்போது பட்டினி போர் நடத்தினர். .

இந்த போராட்டம் சென்னை கூட்டமைப்பு என்றும், அணு சக்தி எதிர்ப்பு என்றும் பெயர் பெற்று இருந்தது. இதில் சென்னை களம் உட்பட பலரும் கலந்து கொண்டார்கள். மனோ, இவாரிஸ், கண்ணன், ஆர்ம்ஸ், ஆண்டன் கோமேஸ், வெள்ளையன், கலை,சமுத்திராதேவி, காஞ்சனை சீனிவாசன், தொல்.திருமாவளவன், உதுயகுமார், மைபா, சலபதி, கில்பர்ட், வழக்கறிஞர் சுந்தரராஜன், பொறியியலாளர் ரவி, எஸ்.எம்.பாக்கர், அப்துல் சமது, சதீஷ்குமார், அருண்ஷோரி,மருத்துவர் புகழேந்தி, டி.எஸ்.ஏ.ஸ்.மணி, அருள் எழிலன்,எஸ்.யு.சீ.அய். தோழர்கள், ஜெ.சிதம்பரநாதன், மீத.பாண்டியன்,ஏ.எஸ்.குமார்,திருமுருகன்,மக்கள்மன்றம் மகேஷ், மேகலா, நாத்திகன், என்று பலரும் கலந்து கொண்டனர். கட்சி தலைவர்கள் பலரும்தங்கள் தொண்டர்களுடன் வந்து பேசிவிட்டு செல்வதாக இருந்தனர்.

தென் மாவட்டங்களை சேர்ந்த மீனவ சகோதரர்கள் இடிந்தகரை, கூத்தான்குழி, உட்பட ஒரு ஐம்பது பேர் சென்னை வாழ் மீனவர்களாக வந்திருந்தனர். கில்பர்ட் ஏற்பாட்டில் காஞ்சி மாவட்ட கடலோர பெண்கள் இயக்கம் ஒரு எழுபது பெண்களும், சமுத்திராதேவி ஏற்பாட்டில் மீனவ மகளிர் வாழ்வுரிமை இயக்கம் சார்பாக ஒரு அறுபது மீனவ பெண்களும் கலந்துகொண்டது பெறும் எழுச்ச்சியை தந்தது. தங்கள் அடையாளமாக அவர்கள் " சென்னை மாநகர அணு உலை எதிர்ப்பாளர்கள் களம்" என்று பெயர் பட்டையை சட்டைகளில் அணிந்து இருந்தனர். சென்னை மீனவ சங்கங்களான தமிழ்நாடு மீனவர் முன்னேற்ற சங்கம் மாறன் உடன் டி.பாண்டியன் உட்பட, ஆவின் பாபுவின் "இந்திய மீனவர் பேரவை" சலபதியின் மீனவ தொழிலாளர் சங்கம்", மகேசின் "அகில இந்திய பாரம்பரிய மீனவர் சங்கம்" என்று சென்னைவாழ்மீனவர்களும்கலந்துகொண்டதுசிறப்பு. பங்கெடுத்தவர்களில் மீனவர்களின் எண்ணிக்கையே சரிபாதிக்கு மேல் இருந்தது. அவர்கள் அறிவித்துக் கொள்ளவில்லை. ஆண்டன் கோமெசின் அழைப்பின் பேரில் அவர்கள் வந்திருந்தனர்.

எஸ்.எம்.பாக்கர் பேசும்போது "பட்டினி போராட்டங்கள் பயன்படாது என்றும், முற்றுகை போராட்டமே அணு உலைக்கு பொருத்தமானது "என்றும்பேசிய உடனே கூடங்குளம் வட்டார மக்கள் ஊராட்சி தலைவர் சாண்டல் முத்துராஜ் தலைமையில் கூடங்குளம் அணு உலை முன்பு "முற்றுகை" இடும் செய்தி வந்தது. அங்கேயே சமைக்கவும் தொடங்கி விட்டார்கள் என்றும், பெண்கள் முன்னாள் நின்று அங்கு முற்றுகை போர் நடக்கிறது என்பதும் சிறப்பு செய்திகளாக இருந்தது. கோமாளிகள் போல அமைச்சர் நாராயணசாமியும், அப்துல் கலாமும், பேசிவருவது விமர்சிக்கப்பட்டது.வேய்நாட்டு பணம் விளையாடுகிறது என்ற குற்றச்சாட்டை, "தற்காப்பு பாணியில் பதில் சொல்ல கூடாது" என்றும், தாக்கும் பாணியில் பதில் கூற வேண்டும் என்றும் கூறப்பட்டது. அது என்ன? என்றால், வெளிநாட்டு பணமான அமெரிக்கா பணம் அணு உலை ஒப்பந்தம் போட்டதற்கு ஆதரவாக "அணு உலை ஆதரவு குழுவிற்கு வருகிறது" என்பது விளக்கப்பட்டது. அதேபோல "அணு சக்தி துறை", தேசிய மின்சக்தி கார்பரேசன் ஆப் இந்தியா" ஆகியவற்றுடன் "கூடங்குளம் அணு மின் உலை திட்டம்" இணைத்து அந்த நிதியை செலவழிக்கிறது என்றும் அங்கே குற்றம் சாட்டப்பட்டது.

மேற்கண்ட செலவுகளை செய்ய கணக்கு கேட்க முடியாது என்பதும் விளக்கப்பட்டது. அதாவது 1962 ஆம் ஆண்டு சட்டப்படி, அணு உலை ரகசியங்களை அந்த அணுசக்தி துறை தலைவரும், பிரதமரும் "கமுக்கமாக" வைத்து கொள்ளலாம் என்றும், அதை அமைச்சரவைக்கோ, நாடாளுமன்றத்திற்கோ, கூறவேண்டிய அவசியம் இல்லை என்பதாகவும், அவர்கள் அதற்காக செலவழிக்கும் பணத்திற்கு "கணக்கு காட்டவேண்டாம்" எனவும் அந்த சட்டத்தில் இருப்பது சுட்டி காட்ட பட்டது. ஆகவே அணு உலை ஆதரவு கும்பல்களுக்கு செலவு இவ்வாறு அதிகம் செய்யப்படுகிறது என்பதும், மக்கள் போராட்டத்தை பணம் பற்றி பேசி "கொச்சை படுத்தாதே" எனவும் அங்கே கூறப்பட்டது. மாலையில் சேவ் தமிழ்ச சார்பாக பேரணி எடுக்கப்பட்டது. சன்னியும் எழுந்துவிட்டது என்பதை அது காட்டியது.

Wednesday, December 7, 2011

அணை பாதுகாப்பாய் உள்ளது என கூறிய மலையாள நிபுணர்கள்.

ஏதோ முழு மலையாள நாட்டவர்களும், அரசியல் சந்தர்ப்பவாதம் செய்யும் சக்திகளுடன் இணைந்துகொண்டு "அணை உடையும் என்று பீதியை" கிளப்புவதாக ஒரு தவறான புரிதல் தமிழ்நாட்டில் இருக்கிறது. அதுவே தமிழ்நாட்டில் உள்ள மலையாள வணிகர்களை அச்சுறுத்தி வருகிறது. இந்த நேரத்தில் தமிழக முதல்வர்தான் தெளிவாக" எந்த அளவுக்கு மலையாளிகள் தமிழ்நாட்டில் இருக்கிறார்களோ, அந்த அளவுக்கு தமிழர்கள் கேரளாவில் இருக்கிறார்கள்" என்றும் அமைதி காக்க வேண்டும் என்றும், பீதியை ஏற்படுத்த சில அரசியல் சக்திகள் முயல்வதை கண்டித்தும் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதைகூட கேரள அரசியல்வாதிகள் சிலரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

நாம் ஏற்கனவே உச்சநீதிமன்றம் கூறியுள்ள புள்ளிவிவரத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே "முல்லைபெரியார் உடையாது.அப்படியே உடைந்தாலும் இடுக்கி அணை அந்த நீரை தாங்கிக் கொள்ளும்" என்பதை கூறியிருந்தோம். இப்போது அதையே கேரள நிபுணர்கள் கொர்ரியுள்ளனர் என்பது இனிப்பான செய்திதானே? அதுவும் கேரள உயர்நீதிமன்றத்தில் முன்வைத்துள்ளார்கள் என்பது மேலும் "அழுத்தமான" செய்தி.
நேற்று செவ்வாய் கிழமை கேரள உயர்நீதிமன்றம் முன்னால் ஒரு வழக்கு விசாரணைக்கு வருகிறது. அப்போது அந்த வழக்கின் முக்கிய "கவலை"பகுதியான "தாக்குபிடிக்குமா இடுக்கி அணை?" என்ற விசயத்தில் ஆய்வு நடத்த கூறி ஏற்கனவே அங்குள்ள நீதியரசர்களால் உத்திரவிடப்பட்டு, அங்குள்ள ஒரு "மலையாள நிபுணர்களை" கொண்ட குழு தனது ஆய்வு அறிககையை முன்வைத்துள்ளது.

உயர்நீதிமன்ற பெஞ்சில், தலைமை நீதியரசர் பொறுப்பில் இப்போது உள்ள மஞ்சுஆளா செல்லூர் மற்றும் நீதியரசர் பி.கே. ராமச்சந்திர மேனன் இருவரும் அமர்ந்திருந்தனர். அவர்கள் முன்னால் "அணை பாதுகாப்பு நிபுணர்களான" எம்.கே.பரமேச்வரன் நாயர் உட்பட நிபுணர்கள் குழு தன்கள் ஆய்வு அறிககையை முன்வைத்துள்ளனர்.ஒரு "பேரழிவு" வருமானால் மக்களது உயிர்களை பாதுகாக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை ஆய்வு செய்து வரும்படி அந்த நீதிமன்றம் ஏற்கனவே கேட்டுக்கொண்டபடி, அவர்கள் அந்த அறிககையை முன்வைத்தனர். அதில், முல்லைபெரியார் சிறப்பு குழுவின் நிபுணர் எம்.கே.பரமேஸ்வரன் நாயரும் இருப்பதால் அந்த அறிக்கைமேலும் முக்கியத்துவம் பெற்றுவிட்டது.

அந்த அறிக்கை இடுக்கி அணைக்கட்டின் தண்ணீர் சேமிக்கும் கொள்ளளவு பற்றி தனது முன்வைப்பை கூறவேண்டும். அப்படியே அந்த நிபுணர் குழுவும் செய்தது. அதில் இடுக்கி அணையின் அடித்தள கட்டுமானம் ஆய்வு செய்யப்பட்டதை எடுத்து சொல்லியுள்ளார்கள். அந்த அணை எந்த ஒரு " நில அதிர்வையும்" தாங்கும் பக்குவத்தில் உள்ளது என அவர்கள் தெரிவித்துள்ளனர். இடுக்கி நீர்தேக்கத்தின் முகப்பகுதிக்கும், முல்லைபெரியார் நீர்தேக்கத்திளிருந்து எவ்வளவு தூரம் இருக்கிறது என்றும் கேட்டிருந்தனர். அதற்கும் அந்த அறிக்கை விளக்கம் கூறியிருந்தது. அந்த அணையிலிருந்து இந்த நாய்க்கு நீரின் வேகம் எவ்வளவு என்றும் கேட்டிருந்தார்கள்.வெய்யில் காலங்களில் எவ்வளவு நீர் தேக்கப்படும், என்றும், எவ்வளவு தண்ணீர் " மின்சாரம் உற்பத்தி செய்ய வேண்டும்" என்றும் கேட்டிருந்தார்கள். இவ்வாறு கேரள மக்களின் உண்மையான டேஹ்வைகளை ஒரு உயர்நீதிமன்றம் ஆய்வு செய்து, நிபுணர்கள் மூலம் கேட்டு அறியும் போது, இந்த அரசியல்வாத சந்தற்ற்ப்பவாதிகள் கிளப்பும் "பொய்கள்" எத்தனை நாட்கள் நிற்கும்?

Tuesday, December 6, 2011

பா.ஜ.கவும், காங்கிரசும் ஒன்றுதான் எனபது கேரளாவிலும் காணலாம்.

காங்கிரஸ் கட்சிதான் இந்த முல்லைபெரியார் பிரச்சனையை ஊதி பெரிதாக்கி, பொய்யை கிளப்பி அதில் மீன் பிடிக்க, எர்நாகுல்கம் மாவட்ட, பிரவம் தொகுதிக்கான இடைதேர்தல் ஒத்திகையை பார்க்கிறது என்றால், அதற்கு போட்டி போட்டு அச்ச்தானந்தனும் அந்த தொகுதியை கைப்பற்ற அதே நாடகத்தை நடத்துகிறார்கள் என்றால், பா.ஜா.காவிற்கு எண்ண இழவு வந்தது? அவர்கள் பங்கிற்கு கோட்டயம் மாவட்டத்தில் தமிழ்நாட்டிலிருந்து சென்ற "ஐயப்ப சாமிகள்" வரும்போது அவர்களை வழி மறித்து, அதில் இரண்டு "சாமிகளுக்கு" செருப்பு மாலை போட்டிருக்கிறார்கள். அதில்தான் தொடங்கியது மோதல்.

ஆமாம். இந்த பா.ஜ க .தான் "சாமி"களை வைத்து அரசியல் செய்யும் கட்சிதானே? இவர்களே தமிழ்நாட்டு சாமிகளை கேவலப்படுத்தினால், இவர்களுக்கு உண்மையில் "சாமி நம்பிக்கை" கிடையாது என்பதும், அது வெறும் அரசியலுக்கு தான் என்பதும் இதிலிருந்து புரிகிறதே? கேரள மாநில மனித உரிமை ஆணையம் இந்த மோதலையும், அணை உடையும் என்ற பரப்புரையையும், "ஊடக, அரசியல்வாதிகளின் " கூட்டு சேட்டை என்று தெளிவாக கூறி விட்டதே? கேரள அரசு வழக்கறிஞரும் முல்லை பெரியார் அணை பலமாக உள்ளது என்று தெளிவாக நீதிமன்றத்திலேயே கூறி விட்டாரே? இவர்களும் மலயாளிகல்தானே? உண்மை சொல்லும் மலையாளி, பொய் சொல்லும் மலையாளி என்று வேண்டுமானால் பிரித்து பார்க்கலாம்.இது காங்கரஸின் திட்டமிட்ட சதி என்பது அம்பலமாகிவிட்டது.

செல்வி. ஜெயலலிதா மீது "கூடங்குளம்" விசயத்திலும் இன்ன அபிர விசயங்களிலும் மோதல் போக்கை கையாளும், டில்லிக்காரர்கள் இந்த முல்லை பெரியார் பிரச்சனையை பெரிதாக்குவதில் முழுமையாக கேரளா பக்கம் நின்று செயல்படுகிறார்கள். கடலுக்கு சென்று வீணாகும் "தண்ணீரை" கூட தமிழ்நாட்டிற்கு கொடுக்க தயாரில்லாத கேரள அரசியல்வாதிகள் எப்படி இந்திய ஒருமைப்பாட்டிற்கு ஆதரவானவர்கள்? இந்த கேள்வியை எல்லோரும் கேட்க வேண்டும்.டில்லிகாரனை பொறுத்தவரை "நீ கூடங்குளத்தில் மக்களின் அச்சத்தை" போக்க சொன்னாயல்லவா? நான் கேரள மக்கள் மத்தியில் இப்போது முல்லை பெரியார் இடையும் என்ற அச்சத்தை கிளப்புகிறேன் பார் எனபதுதான் டில்லியின் தந்திரம்.

2006 ஆம் ஆண்டு இதே டில்லியில் இருக்கும் உச்சநீதிமன்றத்தில் முல்லை பெரியார் வழக்கில் தலைமை நீதியரசர் "சபர்வால்" கொடுத்த தீர்ப்பில் " 142 அடி உயர்த்தலாம்" என்று மட்டும் கொடுக்க வில்லை. கேரளா பயப்படுவ்பது போல முல்லை பெரியார் அணை உடைந்தால், அதிலிருந்து வெளிவரும் தண்ணீரின் அளவு "பதினோரு டி.எம்.சீ. தண்ணீர்தான்". அந்த தண்ணீர் இடிக்கி அணிக்கு வரும். இடிக்கி அணையின் கொள்ளளவு "எழுபது டி.எம்.சீ.". அதில் பெருமழை வந்த காலங்களிலேயே "ஐம்பத்தி ஏழு டி.எம்.சீ" தண்ணீர்தான் நிரம்புகிறது. அதாவது பெருமழை காலங்களிலேயே இடிக்கி அணையில் " பதினேழு டி.எம்.சீ." க்கு இடம் இருக்கிறது. முல்லை பெரியார் உடைந்தாலுமே " பதினோரு" டி.எம்.சீ.தான் வெளிவரும் என்பதால் இடிக்கி அணை தாங்கி கொள்ளும். இந்த தகவலை "அமணை பற்றிய ஆராய்ச்சியை" செய்த உச்சநீதிமன்றம் கணக்கெடுத்து கூறியுள்ளது. இது அந்த சபரிவாலது தீர்ப்பில் உள்ள செய்திகள்.

இவ்வாறு கூறிய உச்சநீதிமன்றம் நியமித்த "முன்னாள் நீதியரசர் ஆனந்த் " தலைமையிலான குழு வருகிற "ஜனவரியில்" தங்கள் "அறிககையை" வைக்க போகிறார்கள் என்று தெரிந்த கேரள காங்கிரஸ்காரர்கள் இப்போது அவசர , அவசரமாக "அணை 999 " என்று சினிமாவை வெளியிட்டு அதன்மூலம் கேரள மக்களை "பீதி" அடைய செய்கிறார்கள். இவ்வாறு செய்வதே அணை அருகே " ஆக்கிரமிப்பு செய்தவர்களும், உல்லாச விடுதி" நடத்துபவர்களுமான அரசியல் வாதிகள்தான் என்றும் செய்தி வருகிறது. புதிய அணை கட்டவும், பழைய அணையை உடைக்கவும் "ஒப்பந்தம்" எடுக்க திட்டமிட்டுள்ளார் என்றும் செய்திகள் வருகின்றன. ஆக மொத்தத்தில் கேரள மக்களை ஏமாற்றும் கேரள அரசியல்வாதிகள்தான் உண்மையான "வில்லன்கள்".

பேராசிரியர் கல்யாணி என்ன தவறு செய்தார்?

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் பகுதியில், மண்டபம் ஊரில்
நான்கு இருளர் பழங்குடி பெண்களை "பாலியல் சித்திரவதை" செய்ததாக புகார்
வந்தது. அதை கல்விமணி கல்யாணி எடுத்து பதிவு செய்தார். அதற்காக
விருத்தாசலத்தை சேர்ந்த தங்கமணி என்ற பழங்குடி கட்சி ஓரை வைத்திருப்பவர்
ஏன் "ஆத்திரப்படவேண்டும்?".

அந்த தங்கமணியை ஆதரித்து அவருக்கு தங்க இடம் கொடுத்த
சீ.பி.எம். கட்சியின் விழுப்புரம் அலுவலகம் இந்த விவகாரத்தில் ஒன்றுமே
தெரியாமல் ஆதரித்து விட்டார்களா? அதிமுக கொடுத்த தொகுதி என்பதால்
விக்கிரவாண்டி தொகுதியில் வெற்றி பெற்று விட்டோமே, அந்த வட்டாரத்தில்
கட்சி பலமாக இல்லையே என்ற எண்ணத்தில் அவசரப்பட்டு நடந்த தவறா?
ஆத்திரப்பட்ட தங்கமணி கல்யாணி மீதும், பழங்குடி தலைவர் ரமேஷ் மீதும்
வழக்கு பதிவு செய்வது முறையா?

அந்த அவ்ழக்குகளை காவல்துறை பதிவு செய்யலாமா? முதல்வர்
அறிவித்த ஐந்து லட்சம் பாதிக்கப்பட்ட பழங்குடி பெண்களுக்கு போய் சேர்வதை
ஏன் இந்த தங்கமணி எதிர்க்க வேண்டும்? பாலியல் பலாத்காரம் நடக்கவில்லை
என்று ஏன் அறிக்கை கொடுக்க வேண்டும்? பாலியல் வன்புணர்ச்சி வேறு, பாலியல்
பலாத்காரம் வேறு என்று இவர்களுக்கு ஏன் புரியவில்லை?

வடக்குமண்டல அய்.ஜி. சைலேந்திரபாபு, அறிவித்ததும், உதல்வர்
அறிவித்ததும் முதல் கட்ட விசாரணையில் அந்த நான்கு பெண்களை விதிகளை மீறி
காவல் நிலையத்தில் வைத்திருந்தது தவறு என்றுதானே ஐந்து காவல் அதிகாரிகளை
இடை நீக்கம் செய்தார்கள்? காட்டிற்குள் கூட்டி போனதாக அந்த பழங்குடி
பெண்கள் கூறும்போது, கூட்டி சென்ற காவலர்களை தண்டிக்க வேண்டியது
தேவைதானே?

முதல்வர் அறிவிப்பையே எதிர்க்கும் வேலையை அரசியல்வாதிகள்
"கூட்டணி குழப்பத்தில்" செய்யலாம். காவல்துறையும் செய்கிறதே? அதற்கு
தனியாக தண்டனை உண்டா?