Monday, October 31, 2011

வசமா மாட்டனுமில்ல சிதம்பரம்?

அய்யா. ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கியவர்களை எல்லோரையும் வரிசையாக பிடித்து திஹார் சிறையில் அடிப்பததானே சரியானது அந்த வரிசையில் சீ.பி.அய். சமீபத்தில் யாரை வீடு புகுந்து சோதனைக்கு உள்ளாக்கியது? அப்போல்லோ மருத்துவமனையின் முதலாளியான பிரதாப் ரெட்டியின் மகளான சங்கீதா ரெட்டியை..அந்த சங்கீத ரெட்டி எதற்க்காக சோதனை செய்யப்பட்டார்? அவர் பெயரில் மலேசியாவின் பிரச்சனைக்கு உள்ளாகியிருக்கும் நிறுவனமான அஸ்ட்ரோ ஆனந்தகிரிஷ்ணனின் "மாக்சி" நிறுவனத்தில் 26 விழுக்காடு பங்கு இந்த சங்கீதா ரெட்டி பெயரில் இருக்கிறது. அதாவது இரண்டு ஜி ச்பெக்டறம் ஊழலில், கையும் களவுமாக பிடிபட்டுள்ள, ஏர்டெல் நிறுவனத்தை நிர்ப்பந்தித்து அமைச்சர் மூலம் வாங்கிய மலேசியகாரன் தனது நிறுவனமான மாக்சியில் எதற்காக சங்கீதா ரெட்டிக்கு பெரும் பங்கு கொடுக்க வேண்டும்?

சங்கீதா ரெட்டி, மருத்துவமனைதானே நடத்துகிறார்? தொலை தொடர்பு துறையில் அவருக்கு எண்ண ஈடுபாடு? எப்படி அது வந்தது? யாருக்காக அவர் அந்த இடத்தில், பண்டமாற்று வேலை செய்துள்ளார்? அப்படி எதுவும் நடந்துள்ளதா? சங்கீதா ரெட்டியும், அவரது தந்தை பிரதாப் ரெட்டியும் நடத்தும் "அப்பல்லோ" மருத்துவமனை நிறுவனத்தில் புதிதாக ப.சிதம்பரத்தின் மருமகளான அதாவது கார்த்திக் சிதம்பரத்தின் மனைவியான "டாக்டர் ஸ்ரீநிதி" ஒரு "போர்டு உறுப்பினராக" சேர்க்கப்பட்டுள்ளார். இதுதான் அந்த " ஹவாலா" பாணியான பண்டமாற்று முறை. இதை அன்றைக்கு அதாவது இந்த ஊழல் நடக்கும்போது, அதாவது இந்த ஸ்பெக்ட்ரம் ஊழல் திட்டமிடப்ப்படும்போது, சிதமபரத்தின் பங்கிற்காக செய்யப்பட்டுள்ளது. அதாவது அன்று நிதி அமைச்சராக இருந்த சிதம்பரத்தின் "ஒப்புதல்" இல்லாமல் ஸ்பெக்ட்ரம் ஊழலும் நடக்கவில்லை, ஏர்டெல் நிறுவனத்தை முடக்கி, அதை மலேசியாவின் மாக்சி வாங்கும் நிலையும் நடக்கவில்லை. அந்த "உதவிக்கு" பிரதிபலனாக அவர் பெற்ற பங்குதான் "ஸ்ரீநிதிக்கு" அப்போல்லோவிலும், சங்கீதாவிற்கு மாக்சியிலும் கிடைத்துள்ளது. இதிலாவது சிதம்பரத்தை பிடிக்க வேண்டும் அல்லவா?

1 comment:

SURYAJEEVA said...

இன்னும் எத்தனை திரை மறைவு வேலைகள் வெளி வரப் போகிறதோ

Post a Comment