Wednesday, October 12, 2011

இம்மானுவேல் அடிகளாரை ஏன் "திருப்பி" அனுப்பினர்?

இந்தியா ஒரு "ஒற்றையாட்சி" அரசமைப்பு கொண்ட நாடு என்பதை மீண்டும் நிரூபிக்கிறார்கள். இங்கிலாந்திலிருந்து "அழக தமிழர் மன்றம்" என்ற "ஜி.தி.எப்." தலைவரான "எழுபத்தேழு" வயதுடைய அருட் திரு . இம்மானுவேல் அய்யாவை, இங்கிலாந்தில் உள்ள "இந்திய தூதரகம்" இரட்டை விசா கொடுத்து இந்தியாவிற்கு அனுப்பி வைத்தது. ஆனால் அதைக்கூட, "டில்லி" மதிக்கவில்லை. அதனால் நேற்று இரவு சென்னை வந்து இறங்கிய 'அடிகளாரை" உடனேயே "டில்லியிலிருந்து மேலிடம்" உத்தரவு என்ற பெயரில், சென்னை விம்மான நிலையத்தில் உள்ள " எமிக்ரேசன்" அதிகாரிகள் அவர் பயணம் செய்து வந்த இடமான 'துபாய்" கே திருப்பி அனுப்பி விட்டார்கள். அந்த செய்தியை "வெளியே" தெரிய விடாமல் பார்த்து கொண்டார்கள். இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டதற்கு, "அவர் விடுதலை புலி ஆதரவாளர்" என்றும் இந்திய அரசை தாக்கி பேசியுள்ளார் எனவும் கூறினார்கள்.

இந்த அதிகாரிகளுக்கு "இம்மானுவேல் அடிகளாரை" திருப்பி அனுப்பியதற்கான "காரணம்" சரியாக தெரியாது எனபது நமக்கு டேஹ்ரியும். ஆனாலும் தங்களது "புத்ஹ்டிசாளித்தனத்தை" காட்டுவதாக எண்ணிக் கொண்டு இப்படி '" ஏறுக்கு மாறாக" பதில் சொல்கிறார்கள். அவர்கள் "வாதமே" உண்மையான "காரணம்" என்றால், உங்கள் இங்கிலாந்து நாட்டில் உள்ள "இந்திய ஹைகமிசனுக்கு" இது போன்ற "காரணங்கள்" தெரியாதா? அல்லது இதுபோன்ற "காரணங்களை" கூறி "யாரையும்" திருப்பி அனுப்ப எந்த "அனைத்து நாட்டு விதிகளும்" இடம் கொடுக்காது எனபது இந்திய அரசுக்கும் தெரியாதா? ஏன் இந்த விளையாட்டு? தமிழ்நாட்டில் ஒரு "ஆட்சி" ஈழத் தமிழருக்கு "ஆதரவாக" இருக்கிறதே என்ற "கோபம்" டில்லிக்கு இருக்கலாம். அதற்காக "தமிழ்நாட்டிற்குள்" வருகின்ற வெளிநாட்டுக் காரர்களை " தமிழக அரசுக்கு" தெரியாமலேயே "திருப்பி" அனுப்ப டில்லிக்கு எவ்வளவு "துணிச்சல்?".


இந்த "துணிச்சலை" தந்தது யார்? இதற்கு முன்னால் ஒரு ஆட்சி தமிழ்நாட்டில் இருந்தது. அது டில்லி சொன்னதெற்கெல்லாம் "தலையாட்டி" கொண்டு இருந்ததே? இப்போதுள்ள "ஆட்சியாளர்கள்" மட்டும் ஏன் அப்படி செய்வதில்லை என்ற கோபம் டில்லிக்கு இருக்கிறதா? அதற்காக "அனைத்து நாட்டு விதிகளை" மீறி, மனித உரிமைமீறளாக, இததகைய வேலையை டில்லி செய்வதை "யார்" பொறுத்து கொள்ள முடியும். உலக மாந்தர்களுக்கு "கருத்து சுதந்திரம்" கிடையாது என்று இந்திய மண்ணில் "புதிய" ஒரு சரித்திரத்தை இந்த மத்திய அரசு எழுதப் போகிறதா? இத்தகையா "இழிவான" போக்கை எத்ரித்து " தமிழர்களும், மனித உரிமையாளர்களும்" கிளர்ந்து எழவேண்டும். கிளர்ந்து எழுவோம். டில்லியின் 'சர்வாதிகார" போக்கை எதிர்ப்போம். இனிமேலாவது "இந்தியா என்பது ஒரு ஒற்றையாட்சி நாடு" என்பதை விளங்கி கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment