Monday, October 31, 2011

வசமா மாட்டனுமில்ல சிதம்பரம்?

அய்யா. ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கியவர்களை எல்லோரையும் வரிசையாக பிடித்து திஹார் சிறையில் அடிப்பததானே சரியானது அந்த வரிசையில் சீ.பி.அய். சமீபத்தில் யாரை வீடு புகுந்து சோதனைக்கு உள்ளாக்கியது? அப்போல்லோ மருத்துவமனையின் முதலாளியான பிரதாப் ரெட்டியின் மகளான சங்கீதா ரெட்டியை..அந்த சங்கீத ரெட்டி எதற்க்காக சோதனை செய்யப்பட்டார்? அவர் பெயரில் மலேசியாவின் பிரச்சனைக்கு உள்ளாகியிருக்கும் நிறுவனமான அஸ்ட்ரோ ஆனந்தகிரிஷ்ணனின் "மாக்சி" நிறுவனத்தில் 26 விழுக்காடு பங்கு இந்த சங்கீதா ரெட்டி பெயரில் இருக்கிறது. அதாவது இரண்டு ஜி ச்பெக்டறம் ஊழலில், கையும் களவுமாக பிடிபட்டுள்ள, ஏர்டெல் நிறுவனத்தை நிர்ப்பந்தித்து அமைச்சர் மூலம் வாங்கிய மலேசியகாரன் தனது நிறுவனமான மாக்சியில் எதற்காக சங்கீதா ரெட்டிக்கு பெரும் பங்கு கொடுக்க வேண்டும்?

சங்கீதா ரெட்டி, மருத்துவமனைதானே நடத்துகிறார்? தொலை தொடர்பு துறையில் அவருக்கு எண்ண ஈடுபாடு? எப்படி அது வந்தது? யாருக்காக அவர் அந்த இடத்தில், பண்டமாற்று வேலை செய்துள்ளார்? அப்படி எதுவும் நடந்துள்ளதா? சங்கீதா ரெட்டியும், அவரது தந்தை பிரதாப் ரெட்டியும் நடத்தும் "அப்பல்லோ" மருத்துவமனை நிறுவனத்தில் புதிதாக ப.சிதம்பரத்தின் மருமகளான அதாவது கார்த்திக் சிதம்பரத்தின் மனைவியான "டாக்டர் ஸ்ரீநிதி" ஒரு "போர்டு உறுப்பினராக" சேர்க்கப்பட்டுள்ளார். இதுதான் அந்த " ஹவாலா" பாணியான பண்டமாற்று முறை. இதை அன்றைக்கு அதாவது இந்த ஊழல் நடக்கும்போது, அதாவது இந்த ஸ்பெக்ட்ரம் ஊழல் திட்டமிடப்ப்படும்போது, சிதமபரத்தின் பங்கிற்காக செய்யப்பட்டுள்ளது. அதாவது அன்று நிதி அமைச்சராக இருந்த சிதம்பரத்தின் "ஒப்புதல்" இல்லாமல் ஸ்பெக்ட்ரம் ஊழலும் நடக்கவில்லை, ஏர்டெல் நிறுவனத்தை முடக்கி, அதை மலேசியாவின் மாக்சி வாங்கும் நிலையும் நடக்கவில்லை. அந்த "உதவிக்கு" பிரதிபலனாக அவர் பெற்ற பங்குதான் "ஸ்ரீநிதிக்கு" அப்போல்லோவிலும், சங்கீதாவிற்கு மாக்சியிலும் கிடைத்துள்ளது. இதிலாவது சிதம்பரத்தை பிடிக்க வேண்டும் அல்லவா?

இயற்கை மரணத்தை விரும்பாத குடும்பமா அது?

இன்று அன்னை இந்திரா படுகொலை ஆன நாள். ஆனால் அதே நாளில் உடனடியான பதில் தாக்குதலை டில்லியில் உள்ள "சீக்கியர்கள்" மூவாயிரம் பேர் மீது, காங்கிரஸ் கட்சியின் சேவாதளம் தொண்டர்கள், ஆர்.எஸ்.எஸ். படைகளுடன் சேர்ந்துகொண்டு, வீடு,வீடாக அரங்கேற்றிய நாள். எது பெரிது? ஒரு உயிரா? மூவாயிரம் உயிரா? யார் வீரர்கள்? ஒரு உயிரை எடுத்தவர்களா? மூவாயிரம் உயிர்களை எடுத்தவர்களா? யார் வீரர்களோ,யார் போரில் வெற்றி பெறுகிறார்களோ, அவர்கள்தானே ஆள முடியும்? அதனால்தான் இன்றுவரை அந்த குடும்பமே ஆண்டு கொண்டு இருக்கிறது.

தன் உயிரைப் பற்றிக் கூட கவலைப் படாமல், பஞ்சாபில் சீக்கியர்கள் டில்லியின் "விவசாய கொள்கையால்" பாதிக்கப்பட்ட போது, பிரிந்தன்வாலா வுடன் சேர்ந்து கொண்டு, அரசையே எதிர்த்தார்களே? அதை இந்திரா தலைமையிலான ஆட்சி பார்த்துக் கொண்டு சும்மா இருக்குமா? அந்நிய நாட்டு நிதி மூலதனத்தை விவசாயத்தில் இறக்கினால், அதை வரவேற்று அரசை பாராட்ட வேண்டும். வங்கி கடன்மூலம் விவசாயிகள் திவாலா ஆனால் அதை எதிர்த்து "பாரதீய விவசாயிகள் சங்கம்" என்று போர்க்கொடி தூக்கலாமா? அதைத்தான் இந்திராகாந்தி எதிர்த்தார். அதனால்தான் அரச அடக்குமுறையை பஞ்சாப் விவசாயிகள் மேல் கட்டவிழ்துவிட்டார் அதனால் அவர்கள் பிரிந்தன்வாலா வுடன் சேரலாமா? சீக்கிய மத போர்வையுடன் "அரசை" எதிர்க்கலாமா? அதனால்தான் ராணுவத்தை அனுப்பி இந்திரா காந்தி "ஆபரேசன் நீல நட்சத்திரம்" என்ற பெயரில். "தங்க கோபுரம்" உள்ளே புகுந்து குருத்துவாராவில் இருந்த பிரிந்தன்வாலா உட்பட பாவி சீக்கியர்கள் நாலாயிரம் பேரை கொன்று குவித்தார். அதற்கு பதில் கொடுக்க அவரது "பாதுகாவலர்களாக' இருந்த சீக்கியர்களே அவரை சுட்டு கொள்ளலாமா? அதுவும் இன்றுதான் அந்த கொலை நடந்துள்ளது.

அதனால்தான் காங்கிரஸ்காரர்கள். பதிலடி கொடுக்க மூவாயிரம் சீக்கியர்களை வீடு புகுந்து கொன்றார்கள். அதுவும் ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் இருந்த இளம் சிறார்களான சீக்கியர்களை கொலை செய்தார்கள். அதை அறிந்த சீக்கிய தாயார்கள், தங்கள் ஆண் குழந்தைகளை பெண் வேடம் போட்டு வரும் கொலைகாரர்களிடம் இருந்து காப்பாற்றினார்கள். அத்தகைய வீரதீர செயல் செய்த காங்கிரஸ்காரர்களை " பெரும் மரம் சாயும்போது, அதன் அடியில் பல உயிர்கள் சாகத்தான் செய்யும்" என்று வீர வசனம், தத்துவ விளக்கம் தந்தவர்தான் முன்னால் பிரதமர் ராஜீவ் காந்தி.ஆனால் சீக்கியர்களோ, இந்திராவை கொலை செய்து "இனப் பழி தீர்த்த" வீரர்களான சட்வந்தர்சிங், பியாந்த் சிங், ஆகியோரையும், அவர்களது குடும்பத்தினரையும் கொண்டாடினார்கள். இது வரலாறு.

இவ்வாறு தங்கள் கொலகையான அந்நிய நிறுவங்களுக்கு நாட்டின் விவசாயத்தை விலை பேசியது தவறு என்று எதிர்த்த வீரமிகு விவசாயிகளை படுகொலை செய்து, அதற்காக தனது "இயற்கை சாவை" இழந்தவர் இந்திரா காந்தி. அதேபோல அவரது மகன் தாய்க்கு மகன் தப்பாமல் பிறந்தவன் என்று நீருபிக்க எண்ணி, "ஈழத்தமிழர்களை" இனப்படுகொலை செய்ய "இந்திய அமைதி படையை" அனுப்பியவர்.ஆயிரத்து ஐநூறு தமிழர்களின் படுகொலைக்கு காரணமாக இருந்தவர். அதன்விளைவால் அந்த ராஜீவ் காந்தி மரணம் எய்தியதாக அந்த வ்ழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கூறுகிறது. அப்படியானால் அவரும் அதாவது ராஜீவ் காந்தியும், தாயின் வழியில் தனது மக்கள் விரோத கொள்கைக்காக இன அழிப்பு செய்வதும், அதற்காக தனது உயிரையே கொடுக்க துணிவதும் கவனிக்க தக்கது.அதனால் நாம் அறிவது இருவருமே தங்கள் உயிரை துச்சமென மதித்து இயற்கை சாவை விரும்பாமல், தங்களது இன எதிரிகளை வேரோடு அழிக்க புறப்பட்டவர்கள்.


இந்த இருவரையும் போல அல்லாமல், தனது தாயாரிடமே அதிகார பசியால், "தகராறு" செய்ததால் சஞ்சய் காந்தி செயற்கையாக தனது உயிரை விமான விபத்து என்ற பெயரில் கொலை செய்யப்பட்டார். மேனகா காந்திக்கும், வருண் காந்திக்குமே வெளிச்சம். சஞ்சய் காந்தியை கொலை செய்ய சொன்னது இந்திரா காந்தி என்ற கருத்தும் இருக்கிறது. எபப்டியோ குடும்பத்தில் அது ஒரு இயற்கை மரணம் அல்லாத செயற்கை மரணம். ஒரு மானார் குடும்பத்தில் இது போன்ற உள்கொளைகளும், வெளிக்கொளைகளும் சாதாரண நிகழ்வுகளே. அது இங்குள்ள காங்கிரச்காரர்களுக்கு புரிய வாய்ப்பில்லை. எப்படியானாலும், அந்த குடும்பத்தவர்கள் "இயற்கை மரணத்தை விரும்பவில்லை" என்று இதிலிருந்து தெரிகிறது. அதிகார வெறி என்பது உயிரை விட உயர்ந்தது எனபது அந்த அதிகாரத்தை சுவைத்து பார்க்கும் மனிதர்களுக்கே உரிய குணம். சாதாரண மக்களுக்கு விளங்காது. விடுதலை போரில் உள்ள வீரர்களுக்கும் அது விளங்கும்.

குப்பை அள்ளாதவருக்கு "குட்பை" சொன்ன சென்னை.

சென்னை மாநகராட்சிக்கு மாயோர் தேர்தலில், குப்பை அள்ளுவது ஒரு முக்கிய பிடச்சனையாக ஆனது. முந்தைய நிர்வாகங்கள் பல மண்டலங்களை [ ஒரு மண்டலம் பத்து வட்டங்களை கொண்டது] தனியார் குப்பை அள்ளும நிறுவனங்களுக்கு தாரை வார்த்திருந்தது. அதனால் ஓனிக்ஸ் வந்தது. சரியாக வேலை செய்யவில்லைஎன்று சண்டை வந்தது. நீல் மெடல் பனால்கா வந்தது. குறைந்த டெண்டரில் கேட்டார்கள் என்பதால் கொடுத்தோம் என்றார் மாநகர மேயர் மா.சு. ஆனால் அவர்களும் படு மோசமாய் நடந்துகொண்டனர். வேலை செய்த வட்டங்களில் குப்பை கூடுதலாக குவிந்து கிடந்தது. மாசு வால் ஒன்றும் செய்யமுடியவில்லை. தேர்தலில் குப்பை ஒரு அரசியல் கோரிக்கையாக மாறியது.

மாநகராட்சியில் ஏற்கனவே "துப்புரவு தொழிலாளர்கள்" இருக்கிறார்கள். மாநகராட்சிக்கு மொத்தமாக "இருபதாயிரம்" பேர் துப்புரவு வேலைகளுக்கு தேவை. இருப்பதோ "நாலாயிரம் பேர்தான்". அதிலும் "அறுபத்தைந்து" விழுக்காடு பெண் துப்புரவு தொழிலாளர்கள். அவர்களுக்கும் ஏற்கனவே இருந்த அதிமுக நிராவகம் "இரண்டு ஷிப்டு மட்டுமே வேலை" என்று ஆணை அறிவித்திருந்தது. அதை மீறி, திமுக நிர்வாகம் மதியம் ஒரு மணிக்கு பிறகும் வேலை வாங்கி கொடுமை படுத்தினர். பெண்கள் துன்பப்பட்டனர். நாலு ஷிப்டு கூஓட வேலை வாங்கப்பட்டனர். இதை குடியரசு கட்சியின் துப்புரவு தொழிலாளர் சங்கம் எதிர்த்து.போராடியது.

காட்சி ஊடகம் ஒன்றில் மேயர் மாசு, ஒரு போய் கூறினார். துப்புரவு தொழிலாளருக்கு "90 ஒய்வு அறைகள்" கட்டி கொடுத்திருப்பதாக கூறினார். தொழிற்சங்கம் இல்லை என்று 'சவால்" விடுத்து. அறைகளை காணவில்லை என்று காவல்துறையிடம் புகார் கொடுத்து. சுவரொட்டி ஒட்டியது. மாயோர் மாசு, உடனடியாக மாநகராட்சி மனடலங்களில் இருக்கும் "பொறியாளர் அறைகளில்" துப்புரவு தொழிலாளர்கள் இருப்பது போல படம் எடுத்து வெளியிட அதிகாரிகளை பணித்தார். இப்போது எல்லாமே வெட்ட வெளிச்சம் ஆகிவிட்டது. சைதை துரைசாமி, ஐந்து லட்சம் வாக்கு வித்திடாசத்தில் வெற்றி பெற்றி விட்டார். இனி எண்ண செய்ய போகிறார்? மாநகராட்சி தனியாருக்கு துப்புரவு தொழிலை தாரை வார்க்காமல் தானே எடுத்து, 20000 ௦௦௦ தொழிலாளர்களை வேலைக்கு எடுத்து செயல்பட்டால் சென்னை சுத்தமாகும். இல்லாவிட்டால் இப்வரும் குப்பை அள்ளவில்லை என்ற பெயரை அள்ளலாம்.

Sunday, October 30, 2011

விவசாயிகள் தற்கொலை பதினாறு ஆண்டுகளில் மூன்று லட்சம்

இந்திய திருநாட்டில் அதாவது ஒரு பெரிய விவசாய நாட்டில், கடந்த பதினாறு ஆண்டுகளில் மட்டும், இரண்டரை லட்சத்தை தாண்டி, விவசாயிகளின் "தற்கொலைகள்" நடந்துள்ளன என்றால், இதற்கு யார் "பொறுப்பு?". இந்தியாவின் ஆட்சியாளர்கள் பொறுப்பு இல்லையா? குறிப்பாக மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திர பிரதேசம், மத்திய பிரதேசம், சட்டிஸ்கர் ஆகிய மாநிலங்களில் இந்த தற்கொலைகள் நடந்துள்ளன. அதாவது சிறு நில விவசாயிகளும், நடுத்தர விவசாயிகளும், சில பணக்கார விவசாயிகளும் இந்த கணக்கில் அடங்குவர். என் அவர்கள் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்?

அரசாங்கம் இத்தகைய விவசாயிகளுக்கு வங்கி கடன் கொடுக்கிறது. அதே அரசாங்கம் இந்த விவசாயிகளுக்கு "மான்சாண்டோ" என்ற அமெரிக்கா கம்பனியின் "மரபணு மாற்று பருத்தி விதிகளையும்" அளிக்க ஏற்பாடு செயகிறது. அந்த பருத்தி விதைகளை பயிரிட்டால் அதிகமாக பருத்தி விளையும் என்று அந்த தனியார் நிறுவனம் பரப்புரை செய்கிறது. அப்பாவி விவசாயி அதிகமாக லாபம் பேரா எண்ணி இதற்கான கடனையும் வாங்குகிறான். அத்தைகைய பருத்தியையும் வாங்குகிறான். பருத்தி விளைந்த பின் போதுமான மகசூல் இல்லையே என்று வருந்துகிறான். ஆனால் அவன் கடன் வாங்கிய வங்கிக்காரன் விடுவாதாக இல்லை. வீடு தேடி வந்துவிட்ட வங்கிகாரனை "ஈட்டிக்காரன்" போல விவசாயி எண்ணுகிறான். அவனது வருகையால் இவனது "மானம்" அந்த கிராமத்தில் கப்பல் ஏறுகிறது. விவசாயி தனது குடும்பத்திற்கே பதில் சொல்ல முடியாமல் திணறுகிறான்.

அதன் விளைவு "தற்கொலைதான்" என முடிவு கட்டுகிறான். சிலர் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளுகின்றனர். கொத்து, கொத்தாக மஹாராஷ்ட்ராவிலும், ஆந்திராவிலும் இத்தகைய தற்கொலைகளை நாம் தொடர்ந்து கேள்விபட்டோம். இப்படி கடன் மூலம் விவசாயியை "திவாலா" ஆகிய குற்றத்தை அரசு செய்யும்போது, பஞ்சாப்பின் சீக்கிய விவசாயி இந்திரா காந்தி களத்தில் கொந்தளித்து எழுந்தான். அவனை அமைப்பாகக அப்போது அங்கே "பாரதீய கிசான் சபா" இருந்தது. ஆனாலும் அரசு அந்த விவசாயிகளின் எழுச்சியை அடக்கியது. காவல்துறை மூலம் அடக்கினால், அதை எதிர்த்து போராடுவோம் என சீக்கிய இளம் விவசாயிகள் முடிவு செய்தனர். உடனே அரசு "ராணுவம்" கொண்டு ஒடுக்கியது. இனி பொறுப்பதில்லை என சீக்கிய விவசாயிகளும்,"ஆயுதம் தாங்கி பிரிண்டவாலே" பின்னால் அணி திரண்டனர்.

அது இந்திரா காந்தி காலம். இப்போதுள்ள மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா விவசாயிகள் அததகைய ஆயுதம் தாங்கும் நிலையை எடுக்காமல், "தற்கொலை" வழியை எடுத்துள்ளனர். இந்த செய்தியை கேள்விப்படும் இளம் விவசாயிகள் இனியும் ஏன் பொறுமையாக இருக்க வேண்டும் என எண்ண மாட்டார்களா? பதினாறு ஆண்டுகளில், கிட்டத்தட்ட மூன்று லட்சம் விவசாயிகளை ஒரு அரசு தற்கொலைகள் மூலம் கொல்ல வைத்தால் அந்த அரசுக்கு என்ன பெயர்? "உலகிலேயே பெரிய ஜனநாயக அரசு" என்று பெயர்.

பிரபலங்களின் இரங்கல் நிகழ்வுகளில் படிப்பினைகள்.

.
மூன்று நாட்கள் முன்னால், ஏ.அய்.டி.யு.சீ. என்ற அகில இந்திய தொழிற்சங்க மைய கவுன்சிலின் அதாவது சீ.பி.அய். கட்சியின் மைய தொழிற்சங்கத்தின் தமிழ்நாடு செயலாளர் தோழர் டி.ஆர்.எஸ்.மணி திடீரென காலமானார்.அவரது இறுதி ஊர்வலம் அவர் தங்கியிருந்த தொழிற்சங்க அலுவலகம் இருக்கும் சிந்தாதரிப்பேட்டை கோவூர் வைத்தியநாதன் தெருவிலிருந்து புறப்பட்டு, மைலாபூர் மின் இடுகாட்டில் எரித்தளுக்காக கொண்டு செல்லப்பட்டது. அங்கே இந்திய கம்யுனிஸ்ட் கட்சியின் அகில இந்திய செயலாளர் தோழர் டி.ராஜா, மாநில செயலாளர் தோழர் தா.பாண்டியன், கட்சியின் கட்டுப்பாட்டு குழு தலைவர் தோழர் ஆர்.நல்லகண்ணு, ,அதேபோல சீ.பி.எம். கட்சியின் மைய தொழிற்சங்கமான சீ.அய்.டி.யு. வின் மாநில பொதுசெயலாளர் தோழர் ஏ.சவுந்தரராஜன், சீ.பி.அய்.[எம்.எல்.} கட்சியின் தொழிர்ச்சனகமான ஏ.அய்.சீ.சீ.டி.சீ. தொழிற்சங்கத்தின் ஏ.எஸ்.குமார், திமுக வின் மைய தொழிற்சங்கமான தோ.மு.ச.வின் கோபால், ஆகியோர் பேசினர்.

எல்லோரும் மறைந்த டி.ஆர்.எஸ்.மணி அவர்களின் "குணா நலன்களை" பாராட்டி பேசினர். அதில் டி.ஆர்.எஸ்.மணி எப்படி தனது வாழ்க்கையையே கம்யுனிஸ்ட் கட்சிக்காக உழைத்தார் என்று கூறினார்கள். அவர் எப்படி "திருமணம் செய்துகொள்ளாமலேயே" கட்சிக்காக முழு வாழக்கையையும் அர்ப்பணித்தார் என்றும் கூறினார்கள். அவர் தனதுஉறவுக்காரர்களுடன் பெரும் ஊடாடல் வைத்துக்கொண்டவர் அல்ல என்றும், கட்சியின் முழு நேர பணியாளராக கட்சியையே சார்ந்து வாழ்ந்தார் என்றும் பாராட்டினார்கள். ஆனால் அவரது உடலை அவரது உறவுக்காரர்களிடம் விட்டுவிட்டு கட்சி தலைவர்கள் வெளியேறினர். அந்த உடலை வைத்து கொண்டு, மறைந்தவரின் உறவினர்கள் பூசைகள், சடங்குகள் செய்ய தொடங்கிவிட்டனர். இவையெல்லாம் டி.ஆர்.எஸ் மணி உயிரோடு இருக்கும் போது ஏற்றுக் கொண்ட "சம்பிராதயங்களா?"

ஒரு மனிதர் தன் வாழ்கையை எப்படி வாழவேண்டும் என்று தீர்மாநித்து, அதன்படி வாழ்ந்து மடிகிறார். அவரது மரணத்திற்கு பிறகு, அவரது விருப்பங்களை நிரப்புவதுதான் அவருக்கு மடர்வர்கள் செய்யும் மரியாதை. அதனால் மறைந்த மனிதரின் "கொள்கைகளை" கடைப்பிடித்து அவரது இறுதி அஞ்சலி செய்யப்படவேண்டும். இதுதானே "மானுடம்?". அதை விடுத்து மறைந்த மனிதரின் "விருப்பங்களுக்கு " எதிராக அவரது உடலை அவரது சொந்தங்களிடம் ஒப்படைப்பதும், அந்த குடும்பத்தினர் தங்களுக்கு தெரிந்த ஒரே அறிவான "சடங்குகளையும், சம்பிரதாயங்களையும்" கடைப்பிடிப்பதையும் எப்படி ஒரு இயக்கம் அங்கீகரிக்க முடியும்?

குறிப்பிட்ட விசயத்தில், சம்பந்தப்பட்டவர் கம்யுனிஸ்ட் கட்சியின் "கட்டுப்பாட்டு குழுவின்" உறுப்பினர் வேறு. அபப்டி இருக்கையில், கம்யுனிஸ்ட் கட்சியின் ஒரு முழு நேர ஊழியரை அவரது மரணத்திற்கு பிறகு "செங்கொடி போர்த்தி " இறுதி அஞ்சலி செய்யும் கட்சி நடைமுறையை மட்டுமே கட்சி தலைமை செய்திருக்க வேண்டும். அதை விடுத்து வீட்டில் உள்ள உறவினர்கள் கேட்டார்கள் என்று காரணம் காட்டி, அவரது உடலை அவர்கள் கைகளில் ஒப்படைப்பது எப்படி சரி? அவர்களும் மறைந்தவறது உணர்வுகளை மதிக்காமல் தங்களது உணர்வுகளை முதன்மை படுத்தி, "சடங்குகள்" மூலம் அவரது உடலை அடக்கம் அல்லது எரியூட்டல் செய்வத்க்ஹு முறையாகுமா? இந்த கேள்வியை நான் தோழர் நல்லகண்ணு வசம் அந்த இடுகாட்டிலேயே கேட்டேன். இயக்கங்கள் தோழர்களது மறைவிற்கு பிறகு, குடும்பத்திற்கும் இயக்கத்திற்கும், கொள்கை அளவில் முரண்பாடு வந்தாள் எப்படி அதை கையாள்வது என்பது பற்றிய தெளிவை பெற்றிருக்க வேண்டும். என்ற் "படிப்பினையி" இதன் மூலம் நாம் பெறவேண்டும்.


அதேபோல இன்று வேறு ஒரு தோழரின் இருதுய் நிகழ்வில் படிப்பினை கிடைத்தது. அது கடைசியாக திமுகவில் இறக்கும்போது மறைந்த க.சுப்புவின் இறுதி நிகழ்வு. இந்த எரியூட்டல் நிகழ்வும், சுப்புவின் " லாயிட்ஸ் சாலை வீட்டிலிருந்து" புறப்பட்டு, மைலாபூர் மின் இடுகாட்டில் எரியூட்டலுக்கு கொண்டு வரப்பட்டது. அங்கே திருச்சி சிவா, சீ.பி.அய். கட்சியின் எஸ்.எஸ்.தியாகராஜன்,, நக்கீரன் காமராஜ், தையல் தொழிலாளர் சங்கத்தினர், மீ.து.ராஜ்குமார், ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பை சேர்ந்த சுகு, ஆகியோருடன் நானும் கலந்து கொண்டு பேசினேன். கூட்டம் குறைவாக இருந்தது. ராஜபாளையம் சட்டமன்ற உற்ப்பினராக, சீ.பி.அய். யில் இருந்ததையும், திமுக சென்றதையும் அங்கே பிரபல பேச்சாளராக இருந்ததையும், பிரபல தொழிர்ச்சங்க தலைவராக செயல்பட்டு பல தொழிலளர்களுக்கு சுப்பு உதவிகள் செய்ததையும் அவரவர் நினைவு கூறினர்.

அன்னாரது மறைவிற்கு குறைந்த்தது தங்களது "இறுதி மரியாதையை "கூட செலுத்துவதற்கு தமிழர்கள் மத்தியில் " மனித தன்மை குறைவாக" இருக்கிறதே என்று திருச்சி சிவா அவ்ருத்தப்பட்டார். இதுதான் நாம் அங்கே கற்றுக் கொள்ள வேண்டிய "படிப்பினையாக" இருந்தது.

Saturday, October 29, 2011

க.சுப்பு காலமானார்.

இன்று திமுக காரர் என்று அறிவிக்கப்படும் க.சுப்பு இன்று காலை காலமானார். அவர் முதலில் தனது பொதுவாழ்க்கையை "கம்யுனிஸ்ட் கட்சியில்" தொடங்கியவர். ராஜபாளையம் நகரில் தொழிற்சங்க அரசியலில் கம்யுனிஸ்டுகள் கோலோச்சிய நேரம். இந்திய கம்யுனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உருப்பினார்கவும் அந்த நகரிலிருந்து டேஹ்ர்ந்தேடுக்கப்பட்டவர் சுப்பு. அதன்பின் அங்குள்ள ஆலை அதிபர்களின் ஒடுக்குமுறைக்கு குடும்ப ரீதியிலேயே அவர் பாதிக்கப்பட்டார். அதில் கட்சியின் பாதுகாப்பும் அவருக்கு போதுமான உத்தரவாதத்தை ஏற்படுத்தவில்லை. அதனால் கட்சியிலிருந்து விலகி, திமுகவில் சேர்ந்தார். எந்த கட்சிக்கு சென்றாலும் சுப்புவிர்கான சுதந்திரம் பாதிக்கப்படும் நிலையே இருந்தது. கம்யுனிஸ்ட் கட்சியில் இருக்கும்போதே , நக்சல்பாரி இயக்கத்தின் ஆதரவாளராக இருந்தார். அந்த புரட்சிகர இயக்கத்துடன் தொடர்பும் வைத்திருந்தார். அதனாலேயே பல காவல்துறையின் உளவுத்துறையின் "தொல்லைகளை" சந்தித்தார்.

திமுக வில் பிரபல பேச்சாளராக ஆனார். "இடி, மின்னால்,மழை" என்று அழைக்கப்பட்ட மூன்று பிரபல பேச்சாளர்களில், " துரைமுருகன், சுப்பு, ரகுமான்கான்," ஆகியோர் வரிசைப்படுத்தப்பட்டனர்.இப்படி சென்ற இடமெல்லாம் சிறப்பு சேர்த்தார். ஆனாலும் தனது புரட்சிகர தொடர்புகளை விடவில்லை. புரட்சியாளர்களுக்கு ஆதரவாக ஒரு மனித உரிமை அமைப்பை உருவாக்க அவர்கள் சுப்புவை நாடினர். குறிப்பாக அன்றைய புரட்சிகர இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரான ஏ.எம்.கே. என்று அழைக்கப்படும் கோதண்டராமன் வழக்கறிஞராக இருந்த காலம் தொட்டு சுப்புவுடன் தொடர்பு என்பதால், அவரை நாடி அத்தகைய ஒரு இயக்கம் தேவை என்றும், அதற்கு சுப்பு தலைமை தாங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.


சுப்புவும் சம்மதித்தார். அதையொட்டி "தமிழ்நாடு சிவில் உரிமை கழகம்" என்ற அமைப்பு சுப்பு தலைமையில் தோற்றுவிக்க பட்டது. இந்த உண்மை தெரிந்திருந்தும் கூட, கருணாநிதி சுப்புவை சிறந்த பேச்சாளர் என்பதாலும், நல்ல ஊழியர் என்பதாலும் திமுக வில் சேர்த்து கொண்டார். எம்.ஜி.ஆர். கொடுத்த தொந்திரவால், கலைஞர் எதிர்க்கட்சி தலைவராக செயல்பட கடினப் பட்ட நேரம். களிஞருடன் வாகனத்தில் கட்சியின் போது குழுவிற்கு சுப்புவை கூட்டி செல்லும்போது, தென் மாவட்டங்களில் திமுக விற்கு வேர்கள் அறுந்து கிடக்கின்றன என்ற உண்மையை சுப்பு கூற பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்த கலைஞர் "திருச்செந்தூர் கோவில் நகை திருட்டில் ஆ.ர.எம். வீரப்பனை" எதிர்த்து "மதுரையில் புறப்பட்டு திருச்செந்தூர்" செல்லும் "நடைப்பயணத்தை" கிராமங்கள் வ்ழியாக சென்று கட்சியின் பலத்தை மீண்டும் கூட்ட கலைஞர் திட்டமிட்ட வரலாறு கூட உண்டு.

பிறகு சுப்பு "நக்கீரன்" இதழை தொடங்கினார். அதன் சில இதழ்கள் வந்திருந்த நிலையில் விடுதலை புலிகளின் ஆலோசகர் "ஆண்டன் பாலசிங்கத்தின்" நேர்காணலை வெளியிட்டார் சுப்பு. அதற்காக சுப்புவை காண "யோகியும், பாலசிங்கமும்" அவரது வீட்டிற்கே வந்தனர். தராசு இதழிலிருந்து வெளியே வந்திருந்த ராஜகோபால், சுப்புவிடம் நக்கீரன் இதழை வாங்கினார். அதன் பிறகு அந்த இதழ் பிரபலம் அடைந்ததும் அனைவருக்கும் தெரியும். 1991 ஆம் அனடின் ஜெயலலிதா ஆட்சியை விமர்சித்து எழுதி வந்த நக்கீரன் இதழில் சுப்பு, "இங்கே ஒரு ஹிட்லர்" என்ற தொடரை எழுதியது மிகவும் பிரபலாமான ஒரு செய்தி.

சுப்பு அதன்பிறகு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். அங்குள்ள சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சட்டமன்றத்தில் எப்படி, நடந்துகொள்ளவேண்டும் என்பது பற்றி வகுப்பு எடுக்க வைத்தார்கள். சுப்பு ஒரு பிரபல "நாடாளுமன்றவாதி". ஆகவே அவரை காங்கிரஸ் கட்சி அப்படி பயன்படுத்தியது. சிரிப்பு, சிரிப்பாக பேசுவதில் சுப்பு கெட்டிக்காரர். அதன்பிறகு மீண்டும் சுப்பு திமுக வந்து சேர்ந்தார். அதற்குள் அவருக்கு உடல் நிலை சரியிலாமல் அதிகமாக வெளியே செல்வது இல்லை என்ற நிலை வந்தது. இன்று காலை இசபெல்லா மருத்துவமனையில் மயிலாப்பூரில் அவர் காலமானார். அவரது உடல் அவரது "லாயிட்ஸ் காலனி : இல்லத்தில் வைக்கப்பட்டது. நாளை காலை இறுதி அஞ்சலி செலுத்தப்படும்.

Friday, October 28, 2011

டில்லிக்காரன் தலையில் "மிளகாய்" அரைக்கிறானா?

இன்று சென்னை உயரநீதிமன்றம் முன்பு மூன்று தமிழர் தூக்கு வழக்கு விசாரணை வந்தது. ஏற்கனவே எட்டு மாதங்களுக்கு தடைவிதிக்கப்பட்ட அந்த தூக்கு தண்டனை பற்றிய இடைக்கால தீர்ப்பு மத்திய அரசை நிலைகுலைய வைத்திருந்தது. அதனால் அவர்கள் தாங்கள் இன்று கொடுத்த "பதில் மனுவில்" முறையான வழக்கு விவகாரத்தை பேசுகின்ற நீதிமன்ற நடைமுறைகளை தாண்டி, சட்ட விவரங்களைதாண்டி, "அரசியல் பேசியுள்ளார்கள்". இதுதான் மத்திய அரசின் உள்துறையின் லட்சணம் என்பதை காட்டியுள்ளனர். அதில் மரண தண்டனையை எத்ரிகொள்ளும் மனுதாரர்கள், தங்களுக்கு " தண்டனையை அமுல்படுத்தும் நாட்கள் அல்லது காலம் தள்ளிப்போனதால், அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக" குற்றம் சாட்டியுள்ளனர் என்றும், அது தண்டனையை குறைக்க போதிய காரணம் அல்ல என்றும் வாதிட்டுல்லார்கள். இது சட்ட ரீதியான பதில் வாதம்தான்.

அதேசமயம் மரண தண்டனையின் அறிவிப்பு "பிழையானது" என்று அவர்கள் வாதிடவில்லை என்றும் பதில் மனு கூறுகிறது. அதுவும்கூட சட்ட வாதம்தான். தண்டனையை குறைப்பதற்கான சட்ட பிரிவுகள் இதுபோன்ற " கடும் குற்றங்களுக்கு" பொருந்தாது என்று வாதிட்டுள்ளனர். அதுவும் சட்டப்படி வாதம்தான். பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு வைக்கும் யாருக்கும் இந்த மரண தண்டனை நிறைவேற்றுவது மட்டுமே குற்றம் செய்வதிலிருந்து தடுக்க உதவும் எனபதும் அவர்கள் தரப்பு சட்ட வாதம்தான். ஆனால் " விடுதலை புலிகளின்" மீதான தஹ்டையை நீக்க சொல்பவர்கள், அரசியல்வாதிகள், முன்பு தடை கேட்டவர்கள், சமூக அமைப்புகள், முன்னாள் நீதியரசர்கள், மாநில அரசுக்கு மனித உரிமையாளர்கள் எழுதும் கடிதங்கள், மத்திய அரசுக்கு முன்னாள் நீதியரசர்கள் எழுதும் கடிதங்கள் இவையெல்லாம் மரண தண்டனையை குறைக்க போதுமான ஆதரங்கள அல்ல என்று எழுதியுள்ளார்கள். இது யாருக்காக அந்த நீதிமன்ற பதிலில் எழுதப்படுகிறது?

திமுக, அதிமுக, வைகோ, கிரிஷ்ணய்யர், ஆகியோர் கொடுக்கும் அல்லது கொடுத்த கருத்துக்களை மேற்கோள் காட்டி பதில் சொல்ல எவ்ண்டிய அவசியம் இந்த மத்திய உள்துறைக்கு என் வந்தது? இந்த தண்டனை நிறைவேற்றத்தை மத்திய உள்திரை ஒரு "சட்ட ரீதியான " அணுகுமுறையில் பார்க்க வில்லை. மாறாக "அரசியல் ரீதியான" அணுகுமுறையில் மட்டுமே பார்க்கிறது எனப்டஹ்ர்கான ஆதாரங்களாக இவை இருகின்றன. சரி. மத்திய அரசுக்குத்தான் "த்மிழின எதிர்ப்பு அரசியல், மாநிலார்சு எதிர்ப்பு அரசியல்" என்று தேவையற்ற அரசியல் சேட்டைகளில் ஈடுபாடு உள்ளது எனபது புரிந்து கொள்ள முடிகிறது. மாநில அரசுக்கு என்ன வந்தது? , அவர்கள் ஏன் இந்த மூவர் மனுக்களை "தள்ளுபடி" செய்ய கூறி மனு போட்டுள்ளார்கள்? இது ஒரு "மில்லியன் டாலர் கேள்வி".

மாநில அரசு "கடந்த கல ஆட்சியைவிட" தாங்கள் தமிழர்களுக்காக விடாப்பிடியாக வேலை செய்பவர்கள் என்று காட்டி வார விருப்பம் உள்ளவர்கள் என தெரிகிறது. சட்டமன்ற டேஹ்ர்தலை தமிழர் நலன் என்று கூறி வெற்றி பெற்ற அரசு இது. உள்ளாட்சியிலும் அதே தமழர் நலன் காக்கும் அரசு என்ற சொற்கள் பயன்பட்டு வெற்றியை தேடி தந்து விட்டன. மூன்றாண்டுகளில் வார இருக்கும் நாடாளுமன்ற தேர்தலிலும் அதே போல "நாற்பது" இடங்களையும் பிடிப்பது அவர்களின் நோக்கம். அதற்காக தாங்கள் தொடர்ந்து தமிழர் நலன் காக்கும் கட்சி என்ற பெயரை தக்க வைக்க பெரும் விருப்பம் கொண்டவர்கள். அபப்டி இருக்க எப்படி அவர்கள் இந்த மரண தண்டனை அகிதிகள் மூவரின் மனுவை "தள்ளுபடி" செய்யசொன்னார்கள் எனபதே கேள்வி.

ஆமாம். அதற்காகவே சொன்னார்கள் எனபதே பதிலாக இருக்க முடியும். எதற்காக? மூன்று தமிழர் உயிர் காக்க தங்கள் கட்சி மட்டுமே "சாதித்தது" என்று பெயர் எடுக்க வேண்டும் என்பதே அவர்களது அவாவாக இருக்க முடியும். அதாவது சென்ற ஆட்சியாளர்கள் செய்யாத "தமிழர் நலனை" நாங்கள் மட்டுமே செய்தோம் என சாதிக்க வேண்டும். மத்திய அரசின் தமிழர் விரோத போக்கு என்ற அரசியலை எதிர்த்து, தாங்கள் மட்டுமே தமிழர் நலன் காக்கும் அரசியல் என்பதை பதிவு செய்ய வேண்டும். அதற்காக ஏன் இந்த நீதிமன்ற வழக்கில் "குழப்பம்" செய்கிறார்கள்?

தாங்கள் இந்த மரண தண்டனை குறைப்பு செய்வதில் "அரசியல்" நடத்தலாம் என்று நீண்ட கால கனவு கண்டு கொண்டிருந்தால், எங்களுக்கு சந்தர்ப்பம் தராமல் நீங்கள் ஏன் நீதிமன்றத்தை நாடினீர்கள்? என்பதுதான் அவர்களது பார்வையாக இருக்க முடியும் என்று தெரிகிறது., அதாவது அதிமுக விற்குதான் மரண தண்டனை குறைக்கும் "பெயர்" போய் சேர எவ்ண்டும். மாறாக அதுவே நீதிமன்றங்களுக்கு போய் சேர்ந்தால் அதையும் "கருணாநிதி" பயன்படுத்தி தாங்கள் நாற்பது தொகுதிகளையும் பிடிப்பதை உடைத்து விடுவார் என்பதே அந்த கட்சியின் "அறிவார்ந்த" எண்ணமாக இருக்கும். இப்படி இவர்கள் எல்லாம் மூன்று உயிர்கள் மீது "அரசியல்" செய்பவர்கள். ஏற்கனவே நாடாளுமன்ற தேர்தல் நேரம், இதே அரசியல் கட்சிகள் எல்லோருமே "வன்னிபோரை" அவித்துக் கொண்டு அரசியல் செய்யவில்லையா? அதுபோல இப்போது மூன்று தமழர் உயிர் காப்பு ஒரு அரசியலாக ஆகிவிட்டது.

எது எப்படியோ. ஆளும்கட்சியின் "தயவை" நாடி நிற்பதுதான் தமிழர்களுக்கு உள்ள ஒரே நிலைமை. அதனால் நாம் நமக்கு சாதகமாக சிந்திப்பதும், அதற்கேற்றவாறு "காய் நகர்த்துவதும்" செய்யவேண்டும். தமிழக ஆட்சியாளர்கள் நாம் சுட்டி காட்டுவது போல, அமைச்சர்வை தீர்மானத்திலேயே "மரண தஹ்ண்டனையை" குறைக்கும் "சட்டரீதியான" செயல்[பட்டை தைரியமாக எடுத்திருந்தால், எதற்காக நம்மவர்கள் நீதிமன்றம் செல்ல வேண்டிய நிலை வந்திருக்கும்? அதை தாங்கள் செய்யாமல் "என்னை அன்ம்பு" என்று மட்டும் முழக்கம் வைத்தால் "திக்கு தெரியாமல் தஹ்விக்கும் தமிழன் நீதிமன்றம் செல்லாமல்" என்ன செய்வான்? இந்த செய்தியை நாம் உரக்க கூவ வேண்டும். ஏன் என்றால் "ஆட்சியாளர்களை குழப்பும்" சித்தங்கள் அதிகாரிகளாக இருகிறார்கள். அந்த அதிகாரிகள் சொள்ளை கேட்டுவிட்டு, கிரிஷ்ணய்யர் போன்ற நீதியரசர்களின், பி.யு.சீ.எல். போன்ற சட்ட வல்லுனர்களின் பேச்சை கேட்காமல் ஒரு அரசு செயல்பட்டதால்தான், நீதிமன்ற படிக்கட்டுகளில் ஏற வேண்டிய நிலைமை தமிழனுக்கு வந்தது. இத்தகைய விவரங்களே நாம் வாதம் செய்யவேண்டியவை.


கீழே இருப்பது மத்திய, மாநில அரசுகளின் விளக்க மனுக்கள்.{ ஆங்கிலத்தில்}

Strongly opposing the petitions by three Rajiv Gandhi assassins challenging their death sentences, the Centre on Friday said the delay in the disposal of the clemency pleas was not a valid ground for commutation of capital punishment.
“However long it may be, is not a mitigating circumstance or can be construed as a valid ground for commutation of death sentence and in any event does not reduce the gravity of the crime,” the Centre said in its counter-affidavit in response to the petitions filed by Murugan, Santhan and Perarivalan.

On August 30, a division bench comprising Justices C. Nagappan and M. Satyanaryanan, had stayed for eight weeks the execution of the trio.

When the petitions came up on Friday, the Judges adjourned the hearing on the petitions to November 29 as the Supreme Court was hearing a petition for transferring the petitions to another High Court.

In the affidavit on behalf of the Centre, Joint Secretary (Judicial) in the Union Home Ministry, J.L. Chugh, pointed out that the power of the President under Article 72 of the Constitution “is a discretionary power which cannot be taken away by any statutory provision."

The power cannot be altered, modified or interfered with in any manner whatsoever by any statutory provision or authority, the affidavit said, adding that “exercise of power under Article 71 of the Constitution is not curtailed by any limitation as to the time frame within which such power conferred might be exercised."

Asserting that deterrent punishment alone could prevent other potential offenders from committing such crimes, the counter-affidavit said it was also likely to dissuade people from associating in future with any terrorist organisation in committing such diabolical and heinous crimes.

Besides, the death sentence awarded by the trial court had been confirmed by the Supreme Court, which had also dismissed review petitions filed by them, the Centre said.

The secretary said that since the petitioners had not challenged rejection of their mercy petitions but only the delay in rejecting them, they were liable to be dismissed on that ground alone.

Rejecting the allegation of “discrimination” in the rejection of the mercy petitions, the affidavit said that the President after due consideration had rejected all the three petitions.

The Centre said that “just because some eminent personalities, social organisations, political parties, MPs, MLAs, former judges and jurists have written to the government of Tamil Nadu or to the President of India it cannot be considered to be a valid ground to commute the death sentence awarded to the petitioners into life imprisonment."

If such views were to be considered as legally valid and sufficient to commute the death sentence awarded to the petitioners into life imprisonment, “that will constitute a bad precedent and in future is likely to create and be a cause for communal and religious protests and unrest.

It was pertinent to mention here that some leaders of political parties/social organisations “continue to support LTTE for their own vested interests,” the Centre said.

“They are now supporting the commutation of the petitioners’ death sentence into life imprisonment in order to seek political advantage from the issue. Some of these political parties while ruling the State or while being part of the government of India had recommended a ban on the LTTE and also recommended the rejection of the mercy petitions,” the affidavit said.

Pointing out that the main ground of challenge was “delay in considering and disposing of their mercy petitions and it had caused mental agony and hardship to them,” the affidavit quoted the petitioners as saying “the delay in disposal of our mercy petitions also gave the three of us a hope that we may be given an opportunity to live. We have, therefore, putting aside out agony and shadow of death, equipped ourselves educationally...”

Admitting that the petitioners were lodged in jail for the past several years, the affidavit said they lived normal lives in prison like other prisoners and given opportunities to pursue education of their choice.

The Centre said the allegation of violation of fundamental rights was “an afterthought” after rejection of their mercy petitions.

The Centre said Murugan and Santhan were Sri Lankan citizens and hardcore militants of LTTE, who infiltrated into India clandestinely with the sole intention of assassinating Rajiv Gandhi.

Tamil Nadu's affidavit

In a separate affidavit, the Tamil Nadu government said the State Governor had rejected the mercy petitions “as there are no extenuating circumstances warranting mercy."

The Principal Secretary to the State Home Department, Rameshram Mishra in the affidavit on behalf of the government declined to remark on the claim about public support for commuting the death sentence and called for dismissal of the mercy pleas.

Thursday, October 27, 2011

நிலக்கரி குறைபாடு அணு உலைகளை நியாயப்படுத்தவா?

இன்று நாடெங்கும் நிலக்கரி சுரங்கங்கள் தெலுங்கானா போராட்டத்தாலும், மற்றும் பல காரணங்களாலும், செயல்படவில்லை என்பதால், அனல் மின் நிலையங்களுக்கு தேவையான நிலக்கரி கிடைக்கவில்லை என்பது பொதுவாக வருகின்ற செய்தி. மின் உற்பத்திக்கு, "நீர் வழி மின் உற்பத்தி", எனபது ஹைட்ரோ பவர் என அழைக்கப்படுகிறது. அது தமிழ்நாட்டில் குந்தா, பைகாரா, மேட்டூர், கோதையாறு, சேர்வலாறு, மணிமுத்தாறு - மேல் அணை, கீழ் அணை என்று பல அணைக்கட்டுகளில் இருந்து நீர் சக்தியின் ஆற்றலை பயன்படுத்தி "மின் சக்தியை" உற்பத்தி செய்யும் வகை. அடுத்து நிலக்கரியை பயன்படுத்தி "அனல் மின் நிலையங்கள்" மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் முறை.

அந்த வகையில்தான் இந்தியா எங்கும் பல அனல் மின் நிலையங்கள் உருவாகின்றன. அவற்றில் என்.எல்.சீ. என்று அழைக்கப்படும் நெய்வேலி அனல் மின் நிலையம், சென்னையில் உள்ள எண்ணூர் அனல் மின் நிலையம், தூத்துக்குடி அனல் மின் நிலையம், வட சென்னை அனல் மின் நிலையம், போன்றவை அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டும் , சமயநல்லூர், பிள்ளையார்பட்டி, போன்ற தனியார் அனல் மின் நிலையங்களும் தோன்ற தொடங்கின. இத்தகைய அனல் மின் நிலையங்களுக்கு நிலக்கரி சுரங்கங்களில் இருந்து வரவேண்டும். ராநிகுன்ச் என்ற இடத்திலிருந்து, ஜாரியா வந்து, பாரதீப் வழியாக, தூத்துக்குடிக்கு கப்பல் வழியாகவும், விசாகப்பட்டினத்திலிருந்து தொடர்வண்டி மூலமும், கப்பல் மூலமும் இந்த நிலக்கரி வந்து மின் உற்பத்திக்கு பயன்படும். அதற்காக தமிழக அரசின், "பூம்புகார் கப்பல்கள்" பயன்படுத்தப்படும். அததகைய கப்பல்களை வாங்குவதில்தான் எம்.ஜி.ஆர். காலத்தில் கலைஞர் கிளப்பிய "கப்பல் பேர ஊழல்" என்பது வெளிவந்தது.

இந்தியா பவர் பிளான்ட் என்ற மத்திய அரசின் நிறுவனம் மூலம் இந்த நிலக்கரி விநியோகம் நடக்கும். அதற்காக " கோல் மினிஸ்ட்ரி" என்ற மத்திய அரசின் "நிலக்கரி அமைச்சகம்" ஒரு "லின்கேஜ் கமிட்டி கூட்டம்" என்ற தொடர்பு குழு கூட்டம் போடுவார்கள். அதில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் எவ்வளவு நிலக்கரி வேண்டும் என்று கேட்டு அதை ஒட்டி முடிவு செய்வார்கள். இந்தியா எங்கும் கிடைக்கும் அரசுசார் நிலக்கரி சுரங்கங்களில் இருந்து உற்பத்தி ஆகும் நிலக்கரியை, இவ்வாறு பகிர்ந்து அளிப்பார்கள். அப்படி ஒரு கூட்டம் 2004 ஆம் ஆண்டு நடந்தது.அந்த கூட்டத்தில் கிடைக்கும் அளவையும், மாநிலங்களின் தேவையையும் பார்த்தால் முரண்பாடாக இருக்கிறது என்று கூறிய நிலக்கரி அமைச்சகம் ஒவ்வொரு மாநிலத்திற்கும் கொடுக்கும் நிலக்கரி அளவை குறைக்கும்படி கேட்டுக் கொண்டது. அப்போது சில மாநிலங்கள் தங்கள் தேவையை குறைக்க விரும்பவில்லை. ஆனால் தமிழ்நாடு உட்பட சில மாநிலங்களின் அதிகாரிகள் தங்களுக்கு தேவைப்படும் அளவு என்பதை குறைக்க சம்மதித்தனர்.


அதன்பிறகு தனியாரிடம் நிலக்கரி வாங்கும் பழக்கம் அதிகமானது. இந்திய அரசு பல நிலக்கரி சுரங்கங்களை "தனியாருக்கு தாரைவார்த்து". அவற்றில் இருந்து வாங்கும் நிலக்கரிக்கு சம்பந்தப்பட்ட பொறுப்பு அதிகாரிகளுக்கு "கையூட்டு" கிடைத்து. இந்தியா முழுவதும் அனல் மின் நிலையங்களுக்கு தேவையான நிலக்கரியை மத்திய அரசு தனது நேரடி உற்பத்தியிலிருந்து, "எழுபத்தைந்து" விழுக்காடுதான் கொடுத்து. மீதியை "தனியாரிடம்" வாங்கிக் கொள்ள பணித்து. அதபடி தனியாரிடம் நிலக்கரி வாங்கும் அதிகாரிகள் அந்த "ஊடாடலில்" அதிகமாக் லாபம் பெற்றனர். 2005 ஆம் ஆண்டிலிருந்து, 2007 ஆம் ஆண்டு வரை , தமிழ்நாடு மின்வாரிய தலைவராக இருந்த ஹன்ஸ்ராஜ் வர்மா அய்.ஏ.எஸ். பற்றி நாம் தனியாக தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாமல் இருப்பதற்கு இந்த அதிகாரிகளே காரணமாகி விடுகிறார்கள்.

இப்போது தமிழ்நாடு மின்வாரிய தலைவராக இருப்பவ்ரும் அவரே. அவர் இப்போது "அலுவலகத்துக்கே" வருவதில்லை என்ற புகாரும் இருக்கிறது. இதே மனிதர் அடுத்து வாத திமுக ஆட்சியிலும் அதே பதவியை வகித்து, ஆற்காட்டாருக்கு நெருக்கமாக இருந்தார். அதிக லாவில் தனியாரிடம் மின்சாரத்தை வாங்கும் நிலைக்கு அரசு தள்ளப்பட்டது. மீண்டும் அதே இடத்திற்கு இப்போது வந்துவிட்டார். மீண்டும் இப்போதுள்ள அமைச்சருக்கும நெருக்கமாகவே உள்ளார். பழைய உறவும் அதில் இருக்கலாம். தனியாரிடம் வாங்கும் "இருபத்தைந்து" விழுக்காடு நிலக்கரியில் எத்தனை விழுக்காடு இந்த "பெரிய மனிதர்களுக்கு" என்பதை அரசுதான் ஆராய வேண்டும்.இப்போது நிலக்கரி உற்பத்தி சீராகி வருகிறது. அதனால் இந்த ஆய்வு தேவை.

கோல் பிளாக்ஸ் எனப்படும் "நிலக்கரி ஒதுக்கல்கள்" உருவாக்கப்பட்டுள்ளன. அதில் தமிழ்நாடு மின்வாரியமும், மகாராஷ்டிரா மின்வாரியமும் சேர்ந்து "உடன்குடியில்" ஒரு நிலக்கரி மூலம் மின் உற்பத்தி நிலையம் திட்டமிடப் பட்டது. அது என் இன்னமும் தொடங்கப்படவில்லை? அதேபோல மேட்டூர் அனல் மின் நிலையத்திற்கு இப்போது இருக்கும் நிலக்கரி சேமிப்பு சில நாட்களுக்குத்தான் வரும். அவர்களுக்கு மின்வாரிய "தொடர்பு ஒதுக்கீட்டில்" நிலக்கரி ஒதுக்கப்படவில்லை. அதாவது அவர்கள் அதில் கேட்டு பெறவில்லை. எப்படி அந்த தேவையை சமாளிக்க போகிறார்கள்? இப்படிப்பட்ட கேள்விகளும் அதிகாரிகள் பற்றி இருக்கிறது. அரசு இந்த தைகாரிகளை "கேள்விகள்" கேட்குமா? அதன்மூலம் தமிழக மக்களுக்கான தேவையை நிரப்ப முயற்சி செய்யுமா? இல்லையென்றால் "அணு உழைத்தான்" ஓர் தீர்வு என்று "பயமுறுத்தும்" டில்லிகாரர்களுக்கு "பலியாகிவிடுமா?".

Tuesday, October 25, 2011

பலரும், சிலரும் யார்? யார்?

காசை கரியாக்குவர் பலர்.
கரியை, கருமருந்து கரியை
காசாக்குவர் சிலர்.
ஒன்று முழு தமிழ்நாடு.
மற்றொன்று சிவகாசி.
இன்று தீக்கதிர் தருகிறது
தீபாவளிக்கு ஒரு சிறப்பிதழ்???.
அதில் ஒரு கட்டுரை.
தப்பி, தவறி வெளிவந்ததா?
கவனமாக உள் நுழைந்ததா?
நரகாசுரன் நேற்றும், இன்றும்.
காட்டு வளங்களை பாதுகாக்கும்
நரகனை கொன்று ஆக்கிரமிக்கும்
அடாவடிகள். மக்கள் நரகன் பக்கம்.
அடாவடிகள் சூழ்ச்சி.
நரகனை கொன்ற நாளை
தீப ஒளி நாளுடன் இணைத்து
புராணம் ஆக்கிய சதி
இதுதான் கட்டுரை பொருள்.
எப்படி? எப்படி?
தமிழினம் நடத்தும்
ஊடுருவலா? ஊடறுப்பா?

Monday, October 24, 2011

தீபாவளியை தீவாளி என விடேல்

தீபாவளியை தீவாளி என விடேல்
--- புரட்சி கவிஞர் பாரதிதாசன்.

நரகனை கொன்ற நாள்
நல்விழா நாளா?
நரகன் யார்? நல்லனா? தீயனா?
அசுரன் என்றவனை அழைக்கின்றாரே?
இராக்கதன் என்றும் இயம்புகின்றாரே?
அசுரன் என்றால் தமிழன் என்றல்லோ பொருள்?
பழக்கம் தனில் ஒழுக்கம் இல்லையேல்
கழுத்து போயினும் கைக்கொளல் வேண்டாம்.
அதனால் தீபாவளியை தீவாளி என விடேல்.

முத்துகுமார் பாட்டி அணு உலை எதிர்ப்பாளர்.

ஈழத்தமிழர் மீதான இன அழிப்பு போரை நிறுத்துங்கள் என்று தன்னுயிரை நெருப்புக்கு தந்து தியாகியான முதுதுகுமார் உயிராயுததை கொடுத்து அதை நகலாயுயதமாக எடுத்து தமிழர்களை உசுப்பிவிட பயன்படுத்த கூறி உயிர் நீத்தார். அவர் பிறந்த சொந்த கிராமம் "கொழுவை நல்லூர்". இந்த கிராமம் தொத்துகுடியிளிருந்து திருச்செந்தூர் செல்லும் வழியில் ஆத்தூர் அருகே உள்ளது. தனது கிராமத்தில் இருக்கும் போதே புரட்சிகர கருத்துக்களை பேசிவந்த முத்துகுமார் இந்த "கூடங்குளம் அணு உலையை பற்றியும் அதன் ஆபத்துகள் பற்றியும்" நிறைய பெசிவந்துள்ளார். அதை அவரது பாட்டி " லிங்க புஷ்பம்" செவி மடுத்ஹ்டு வந்துள்ளார்.நேற்று அதாவது ஞாயிறு இருபத்தி மூன்றாம் நாள் "ஆத்தூர்" கிராமத்தில் ஒரு பெரும் பட்டினி போராட்டம் கூடங்குளம் அணு உலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்டது.

அந்த போராட்டத்தை ஒழுங்கு செய்தவர்கள் அங்குள்ள "ஆத்தூர் விவசாயிகள் சங்கம்". அந்த போராட்டத்திற்கு கொழுவைநல்லூர் கிராம விவசாயிகள் பலரும் கலந்து கொண்டனர். அந்த போராட்டத்திற்கு முத்துகுமாரின் பாட்டி "லங்காபுஷ்பம்" தலைமை தாங்கினார். அவர் பேசும்போது, "என் பேரன் மக்களுக்காக செத்தான். நானும் அணு உலையை எதிர்த்து மக்களுக்காக சாகத்தயார்" என்று தனது எழுபதாவது வயதிலும் பேசினார். அது அங்கே கூடியிருந்தவர்களுக்கு "புல்லரித்தது". இப்படியாக கூடங்குளத்தில் மீண்டும் நடக்கும் தொடர் பட்டினி போரில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஊர்காரர்கள் வந்து கலந்து கொண்டு செல்வதும், அங்கங்கே அதே கோரிக்கைக்காக பல முனைகளிலும் பட்டினி போராட்டங்கள் நடப்பதும் அன்றாட நிகழ்வாக ஆகிவிட்டது.

இன்று காலை கன்னியாகுமரி மாவட்ட மக்கள் பெரும் தொகையில் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்னாள் கூடி ஆர்ப்பாட்டம் நிகழ்த்தினர். அதில் இருபதாயிரம் மக்கள் கலந்து கண்டனர். அதில் மனோ தங்கராஜ், அன்டன் கோம்ஸ், லிட்வின்,குமாரதாஸ், உதயகுமார், உள்ளூர் பாதிரிமார்கள் ஆகியோர் கலந்து கொண்டனர் அதேநேரம் சென்னையில் சிதையில் பனகல் மாளிகை முன்னாள் எஸ்.யு.சீ.அய். என்ற சோசலிஸ்ட் யுனிட்டி செனட்டர் ஆப் இன்டியா கட்சியினர் கூடங்குளம் அணு உலையை மூட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதேபோல நேற்று அதே இடத்தில் மாலை இளைஞர் எழுச்சி இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர் அதில் விடுதலை ராஜேந்திரன், வழக்கறிஞர் சுந்தரராஜன், ஆகியோர் அந்த அமைப்பின் சுதீஷ், அருண்செளரி ஆகியோருடன் கலந்து கொண்டு பேசினர்.


இன்று மாலை அதே சென்னை சைதை பனகல் மாளிகையில் பெ.மணியரசன் தலைமையில் தமிழ் தேசிய பொதுவுடைமை கட்சியினர் ஆர்ப்பாட்டம் அண்டத்தினர். அதில் கீத பச்சையப்பன், மருத்துவர் புகழேந்தி, வெளையன் ஆகியோர் பேசினர். அந்த நிகழ்வுக்கு ஓவியர் புகழேந்தி, அரணமுறுவல், போன்ற பலரும் வந்திருந்த்ச்னர். பெ.மணியரசன் பேசும்போது கடந்த காலத்தில் இந்த கூடங்குளம் அணு உலை வந்த நேரத்தில் ஆதாவது 1987 இல் தூத்துக்குடியிலும், இடிந்தகரையிலும், கூடங்குளத்திலும், எப்படி போராட்டங்கள் நடத்தப்பட்டபோது தான் ஆண்டன் கோம்ஸ் உடனும், டி.எஸ்.எஸ்.மணியுடனும், அவற்றில் கலந்து கொண்டேன் என்பது பற்றி பேசினார். ஜார்ஜ் பெர்னாண்டஸ் அப்போது தூத்துக்குடி பேரணிக்கு வந்தது பற்றியும் குறிப்பிட்டார். அந்த போராட்டம் இருபத்து நாலு ஆண்டு தொடர்ச்சியானது என்பதை அறிவித்தார். அதுவே போராட்டத்தை ஏதோ இரண்டு ஆண்டுகளாக மட்டும் நடத்துவது போல பம்மாத்து செய்பவர்களுக்கும், விமர்சனம் செய்பவர்களுக்கும் பதிலடியாக் இருந்தது.


இதற்கிடையே ராதாபுரம் நகரில் கூடங்குளம் அணு உலையை தஹ்டுத்து நிறுத்தும் குழு என்ற பெயரில் தொடர் பட்டினி போர் நடந்து அவ்ருகிறது. இவ்வாறு ஒவ்வொரு ஊரிலும் இப்போது அணு உலைக்கு எதிரான போராட்டங்கள் தொடர் தொடங்கி விட்டன. தமிழ்நாடே இந்த போராட்டங்களை விரும்பி ஏற்பாடு செய்யது வருகிறது.

Sunday, October 23, 2011

ஜெய்தாபூர் அணு உலை எதிர்ப்பு குழு போட்ட சிபிஎம் வாழ்க.

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜெய்தாபூர் அணு உலை வர இருக்கிறது. அது ஆசியாவிலேயே பெரியது என்கிறார்கள். அப்படியானால் பெரிய அளவில் பாதிப்பு இருக்குமா என்று கேட்டு விடாதீர்கள். அதை பெரும்பான்மையான அந்த வட்டார மக்கள் எதிர்க்கிறார்கள். காங்கிரஸ் மட்டுமே ஆதரிக்கிறது. அதற்காக நமது பிரதமர் பிரான்ஸ் நாட்டு பன்னாட்டு மூலதன நிறுவனமான அரவே என்ற மைப்பில் "ஆறு உலைகளுக்கு" ஒப்பந்தம் செய்துள்ளார். ஆனால் அந்த குறிப்பிட்ட நிறுவனம் பிரான்ஸ் நாடு அணு உலை மூலம் எழுபத்தைந்து விழுக்காடு மின் தேவையை நிரப்பினாளும்கூட, எப்படி "பாதுகாப்படர் முறையில்" நடந்து கொண்டுள்ளது என்பது சமீபத்தில் அம்பலமாகி விட்டது.


அதாவது பிரான்ஸ் நாட்டு நீதிமன்றம் அந்த நிறுவனத்தின் "அணு கழிவான உரேனியம் கழிவை" நிலத்தடி நீருக்குள் திரவமாக்கி இறக்கி விட்டதை கண்டுபிடித்து அந்த குறிப்பிட்ட நிறுவனத்திற்கு அபராதமாக நாற்பதாயிரம் டாலர்கள் தண்டனை கொடுத்துள்ளது. இது எதை காட்டுகிறது? எழுபது விழுக்காடு தங்கள் மின் தேவையை அணு உலைகள் மூலம் நிரப்பி கொள்ளும் ஒரு நாடு, .எந்த அளவுக்கு அந்த அணு உலைகள் விசயத்திலும், அதன் கழிவுகளை அப்புறப்படுத்துவதிலும் "கவனமாக " இருக்கும் என்று நாம் பெருமை பட்டுகொள்கிறோம். ஆனால் அப்படி கவனம் அங்கே உள்ள அரசாங்கத்திற்கும், அங்கே உள்ள அணு உலைகளை தயாரிக்கும் பெரிய நிறுவனத்திற்கும் இல்லை என்பது இதன் மூலம் தெரிகிறது. அப்படிப்பட்ட ஒரு நிறுவனத்திடம் நமது பிரதமர் ஜெய்தாபூர் அணு உலைகளுக்கு ஒப்பந்தம் போட்டார் என்றால் இவை எவ்வளவு பாதுகாப்பானவை? இதனால்தான் சிபிஎம் அப்படி ஒரு பதினைத்து பேர் கொண்ட குழுவை மைத்து அந்த அணு உலைகள பற்றி ஆய்வு செய்ய போகிறது. ஆகவே அது வரவேற்க வேண்டிய செய்திதான்.


ஆனால் அதே சீ.பி.எம். கட்சிக்கு "கூடங்குளம், கல்பாக்கம்" பற்றியும் அதே அளவில் கவலை இருக்க வேண்டும் அல்லவா? ஏன் இல்லை? இது தமிழ்நாட்டில் தமிழர்களை கொள்ள வரும் ஆலை என்பதாலா? அப்படி இருக்காது. இது ரஷ்யா விற்கின்ற அணு உலைகள என்பதால் அவர்கள் இந்த அணு உலைகள எதிர்க்க வேண்டுமா? வேண்டாமா? என்று இன்னமும் முடிவு செய்யவில்லையா? அல்லது பிரிந்த காரட் மதுரை வந்தபோது, புகுஷிமாவிற்கு பிறகு தங்கள் கட்சியும் அணு உலைகள பற்றி மறுபரிசீலனைக்கு வந்துவிட்டோம் என்று கூறியதும், உடனேயே சிபிஎம் மாநில செயலாளர் ஜி.ஆர். நாங்கள் கூடங்குளம் அணு உலையை எத்ரிக்க வில்லை என்று கூறினாரே அதில் நாம் குழம்பி கொண்டிருப்பதை கண்டு அவர்கள் சிரித்து கொண்டு இருக்கிறார்களா?

பரமக்குடி துப்பாக்கி சூடு, ஆரோக்கியமான சர்ச்சையை சென்னையில் கிளப்பியது.

"சேவ் டமில்ஸ்"சென்னையில் லயோலா கல்லூரி பி.எட.அரங்கில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்திருந்தார்கள். அது" பரமக்குடி அரசு வன்முறையும், மௌன வன்முறையும்" பற்றியதாக இருந்தது. பலரின் மௌனம் சிலரை அதிகமாக கோபம் ஊட்டி அதுவே " தடுமாறிய" பேச்சுக்கும் இட்டுசெல்லும் என்பதுபோல, நமது வழக்கறிஞர் விஜயேந்திரன் " நஞ்சு கலந்து கொல்ல வேண்டும், மரபணு மாற்ற வேண்டும்" என்று உணர்ச்சி வசப்பட்டார். அதனால் யாருமே அதை பெரிதாக நினைக்கவில்லை. இது "விரக்தியின் உச்சம்" என இருந்துவிட்டார்களா? என்று தெரியவில்லை. ஆனாலும் கூட்ட ஏற்பாட்டாளர் செந்தில் தனது கடமை என்று பதில் சொல்ல வந்தார். விஜயேந்திரன் சந்தேகப்படுவதுபோல, தாங்கள் ஒரு "பணம் வாங்கும் தொண்டு நிறுவனம் அல்ல" என்றார். அதேசமயம் " பெண்களை இழிவுபடுத்தல்" போன்ற சர்ச்சைகளும் இருக்கிறது என்றார்.

அதற்குபிறகு, இளம்பரிதி பேசவந்தார். அவர் தெளிவாக கூட்ட "தலைப்பை" பிடித்து கொண்டார். அதில் உள்ள மௌன வன்முறையை விளக்கினார். "முக நூல்" பக்கங்களில் பல "ஆதிக்க சாதிவெறி சொற்கள்" நடனமாடுவதை எடுத்து ஆதாரம் காட்டினார். உயர்தொழில்நுட்பம் படித்த பிறகும், கேவலமான சாதிவெறி தொடர்வதை அம்பலப்படுத்தினார். தேவர் சமூக படித்த இளைஞர்களில் இப்படியுமா? என எண்ண வைத்தது. அதேபோல "ஒரு பிரபல பேச்சாளர் மற்றும் எழுத்தாளரை" பற்றி கூறியது பலருக்கு அதிர்ச்சியை தந்தது. அந்த பிரபலம் எப்படி பரமக்குடி துப்பாக்கி சூடு பற்றி பேச அழைத்த இடத்தில் வந்து அது பற்றி தனது "ஒன்றரை மணிநேர" உரையில் பேசாமல், மரண தண்டனை பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருந்தார் என்று ஆதாரத்துடன் வெளிப்படுத்தினார். பிரபலம் பற்றி தெரிந்தது இவ்வளவுதானா?

அடுத்து "முத்துராமலிங்க தேவரின் உறவுக்காரரான" தினகரன் என்ற எழுத்தாளர் தனது புத்தகத்தில் எழுதியுள்ளதை மேற்கோள் காட்டி, இம்மானுவேல் சேகரன் சாதி வெறியில் தான் தேவரால் தூண்டப்பட்டு கொலை செய்யப்பட்டார் எனபதை சுட்டி காட்டினார். அதில் தேவர்களை "ஆந்திராவில் இருந்து வந்தவர்களாக" சொல்லி இருப்பதையும், "தேவேந்திரகுல வேளாளரை" தமிழ் பழங்குடி என்று விளித்திருப்பதையும் மேற்கோள் காட்டினார்.அந்த புத்தகத்தை வெளியிட்ட பிறகு ஒரே மாதத்தில் எப்படி "தினகரனும்" கொலை செய்யப்பட்டார் என்பதையும் கூறினார். "ம.க.இ.க." பரமக்குடி துப்பாக்கி சூடு பற்றி ஒன்றுமே செய்யவில்லை என்று அவர் கூறியது அந்த அமைப்பினருக்கு கோபத்தை கொடுத்து, அவர்கள் கடைசியில் வீரசாமி மூலம் தாங்கள் தெரிவித்த கருத்துக்களை காட்டி பேசினர். எப்படியோ இளம்பரிதி பல விசயங்களை புதிதாகவும், சில சர்ச்சைகளையும் ஏற்படுத்தி விட்டார்.

அதன்பிறகு வ.கீதா பேசினார். அவரும் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் மீதான சாதி ஒடுக்குமுறை வரலாற்றை எடுத்து சொன்னார்.வ.கீதா கீழ தஞ்சையில் திராவிடர் கழகம் உருவாக்கிய சாதி எதிர்ப்பு தளத்தில்தான் பொதுவுடைமைவாதிகள் பயணம் செய்தார்கள் என்றார். அது ஒருபுறம் உண்மை என்றாலும், பொதுவுடைமைவாதிகளும் அன்று "சாணிப்பால், சவுக்கடி" என்பதற்கு எதிராக சீனிவாசராவ் தலைமையில் சாதி எதிர்ப்பையும் சேர்த்து போராட்டம் எடுத்தார்கள் என்று சொல்லியிருக்கலாம். அதேபோல திராவிடர் கழகமும், கீழ தஞ்சையில் " விவசாய கூலிகள்" சங்கம் நடத்தியது என்பதையும் சொல்லியிருக்கலாம். விடுதலை ராஜேந்திரன் அடுத்து பேசினார். அவர் 1883 இலிருந்தே தென் மாவட்டங்களில் நடக்கும் சாதி மோதல்கள் பற்றி கூறினார். அதில் நாடாருக்கும், தேவர்களுக்கும் நடந்த சாதி மோதல்களை கூறினார். அதில் தேவர்கள் நாடார்களை இழிவாக நடத்தியது, அடக்குமுறை செய்தது எல்லாமே விவாதிக்கப்பட்டது. அதன்பிறகு நடந்த முதுகளத்தூர் சாதி அடக்குமுறைகளும் பேசினார். மள்ளர் அல்லது குடும்பர் அல்லது பள்ளர் அல்லது தேவேந்திரகுல வேளாளர் என்று அழைக்கப்படும் ஒடுக்கப்பட்ட மக்களை " தலித்" என்றே அவர் குறிப்பிட்டார். சமீப வன்முறைகளும் "தலித்" மீது என்றே வாதிட்டார். அதுவே சில இளைஞர்களுக்கு "கோபத்தை" ஏற்படுத்தியது.


அங்கே நடந்தது "தேவர்-பள்ளர்" மோதல் என்றும், அதை அப்படியே விவரிக்க வேண்டும் என்றும், "தலித்" என்ற சொல் பரந்த வேறு பொருளுக்கு இட்டு சென்றுவிடும் என்றும், அதனால் அங்கே இருக்கும் முரண்பாட்டை சரியாக எடுத்து சொன்னதாக் ஆகாது என்றும் அவர்கள் கூறினர். எப்படி சொல்ல வேண்டும் என்று நீங்கள் சொல்ல கூடாது என்றும் பதில் வ்ந்தது. அந்த சமூகத்தில் இவர்கள் சிலர்தான் என்றும் க்ருத்து வந்தது. அது அனைத்து தேவேந்திரகுல வேளாளர்களிடமும் இருக்கிறது என்று கூறியதற்கும் எதிர்ப்பு வந்தது. குட்ம்பமாரை மற்றவர்கள் எப்படி புரிந்துகொண்டிருக்கிறர்கள் என்பதும் தலைநகரில் உள்ள அறிவுஜீவிகளிடம் எப்படி கருத்து இருக்கிறது என்பதும் அங்கே வெளிப்பட்டது. அந்த சமூகம் எப்படி தங்களை அழைத்து கொள்ள விரும்புகிறார்களோ அப்படி அவர்களை அழைக்க நமது அறிவுஜீவிகள் தயார் இல்லையா? என்று தெரியவில்லை. அதில் ஒரு மள்ளர் "தலித் என்றால் பெண்களும்" உண்டல்லவா? என்றார். அபப்டியானால் அங்கே நடந்த "தேவர்-பள்ளர்" மோதலை "மறவர் பெண்களையும் சேர்த்து உச்சரிக்கும் தலித் " என்ற் வார்த்தை மூலம் எப்படி சரியாக வெளிப்படுத்த முடியும்? என்று வினவினார். அது என்னமோ அறிவுபூர்வமாக பட்டது.


பெயரில் என்ன இருக்கிறது என்று ஒரு கேள்வி வந்தது. பெயரில் "வரலாறு, பண்பாடு, போர், போர்க்களம், வீரசாவு" இத்தனையும் இருக்கிறது என்று நாம் பதில் சொல்ல வேண்டி வந்தது. "உழவர் பெருங்குடியின் போர்ப்படைபிரிவுதான் "தேவேந்திரகுல வேளாளர்கள்" என்று நான் சொன்னதை பலரும் ரசிக்க வில்லை என்று தெரிந்தது. வரலாறுகளை புத்தகங்களில் படித்து தொகுக்கலாம்.நிகழ்வுகளை உண்மை அறியும் குழுக்கள் மூலம் சில நாள் அங்கே சென்றுவ்ந்ததால் தெரிந்து கொண்டு திருப்தி அடையலாம். ஆனால் ஒடுக்கப்பட்டமக்களது வரலாற்று நிலை பற்றியும், போர் தொடுக்கப்பட்டுள்ள ஒரு சமூகத்தை பற்றியும், அந்த சமூகத்துடன் ஆழமாக வாழ்ந்துதானே கற்று கொள்ள முடியும்? இப்படி நமக்கு புரிவது எல்லாமே தவறு என்று அறிவுஜீவிகள் கருதலாம். அறிவுஜீவிகளின் கருத்துதான் எழுதப்படும். பேசப்படும். பதிவு செய்யப்படும். இதுதான் ஐன்றைய நிலைமை.

போர்களத்தை சந்திக்கும் உழவர் கூட்டம் தனக்கு ஆதரவாக வந்திருக்கும் சக்திகளுடனும், நகர்ப்புற அறிவுஜீவிகளுடனும், அமர்ந்து தங்கள் மதிப்பீட்டை அவர்களும் புரியும் வண்ணம் கூறுவதற்கான "உத்திகளை" இன்னமும் உருவாக்க வில்லை என்றும், எந்த மொழியில் அவர்களையும் தங்கள் உணர்வுகளை ஏற்று கொள்ள செய்யவேண்டும் என்று இன்னமும் அறிந்திருக்க வில்லை என்றும் பேசி கொண்டு வெளியே வந்தோம். ஆனாலும், ஏற்பாடு செய்திருந்த அமைப்பும், பேசிய பேச்சாளர்களும், கலந்து கொண்டோரும் மாற்று சமூகத்தை சேர்ந்த ஆதரவு சக்திகள் என்பதையும், அது வரவேற்கதக்கது எனபதையும் வந்திருந்து கோபப்பட்ட இளைஞர்கள் உணர்ந்து கொண்டனர்.எபப்டியோ அது ஒரு நல்ல ஆரோக்கியமான் சர்ச்சை என்றே புரிந்தது.

டில்லி ஊடகத்தார் "கதை" விடுவார்களா?

இன்று காலை டெக்கான் கிரோனிகள் ஆங்கில ஏட்டில் திமுக தலைவர் கலைஞர் காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்தித்தது பற்றிய செய்தி எல்லா ஏடுகளும் போல வெளிவந்துள்ளது. ஆனால் மடர்வர்கள் எழுதாத "சில விடயங்களை" இந்த ஏடு எழுதியுள்ளது. அதாவது சோனியாவை சந்திக்கும்போது, கருணாநிதி அதிகம் பேசவில்லை என்றும், ராஜாத்தி அம்மாள்தான் அதிகமாக தன் ஆதங்கங்களை பற்றி பேசினார் என்றும் அதை தம்மிழிளிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து டி.ஆர்.பாலு கூறினார் என்றும் எழுதியுள்ளனர். இது மிகச் சிறந்த "கற்பனை" என்று சம்பந்தப்பட்ட வட்டரங்கள கூறுகின்றன.
எப்படி இருக்கீங்க என்று வழமைபோல அன்னை சோனியா கேட்டதற்கு, மகளை சிறைக்கு அனுப்பி விட்டு எப்படித்தான் இருப்பேன் என்று கூறியதாக மாட்டுமே அந்த வட்டாரங்கள் கூறுகின்றன. மற்றபடி கலைஞத்தான் பல செய்திகளை பேசிக் கொண்டிருந்தார் என்கின்றனர்.


முதலில் கருணாநிதி அதிகம் பேசவில்லை எனபது அந்த தலைவருக்கு தரப்படும் "இழுக்கு". அடுத்து சோனியாவிடம் தனது "ஆதங்கங்களை" நிறைய கூறினார் என்று ராசாத்தியை கூறுவதும், அதை சோனியா செவிமடுத்தார் என்று கூறுவதும், திட்டமிட்டு "இட்டுக் கட்டி" அவர்களது பேச்சுவார்த்தையை "கொச்சைப்படுத்தும்" முயற்சி. அடுத்து உடன் சென்ற "தயாநிதி மாறன்" சோனியாவை காண உள்ளே செல்லவில்லை என்ற உண்மையை எடுத்து சொல்லும்போது, "ராஜாத்தி" தடுத்து விட்டார் என்று அந்த ஏடு கூறியுள்ளது. இது நிலைமை பற்றிய புரிதல் இல்லாதவர் எழுதியுள்ளாரோ என்று எண்ண தோன்றுகிறது.

தயாநிதி மாறன் மீது விசாரணை நடைபெறும் வேளையில், சீ.பி.அய். சோதனைகளையும் விசாரணையையும் தொடங்கி உள்ள நேரத்தில், அடுத்து "கைது" அவருமா? என்று எல்லோரும் பேசிக் கொண்டிருக்கும் வேளையில், காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாவை சந்திக்க தயாநிதி முயற்சி செய்வாரா? சோனியாவின் ஆலோசகர்களோ, பாதுகாப்பு அதிகாரிகளோ, அதை வரவேற்பார்களா? அதனால் கலைஞருடன் தயாநிதி சமீப வழக்கம் போல், வாகன வரிசையில்சென்றது உண்மையாக இருந்தாலும், மன்மோகனை சந்திக்கும் போதும், சோனியாவை சந்திக்கும் போதும் உள்ளே செல்லவில்லை என்பதுதான் உண்மை. அதைவைத்து கதை எழுதுவது டில்லி ஊடகத்தாருக்கும் வழமையாகி விட்டதே?

இதேபோல டில்லி ஊடகத்தார்கள் பல நேரங்களில் தாங்கள் உருவாக்கிய கதைகளில் மாட்டி கொண்டுள்ளார்கள். இந்த கதை தமிழ்நாட்டை பற்றியது என்பதாலும், தமிழ்நாட்டு மூத்த அரசியல்வாதியின் குடும்பம் பற்றியது என்பதாலும், காங்கிரஸ்-திமுக உறவு பற்றியது என்பதாலும், நடக்காததை நடந்ததாக வெளியிட் யாருக்கும் உரிமையில்லை எனப்துய் மட்டுமல்ல, திரித்து எழுதத் யாற்றுக்கும், எப்போதுமே உரிமையில்லை என்பதால், ஆங்கில ஏடுகள் வெளியிடுவதால் எல்லாமே உண்மையாகிவிடாது என்று கூறத்தான் நாம் குறுக்கே விழுந்து சொல்ல வேண்டி இருக்கிறது.

Thursday, October 20, 2011

மாற்றத்திற்கான செய்தியாளர்கள் பட்டினி போரில் சுவையானவை...

நடந்து வரும் கோயம்பேடு மூவர் உயிர் காக்கும் தொடர் பட்டினி போரில் 28 ஆம் நாள் அதை நடத்திய மாற்றத்திற்கான செய்தியாளர்கள், அழைத்ததன் பேரில் வந்தவர்கள் பல சுவையான செய்திகளை விட்டு சென்றனர்.காலையில் 11 மணிக்கு தோழர் ஆர்.நல்லகான்னு, பேராசிரியர் சரஸ்வதி போன்றோர் வந்துவிட,ஒரு ஆர்ப்பாட்டத்தை முன் வாசலில் சாலையை ஒட்டி நடத்த ஏற்பாட்டாளர் ஜீவசகாப்தன் ஏற்பாடு செய்தார். ஆர்ப்பாட்டத்தை தோழர் நல்லகண்ணு தலைமை ஏற்று நடத்தினார்.அதை அடுத்து செங்கொடி படத்திற்கு மாலை அனுவித்து, பேரா.சரஸ்வதி அந்த படம் அருகே "குத்துவிளக்கு" ஏற்றிவைத்தார். அப்போது மக்கள் மன்றம் மஹேஷ், ஜெசி ஆகியோர் உடன் இறந்தனர் அவர்களுடன் மக்கள் மன்றத்தை சேர்ந்த பாலு, நாத்திகன், மகேந்திரவர்மா ஆகியோரும் வந்திருந்தனர்.

தொடர் பட்டினி போர் ஏற்பாட்டாளர்களான செல்வராஜ், ராஜ்குமார் பழனிசாமி ஆகியோரும் வந்துவிட்டனர். ஊடகவியலாளர்களான எழில், உமா, ரெஜி, சீ தமிழ் செய்தி ஆசிரியர் ஜெயக்குமார், மார்க்சிய பெரியாரிய கட்சியின் தமிழேந்தி, உழைக்கும் பத்திர்கையாளர் சங்க தலைவர் சகாயராஜ், டாக்டர் ரவீந்திரநாத், டி.எஸ்.எஸ்.மணி ஆகியோரும் வந்திருந்தனர். தோழர் நல்லகண்ணு தலைமை உரை நிகழ்த்தினார். அதில் சிறைக்குள் அவர் இருந்த காலத்திய நிலையையும், மரண தண்டனை கைதிகள் நிலையையும்,பாலன் போன்றோர் மீது பொய்வழக்கு போடப்பட்ட நிலையையும், எடுத்து சொன்னார். 1999 ஆம் ஆண்டே சோனியா காந்தி அன்றைய தமிழக முதல்வருக்கு எழுதிய கடிதத்தை சுட்டி காட்டினார்.

அதில் தன் கணவன் இறந்ததால் தாங்கள் படும் துயரை இப்போது ராஜீவ் கொலையில் மரணதண்டனையை எதிர்கொள்ளும் "நால்வரும்" மரணம் அடைவதன் மூலம் அவர்களது குடும்பங்களும் அடையக்கூடாது என்று எழுதியுள்ளதை நல்லகண்ணு சுட்டி பேசினார். தானும் தனது குழந்தைகளும் அதை விரும்பவில்லை என்று சோனியா எழுதியிருந்தார். நளினியின் பெண் குழந்தை ஒன்று இருப்பதால் நளினிக்கு மரண தண்டனை என்பதை தாங்கள் விரும்பவேயில்லை என்று சோனியா எழுதியிருந்ததையும் படித்து காண்பித்தார்.தோழர் நல்லகண்ணுவின் முழு உரையை மறுநாள் "ஜனசக்தி" ஏடு அப்படியே பதிப்பித்துள்ளது. அடுத்து பேரா.சரஸ்வதி பட்டினி போரை துவக்கி வைத்து துவக்க உரை நிகழ்த்தினார். அதில் ராஜீவ் கொலை வழக்கில் உச்சநீதிமன்றமே தடா வழக்குக்கு அது பொருந்தாது என்றும், தனி நபர் மீதான பழிவாங்கும் கொலைதான் அது என்றும், கூறியுள்ளதை சுட்டி காட்டி, தடாவில் எடுக்கப்பட்ட சித்திரவதை மூலமான வாக்குமூலங்களை வைத்து கொடுக்கப்பட்ட தீர்ப்பு எப்படி பொருந்தும் என்று கேள்வி எழுப்பினார்.

அடுத்து உழைக்கும் பத்திரிகையாளர் சங்க தலைவர் சகாயம் பேசினார். அவரும் தங்கள் சங்கத்தின் முழு ஆதரவையும் மூன்று தமிழர் உயிர் காக்க தருகிறோம் என்றார். அவர் பணியாற்றும் தமிழன் தொலைக்காட்சியினரும் வ்ந்திருந்து படப்பிடிப்பு நடத்தினர்.அதேபோல மக்கள் டி.வி., இமயம் டி.வி. ஆகியோரும் வந்திருந்து படம் எடுத்து வெளியிட்டனர். அடுத்து பேசிய டி.எஸ்.எஸ்.மணி, செப்டம்பர் கடைசியில் வெளிவந்த "ஓபன்" என்ற் ஆங்கில வார ஏட்டில் வந்துள்ள கட்டுரைகளை சுட்டி காட்டி பேசினார். அதில் ராஜீவ் கொலையை விசாரிக்க ஜெயின் ஆணையத்தால் கூறப்பட்ட சீ.பி.அய். ஏற்படுத்திய எம்.டி.எம்.சீ. என்ற பல்முனை கட்டுப்பாடு கண்காணிப்பு ஆணையம் இன்னமும் தனது விசாரணையை நடத்தி கொண்டு இருக்கிறது என்ற உண்மையை போட்டு உடைத்தார். ராஜீவ் கொலை விசாரணையே இன்னமும் முடிவடையாத நிலையில் எப்படி மூவருக்கு தூக்கு போடலாம் என்ற கேள்வியை முன்வைத்தார்.

தமிழ் ஊடகங்களில் வராத அத்தகைய செய்திகளை அந்த ஆங்கில ஏடு வெளியிட்டுள்ளதை சுட்டி காட்டி, விசாரணையில் சித்திரவதை செய்ததை விசாரணை அதிகாரி மோகன்ராஜ் ஒப்புக்கொண்டுள்ளதையும், அதை மறுத்து,புத்தகத்தில் பொய் எழுதிய கார்திகேயனையும் மோகன்ராஜ் அமபலப்படுத்தியுள்ளதையும் அந்த ஏடு வெளியிட்டிருந்தது. ராஜீவ் கொலையை விடுதலை புலிகள் செய்யவில்லை என்று ஒரு "ரா" அதிகாரி சொன்னதையும், கொலை நடந்த இடத்தில் எடுக்கப்பட்ட "காணொளியை" எம்.கே.நாராயணன் மறைத்து விட்டதையும் விசாரணை தலைமை அதிகாரி ரகோத்தமன் சொன்னதை அந்த ஆங்கில ஏடு அம்பலப்படுத்தி இருந்தது. அதை அவர் சுட்டி காட்டினார்.


செய்தியாளர் நிகழ்ச்சிக்கு "நியு இந்தியன் எக்ஸ்ப்ரெஸ" ஏட்டின் தலைமை செய்தி ஆசிரியர் பாபு ஜெயக்குமார் வந்திருந்தார். தமிழ்நியுஸ் நாளேட்டின் சிறப்பு செய்தியாளர் ராஜன் வந்து கலந்துகொண்டு பேசினார்.தேசியதலைவர் அய்யா பிரபாகரனுக்கு இந்தியாவில், அதுவும் தமிழ்நாட்டில் இப்படி ஒரு முன்னாள் பிரதமரை கொலை செய்தால் அது தங்கள் இயக்கத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று தெரியாதா?அபப்டி செய்வாரா? என்று பகுத்தறிவு கேள்வி ஒன்றை எடுத்து வைத்தார். மதியம் சிறிது நேரம் மின்வெட்டு அமைதியை ஏற்படுத்தியது. அந்த நேரத்தில் நாத்திகன் தனது செங்கொடி பற்றிய பாடலை பாடினார்.வந்திருந்தவர்கள் உள்ளே வைத்திருக்கும் ஓவியர்களின் கைவண்ணத்தில் வரையப்பட்ட "தூக்கு தண்டனை எதிர்ப்பு ஓவியங்களை" கண்டு உளம் நெகிழ்ந்தனர்.


மாலை வரும் முன்பே சீ.பி.அய்.யின் சீ.மகேந்திரன் வந்தார். அவருடன் திருமலை வந்தார்.விடுதலை சிறுத்தைகள் தலைவர்தொல்.திருமாவளவன் வந்தார்.அவருடன் வன்னிய அரசு உட்பட பல சிறுத்தைகள் வந்தனர். இயக்குனர் கவுதமன், இதழியல் மற்றும் திரைப்பட இயக்குனர் ரேவதி, ஜென்னி, சதீஷ், உயிர்மை துணை ஆசிரியர் அமர், பெ.தி.க. அண்ணாமலை, டி.லட்சுமணன், கணேசன், ஆகியோரும் வந்திருந்தனர். மகேந்திரன் பேசும்போது "சீ.பி.அய். கட்சியும் ஒரு நாள் முழுவதும் இந்த பட்டினி போரை நடத்த முடிவு செய்துள்ளது" என்றார். அதேபோல திருமாவளவன் பேசும்போதும், விடுதலை சிறுத்தைகளும் ஒரு நாள் முழுவதும் இந்த பட்டினி போரை நடத்தும் என்றார். இடத்தை தந்து உதவும் முன்னாள் திருச்சி எம்.எல்.ஏ. கே.சொந்தரராஜன் பேசினார்.


அவரது பேச்சில் ஒரு செய்தியை கூறினார்.தனது உறவுக்காரர் ஒருவர் நீதியரசராக இருந்தவர் கூறிய செடிதியை கூறினார். அவர் "வழக்கு திட்டமிட்டு சதி செய்து மாற்றி அமைக்கப்பட்டது" என்று ஆதாரத்துடன் கூறியதை கூறினார். அதாவது ராஜீவ் கொலை வழக்கை நடத்திய நீதியரசர் சித்திக் சரிவர மாட்டார் என அவரை கார்த்திகேயன் மாற்றினார். நவநீதனை நீதியரசராக போட்டனர். அவரும் 26 பேருக்கு தூக்கு போடவேண்டுமா? என்று கேட்டபோது, நீங்கள் ஒரு பெண் தட்டச்சு உதவியாளரை மானபங்கம் செய்ததாக கூறி உள்ளே தள்ளிவிடுவோம் என மிரட்டி கார்த்திகேயன் தீர்ப்பு எழுத வைத்தார் என்று அமபலப்படுத்தினார். அதன்பிறகு பேசிய தியாகு பல வெளிநாட்டு விசயங்களை கூறி அதிகநேரம் பேசினார்.

தமிழா, தமிழா பாண்டியன் எப்படி தமிழ் ஊடகங்கள் ஈழத்தமிழருக்கு எதிராக செயலப்டுகின்றன என்று விளக்கினார். பெண்ணிய எழுத்தாளர் ஓவியா பேசினார். அவர் டில்லியில் ஒரு கருத்தரங்கில் பேசிய சிங்கள பெண்,தங்களுக்கு மட்டுமான நாடாக இலங்கையை விளக்கி பேசியதை சுட்டி காட்டினார். இன்னமும் சிங்களர்கள் அங்குள்ள தமிழர்களை தங்கள் குடிகளாக ஏற்றுக் கொள்ளவில்லை எனபதை சுட்டி காட்டினார். அதிலிருந்தே "தமிழீழம் மட்டுமே" தீர்வு எனபதை புரிய முடிந்தது. இடையில் மாலை நேரத்தில் மீண்டும் ஒரு ஆர்ப்பாட்டத்தை முன்வாசலில் நின்று நடத்த ஜீவசாக்ப்தன் ஏற்பாடு செய்தார். அது திருமாவளவன் தலைமையில் சிறிது நேரம் முழக்கங்களாக நடத்தப்பட்டது.அதன்பிறகு பேசிய அ.மார்க்ஸ், வாய்ப்பை பயன்படுத்தி பல பழைய செய்திகளை கூறி ஜெயலலிதாவை நிறைய திட்டி பேசினார்.அவருக்கு அரசுக்கு எதிராக ஒரு புரட்சியை நடத்திய திருப்தி கிடைத்திருக்கும். அதன்பிறகு விடுதலை ராஜேந்திரன் வழக்கம் போல முறையான சில வாதங்கள் மூலம் மரண தண்டனை யாருக்கும் இருக்க கூடாது என்று வலியுறுத்தினார்.நியாயமாகவே தமிழக அரசின் சட்டமன்ற தீர்மானத்தை பர்ராட்டினார். அதன்பிறகு நிறைவாக திருமாவளவன் பேசினார்.தமிழீழத்தை ஆதரிப்பவர்கள் மத்தியிலும், விடுதலை புலிகளை ஆதரிப்பவர்கள் மத்தியிலும் இருக்கின்ற முரண்பாடுகளை எதற்காக வெளியே சொல்லி நம்மை நாமே பலவீனப்படுத்த வேண்டும் என வினவினார்.

அவர் கூறியதில் ஆளுநர் ரோசையாவை சந்தித்தபோது, சட்டமன்ற தீர்மானத்தை ஏன் நீங்கள் அமைச்சரவை தீர்மானம் போல எடுத்து கொண்டு மரண தண்டனையை ரத்து செய்ய கூடாது என கேட்டதையும், அதற்கு ஆளுநர் முதல்வர் அப்படி தனக்கு எழுதினால் தான் "கவனிப்பதாக" கூறியதையும் எடுத்து சொன்னார். அது புதிய தெம்பை ஏற்படுத்தியது.ஊடகங்கள் ஒற்றுமையை ஏற்படுத்த உதவ வேண்டும் என்றார் அவர்.மொத்தத்தில் இளம் செய்தியாளர்களின் ஏற்பாடு சிறப்பாக நிறைவுற்றது.

கடாபி கைது செய்யப்பட்டாலும், சுடப்பட்டாலும், கடைசிவரை போராடினார்.

லிபியாவில் மக்கள் புரட்சி நடத்தினர். தெருவுக்கு வந்தனர். ஆயுதம் தூக்கினர்.எட்டு மாத காலமாக பெரும் திரளுடன் போராடி வருகின்றனர். இரண்டு மாதம் முன்பு தலைநகர் "திருபோலி" யை புரட்சி படை கைப்பற்றியது. அதற்கு பிறகும் கடாபி யின் சொந்த பகுதியான "சிர்டி" உள்ளே நுழைய முடியவில்லை. அதனால் "முழு வெற்றி" யை அறிவிக்க முடியவில்லை. ஜனநாயகம் கடாபி ஆட்சியில் இல்லை என்பதே அந்த புரட்சி படையின் முழக்கம். ஆயுதம் தாங்கிய புரட்சி படை, கடாபி யின் ஆயுதம் தாங்கிய படையுடன் மோதி வந்தது. இரண்டு படைகளும், லிபியா நாட்டு மக்களை போராளிகளாக் கொண்ட படைகள்தான்.

அப்படியானால் அவர்களுக்குள் என்ன வேறுபாடு? லிபியா நாட்டில் அதிகமாக "எண்ணெய் வளம்" இருக்கிறது. அது அமெரிக்காவிற்கு மூக்கை "வியர்த்து" விட்டது. அதனால் அமெரிக்காவும், அதன் நேச நாடுகளும் லிபியாவில் கடாபிக்கு எதிராக போராடும் "புரட்சிபடைக்கு" ஆயுதங்கள் கொடுக்கிறார்கள். அந்த புரட்சி படை பல இடங்களை கைப்பற்றிய பிறகு , "ஒரு தற்காலிக அரசாங்கத்தை" ஏற்படுத்தி கொண்டுள்ளது. ஆனாலும் கடாபி பிடிபடும் வரை, மீதம் உள்ள சிர்டி பகுதி கையில் வரும்வரை முழு வெற்றியை அவர்கள் அறிவிக்க முடியவில்லை. இன்மேல் அறிவிப்பார்கள். கடாபி ஒரு ஆயுதம் தாங்கிய வாகன வரிசையில் செல்லும்போது, பிடிபட்டார், இல்லை சுடப்பட்டார், அல்லது கடுமையாக காயம் பட்டு உயிருக்கு போராடிவருகிறார் அல்லது கொள்ள்ளப்பட்டார் என்று இப்போது செய்திகள் வருகின்றன. எது எப்படி இருந்தாலும் மாபெரும் அமெரிக்கா படைகள், மாபெரும் நேடோ படைகளுடன், உள்ளூர் புரட்சியாளர்களுக்கு உதவி வரும்போது, தங்கள் நாட்டை அல்லது தாங்கள் ஆண்டு வந்த நாட்டை கைப்பற்றி வரும்போது, தைரியமாக ஆயுதம் தாங்கிய எதிர்ப்பை கொடுத்து கொண்டே பிடிபட்டார் அல்லது வீழ்ந்தார் என்றால், யார் வீரர்? கடாபியா? அமெரிக்காவா? இது போர் பற்றிய கேள்வி.

அடுத்து எதற்காக மக்கள் போராடுகிறார்கள்? எதற்காக அமெரிக்கா நுழைகிறது? இந்த கேள்விகளுக்கு விடை காண வேண்டும். மக்கள் ஜனநாயகம் வேண்டும் என்பதற்காக கடாபியின் சர்வாதிகாரத்தை எத்ரித்து போராடினார்கள். அவர்களும் இஸ்லாம் மீது நம்பிக்கை அவித்தே போராடினார்கள். அவர்கள் கடாபியின் ஆயுதம் தாங்கிய படையை எதிர்க்க வேண்டி இருந்தது. அதனால் அமெரிக்கா மற்றும் நேடோ நாடுகளின் சக்திகளை பயன்படுத்தினார்கள். இது ஒரு பார்வை. எதற்காக அமெரிக்காவும், நேடோ நாடுகளும் இந்த போரில் குதிக்கின்றன? அவர்களுக்கு லிபியாவின் "எண்ணெய் வளத்தை" கைப்பற்ற வேண்டும். அவர்கள் இராக்கை கடும் போர் புரிந்து கைப்பற்றியும் போதுமான எண்ணெய் கிடைக்கவில்லை. அவர்கள் ஆப்கானிஸ்தானை குறிவைத்து போர் நடத்தியும் இன்னமும் "தலிபான்களின்" கையிலிருந்து முழு நாட்டையும் கைப்பற்ற முடியவில்லை. இன்னமும் ஆப்கான் தலியான்கள் கைகளில்தான் "எண்ணெய் வளத்துடன்" இருக்கிறது. அதற்காகத்தான் அவர்கள் இப்போது பாகிஸ்தானின் வசிரிஸ்தான் பகுதியான பழங்குடி மக்களின் பகுதிகளில் தாக்குதல் நடத்த புதிய தந்திரங்களை போட்டு வருகிறார்கள்.


அதேபோலத்தான் அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் லிபியாவை பார்கிறார்கள். அதனால் கடாபியை எத்ரிக்கும் சக்திகளை பயன்படுத்தி அவர்களுக்கு ஆயுதம் கொடுத்து, போர் நடத்தி, நாட்டை கைப்பற்றி "எண்ணெய் வளம்" உள்ள லிபியாவை கையில் எடுக்க முயல்கிறார்கள். ஆனால் அதற்கு "ஜனநாயகம்" கொண்டு வரும் முயற்சி என்று வேறு கூறுகிறார்கள் அப்படியானால் அந்த "ஜனநாயகம்" என்பது என்ன? அமெரிக்கா கூறும் ஜனநாயகம் "அமெரிக்கா ஆதரவு சக்திகளை" ஆட்சியில் அமர்த்துவது மட்டும்தான் என்றால் ஜனநாயம், சர்வாதிகாரம் ஆகியவற்றிற்குள் இந்த இடத்தில் எப்படி வேறுபாடு காண வேண்டும்? ஜனநாயமும், சர்வாதிகாரமும் இரண்டும் ஒரே நாணயத்தின் இரு வெவ்வேறு பக்கங்கள் என்று லெனின் கூறியது இங்கே பொருந்துமா? பொருந்தும். எப்படி பொருந்தும்?

ஒரு நாட்டிற்குள் ஒரே குடும்பத்தின் அல்லது ஒரே குடையின் கீழ் ஆட்சி ஒன்று பல பத்து ஆண்டுகளாக நடந்துவந்தால், அது எந்த பெயரில் நடந்தாலும் யார் அதன் கதாநாயகனாக இருந்தாலும் அந்த ஆட்சியில் ."அதிகாரத்தை சுவைத்தவர்கள்" இறுக்கமாக அமர்ந்து கொள்கிறார்கள். அவர்களை மக்கள் காலப்போக்கில் வெறுத்து விடுகிறார்கள். அந்த நேரத்தில் அந்த ஆட்சியாளர்களை "மேற்கத்திய நாடுகள்" தங்கள் நலனுக்காக நெருக்குமானால், அவர்கள் அந்த மேற்கத்திய நெருக்களுக்கு "அடிபணியாமல்" இருப்பார்களானால், அமெரிக்கா உட்பட நேடோ படை நாடுகளுக்கு அந்த ஆட்சியாளர்கள் மீது ஒரு "கண்" விழுந்தி விடுகிறது. அதை ஒட்டி, குறிப்பிட்ட ஆட்சியாளர்களை எதிர்த்து அந்த நாட்டிற்குள் ஒரு 'எதிர்ப்பு" வராதா என்று அதிர்பார்த்திருந் அமெர்கத்திய நாடுகளுக்கு திடீரென கிளம்பும் எந்த எதிர்ப்பையும் கைப்பற்றி செயல்பட போதுமான "உலகளாவிய" வசதிகள், ஊடகங்கள் உள்ளன.


கேட்கவே வேண்டாம். அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகள் உடனடியாக அந்த குறிப்பிட்ட நாட்டில் ஜனநாயகம் இல்லை என்றும், சர்வாதிகாரம் நடக்கிறது என்றும் பேச அதிக வாய்ப்பு உள்ளது. அது போராடும் புரட்ச்சியாலர்களுக்கு "இனிப்பு" செய்தியாக இருக்கிறது. இந்த இடத்தில் கடாபியையோ, இராக்கில் சதாம் ஹுசைனையோ, நாம் சர்வாதிகாரம் இல்லை என்று கூற முடியாத நிலை உள்ளது. ஆனால் அது அந்த நாட்டிற்குள் உள்ள பிரச்சனை. அந்த "ஒப்புமை ரீதியான சர்வாதிகாரத்தை" ஒழிக்க மக்கள் போராடும்போது, அமெரிக்கா நுழைகிறது. தான் முழு ஜனநாயக காவலன் என்று வேடம் போடுகிறது. உடனே மக்களும் நம்பி அதன் உற்ற்ஹவியை வாங்குகிறார்கள். அமெரிக்காவின் நோக்கம் அங்கே தனது "அடிவருடிகளை" ஆட்சியில் அமர்த்த வேண்டும் எனபதுதான்.

அதனால் அமெரிக்காவும் ஜனநாயகத்தை உண்மையில் கொண்டுவர இறங்க வில்லை. "ஒப்பீட்டளவு ஜனநாயகத்தை" காட்டி தனகது "சர்வாதிகாரத்தை" கொட்னுவர அமெரிக்கா முயல்கிறது. இதுதான் இராக்கிலும், ஆப்கானிலும், இப்போது லிபியாவிலும் நடத்தப்படும் நிகழ்ச்சிகள். அபப்டியானால் கடாப்பி செய்தது எல்லாம் சரியா? சரியில்லைதான். ஆனால் அமெரிக்கா செய்வதும் சரியில்லை எனபதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த ஒப்பீட்டளவு ஜனநாயகம், ஒப்பீட்டளவு சர்வாதிகாரம் ஆகிய இரண்டுமே மக்களை ஆட்சியாளர்களாக மாற்றாது. ஒன்று அமட்டும் தெரிகிறது. சதாம் ஹுசைனோ, கடாபியோ, கடைசிவரை போர் செய்து, பிடிபட்டு, கொள்ளப்படுவதால், "வராலாற்றில்" மா வீரர்களாக நிற்கிறார்கள். சர்வாதிகாரமும், ஜனநாயகமும் "ஒரே நாணயத்தின் இரு வெவ்வேறு பக்கங்கள்" எனபது இதுதான். .

Tuesday, October 18, 2011

சோ.அய்யர் எடுத்த முடிவு மதுரை வாக்களர்களது உரிமையை பாதிக்க வில்லையா?

எல்லா இட்ங்களிலும் உள்ளாட்சி தேர்தல நடத்தப்படுகிறது. ஒரு இடத்தில் ஒரு வேட்பாளர் இறந்துவிட்டால் அங்கு தேர்தல் தள்ளிவைக்கப்படும். இது வழமைதான். ஆனால் மதுரை மாநகராட்சிக்கும் தேர்தல் மேயருக்கும், ஒவ்வொரு வட்ட உறுப்பினருக்கும் நடந்தது. அதில் 15 ஆவது அவ்ட்டத்தில் நின்ற ஒரு வேட்பாளர் மரணமடைந்து விடுகிறார்.அதற்காக அந்த குறிப்ப்பிட்ட வட்ட தேர்தலை "தள்ளி" போடுவது நியாயம்தான். ஆனால் கெடுவாய்ப்பாக அதே நேரத்தில் அதே வாக்குசாவடியில், அதே வாக்காளர்களை வைத்து "மேயர்" டேஹ்ர்தலும் நடத்தப்படும் சூழலில், ஒரு தேர்தல் ஆணையம் "விவேகமாக" என்ன செய்திருக்க வேண்டும்?

எல்லா வாக்கு சாவடிகளிலும் மேயர் டேஹ்ர்தல் நடப்பது போல அந்த "குறிப்பிட்ட" வாக்கு சாவடியிலும் மேயர் டேஹ்ர்தல் நடத்த எந்த "தஹ்டையும்" இல்லை. அந்த குறிப்ப்பிட்ட "வட்ட மாநகர உறுப்பினர்" டேஹ்ர்தல் மட்டுமே தள்ளிப் போடப்படவேண்டும். ஆனால் சோ.அய்யரின் "அறிவார்ந்த" மூளை,அந்த குறிப்பிட்ட வட்டத்தில் உள்ள மேயர் டேஹ்ர்தளையும் சேர்த்து "தள்ளிப்"போட்டுள்ளது. ஒரே வாக்கு சாவடிக்குள் இரண்டு டேஹ்ர்தளையும் "தனி, தனியாக" நடத்த புத்திசாலித்தனமாக முடிவெடுத்த திரு.சோ.அய்யர் அவர்கள், ஏன் அதே புரிதலில், அந்த குறிப்பிட்ட வட்டத்தின் வாக்கு சாவடிகளில், இரண்டில் ஒரு டேஹ்ர்தலை நடத்த "அனைத்து ஏற்பாடுகளும்" தயாராக இருந்த போது, அதை செய்யாமல் "வாட் ஆருப்பினர்" டேஹ்ர்தலை தள்ளி போடும் போது, மேயர் டேஹ்ர்தளையும் அந்த குறிப்பிட்ட வட்டத்திற்கு தள்ளி போட்டார்?

இது அந்த குறிப்பிட்ட வட்டத்தின் "வாக்கலர்களது" உரிமையை பறித்த செயலாக அல்லது "தள்ளி" போட்ட செயலாக அல்லது மற்ற மதுரை வாக்களர்களுடன் சேர்ந்து தாங்களும் வாக்களிக்க உரிமை மறுக்கப்பட்ட நிலையாக ஆகிவிடாதா? இதை புரிந்து கொள்ளும் அளவுக்கு சோ.அய்யர் இருக்கிறாரா? ஏன் என்றால் ஒரு புதிய ஊடகத்திற்காக சோ.அய்யரை நேர்காணல் எடுத்தார்கள். அப்போது சென்னை மாநகராட்சிக்கான டேஹ்ர்தல் அன்டந்து கொண்டிருந்தது. திமுக தலைமை "வேப்காமரா" வைக்கவில்லை என்று புகார் கொடுக்கிறார்களே? என்ற கேள்வியை ஊடகவியலாளர் ஒருவர் கேட்கிறார். அதற்கு பதில் சொல்கிறேன் என்று சோ.அய்யர் " பொதுமக்கள் யாரும் புகார் கூறவில்லை" என்று பதில் சொல்கிறார். அபப்டியானால் திமுக என்ற எதிர்கட்சி கொடுக்கும் புகாரை அவர் "புறம் தள்ளுகிறாரா ?".அல்லது அரசியல் கட்சிகளுக்கு "புகார்" தர உரிமையில்லை என்று உள்ளாட்சி தேர்தல் பற்றி புதிய விளக்கத்தை மறைமுகமாக கொடுக்கிறாரா? அப்படியானால் ஏன் அரசியல் அக்ட்சிகளை அவர்களது சின்னங்களுடன் நிற்க அவர் சம்மதித்தார்? "பொதுமக்கள்" என்று ஒரு "அருவமான" விஷயத்தை கூறி தப்பித்து கொள்ள முயல்கிறாரா? பெரிய தலைவலிதான் இந்த தேர்தல் ஆணையர் போல?

மரணதண்டனை ஒழிக்க ஊடகவியலாளர் பட்டினி போர்.

மரண தண்டனையை சட்டத்திலிருந்து அறவே நீக்குவதற்கும், மூன்று தமிழர் உயிர் காப்பதற்கும், "மரண தண்டனை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு" கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே உள்ள "இரண்டாவது சிக்னலில்" தொடர் ப்ட்டினிப் போரை ஒரு மாத காலம்மாக நடத்தி வருகிறது. அதில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அமைப்புகள் பங்கு கொண்டு வருகிறார்கள். நாளை அக்டோபர் 19 ஆம் நாள் ஊடகவியலாளர்கள், கல்லூரி மாணவர்களையும், கலைஞர்களையும இணைத்துக் கொண்டு, பட்டினிப போரை நடத்துகிறார்கள்.காலை 10 மணிக்கு பட்டினிப் போரை "அன்னையர் முன்னணியின்" தலைவரும், "நாடு கடந்த தமிழீழ அரசாங்க தோழமை மையம்" அமைப்பாளருமான பேராசிரியர் சரஸ்வதி, தொடங்கி வைத்து துவக்க உரையாற்றுகிறார்.

தமிழ்நாடு சட்டமன்றம் மரணதண்டனையை பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு குறைக்க வேண்டி, இந்திய குடியரசு தலைவருக்கு வேண்டுகோள் விடுத்து ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அந்த தீர்மானம் இந்திய அரசியல் வானில் ஒரு விவாதத்தை கிளப்பிவிட்டுள்ளது. காஷ்மீர் சட்டமன்றத்தில் இதேபோன்ற ஒரு தீர்மானத்தை "அப்சல் குருவின்" மரணதண்டனையை குறைக்க வலியுறுத்தி போடவேண்டும் என்ற முயற்சி நடைபெறுகிறது.பஞ்சாபை சேர்ந்த காலிஸ்தான் போராளி "தேவேன்றபல்சிங் புல்லார்" மரணதண்டனையை குறைக்க வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள வழக்கில், நீதியரசரால் "தமிழக சட்டமன்றத்தின் ஏகமனதான தீர்மானம்" மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.அத்தகைய தாக்கத்தை இந்தியா முழுவதும் அரசியல் வானில் ஏற்படுத்தியுள்ள அந்த தமிழக சட்டமன்ற தீர்மானத்தை வலுப்படுத்தவும், மரண தண்டனையை சட்டத்திளிருந்தே நீக்கவேண்டும் என்ற 2007 ஆம் ஆண்டு,மற்றும் 2008 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம்நாள் "அய்.நா. பொதுசபையின்" தீர்மானத்தை செயல்படுத்தவும், ஊடகவியலாளர்கள் தங்கள் சிறிய பங்களிப்பாக இந்த பட்டினி போரை நடத்துகிறோம். அதில் கலந்துகொண்டு பணகளிப்பு செலுத்துங்கள் என்று ஊடகவியலாளர் ஏற்பாட்டாளர் ஜீவசகாப்தன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Monday, October 17, 2011

சோ அய்யர் "விவரம்" உள்ளவாரா?

தமிழ்நாடு தேர்தல் ஆணையர் என்ற பொறுப்பில் அமர்த்தப்பட்டிருக்கும் சோ.அய்யர், எப்படி நடந்து கொல்கிறார் என்று பார்த்தால் வேடிக்கையாக உள்ளது. ஊடகவியலாளர்கள் கேட்டா கேள்வி, திமுக தலைமை தேர்தல் நடத்தும் விதம் பற்றி கொடுத்த புகாரை பற்றியது. சோ.அய்யரின் பதிலில், பொதுமக்கள் எந்த புகாரையும் கொடுக்க வில்லையே என்பது. அந்த குறிப்பிட்ட ஊடகவியலாளர் "ஏன் கேள்விக் கென்ன பதில்?" என்று கேட்டிருக்க வேண்டும். அதை கேட்கவில்லை. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளை அவற்றின் சின்னங்களுடன் நிற்க ஆனுமதி அளித்துள்ள தேர்தல் ஆணையர் சோ.அய்யர் அவர்களே, பெரிய கட்சியான திமுக கொடுத்த புகாருக்கு ஒழுங்காக பதில் சொல்ல முடிந்தால் சொல்லுங்கள். மாறாக பொதுமக்கள் புகார் சொல்லவில்லை என்பது எத்தகைய "நழுவல்வாதம்?"

எந்தெந்த இடத்தில் வாக்காளர்கள் இரண்டு வாக்கு போடவேண்டும், எந்தெந்த இடத்தில் நான்கு வாக்கு போடவேண்டும் என்று சோ.அய்யர் அவர்களே நீங்கள் எத்தனை நாள் முன்பு மக்களுக்கு தெரிவிக்க ஊடகங்களையும், அதில் வெளியிடப்படும் விளம்பரங்களையும் பயன்படுத்தினீர்கள்? இன்று தேர்தல் அனர் காலையில் சில ஊடகங்களில் இருந்து உணகளிடம் கேட்டதற்கு இப்போது அனுப்பி வைக்கிறேன் என்று கூறும் நீங்கள் உண்மையில் மக்களுக்கு இந்த உள்ளாட்சி டேஹ்ர்தல் பற்றி முன்கூட்டியே டேஹ்ரிவிக்கவேண்டும் என்றோ, விளக்கம் அளிக்க வேண்டும் என்றோ நினைக்க வில்லையா? .பெரும்பாலும் மக்கள் இந்த உள்ளாட்சி டேஹ்ர்தலில் வாக்கு அளிக்காததற்கு காரணமே நீங்கள் அது பற்றிய விளக்கத்தை முன்கூட்டியே ஊடகங்கள் மூலம் கொடுக்காமல் தாமத படுத்தியதுதான் என்று உங்களுக்கு தெரியுமா?

வாக்கு சீட்டுகளில் வழக்கமாக "சட்டமன்ற, நாடாளுமன்ற" டேஹ்ர்தல்களுக்கு, பெயர்களை அச்சிடும்போது " ஆங்கிலத்தில் உள்ள அகர வரிசையில்" அதுவும் முதலில், "அங்கீகரிக்கப்பட்ட" கட்சிகளின் அகர வரிசை, பிறகு " அங்கீகரிக்கப்படாத" பதிவு செய்யப்ப்பட்ட கட்சிகளின் ஆக்ரா வரிசை, பிறகுதான் சுயேட்சைகளின் அகர வரிசை என்று வரும். இப்போது மட்டும் எல்லா வேட்பலகளையும் ஒரே பாணியில், அகர வரிசையில் வாக்கு சீட்டில் பெயர்களை அச்சடித்து விட்டீர்களே? ஏன்? உனக்க்கு விளங்கவில்லையா? பிறகு எதற்காக "அங்கீகரிக்கப்பட்ட" அக்ட்சிகள் தங்கள் சின்னங்களில் நிற்க அனுமதித்தீர்கள்? அதை அனுமதித்தவர் அவர்களுக்கு முதலில் வரிசையில் பெயர் எழுதப்பட்ட சீட்டுகளை வாக்கு சீட்டுகளாக கொடுக்க வேண்டாமா? நேநேகள் சட்டமன்ற, நாடாளுமன்ர் தேர்தல்களில் வாக்கு சீட்டுகளை பார்த்தது இல்லையா?

இப்படி குழப்பி கொண்டு ஒரு தேர்தலை நடத்த உங்களை எப்படி ஆணையாராக போட்டார்கள்? எந்த தஹ்குதியை கொண்டு உங்களை தேர்வு செய்தார்கள்? "தேவர்" சமூகத்தை சேர்ந்தவர் என்பது மட்டுமேதான் உங்களுக்கு உள்ள தகுதியா? உள்ளாட்சி டேஹ்ர்தல் எனபது சட்டமன்ற, நாடாளுமன்ற டேஹ்ர்தல்களை விட "பொதுமக்களுக்கு" முக்கியமானது என்பது உணகளுக்கு டேஹ்ரியுமா? கலையில் உங்கள் "வாக்கு சாவடி அதிகாரிகள்" எத்தனை பேர் 'எட்டு மணிக்கும்" ஒன்பது மணிக்கும் வாக்கு சாவடிக்கு வந்தார்கள் தெரியுமா? அதற்கெல்லாம் நீங்கள்தான் பொறுப்பு? அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பீர்களா? மேயர் வேட்பாளருக்கான ஏஜெண்டு அந்த "வட்டத்தை" சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்று தேர்தல் விதிமுறை தெறியாமல் உங்கள் அதிகாரிகள் "தூத்துக்குடியில்" சண்டை போட்டது உணகளுக்கு தெரியுமா? ஏதாவது நடவடிக்கை எடுத்தீர்களா?

Sunday, October 16, 2011

அணு உலையில் தலையைவிட்ட இந்திய பிரதமர்.

அணு உலைகள் மின்சாரம் தரும் என்று நாட்டு மக்களை ஏமாற்றி விட்டு, அமெரிக்காவுடன் ஒரு அணு சக்தி ஒப்பந்தத்தை பொட்டுக் கொண்ட நமது பிரதமர், இப்போது கூடங்குளம் மக்கள் போராட்டம், ஜைதாபுரில் வர இருக்கும் அணு உலைகளை தயார் செய்யும் பிரான்ஸ் நாட்டு முதலாளியின் "பாதுகாப்பற்ற " நடவடிக்கைக்கு நீதிமன்றத்தின் "அபராதம்" ஆகிய செய்திகளால் "நிலை குலைந்து" இருப்பது ஒருபுறம். இப்போது "முன்னால் அதிகாரிகளால்" போடப்பட்ட அவ்ழக்கில் "இந்நாள் பிரதமர்" மாட்டிக் கொண்டார் என்பது புது கதை.

முன்னாள் அமைச்சரவை செயலாளர் டி.ஆர்.எஸ்.சுப்பிரமணியம், முன்னாள் கடல்படை தலைவர் அட்மிரல் எல். ராமதாஸ், மத்திய தேர்தல் ஆணைய முன்னாள் தலைவர் கோபால்சாமி, அறிவு ஆணைய முன்னாள் உறுப்பினர் பி.எம்.பார்கவா, பிரதமரின் முன்னாள் செயலாளர் ஆர்.வேணுகோபால், ஆகியோரும் இணைந்து ஒரு வழக்கை உச்சநீதிமன்றத்தில் அணு உலைகளுக்கு எதிராக போட்டுள்ளனர். இந்த வழக்கு அணு உலைகளை செயல்படுத்தும்போது, வருகின்ற "ஆபத்துகளில்" பாதிக்கப்படும் மக்களுக்கு "நட்ட ஏஅடு" கொடுப்பதற்காக் போடப்பட்ட "சட்டம்" நியாயமாக இல்லை என்று குற்றம் சாட்டுகிறது. இந்திய ஆரசியல் சட்டத்தின் அடிப்படையில், அணு உலை ஆபத்தினால் பாதிக்கப்படும் மக்களுக்கு "இழப்பீடு" கொடுப்பதில் ,அணு உலையை "இயக்கிய" அந்நிய நாட்டு முதலாளிக்கும், அதை "விநியோகம்" செய்த தனியார் முதலாளிக்கும் "பொறுப்பு" அதிகம் உண்டு என்று இந்த வழக்கு குற்றம் சாட்டுகிறது.

ஏற்கனவே போடப்பட்ட "இழப்பீடு" சட்டம் போததாது என்றும், அணு உலைகளை இறக்கும் மற்றும் விநியோகிக்கும் தனியார் ஏகபோக கார்பரேட் முதலாளிகளை "முக்கிய" பொறுப்பு ஏற்க வைத்து அவர்களை " முக்கிய நட்ட ஈட்டை" கட்ட வைக்க வேண்டுமே ன்று இந்த வழக்கு கூறுகிறது. இந்த "கூற்று" இதிய நீதிமன்றங்களிலும், இந்திய மக்களின் மனங்களிலும், இந்திய நாட்டு பற்றாளர் மத்தியிலும், ஏகமனதாக வரவேற்கப்படும். ஆகவே இந்த அவ்ழக்கும் இன்னொரு தலைவலியை "மத்திய அரசுக்கு" ஏற்படுத்தும் என்பதை அணு உலை எதிர்ப்பாளர்கள் புரிந்து கொண்டு அதையே மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.

உள்ளாட்சியில் உள்ள மகிமை.

உள்ளாட்சியில் உள்ள மகிமை.
உள்ளாட்சி தேர்தல் "திங்கள் அன்றும், புதனன்றும்" தமிழ்நாடெங்கும் நடக்கும். அதில் பத்து மாநகராட்சிகள், மற்றும் அறுபது நகராட்சிகள் முதல் கட்டத்திலும் மீதி இரண்டாம் கட்டத்திலும் நடக்கும். மாநகராட்சிகளிலும், நகராட்சிகளிலும், பேரூராட்சிகளிலும், ஒவ்வொரு வாக்காளரும், "இரண்டு" வாக்குகளை அளிக்க வேண்டும். ஒன்று அந்த மாநகராட்சி தலைவர் அல்லது நகராட்சி தலைவர், அல்லது பேரூராட்சி தலைவர் என்ற பொறுப்புக்கு போடப்பட வேண்டிய வாக்கு. இன்னொன்று தாங்கள் வாக்காளராக இருக்கும் வட்டத்தில், நிற்கின்ற மாநகராட்சி உறுப்பினருக்கோ, நகராட்சி உறுப்பினருக்கோ, பேரூராட்சி உறுப்பினருக்கோ போடப்பட வேண்டிய வாக்கு.

இந்த பகுதிகளை தாண்டி,உள்ளாட்சியில் கிராமங்களில் இருக்கும் வாக்காளர்கள், "நான்கு" வாக்குகளை போடவேண்டும். அதாவது தங்கள் "மாவட்ட ஊராட்சி உறுப்பினருக்கும், தங்கள் ஒன்றிய உறுப்பினருக்கும், தங்கள் ஊராட்சிமன்ற தலைவருக்கும், தங்கள் ஊராட்சிமன்ற உறுப்பினருக்கும் என நான்கு வாக்க்குகளை ஒவ்வொரு வாக்காளரும் போட வேண்டும். இந்த விளக்கத்தை எந்த அளவுக்கு "தமிழ்நாடு தேர்தல் ஆணையம்" புரிய வைத்துள்ளது என்பது நமக்கு தெரியாது. ஆனால் கண்டிப்பாக இந்த "உள்ளாட்சிதேர்தல்" எந்த வகையில் "சட்டமன்ற, நாடாளுமன்ற" தேர்தல்களில் இருந்து "வேறுபட்டது" என்பதை புரிய வைக்க வில்லை என்பது நமக்கு தெரியும்.


சட்டமன்ற தேர்தலில் நிற்கின்ற வேட்பாளர் வெற்றிபெற்றால் "சட்டமன்ற உறுப்பினராக" ஆகிறார். அவர் சட்டமன்றம் சென்று தனது "தொகுதி மக்களுக்கு" என்ன செய்ய முடியும்? தங்கள் தொகுதியை பற்றி, தொகுதி மக்களது கோரிக்கைகளைபற்றி சட்டமனரத்தில் "வாய்ப்பு" கிடைத்தால் பேச முடியும். ஆனால் அவற்றை "நிறைவேற்றும்" அதிகாரம் அவருக்கு கிடையாது. அது "அமைச்சரவைக்கு" மட்டுமே உண்டு. அதேபோல "நாடாளுமணர் தேர்தலில்" நிற்கின்ற வேட்பாளர் "நாடாளுமன்ற உறப்பினர்" ஆகிறார். அவரும் நாடாளுமன்றத்தில், தங்கள் தொகுதி பற்றியோ, தொகுதி மக்களது கோரிக்கைகள் பற்றியோ, "பேசத்தான்" முடியும். அவற்றை அவரால் செய்ய முடியாது. அங்கும் "அமைச்சரவைதான்" அவற்றை நிறைவேற்ற முடியும். அதனால்தான் "புரட்சியாளர் லெனின்" இந்த நாடாளுமன்ற பாதையை " அரசுக்கும், மக்களுக்கும் மத்தியில் இடப்பட்டிருக்கும் ஒரு திரை" என்று குறிப்பிட்டார்.


ஆனால் இந்த உள்ளாட்சி தேர்தல்கள் வித்தியாசமானவை. அவை தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களுக்கு "திட்டமிடும் அதிகாரத்தை" கொடுக்கிறது. அதாவது வாக்காளர்களால் தேர்ந்தெடுக்கப்படும் "மாநகராட்சி உறுப்பினரோ, நகராட்சி உர்ப்பினரோ, பேரூராட்சி உறுப்பினரோ, மாவட்ட ஊராட்சி உறுப்பினரோ, ஒன்றிய ஊராட்சயுருப்பினரோ, ஊராட்சி தலைவரோ, ஊராட்சிமன்ற உறுப்பினரோ" தான் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதி மக்களின் "நலனுக்காகான" திட்டங்களை தீட்டுவதற்கு அந்த அவைகள் இடம் கொடுக்கின்றன. அத்தகைய திட்டங்களுக்கான "நிதியை" ஒதுக்க அவர் சம்பந்தப்பட்ட அவைகளில் கருத்து தெரிவித்து "பெற்று கொள்ள" வசதி செய்கினறன. உள்ளாட்சிகளில் தேர்ந்தெடுக்கப்படுகின்ற "ஒவ்வொரு உறுப்பினரும்" அவர் தலைவராக இருந்தாலும், உறுப்பினராக இருந்தாலும் "திட்டமிடவும்,.நிதி ஒதுக்கவும்" அவர்களுக்கு உரிமை இருக்கிறது என்ற "அதிகாரத்தை" அந்த உள்ளாட்சி அமைப்பு அளிக்கிறது.


ஆகவே உள்ளாட்சி அமைப்புகள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களை விட, "கூடுதலான" அம்க்களுக்கு தேவையான "அதிகாரத்தை" பெற்றிருக்கிறார்கள். இந்த செய்தியை தேர்தல் ஆணையம் கூட மக்களுக்கு எடுத்து சொல்வது இல்லை. உள்ளாட்சிகளுக்கு "அதிகாரத்தை பரவலாக்க" நாடாளுமன்றம் "பண்ச்சாயத் ராஜ், நகர்பாளிகா" என்ற சட்டத் திருத்தங்களை கொண்டு வந்த போது, முதிர்ச்சி பெற்ற மாநில கட்சிகளின் தலைமைகள் அதை "ரசிக்கவில்லை". தங்களிடம் உள்ள "திரை" போன்ற அதிகாரத்தை மக்களுக்கான அதிகாரம் என்று "ஏமாற்றி கொடு" இருக்கும் போது, உண்மையான "அதிகார பரவலாக்கலை" மக்களுக்காக இந்த உள்ளாட்சிகள் கொண்டு வந்து விடுமே என்றும், அதனால் "தங்கள் அதிகாரம்" குறிக்கப்பட்டு விடுமே என்றும் அந்த கட்சி தலைமைகள் எண்ணி பார்த்ததில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

ஆகவே இந்த உண்மையை "உள்ளாட்சிகளின் உணமையான் ஆதிகாரத்தை" மக்கள் மத்தியில் கொண்டு சென்றால், அதை விளங்கிய பிறகு மக்கள் எங்காவது "குழுக்கள் முறையில்" அல்லது "குத்தகை" முறையில் அல்லது "ஏல முறையில்" தங்கள் ஊராட்சி தலைவர்களை தேர்வு செய்வார்களா? உள்ளாட்சியில் நிற்கும் வேட்பாளர்களிடம் "காசும், பொருளும்" வாங்கி கொண்டு வாகளிப்பார்களா? உண்மை அதிகாரம் தங்கள் உறுப்பினருக்கு இருப்பது தெரிந்தால், அதை பயன்படுத்த "சரியான" வேட்பாளரை தேர்வு செய்யவேண்டும் என்ற "அவா" கூடாதா? அதன் மூலம் "ஊழல்" குறையாதா? அது கூடாது என்பதற்காகவே இந்த தேர்தல் ஆணையர்களும், அரசியல்வாதிகளுடன் சேர்ந்து கொண்டு உள்ளாட்சி அதிகாரம் எப்படி வேறுபட்டது என்று கூராமால் இருக்கிறார்களா?

Saturday, October 15, 2011

மன்னர் குடும்பத்திற்குள் குத்து வெட்டா?

மன்னர் குடும்பத்திற்குள் குத்து வெட்டா?
அரசாண்ட அல்லது அரசாலும் மன்னர் குடும்பத்திற்குள் குத்து வெட்டா என்றால், நம்மவர்களுக்கு புரிவது, " கருணாநிதி குடும்பம்தான்". ஆனால் அந்த குத்து வெட்டுதாந ஊரறிந்தது ஆயிற்றே? இது வெளிவராத ஒரு புகைச்சல். அதாவது மகிந்தா தனது தம்பி கோதபாயியை, "முடிசூட்ட" விரும்புகிறார் என்பதே புதிய தகவல். அதை பசில் விரும்பவில்லையாம். மகிந்தாவின் மகனும், மனிவியும் கூட விரும்பவில்லையாம்.


இந்த ' மன்னர் குடும்பத்தை" முழுவதுமே அந்த "கட்சியின்" மற்ற தலைவர்களும், தொண்டர்களும் விரும்பவில்லையாம்.இத்தகைய முரண்பாடுகளை பயன்படுத்தி அந்த குடும்பத்தினரை போற்குற்றங்களுக்காக விசாரிக்குமா உலக சமூகம் என்றால், அதுதான் இல்லை. மாறாக அமெரிக்காவும், இந்தியாவும் இந்த முரண்பாடுகளை பயன்படுத்தி, தனைகளுக்கு அதிக லாபம் தர மகிந்தாவை நிர்ப்பந்தித்து வரூகின்றன.,

Friday, October 14, 2011

தில்லிக்குள் நுழைந்த இண்டிகா வெடிமருந்துடன் வந்து வெடிக்காமல் பிடிபட்டதா?

இன்றைய ஊடகங்கள் ஒரு அதிர்ச்சி செய்தியை வீசின.அன்றாடம் ஒரு அதிர்ச்சி செய்தியை வீசுவது, ஊடகங்களுக்கு வேண்டுமானால் சுவாரசியமாக இருக்கலாம். அலுவலகம் போக கிளம்பும் ஊழியர்களுக்கும், பள்ளிக்கு செல்ல புறப்படும் பிள்ளைகளுக்கும், அவர்களை அனுப்பி வைக்க வாசலுக்கு வரும் தாய்மார்களுக்கும் எப்படி சுவாரசியமாக இருக்கும்? வேதனையாகத்தானே இருக்கும்? அதுவும் தங்கள் வீடு மனிதர்கள் வெளியே போய்விட்டு பத்திரமாக திரும்புவார்களா என்ற கவலை வந்து விடாதா? ஊடகங்கள் எ இப்படி செய்கின்றன? அவர்களை கேட்டால் அரசுதானே இப்படி செய்திகளை எங்களுக்கு கொடுக்கிறார்கள்? என்று கேட்கிறார்கள்.

அரசு ஏன் இப்படி செய்திகளை கொடுகிறது? வெடிக்கும் போது கொடுக்கமாட்டார்களா? சரிதான். வெடித்தால் செய்தியை கொடுப்பார்கள். வெடிக்காமல் இறக்கும்போது கொடுப்பது ஏன்? என்று கேட்டால், வெடி வைத்தால் கொடுக்க மாட்டார்களா? என்றும் பதில் வரும். ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது. உண்மையிலேயே இப்படி வரும் செய்திகளை நாம் எல்லோரும் நம்பி விடுகிறோம். அதனால்தான் தொடர்ந்து இப்படி செய்திகளை அதிகாரிகள் கொடுக்கிறார்கள். அப்படிஎன்றால் இந்த செய்திகளை நம்பக் கூடாதா? நம்பக் கூடாது என்று சொல்வதற்கு நாம் யார்? நம்புங்கள் என்று சொல்வதற்கும் அரசு அதிகாரிகள் யார்? அன்ம்புவதும், நம்பாததும் அதை வாங்கிக் கொள்ளும் மக்களைப் பொறுத்து உள்ளது.

இந்தியாவில் வறுமையின் எல்லைக்கோடுக்கு கீழ் பெரும்பாலும் இல்லை என்று திட்டக் குழு துணைத்தலைவர் கூறினார். அவர் ரொம்ப பெரிய ஆல்ல்தான். அவரை யார் நம்பினார்கள்? அவர் கணக்கு போட்டு சொன்னார். நகர்புறத்தில் முப்பத்தி இரண்டு ரூபாய் மற்றும் கிராமப்புறத்தில் இருபத்தைந்து ரூபாய் சம்பாதிப்பவர்களை எல்லாம் வறுமை கோடிற்கு மேல் உள்ளவர்கள் என்று அவர் கணக்கு கூறினார். யார் நம்பினார்கள்? சோனியா காந்திக்கு வேண்டிய தேசிய ஆலோசனை கவுன்சில் உறுப்பினர்கள், சமூக ஆர்வலர் அருணா ராய், வலிய ஒய்வு பெற்ற அய்.ஏ.எஸ். அதிகாரியும், அம்தச்சர்படர்வாதியுமான மோடி எதிர்ப்பாளர் ஹர்ஷ் மந்திர், முன்னால் அதிகாரி சக்சேனா ஆகியோர் கூட அதை நம்பவில்லையே? அதற்குபிரகுதானே பிரதமரும் அதை சர்ச்சிக் குரியது என்று மறைமுகமாக ஒப்புக்கொண்டார்? இதுபோல திகாரிகள் சொல்லிவிட்டால் நம்புவது என்று ஒன்று இருக்க முடியாது.

அப்படித்தான் பயங்கரவாதிகள் விசயத்திலும் பார்க்க வேண்டாமா? நாம் பயங்கரவாதத்தை எதிர்த்து விழிப்போடு இருக்க வேண்டாமா? விழிப்போடு இருக்க வேண்டும் என்பது உணமிதான். ஆனால் எது பயங்கரவாதம் என்று தெரிந்திருக்க வேண்டாமா? அரசு சொல்வது எல்லாம் பயங்கரவாதமா? அப்படியானால் மனித உரிமையாளர்கள் அரசு பயங்கரவாதம் என்று ஒன்றை சொல்கிறார்களே? அது என்ன? பயங்கரவாதம் இரண்டு அவ்கைப்படும் என்று புரிந்துகொள்ளலாமா? இதில் எந்த பயங்கரவாதம் அதிகம் ஆபத்தானது? இந்த சர்ச்சைக்கு போவதற்கு முன்பு எந்த, எந்த விசயத்தில் அரசு சொல்வதை நம்புவது எந்த விசயத்தில் கேள்விகள் கேட்பது என்றாவது நாம் புரிந்து கொள்ளவேண்டும்.

இப்போது வந்திருக்கும் செய்தி, டில்லியில் ஒரு இண்டிகா சிறிய வாகனம், ஜம்மு காஷ்மீரிலிருந்து வந்தது. அதில் ஐந்து கிலோ ஆர.டி.எக்ஸ். என்ற பயங்கர வெடிபொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது உண்மையாய் இருந்தால் நிச்சயம் ரொம்ப பெரிய விசயம்தான். டில்லி என்ற இந்தியாவின் தலினகருக்கு, கலக்க ப்போம்மியாக இருக்கும் ஜம்மு காஷ்மீரிலிருந்து ஒரு வாகனத்தில் பெரும் வெடி பொருள்களை ஏற்றி அனுப்பி இருக்கிறார்கள் என்றால் நிச்சயம் இது பெரிய விசயம்தான். உடனடியாக ஒரு ஏடு அந்த வெடிகளை கொண்டுவந்தவர்கள் "பாபர் கல்சா" என்று கூறியுள்ளது. இன்னொரு ஏடு அந்த வெடிகளை கொண்டு வந்தது "லஷ்கர் ஈ தொய்பா" என்று கூறியுள்ளது. இரண்டு ஏடுகளுக்கும் செய்தி கொடுப்பது ஏதோ ஒரு அதிகாரிதான். அப்படி செய்தி கொடுப்பவருக்கு "கொடுக்கும் செய்தியின்" வீரியம் தெரியாமல் கூட இருக்கலாம். அதை வெளியிடும் ஊடகத்திற்கு கூட, அந்த செய்தியின் "விளைவுகள்" புரியாமல் இருக்கலாம்.

ஆனால் "பாபர் கல்சா" எனபது சீக்கிய போராளிகள் அமைப்பு. அதன் தொடர்பை இந்த பிடிபட்டதாக கூறப்படும் வெடிகளுடன் சேர்ப்பது, அந்த "சுய நிர்ணய உரிமைக்கு" போராடும் சீக்கியர்களை மனத்தளவில் பாதிக்கும். அவர்கள் அருகே உள்ள இந்து மக்களை "கலவரப்படுத்தும்". இது பற்றி செய்தியை வெளியிடும் ஊடகங்களுக்கு கவலை இல்லை. அதேபோல "லஷ்கர் ஈ திபா" எனபது காஷ்மீர் விடுதலைக்கு போராடும் அமைப்பு. அது "பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர்" என்று இந்தியாவாலும், "விடுதலை பெற்ற காஷ்மீரம் " என்று போராளிகளாலும் சொல்லப்படும் பகுதியில் இருந்து செயல்படுவதாக கூறப்படும் அமைப்பு. அது இந்த வெடிகளில் தொடர்பு என்றால் "சம்பந்தப்பட்ட பலரையும்" கவலைக்கு உள்ளாக்கும். அதுபற்றி எந்த வணிக புத்தி ஊடகங்களுக்கும் கவலை இல்லை.

சரி. இப்போது ஜம்மு காஷ்மீர் முழுக்க பயங்கரமான ளவில் இந்திய ராணுவம் நிற்கிறது. அவர்களது முழுமையான ஆக்கிரமிப்பில் அந்த பகுதி இருக்கிறது. அப்படியானால் அங்கிருந்து இப்படி ஒரு பயங்கர வேத்களுடன் ஒரு வாகனம் டில்லி நோக்கி வரமுடியுமா? ராணுவமும், பாதுகாப்பிற்கு நிற்கும் உளவு துறையும், டில்லி அதிகாரிகளும் அனுமதித்தால் மட்டுமே வரமுடியும். அப்படி அவர்களே அனுப்பி இருப்பார்களா? அனுப்பி இருந்தால் எதற்காக அனுப்பி இருப்பார்கள்? அந்த வாகனத்தில் வந்தவர்கள் யாரவது பிடிபட்டிருக்கிரார்களா? யாரும் பிடிபடவில்லை.. எல்லோரும் தப்பிவிட்டார்கள் என்று அந்த செய்தி கூறுகிறது. அப்படியானால் அவர்களை "தப்பவிட்டு விட்டார்களா?". அல்லது அப்படி ஒரு வாகனமும், வரவில்லை, அதில் யாரும் பயங்கரவாதிகளும் வரவில்லை, எல்லாமே அதிகாரிகளின் நாடகம் என்பதுதான் உண்மையா? இவ்வாறு கேள்விகள் எழ வேண்டாமா? அதுதான் பகுத்தறிவு?

ஒன்று சீக்கிய தேசிய இன சம்பந்தம். இன்னொன்று காஷ்மீர் தேசிய இனம் சம்பந்தம். அதாவது இரண்டு டேஹ்சிய இன போராட்டங்களிலும் சமந்தப்பட்ட "அப்சல் குரு", " தேவேண்டற்பல்சிங் புல்லார்" இருவரும் மரண தண்டனையை எதிர் நோக்கியிருக்கும் வெலௌஇல், இந்த செய்திகள் பரப்பப்புகின்றன. அதுவும், உள்துறை இரண்டு மரண தண்டனைகள் பற்றிய முடிவேடுதளிலும், " சட்டமன்றம், நீதிமன்றம்" என்று சிக்கலை எதிர்கொள்ளும் போது, இந்த செய்திகள் பரப்பபடுகின்றன. அதற்கு இந்த டில்லி வெடிகளுடன் கூடிய வாகனம் பயன்படுத்த படுகிறது.

இப்போது டில்லிக்கு இருக்கும் "நெருக்கடியை" எண்ணிப்பாருங்கள். காஷ்மீர் விசயத்தில் முதல் மைச்சர் தனது கட்சியின் தொண்டருக்கே "காவல் சாவு' அவ்ந்ததில் மாட்டிக் கொண்டார். எதிர்க் கட்சி துள்ளி குதிக்கிறது. மக்கள் எழுச்சி பெற்று ராணுவம், காவல் துறை ஆகியோருக்கு எதிராக இருக்கிறார்கள். காஷ்மீரை விட்டு ராணுவத்தை அகற்ற "கோரிக்கைகளா" எழுந்து விட்டன. காஷ்மீர் பற்றி "ஆராய" மத்திய அரசு ஏற்படுத்தியுள்ள நிபுணர் குழு உள்துறை அமைச்சரிடம் தனது அறிக்கையி கொடுத்து விட்டது. அதை பகிரங்கமாக உள்துறை வைக்க வேண்டும் என்றும் அவர்களே கேட்டுக் கொண்டுள்ளனர். பிரஷாந்த் பூஷன் "காஷ்மீர் மக்களின்" கருத்துக்களுக்காக வாக்கெடுப்பு வேட்னுமே ன்று வேறு கூறி, தனது அறை வரை 'அடிவாங்கி" விட்டார். அவரது அறையில் புகுந்து அடித்தவர்களை " நீதிமன்ற காவலுக்கு" கொண்டு செல்லும்போதும், அங்கே வந்து "அன்னா ஹசாரே" ஆட்களை அடித்து காவி உடைவாதிகள் "பகிரங்கமாக" கலாட்ட செய்வதை ஊடகங்களில் பார்க்கிறோம். அதை முன்கூட்டியே கண்டுபிடித்து "தடுக்க" டில்லியில் உளவு துறை வேலை செய்யவில்லை. அல்லது அவர்கள் ஏற்பாட்டில்தான் "அதுவே" நடந்துள்ளது என்பது தெரிகிறது.


இப்படி சூழலில், தில்லிக்குள் ஒரு வாகனம் "வெடிகளுடன்" வந்ததாம். பிடிபட்டதாம். ஆட்கள் ஓடிவிட்டார்களாம். யார் காதில் யார் பூ சுற்றுகிறார்கள்? இதில் ஒன்று புரிகிறது. உள்துறைக்கும், பிரதமர் அலுவலகத்திற்கும், இப்போது காஷ்மீர் விசயத்தில் "வசமான சிக்கல்" ஏற்பட்டுள்ளது. அதற்கு பரிகாரம் தேட, "பிரஷாந்த் பூஷன்" மீது தாக்குதல், "வெடிகளுடன் வாகனம்" எல்லாம் ஏற்பாடு செய்யும் நிர்ப்பந்தம் உளவு துறைக்கு ஏற்பட்டுள்ளது. இது "நியாயமான" சந்தேகம்தானே? இதுகூட ஏற்படவில்லையானால், நாம் ஒரு "முட்டாளுங்க".

Thursday, October 13, 2011

ஸ்ரீராம் சேனா எதற்காக உச்சநீதிமன்ற வழக்கறிஞர்களின் அறைகளில் நுழைய வேண்டும்?

பொதுவாக நீதிமன்றங்களில் அல்லது அதன் வழக்கறிஞர்களின் அறைகளில் "பாதுகாப்பு" இல்லை என்ற கருத்தை , டில்லி நீதிமன்ற "குண்டுவெடிப்பு" பரப்பிக் கொண்டிருக்கும் நேரம் இது. இந்த நேரத்தில் " பிரஷான்ட் பூஷன்" என்ற பிரபல் வழக்கறிஞரை புகுந்து தாக்குவதும், தாக்கியவர்கள் ஸ்ரீராம் செனவினர் என்று அறிவிப்பதும், அதுவும் "காட்சி ஊடக நேர்காணல்" நேரத்தில் தாக்குவதும், "தற்செயலாக" நடந்தது என்று சொல்லிவிட்டு நழுவி விடலாமா? இப்போதெல்லாம் 'டில்லியில் நடக்கும்" எந்த செயலும் ஏதாவது "பின்னணி நோக்கம்" இல்லாமல் நடப்பது இல்லையே? அபப்டியானால் இந்த தாக்குதலில் எண்ண பின்னணி நோக்கம் இருக்கிறது?

முதலில் பிரஷாந்த் பூஷன் " அன்னா ஹசாரே" குழுவை சேர்ந்தவர். அண்ணா ஹசாரே காங்கிரசுக்கு எதிராக பரப்புரையில் சமீபத்தில் ஈடுபட்டு வருவது அந்த கட்சி தலைமைக்கு ஒரு பெரும் தலைவலியை தந்து கொண்டிருக்கிறது. அதனால் பா.ஜ.க.விற்குதான் பலன். அப்படி இருக்கையில் இந்துத்துவா சக்திகள் இந்த நேரத்தில் அண்ணா ஹசாரேவின் ஆளான பிரஷாந்த் பூசனை தாக்குவார்களா? வாய்ப்பில்லை. அதேநேரம் காஷ்மீரில் கருத்து கணிப்பு நடத்த வேண்டும் என்று கூறியதற்குதான் இந்த தாக்குதல் என்று அவர்கள் கூறியதாகவும் வெளிவந்துள்ளது. அத்தகைய "மாற்று கருத்து" பா,ஜ,கவிற்கும் உண்டு, கான்க்கியர்சுக்கும் உண்டு. அப்படியானால் அந்த இரண்டு கட்சிகளுமே இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம். ஆனால் பிரஷாந்த் பூஷனால் அதிக லாபம் பெரும் பாஜக வைவிட இந்த தாக்குதல் மூலம் அந்த பிரபல வழக்கறிஞரை மிரட்டி வைக்க வேண்டிய தேவை காங்கிரசுக்குதான் அதிகமாக இருக்கிறது.


ஒரே கல்லில் இரண்டு மானக்கை என்பதுபோல வழக்கறிஞரையும மிரட்டி, அதேபோல மற்றவருக்கும் வரும் என்று டில்லி அறிவு ஜீவிகளையும் மிரட்டி, காஷ்மீர் பற்றி ஆதரவாக பேச விடாமல் செய்யலாம். அதுபோலவே இனி காங்கிரசை எதிர்த்தால் அண்ணா ஹசாரே வுக்கும் இதுதான் என்று சுட்டி காட்டலாம். பாதுகாப்பான நீதிமன்ற அவ்ழக்கறிஞர் அறைகளுக்கே போய் அடிக்க முடியும், அன்னா ஹசாரே எண்ண "துக்கடா" என்று அதன் மூலம் காட்டலாம்.அதேசமயம் இந்துத்துவா சக்திகள்தான் அடித்தன என்று காட்டி, இந்துத்துவா பக்கம் அந்த அறிவுஜீவிகளை போக விடாமல் செய்யலாம். அதே இந்தத்துவா காகிரசிடமும் இருக்கிறது என்பதை தெரியவிடாமல் செய்யலாம். வழக்கறிஞர் அறைபோய் தாக்கியவர்கள் "திட்டமிடாமல்" தாக்கப்போகும் இடம் பற்றிய முன்னறிவு இல்லாமல் தாக்குதலில் ஈடுபட மாட்டார்கள். அதனால் ஏற்கனவே அங்கே இருந்த அவர்களது ஆட்கள் மூலம், காட்சி ஊடகம் நேர்காணலுக்கு வந்திருப்பதை அறிந்த பிறகுதான் தாக்குதலை நடத்தவேண்டும் என்று திட்டம் இருக்கலாம். அப்போதுதான் வர்களைத் தாக்குதல் நேதேன்கும் பரவி அதற்கே உரிய அவர்கள் எதிர்பார்த்த விளைவுகள் கிடைக்கும்.

தாக்குதல் நடத்திய அமைப்பிற்கு "ஸ்ரிராம்சென" என்று பயரிட்டது கூட, பெங்களூரில் தாக்குதலை பெண்கள் நாட்டிய நிகழ்வில் நடத்திய "அன்ஜெநேய சேனா" என்பதுபோல இருக்கிறது. அதாவது அந்த பெங்களூர் தாக்குதல் நடத்தியவர்கள் அதற்குபிறகு, சில வேலைகளை திட்டமிட்டு செய்கிறார்கள். அந்த பெங்களூர் தாக்குதலுக்கு தலைமை ஏற்ற முத்தலீக் அதற்குபிறகு, தமிழர்கள் அடையாளத்தை வெறும் "இந்துதுவா அடையாளம்" என்று பரப்பி வருகிறார். அது தமிழர்கள் ஒற்றுமையை கலைக்க விரும்பும் டில்லிக்கு சாதகமான திட்டமிட்ட செயல்பாடு. அதுபோல இப்போது அறிமுகப்படுத்தப்படும் "ஸ்ரீராம் சேனா "வும் டில்லி அதிகார மையம் திட்டமிட்டு செய்த செயல்பாடாக இருக்கவே அதிக காரணங்கள் இருக்கின்றன. எப்படியோ நமது "ஆளும் கும்பல்" பயங்கரவாதம் செய்வதில் கைதேர்ந்தவர்களாக ஆகிவிட்டார்கள்.

Wednesday, October 12, 2011

மெட்ராஸ் பலகலையில் "அம்பேத்கர் வாசகர் வட்டம்" கூட்டம்.

இன்று நடந்த "அம்பேத்கர் பொருளியல் மையம்" சார்பாக "அம்பேத்கரும் தொழிலாளர் சட்டங்களும்" என்ற கருத்தரங்கில் சிறப்பு பேச்சாளராக " பலராமன்" கலந்து கொண்டார். பலராமன் தமிழ்நாட்டில் "தொழிலாளர் துறையில்" பல பத்து ஆண்டுகளாக பணியாற்றி ஒய்வு பெற்றவர். அம்பேத்கர் "கருத்தியலில்" ஊறிப்போனவர். இந்த அம்பேத்கர் வாசகர் வட்டத்தை பேராசிரியர் தங்கராஜ் "விடாப்பிடியாக" தொடர்ந்து நடத்தி வருகிறார். இன்றைய கூட்டத்தில், பலராமன் எடுத்து வைத்த வாதங்களில் அவருக்கு கொடுக்கப்பட்டிருந் நேரத்திற்குள், "அம்பேத்கர் எப்படி தொழிலாளர்" நலன்களை கவனித்து அதற்கேற்ற முறையில் "முடிந்த ளவில்" பல சட்டங்களை இயற்றினார் என்பதை புட்டு, புட்டு, வைத்தார்.

அவர் கூறிய விவரப்படி, அம்பேத்கர் இயற்றிய சட்டத்தில், " 141 சட்டங்கள்" தொழிளாலருக்காக எழுதப்பட்டவை என்ற செய்தியை பலராமன் பகிர்ந்து கொண்டார். அவை தவிர சில சட்டங்கள் தான் அம்பேத்கருக்கு பிறகு, இந்திய தொழிலாளர் வர்க்கத்திற்கு இயற்றப்பட்டுள்ளன என்றார் பலராமன். அம்பேத்கரின் வாரிசுகள் இன்றுவரை அத்தகைய "தொழிலாளர் நல சட்டங்களின்" பலன்களை பெறவில்லை எனபதை நாம் பார்த்து வ்ருகிறோம்.

இம்மானுவேல் அடிகளாரை ஏன் "திருப்பி" அனுப்பினர்?

இந்தியா ஒரு "ஒற்றையாட்சி" அரசமைப்பு கொண்ட நாடு என்பதை மீண்டும் நிரூபிக்கிறார்கள். இங்கிலாந்திலிருந்து "அழக தமிழர் மன்றம்" என்ற "ஜி.தி.எப்." தலைவரான "எழுபத்தேழு" வயதுடைய அருட் திரு . இம்மானுவேல் அய்யாவை, இங்கிலாந்தில் உள்ள "இந்திய தூதரகம்" இரட்டை விசா கொடுத்து இந்தியாவிற்கு அனுப்பி வைத்தது. ஆனால் அதைக்கூட, "டில்லி" மதிக்கவில்லை. அதனால் நேற்று இரவு சென்னை வந்து இறங்கிய 'அடிகளாரை" உடனேயே "டில்லியிலிருந்து மேலிடம்" உத்தரவு என்ற பெயரில், சென்னை விம்மான நிலையத்தில் உள்ள " எமிக்ரேசன்" அதிகாரிகள் அவர் பயணம் செய்து வந்த இடமான 'துபாய்" கே திருப்பி அனுப்பி விட்டார்கள். அந்த செய்தியை "வெளியே" தெரிய விடாமல் பார்த்து கொண்டார்கள். இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டதற்கு, "அவர் விடுதலை புலி ஆதரவாளர்" என்றும் இந்திய அரசை தாக்கி பேசியுள்ளார் எனவும் கூறினார்கள்.

இந்த அதிகாரிகளுக்கு "இம்மானுவேல் அடிகளாரை" திருப்பி அனுப்பியதற்கான "காரணம்" சரியாக தெரியாது எனபது நமக்கு டேஹ்ரியும். ஆனாலும் தங்களது "புத்ஹ்டிசாளித்தனத்தை" காட்டுவதாக எண்ணிக் கொண்டு இப்படி '" ஏறுக்கு மாறாக" பதில் சொல்கிறார்கள். அவர்கள் "வாதமே" உண்மையான "காரணம்" என்றால், உங்கள் இங்கிலாந்து நாட்டில் உள்ள "இந்திய ஹைகமிசனுக்கு" இது போன்ற "காரணங்கள்" தெரியாதா? அல்லது இதுபோன்ற "காரணங்களை" கூறி "யாரையும்" திருப்பி அனுப்ப எந்த "அனைத்து நாட்டு விதிகளும்" இடம் கொடுக்காது எனபது இந்திய அரசுக்கும் தெரியாதா? ஏன் இந்த விளையாட்டு? தமிழ்நாட்டில் ஒரு "ஆட்சி" ஈழத் தமிழருக்கு "ஆதரவாக" இருக்கிறதே என்ற "கோபம்" டில்லிக்கு இருக்கலாம். அதற்காக "தமிழ்நாட்டிற்குள்" வருகின்ற வெளிநாட்டுக் காரர்களை " தமிழக அரசுக்கு" தெரியாமலேயே "திருப்பி" அனுப்ப டில்லிக்கு எவ்வளவு "துணிச்சல்?".


இந்த "துணிச்சலை" தந்தது யார்? இதற்கு முன்னால் ஒரு ஆட்சி தமிழ்நாட்டில் இருந்தது. அது டில்லி சொன்னதெற்கெல்லாம் "தலையாட்டி" கொண்டு இருந்ததே? இப்போதுள்ள "ஆட்சியாளர்கள்" மட்டும் ஏன் அப்படி செய்வதில்லை என்ற கோபம் டில்லிக்கு இருக்கிறதா? அதற்காக "அனைத்து நாட்டு விதிகளை" மீறி, மனித உரிமைமீறளாக, இததகைய வேலையை டில்லி செய்வதை "யார்" பொறுத்து கொள்ள முடியும். உலக மாந்தர்களுக்கு "கருத்து சுதந்திரம்" கிடையாது என்று இந்திய மண்ணில் "புதிய" ஒரு சரித்திரத்தை இந்த மத்திய அரசு எழுதப் போகிறதா? இத்தகையா "இழிவான" போக்கை எத்ரித்து " தமிழர்களும், மனித உரிமையாளர்களும்" கிளர்ந்து எழவேண்டும். கிளர்ந்து எழுவோம். டில்லியின் 'சர்வாதிகார" போக்கை எதிர்ப்போம். இனிமேலாவது "இந்தியா என்பது ஒரு ஒற்றையாட்சி நாடு" என்பதை விளங்கி கொள்ளுங்கள்.

Tuesday, October 11, 2011

தயா-கலா வீடு "சோதனை" என்றால், கழகத் தலைவருக்கு எண்ண கவலை?

தயா-கலா வீடு "சோதனை" என்றால், கழகத் தலைவருக்கு எண்ண கவலை?
கலா--தயா வீடுகள், அலுவலகங்கள், அவர்களது "பனுதார்கலான" அப்போல்லோ மருத்துவமனையின் முதலாளி அக்கியோறது இருப்பிடங்கள் "சீ.பி.அய்.யால் சோதனை செய்யப்பட்டால் அது "திமுக" கட்சியின் தலைவர் கலைஞரை "பாதிக்குமா?". ஒன்றும் பாதிக்காது. அவரது கவலை எல்லாம் தனது மகள் "கனிமொழி" திஹார் சிறைக்கு உள்ளே இருக்கிறாரே அவர் எப்போது வெளியே வருவார் எனபது மட்டும்தான். ஆனாலும் "கலாநிதியும், தயாநிதியும்" அவரது மர்மகனின் பிள்ளைகளாயிற்றே. அதனால் .குடும்பத்திற்குள் "குழப்பம்" வராதா? வந்துவிட்டதே.

கலா-தயா சகோதரர்களின் "சித்தப்பா" தான் செல்வம். அதாவது முரசொலி மாறனின் தம்பி. அந்த செல்வத்தின் "மனைவி"தான் கலைஞரின் மகள் "செல்வி". அதனால் கலா-தயாவின் "சித்திதான்" செல்வி. அதனால் செல்வி, பெங்களூரில் இருந்து "கருணாநிதிக்கு" தொலை பேசினாராம். அதை "யார்" பேசுகிறார்கள் என்று தெரிந்த பிற்பாடும் கலைஞர் 'மதித்து" பேசவில்லையாம். அவருக்கு தன் அன்பு மகள் "கனிமொழியை" உள்ளே தள்ள சீ.பி.ஐயிடம் "இல்லாததையும், பொல்லாததையும்" போட்டு கொடுத்த "மாறன்" வழி வந்த கும்பலின் "அமிர்தம்" செய்த "துரோகம்"தான் திஹார் சிறையில் "கனிமொழி" வாடக் காரணம் என்ற "கருத்து" ஆழமாக இருக்கிறதே? அவர் எப்படி "மனம் இளக" முடியும்?

அணு அரசியலில் மன்மோகன் மீண்டும் "சிக்கினார்".

இன்று "தி ஹிந்து" நாளேட்டில் "வைசு நரவானே" வின் ஒரு "கட்டுரை" வெளிவந்துள்ளது. உலகிலேயே அதிகமாக "மின்சாரத்தேவைக்கு" அணு உலைகளை "சார்ந்திருக்கும் " பிரான்ஸ் நாடு "புகுஷிமா" விபத்திற்கு பிறகு "வாய்" திறக்காமலிருத "நிலையிலிருந்து" இப்போது வெளிப்படையாக் அவ்ந்துள்ள "நிலை" பற்றிய "கட்டுரை" அது. அதில் பிரான்ஸ் நாட்டில் 59 அணு உலைகள் இருப்பதாகவும், அந்த நாட்டின் "மின் தேவைக்காக" அவற்றிலிருந்து "எழுபது" விழுக்காட்டிற்கும் அதிகமாக அந்த நாடு "மின்சாரம்" பெற்று வருவதாகவும், அதனால் "ஜப்பானில் புகுஷிமாவில்' நடந்த "பேராபத்திற்கு" பிறகும், ஜெர்மன் நாடு "அணு உலைகளை" முழுமையாக " தடை" செய்ய முடிவு செய்துள்ள நிலையிலும், பிரான்ஸ் நாடு எந்த "முடிவும்" எடுக்காமல் "மவுனமாக" இருந்தது எனபதுதான் உலகம் பார்த்து வந்த பார்வை.

ஆனால் இப்போது "பிரான்ஸ்" நாட்டின் "ஈ.பி.ஆர்." என்ற அணு உலைகளை தயாரிக்கும் நிறுவனம் "அரிவா" வசமாக "பிரான்ஸ் நீதிமன்றத்தில்" மாட்டி கொண்டு விட்டது. அதாவது " பூமிக்கு அடியில் உள்ள நீரில்" அந்த நிறுவனம் "யுரேனியத்தின் திரவ நச்சை" கலந்துள்ளது என்ற "ஆதாரம்" கிடைத்த நீதிமன்றம் அந்த "அரிவா நிறுவனத்தின் கிளையான சொகாற்றி" நிறுவனத்துக்கு "நாற்பதாயிரம் டாலர்கள் " அபராதமாக விதித்துள்ளது. அந்த அளாவுக்கு அந்த " அணு உலை உற்பத்தி நிறுவனம்" பிரான்ஸ் நாட்டின் நீதிமன்றம் முன்னால் "பாதுகாப்பற்றது" என்று தன்னை நிரூபித்து விட்டது. அணு உலைகளின் மூலம் "மின் உற்பத்தி" செய்யும்போது அதாவது "அணுவை" பிளக்கும்போது, அதிலிருந்து "வெளிப்படும் கழிவுகளை" என்ன செய்வீர்கள் என்பதே "முக்கிய" உலக பிரச்சனை.. அத்தகைய "யுரேனிய நச்சு கழிவுகளை" அந்த நிறுவனம் "பூமிக்கு அடியில் உள்ள நீரில்" கலக்க விட்டுள்ளது என்பது "தந்திரமான" ஆபத்தான "தன்மை" கொண்ட நிறுவனமாக அது இருப்பதை நிரூபித்து உள்ளது.அத்தகைய "நிறுவனத்தில் " ஒரு நாடு தனக்கு வேண்டிய "அணு உலைகளை" வாங்கினால் "வாங்குகின்ற குறிப்பிட்ட நாடு" ஒன்று "கூமுட்டையாக" இருக்க வேண்டும் அல்லது "அந்த நாட்டின் தலைமையே ஆபத்தானவர்களால்" ஆளப்பட வேண்டும். அது எந்த "நாடு" என்ற உங்கள் "அவாவை" அதே ஏட்டின் கட்டுரை அம்பலப்படுத்துகிறது.


இந்தியாவிள் உள்ள "மகாராஷ்டிரா" மாநிலத்தில் "ஜைதாபூர்" என்ற இடத்தில் "ஆசியாவிலேயே" பெரிய அளவிலான "அணு உலையை" கொண்டு வரப்போகிறோம் எனும் "இந்திய அரசின்" சவடாலுக்கு அந்த வட்டார மக்கள் "கடும் எதிர்ப்பை" கொடுத்து வருகிறார்கள். அந்த ஜைதாபூர் அணு உலைகளுக்குக்காக "ஆறு அணு உலைகளை" மேலே குறிப்பிட்ட இப்போது "பிரன்ஸ்" நாட்டில் "சிக்கி" கொண்டுள்ள அதே நிறுவனத்திடம்தான் "இந்திய அரசு" வாங்குவதற்கு "ஒப்பந்தம்" செய்துள்ளது. அதாவது "பிரான்ஸ் நாட்டின் நீதிமன்றத்தால்" எந்த குறிப்பிட்ட நிறுவனம் "பாதுகாப்பற்றது" என்று தீர்ப்பு வெளியாகி உள்ளதோ "அதே" நிறுவனத்திடம் மன்மோகன் அரசு "எப்படி" பாதுகாப்பான அணு உலைகளை "வாங்க முடியும்?". இந்த கேள்வியை இப்போது " கூடங்குளத்தில்" பாதுகாப்பான அணு உலைகளை உருவாக்குவோம் என்று கூறும் இந்திய மன்மோகன் அரசி "நோக்கி" நாம் கேட்க வேண்டும். அதனால்தான் ஏற்கனவே "இந்திய ராணுவத்தின் யுரேனியம் செறிவூட்டல்" என்ற ஆபத்தான அணு குண்டு தாயாரிப்பு முடிவின் மூலம் "தான் போட்ட" கையெழுத்துக்கள் கொண்ட "ஒப்பந்தங்களை" மீறிவரும் மன்மோகன் அரசு "மீண்டும்" உலக "அணு உலை" வியாபாரிகளிடம் " சிக்கி" கொண்டு விட்டார் எனபதும், அதை "ஒட்டி" இந்திடாவின் "நாட்டுப்பற்றாளர்கள்" இந்த "பாதுகாப்பற்ற" அரசாங்கத்தின் "பாதுகாப்பற்ற" அணு உலைகளை "எதிர்க்க" தெருவுக்கு வரேண்டும் எனவும் "புரிந்து கொண்டால்" நாடு உருப்படும். '

Sunday, October 9, 2011

தலைவரிடம் "தலைமையை" அப்கரித்துவிட்ட "தனயன்".

திமுக என்ற கழகம் தனது "கட்சி கட்டுப்பாடு " என்ற சொற்களுக்காக அதிகமாகவே "பேசப்படும்" கட்சி. அந்த கட்சிக்குள் 'சமீப" காலமாக "குடும்பத்தின்" ஆதிக்கத்தை கொண்டு வந்து "கட்சி தொண்டனின்" மரியாதையை "கலைத்துக் கொண்டு" இருக்கிறார்கள் என்பதுதான் "கழகத்தொண்டர்களின்" புலம்பல். அப்படி நேரத்தில் "பரிதி" என்ற ஒரு பொறுப்புள்ள "தொண்டனின்" அல்லது "தலிவனின்" மரியாதை "தளபதி" என்று அழைக்கப்படும் தலைவரின் தனயனாலேயே அதாவது ஸ்டாலினாலேயே, 'பறிக்கப்பட்டுள்ளது" என்பது பகிரங்கமாக வெளியே வந்துவிட்டது.


ஸ்டாலினின் "சமீபத்திய" நடவடிக்கை எல்லாமே இப்படித்தானே இருக்கிறது என்கிறார்கள் உடன்பிறப்புகள். அதாவது "வட சென்னை" மாவட்ட செயலாளராக இருந்த "வி.எஸ்.பாபுவை" அவமானப்படுத்தி "அவர் பதிவியை" உதறி செல்ல காரணமாக இருந்ததும் ஸ்டாலின்தானே என்கிறார்கள். அதையே "சமூகம்" வேறு திசையில் சிந்தித்துக் கொண்டு இருக்கிறதே என்று உடன்பிறப்புக்கள் கேட்கும்போது "அதிர்ச்சியாக" இருக்கிறது. இப்போது "பரிதிக்கும்" அதே நிலை என்றால் எப்படி 'சகித்துகொள்வது" என்பதே உடன்பிறப்புகளில் பலரது "புலம்பல்". இந்த பரிதியின் "நிகழ்வு" ஒன்றை தெளிவுபடுத்தி உள்ளது. அதாவது "தலைவர் கலைஞருக்கு " தலைமை பொறுப்பில் "அதிகாரம்" இருக்கிறதா? இல்லையா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

முதலில் "எழும்போர்ரில் மூன்று பேரை" தலிவர் சொல்லி, போது செயலாளர் "இடை நீக்கம்" செய்தார். இப்போது அவர்களை "மீண்டும்" செக்க "தலைவர்" ஒப்புதல் பெறப்படவில்லை.. போது செயல்லாரையும் 'அணுக வில்லை". ஸ்டாலின் "தன் விருப்பபடி" அறிவிக்கிறார் என்றால் "யாருக்கு" அதிகாரம் இருக்கிறது? இந்த கேள்வி கழகத்தினர் மத்தியில் அலை மோதுகிறது. "பேராசிரியர்" ஒரு பொம்மையா? என்றும் கேள்வி கேட்கிறார்கள். "என்னை ஏன்" ஸ்டாலின் சந்தித்தித்து ஏன் "கருத்தை" கேட்பதை "தவிர்த்தார்" என்று பரிதி கேட்பதில் "நியாயம்" இருக்கிறது என்கிறார்கள். இதுவரை "கழக் வரலாற்றில்" நடவடிக்கை எடுக்கப்பட்டவர்களை, "திரும்ப" எடுக்கும் போது அவர்கள் "வருந்தினார்கள்" என்று போடுவீர்களே? இப்போது எண்ண நடந்துவிட்டது? அவர்களுக்கு " நிபந்தனையற்ற மன்னிப்பு" வ்ழங்கி இருக்கிறீர்கள்? என்றும் கேட்கிறார்கள்.

ஏற்கனவே "பொதுக்குழு" கூட்டத்தில் "தளபதியின்" மரிமுக "காய் நகர்த்தள்கை" தலைவர் "சாமர்த்தியமாக" தவிர்த்து விட்டார். அதன்மூலம் "பல மாவட்ட செயலாளர்கள்" காப்பாற்றப்பட்டனர். இப்[போது "வட சென்னை" மாவட்ட செயலளராக 'சேகரை" நியமிக்கும்போதும், "பரிதியிடமோ" "பெராசிரியரிடமோ" ஒரு வார்த்தை கூட கேட்காதது ஏன் என்றும் கேட்கிறார்கள். எபப்டியோ, "கனிமொழி" வெளியே வருவதற்குள், "கழகத்தலைமை" பொறுப்பை முழுமையாக "தலைவர்" கையிலிருந்து "தளபதி" அப்ரித்து விடுவார் போலிருக்கிறதே? என்பதே கழக உடன் பிறப்புகளுக்கு இப்போதுள்ள "கவலை".

"தயா கும்பலுக்குள்" குத்து வெட்டா?

திமுக வில் நடக்கும் "உட்பூசல்" பற்றி, "பரிதி" எகிறி "கட்சியின்" முக்கிய "துணைப் பொதுச்செயலாளர்" பொறுப்பை "தூக்கி எறிந்தது" பற்றி வெளியிடாத எடே இல்லை என்பது தமிழ்நாற்ற்டு நிலைமை. ஆனால் நடந்த அந்த "கதையை" மு.க.ஸ்டாலினுக்கும், பரிதிக்கும் நடக்கும் "மோதல்" என்று வர்ணிக்கும் ஏடுகள், அதை " அதற்கும் மேல்" போய் தேட "தயாரில்லை". ஆனால் நாம் தேடலாம். "பரிதி இளம்வழுதி" தொடக்கத்திலேயே "முரசொலி மாறனின்" விசுவாசி என்பதும், பிறகு அதுவே "தயாநிதி மாறனின்" விசவாசத்திற்கு அவரி இழுத்து சென்றது என்பதும் டேஹ்ரிய வேண்டிய முதல் செய்திகள். தலைவர் கலைஞரை "அப்பா", "அப்பா" என்று அழைத்து வந்த பரிதியே "இத்தனை நாள்" கழித்து "கழகத்தின்" முக்கிய பொறுப்பை தூக்கி எறிந்தார் என்பது "சாதாரண" செய்தி அல்ல.


அந்த அளவுக்கு அவரை இழுத்து சென்ற "சம்பவங்கள்" என்னென என்பதுதான் கவனிக்க வேண்டிய செய்திகள். உள்ளாட்சி தேர்தலில், பரிதி "குறைந்த பட்சம்" தஹ்னது தொகுதியான "எழும்பூர்" பகுதியில் "யார், யாருக்கு" மாநகராட்சி உறுப்பினர் வேட்பாளராக நிற்பதற்கான "கழக" வேட்பாளர் தகுதியை தரவேண்டும் என்று முடிவு செய்யும் அதிகாரம் உண்டா? இல்லையா? தன்னையும், கழகத்தையும் மதிக்காமல், தனது முன்னால் வாகன ஓட்டுனரே இருந்தாலும், அவரை நிறுத்த வேண்டாம் என்று கூறியது தவறா? அடஹியும் திர்ஹாண்டி அந்த மனிதர், "தளபதியை" சந்தித்து வேட்பாளர் தகுதியை பேரா முயறார். அப்போது "முப்பெரும் விழா" நடந்தது. வழக்கம் போல பரிதி "அழகாக" பேசினார். தலைவர் அருகில் "கூப்பிட்டு" பாராட்டினார். எப்படி இருக்கே என்று தலைவர் வினவ, " என்னத்த சொல்றது அப்பா" என்று பரிதி இழுத்தார். சொல்லு என்று தலைவர் கூறியவுடன், "தான் எழுதிய கடிதத்தை"
கழகத் தலைமை கண்டுகொள்ளவில்லை என்று பரிதி புகார் வைத்தார். அதில் கழக கட்டுப்பாட்டை மீறியவர்கள் மீது "நடவடிக்கை" கோரி இருந்ததை குறிப்பிட்டார்.

இது தலைவருக்கு "உரைத்து விட்டது". உடனே தலைமை கழகத்திற்கு சென்று, " பரிதி கடிதத்தை" எடுத்துவா என்று டி.கே.எஸ். இளங்கோவனிடம் உத்தரவிட்டார். அவரும் கொண்டு வந்தார். அதில் உள்ள "மூன்று போரையும்" உடனடியாக "இடைநீக்கம்" செய்து "முரசொலியில்" அறிவிக்க போதுசெயலாலரிடம் பணித்தார். அதற்கு பிறகு, "சம்பந்தப்பட்ட" மூவரும் "தளபதியை" தனைகளுக்கு வேண்டியவர்கள் மூலம் சந்தித்து "பரிதி" அப்ற்றி இல்லாததையும் பொல்லாததையும் பொட்டுக் கொடுத்தனர். அந்த பொட்டுக் கொடுத்த பட்டியலில், "ஜின்னா" முக்கிய பங்கு வ்கிக்கிறார். மாநகராட்சி உறுப்பினர் வேட்பாளர் கேட்டு வந்தவரிடம், உனக்குத்தான் "ஜின்னா" இருக்கிறாரே அவரிடம் போய் கேட்டுக் கொள் என்று பரிதி கூறியது உண்மைதான். ஆனால் அதுவே, "தளபதி" இடம் போய் பெற்றுக் கொள் என்று மருத்துவமனையில் இருந்த ஸ்டாலினை கூறியதாக ஸ்டாலினிடம் சின்ன பொட்டுக் கொடுத்துவிட்டார்.

தளபதி ஸ்டாலினுக்கு " மண்டைக் கணம்" ஏறிவிட்டது என்கிறார்கள். அவர் உடனே "கழகத்திலிருந்து இடைநீக்கம் செய்யப்ப்பட்ட மூவரையும்" மீண்டும் கழகத்தில் சேர்த்துக் கொள்ள "உத்தரவிட்டு" முரசொலியில் "வெளியிட" வைத்து விட்டார். இது முறையாக "பொதுசெயலாளர்" மூலம் வந்ததா? அல்லது "தலைவரின்" கவனத்துக்கு சென்று மீண்டும் வந்ததா? என்று கேள்வி கேட்க முடியாத சூழல் கழகத்தில் இப்போது நிலவி வருகிறது. அதனால் ச்டநினே "எல்லாம்" என்ற அளவில் "பரிதி" ஏன் பொறுப்பில் இருக்க வேண்டும்? அதுதவிர "பரிதி" தரப்பு இன்னமும் "வேதனையுட்ன்" சில செய்திகளை சொல்லுகிறார்கள். "துணைப் போறது செயலளாராக" இருந்த 'பரிதி" இன்று "பொருளாளராக" இருக்கும் ஸ்டாலினை சந்திக்க "மூன்று நாட்கள்" போய் வாசலில் "காத்திருந்தும்" சந்திக்க ஸ்டாலின் "தயாரில்லை" என்ற நிலைமை வந்த பிற்பாடுதான் தனது "பொறுப்பை " பரிதி தொஊக்கி எறிந்திருக்கிறார்.

இது பரிதிக்கு "மட்டும்" ஏற்பட்ட வமானம் அல்ல. கழகத்தின் "கட்டுப்பாடு விதிகளுக்கு" ஏற்பட்ட அவமானம். தளபதி ஏன் பரிதியை கூப்பிட்டு கேட்கவில்லை? தளபதி ஏன் "காத்திருந்த" பரிதியை "காணக்கூட" தயாராயில்லை. கழகம் "தளபதியின்" சொந்த "சொத்தா?". பரிதிக்கு 'சரியான" பொறுப்பு கொடுக்கப்படவில்லை என்று "எத்றிக் கட்சி" காட்சி ஊடகம் வரை கொண்டு செல்லப்பட்ட "விமர்சனத்திற்கு" பிறகுதானே தலைவர் பரிதிக்கு இந்த "பொறுப்பை" கொடுத்து அலங்காரம் பார்த்தார். அது ஒரு "சமூக" பியார்ச்ச்னையாகவும் ஆகிவிடாதா? அதன்மூலம் கழக்த்திற்கு "அவப்பெயர்" கூடாதா? திமுகவில் சென்னையில் ஏற்கனவே "தலித்" சமூகத்தை சேர்ந்த "ஊழியர்கள்தானே" அதிகமாக இருக்கின்றனர்? வர்கள் மத்தியில் இது "எதிர்ப்பை" கொடுக்காதா?

தயா கும்பலை சேர்ந்தவர்தானே "தளபதியும் ?".அதே "குழுவை" சேர்ந்த பரிதியையே "மதிக்காமல்" இருக்கிறாரே? இது கழகத்திற்குள் "தயாநிதி குழுவை" அவளு இழக்க செய்யாதா? இப்படி அக்ழகத்திற்குள் "பல" கேள்விகள் கேட்கப்பட "தொடங்கிவிட்டன".

ஒரே போடுபோட்டார் "ஜெ".. ஆடிப்போகுமா டில்லி?

இந்திய நாட்டின் வெளிவிவகார செயலாளர் "ரஞ்சன் மித்தாய்" சென்னை வந்தார். தனது "இலங்கை பயணத்திற்கு" முன்பு "தமிழக முதல்வரிடம்" அதுபற்றி "ஒரு கலந்துரையாடல்" செய்து விட்டு செல்ல வேண்டும் எனபது "தொடர்ந்து" கடைப்பிடிக்கப்படும் "ஒரு வழக்கமாக" இருப்பதாலோ, அல்லது இப்போது "இந்தியப் பிரதமர்" தமிழக முதல்வரிடம் "தனது கவுரவமிக்க " திட்டமான "கூடங்குளம் அணு உலை" விவகாரத்தில், "வசமாக" மக்கள் எதிர்ப்பு என்ற "ஆயுதத்தின் முன்னால்", சிக்கிக் கொண்டிருக்கிறார் என்பதாலோ, முதல்வர் ஜெ யை சந்தித்தார்.

ஏற்கனவே "தனது சட்டமன்ற தீர்மானத்தை" அதாவது " இலங்கை அரசு மீது அனைத்து நாட்டு விசாரணை நடத்த அய்.நா.வை வலியுறுத்தும்படி" மத்திய அரசை கேட்டுக் கொண்ட "தீர்மானத்ததை" இதே பிரதமர் மன்மோகன் "நேரில் தானே சென்று" எடுத்து சொல்லியும் "கண்டுகொள்ளவே" இல்லை என்ற "கோபத்தில்" இருக்கும் தமிழக முதல்வர் "இந்த வாய்ப்பை" பயன்படுத்தி கொள்ள மாட்டாரா?. அது மட்டுமின்றி, "இலங்கை அரசு மீது பொருளாதார தடை" வித்திக்க இந்திய அரசை வலியுறுத்தி மன்மோகனிடம் "தான்" கேட்டுக் கொண்டும்கூட, "அதை மீறி " இலங்கைக்கு "கப்பல்" விடும் மன்மோகனை "ஒரு கை" பார்த்து விட எண்ண மாட்டாரா? அது மட்டுமின்றி, சென்ற முறை அந்த "சிவசங்கர மேனன்" இலங்கை செல்லும்போது, "தான் கேட்ட" எத்தனை தமிழர்களை "முகாம்களிலிருந்து" வெளியே அனுப்பியுள்ளனர் என்ற "பட்டியலை" இன்னமும் "தர வக்கில்லாத" இந்திய அரசை "நியாயமாக" பிடிக்க "சந்தர்ப்பம்" கிடைத்தால் விடுவாரா ஜெயலலிதா?

அதையும் தாண்டி, "தமிழக மீனவர்கள்" கொல்லப்படுவதையும், அடிக்கப்படுவதையும், விரட்டப்படுவதையும், "தொடர்ந்து" டில்லிக்காரர்களிடம் "சொல்லிவந்தும்கூட" செவி மடுக்காத நிலையில் டில்லி இருந்தால், அதை "கைகட்டி வாய் பொத்தி" பார்ஹ்துக் கொண்டு இருந்துவிட்டு, "பிரதமருக்கு கடிதம்" எழுத "அடுத்த தாள்" தேடும் "கருணாநிதியா" ஜெயலலிதா? அதனால்தான் " ரஞ்சன் மித்தாயிடம்" சூடாக "நியாயமான" கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். அதாவது "தமிழக மீனவர்களை கொள்ளும் இலங்கை கடல்படை" இந்திய எல்லைகளை மீறும் "பாகிஸ்த்தான் படையின்" அத்துமீறல்களுக்கு "ஒப்பானது" என்று "இந்தியா சார்பாக இலங்கையை எச்சரியுங்கள்" என்று கேட்டுக் கொண்டுள்ளார். இந்த "நேர்மை", இந்த "தைரியம்" இந்த "உண்மை" இதுவரை எந்த "முதல்வருக்காவது" வந்திருக்கிறதா? ஒரு மாநில முதல்வர் "மத்திய அரசின்" வெளிவிவகார கொள்கைகளில் "எப்படி" குறுக்கே பேசலாம் என்று "அடிமைத்தனமாக அமைதி காப்பதுதானே" இன்றுவரை இந்தியாவில் "தொடர்கிறது?".


சுட்டுக் கொள்ளப்படும், அடித்து விரட்டப்படும், "தமிழக மீனவர்களை, இந்திய குடிமக்கள்" என்று காணவேண்டும் என்ற "அறிவுரையையும்" இடையே கூரிஊஇல்லார் ஜெயலலிதா. இந்த "வெளிப்படையான நேர்மை" அல்லது "துணிவு" பாரம்பரிய அரசியல்வாதியும், மாநில சுயாட்சியின் "கதாநாயகனுமான" கருணாநிதிக்கு "வரவில்லையே" ஏன்?முதுகெலும்பு இல்லாத அரசியல்வாதிகளை "அடையாளம்" காண்பதற்காகத்தான் இந்த "நிகழ்வும்" நடந்ததோ? இந்திய மீனவர்களை "மிரட்டும் அல்லது அடிக்கும்" இலங்கை கடல்படை, "ஒரு ஆக்கிரமிப்பாளறது" வேலையை செய்கிறது என்று இந்திய அரசு எடுத்து கொள்ளவேண்டும் என்றும் அவரிடம் கூறியுள்ளார். இதுவே "போதும்" மகிந்தாவிற்கு அல்ல, அல்ல, மன்மோகனுக்கு என்று நாம் எண்ணவேண்டி உள்ளது.

இதற்கெல்லாம் இந்திய அரசும், இலங்கை அரசும் எண்ண பதில் சொல்வார்கள் என்பதை முன்கூட்டியே உணர்ந்து, " நமது மீனவர்களை துரத்துவதும் அடிப்பதும், இலங்கை மீனவர்கள் என்றால் அவர்களது நடமாட்டத்தை அறியாமலா இருகஈரார்கள் இலங்கை கடல்படை?" என்ற கேள்வியை கேட்டு அதன்மூலம் "இலங்கை கடல்படையின் தூண்டுதலில்தான் அந்த விரட்டல்கள்" நடக்கின்றன என்பதை எடுத்து சொல்லியுள்ளார். அதையும் தாண்டி, " சிறிய பாடுகளில் வந்து இலங்கையர் தாக்குகிறார்கள்" என்று நமது ராமேச்வரரம் மீனவர்கள் கூறும்போது, அந்த "சிறிய படகுகள் மீன்பிடிக்க நிற்கும அளவு அதிக டீசலை போட்டு வரமுடியாது" என்ற வாதத்தையும் முன்வைத்துள்ளார். அதாவது அவை மீன்பிடிக்க வந்த படகுகள் அல்ல என்ப்ர "வாதத்தையும்" அதனால் அவை "தாகும் எண்ணத்தோடு" வந்தவை என்ற விவாதத்தையும் அந்த சந்திப்பில் முன்வைத்துள்ளார்.

இந்த அளவுக்கு " ஒரு பிரச்சனையின்" ஆழத்தை ப்கவனம் எடுத்து புரிந்து கொண்டு, "அனைத்து நாட்டு" அளவில் இரு நாடுகளுக்குள் உள்ள "சர்ச்ச்சையில்" வாதங்களை முன்வைத்த முதல்வரை நாம் இதுவரை "கண்டதில்லை". அரசியல் என்றால் எண்ண என்றும், நேர்மையான அரசியல் எது என்றும், "இரு நட்பு நாடுகள்" என்ற டில்லியின் :கிளிப்பிள்ளை" சொற்களுக்கு "பதிலடி" எப்படி தரவேண்டும் என்றும், "மாநில சயாட்சி" என்பது வாய் கிழிய "கத்துவது" அல்ல என்றும், அது "நேர்மையான மாநில உரிமைகளை" விட்டுக் கொடுக்காமல் பேசுவது என்றும், "தமிழகமீனவர்களை" காப்பாற்ற எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத கருணாநிதியால் "இந்த ஜெயலலிதாவின்" செயல்பாடுகளிளிருந்தாவது "கற்றுக் கொள்ள" முடியுமா? வெட்கம், மானம் இல்லாமல் இனியும் "அரசியல்" செய்ய "தயாராக" இருப்பாரா?

ஒரு மாநில மக்களின் உயிர் என்ற உண்மையான "உரிமைக்காக" இப்படி மத்திய அரசின் "அயோக்கியத்தனமான" மக்கள் விரோத, மீனவர் விரோத "போக்கை" தோலுரித்து "காட்டிய" இந்த முதல்வரின் சொற்கள், டில்லிகாரர்களை "கதிகலங்க" செய்திருக்கும் அல்லவா? இத்தோடு ஜெயலலிதா வர்கள் இன்னொன்றையும் "சேர்த்து" பேசவேண்டும். அதுதான்"மீனவர்களுக்கு" மீன் பிடிக்க எல்லை கிடையாது எனபது. அது மட்டுமின்றி, "இந்திய- இலங்கை இடையே உள்ள க்டலில்," எல்லை இருக்க முடியாது". அந்த அளவு "குறுகிய" கடல் அது. அது மட்டுமின்றி "முப்பது" ஆண்டுகளுக்கு முன்பு "இருபுறமுள்ள மீனவர்களும்" பரஸ்பரம் மீன் பிடித்து வந்த "கடல்" அது. இத்தகைய "உண்மையை" நோக்கி நமது "பயணம்" செல்லட்டும்.