Friday, September 30, 2011

வாச்சாத்தி "யாருக்கு" படிப்பினை?

இப்போது "பத்தொன்பது" ஆண்டுகள் கழித்து "நீதிமன்ற தீர்ப்பில்" 215 கொடுங்கோலர்களுக்கு "தண்டனை" வழங்கப்பட்டிருப்பதால், இது "காவல்துறை, வனஇலாகா,வருவாய்த்துறை" ஆகியவற்றின் "கொடூரர்களுக்கு" வழங்கப்பட்டிருக்கும் "படிப்பினை" என்று நாம் நினைத்தால் "ஏமாந்து" போவோம். 1992 ஆம் ஆண்டு நடந்த கதை சில ஏடுகளில் வெளியாகி உள்ளது. அதாவது "வனத்துறையை" சேர்ந்த "துரைமார்கள்" இரண்டு பிரிவுகளாக தங்களுக்குள் "வன சொத்தை" யார் களவாடுவது என்று போட்டுக் கொண்ட "போட்டியில்" அவர்களுக்கு தங்கள் "பிழைப்பிற்காக" ஒத்துழைப்பு கொடுத்த, அல்லது "உழைப்பை" விற்ற "அப்பாவி" மலைவாழ் மக்கள், அந்த "கொடூர" தாக்குதலில் "பலியாகிவிட்டனர்". இந்த செய்தி ஒரு ஆங்கில ஏட்டில் மட்டுமே வெளியாகி உள்ளது.

வன இலாகா ஊழியர்கள் "வழமையாகவேர்" வனச் சொத்துக்களை தங்கள் "தேவைக்காக " அழிப்பார்கள். அதற்காக அவர்களுக்கு "மரங்களை" வெட்டிக் கொடுக்க "மலை வாழ்மக்கள்" உதவி தேவைப்படும். அப்படி "கூலி வாங்காத உழைப்பை" செய்து கொடுத்தால்தான் நம் மக்களான அந்த "மலைவாழ் மக்களுக்கு" தங்கள் அன்றாடத் தேவைகளுக்காக " உடைந்த மரங்களையோ", "மரத் துண்டுகளையோ", சிறிய துகள்களையோ, எடுத்து செல்ல அந்த "வன இலாகா அதிகாரிகள்" அனுமதிப்பார்கள். இது வனப்பகுதிகளில் நடக்கும் "அன்றாட" நிகழ்வு. அப்படிப்பட்ட நிகழ்வுகளில், சில நேரங்களில், "மேலதிகாரிகள்" வருகையை ஒட்டி, வன இலாகா அதிகாரிகள் "நல்லவர்களைப்" போல "மலைவாழ்மக்கள்" மீது "பழியைப்" போட்டு தப்பித்துக் கொள்வதும் அவ்வப்போது நடக்கும் நிகழ்வுதான்.

இதுபோன்ற ஒன்று அப்போதும் நடந்துள்ளது. ஆனால் அந்த சூழலில், "வீரப்பனை" பிடிப்பதாக சொல்லிக் கொண்டு, அதற்காக ஒரு "கூட்டு நடவடிக்கை குழுவை" கர்நாடகா மாநில காவல்துறையும், தமிழ்நாட்டு காவல்துறையும் "ஏற்பாடு" செய்து, அதன்மூலம் " சேலம், தருமபுரி, கோவை, ஈரோடு" மாவட்டங்களில் "அட்டூழியம்" செய்து வந்தனர். அதற்கு "தமிழ்நாட்டு" காவல்துறை அதிகாரி, தேவாரம் 'தலைமை"ஏற்றிருந்தார். "வாச்சாத்தி" கிராமம் "தருமபுரி" மாவட்டத்தில் இருப்பதால், "நக்சல்பாரி" நடமாட்டம் என்ற "பயத்தில்" ஆள்வோர் அலறிக் கொண்டு "திரிந்ததால்" தேவாரம் என்ற ஒரு பெரும் "வீரர்" அங்கே "துப்பாகியுடன்" நடமாட வேண்டும் என்று ஆளும்வர்க்கம் விரும்பியது. இந்த "மாபெரும் வீரர்" கதை "தனி" கதை. என்றுமே எந்த "நக்சல்பாரி புரட்சியாளரையோ" அல்லது "வீரப்பன்" ஆட்களையோ "நேரில்" சந்திக்க "துப்பில்லாமல்" மலைவாழ் மக்கள் மத்தியில் "ஆடுமேய்க்கும்" சிறுவர்களை பிடித்து "சுட்டுக் கொள்வதில்" ஒரு "அசகாய சூரன்" இந்த தேவாரம் என்பது "எம்.ஜி.ஆர். உட்பட" யாருக்கும் தெரியாத செய்தி.

அப்படிப்பட்ட "தேவ்பாரம்" மலைவாழ் பெண்களை "பாலியல் பலாத்காரம்" செய்வதை "தஹ்டுக்காத" ஒரு "ஜீவராசி". ஒரே "சாதியாக" அந்த விசயத்தில் இந்த "காவல்துறை, வனத்துறை, வருவாய்துறை அதிகாரிகள்" இருந்ததால்தான் இப்போது சில "அய்.எப்.எஸ்."அதிகாரிகளும் இந்த "கொடுன்குற்றத்தில்" மாட்டி "தண்டனை" பெற்றுள்ளார்கள். ஆகவே இது "பத்தொன்பது" ஆண்டுகள் கழித்து அரசும், நீதிமன்றமும் "இர்னகி" வந்து கொடுத்த " மனப்போர்வமான தீர்ப்பு" அல்ல. மாறாக 'இதுபோன்ற" கொடுமைகள்தான் "மேற்கு வங்கத்திலும்", "ஜார்கண்டிலும், சட்டிச்கரிலும், ஒரிசாவிலும்" மாவோவாதிகள் "பழங்குடிகள்" மத்தியில் "ஆழமான" விதைகளை போடுவதற்கு உதவின என்பதை உணர்ந்த "ஆளும்வர்க்கம்" இறங்கி வந்து "நல்லவர்"போல வேஷம் போட "கொடுத்துள்ள" ஒரு தீர்ப்பு.

அதானால் இன்றைய "இந்திய சூழலில்" ஆளும்வர்க்கத்தின் "அச்சத்தால்" அவ்ந்துள்ள "தீர்ப்பை" நாம் கொண்டாட வேட்னிய அவசியமில்லை. ஆனால் அதிலிருந்து நாம் "படிப்பினைகளை" கற்றுக் கொள்ள வேண்டும். "வெண்மணி படுகொலைகளுக்கு" இதே நீதிமன்றங்கள் தான் "கொடியவனுக்கு விடுதலை" என்ற தீர்ப்பை கொடுத்தன. அப்போது "பன்னிரண்டு" ஆண்டுகள் கழித்து, "நக்சல்பாரி இயக்கமான விநோத்மிஸ்ரா கட்சி" தலைமையில் "கொடியவன் கோபால கிருஷ்ணனநாயுடுவிற்கு " புரட்சியாளர்கள் "தண்டனை" நிறைவ்டேரியத்தை இந்த நாடு மறந்திருக்கவில்லை. நாம் மறந்தாலும் "எதிரிகள்" அதை மறக்கவில்லை. அதேபோல "புரட்சியாளர்களுக்கு" ஒரு வாய்ப்பு கொடுக்காமல் "தானே" தண்டிப்பதுபோல "பாசாங்கு" செய்யும் தீர்ப்புதான் என்றால், "தொடர்ந்து" எம்,ஆற "தமிழ்மக்கள்" தயாராக இல்லை என்பதை நிரூபிக்க நாம் எழவேண்டும்.

அன்றாட நிகழ்வில் தொடங்கி, அடிப்படை நிகழ்வுகள் எதுவானாலும், 'ஒடுக்கப்பட்ட" சமூகங்களை 'அடக்க" மட்டும்தான் இந்த ஆயுதம் தாங்கிய அனைத்து "படைகளும்" இருக்கின்றன. ஆகவே "ஒடுக்கப்பட்ட மக்களுக்கான" ஆயுதம் தாங்கிய படைகள் "உருவாகாமல்" எதையும் இன்றைய நீதிமனரண்களால் மட்டுமே "பிடுங்க" முடியாது என்பதை "வரலாற்று" சுவடுகளாவது நமக்கு "கற்றுக்" கொடுக்கட்டும்.

Thursday, September 29, 2011

"அன்னையர் முன்னணி" அறுதியிட்டது இன்று.

மூன்று தமிழர் உயிர் காக்கும் முயற்சியாக " மரண தண்டனை எதிர்ப்பு கூட்டமைப்பு" ஒழுங்கு செய்து வரும் "தொடர் பட்டினிப் போராட்டம்" இன்று பேராசிரியர் சரஸ்வதி தலைமையிலான "அன்னையர் முன்னணி"யால் நடத்தப்பட்டது. பேராசிரியரின் அழைப்பை ஏற்று, பல்வேறு பெண்கள் அமைப்புகளின் "பங்களிப்புடன்" சிறப்பாக நடைபெற்றது. அதில் "மக்கள் மன்றம்" ஒரு முக்கிய பங்களிப்பை, தனது "முப்பத்தைந்து பெண்களுடன்" செளுத்ஹ்டியது என்பது குறிப்பிடத்தக்கது. மக்கள் மன்றத்தின், ஜெசி, மகேஷ், மகா, மேகலா, உமா,சிறுவன் பகத்சிங்,நாத்திகன், மற்றும் பல கிராமப்புற பெண்களுடன் "கலந்து" கொண்டது அனைவரையும் ஈர்த்தது.

கலந்துகொண்ட ஆர்வலர்கள், "பேச்சாளர்களாக" மாறி உரைகளை நிகழ்த்தினர். அமைப்பு சார தொழிலாளர் சங்கத்தின் கெத்சி, தனது தோழியர்கள் பத்து பேருடன் வந்து கலந்து கொண்டார். அற்புதம்மாள், பத்மா,மணிமேகலை, அகிலா, சரோஜா, அஜிதா, ஒவியா, கீதா போன்ற பெண் தலைவர்களும் கலந்து கொண்டு பேசினர். இடையில் அருகே இருந்த அரங்கில், "மரணதண்டனை" பற்றிய திரைப்படங்கள் திரையிடப்பட்டன. செங்கொடி இறுதி ஊர்வல திரைப்படமும் காண்பதற்கு "உருக்கமாக" காட்டப்பட்டது.

அன்னையர் முன்னணி "தொன்னூறின் " தொடக்கங்களில் தமிழ்நாட்டின் தெருக்களில் முழங்கிய முழக்கங்கள் நினைவுக்கு வந்தன.ஈழத்தின் விடுதலைப் போரில் "வீரச்சாவடைந்த" கண்மணிகளின் "தாயார்கள்" ராணுவத்தின் மனித உரிமை மீறல்களை கண்டு மிரளாமல் " தெருவுக்கு" வந்து போராடிய "நிகழ்வுகள்" , அன்னையர் முன்னணியின் "பதாகையின்" கீழ்தானே நடத்தப்பட்டன என்ற நினைவுகள் நமது நெஞ்சில் ஒலித்தது. "தமிழீழத் தேசியத் தலைவரின்" போர்த்தந்திரங்களுக்கு "வலுவூட்டும்", "ஒத்துழைக்கும்" "உதவி செய்யும்" செயல்தந்திரன்களை, "வெகுமக்கள்" அரங்கில், "வீரச்சாவடைந்த" மாவீரர்களின் தாயார்கள் "அன்னையர் முன்னணி" மூலம்தான் நடைமுறைப்படுத்தினார்கள்.இன்று சென்னையில் "பட்டினிப்போர்" நடத்தியது, "தமிழ்நாட்டு அன்னையர் முன்னணி". இந்த "சிருபோறியே" தமிழ்பெண்கள் மத்தியில் "பெரும் காட்டு தீயென" படரட்டும். தமிழ்ப்பெண்களின் வீர முழக்கங்களை இந்த நாடு கேட்க, "வீராங்கனைகளை" உருவாக்கட்டும்.

Wednesday, September 28, 2011

முதல் போர்குற்றவாளியின் "குற்றப்பட்டியல்"

நமக்கு தெரிந்த அளவில், அந்த "போர்க்குற்றவாளி" வட இந்தியாவிலிருந்து வந்திருந்தாலும், தமிழ்நாட்டு "அய்.பி.எஸ். அதிகாரியின்"மகளை திருமணம் செய்தார்.பிறகு இவரது "கொடுமை" தாங்க முடியாமல் "மனைவி" சித்தரவதைகளுக்கு "விடை" கொடுக்க, விலகி நின்றார். மாமியார் காங்கிரஸ் கட்சியில் நின்று "ச.ம.உ." ஆனார். இது "பெண்களுக்கு எதிராக" அய்யா செய்திருக்கும் "முதல் குற்றம்".

ஆண்டு:-1996 . அய்யா "மணிமுத்தாறு ஆயுதப் படையின்" தலைவராக இருந்தார். தூத்துக்குடியில் மீனவர் கோரிக்கைகளுக்கான "சாலை மறியல்" நடந்தது. அப்போது "துணை ஆட்சித் தலைவராக" இருந்த டாக்டர். ராதாகிரூஷ்ணனின் பேரன் இப்போது கூப்பிட்டாலும் "சாட்சி" கூறுவார். அந்த "சப்-கலெக்டர் " மாட்டிக்கொண்டார் என்பதே அப்போது "காவல்துறையின்" குற்றச்சாட்டு. ஆனால் "மீனவர்கள்தான்" தன்னை காப்பாற்றினார்கள் என்று "அந்த சப்-கலெக்டர்" கூறினார். அதற்குள் "தேவாரம்" வழக்கம் போல உத்தரவிட்டார். ராஜெஷ்தாஸ் "மீனவர்கள் மீது" சுட்டார். நிராயுதபாணியான மீனவ இளைஞர் "குண்டடி" பட்டு செத்தார். நாடு சாலையில், இறந்த தன் தபியின் உடலை எடுத்து மடியில் வைத்துக் கொண்டு, அண்ணன்காரன் "ராஜெஷ்டாசை" நோக்கி கேள்வி கேட்கிறான். அவர் "அண்ணன்காரனின்" நெற்றியில் தனது "துப்பாக்கியால்" குறி பார்த்து "சுட்டுக் கொல்கிறார்" இது "இரண்டாவது" குற்றச்சாட்டு.

ஆண்டு:- 1997 . சட்டமன்ற உறப்பினர் டாக்டர். கிருஷ்ணசாமி "தேனீ மாவட்டம்" செல்கிறார். அங்கே ராஜெஷ்டாச்தான் அப்போது "மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்". "கண்டமனூர்" ஊரில் உள்ள "தேவர் சிலையை" அகற்ற கிருஷ்ணசாமி வருகிறார் என்று சொல்லி திடீரென "எஸ்.பி. ராஜெஷ்தாஸ் " கிருஷ்ணாசாமியை அதிகாலை 'தேனீ விடுதியில்" இருந்து வெளியே வரும்போது "கைது" செய்கிறார். தென்மாவட்டங்கள் எங்கும் "பேருந்துகள்" நிருத்தபடுகின்றன. கோவில்பட்டி அருகே " ரயில்வண்டி" நிறுத்தப்படுகிறது.". நாடே 'அல்லோல, கல்லோல" படுகிறது. தேனியிலிருந்து "இரபத்தாறு" கிலோமீட்டர் தூரத்தில் உள்ள "கண்டமநூருக்கு" கிருஷ்ணசாமி போக வேண்டிய தேவையே இல்லை என்ற "வாதம்" போராட்டக்காரர்களால் முன்வைக்கப்படுகிறது. ஏற்கனவே கண்டமநூருக்கு "எட்டுகிலோமேட்டர்" அருகே உள்ள கிராமத்திற்கு சென்று விட்டுத்தான் முந்திய நாளே "கிருஷ்ணசாமி" தேனிக்கு "திரும்பி" வந்துள்ளார் என்பது நிரூபிக்கப்படுகிறது. அந்த "ஆதாரங்களை" பெற்றவர் அன்றைய "புலனாய்வுதுறை துணைத்தலைமை அதிகாரியும், இன்றைய காவல்துறைத் தலைவருமான" பெரிய அதிகாரி.அது "மூன்றாவது குற்றம்".

மறுநாளே இந்த "உண்மைகள்" முதல்வர் கலிஞர் வசம் "கொண்டுசெல்லப்படுகின்றன". அன்றைய "உளவுத்துறை தலைவர்" அலெக்சாண்டர் "ராஜெஷ்டாசை" தொலைபேசியில் திட்டுகிறார். "பச்சை பனியன் " பொட்டுக் கொண்டு ஏன் கிருஷ்ணசாமியை கைது செய்தாய்? என்று கேட்கிறார். "உடுப்பு" போட்டுக்கொண்டு வேலை செய்ய தயாரில்லையா? என்று வினவ்புகிறார்.இவாறு கடமையை செய்ய மறுக்கும் "ராஜெஷ்தாஸ்" செய்தது " நான்காம்" குற்றம். உன் வீட்டு முன்பு "காவல் அரண்" போட்டு "தடுப்பு" வைத்திருகிராயாமே? என்று மீண்டும் அலெக்சாண்டர் திட்டுகிறார். அதிலிருந்து "உள்ளூர் உளவுத்துறையில்" மேலே செய்திகளை சொல்லும் அதிகாரிகளை வைத்துக் கொள்ளக் கூடாது என்று ராஜெஷ்தாஸ் "கற்றுக் கொளகிறார்".

அடுத்து மீண்டும் தூத்துக்குடிக்கு "ராஜெஷ்தாஸ் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளராக" மாற்றப்ப்டுகிறார்.அப்போது அந்த நகரில், 'பசுபதிபாண்டியன்" வசித்த தெருவில், அவரது சகோதரர், "வின்சென்ட்" என்ற "நகராட்சி உறுப்பினர்" காவல்துறையின் "காவலில்" மரணமடைகிறார். அவரை "கொன்றது" எஸ்.அய். ராமகிருஷ்ணன் என்பதை மக்கள் 'குற்றமாக" சொல்கிறார்கள். மாவட்ட ஆட்சித் தலைவர் முன்பு, "பஞ்சாயத்து" நடக்கிறது. கொலைகார ராமகிருஷ்ணனை "எஸ்.பி.ராஜெஷ்தாஸ் " நியாயப்படுத்துகிறார். அவர் "காசு" வாங்காதவர் என்கிறார். அப்போது "மனித உரிமையாளர்கள்" அடித்துக் கொள்ளும் "மனித உரிமை மீறல்" காசு வாங்குவதை விட மோசமான "ஊழல்" என்று பதில் கொடுக்கிறார்கள். ராஜெஷ்தாஸ் "பத்தி சொள்ளவழியிலாமல்" மௌனமாகிறார். அது அவர் செய்த "ஐந்தாவது" குற்றம்.

இப்போது "இம்மானுவேல் சேகரன்" நினைவு நாள் வருகிறது என்று "வன்முறை" செய்ய தயார் ஆகிறார். திட்டமிட்டு "ஜான்பாண்டியனை" நெல்லையிலேயே " தனது தென்மண்டல அய்.ஜி. பதவியை" பயன்படுத்தி தடுக்கிறார்.வன்முறையை எதிர்பார்த்து "டி.அய்.ஜி.அய். தயார்"செய்கிறார். அதை மேலிடத்திற்கு "சொல்லவிடாமல்" பரமக்குடியில் "உளவுத்துறை எஸ்.அய். யாக இருந்த சுபாஷ் என்பவரை" உச்சுப்புளிக்கு மாற்றுகிறார். "துப்பாக்கி சூடு" முடியும்வரை சென்னையில் உள்ள " உள்துறை செயலாளருக்கு"செய்தியை சொல்லவிடாமல் தடுக்கிறார். சென்னையில் உள்ள "உளவுத்துறைக்கும், டி.ஜி.பி.க்கும் " செய்தி போகவிடாமல் தடுக்கிறார். இந்த "குற்றவாளி" செய்தது தேவேந்திரகுல மக்கள் மீதான "போர்குற்றம்" அல்லாமல் "வேறென்ன?"..

.

"போர்" அறிவித்துள்ளார்களா " அதிகாரிகள்?".

பரமக்குடியில் நடந்த "இனப் படுகொலை" ஏதோ சாதாரணமாக "காவல் துறை" நடத்தும் "அழக்கமான" படுகொலைகளை ஒத்தது அல்ல. "தேவேந்திர குல வேளாளர்" மக்கள் ஒரு "போர்குணமிக்க உழவர் படை". அந்த போர்குணமிக்க "உழவர்கள்" தமிழ்நாட்டில் இருக்கும் "உழவர் கூட்டத்திலேயே" முன்னோடிகளான உழைக்கும் மக்கள். தமிழர் திருவிழா என்று "பொங்கல்"நாளை கொண்டாடும் வழக்கமே, அது " அறுவடைத் திருநாள்" என்பதால்தான். அந்த அறுவடைத் திருநாளுக்கு "யாருக்கு" நன்றி சொல்லவேண்டும் என்று தமிழர்கள் எண்ணும் போதெல்லாம் "உழவர்களுக்கு " என்று பதில் வரும். அத்தகைய "உழவர்களில்", நிலமற்றவர், சிறு நிலம் உடையவர், நடுத்தர விவசாயி, பணக்கார விவாசாயி என்ற வகைகள் இருக்கிறார்கள். அவர்களில் இந்த "தேவேந்திர குல வேளாளர்கள்" எனப்படுவோர், "உழைக்கும் விவசாயிகளாவர்". அதாவது அவர்கள் "சிறு, நடுத்தர, பணக்கார விவசாயிகளின்" பிரிவுகளில் வருவார்கள். அவர்களில் "நிலமற்றவர்கள்" இருந்தாலும், அனேகமாக " சிறிய அளவு நிலம் வைத்திருக்கும்" விவசாயிகள் "அதிகமாகவே" இருப்பார்கள்.


அப்படிப்பட்ட "ஒரு போர்குணமிக்க" விவசாயிகளுடன் "நீ" மோதுகிறாய் என்பதை, சம்பந்தப்பட்ட "அதிகாரிகளுக்கும்", அவர்களைப் பாதுகாக்கும் "அரசுக்கும்", அந்த மக்களின் "வாக்குகள்" மூலம் "ஆட்சிக்கு" வந்திருக்கும் கட்சிக்கும் நாம் தெரிவிக்க வேண்டியிருக்கிறது. அத்தகைய "உழைக்கும் விவசாயிகளின்" உழைப்பால் தானே "உன்னுடைய" வீட்டில் "அரிசி" உலையில் வேகவைக்கப்படுகிறது? இந்த கேள்வியை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் நாம் கேட்க வேண்டும். "உழவன் சேற்றில் கால் வைக்காவிட்டால்", நீ "சோற்றில் கை வைக்க முடியாது" என்று வீர வசனம் பேசும் "ஏ,தமிழகமே" நீ பரமக்குடி துப்பாக்கி சூட்டில் எழு பேர் அன்னிய்யயமாக "படுகொலை " செய்யப்ப்பட்ட போது எங்கே போயிருந்தாய்? விவசாயத்தை பாதுகாக்கும் ஒரு "படையை" நீ புறக்கணித்தால் "நாளை" சோறு, தண்ணீ இல்லாமல் அலையமாட்டையா? மானங்கெட்டவன் மட்டுமே இன்னமும் "நிம்மதியாக" தூங்குவான். மரமண்டை மட்டும்தான் "மனித உரிமையை" சிந்திக்காமல் இருப்பான். இப்போது "அரசுக்கும், தேவேந்த்ரகுல மக்களுக்கும்" நடக்கும் "போரில்" நீ எந்தப் பக்கம்?



நிலம் "சார்ந்த" உழைப்பு, அதனால் வரும் "சுயம் சார்ந்த" நினைப்பு, அதனால் வரும் "சுய மரியாதை" இருப்பு, அதனால் "எழும்" "வீரமிகு" விறைப்பு, அத்தனையும் கொண்ட ஒரு "உழவர் குடியிடம்" விளையாடுகிறாய்? மண்ணில் நிற்பவன், "மண்ணுக்கு சொந்தக்காரன்". "வந்தேறிக்கூட்டம்" கையில் "துவக்கு" இருப்பதால், "காக்கை, குருவியை" சுடுவதுபோல, "எத்தனை நாள்" சுட்டுவிடும்? பார்ப்போமா? இதுதான் அன்று, "வெள்ளையன்" வேட்டைக்காடாக "தமிழ்மண்ணை" ஆக நினைத்தபோது, வீரபாண்டியக் கட்டபொம்மனுக்கு ஒரு "தளபதியை" மாவீரன் "சுந்தரலிங்க குடும்பன்" தனியாகவே "படை" நடத்தினான். தன் மாமன் மகள் "வடிவுடன்" வெள்ளைக்காரனின் "ஆயுதக் கிடங்கில்" வெடியாகி "எரித்து" அழித்தான். அவன் "முதல் தற்கொலைப்படை போராளியாக" இன்று வரை பாராட்டப்படுகிறான். அந்த " முதல் கரும்புலியின்" வாரிசுகள்தான் இப்போது, "தேவேந்திர குல" மக்களாக "பரிணமிக்கிறார்கள்". எண்ணிப்பார்க்க வேண்டாமா? சிவகங்கை சீமையை ஆண்ட " வேலு நாச்சியார்" படையில் வெள்ளையனை எத்ரித்து, களம் புகுந்து, "வீரச்சாவை" எட்டிய " பெண் கரும்புலி" யார்? அவர் "குயிலி" என்ற தேவேந்திர குல வீர மங்கை. தெரியுமா உனக்கு என்று அந்த "சின்னப் புத்தி" அதிகாரிகளை கேட்காமல் இருக்க முடியுமா?


தென் மண்டல "அய்.ஜி. ராஜேஷ் தாஸ்" இந்த 'அருவெறுக்கும் போரின்" முதல் குற்றவாளி. ராமநாதபுரம் டி.அய்.ஜி. என்ற "சந்தீப் மிட்டல்" இந்த "போர்குற்றத்தின்" இரண்டாவது குற்றவாளி. அவர்களுக்கு "எடுப்பு வேலை" செய்த "செந்தில் வேலன்" மூன்றாவது குற்றவாளி. இந்த "போர்குற்றவாளிகளை" கூண்டிலேற்றாமல், எந்த "மனித உரிமையும்" தமிழ்நாட்டில் "மயிரைக் கூட" பிடுங்க முடியாது. இப்போது அதிகாரிகள் அறிவித்திருக்கும் "போரை" எத்ரிகொள்ள மக்கள் "தயார்". எந்த அளவுக்கு உங்கள் நாட்டின் 'அரசியல் சட்டமும், ஜனநாயகமும்" தயார் என்பதை "வெளியே" வந்து அரசியல் கட்சிகள் கூறட்டும். இனி நாமும் "வேடிக்கை" பார்பவர்களாக இருந்தால் "கூண்டோடு " அழிந்து விடுவோம்.

Monday, September 26, 2011

சிதம்பரத்தை "மோசடி" வழக்கு "தீண்டாதா?".

ராஜா மீது "இந்திய இசை" ஏமாற்றியதாகவும், "மோசடி" செய்ததாகவும் "குற்றம் "சுமத்தியுள்ள "சீ.பி.ஐ" இப்போது "பாட்டியாலா" நீதிமன்றத்தில், ஆ.ராஜாவின் வழக்கறிஞர் கேட்டபடி, "சாட்சிகளாக" சிதம்பரத்தையும், மன்மோகனையும் கொண்டு வந்து நிறுத்துவார்களா? உங்கள் "சமூகம்" தீண்டத்தகாதவர்" என்று எங்களை "முத்திரை" குத்தும். நீங்கள் மட்டும் "குற்றங்களில்" இருந்து "தீண்டத்தாகதவர்களா?". இந்த கேள்வியை இன்னமும் "இந்திய மக்கள்" கேட்காததால்தான், இவர்கள் எல்லாம், ஜன்பத் சாலை பத்தாம் எண்ணில், கலந்து பேசி, உண்மைகளை குழி தோண்டி புதைக்க விரும்புகிறார்கள்.

2003 ஆம் ஆண்டு "தொலைத் தொடர்பு அமைச்சராக" இருந்த ஜஸ்வந்த் சின்க்தானே "ஏலம்" விடாமல் "உரிமம்" ஒதுக்கும் "கொள்கையை" கொண்டு வந்தார்? இந்த கேள்வியை ராஜாவின் வழக்கர்ஞர் கேட்ட பிறகுதான் "இந்தாயாவிற்கு" புரியுமா? சிதம்பரமும், மன்மோகனும், "குற்றம் செய்தார்கள்" என்று கூறவில்லை. ஆஅனால் அவர்களை "சாட்சிகளாக" விசாரிக்க வேண்டும் என்றுதானே ராஜா கேட்கிறார்? ராஜாவையும், மற்றவர்களையும், எப்படியாவது "ஆயுள் தந்தைக்கு" தள்ளிவிட விரும்பும் சீ.பி.ஐ.யின் செயலுக்கு "பின்னணியில் " இருப்பவர் யார்? இப்போது "பி.எஸ்.ஏந.எல்." அய் தவறாக பயன்படுத்தினார் என்று "திர்ஹயாநிதியையும்" சீ.பி.அய். கூறி விட்டதே? மொத்தமாக் இந்த "கும்பல்" உள்ளே செல்லவேண்டியதுதானா?


சிதம்பரத்தை "தப்பிக்க" வைக்க "பிரணாப்" மூலமே அவர் "காங்கிரசிற்கும், அரசாங்கத்திற்கும்" தூண் போன்றவர் என்றும், "மதிப்புமிக்கவர்" என்றும் கூறவைத்த சோனியா, சிதம்பரம் "நேர்மையாளர்" என்ற வார்த்தையை பிரணாப் மூலம் சொல்லவைக்க முடியவில்லையே? இந்த "இடம்தான்" கவனிக்கத் தக்கது.

காஷ்மீரில் அம்பலத்திற்கு வந்த "இனப்படுகொலைகள்".

இலங்கைத் தீவில் "தமிழினப் படுகொலைகளை" நடத்த துணையிருந்த "இந்திய ராசு" அதில் தப்பித்திருக்கலாம். ஆனால் காஷ்மீரில் நடத்தப்பட்ட "இனப் படுகொலைகளில்" இப்போது மாட்டிக் கொண்டுவிட்டார்கள். இன்று "ஜம்மு--காஷ்மீர்" மாநிலத்தின் "மாநில மனித உரிமை" அமைப்பு கண்டுபிடித்துள்ள, " சுடுகாட்டு புதைகுழிகள்" இந்திய அரசின் "உண்மை முகத்தை" படம் பிஒடித்து காட்டியுள்ளது. தொடர்ந்து " காணமல் போனவர்கள்" என்ற பெயரில் "ஒவ்வொரு வீட்டிலும்" தாய்மார்கள், "பிள்ளைகளை" இழந்தும், பெண்கள் "கணவன்மார்களை" இழந்தும், குழந்தைகள் "தந்தையரை" இழந்தும், சகோதர்களை இழந்து தவிக்கும் சிறுமிகளும், "சகோதரிகளை" இழந்து அலறும் " ஆண்களும்" சில பத்தாண்டுகளாகவே அதிகமாகிக் கொண்டு இருந்தார்கள்.

இப்போது "மாநில மனித உரிமை கவுன்சில்" கண்டுபிடித்துள்ள, 2000 ௦௦ புதை குழிகளில், "எலும்பு கூடுகள்" கிடப்பதை அம்பலப்படுத்தியுள்ளது. இவை "முப்பத்தெட்டு" இடங்களில் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. 'அறிவிக்கப்படாத" இடுகாடுகளாக அவை இப்போது அறிவிக்கப்படுகின்றன. அவற்றில் இருக்கும் எலும்புக் கூடுகள் அனைத்தும் "போராளிகளுடையது" என்று சொல்லல தாங்கள் தயாரில்லை என்பதே மனித உரிமை ஆணையத்தின் முடிவு. அதற்காக அந்த உடல்கள் மீது, "டி.ஏன்.ஏ. சோதனை" நடத்தப்பட வேண்டும் என்பதே மனித உரிமை ஆணையம் வந்திருக்கின்ற முடிவு. அதனால் "தங்கள் உறவினரது" உடலா என்ற "ஆர்வத்தில்" மனிதர்களைத் தொலைத்தவர்கள் இருக்கிறார்கள்.

இது சம்பந்தமான அறஈகையை "சட்டமன்றத்தில்" எதிர்க்கட்சித் தலைவரான "மக்பூபா முப்டி " கிழித்துப் போட்டுள்ளார். முதல்வர் "உமர் அப்துல்லா" மாட்டிக் கொள்வார் என்கின்றனர். ஆனால் "கொலைகளை" செய்தவர்கள் அங்கே நிலை கொண்டு இருக்கும் "இந்திய இராணுவமே" என்பது கண்கூடு. 'ஐ.நா. சபையில் "மஹிந்தாஅரசை" போற்குற்றங்களில் இருந்து "காப்பாற்ற" துடிக்கும் "இந்திய ராசு" இப்போது, "காஷ்மீர் தேசிய இன" பிரச்சனையில் மாட்டிக் கொண்டுள்ளது. இதற்கு "ஊழல் குற்றச்சாட்டில்" சிக்கியுள்ள சிதம்பரம் பதில் சொல்வாரா?,

செங்கோடிக்கு "மக்கள் மன்றம்" செய்த "அஞ்சலி".

சனிக்கிழமை சென்னைக்கு வந்த "காஞ்சி மக்கள் மன்றம்" வீரமகள் செங்கொடித்தோழர் "தியாக மகள்" ஆனதற்கு " நினைவேந்தலை" படத்திறப்புடன், "தலைவர்களை" அழைத்து, "இப்படி ஒரு காட்சி" இதுவரை இல்லை என்று சொல்லும்படி, நடத்திக்காட்டினார்கள். ராயப்பேட்டை அவைசன்முகம் சாலையில், அதிமுக அலுவலகத்தை அடுத்த கட்டிடமான "ஹேமமாலினி" கல்யாண மணடபத்தில், மாலை சரியாக "நாலரை மணிக்கு" கலை நிகழ்ச்சிகளை தொடங்கினார்கள். செங்கொடியுடன்"தோழமையாக" வளர்ந்து,செங்கொடியுடனே, பல "நடனங்களையும், பாடல்களையும்" நடத்திக் காட்டிய "சக தோழிகள்" அங்கே "நடனங்களின்" மூலம் செங்கொடிக்கு "அஞ்சலி" செலுத்தினர்.

பெரும் அரங்கு. அதுபோலவே பெறும் 'சுவரொட்டிகள்". ஆயிரக்கணக்கில் "துண்டறிக்கைகள்' . அத்தனையும் "மக்கள் மன்றத்தின் தோழமை சக்திகள்" சென்னையிலிருந்து "ஏற்பாடு" செய்திருந்தனர். மக்கள் மன்றத்தின் "கிராமப்புறக் கிளைகள்" தாங்களே "வாகனங்களை" ஏற்பாடு செய்து கொண்டு வந்திருந்தனர். நூற்றுக் கணக்கில் மக்கள மன்றத்தினர் வார, சென்னைவாசிகளும், நூற்றுக் கணக்கில் கலந்து கொண்டனர். கலைப்புலி தாணு, டாக்டர் கலாநிதி என்று "பிரபல புரவலர்களும்" அந்த நிகழ்வுக்கான உதவிகளை அளித்திருந்தனர். ஆனாலும் மக்கள் மன்றம் "எந்த நிதியையும்" தங்கள் இயக்கத்திற்கு என்று வாங்குவதாக இல்லை. செங்கொடி "நினைவு மண்டபம்" எழுப்ப, கலந்து கொண்டோரிடம் "நிதி" திரட்டப்ப்டட்டது. "செங்கலும், சிமிட்டியும், மணலும்,"வாங்கித் தருபவர்கள் வரவேற்கப்பட்டனர். மக்கள் மன்றம் "ஒரு கம்யூன்" என்றழைக்கப்படும் "கூட்டு வாழ்க்கை". அதற்கு " நிதி" என்பது அதன் " கடமையை" சிரிதாக்கிவிடக்கூடாது என்பதே அதன் "குறிக்கோள்".

இப்படி :"கொள்கை" வீராங்கனையாக வளர்ந்ததால்தான் "செங்கொடி" இன்று "உயர்ந்து நிற்கிறார்". செங்கொடி "நடத்திய" நடன நிகழுவுகளின் "காணொளிகள்" திரையில் காட்டப்பட்டன. அதுகண்டு " உருகாத" உள்ளமே இருக்க முடியாது. செங்கொடியின் "நளினம்", "கால்களை எடுத்துவைக்கும் பாங்கு"," கைகளை சுழட்டும் பக்குவம்", "கண்களை மிரட்டிக் காட்டும் பார்வை" " கண்களில் நடனம் காட்டிய நர்த்தனம்", "ஒயிலாட்ட முறையில் கைகளை உயர்த்தி கீழிறக்கி, வளைத்து" நிகழ்த்திய காட்சிகள், எல்லாமே "காண்பவரை" இழுத்து, தனது "காலடியில்" நிற்க வைத்த அந்த "இளம் தோழி" எல்லோர் கண்களையும் "குளமாக்கிவிட்டார்" அதில் அசந்துபோன கவின்மலர் தனது "பேஸ்புக்" வர்ணித்துள்ளார். முன்கூட்டியே வந்து மர்ந்துர்ந்த தலைவர்கள் "சிலர்" மட்டுமே அந்த "காட்சியை" பெரிய திரையில் "காண முடிந்தது". அதில், கொளத்தூர் மணி, விடுதலை ராஜேந்திரன், பேரா.சரஸ்வதி, நெடுமாறன், ஜான்பாடியன்" ஆகியோர் அடங்குவர்.அந்த "திரை நிகழ்வை" கருவிகள் மூலம் இயக்கிக் காட்டிய, செங்கொடியின் "இன்னொரு அக்கா" ஜெசி அத்தனை "நிழற்படங்களையும்" இயக்கியதை யாருமே "காணத்தவறவில்லை".

செங்கொடி 'நினைவை" மரண தண்டனை "எதிர்ப்பு கூட்டமாக மக்கள் மன்றம் நடத்தியது. பேராசிரியர் சரஸ்வதி "தலைமை" தாங்கினார். பெரியார் திராவிடர் கழத் தலைவர் கொளத்தூர் மணி "செங்கொடியின்" படத்தை திறந்து வைத்தார். மக்கள் மன்றத்தின் மேகலா வரவேற்றார். மக்கள் மன்றத்தின் மகேஷ் அவ்வப்போது விளக்கங்களை அளித்தார். இறுதியில் மக்கள் மன்றத்தின் மகா நன்றி கூறினார். "பழ நெடுமாறன், சரஸ்வதி, கொளத்தூர் மணி, மக்கள் மன்றம் மகேஷ், மேகலா, மகா, டி.எஸ்.எஸ்.மணி, தியாகு, ஜான் பாண்டியன், வழக்கறிஞர் பார்வேந்தன்,டாக்டர் கிருஷ்ணசாமி, வைகோ ஆகியோர் உரையாற்றினார்கள்.

தோழர் நல்லகண்ணு, பெயர் அறிவித்திருந்தும் வர இயலவில்லை. அவர்களுக்கு 'உள்ளாட்சி தேர்தலில்" அணி மாற்றம் என்ற குழப்பம், தொகுதி பங்கீடு என்ற சிக்கல் இருந்திருக்கும் என்று தெரிகிறது. வெள்ளையன் ஏதோ வரவில்லை. டாக்டர் ராமதாஸ், ஏற்கனவே வடிவேல் இராவணன் பெயரை கொடுத்திருந்தார். ஆனால் அவரும் வரவில்லை. இயக்குனர் மணிவண்ணன் கொசையில் மருத்துவ சிகைச்சியில் இருந்துவிட்டார். தொல் திருமாவளவன் 'வெளிநாடு " செல்ல இருப்பதால் முதலில் சிந்தனை செல்வன் பெயர் இடம் பெற்றது. பிறகு வெளிநாடு செல்லவில்லை என்று, "திருமாவளவனே" அவ்ருவதாக இருந்தார். கடைசிவரை உறுதியாக வருவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அவருக்கு பதிலாக அவர்கள் கட்சியின், "பார்வேந்தன்" பேசினார். இப்படியாக "மக்கள் மன்றத்தின்" முதல் சென்னை நிகழ்ச்சி "வெற்றிகரமாக" நடந்தேறியது.

"செங்கோடிக்கு" இதுபோல ஒரு "மரியாதயை" யார் தர முடியும் என எல்லோர் மனதிலும் "செங்கொடி" நிறைந்து இருந்தார். இனி ஒவ்வொரு "விடுதலை எழுச்சியும்" செங்கொடியின் "நிழலில்"தான் எண்பதை அந்த கூட்டம் "கட்டியம்" கூறியது

பரிதாப உணர்ச்சியே மேலோங்குகிறது???

இனத்துரோகம், காட்டிக் கொடுத்தல்,தன்னல வெறி,இயக்கத்தை அழித்தல், கொள்கைகளை புதைத்தல், குற்றத்தை மறைத்தல், இரக்கமற்ற லாபவெறி, பொருள்சேர்க்கும் வெறி, பதவி மோகம், பாசாங்கு செய்தல், பாலின இழிவு, நண்பர்களை உடைத்தல், தன்னை முன்னிலைப்படுத்தல், துணிந்து பொய்கூறல், பிறர் பொருள் கவர்தல், இத்தனை " நற்குணங்களையும் "ஒருங்கே" கொண்ட ஒருவருக்கு, "பெறும் சிக்கல்" வந்துள்ளது. டில்லியில் நீதிமன்றத்தில், இரண்டு தலைமுறை அலைவரிசை ஊழல் வழக்கில், அடுத்த "குற்றப் பத்திரிக்கை" தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அது "நச்சீட்டி" என கலைஞரது "நெஞ்சை" குத்தும்.

ஆ.ராஜ்விற்கு அடுத்தடுத்த "குற்றச்சாட்டு" வழக்கு பிரிவுகள். கனிமொழிக்கு "எதிர்பாராத" வழக்கு பிரிவுகள். கலைஞர் டி.வி. விவகாரத்தில் "கனிமொழிக்கு" சம்பந்தம் இல்லை என்று "பல முறை" தந்தையே, அதாவது "கலைஞர் டி.வி." இன் உண்மையான "மூளையே" கூறியபிறகும், குடும்பத்திற்குள்ளேயே இருக்கும் "அமிர்தம்" கூறிய "போய்" சாட்ச்சியை "அடிப்படையாக" கொண்டு, கனிமொழி மீது "மேலும்" பல குற்றச்சாட்டுகளை சீ.பி.ஐ. கூறியுள்ளது. 120 பி என்ற "ராஜா துரோக" வழக்கு பிரிவிலும், 409 என்ற பிரிவில் ஏமாற்றியதாகவும், கனிமொழி மீது இப்போது சீ.பி.ஐ. குற்றச்சாட்டுகளை "புனைந்துள்ளது".

இது யார் செய்த "சதி?". யாருக்கு இதனால் "லாபம்?". காங்கிரச்கார்ர்களுக்கு, திமுக மீதோ, கலைஞர் மீதோ "கோபம்" என்று வைத்துக் கொள்வோம். அதற்காக இவ்வளவு தூரம் "இறங்கி வந்து" செய்ய என்ன "அவசியம்" இருக்கிறது? ஆ.ராஜாவின் வழக்கறிஞர், "பிரதமரையும், சிதம்பரத்தையும்" நீதிமன்றத்திற்கு வந்து "சாட்சியம்" கூறவேண்டும் என்று கூறியதால் "சிதம்பரம் மற்றும் மன்மோகன் தயவில் உள்ள சீ.பி.ஐ" இப்படி ஒரு "அபாண்டமான" குற்றச்சாட்டை வைக்கிறார்களா? கனிமொழிக்கும் ராஜாவின் வழக்கறிஞர்தான் வாதாடுகிறார் என்பதால், கனிமொழி சார்பாக பேசும்போதும், "கனிமொழி வழக்கிற்கு சம்பந்தமே இல்லாத" சிதம்பரத்தையும், மன்மோகனையும்" அவரும் "சாட்சிகளாக" இழுத்தார் என்ற செய்தி, நமக்கு இருந்தது போலவே "கனிமொழிக்கும்" அதிர்ச்சியாக இருந்ததே? அதைக்கூட கனிமொழி விரும்பவில்லை எண்பதை ஏற்கனவே நாம் கூறி இருக்கிறோமே? இப்போது "அதற்காக" கோபப்பட்டு "அவர்கள் இருவர்" மீதும் இப்படி சீ.பி.ஐ. குற்றம் சாட்டுகிறதா?

இல்லையென்றால், இத்தகைய "குற்றச்சாட்டுகளால்" கனிமொழி மேலும் "பல காலம்" சிறையிலேயே இருக்கட்டும் என்றும் "தண்டனைகூட" கிடைத்து "வெளியே" வரமுடியாத சூழல் ஏற்படட்டும் என்றும் நினைப்பது "யாராக" இருக்கும்? கனிமொழி வெளியே வந்தாள், திமுகவின் "மிக முக்கிய தலைவராக" ஆக்கப்பட்டு விடுவார் என்றும், கனியை "தலைவர்" அப்படி ஆக்கிவிடுவார் என்றும் "யார்" பயப்படுவார்கள்? யார் "டெக்கான் குரோனிகல்" ஆங்கில ஏட்டில், "ஞானியை" வைத்து ஒரு கட்டுரை எழுதச் செய்து, அதில் "கலைஞர்" கட்சி தலைமையிலிருந்து "கீழே" இறங்க வேண்டும் என்று "கருத்தை" பதிவு செய்து, அந்த "கட்டுரையை" படித்தீர்களா என்று ஒவ்வொருவராக கேட்டுக் கொண்டிருந்தது?

"யாருக்கு" கட்சித் தலைவர் "பதவி" உறுதியானது என்று "பட்டத்து இளவரசர்" பாத்திரம் "தயாராக" இருக்கிறது? யார் உண்மையில் "கனிமொழி" அந்த இடத்தை "பிடித்துவிடுவாரோ" என்ற "அச்சம்" அதிகம் கொண்டவாராக இருப்பது? யாருக்கு பின்னால் "டில்லியை" கழககண்ணியில் "கோர்க்கவேண்டியவராக" தான்தான் "இருப்போம்" என்ற ஆணவம் இருந்தது?, 2007 இல் "தலைவரிடம்" குட்டு வாங்கும்வரை அந்த நம்பிக்கையில் இருந்தது? "யார்" அந்த நம்பிக்கைகள் "உடைந்துவிட்டனவே" என்று கனிமொழி மீது "ஆத்திரம்" கொண்டு அலைவது? யார் முதலில் தனது "அச்சு ஊடகத்திலும், காட்சி ஊடகத்திலும்" தினசரி " இரண்டு ஜி" ஊழல் பற்றி "அம்பலப்படுத்தியது?". இப்படி நடப்பது எதுவுமே "எதிர்கட்சிகள்" செய்வது அல்ல. எல்லாமே "குடும்பத்திற்குள்" நடக்கும் " உள்குத்து" வேலைகள்தாம்.

கனிமொழிக்கு இப்போது குற்றயியல் நடைமுறை சட்டம் 437 பிரிவு "தந்திருக்கும்" பிணை வாய்ப்பு தரப்பட்டுள்ளதாக சீ.பி.ஐ. கூறியுள்ளது. அதுவே கனிமொழியை 'பிணையில் வார" வழிவகுக்கும். அப்போது அவர் " சிதறிவரும் திமுகவின்" சுமை தாங்கியாக மீண்டும் தன்னை "அழித்துக் கொள்வாரா?" அல்லது "புதிய வடிவம்" எடுப்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.


தனது "இனத்தின்" அழிவை வேடிக்கை பார்த்து "இனத்தையும்" காப்பாற்ற முடியாத ஒரு தலைவன், அதனாலேயே தனது "கட்சியையும்" காப்பற்ற முடியாத ஒரு தலைவர், தனது "குடும்பத்தையும்" அழிவிலிருந்து "காக்க" முடியாத நிலைக்கு சென்று, "கடைசியாக" இப்போது "மகளையும்" காப்பாற்ற முடியாத "ஒரு தந்தையாக" ஆகிவிட்டார். "பழி" உணர்வு வரவேண்டிய தமிழருக்கு இப்போது, "பரிதாப" உணர்வுதான் மேலோங்குகிறது

Sunday, September 25, 2011

பாவம், தனியாக நின்றாரம்மா....

தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல்தான் இப்போது "பரபரப்பு". அதில் திமுக தனித்து நிற்கும். இது முதல் அறிவிப்பு. விசிக வெளியே வந்து, பாமகவுடன் நிற்கும். இது முதல் அறிவிப்பு. திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம் என்ற விசிக அறிவிப்பு. திராவிட கட்சிகள் வேண்டாம். இது பாமக அறிவிப்பு. விசிக கூட்டணியில் இன்னமும் இருப்பதாக கூறுகிறதே ஏன்றால், "கூட்டணியில் இருந்த கட்சிகளுடன்" தொகுதி உடன்பாடு செய்து கொள்ளலாம் என்ற கலைஞர் அறிவிப்பு. அது காங்கிரசுக்கும் "பொருந்துமா" என்றால், எல்லோருக்கும் பொருந்தும் என்ற கலைஞரின் மறு அறிவிப்பு. ஆனால் "தனித் தனியாக" ஒவ்வொரு கட்சியும் வேட்புமனு பரிசீலனை மற்றும், வேட்பாளர் தேர்வு முடித்து, மனுத்தாக்கலும் செய்து வருகின்றன.

காங்கிரஸ் "தனியாக". திமுக "தனியாக". அதிமுக கூட்டணியில் "தேமுதிக தனியாக". இப்படி எல்லோரும் "தனித் தனியாக" நின்றால் அவரவர் "பலம்" தெரிந்துவிடும் என்று மக்கள் "அங்கலாய்கிறார்கள்" தேமுதிக "வெளியேறியது" விஜயகாந்தின் "தவறா?" அதிமுக வில் "பல" கருத்துக்கள் உண்டு. சென்ற "சட்டமன்ற" தேர்தலில் தேமுதிகவை .சேர்த்தது "தவறா?" என்றால், "ஒரு புறம்" அது சரிதான் என்று வரும். அதற்காக தேமுதிக "உள்ளாட்சியில்" கேட்பதை எல்லாம் கொடுக்க அதிமுக தயாரில்லை. இப்போது "கழட்டி விட்டால்" தேமுதிக "சுழி" போட்டுவிடும். அதன்பிறகு "நாடாளுமன்ற தேர்தலில்" அதிக "தொகுதிகளை" கேட்காமல் ஒழுங்காக "குடுத்ததை" பெற்றுக்கொள்வார்கள். இப்படியும் அதிமுகவில் "விவேகமாக" செயந்தித்து இருப்பார்கள் அல்லவா?

எப்படியோ "ஒவ்வொரு" சிறு கட்சியும் "பெரிய" கட்சிகளின் "பிடியில்" இருந்து "தப்பித்து " வந்தாரம்மா. பாவம், "தனியாக" நின்றாரம்மா.

Friday, September 23, 2011

பலி வாங்கியவர்கள், பழி வாங்குகிறார்கள்.

காங்கிரச்காரரகளுக்கு அது தனி "கலைதான்". அவர்கள்தான் ராஜிவ்காந்தியை "பலி வாங்கினார்கள்" என்று ஒரு கருத்து "பலமாகவே" இருந்து வருகிறது. ராஜீவ் கொலை நேரத்தில் "செத்துபோனவர் எல்லாம் போலீஸ்காரன்" "காங்கிரஸ்காரன் எங்கே போனான்" என்று தமிழ் உணர்வாளர்கள் எப்போதும் தெருக்களில் முழக்குவார்கள். காங்கிரஸ் தலைவர்கள் யாரும் அப்போது அந்த "விபத்தில்" அல்லது அந்த "கொலையில்" சிறிய "காயம்" கூட படாமல் தப்பிவிட்டார்கள். இறந்துபோன் அ"இரண்டு" தொண்டர்களின் "குடும்பங்களை" நாடி வந்த போதெல்லாம் இத்தனை ஆண்டுகளாக "மதிக்காமல்" எந்த "உதவியும் " செய்யாமல் அவர்களை இப்போது "காட்சிகள்" போல ஊடகவியலாளர்களிடம் காட்டி, " தூக்கு தண்டனைக்கு" தூண்டி விட பயன்படுத்தும் "இழி" செயலை சில கான்க்கியர்ச்காரர்கள் ச்ய்துவருவது அனைவரும் அறிந்ததே.

ராஜீவ் கொலையில் எப்படி "சீ.டபிள்யு. சீ." எனும் "காங்கிரஸ் பணிக்குழு" சம்பந்தப்பட்டிருக்கிறது என்று அத நேரத்திலேயே "வெளிவந்தது". மரகதம் சந்திரசேகறது வீட்டிற்கு "ராஜீவ்" வருவதை அன்றைய "உளவு துறை" தடுத்த பிறகும், சீ.டபிள்யு.சீ. யில் அலுவலக செயலாளராக இருந்த "கல்யாண ராவ்" எப்படி ராஜீவ் வருகையை திரு பெரும்புதூருக்கு "உறுதி" செய்தார் என்ற் கதைகள் யாவரும் அறிந்ததே. இப்போது வேண்டும் என்றே " மூன்று தமிழர் மரண தண்டனையை" எதிர்க்கும் இன உணர்வாளர்களை எதிர்க்க நினைக்கும் காங்கிரஸ்காரர்கள், "எதிர் பட்டினிப்போர்" நடத்துகிறார்கள். அதனால் ஆத்திரப்படும் இன உணர்வாளர்கள் இந்த நேரத்தில் " பல" உண்மைகளை போட்டு உடைக்க புறப்பட்டுவிட்டனர். அதில் "ராஜிவ்காந்தி" இலங்கைக்கு அனுப்பிய "இந்திய மைதிப்படை" என்னவெல்லாம் அட்டூழியங்கள் செய்தன என்பது உலகுக்கு "அம்பலமாகிக் கொண்டு" இருக்கிறது.

சேவ் டமில்ஸ் அமைப்பும் வழக்கறிஞர்களும் நடத்திய "கூட்டங்களில்" இந்த விவகாரம் முக்கியத்துவம் பெற்றது. "பெரியார் திராவிடர கழகம்" நடத்திய "பயணத் தொடக்க விழாவிலும்" கீற்று ரமேஷ், வழக்கறிஞர் பாண்டிமாதேவி, விடுதலை ராஜேந்திரன்,கொளத்தூர் மணி, வைகோ ஆகியோர் இந்த விவகாரங்களை எடுத்து விட்டதில், "ராஜீவ் காந்தியின்" "போர் குற்றங்கள்" அமபலத்துக்கு வந்தன. அதனால் ராஜீவ் "ஒரு போர்க்குற்றவாளி" என்ற விவாதம் இப்போது தமிழ்நாட்டில் தொடங்கி உள்ளது. கனகிரச்காரர்கள் "சும்மா" இருந்திருந்தால் தமிழர்கள் அந்த "பழங்கதையை" நினைவு படுத்தியிருக்க மாட்டார்கள். தமிழர்கள் "மரண தண்டனை ஒழிப்பு" என்ற உலக மனித உரிமை கருத்தை "மனித உரிமை" தளத்தில் நின்று எழுப்பும்போது, கனகிரச்கார்ர்கள் இப்பை குட்டையை குழப்பி விட்டார்கள். அதுவும் "நல்லதாகப் போயிற்று".

ராஜிவ்காந்தி உயிரை "பலி" வாங்கிய காங்கிரச்கார்ர்கள், இப்போது அவரது "போர்குற்ற" நடவடிக்கைகையும் "நினைவு" படுத்தவைத்து, அவரை "பழி" வாங்குகிறார்கள். இதுவும் "நல்லாத்தான்" இருக்கு.

செங்கொடி படத்திறப்பும், மரண தண்டனை எதிர்ப்பும் நடத்தும் மக்கள் மன்றம்.

செங்கொடி படத்திறப்பும், மரண தண்டனை எதிர்ப்பும் நடத்தும் மக்கள் மன்றம்.

நாளை சனிக்கிழமை மாலை சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலை, ஹேமமாலினி கல்யானமண்டத்தில், "மக்கள் மன்றம்" செங்கொடி படத்திறப்பும், மரண தஹ்ண்டனை எதிர்ப்பு கூட்டமும் நடத்துகிறது. பேரா.சரஸ்வதி தலைமை தாங்க, கொளத்தூர் மணி "செங்கொடி" படம் திறக்க, வைகோ, ஆர்.நல்லகண்ணு,டாக்டர் கிரூஷ்ணசாமி.ச.ம.உ., பழ.நெடுமாறன், இயக்குனர் மணிவண்ணன், த.வெள்ளையன், ஜான் பாண்டியன், பேரா.தீரன், சிந்தனை செல்வன், வடிவேல் ராவணன், அற்புதம்மால், தியாகு, டி.எஸ்.எஸ்.மணி மக்கள் மன்றம் மகேஷ், மேகலா, மகா ஆகியோரும் கலந்துகொள்ளும் கூட்டம் நடைபெறும். மக்கள் மன்றம் கலை நிகழ்சிகள் நடைபெறும். மாலை ஐந்து மணிக்கு முன்பு நிகழ்ச்சி தொடங்கிவிடும். உணர்வாளர்கள் வருக.

Monday, September 19, 2011

பல்டியா? படிப்பினையா? "ஜெ" கற்றது எதை?

கூடங்குளம் அணு உலை "பாதுகாப்பாக" இருக்கிறது என்ற "ஞானோதயத்தை" சென்ற வாரம் "பதிமூன்றாம்" நாள் அறிவித்த "ஜெயலலிதா" , அதனால் "மீனவ மக்கள்" ஒழுங்காக "வீட்டிற்கு போங்கள்" என்று அறிவுறுத்திய "ஜெயலலிதா" இன்று " வட்டார மக்களின் பாதுகாப்பின்மையை" மத்திய அரசும், அணு சக்தி துறையும் "போக்குவதில்" அக்கறை ச்ளுத்தவில்லை என்று கூறியிருப்பது "பல்டியா?". பல்லாயிரக்கணக்கில் மீனவ மக்கள் உட்பட, வட்டாரத்தின் நாடார் சமூக மக்கள் உட்பட, அனைத்து மக்களும் ஒன்றாக "அணு உலையை" எதிர்ப்பதை கண்டு "மனம் மாறிவிட்டாரா?". கிறித்துவ சாமியார்கள் மட்டுமின்றி, "பேராயர்களும்" சேர்ந்து போராடுவதால் மனம் மாறினாரா? வைகோ மட்டுமின்றி, நேற்று விஜயகாந்த் கூட, "மக்கள் பக்கம்" வந்து நின்று கொண்டதை கண்டு, தன்னை மாற்றிக் கொண்டாரா? முஸ்லிம்கள் பக்கம் நேற்று " எஸ்.எம்.பாக்கர்" போன்றவர்களும் இறங்கி "அணு உலையை" எத்ரித்து போராட வந்ததால், இப்போது மாறிவிட்டாரா? மேத்தா பட்கர் இன்று வைக்கிறார் என்பதால் அதற்கு முன்பே தனது எதிர்ப்பையும் தெரிவித்துவிட எண்ணி "மாற்றி" பேசுகிறாரா?

மீனவ மக்கள் இன்று "தூத்துக்குடி" கிராமங்களை விட்டு வெளியேவந்து, "அமளி நகரில்" பத்தாயிரம் பேர் "பட்டினிப் போராட்டம்" என்று அமர்ந்து விட்டதால் " நிலையை" மாற்றினாரா? நேற்று முதல் "கன்யாகுமரி" மாவட்டத்திலும் போராட்டங்களை தொடங்கி விட்டார்கள் என்பதால் "ஜெ" மாற்றி பேசுகிறாரா? இப்போதும் "அணு உலையே" வேண்டாம் என்று அவர் கூறவில்லையே? மத்திய அரசே "காரணம்" என்றுதானே கூறுகிறார்? கடந்த காலத்தில், " விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை" ரத்து செய்த போது, "நாடாளுமன்ற தேர்தலில் "தோல்வி" கண்டார். உடனேயே "இலவச மின்சாரத்தை" திரும்ப கொண்டு வந்தார். அது "படிப்பினை". அதேபோல இப்போது ஆட்சிக்கு வந்த உடனே "ஆளுநர் உரையில்" மரபணு மாற்று பருத்தியை படிப்படியாக கொடுவருவோம் என்று இருந்தது. அதை எல்லோரும் எதிர்க்கும் போது, " ஜெயும் தேர்தலுக்கு முன்பு" எதிர்த்தார் என்று ஊடகங்களில் சொன்ன பிறகு, அதை " வராது" என அறிவித்தார். அது "பல்டி".

பரமக்குடி துப்பாக்கி சூட்டை "நியாயப்படுத்தி" அதை அதிமுககாரர்களே மறுக்கும் அளவில் நடந்தது "இன மோதல்" என்றார். அதை இன்னமும் "திரும்ப பெறவில்லை". ஆனால் "கூடங்குளம்" பற்றிய தன் கருத்தை இப்போதைக்கு "மாற்றிக் கொண்டுள்ளார்". இது "நிரந்தரமானதும்" அல்ல. அப்படியானால் இது "பல்டி அல்ல": படிப்பினைதான். ஆனால் "தற்காலிக படிப்பினை" என்று கூறலாமா

Saturday, September 17, 2011

கூடங்குளம் வரலாறு தெரியாதவர்கள் பேசுகிறார்களா?

நத்தம் விஸ்வநாதன் தமிழ்நாட்டின் மின்சாரத் துறை அமைச்சர். அதனால் அவர் என்னவேண்டுமானாலும் பேசலாம் என்று ஒரு "விதி" இருக்கிறதா? கூடங்குளம் அணு உலையை "பத்தாண்டுகளாக" விட்டுவிட்டு "இப்போது" எதிர்க்கிறார்களே? என்று அவர் கேட்டுவிட்டார். எந்த நேரத்தில் கேட்டார் தெரியுமா? இடிந்தகரையில் நடக்கும் "பட்டினிப் போராட்டத்தில்" 127 உயிர்களுக்கு ஆதரவாக 30000 ௦௦௦ மக்கள் திரண்டு இருக்கும்போது, "அமைச்சர்கள் " வருகிறார்கள்: அதனால் அவர்களை சந்திக்க "போராட்ட குழுவினர்" வாருங்கள் என்ற செய்தியை "தூத்துக்குடி பேராயர்" சொல்லி அனுப்பிய நேரத்தில், கூறுகிறார். அதாவது "முதல்வர்" அனுப்பினார் என்றும், உங்களுடன் "பெட்சச்சொல்லியிருக்கிறார்" என்றும், அமைச்சர்கள் "போராட்டக்காரர்களிடம்" கூறிக்கொண்டிருக்கும் போது, நத்தம் விஸ்வநாதன் "இப்படி" பேசுகிறார். "நீங்கள் சொல்லும் அணு உலை கூடாது என்ற செய்தியை" அம்மாவிடம் போய் சொல்லுகிறோம் என்று வந்திருந்த அமைச்சர்கள் போராட்டக் குழுவிடம் கூறிக்க் கொண்டிருக்கும்போதே, போராட்டக்காரர்களை "தாக்கி" அமைச்சர் விஸ்வநாதன் இப்படி "ஊடகவியலாளர்களிடம்" கூறுகிறார்.

"முதல்வர்" மீது நம்பிக்கை வைத்து நீங்கள் பட்டினிப் போராட்டத்தை கைவிடுங்கள் என்று அந்த நெல்லை, தூத்துக்குடி, அமைச்சர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே, "ஏதோ எதிர்க்கட்சிகாரர்களை" கிண்டல் செய்வதுபோல, நத்தம் சென்னையில் இப்படிக் கூறுகிறார். அமைச்சர்கள் "செல்லப் பாண்டியன், செந்தூர்பாண்டியன், சண்முகநாதன்" ஆகியோரையும், "நயினார் நாகேந்திரனையும்" செல்வி. ஜெயலலிதா " கூடங்குளம் போராட்டக் காரர்களிடம்" பேச அனுப்பியுள்ள போது, அவர்களை அவமானப் படுத்துவதுபோல, அந்த அமைச்சர்களை அனுப்பிவைத்த "முதல்வரையும்" அவமானப்ப்டுத்துவதுபோல,"நத்தம் விச்வ்பனாதன்" பேசி இருக்கிறார். அந்த விஸ்வநாதனுக்கு, 1988 ஆம் ஆண்டு முதல் "கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு கூட்டமைப்பு" என்ற பெயரில், பல்வேறு அமைப்புகளை சேர்த்து, "அன்டன் கோமஸ்" தலைமையில் மாநிலம் தழுவிய "போராட்டங்கள்" நடத்தப்பட்டது தெரியுமா?

1989 ஆம் ஆண்டு மார்ச்-20 இல் தூத்துக்குடியில், முன்னாள் மத்திய அமைச்சர் "ஜார்ஜ்" பெர்னாண்டஸ் தலைமையில் ஒரு "மாபெரும்" பேரணியை அன்டன் கோம்ஸ் நடத்தியதும், அதில் "கூடங்குளம் அணு உலை" வேண்டாம் என்ற "தீர்மானத்தை" பல்லயிரக்கனக்கில் கூடிய மக்கள் "முழக்கம்" எழுப்பி, அதையே "போராட்டமாக" அறிவித்தது அமைச்சர் விச்வனாததிற்கு தெரிந்திருக்க நியாயமில்லை. அதுபோல, "பேச்சிப்பாறை" அனையிளிருந்துதான் "தண்ணீர்" எடுக்கப் போகிறார்கள் என்ற செய்தியை ஒட்டி, "குமாரதாஸ்" தலைமையில், "பேச்சிப்பாறை விவசாயிகள் சங்கம்" சார்பாக "நூறு" பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டது, இந்த நத்தத்திற்கு தெரியுமா? 'ஐகப்" மாணவர் இயக்கம் "நூறு கிராமங்களில்" விவசாயிகளை சந்தித்து, "கலை nikzhchchikal" மூலம் "அணு உலை எதிர்ப்பை" எடுத்து சொன்னார்கள் என்பத்கு விஸ்வநாதனுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை.

இத்தகைய அணு உலை எதிர்ப்பு போராட்டங்கள் மாநிலம் எங்கும், புதுவையிலும் கூட, அன்றைய "கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு கூட்டமைப்பு" மூலம் நடத்தப்பட்டன என்ற செய்தியை " விஸ்வநாதனுக்கு அறிவுரை கூறும் அணு உலை நிர்வாகம்" கூறியிருக்காது என்பது எங்களுக்கு தெரியும். சென்னையில் எழுத்தாளர் "ஞானி" உட்பட கலந்துகொண்ட " அணு உலை எதிர்ப்பு" பேரணி "அண்ணா சாலையில்" நடத்தப்பட்டதும், அதில் "பலூன்க்சலில்" அணு உலைகள் வேண்டாம் என்ற எழுத்துகளுடன் "பறக்க விட்டதும்" இந்த அப்பாவி அமைச்சருக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. எழுத்தாளர் ஞானி, அன்று "முரசொலியின் வார இதழாக" வெளிவந்த "புதையல் " என்ற ஏட்டில், அணு உலையின் "தீமைகள்" பற்றி எழுதியதையும், அதை "முரசொலி மாறன்" ஏற்றுக் ஒண்டு, "கலைஞரிடம்" கூறியதையும், அவரது வலியுறுத்தலில், "வைகோ " நாடாளுமன்றத்தில் "கூடங்குளம் அணு உலைக்கு" எத்ரிப்பு தெரிவித்ததையும், அதை அன்றைய "தினகரன்" ஏட்டில் அன்றைய முதலாளில் "கந்தசாமி" முதல் பக்க செய்தியாக வெளியிட்டதையும் "நத்தம் விஸ்வநாதன்" போன்ற "பிற்கால" அரசியல்வாதிகளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

புதுச்சேரியில்கூட, அன்று "எழுத்தாளர் ரவிகுமார்" தலைமையில் இந்த "கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு கூட்டமைப்பு" செயல்பட்டது என்ற செய்தியை "அணு உலை நிராவாகம்" கொடுத்திருக்க வாய்ப்பில்லை. அப்போது "ஜூனியர் விகடனில்" தொடர் கட்டுரைகளாக , "நாகார்ஜுன் மற்றும் ஏ.எஸ்.பன்னீர்செல்வம்" இணைந்து அணு உலைகள வேண்டாம் என்ற பொதுக் கருத்தையும், "கூடங்குளம் அணு உலை வேண்டாம்" என்ற குறிப்பான கருத்தைஓயும் எழுதியதை அவர் படித்திருக்க நியாயமில்லை. சென்னையில் பிரபலமான 'டாக்டர். சீ.ஏன்.தெய்வநாயகம்" அன்றே "கல்பாக்கம் அணு உலையால்" வ்ந்துள்ள தீமைகளை தொகுத்து எழுதினார் என்பதும் தெரிய வாய்ப்பில்லை. டாக்டர் தெய்வநாயகம் "கல்பாக்கம் அணு உலையில் பணியாற்றும் தொழிலாளர்களை" அளவு மானி கொண்டு அளந்து, 'வர்களுக்கு உருவாக்கி உள்ள புற்று நோய் பற்றி" காணொளி காட்சிகளை உருவாக்கி எங்களுக்கெல்லாம் "வழிகாட்டி" அணு உலை எதிர்ப்பை உருவாக்கினார் என்பதும் இன்றைய அமைச்சர்களுக்கு புரிந்திருக்க வாய்ப்பில்லை.

"உடனடியாக" மின் பற்றாக்குறையை போக்க, அணு உலை பயன்படும் என்ற "தவறான" செய்தியை அணு உலை நிர்வாகம்" கொடுத்ததை நம்பி அவர் அவசப்பட்டு அப்படி கூறியிருக்க கூடும். "அணு உலை நிராவகம்" என்பது, "அணு சக்தி துறைக்கு" கீழே வருகிறது. அணு சக்தி துறை என்பது ஒரு "சர்வாதிகார" சக்தி. அது "இந்திய மத்திய அமைச்சகதிற்கே " தெரியாமல் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். பிரதமரும், பாதுகாப்பு அமைச்சரும், அணு சக்தி துறை தலைவரும் சேர்ந்து கொண்டு "என்ன வேண்டுமானாலும் " முடிவு எடுக்கலாம் என்பது நமது அமைச்சர்களுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. அவர்கள் அணு உலைகளை பயன்படுத்தி "அணுகுண்டுகளை" உற்பத்தி செய்கிறார்கள் எனபதும் இவர்களுக்கு தெரியாது..."ஐ.எஸ்.ஆர்.ஒ." நிர்வாகம் "சமீபத்தில்" இரண்டு கோடி ரூபாயை இந்திய அரசுக்கு "நட்டம்" ஏற்படுத்தியதில், இந்த "அணு சக்தி துறை" அம்பலப்பட்டு நிற்கிறது என்படஹியும் இவர்கள் பொருத்திப் பார்க்க மாட்டார்கள்.

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். செல்வி.ஜெயலலிதாவிற்கு 'வாக்களித்த" மக்களை 'பரமக்குடி துப்பாக்கி சூட்டில்" பகைத்துக் கொண்டுவிட்டார்கள். இப்போது வக்களித்த "மீனவர்கள் உட்பட தென் மாவட்ட மக்களை" கூடங்குளம் அணு உலையை நியாயப்படுத்தி "பகைத்துக் கொள்ளப்" போகிறார்கள்.

Friday, September 16, 2011

பல "கறைகளை" இடிந்தகரை "கழுவிவிடும்"

நேற்று நேரில் சென்றிருந்தேன்.சில மீனவ சங்க தலைவர்களை "சென்னையிலிருந்து " கிளப்ப முயற்சித்து நான்கு நாட்களாக " தோல்வி" கண்ட பிறகு, நானே "ஒரு வாகனத்தை " பதிவு செய்துகொண்டு, கூடங்குளம் அணு உலை .எதிர்ப்பு போர் இன்று மையம் கொண்டிருக்கும் "இடிந்தகரை" மீனவ கிராமத்திற்கு சென்றிருந்தேன். சென்னை மீனவ சங்கத் தலைவர்களால் " அம்மாவிற்கு நன்றி" சொல்லி 25000 ரூபாய்க்கு , " விளம்பரம்" கொடுக்க பணம் இருக்கிறது: ஆனால் "கூடங்குளம் சென்று வர" பத்தாயிரம் ரூபாய் பணம் இல்லை என்ற "செய்தியை" கேள்விப் பட்ட பின்பே நானே "பணம் இல்லாவிட்டாலும்" கடன் வைத்துக்கொண்டு "வாடகை வாகனம்" எடுத்தேன். " ஞாயிற்றுக்கிழமை " தொடங்கிய "பட்டினிப் போர்" ஒவ்வொரு நாளும் அதிகமான "மக்கள் திரளை" திரட்டிக் கொண்டிருக்க, நான் சென்ற "வியாழக் கிழமை" பெறும் கூட்டமாக "அனைத்து சமூக" மக்களும் "திரண்டிருந்தார்கள்"

அந்த நான்கு நாட்களுக்குள் "வைகோ", தூத்துக்குடி கத்தோலிக்க பேராயர் யுவான் அம்புரோஸ், "பாலபிராஜாதிபதி அடிகளார்", "வெள்ளையன்", குமாரதாஸ், சீ.எஸ்.ஐ. பேராயர்கள், மாட்டார் கத்தோலிக்க பேராயர்கள், மித நேய மக்கள் கட்சியினர், இவாறு பல பிரமுகர்கள் வந்து ஆடஹ்ரவு டேஹ்ரிவித்த வண்ணமாய் இருந்தனர். தொடக்கத்தில் இருந்தே "அன்டன் கோமஸ்" என்னிடம் அன்றாடம் பேசிக்கொண்டே இருந்தார்.அதேபோல "பேராசிரியர் பாத்திமா பாபுவும்" ன்லமைகளை அன்றாடம் விளக்கிக் கொண்டே இருந்தார். " அடிகளார்" உடனே கூடங்குளம் வரும்படி "அழைத்துக் கொண்டே " இருந்தார். முதலில் "சனிக் கிழமை" இரவு "லிட்வின்" தொலைபேசியில் தொடர்பு கொண்டு "நிலைமை" அன்றாக இல்லை எனபதை கூறினார். அப்போது அவர் அருகே "உதயகுமாரும்" இருப்பதாக கூறினார். லிட்வின் "பெண்கள் இணைப்பு குழுவை" சேர்ந்தவர். உதயகுமார் சமீபத்திய ஆறு ஆண்டுகளாக "கூடங்குளம் எத்ரிப்பு" இயக்கங்களில், தன்னையும் "இணைத்துக் கொடவர்". உதயகுமார் "நாங்கள்" கூடங்குளம் எதிர்ப்பு இயக்கத்தை கட்டவிழ்த்து விட்ட "காலங்களில்" அதாவது "இருபத்து மூன்று" ஆண்டுகளுக்கு முன்பு, "அமெரிக்காவில்" அறிவியலாளராக இருந்தாராம். அவர் இங்கு வந்த காலம் தொட்டு தொடர்ந்து "ஒவ்வொரு கூட்டங்களிலும்" அவரே அதைச் சொல்லி நான் கேட்டிருக்கிறேன். பாதிப்பட்ட ஒருவர் நமது "அணு உலை எதிர்ப்பிற்கு" வந்துலாறே என்று நாங்கள் எல்லாம் பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

1988 இல் "கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு" இயக்கமாக உருவான போது, அன்டன் கோமசிற்கு உதவி செய்ய "சில அறிவியலாளர்கள்" இருந்தனர். அவர்கள் வியாழக்க் கிழமை நடந்த போராட கூட்டத்தின் மேடையில் "பேச்சாளர்களால்" நினைவு படுத்தப் பட்டார்கள். எழுத்தாளர் "கோணங்கி" தான் எப்படி " அறிவியலாளர் நாகார்ஜுனா" உடன் போராட்டத்தில் ஈடுபட்டேன் என்று விளக்கினார் அப்போது "அணு உலையை ஆதரித்தவர்கள்" அண்டத்திய கூட்டத்தில் தாங்கள் இருவரும் போய் "துனடரிக்கை" கொடுத்து "அடிவான்கினோம்" என்றும் விளக்கினார். அந்த "நாகார்ஜுனன்" என்ற பெயரில் எழுதிவரும் எழுத்தாளரான "அறிவியல்லாரனா" நண்பர்தான் "ஜி.ரமேஷ்". அவர் அப்போது "ஊடவியலாளராக" சென்னையில் "யு.ஏன்.ஐ. செய்தி நிறுவனத்தில்" பணியாற்றி வந்தார். அவர்தான் பிறகு "லண்டன் அனகேரில்" பி.பி.சீ. நிறுவனத்தில் சேர்ந்து பணியாற்றி இப்போது, லண்டனில் " அம்னெஸ்டி இன்டர்நேஷனல் " என்ற உலக பொதுமன்னிப்பு சபையின் "தெற்காசிய ஆராய்ச்சி போருப்பாலார்க்க" செயல்பட்டு வருகிறார். சமீபத்திய " மரணதண்டனை ஒழிப்பு" என்ற மூன்று தமிழர் உயிர் காக்க "அம்னெஸ்டி" அனுப்பிய அறிக்கைக்கு பின்னால் இருப்பவர். சமீபத்திய " சட்டீஸ்கர், ஒரிஸ்ஸா மாநில" கனிம வலக் கொள்ளையை அம்பலப்படுத்தும் "ஆராய்ச்சி புத்தகத்தை" அம்னெஸ்டி அசார்பில் வெளிக் கொண்டு வருவதில் முழுமையாக செயல்பட்டவர். வரத்தான் எனக்கு முதலில், நான் "பதின் மூன்று ஆண்டுகள்" தலைமறைவு வாழ்க்கைக்கு பிறகு வெளியே வந்தவுடன் " மயிலாப்பூரில்" இந்த அணு உலை எதிர்ப்பை சொல்லிக் கொடுத்தவர்.

அந்த ரமேஷ்தான் " ஜார்ஜ் பெர்னாண்டசை" எங்களுக்கு அறிமுகம் செய்தவர்.'அன்டன் கோமசையும்" எனக்கு ரமேஷ்தான் அறிமுகம் செய்தார். அப்போதுதான் "ஜார்ஜ் " எங்களுக்கு "அணு உலை ஆபத்தை " வ்குப்பு எடுத்துள்ளார்.சென்னையில் டாக்டர் சீ.ஏன்.தெய்வ நாயகம் எங்களுக்கு "அணு உலையின்" ஆபத்துகளை, அதன் விளைவாக ஏற்படும் "புற்று நோய்" கோளாறுகளை மருத்துவ ரீதியாக சொல்லிக் கொடுத்தவர். அதற்காக " காணொளி" மூலம் "கல்பாக்கம்" அணு உலையின் " உடல் பத்திப்புகளை" அங்குள்ள தொழிலாளர்களிடம் " சோதனை செய்த" புள்ளி விவரங்களை "பட்டியல்போட்டு" ஆதாரபூர்வமாக கற்றுக் கொடுத்தவர். இப்படி பல்வேறு அனுபவங்களை அங்கே "நண்பர்களுடன்" பரிமாறிக் கொள்ள முடிந்தது.

வியாழக் கிழமை " இருபத்தைந்தாயிரம்" மக்கள் இடிந்தகரையில் "பட்டினிப் ஓராட்ட" மைதானத்தில் கூடி இருந்தனர். நான் போன பிறகு, "அமலிநகர்" வருகிறார்கள்." கூடங்குளம் மக்கள்" வருகிறார்கள். "செட்டிகுளம்" மக்கள் வ்ருகிரார்கள் "கூட்டன்குழி மீனவ மக்கள்" வ்ருகிரார்கள்." கூட்டப்புளி கிராமமே" திரண்டு வருகிறது. இப்படி அறிவிப்புகள் அதையொட்டி "மக்கள் கூட்டமும்" அவனது கொண்டே இருந்தது. இந்த "மாபெரும் மக்கள் திரளை" யாரும் பார்த்திருக்கவும் முடியாது. இதை புரிந்து கொள்ளாத "ஆட்சியாளர்கள்" தொடர்ந்து "மக்களது மனங்களில்" நிலைத்திருக்கவும் முடியாது எண்பதை அந்த "கூட்டம்" கட்டியம் கூறியது.

Tuesday, September 13, 2011

அதிகாரிகள் டில்லிகாக வேலை செய்கிறார்களா?

"ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள்" மத்திய அரசின் "நேரடி ஆட்கள்" என்பது உண்மைதான். அதுபோல "தமிழ்நாட்டில்" இருக்கும் அத்தகைய அதிகாரிகள் "கடந்த ஐந்து ஆண்டுகளில் "' அரச குடும்பத்தின் முறைவாசல்களாக "' செயல்பட்டார்கள் எனபதும் உண்மைதான். அதற்காக அந்த அதிகாரிகளுக்கு " அளவுக்கு மீறிய சுதந்திரத்தை" யார் கொடுத்தது? அட்டிஹ்தகைய அதிகாரிகளில் " முதலில் நின்று தவறு செய்பவர்" ராமநாதபுரம் டி.ஐ.ஜி. யாக இருக்கும் " சந்தீப் மிட்டல்" என்றால் அதைவிட ஒருபடி மேலே போய் " தவறு இழைத்தவர்"' தென்மண்டல ஐ.ஜி.யாக இருக்கும் "' ராஜேஷ் தாஸ்". யார் இந்த ராஜேஷ் தாஸ்? இவர்தான் 1996 இல் "தூத்துக்குடியில் இரண்டு மீனவ இளைஞர்களை" தேவையற்று துப்பாக்கி சூடு நடத்தி " படுகொலை" செய்தவர். இவர்தான் தேனியில், டாக்டர் கிரிஷ்ணசாமியை ""பொய் குற்றம் சாட்டி கைது செய்து" அதன் விளைவாக ''தென் தமிழ்நாடு எங்கும கலவரம்" நடக்க காரணமாக இருந்தவர்.


இவையெல்லாமே அன்றைக்கு " உளவுத் துறை" தலைமையில் இருந்த இன்றைய "தமிழ்நாடு காவல்தலைவருக்கு தெரியுமே?"' அவர் எப்படி இவரை "தென்மண்டல ஐ.ஜி.யாக" அனுமதித்தார்? வேறு யாராவது அவரை "சிபாரிசு" செய்திருப்பார்களோ? அதனால் அந்த "ராஜேஷ் தாஸ்" உண்மை முகம் தெரிந்திருந்தும், அவரை "பெறும் அதிகாரிகளால்" தடுக்க முடியவில்லையா? அப்படியானால் அந்த ஆள் "அதற்குள் தென்மாவட்டங்களை கலவர பூமியாக"' ஆக்கி விடுவாரே? இன்று அந்த வேலையைத்தானே" தொடங்கி உள்ளார். அதனால்தான் இந்த "மனிதரை" தென் மாவட்ட ஐ.ஜி. பொறுப்பில் இருந்து "தூக்க வேண்டும்" என்று ''மனித நேய மக்கள் கட்சியி'ன்" சட்டமன்ற கட்சித் தலைவர் பேராசிரியர். ஜவாஹிருல்லா கூறியுள்ளார். இந்த "ராஜேஷ் தாஸ்" யாருக்காக வேலை செய்கிறார்? நிச்சயமாக "தமிழ்நாட்டு மக்களுக்காக "இல்லை.

ஆறு எஸ்.பி.கள் "யாரெல்லாம் ராமநாதபுரம்" பகுதிக்கு " இமானுவேல் சேகரன் நினைவு நிகழ்ச்சி" பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக அனுப்பபட்டார்களோ, அவர்களை அனைவரையும் "உள்துறை செயலாளர்" மூலம் ஜெயலலிதா அரசு " துப்பாக்கி சூடு நடந்த இரவே இடமாற்றம்" செய்தது? தவறு செய்தவர்கள் அவர்கள் என்றால் ஏன் இடமாற்றத்துடன் மட்டுமே நிறுத்திக் கொண்டது? அவர்களில் ஒருவராவது "இடை நீக்கம்" செய்யப்படவில்லையே? அப்படியானால் மக்களை "ஏமாற்றத்தான்" அந்த இடமாற்ற உத்தரவா? சரி. "துப்பாக்கி சூட்டில்" கொலை செய்யப்ப்பட்ட "'தேவந்திர குல வேளாளர் மக்களை' கொலை செய்ததற்காக காவல்துறையினர்" மீது "கொலைகுற்றம்" பதிவு செய்யப்பட வேண்டும் என்று இன்று நடந்த "மதுரை வழக்கறிஞர்களின் ஆர்ப்பாட்டத்தில், வழக்கறிஞர் சங்கத் தலிவர் ஏ.கே.ராமசாமி" பேசியிருக்கிறார். இதையும் தமிழக அரசு "அலட்சியம்" செய்யுமா?

உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதியை வைத்து "விசாரணை" நடத்த வலியுறுத்தி, பல அரசியல் தலைவர்கள் பேசியதையும் அரசு அலட்சியம் செய்யப் போகிறதா? "' டாக்டர் கிருஷ்ணசாமி" சொல்வதுபோல, 1989 ஆமாண்டின் "வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழும், 1995 இன் விதிகளின் படியும்" இறந்தவர்கள் குடும்பத்திற்கு கொடுக்க வேண்டிய "இழப்பீடு தொகையை"' ஏன் அரசு கொடுக்கவில்லை? ஏன் இன்னமும் கமுதியில் கொலை செய்யப்ப்பட்ட "'''மாணவன் பழனிகுமார்" கொலையை "வன்கொடுமை தடுப்பு சட்டத்தில்" சேர்க்க வில்லை? இவை எல்லாம் தெரிந்த உயர் காவல்துறை அதிகாரிகள் இருந்தும் கூட, யார் அவர்களை "தடுக்கிறார்கள்?" இந்த கேள்விகள் தமிழ்நாடெங்கும், "பட்டி, தொட்டி" எங்கும் எடுத்து செல்லப்படவேண்டும்.

Monday, September 12, 2011

அரசை பாதுகாக்கும் அரசாங்கம் "மக்களை" இழந்துவிடும்.

அரசு என்பது ஒரு வன்முறைக் கருவி. அதில் "அதிகாரவர்க்கம்" கோலோச்சும். அரசியல் சட்டத்தின்படி "அதிகாரவர்க்கம்" செயல்படவேண்டும் என்பது "புளித்துப் போன பாலபாடம்". நடக்கும் செயல்கள் "அதிகாரவர்க்கத்தை" அம்பலப்படுத்துகின்றன. அதிகாரவர்க்கம் என்பது "ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளை" தலைமையாக கொண்டது. அவர்களுக்கு "பொதுவாக" மனிதாபிமானம், மனித உரிமை, அடிமட்ட மக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர்களை கொண்டாடுவது, "ஆகியவை "பிடிக்காது. அது அவர்களது "மனோநிலை". அந்த மனோநிலை அவர்களது "வளர்ப்பிலிருந்து" வருகிறது. வளர்ப்பு என்பது "பிறப்பை" தாண்டி அவரவர் "வளரும்" சூழலால் "தீர்மானிக்கப்படுகிறது". இந்தியாவின் அதிகாரிகள், "காடுகளிலும், ஆதிவாசிகள் மத்தியிலும், தலித் மக்கள் கிராமங்களிலும், கடல்வாழ் மீனவர் உடனும்" இணைந்த வாழ்க்கையில் "பயிற்றுவிக்கப்படுவதில்லை". குளிர் சாதன அறைகளிலும், மாட மாளிகைகளிலும், "பயிற்ச்சி" பெறுகிறார்கள். அவர்களுக்கு "இந்திய யதார்த்தங்கள்" தெரியவேண்டிய தேவை இல்லை.

அப்படிப்பட்ட "வருவாய்த்துறை, காவல்த்துறை" அதிகாரிகளை " சுமந்து கொண்டு" அரசு இயந்திரம் நிற்கிறது. பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்படும் "அரசாங்கம்", அதன்மேல் போய் உட்கார்ந்து கொண்டு இருக்கிறது. அதில் இருக்கும் "அரசியல்வாதிகளுக்கு" தாங்கள் உட்கார்ந்திருக்கும் "அரசு இயந்திரம்" மக்களிடமிருந்து "ஆணியப்பட்டவர்களால்" நடத்தப்படுகிறது என்பது தெரியுமா என்பது நம்மக்கு "தெரியாது". அதுபோன்ற "ஒரு சூழல்" இப்போது தமிழ்நாட்டில் "அரங்கேறி" வருகிறது. அதில் ஒரு "சிறிய " உதாரணம் "பரமக்குடி" விவகாரம். "ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்" என்பதைப் போல இந்த உதாரணத்தை வைத்து இந்த அரசு "எங்கே" போய்க் கொண்டிருக்கிறது என்றும் பார்க்கலாம்.

பரமக்குடி இருக்கும் "ராமநாதபுரம்" மாவட்டத்திற்கு "ஒரு காவல்துறை டி.ஐ.ஜி." இருக்கிறார். அவர் பெயர் "சந்தீப் மிட்டல்". அவர் "அழகிரியின்" வணிக பங்காளி என்பது உண்மையாகவும் இருக்கலாம், பொய்யாகவும் இருக்கலாம். ஆனால் அவர் செய்த "சேட்டைகள்" உண்மையாகவே அம்பலப்ப்ட்டுவிட்டன. அவருடன் "இமானுவேல் சேகரன் நினைவு நிகழ்ச்சிக்கு" உதவ "ஆறு ஐ.பி.எஸ். களை" தமிழக அரசாங்கம் நியமிக்கிறது. அதில் சென்னையிலிருந்து சென்ற "அடையாறு டி.சீ." ஏற்கனவே "ராமநாதபுரத்தில் கருணாநிதி ஆட்சியில்" எஸ்.பி.யாக இருந்தவர். அப்போது "தேவேந்திர குல மக்கள்" மீது "போர்" தொடுத்தவர். அதனால்தான் வரை "மன நோயாளி" என்று கிரிஷ்ணாசாமி சட்டமன்றத்தில் உரைத்தார். அப்படிப்பட்டவரை ஏன் இப்போது "பரமக்குடிக்கு" அனுப்பினார்கள்? அரசில் உள்ள எந்த "உயர் அதிகாரியும்" தங்களது சக அதிகாரியை "விட்டுக் கொடுக்க" மாட்டார்கள்.

அவ்வாறு "விட்டுக் கொடுக்காமல்" எடுத்த முடிவுதான் "அந்த ஆறு அதிகாரிகளையும்" அங்கே அனுப்பியது. "சம்பவம்" நடந்த அதாவது "துப்பாக்கி சூடு" நடந்த இரவே ஏன் "அரசாங்கம்" அந்த "ஆறு அதிகாரிகளையும்" இட மாற்றம் செய்யவேண்டும்? அவர்கள் "பிழை" செய்திருப்பதை முதல்வர் உணர்ந்ததால்தானே அபப்டி செய்தார்கள்? பிறகு ஏன் அவர்களை "பாதுகாத்து" சட்டமனரத்தில் ஒரு முதல்வர் "பேசவேண்டும்?". இங்கேதான் "அரசாங்கத்தை" நடத்தும் அரசியல்வாதிகள் "அரசை நடத்தும்" அதிகாரிகளிடம் மாட்டிக் கொண்டு "தவறான" கருத்தை முன்வைத்து, அதில் "மாட்டிக் கொள்கிறார்கள்". இப்படி மாட்டிக் கொண்டால், விரைவில் "மக்களது" கோபத்திற்கு உள்ளாவார்கள்.

அரசு என்பது "ஆதிக்கசாதி சார்பானது" என்கிறாரா முதல்வர்?

பரமக்குடியில் காவலர் துப்பாக்கி சூட்டில் "ஏழுபேர் கொல்லப்பட்டுள்ளனர். அதுபற்றி "சட்டமன்றத்தில்" பேசவேண்டும். புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி வேறு "சட்டமன்றத்திற்குள்" இன்றும் வந்துவிட்டார். கண்டிப்பாக இந்த பிரச்சனை பற்றி "பேசாமல்" விடமாட்டார். அவரை "பேசவிடகூடாது" என் என்றால் அவர் "உண்மைகளை" பேசி விடுவார். உண்மை "கசக்கும்". அதாவது "அந்த வட்டார டி.ஐ.ஜி. யாக இருக்கும் "சந்தீப் மிட்டல்" என்ற திமிர் பிடித்த ஐ.பி.எஸ். அதிகாரி இந்த "'' கலவரத்தை திட்டமிட்டு நடத்தினார் என்ற ஒரு உண்மை இருக்கிறது. அவருக்கு உதவி செய்து வன்முறை களமாக பரமக்குடியை ஆக்கியது 'செந்தில்வேலன் 'என்ற அடையாறிலிருந்து இந்த இமானுவேல் சேகரன் நினைவு நிகழ்ச்சிகாகவே" பரமக்குடிக்கு "அரசாங்கத்தால்" அனுப்பப்பட்ட "'ஒரு தேவேந்திர மக்கள் விரோத' காவல்துறை அதிகாரி.


மேற்கண்ட"உண்மைகளை"'இன்று காலையே வின் காட்சி ஊடகத்தில் நமது நிகழ்ச்சியில் சொல்லியிருந்தோம். ஆனால் அதை "முழுவதும்"மறைக்க காவல்துறையின் அமைச்சரும், முதலமைச்சருமான செல்வி.ஜெயலலிதா சட்டமன்றத்தில் முயன்றுள்ளார் எனபதுதான் வேதனை. யாரையும் 'பேசவிடாமல் தான் மட்டுமே 'பேசுவதற்கு" பயன்படுத்துவதுதான் ''நூற்றுபத்தாவது" பிரிவின்படி சட்டமன்ற உரையாற்றுவது என்று அவர்கள் புரிந்து கொண்டிருப்பார்கள் போலிருகிறது.
இன்று "சட்டமன்றத்தில்" இந்த தேவையற்ற துப்பாக்கிசூடு பற்றியும், அதற்கான காரணம் பற்றியும் விளக்க அறிக்கை கொடுக்க எழுந்திருந்த முதல்வர், " பரமக்குடியில் நடந்த இன மோதலில்" என்று தொடங்க "பரமக்குடி இமானுவேல் நினைவுக்கு" சென்று காவல்துறையால் திருப்பி அனுப்பப்பட்ட டாக்டர் கிரிஷ்ணசாமி, எழுந்து " அது இன மோதல் அல்ல" என்ற உண்மை செய்தியை சொல்லும்போது, அதை போருக்க மாட்டாத பாவை தலைவர் கிரிஷ்ணசாமியை உட்கார சொன்னார். அவைக்குறிப்பிலிருந்து அவரது "சொற்களை" நீக்குவதாக அறிவித்தார்.

அதன்பிறகு மீண்டும் எழுந்து கிரிஷ்ணசாமி உண்மைகளை சொல்லி, " மன நோயாளி எஸ்.பி..செந்தில்வேலனையும், டி.ஐ.ஜி. சந்தீப் மிட்டளையும் கைது செய்ய வேண்டும்" என்று கூறியவுடன் அதையும் "அவைக்குறிப்பில்" இருந்து நீக்கி, கிரிஷ்ணசாமியை உட்காரும்படியும், இல்லாவிடில் அவையிலிருந்து "வெளியேற்றுவேன்" என்றும் பேரவை தலிவர் கூற, கிரிஷ்ணசாமி வெளிநடப்பு செய்துள்ளார். இதிலிருந்து நமக்க ஒன்று உறுதிப்படுகிறது. எல்லோருக்கும் தெரிந்த உண்மை "பரமக்குடியில் காவலர்களுக்கும், தேவேந்த்ரகுல வேளாளருக்கும்" இடையில்தான் மோதல் நடந்தது என்பது. ஆனால் முதல்வருகு மட்டும் " பரமக்குடியில் இன மோதல் நடந்தது" என்று தெரிந்திருகிறது என்றால், "அரசும், தேவேந்திர குல மக்களும் மோதும்போது" அந்த மோதலில், பலியான 'தேவேந்த்ரகுல" மக்களுக்கு எதிராக செயல்பட்ட "அரசு" மற்றொரு "'இனத்தின் கருவி எண்பதை ""அழகுபட" அறிவித்து விட்டார்.

அதனால் இனி நாம் அரசு என்பது எல்லா மக்களுக்கும் "சாதி வேறுபாடு" இல்லாமல் இயங்கும் ஒரு கருவி என்ற "தவறான எண்ணமே" வேண்டாம். குறிப்பாக "த்யமிழக்க அரசு" என்பது இப்போது " தேவேந்த்ரகுல மக்களுக்கு எதிராக ஆதிக்க சாதியினுடையது" என்பதைத்தான் அப்படி முதல்வர் அறிவித்துள்ளார் என்று நாம் எடுத துக்கொள்ளலாமா?" அப்படி எடுத்துக் கொண்டால் ஒடுக்க'ப்பட்ட சமூகம் அரசுக்கு எதிராக போராடி மட்டும்தான் தனது "உரிமைகளை"பெற்றுக் கொள்ள முடியும். அமர்வு நீதிபதியை வைத்து "விசாரணை" செய் என்று எல்லோரும் கேட்கும்போது, ஒய்வு பெற்ற நீதியரசரை" அரசு அறிவித்திருப்பது இன்னொரு பித்தலாட்டம் தானே? அரசே செய்த வன்முறையை" அரசே''விசாரிக்குமா?"' இது மாபெரும் " நகைச்சுவை".

Friday, September 9, 2011

உள்துறை " வண்டிக்கு பின்னால் குதிரையை" கட்டுகிறதே?

குதிரை வண்டியை வைத்தே நமது "கிராமங்களில்" பல "பழமொழி" சொல்வார்கள். ஆங்கிலத்தில் கூட, " கம்பும், கேரெடடும் " என்று ஒரு பழமொழி உண்டு. அதாவது, "குதிரைக்கு" முன்னால் "கேரெட்டை" கட்டிவிட்டு, அதை நோக்கி அந்த குதிரை ஓடிக்கொண்டே இருக்க, தானாகவே அந்த குதிரையில் கட்டியுள்ள வண்டி நகரும்.என்பதுதான் அதன் பொருள். அதை அப்படியே பயன்படுத்தி, ஆங்கிலத்தில் "கம்பும், கேரெட்டும்" கொள்கையை "ஆள்வோர்" பின்பற்றுகிறார்கள் என்பார்கள். அதாவது "ஒருபுறம் அடித்துக் கொண்டே" இன்னொரு புறம் "சலுகை" கொடுப்பது என்று பொருள். அதேபோல "குதிரைக்கு முன்பு வண்டியை கட்டுகிறார்கள்" என்றும் ஒரு பழமொழி உண்டு.

அந்த "பழமொழியை" நமது சிதம்பரத்தின் உள்துறை இப்போது பயன்படுத்துகிறது என்று தெரிகிறது. அதாவது சிதம்பரத்தின் "உள்துறை அமைச்சகம்" மூலம் அவர் முதலில் "அப்சல் குருவிற்கு" மரணதண்டனையை அறிவிக்கும் ஏற்பாட்டை "குடியரசு தலைவர்" மூலம் செய்தார். அடுத்து உடனேயே, "தமிழ்நாட்டில் உள்ள மூவருக்கும்" மரணதண்டனையை உறுதிப் படுத்த ஏற்ட்பாடு செய்தார். அதை அடுத்து "பஞ்சாபில்" உள்ள சீக்கியரான தேவ் புல்லாருக்கு மரன தண்டனை உறுதிப் படுத்தினார். அதில் "தமிழகம்" முதலில் விழித்ஹ்டுக் கொண்டு, "சட்டமன்ற தீர்மானம்" போட்டு "மரண தண்டனையை". குடியரசு தலைவரே "ஆயுள் தண்டனையாக" குறையுங்கள் என்று கேட்டுக் கொண்டது. உடனேயே அதுவே "காஷ்மீர் சட்டமனரத்தில்" வெடித்தது. அது அப்படியே "பஞ்சாபிற்கும்" நீளும். ஜனநாயக ரீதியாக "தனது முடிவுகளுக்கு" எதிர்ப்பு வருவதை சிதம்பரம் விரூம்பவில்லை.

அதன்விளைவே "டில்லி வெடிகுண்டு" வெடித்தது. அவசர, அவசரமாக "ஏற்பாடு "செய்ததநாளோ என்னவோ, இதுவரை "யார்" குண்டு வைத்தார்கள் என்று வெளியே சொல்லமுடியாமல் உள்துறை திணறுகிறது. இதுபோன்ற "வில்லங்கமான " நிலைமைகள் வரும்போதெல்லாம், "காங்கிரஸ் கட்சியில்" எதிர்ப்பு இருந்தாலும், சிதம்பரத்திற்கு "பா.ஜ.க." உதவி செய்வது உண்டு. "அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம்" விசயத்திலும் அதுபோல "நடந்திருகிறது" ஒன்று இந்த டில்லி குண்டுவெடிப்பை 'சிடஹ்ம்பரதிற்கு" உதவும் பொருட்டு, பாஜக கும்பல் வைத்திருக்க வேண்டும். அல்லது 'உள்துறையின்" நேரடி கை இதில் இருக்க வேண்டும் எண்பதை நாம் கடந்த "இரண்டு" கட்டுரைகளில்" தெளிவுபட கூறியிருந்தோம். இப்போது அடுத்த கட்ட "ஊடக பரப்புரையை" சிதம்பரம் அவிழ்த்து விடுகிறார்.

முதலில் "ஹுஜி" அடுத்து "இந்திய முஜாஹுதீன்"> அடுத்து "ஜெய்ஷே முகமது". அடுத்து "லஷ்கர் ஈ தொய்பா". இப்படி எல்லாமே "காஷ்மீர் அமைப்புகள்". ஆகவே "அப்சல் குரு" மீது "தீவிரவாத" முத்திரை குத்தி விடலாம். அடுத்து "தமிழ்நாட்டின் மூன்று தமிழருக்கு" என்ன செய்? என்று சிதம்பரம் சிந்திக்கிறார். இப்போது ஆங்கில ஊடகங்களில் "விடுதலைப் புலிகள்" விசயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று எல்லா மாநிலங்களுக்கும் சொல்லியிருகிராராம். ஆரம்பிச்சுட்டாரா? அவரது வேலையை? அடுத்து "பஞ்சாபின் புல்லாரா" விசயத்திற்கு என்ன செய்? உடனே "பாபர் கல்சா" இயக்கம் மீதும் சண்டேஹ்கம் உள்ளது என்று கிளப்பி விடுகிறார். எல்லாமே "மரண தண்டனை "அறிவிக்கப்பட்டுள்ள கைதிகள் பற்றிய "குற்றப்பத்திரிகை" குற்றச்சாட்டுகள்தான் இப்போது புரிகிறதா? டில்லி குண்டு யார் வைத்தது? எதற்காக வைத்து என்று? எல்லாம் 'சிதம்பர ரக சியம்"தான்.

சரி. மரண தண்டனையை அறிவித்து விட்டு பிறகு இந்த "குண்டுவெடிப்புகள்" பற்றிய "கருத்து குண்டுகளை" போடும் சிதம்பரம் அண்ணாச்சி, உங்களுக்கு "வண்டிக்கு பின்னால் குதிரையை" கட்டுகிறோம் என்பது தெரியவில்லையா?

அண்ணா ஹசாரே "மாயையை " உடைத்த "அருணா ராய்"

அண்ணா ஹசாரே "மாயையை " உடைத்த "அருணா ராய்"
நேற்று "அருணா ராய்" சென்னை வந்தார். முதலில் காலையில் " தேசிய தொழிலாளர் கவுன்சில்" சார்பாக நடந்த "ஊழலை எதிர்த்து போராட" என்ற தலைப்பில் , "ரூத் மனோரமாவும்", சாமியும் ஏற்பாடு செய்த கூட்டத்தில் பேசினார். அதில் முக்கியமாக "ஊழல் என்பது பொருளாதார் ஊழல் மட்டும்தானா?" என்ற கேள்வியை முன்வைத்தார். " அதிகாரத்தை தவறாக பயன்படுத்தலும்" ஊழல்தானே என்று சிந்திக்க வைத்தார். குஜராத்தில் "அதிகாரத்தை பயன்படுத்தி மோடி முஸ்லிம்களை கொலை செய்ததும்" ஊழல்தானே என்றார். "தலித் மற்றும் பழங்குடியினரை அதிகாரத்தின் மூலம் இழிவுபடுத்துவதும்" ஊழல்தானே என்றார். "இட ஒதுக்கீட்டை" அதிகாரம் மூலம் "அப்புறப்படுதினாலும்" ஊழல்தானே என்றார். அரசாங்கம் முன்வைத்த "லோக்பால்" வரை நகலும் "சரியில்லை" என்றார். அதனால்தான் மக்களது எதிர்ப்பு அரசுக்கு எதிராக வந்தது என்றார்.

" சட்டமாவதற்கு முன்பு மக்கள் கருத்தறிவது" என்பது இந்த "ஊழல் தடுப்''பு" சட்டம் ப்வ்விசயத்தில் நடந்துள்ளது "'நல்லது" என்றார். அதைதான் தாங்கள் "தகவல் பெரும் உரிமை சட்டத்திற்காக" செய்தோம் என்றார். அருணா ராய் 1968 இலிருந்து 1974 வரை, ஐ.ஏ.எஸ். ஆக பணியாற்றியவர். அதன்பின் வேலையை தூக்கி எறிந்துவிட்டு, ராஜஸ்தானில் உள்ள " எம்/கே.எஸ்.எஸ்." என்ற " தொழிலாளர்-விவசாயிகள்-போராடும் அமைப்பில்" முழுமையாக பணி செய்தவர். அப்போதுதான் " என்.சீ.பி.ஆர்.ஐ." என்ற "தேசிய தகவல் பெறும் மக்கள் உரிமை பிரச்சாரம்" எனும் அமைப்பில் உருவாக்கி இயக்கினார். அதில் இரணூற்று ஐம்பது௦ உறுப்பினர்கள் இருகிறார்கள். "தகவல் பெரும் உரிமை சட்டம்" கொண்டுவர மூலகாரணமாக இருந்த இவரை, சோனியா காந்தி தனது "தேர்தல் பரப்புரைக்கு" பா.ஜ.க. வை தோற்கடிக்க "மதசார்பற்ற" தன்மை என்ற 'வண்ணத்தை " தக்கவைக்க பயன்படுத்தினார். அதனாலேயே சோனியா தலைமையிலான ' தேசிய ஆலோசனை கவுன்சிலில்" அருணா ராய் முக்கிய இடம் வகித்துள்ளார்.

இப்போது "அரசாங்கம் வைத்துள்ள லோக்பாலுக்கு", அண்ணா ஹசாரே வைக்கும் "ஜன்லோக்பால்" வரை நகல் பெரும் "'இடரை" ஏற்படுத்தியுள்ளது. அந்த நேரம் பார்த்து " தே. த.பெ.ம.உ.பி." முன்வைக்கும் "ஊழல் தடுப்பு வரை நகல்" ஒரு " அப்பாடா" நிலைமையை ஆள்வோருக்கு ஏற்படுத்தி உள்ளது. இதில் '' நீதித்துறையை சுதந்திரமாக செயலபட விடமாட்டீர்களா? என்று இவர் கேட்கிறார். அண்ணா ஹசாரே கும்பலின் "இந்துத்துவா" சாயத்திற்கு "சரியான பதிலடி" கொடுக்கிறார். "நாடாளுமனறத்தை" எப்படி ஓரம்கட்டி, "மக்கள்" என்ற பெயரில் 'மேட்டுக்குடியை மட்டும் "பேஸ் புக்" " ட்விட்டர்" மூலம் திரட்டி, இந்தியாவின் "ஜனநாயக" நெறிமுறைகளை உடைக்கலாம் என்று இவர் கேட்கிறார். "அரசாங்க" அதிகாரிகள் மட்டும்தான் ஊழல் புரிகிறார்களா? என்ற வினாவை எழுப்புகிறார். "'குடிமக்கள்" என்று அன்னா ஹசாரே குழுவினர் கூறுவது, "அடிப்படை மக்களை" சேர்க்கவில்லை'ய' என்று வின்வுகிறார்.

அன்னா ஹசாரே குழுவில்' உள்'ள்' ஐந்துபேர் " மக்கள் பிரதிநிதிகளா?" என்ற கேள்வியை எழுப்புகிறார். நாடாளுமன்ற "நிலைக் குழுவிற்கு" அனைத்து "வரை நகல்களும்" சென்றுள்ளது நல்லது என்கிறார். நிலைக் குழு அதிக "அதிகாரம்" கொண்டது என்கிறார். நிலைக் குழுவில் எல்லா கட்சிகளின் "பிரதிநிதிகளும்" வந்துவிடுவார்கள் என்றார். நாடாளும்னறம் "தவிர்த்து சட்டம் இயற்ற முடியுமா? எனக் கேட்டார். அன்னா ஹசாரே "பாணியை" அனுமதித்து "மேட்டு குடிகளை" தெருவில் திரட்டி, "கொள்கைகளை" தீர்மானிக்க "அனுமதித்தால்" நாளை " மத சார்புள்ள நாடு" என்றும், இட ஒதுக்கீடு வேண்டாம் என்று'ம அந்த மேட்டு குடி கும்பலை" தெருவில் திரட்டியே "'உருவாக்கி விடுவார்கள் என்றார். 'உதித்ராஜ்" என்ற தலித் தலிவர் ஒரு " பஹுஜன் லோக்பால்"'' வரை நகலை வைத்துள்ளார் என்றார்.தலித்,சிறுபான்மை,பெண்கள் ஆதிவாசி"ஆகியோராது "பிரதிநிதிகள் இல்லாத " தயாரிப்பு' குழுவை எப்படி ஏற்பது என்றார். இவரது "வாதங்கள் " பா.ஜ.க.வின் " சாயம்"தான் அண்ணா ஹசாரேவிடம் இருக்கிறது என்பதாக " அம்பலப்படுத்தியது".


எல்லா வரை நகல்களையும் "நிலைக்குழு" ஆய்வு செய்து "'மக்களது கலந்தாலோசனையுடன் " ஒரு சரியான''ஊழல் தடுப்பு வரை நகலை" உருவாக்க வேண்டும் என்றார்அருணாராய்.இது"'தொலைநோக்கில்"இந்திய மக்களுக்கு பயன்படுவதாக "தோற்றம் " அளித்தாலும், உடனடியாக அன்னா ஹசாரேவால் வளர்ந்துவரும் பா.ஜ.க. மாயையை" மட்டுப்படுத்த உதவும். இதுதானே "சோனியா" விரும்புவதும். ஆனாலும் "அடிப்படை மக்களை" ஓரந்தள்ளி "அண்ணா ஹசாரே வாழ்க" என்று முழக்கமிட்ட "அறிவுஜீவிகளுக்கு" ஒரு நல்ல சூடு. சென்னையில் இதுவரை நடந்த " ஐ.ஏ.சீ." என்ற : ஊழல் எதிர்ப்பு இந்தியர்கள்" அமைப்பு "தமிழர்களை" இணைப்பதில் "கவனம்" செலுத்துவதை விட, "மார்வாடிகளை" அரவணைப்பதிலேயே "''கவனம்" செலுத்தியது என்ற உண்மையை நாம் மறக்க முடியாது.அதனால்தான் அவர்கள் சென்னையில் "இந்தியில்" முழக்கம் போட்டு "தனிமைப்பட்டார்கள்".." அன்னா ஹசாரே வாழ்க" என்று முழக்கமிட்டு " ஊழல் எதிர்ப்பை" பின்னமே தள்ளினார்கள் எண்பதை நாம் நினைவுபடுத்தி பார்க்க முடிகிறது.

அதிகமாக ' "பேசுபவர்களை" , செயலிலே ஈடுபட''அருணா ராய்" கேட்டுக் கொண்டார். சிறிய செயலில் கூட ஈடுபடாத "அறிவுஜீவிகள்" பலரும் "அண்ணா ஹசாரே"' பின்னால் திரண்டதை நாம் எண்ணிப் பார்க்க முடிந்தது. அதிர்ச்சி செய்தியாக அருணா ராய் " ஒரு தமிழச்சி" என்பதையும் வெளிப்படுத்தினார். தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்து பிறகு, வடக்கே போய்விட்டதால், "தமிழை"'' சரளமாக பேச மறந்து விட்டவர் என்று தெரிந்தது

டில்லி குழப்பினால், மக்கள் குழம்புவாரா?

நேற்று "டில்லிக்கு" அடுத்த "சான்று" இன்னொரு இணைய அஞ்சல் கிடைத்துள்ளது. இது "வெடி வைத்தது" நாங்கள்தான் என்று "இந்திய முஜாஹுதீன் " என்ற அமைப்பும் ஒரு "இணைய அஞ்சலை" அனுப்பியுள்ளதாக "கொடுக்கப்படும் தகவல்". இந்த "அமைப்பு" பற்றியும் நமது "மத்திய "உளவுத்துறைகள்" ஒவ்வொரு "வெடி விபத்திலும்" கண்டுபிடிக்க முடியாத "கட்டங்களில்" சொல்லிவந்ததுதான் "நமக்கு" தெரியும். "இந்திய முஜாஹுதீன்" என்ற அமைப்பின் செயல்பாடுகளைஆற்றி ஒன்றும் "அறியாது" இருக்கும் நமக்கு, நமது "உளவு துறைகள்" அவ்வப்போது தருகின்ற "புலனாய்வு" தான் புலப்படுத்தியுள்ளது. :ஹுஜி" பற்றியும் நமக்கு "உளவு துறைகள்" சொல்லித்தான் தெரியும். இந்த இஅரண்டு அமைப்புகளையும் "பயங்கரவாத" அமைப்புகள் என்று "திரும்ப, திரும்ப" சொல்லி, உளவு துறைகள் "கவனமாக " கசியவிட்ட செய்திகளை "அப்படியே" அள்ளிக் கொண்டு, ஏடுகளும், காட்சி ஊடகங்களும் "வெளியிட" அதையே "நம்பி" வாழும் அப்பாவி பொதுசனம்தானே நாம்?

இப்போதாவது "செய்திகளுக்கு" இடையில் உள்ள "உண்மைகளை" ஆராய்ச்சி செய்ய முயற்சிக்கலாமா? அதாவது இதுவரை எத்தனையோ "குண்டு வெடிப்புகள்" இந்தியாவில் நடந்தும்கூட, அவற்றில் "பலவற்றை" இன்னமும் "யார் செய்தார்கள்" என்று கண்டுபிடிக்காத நிலைதான் உள்ளது. அதிலும் "முக்கியமாக" டில்லி உயர்நீதிமன்றத்தில், மே மாதம் 25 ஆம் நாள் "நடந்த" குண்டுவெடிப்பு பற்றி இன்னமும் "கண்டுபிடிக்கவில்லை". கண்டுபிடிக்காதது மட்டுமில்லை,அந்த "இடத்தில்" ஒரு "சீ.சீ.டி.வி. கேமெரா " கூட வைக்கவில்லை. "யாரும்" அந்த வெடிப்பில் சாகவில்லை" என்பதுதான் "காரணமா?" அல்லது "தன்களுக்கு" தெரிந்த "சக்திகள்தான்" வைத்தார்கள் என்பது "காரணமா?" அதேபோல இதுவரை ஏன் "டில்லி ஜூம்மா மசூதி" முன்னால் நடந்த ' குண்டுவெடிப்பையும்' , யார் செய்தார்கள் என்று இதுவரை "கபடு பிடிக்கவில்லை". மசூதி முன்னால் நடந்த "குண்டுவெடிப்புக்கு" எந்த "இந்துத்துவா" அமைப்பையும் "குற்றம்" சாட்டாத இந்த "உளவு துறையினர்" எதற்காக "உயர் நீதிமன்ற " குண்டு வெடிப்புக்கு, "அவசர, அவசரமாக" முஸ்லிம் அமைப்புகளின் பெயர்களை "வெளியிடுகிறார்கள்?". அதையும் நமது "ஊடகங்கள்" பெரிதாக விளம்பரப்படுதுகிறார்கள்?

"கண்டுபிடிக்க முடியாத" குண்டு வெடிப்புகளுக்கு "ஹுஜி" அமைப்பையும், "இந்திய முஜாஹுதீன்" அமைப்பையும் "உடனடியாக" குற்றம் சாட்டும் நிலையை "உறவாககும்" உளவு துறையினர், இந்த இரு மைப்புகளையும் "கற்பனையில்" உருவாக்கி வைத்துள்ளனரா? அல்லது இவை இரண்டும் உணமையிலேயே இயங்கி வருகின்றனவா? என்ற கேள்விகூட நமக்கு எழுகிறது. இன்று காலை அந்த "அண்ணாசாலை ஆங்கில ஏடு" ஒரு ஆய்வு கட்டுரையே வெளியிட்டுள்ளது. அதாவது "இந்திய முஜாஹுதீன்" அமைப்பு ஒரு "அரசியல் அறிககையை" வைதுக்கொண்டுள்ளதாம். அதில் அவர்கள் "இந்தியாவில் இயங்கும் நீதிமன்றங்கள், முஸ்லிம்களுக்கு எதிராக தீர்ப்பு" கொடுக்கின்றனர் என்று கூறியுள்ளனராம். அய்யா, அதை சொல்வதற்கு ஏன் "இந்திய முஜாஹுதீன்" வரவேண்டும். முறையாக ஏடுகள் படகும் "யாரும்" இந்த கருத்தைதானே சொல்வார்கள்? அதுமட்டுமின்றி, "முஸ்லிம்களே, இன்னமும் இந்தியாவில் உள்ள ஆர்சியல்வாதிகளையும், நீதிமன்றங்களையும்" நம்பிக் கொண்டு இருக்காதீர்கள் என்று அந்த அறிக்கை கூறுகிறதாம். இதே "கருத்தைதானே" நாம் எல்லோரும் சொல்லிக் கொண்டிருக்கிறோம்? முச்ளிம்குக்கு மட்டுமா, எல்லா ஏழை ம்க்களுக்கும் இதைத்தானே "சொல்லவேண்டி " இருக்கிறது.

அடுத்து இன்று "அங்கில ஏடுகளில்" குற்றம் சாட்டப்படும் "ஹுஜி" அமைப்பு, :ஜைஷே முகமது" என்ற "காஷ்மீர் விடுதலை அமைப்புடன் " தொடர்பு கொண்டு இதை செய்திருக்கலாம் என்ற "சந்தேகத்தை" விதைதிருகிரார்கள். அதேபோல, சந்தேகிக்கப்படும் "ஹுஜி" அமைப்பு, "லஷ்கர் ஈ தொய்பா"வுடன் இணைத்து இந்த "குண்டுவெடிப்பை" செய்திருக்கலாம் என்று "ஒரு சந்தேக குண்டை" போட்டிருகிறார்கள். இதில் "லஷ்கரும், ஜைஷே முகமது"வும் "பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் " என்று இந்திய அரசு கூறும் "விடுதலை பெற்ற காஷ்மீர்" பகுதியில் இருந்து செயல்படும் "காஷ்மீர் விடுதலைக்கான" ஆயுதம் தாங்கிய அமைப்புகள்.அவர்கள் ஏன் "டில்லி உயர் நீதிமன்றத்தில்" குண்டு வைக்க வேண்டும் என்பது ஒரு புரியாத "புதிர்". இவ்வாறு "டில்லி குண்டுவெடிப்பை" எப்படியோ "காஷ்மீர் விட்தளையுடன்" முடிச்சு போட்டு விட்டோம் என்று ஆள்வோர் திருப்தி படலாம். ஆனால் மக்கள் நம்ப வேண்டுமே?

Wednesday, September 7, 2011

ஒருவரை ஒருவர் குற்றம் சாட்ட மீண்டும் டில்லி குண்டு.

ஒருவரை ஒருவர் குற்றம் சாட்ட மீண்டும் டில்லி குண்டு.
நாம் சந்தேகப்பட்டது "பாதி" சரி என்பதுபோல, "நிகழ்வுகள்" நடந்துகொண்டு இருக்கின்றன. இப்போது "ஹுஜி" என்ற அமைப்பு "தான்தான்" வெடிகுண்டு வைத்ததாக ஒரு "இணைய அஞ்சல் " அனுப்பியுள்ளது என்பது ஒரு செய்தி.இந்த "ஹுஜி" அமைப்பு பற்றி நாம் சொல்லியாக வேண்டும். சமீப காலமாக இந்தியாவிற்குள் நடந்த ஒவ்வொரு வெடிகுண்டு விபத்திலும், "கண்டுபிடிக்க முடியவில்லை" என்ற நிலையில் இந்திய உளவுத்துறைகள் கடைசியாக அது "ஹுஜி" அமைப்பின் "கைவரிசை" என்று குற்றம் சாட்டியுள்ளனர். அந்த "ஹுஜி" அமைப்பு என்பது, "ஹர்கத் -உள்-ஜிஹாத் இஸ்லாமி"என்று விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த அமைப்பு "வந்காலதேசதிளிருந்து" இயங்குகிறது என்றும் தொடர்ந்து கூறி வருகிறார்கள். இப்போது வங்காள தேசம் சென்ற தலைமை அமைச்சர் மன்மோகன்சிங், "கைதிகள் பரிமாற்றம்" என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டதால் "பதிக்கப்படும்: இயக்கங்கள் இந்த வெடிகுண்டை வைத்திருப்பார்களா என்ற கேள்வியை நாம் சென்ற "கட்டுரையில்" கேட்டிருந்தோம். அதையொட்டியே அந்த "இணைய அஞ்சல்" அனுப்பியவர்களும் சிந்தித்ததால் அப்படி கூறிவிட்டனரா?

அடுத்து "அப்சல்குரு"வின் மரண தண்டனையை "ஆயுள் தண்டனையாக " குறைக்க "காஷ்மீர்" சட்டமன்றம் "தயார்" ஆகிவரும் நேரத்தில் இந்த "குண்டு" வெடித்துள்ளதால், மரண தண்டனையை "அப்சல் குருவிற்கு" கொடுக்க விரும்பும் "சக்திகள்" இதை செய்திருக்கலாம் என்று நாம் சந்தேகப்பட்டோம். இப்போது அந்த "இணைய அஞ்சல்" உண்மையானதுதானா என்று சோதிப்பதாக இந்தியாவின் "தேசிய ஆய்வு அஜென்சி " தலைவர் கூறியுள்ளார். ஆர்.எஸ்.எஸ். இந்த "குண்டை" வைத்திருந்தால் அதை " ஒரு பயங்கரவாதி" அமைப்பு மேல் போடும் தந்திரத்தை "காங்கிரஸ் சார்பு தேசிய ஆய்வு அஜென்சி" ஏற்றுக் கொள்ளாது. அதுமட்டுமின்றி, எல்லோருக்கும் தெரிந்த பகுத்தறிவு என்ன என்றால், "அப்சல்குரு" வை "தூக்கில் போட" விரும்பும் சக்திகதான் இந்த "குண்டை" வைத்திருக்க முடியும். அதுவும் வந்த "இணைய அஞ்சல்" அப்சல் குருவை தூகிலட்க் கூடாது என்று எழுதியுள்ளதாம். இந்த "கதையை" நம்ப இதியாவில் மட்டுமல்ல உலகிலேயே எந்த "முட்டாளும்" இன்று இல்லை. ஏன் என்றால் அப்சல்குருவிற்கு "தூக்கு" போடுவதை எதிர்த்து, சட்ட ரீதியாக, ஜனநாயக ரீதியாக ஒரு "சட்டமன்றமே" தயார் ஆகும்போது, யாராவது "மடையன்" ஒரு குண்டை போட்டு அதை கெடுப்பானா? அதனால் "ஹுஜி" ஒன்று இயங்குவது உண்மையாக் ஐருந்தாலும் அவர்கள் இந்த "நேரத்தில்" இந்த குண்டை போட மாட்டார்கள்.

அடுத்து மாட்டுபவர் "சிதம்பரம்"தான். அவர்தான் "உள்துறை". அவரது உளவுத்துறை என்ன வேலை செய்கிறது என்று கேள்வி எழுந்துள்ளது. அவர் தனது "உள்துறை டில்லி காவலருக்கு: ஜூலையிலேயே இப்படி ஒன்று நடக்கும் என்று கூறிவிட்டோம் என்கிறது. அப்படியானால் இவர்களுக்கு தெரிந்துதான் இது நடந்துள்ளது. அப்புறமும் ஏன் 'டில்லி இயற்நீதிமன்றத்தில்" கேமராக்கள் பொருத்தவில்லை என்று அடுத்த் அக்கேள்வி எழுந்துள்ளது. அதற்கு பொறுத்த திட்டம் உள்ளது என்கிறார்கள். அப்படியானால் "இந்த குண்டை" முதலில் வைத்துவிட்டு, பிறகு "கெமர" பொருத்தலாம் என்று இருந்தார்களா? அப்படியானால் "குண்டு" வைத்தவர்களும், "கேமரா" போருத்தவேண்டியவர்களும் ஒரே இடதிளிருந்துய் "இயங்குபவர்களா?" அப்பப்பா, இந்தியாவினின் "தலைநகரில்" உள்ள "பார்ப்பனீய சக்திகளின்" கைவண்ணங்கள் "தலையை" சுற்றுகின்றன.

காஞ்சியில் பரபரப்பை ஏற்படுத்திய "சுவரொட்டி".

காஞ்சியில் பரபரப்பை ஏற்படுத்திய "சுவரொட்டி".
தினமலரின் "திருகு தாளத்திற்கு" பதில் கொடுக்க, காஞ்சியில் "இந்திய மக்கள் முன்னணி", : நாட்டுப் பற்றாளர் கழகம்", "அம்பேத்கர் பாசறை" ஆகிய மைப்புகள் இணைந்து ஒரு "சுவரொட்டியை" இன்று காலை ஒட்டி இருக்கிறார்கள். அதில் " கொலைகாரர்களான ஜெயேந்திரன், சுப்பிரமனியாசாமி, சந்திராசாமி, ஆகியோருக்கு "தூக்கு தண்டனையை " நிறைவேற்ற, தினமலரே, துக்ளக் சோவே, குரல் கொடுப்பீர்களா?" என்று அச்சிடப்பட்டுள்ளது. இது உண்மையை உலகுக்கு சொல்வதாக இருக்கிறது. இதற்கு பிறகு, தினமலர் தனது "கொச்சை" கட்டுரையை இணைய தளத்திலிருந்து நீக்கி விட்டதாக ஒரு செய்தி வந்துள்ளது.

டில்லி வெடிகுண்டு ஆர்.எஸ்.எஸ். வைத்ததா?

சமீபத்திய நடவடிக்கைகள், உதாரணமாக அது "சீ.பி.ஐ. சோதனையாக இருக்கட்டும், சீ.பி.ஐ. கைதாக இருக்கட்டும், குண்டு வெடிப்பாக இருக்கட்டும், அதற்கான கைதாக இருக்கட்டும், உள்துறை செயலாக இருக்கட்டும், குடியரசு தலைவரின் கருணை நிராகரிப்பாக இருக்கட்டும்" எல்லாமே "ஏதாவதொரு அரசியல் காரணங்களுகாக" செயப்படும் செயல்கள் என்பது அம்பலமாகி வருகிறது. ஒன்று "அரசியல் கட்சிகளுக்குள்" அல்லது "ஆளும் கட்சியின் கோஷ்டிகளுக்குள்", அல்லது "மாநில ஆட்சிகளுக்கு" எதிராக, அல்லது "அண்டை நாட்டுக்கு" எதிராக என்பதாக அம்பலப்பட்டு வருகிறது. இதில் இன்றைய டில்லி வெடிகுண்டு வெடிப்பு எந்த " ரகத்தை" சேர்ந்தது?" என்பதே கேள்வி.

உச்சநீதிமன்றத்தில் வெடிகுண்டு வெடித்து பத்துக்கு மேற்பட்டோர் பலி என்ற செய்தி நிச்சயமாக அதிர்ச்சி தருகிறது. டில்லி இப்போது " ஐக்கிய அசாம் விடுதலை முன்னனி" என்ற "தடை" விதிக்கப்பட்ட புரட்சிகர அமைப்புடன் பேசிக்கொண்டிருக்கிறது. அதாவது "பேச்சுவார்த்தை" நடத்திக் கொண்டிருகிறது. அதற்கு "குந்தகம்" விளைவதுபோல டில்லியின் கரங்களில் உள்ள " இரண்டு உளவுத்துறைகளும்" வெடி வைக்கும் வேளையில் இறங்குவார்களா? என்பது சந்தேகத்தை கொடுகிறது. அந்த குறிப்பிட்ட பேச்சுவார்த்தையில் "கலந்துகொள்ளாத" தலைமறைவு அமைப்புகள் இதை செய்திருப்பார்களா? உல்பா வுடனான பேச்சுவார்த்தையை உடைக்க இப்படி செய்வார்களா? என்றால் அதற்கு அதிக " நியாயம்" இல்லை. அதேசமயம் வங்காள தேசம் சென்ற தலைமை அமைச்சர் மன்மோகன் சிங் " கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தில்" கைஎழுதிட்டிருகிறார். இது "வட கிழக்கில்" உள்ள அணைத்து "தலைமறைவு ஆயுதம் தாங்கிய" அமைப்புகளையும் "நெருக்கடிக்குள்" தள்ளும் முயற்சி. அதனால் அவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இப்படி செய்திருப்பார்களா? என்றால் அதற்கும் அதிக "நியாயம்" இல்லை. ஏன் என்றால் "ஒவ்வொரு" அமைப்பாக பேச்சுவார்த்தை நடத்த டில்லி "தயார்" என்ற் அறிவிததிருகிறது.

அப்படியே இருந்தாலும் "வட கிழக்கின்" எந்த ஒரு அமைப்பும் அவர்கள் பகுதியில்தான் இப்படி "வெடிக்கும்" வேலையை செய்வார்கள். அப்படியானால் "யாருக்கு மேற்கண்ட பேச்சுவார்த்தையால்" அதிக கோபம்? அது "இந்துத்துவா" அமைப்புகளுகுதான். ஏன் என்றால் அவர்கள்தான் சமீப காலமாக "வட கிழக்கில்" மீன் பிடிக்க நுழைந்தவர்கள். அதுமட்டுமின்றி, " காஷ்மீர்" இப்போது பற்றி எரிகிறது. "அப்சல்குரு" வின் நியாயங்கள் எதிரகட்சியான "மக்கள் ஜனநாயக கட்சி" தலைமையான "மக்பூபால்" பேசபடுகிறது. சட்டமன்ற தீர்மானம் வரை "அப்சல் குருவை" காப்பாற்ற பரிசீலிகப்படுகிறது. இதை "அதிகம்" விரும்பாதவர்கள் "இந்துத்துவா" வாதிகள். அரசியல் ரீதியில் விரும்பாதவர் இந்த "மரண தண்டனைகளை" நிறைவேற்ற துடிக்கும் "சிதம்பரம்". இந்த இருவரில் யாரோ இப்படி "டில்லியில் குண்டுவைத்து" இந்திய மக்களின் மனப்போக்கையே திருப்பிவிட முயற்சிக்கலாம்.

அதன்மூலம் "பயங்கரவாதிகளை" தூக்கில் போடவேண்டும் என்ற "கிளிப்பிள்ளை" படத்தை திரும்ப படிக்கலாம். அல்லது "பயங்கரவாதிகளுடன்" பேச்சுவார்த்தை வேண்டாம் என்ற "கிளிப்பிள்ளை" பாடத்தை திரும்ப படிக்கலாம். பொறுத்திருந்து பாப்போம். யார் மீது ஆள்வோர் குற்றத்தை சுமத்துகிறார்கள் என்று.

நீதி கேட்கும் இரண்டாம் வகை காங்கிரஸ்காரங்க...?'?

இன்று சென்னை ஊடகவியலாளர்கள் மத்தியில், இரண்டு காங்கிரச்கார்ர்கள் ஏற்பாட்டில், ராஜீவ்காந்தியுடன் கொல்லப்பட்ட இரண்டு காங்கிரஸ்காரர்களின் "பிள்ளைகளை" கொண்டுவந்து நிறுத்தினார்கள். அவர்களும் "எங்களுக்கு நீதி வேண்டும்" என்று சொல்லிக்கொடுத்த வாய்ப்பாட்டை " கிளிப்பிள்ளை" போல உச்சரித்தனர். நமது ஊடகவியலாளர்கள் அத்துடன் "திருப்தி" அடையவில்லை. அவர்களிடம் சில கேள்விகளை "தனியாக" கேட்டபோது, "பல விசயங்கள்" வெட்டவெளிச்சமாகி உள்ளன.

அதாவது இத்தனை நாள் அல்லது இத்தனை ஆண்டுகள் "எங்கே போயிருந்தீர்கள்?" என்ற கேள்விக்கு, "பத்தொன்பது" ஆண்டுகளாக "காங்கிரஸ்" தலைமையிடம் "எங்களுக்கு நீதி வேண்டும்" என்று முறையிட்டு வ்ந்தோம்.என்கிறார்கள். அந்த "பலியான" குடும்பங்களுக்கு " இருபது ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் தலைமை ஒரு அரசு வேலை கூட போட்டுக் கொடுக்கவில்லை" என்ற குமுறலை வெளிப்படுத்தினார்கள். வழக்கமாக இதுபோன்ற விபத்துகளில் மரணம் அடைந்தவர் "குடும்பத்திற்கு" அவர்களது "வாரிசுகளுக்கு" அரசு வேலை கொடுத்து, "ஆற்றுப்படுத்தல்"' செய்வார்களே? ஏன் இவர்கள் விசயத்தில் செய்யவில்லை?

ராஜீவ் காந்தி கொலையால் "லாபம்" பெற்ற நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் கட்சி, அவ்வாறு "நன்றி" அறிவிக்கும் செயலை செய்ய விரும்பவில்லையா? ராஜீவ் கொலைக்கு காரணமான, அமெரிக்காவும், அவர்களது அடிவருடியான "சுப்பிரமணிய சாமியும், சந்திராசாமியும்" தியாகியாக ஆகிவிட்ட "தமிழ்நாட்டு" காங்கிரச்காரர்களுக்கு, நன்றி தெரிவிக்கும் முகமாக அவர்களது "வாரிசுகளுக்கு" அரசு வேலை தருவதை "தடை"செய்தார்களா?" அல்லது ராஜீவ் கொலைக்கு பின்னாலிருந்து ஏற்பாடு செய்த "காங்கிரஸ் பணிக்' குழு" வின் அலுவலக செயலாளராக அந்த நேரத்தில் இருந்த ஆந்திராவை சேர்ந்த "கல்யாண ராவ்" என்பவர் " உடன் சென்ற காங்கிரஸ்காரர்கள் "தியாகிகள்" ஆனதை "பதிவு" செய்ய விரும்பாததால்,அவர்களதுகுடும்பங்களை ''அனாதையாக நடுத்தெருவில் விட்டுவிட்டார்களா?

அல்லது "தமிழ்நாட்டு காங்கிரஸ் தலைவர்கள்" யாரும் ராஜீவ் உடன் "கொல்லப்படவோ" அல்லது "காயம்படவோ" இல்லையே என்ற "கருத்து"' மக்கள் மத்தியில் "அம்பலமாகிவிடக்கூடாதே" என்பதற்காக உண்மையில் இறந்த "'''தியாகிகள் பற்றிய செய்தியை "மறக்கடிக்க" அவர்களது "''வாரிசுகளை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார்களா? இறந்த "காங்கி'ர'ஸ்காரர்கள்" குடும்பத்தில் உள்ள வாரிசுகள், ''கோபத்தில்"' தலைவர்களைப் பார்த்து, " நீங்கள் மட்டும் எப்படி தப்பித்தீர்கள்?' என்று கேட்டுவிடுவார்கள் என்பதற்காக அந்த " வாரிசுகளை" இத்தினை ஆண்டுகளும் " கண்டுகொள்ளாமல்" விட்டார்களா? அல்லது அதில் சில " வாரிசுகள்" அந்த நேரத்திலேயே அப்படி கேள்விகளை கேட்டுவிட்டதால், அவர்களை " நடுத்தெருவில்" விட்டார்களா?

அப்படியானால் தெருவில் இறங்கி " மூன்று தமிழர் உயிர்காப்பு " என்று போராடும் தமிழர்கள், " ராஜீவ் கொலையில் செத்துப்போனவர் எல்லாம் போலீஸ்காரன். எங்கே போனான் காங்கிரஸ்காரன்?" என்று கேள்வி முழக்கம் எழுப்புகிறார்களே? அதில் உள்ள "சூட்சுமம்" இப்போதுதானே புரிகிறது. அப்படியானால் காங்கிரஸ் கட்சியில் "இரண்டுரகம்" இருக்கிறார்கள். ஒன்று "உயிர் தியாகம் செய்து நடுத்தெருவில் " நிற்பவர்கள். இரண்டாவது " சதி செயல் தெரிந்து உயிரை காப்பாற்றிக் கொள்ள" ஓட்டம் பிடித்தவர்கள்.

இதில் இரண்டாவது ரகம்காரர்கள், முதல் ரகம்காரர்களின் ''வாரிசுகளுக்கு" பட்டை நாமம் போட்டுவிட்டு, இப்போது அவர்களை ''தங்கள் துருப்பு சீட்டுகளாக" பயன்படுத்துகிறார்கள். இவையெல்லாமே "அரசியல் காரணங்களுகாக" மூன்று பேர் தூக்கை ''துரிதப்படுததும்" சிதம்பரத்தின் " சித்து விளையாட்டுகள்".

Tuesday, September 6, 2011

சம்பூர் அனல்மின் நிலையம் இந்திய அரசுக்கு கொடுக்கப்படும் லஞ்சமா?

இந்திய அரசும், அதன் கார்பரேட் முதலாளிகளும், "சீனாவிற்கு" இலங்கை சந்தையில் "முதல் பங்கா?" என்றும், " எங்களுக்கு கிடையாதா?" என்றும் சர்ச்சையை கிளப்பி வரும் காலத்தில், திருகோணமலை மாவட்டத்தில், முதூர் பகுதியில், "சம்பூர்" என்ற இடத்தில், இந்திய அரசுக்கு "அனல்மின் நிலையம்" கட்ட இலங்கை அரசத்தலைவர் மஹிந்த ராஜபக்சே ஒப்புக்கொண்டிருந்தார். அதுபோல ஒப்புக்கொண்டிருந்த பல ஒப்பந்தங்களை மகிந்தா அரசு செய்யவில்லை என்ற "வருத்தம்" டில்லிகாரர்களுக்கு தொடர்ந்து இருந்து வருகிறது. உதாரணமாக ௫௦௦௦௦ வீடுகளை "தமிழர் பகுதிகளில்" மீள் குடியேற்றத்திற்காக "கட்டித்தர" இந்திய அரசு சொல்லியிருந்தது. அதற்காக மன்னார்,திருகோணமலை, யாழ்பாணம், வவுனியா, கிளிநொச்சி, மாவட்டங்களில் ஒவ்வொன்றிலும் "ஆயிரம்" வீடுகளை கட்டுவதற்கான "இடங்களை" இலங்கை அரசின் அந்தந்த மாவட்ட " அரசு பிரதிநிதிகள்" { govt .agents } அடையாளம் காட்டியிருந்தார்கள். அந்த இடங்கள் "காடுகளாக" இருந்க்கின்றன. வீடு கட்டித்தரும் நிறுவனம் அவற்றை " கண்ணிவெடிகள் "அப்புறப்படுத்தும் பணிகளை செய்துதான் வேலைகளை ஆரம்பிக்க முடியும். ஆனாலும் அதை செய்வதற்கான ஒப்பந்தத்தை "தனது அரசு" மூலம்ற்ற்ஹான் செய்யவேண்டும் என்று ராகபக்சே ".பிடிவாதமாக" இருப்பதால் இதுவரை இந்திய அரசால் தொடங்க முடியவில்லை.

இப்படி "சூழலில்" இப்போது அவசர அவசரமாக எதற்காக ராகபக்சே அரசு "சம்பூர்" அனல்மின் நிலையத்திற்கு இந்திய அரசுடன் "ஒப்பந்தம்" போடுகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. வருகிற செப்டம்பர் 12 ஆம் நாள் முதல் அதாவது 13 ஆம் நாள் தொடங்கி, 30 ஆம் நாள் வரை, அரசு சாரா நிறுவங்களும், மேற்கத்தியத் அரசுகளும் "ஐ.நா. மனித உரிமை கவுன்சில்" முன்பு "இலங்கை அரசின்" தமிழினப் படுகொலையில் நடந்த " போர் குற்றங்களை" விசாரிக்க தொடங்குவார்கள் என்ற செய்திதான், ராஜபக்சேவை, இந்திய அரசிடம் " கெஞ்சியாவது" அவர்கள் உதவியுடன் மீண்டும் "ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில்" தங்கள் "தொலை" பாதுகாத்துக் கொள்ளலாம் என்று எண்ணுவது தெரிகிறது. அதனால் இந்த "சம்பூர்" அனல்மின் நிலையம் என்பது இந்திய அரசுக்கு இலங்கை அரசால் கொடுக்கப்படும் "லஞ்சம்" என்றே கொள்ளவேண்டும்.

இந்த லஞ்சத்தை பெறுகின்ற இந்திய அரசு இதன்மூலம், "திருகொனமாய் மூதூர்" பகுதி மக்களின் " மீள் குடியேற்றத்தை" நிராகரிகிறார்கள். அடுத்து "தமிழ்நாடு அரசின் சட்டமன்ற தீர்மானமான இலங்கைக்கு பொருளாதார தடை" என்ற கொள்கையை எதிர்த்து "தமிழ் நாட்டு மாக்களின் உணர்வுகல்க்கும், விருப்பத்திற்கும்" எதிராக மத்திய அரசு செயல்படுவதை படம் பிடித்து காட்டுகிறது.

Monday, September 5, 2011

கொலைகாரனின் அடிவருடி, தியாகியை கொச்சைப்படுத்துவதா?

காஞ்சியில் இருக்கும் "சங்கர மேடம்" 180 ௦ ஆண்டுகளுக்கு முன்புதான் கும்பகோனத்திளிருந்து கஞ்சிக்கு மாறியது. அதை "சிருங்கேரியின்" ஆதிசங்கரர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கியதாக "காஞ்சி மடத்தார்" கதை கட்டினார்கள். இது சிருங்கேரி ஆதரவாளர்கள் காஞ்சியின் மீது கூறும் "குற்றச்சாட்டு"> இது "பார்ப்பனர்களுக்குள்" உள்ள "மோதல்" நமக்கு தேவையில்லைதான். ஆனால் "பார்ப்பனர்களுக்குள்" நடக்கும் மோதல், சமூகத்தில் "பதிப்பை" ஏற்படுத்தும் போது நாம் "கைகட்டி, வாய் பொத்தி" இருக்க முடியாது. அதேபோல சென்ற முறை அதிமுக ஆட்சியில், காஞ்சியில் "சங்கர ராமன் ஐயர்" வரதராஜ பெருமாள் கோவில் வளாகத்திலேயே, அலுவலக அறையில் "படுகொலை" செய்யப்பட்டார். " பார்ப்பனீயம்" அப்பழுக்கற்றது என்று "தவறாக" சனக ராமன் நம்பியதால், "ஜெயேந்திர சரஸ்வதி" என்று முகமூடி பெயர் இட்டுக்கொண்ட "குற்றவாளி" சுப்பிரமணிக்கு "தொடர் கடிதங்கள்" எழுதி, அவனை திருத்த முயற்சித்தார்.

"குற்றவாளி" ஜெயேந்திரன், ஏற்கனவே "கொலை, கொள்ளை" விவகாரங்களில் "கரை கண்டவன்". சனகர ராமன் எழுதிய "கடிதங்களை" கண்டு வெகுண்டெழுந்து, அவனை கொள்ள திட்டமிட்டான். ஆந்திராவின் "நெல்லூர்" சண்டியன் "கிருஷ்ணசாமி" சென்னையில் "அப்பு" என்ற் அச்பெயரில் நடமாடி வந்தான். அதைவிட "கட்டை பஞ்சாயத்துகளை" பெரிய அளவில் அண்டத்தி வந்தான். ஆந்திராவை சேர்ந்த " வீராசாமி" என்ற "ஆற்காட்டார்" அவனுக்கு அடிக்கலாம். முதலில் "ராஜாத்தி வீட்டில்" அப்புவுக்கு தனியறை. அந்த அப்புவை வைத்து "சங்கர ராமனை" படுகொலை செய்ததற்காக " ஜெயேந்திரன்" ஆந்திராவில் கைது செய்யப்பட்டான். இரவு "இரண்டு மணிக்கு" ஊடகவியலாளர்கள் "சென்னை விமான நிலையத்திலிருந்து" தொலை பேசி "சுப்பிரமணியை" கைது செய்து "அழைத்து வருவதை" கூற, உடனேயே, "காஞ்சி மக்கள் மன்றத்திற்கு" செய்தி கொடுத்து, அவர்களை "இரவே" நீதிமன்றத்திற்கு வரவழைத்து " கொலையாளி கைதை" கொண்டாட அழைத்தோம்.

இரவு நாலு மணிக்கு 'கொலைகார சங்கரனை" காவலர்கள் நீதிமன்றம் கொண்டுவரும்போது, இன்றைய தியாகி "செங்கொடி" உட்பட "மக்கள் மன்றத்தினர்" பரகளுடன் நின்று, " கொலைகார சங்கராச்சாரி ஒழிக" என்ற முழக்கத்துடன், வரவேற்றார்கள். அந்த "வெறுப்பில்" நேரம் பார்த்துக்கொண்டிருந்தனர் "கொலைகார சங்கரன்" கும்பல். அடுத்த "வழக்கு நாளில்" கொலைகார சங்கரன் நீதிமன்றம் வரும்போது, மக்கள் மன்றம் தயார் செய்த " ரத்தம் சொட்டும் கத்தியுடன் கொலைகாரன் சுப்பிரமணி" இருக்கும் "ஓவியம்" ஒன்றை பெரிய அளவில் "மக்கள் மன்றத்தினர்" நீதிமன்றத்தில் வைத்தனர். அவற்றை கண்டு ஆத்திரமடைந்த "சங்கராச்சாரி கும்பல்" பழிவாங்க துடித்துக் கொண்டு இருந்தது. இப்போது தனது "மூன்று சகோதரர்களை" தூக்கு தனடனையிளிருந்து விடுதலை செய்ய கேட்டு, "தீக்குளித்த" இளம் தோழர் 'செங்கொடியின்" நிகழ்வில் தங்கள் பழிவாங்கும் நடவடிக்கையை "சங்கராச்சாரியின் அடிவருடி" தினமலர் ரமேஷ் காட்டியுள்ளான்.

தமிழர்களுகாக மட்டுமின்றி, மானுடத்திர்காக "தன்னையே தியாகம் செய்த ஒரு செங்கொடியை" தினமலர் "காதல் தோல்வியால் செங்கொடிகள் தீக்குளிக்கலாம்" என்று எழுதியது, அவனது மனதில் இருக்கும் "ரத்தவெரியையே" காட்டுகிறது. அவனது "பழிவாங்கும்"போக்கையே பதிவு செய்கிறது. ஆகவே தமிழர்கள் மட்டுமல்ல, ஒவ்வொரு மானுடனும் இந்த "மனித இனத்தின்" எதிரிகளுக்கு "தக்க பாடம்" கற்றுத் தருவதை தங்கள் வாழ்க்கையின் முக்கியப்படியாக எடுத்துக் கொள்ளாவிடில், இந்த "இனத் துரோகிகளின்" கையால் என்று பொருள்படும். இன்றல்ல, நாளையல்ல, ஒவ்வொரு நாளும் இந்த எதிரிகளை " பழிபோடும்" நாட்களாக ஒவ்வொரு சொரணை உள்ள மானுடனும் கொள்ளவேண்டும்.

தினமலர் ரமேஷ் என்ற அந்த பேர்வழி, " ஏற்கனவே ஒரு பெண் ஊழியர்" பாலியல் தொல்லை செய்ததாக குற்றம் சாட்டி, புகார் கொடுத்தபோது, "காவலருக்கு பயந்து ஓடிபோய்விட்ட" மிருகம். அதேபோல "கலங்கரை விளக்கு" பகுதியில் "பூ விற்கும் சிறுமிகளிடம்" எப்போதும் பாலியல் தொந்திரவு செய்பவன் என்ற புகார்கள் வருகின்றன.

Saturday, September 3, 2011

பிணவறையில் சிறுமி, மனச்சிறையில் நம்மவர்.


அந்த அகஸ்ட் 28 ஆம் நாள் இரவில், இயக்குனர் தாமிரா வாகனத்தில், காஞ்சி அரசு மருத்துவமனை வளாகம் சென்ற உடனேயே, மகேஷ், ஜெசி, மகா,மேகலா மற்றும் மக்கள் மன்ற தோழர்கள், தரையில் அமர்ந்திருக்க, மகேஷ் "ஓவென" அழ, அந்த சூழலை மீண்டும் எண்ணிப்பார்க்க முடியாதபடி, என்னை முற்றுகையிட்டது. அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சோமசுந்தரம், மாலையுடன் வந்து அமைதியாக "அஞ்சலி" செலுத்தி சென்றார். திமுகவின் மாவட்ட செயலாளரும், முன்னால் அமைச்சருமான தா.பொ.அன்பரசு, ஒரு கூட்டத்துடன் மாலைகளை எடுத்துக் கொண்டு "முழக்கம்" இட்டபடியே "கேமராக்கள்" புடை சூழ வந்தார். ஊடகங்களுக்கு நேர்காணல் த்தார். அதில் தலைவர் கலிஞர் கூறியதால் வந்ததாக கூறினார். ஓஹோ, இதுதான் அரசியலா என்று நமக்கும் புரிவதுபோல இருந்தது.

பிணவறையில் இருந்து வெளியே வந்த மருத்துவமனை ஊழியர்கள், மகேஷ், செடியை தேடினார்கள். "செங்கொடியின்" உடலை "குளிர் சாதன அறையிலிருந்து" வெளியே எடுத்து "பார்வைக்காக" வைக்கிறோம், வந்து பாருங்கள் என்றனர். மருத்துவமனை ஊழியர்கள் குறிப்பாக "அடிமட்டத்து ஊழியர்கள்" மக்கள் மன்றத்தினர் அனைவரையும் அறிந்தே வைத்திருந்தனர். தொடர்ந்து அடிப்படை மக்களுக்காக போராடும் மக்கள் மன்றத்தினர் மீது "மரியாதை" வைத்திருந்தனர். சென்கொடையும் தெரிந்தே இருந்தனர். அதனால் வழமையாக "அரசு மருத்துவமனையில்" வருகின்ற எந்த ஒரு "தொந்தரவும்" இந்த உணமையான " சமூகப் போராளிகளுக்கு" வரவில்லை பிணவறைக்குள் சென்று "செங்கொடி உடலை" பார்க்கும் மனோ நிலையில் "மகேஷ்" இல்லை. நாங்கள் பார்க்க புறப்பட்டோம். "ஜெசியை" போகவிடவேண்டாம் என்று "மகேஷ்" என்னிடம் கேட்டுக்கொண்டார். "ஜெசியாலும்" தாங்கமுடியாது என்பதே அவரது வாதம். ஜெசி கேட்கவில்லை. "ஜெசி, மகா, மேகலா" யாரையும் என்னால் தடுக்க முடியவில்லை. அவர்களும் உள்ளே வந்து பார்த்தனர்.


செங்கொடி உடல் எல்லாம் " எரிந்து" ஒவ்வொரு அங்குலமும் "கருத்து வெடித்து" காணப்பட்டது. உடலில் ஒரு இடம் கூட விடாமல் "பெட்ரோலை" ஊற்றிக் கொண்டுள்ளார். "தப்பித் தவறி" கூட தான் பிழைத்துவிடக்கொடாது என்பதாக அந்த "செய்கை" நமக்கு காட்டியது. தனது "திட்டத்தை" நிறைவேற்றுவதில் "அத்தனை திண்ணம்" அவரிடம் இருந்திருக்கிறது. இந்த சிறு வயதில் இப்படி ஒரு "அழுத்தம்". அதனால்தான் இன்று உலகெங்கும் அவள் "உயர்ந்து" நிற்கிறாள். அவளிடம் இருந்த "திட்டமோ" அதற்கான "வழிமுறையோ", அதை "நிறைவேற்றுவதில்" இருந்த "அழுத்தமோ" நம்மிடம் யொருக்கிறதா? என்ற கேள்விதான் எழுந்தது. அப்படியாக சில "விவாதங்கள்" அங்கே வந்தன. என்னுடன் சென்னையிலிருந்து வந்திருந்த நண்பர்கள் மத்தியிலிருந்து வந்த "கேள்விகள்" அதைதெளிவுபடுத்தின.

செங்கொடி உடலை சென்னை கொண்டு செல்ல வேண்டும் என்று அந்த நண்பர்கள் கூறினர். மக்கள் மன்றம் எப்படி முடிவு செய்கிறதோ அதன்படிதான் செய்யமுடியும் என்றது ஏன் வாதம். மக்கள் மன்றத்தைமதிக்கிறோம், அனால் சென்னை எடுத்து செல்வது மட்டும்தான் "பெரும எழுச்சியை" ஏற்படுத்த உதவும் என்பது வர்களது வாதம். நான் 1972 இல் பாளையம்கோட்டையில் நடந்த ஒரு சம்பவத்தை அவர்களிடம் நினைவு கூறினேன். அது லூர்துனாதன் என்ற சேவியர் கல்லூரி மாணவன் ஒரு மாணவர் போராட்டத்தில், காவல்துறையின் தொடர் "தடியடிக்கு" ஓடியபோது, " தாமிரபரணி" ஆற்றில் விழுந்து "சுழலில்" சிக்கி மரணமடைந்ததையும், அவரது "உடலை" நாங்கள் எடுத்து செல்லும்போது நடந்த சம்பவத்தையும் நினைவு கூற என்னை நிர்ப்பந்தித்தது. அப்போது உங்களுடன், "கவிஞர் கலாப்ப்ரியா" நண்பராக இருந்தாரா என்று வினவிய ஒரு இணை இயக்குனரிடம், "ஆமாம், கலாப்ரியாவும், நானும்" அந்த உடலை மாணவர்களுடன் இணைந்து "இரண்டாயிரம் பேர்" பேரணியாக எடுத்து சென்றோம் என்றேன். "கொக்கிரகுலத்திளிருந்து, பாளையம்கோட்டை வரை" நாங்கள் அந்த லூர்துனாதன் உடலை எடுத்து சென்றோம். காவல்துரைஎந்கலிடம் "உடலை கொடுத்துவிடும்படி" ஒலிபெருக்கி மூலம் எச்சரித்தனர். சிறுமி செங்கொடி போல, அன்று நாங்கள் " புரட்ச்கர் " கருத்தியலில் கொண்ட அழுத்தத்துடன், " காவல்துறையை" லட்சியம் செய்யாமல் "தொடர்ந்து" எடுத்து சென்றோம். "கற்களால்" ஒவ்வொரு தெரு முக்கிலும் காவலர்கள் எங்கள் "லூர்துனாதன் உடலின் ஊர்வலத்தின் " மீது தாக்குதல் நடத்தி, மாணவர்களும், இளைஞர்களும், கலைய, கலைய கடைசியாக "உடலை" கைப்பற்றிவிட்டனர். அதையும் எதிர்த்தபோதுதான் "துப்பாக்கி சூடு" நடத்தினர்.

மேற்கண்ட "முன்னுதாரணத்தை" அந்த நண்பர்கள் ஏற்பதாக இல்லை. அங்கே "கொக்கிர குளத்திலிருந்து , பாளையம்கோட்டைக்கு" இடையிலேயே "நாற்பது " ஆண்டுகளுக்கு முன்பே "காவல்துறை" இப்படி செய்தார்களே, இப்போது "குறைந்தது காஞ்சியிலிருந்து சென்னை செல்ல" ஒன்றரை மணி நேரம் பிடிக்குமே " காவல்துறை" ஈன்வேல்லாம் செய்யும் என்பதே எனது வாதமாக இருந்தது. அதற்குள் மறைமலை நகரில் தங்களது மாநாட்டை முடித்து விட்டு, இரவு மூன்று மணிக்குமேல் வந்த தொல்..திருமாவளவன், மகேசிடம் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது "சென்னை " கொடுசெள்ளவேண்டும் என்று "இயக்குனர் கவுதமன்" மகேசிடம் வலியிறுத்தினார். "இருளர் மக்கள்" தங்களுக்க " கம்யுனில்" இருந்துவந்து பணியாற்றிய "செங்கொடி" உடலை பார்த்து மரியாதை செய்யவேண்டும் என்று மகேஷ் கூறினார். அதுவே காஞ்சியிலே பெரும் எழுச்சியாக இருக்கும் என்று நாங்கள் கூறினோம்.

"காஞ்சியில்" எழுச்சி நடந்தாலும், "சென்னையில் நடக்கும் பெண் வழக்கறிஞர்களின் பட்டினிப் போராட்டத்தில்" இந்த செங்கொடி உடலை கொண்டுபோய வைத்தால் எழுகின்ற "எழுச்சி" பெரிதும் "உலகை உலுக்கும்" என்பது அவர்களது வாதமாக இருந்தது.அந்த வாதத்தில் "இயக்குனர் ராம், ரேவதி" ஆகியோர் இருந்தனர். இந்த "வாதப் பிரதிவாதத்தில்" இரவு மெல்ல நகர்ந்தது. சோர்வில் இருந்த "மகேஷ்,ஜெசி,மகா, மேகலா" ஆகியோர் ஒரு வாகனத்தில் "கதிர்ப்பூரில் " உள்ள மக்கள் மன்றத்திற்கு சென்றனர். அதற்குள் மதிமுக வை சேர்ந்த மல்லை சத்தியா, மாவட்ட செயலாளர் சோமு ஆகியோர் வந்துவிட்டனர். அவர்கள் "வைகோ"வை தொடர்பு கொண்டு பெசவைத்தனர். வைகோ சேலம் ஆகே "ஆத்தூரில்" நடந்த "கண்ணகி" நிகழ்வில், "செங்கொடி" பற்றி பேசிவிட்டு, "காஞ்சி" நோக்கி வந்துகொண்டிருந்தார். மயிலாடுதுறையில் பொதுக்கூட்டம் முடித்து, "கொளத்தூர் மணியும், பேரா.சரஸ்வதியும்" வந்து கொண்டிருந்தனர். அவர்களும் "காஞ்சி" நோக்கிய பயணத்தில் இருந்தனர்.

இரவு மணி "நாலு" ஆகிவிட்டது. திருமா, முன்னால் ச.ம.உ. ரவிக்குமாருடனும், சிந்தனை செல்வம் உடனும் வந்திருந்துவிட்டு, காலை அவ்ருவதாக சொல்லி சென்றார். நானும் காஞ்சி தேவராஜுடன் மக்கள் மன்றம் அலுவலகத்துக்கு, மேலகதிர்பூர் மங்கலம்பாடிக்கு சென்று விட்டேன். நள்ளிரவுக்கு மேல், அதிகாலை "நாலரைமனிக்கு" பேரா. சரஸ்வதியும், கொளத்துர்மனியும், காஞ்சி மருத்துவமனை வந்தடைய, "வைகோவும்" அங்கேயே வந்தடைய, அனைவரும் "மங்கலம் பாடி" நோக்கி வந்தனர்அனவரும் அமர்ந்து " காலையில்" பிரேத பரிசோதனையை" முடித்து தரும்போது, மற்ற திட்டமிடுதலை செய்து கொள்ளலாம் என்று பேசி பிரிந்தோம்

Friday, September 2, 2011

தாயாய் இருந்து வளர்த்தவளை, தவிக்கவிட்டாயே?

மக்கள் மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் செல்வி. மகேஷ், உன்னை "தாயாக" இருந்து வளர்த்தாரே. செங்கொடி, நீ மக்கள் மன்றத்தின் " கூட்டு வாழ்க்கைக்கு" வந்த காலம் தொட்டு, மகேசுவின் உடல்நலத்தில் கவனம் எடுத்து, அவளை நேரத்திற்கு "மருந்து" சாப்பிட, "மாத்திரை" சாப்பிட அடம்பிடித்து "சம்மதிக்க" வைப்பாயாமே? இப்போது மகேஷ் அதை "சொல்லி, சொல்லி" அழுகிறாளே? மகேஷ் அன்று அந்த " 28 ஆம் நாள்" சென்னையிலிருந்து திரும்பியவுடன், மக்கள் மன்றத்தில் உன்னை தேடினாளே? உன்னையும் காணவில்லை, அந்த இரு சக்கர வாகனமான "எக்செலையும்" காணவில்லை என்றதும் "தவித்துப்போனாளே?"வ்வோருவரையும் ஒவ்வொரு பக்கம் அனுப்பி உன்னை தேடச்சொன்ன அந்த "தாயுள்ளம்" எப்படி "தவித்துப்போயிருக்கும்"? எண்ணிப்பார்த்தாயா? அதற்கெல்லாம் உனக்கு எங்கே செங்கொடி நேரம்? நீதான் "முழுமையாக" பேரறிவாளன், சாந்தன் முருகன், உயிர் காப்பில் உனது முழு கவனத்தையும் "திருப்பி" கொண்டாயே?

யாரோ வட்டாட்சிய அலுவலகத்தில் ஒரு சிறுமி "கொளுத்திக் கொண்டாராம்" என்று கூற, அங்கே ஓடினாளே அந்த மகேஷ்? அதாவது உனக்கு தெரியுமா, செங்கொடி? அங்கிருந்து காவலர்கள், மருத்துவமனைக்கு "எறிந்து கொண்டிருந்த" உடலை எடுத்துச் சென்றார்கள் என்று கேள்விப்பட்டு அங்கும் ஓடினார்களே? அதாவது உனக்கு தெரியுமா? செங்கொடி, நீதான் அதற்குள் "நிரந்தர நித்திரைக்கு" சென்று விட்டாயே? உனக்கு எப்படி இவையெல்லாம் தெரியும்? நான் சென்னையில் அப்போது மணி ஐந்தரை இருக்கலாம், கோயம்பேடு திருச்சி சவுந்தரராஜனின் "ஆடோ கேரேஜ்" வளாகத்தில், "கயலும், வடிவும், சுஜாதாவும்" மூன்று வழக்கறிஞர்களும், மூன்று தமிழர் உயிர் காக்க "பட்டினிப் போராட்டத்தில்" ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களது கூட்டத்தில் இருந்துவிட்டேனே?

அப்போதுதானே வழக்கறிஞர் "பாவேந்தன்" தொலைபேசி செய்தியை வைத்து, "காஞ்சியில் மக்கள் மன்றத்தின் செங்கொடி என்ற சிறுமி தீக்குளித்தார்" என்று அறிவித்தாரே? யாரோ, என்னிடம் "மக்கள் மன்றம் பற்றி அறிவிப்பு". கேட்டீர்களா?என்று கூறினார்களே? நான் நம்பவில்லை. ஏன் இப்படி "அறிவிக்கிறார்?" என்றுதான் எண்ணினேன். உடனே "மகேசிற்கு" தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். கிடைக்கவில்லை. "செங்கொடிக்கு என்ன நடந்தது?" என்று ஒரு குறுஞ்செய்தியை அனுப்பினேன். மகேஷ் "தொடர்பில்" வந்தாள். " மணிஅண்ணா, செங்கொடி தன்னை "கொளுத்திகிட்டா" என்று அலறினார். அந்த "அலறல்" உனக்கு கேட்டிருக்க "நியாயம்" இல்லை. நீதான் அண்ணன்மார்களான "பேரறிவாளன், சாந்தன், முருகன்" ஆகியோருக்கு "தயார்" செய்ஹ்டுகொண்டிருந்த "தூக்கு கயிறாய்" ஒரு கன்னி விடாமல் "அறுத்துக் கொண்டிருந்தாயே"? அதுகூட எங்களுக்கு "இப்போதுதானே" தெரியும். உனக்கு "அப்போது" மகேசின் "அழுகுரல்" எப்படி கேட்கும்?

அதிர்ந்து போன " நான்" அந்த கோயம்பேடு வளாக கூட்டத்தினர் மத்தியிலேயே, "வெடித்து, சிதறி" அழுதுவிட்டேன். நான் அழுவதை இதுவரை காணாதவர்கள், அப்போது "திகைத்து" என்னை காண்பது எனக்கு "புரிந்தது" அதுவே எனது "அழுகையை" நிறுத்த போதவில்லை. செங்கொடி, நீ ஒவ்வொருமுறையும் நான் "மக்கள் மன்றம்" வரும்போதும், அருகே வந்து நின்று கொண்டு " தோழர்" என்று கூறி ஒரு "சிரிப்பு" சிரிப்பாயே? அதுமட்டுமே நினைவில் "வந்துகொண்டிருந்தது". அது மட்டுமல்ல. இருபத்தொரு ஆண்டுகளாக என்னுடன் சேர்ந்து "புரட்சிகர" கருத்துகளை உச்சரித்துவரும் செல்வி. மகேசின் "அழுகுரலையும்" என்னால் "தாங்கமுடியவில்லை"> அதுவும் சேர்ந்து என்னை "நிலை குலைய" வைத்துள்ளது.

"கற்றது தமிழ்" திரைப்பட இயக்குனர் "ராம்" அங்கே இருந்தார். அவரது வாகனம் "காஞ்சி செல்கிறது"> நீங்களும் அதில் செல்லுங்கள் எனு கவிதா கூறினார். ராம் கூறினார். ராமின் உதவியாளர் "சாம்ராட்" கூறினார். கவிதா அவரது கணவர் முரளியிடம் கூறி என்னை " ஆற்றுப்படுத்த" சொன்னார். உன்னை "தடுக்க முடியாமல்" போன மூத்தவர்கள் நாங்கள் எப்படி எங்களை "ஆற்றுபப்டுதிக்கொள்கிறோம்" பார்? மீனவர் சங்க "பொன்னுசாமியும், மகேசும் " உடன் இருந்தார்கள். "நடைப்பிணம்" போல காஞ்சி செல்லப்போகிறோம் என்பதை நான் உணர்ந்தேன். அப்போது "சன் டி.வி.யில்" நீ இறந்துவிட்டதாக "அறிவிப்பு" செய்தார்கள். அதுவே எங்களை "மேலும்" கலக்கமடையச் செய்தது. கடைசியாக சென்னையை விட்டு "நாடக கலிஞர் ஸ்ரீஜித்து உடனும், திரை இயக்குனர் தாமிராவின் வாகனத்தில்" நாங்கள் காஞ்சி கிளம்பினோம். ஆனாலும் நீ உன் "தாய்" மகேசை இப்படி "தவிக்க" விட்டிருக்கக் கூடாது.

எத்தனை நாள் திட்டமிட்டாய் செங்கொடி?

மூன்று தமிழர் உயிர்காக்க நாம் எல்லோருமே குரல் எழுப்பி வந்தோம். யார் அதற்காக குரல் கொடுத்தாலும் அங்கே போய் நாமும்கழந்து கொண்டோம். இதுதானே செங்கொடி, நமக்குள் இருந்துவந்த ஒற்றுமை? ஆகஸ்ட் 18 இல் சென்னையிலிருந்து புறப்பட்ட நூற்றுகனக்கான இரு சக்கர வாகனங்களை," மூன்று தமிழர் உயிர் காக்க" பேரணியாக "மரணதண்டனை எதிர்ப்பு மக்கள் இயக்கம்" ஒட்டி வந்தபோது,, காஞ்சியில் அதை வரவேற்க காத்திருந்த தோழர்கள், மூன்று மணி நேரம் முழக்கமிட்டதில், செங்கொடி உன்னுடைய முழக்கங்கள் "மேலோங்கி" இருந்தனவே? காஞ்சி வந்த இரு சக்கர வாகன பேரணியில், மற்ற தோழர்களுடன் செங்கொடி நீயும் கலந்து கொண்டு, வேலூர் நோக்கி செல்லும்போது, ஒரு வாகனத்தின் பின்புறம் அமர்ந்துகொண்டு, நீ "குறளை உயர்த்தி" முழக்கமிட்டாயாமே? எல்லா தோழர்களும் அந்த பேரணியில் உன்னுடைய முழக்கத்தை கவனித்திருக்கிரார்களே?
வேலூர் நகரில் "தொரப்படி சிறைக்கு" அருகே சென்ற போது, செங்கொடி உன்னுடைய முழக்கங்கள் ஒவ்வொரு தொழராலும் கவனிக்கப்பட்டுள்ளதே? நீ எந்த அளவு இந்த பிரச்சனையில், "மூன்று தமிழர் உயிர் காக்கும்" பிரச்சனையில், ஆழமாக ஈடுபாடு கொண்டிருந்தாய் என்பதற்கு இவையெல்லாம் எங்களுக்கு "கண்ணாடி" போல தெரிகிறது. அப்போதே நீ உன்னை பற்றி உன் உயிர் பற்றி "தீர்மானித்துவிட்டாயா?" நீ அப்போதே "திட்டமிட்டு விட்டாயா" செங்கொடி? அடுத்து "மக்கள் மன்றம்" அகஸ்ட் 23 ஆம் நாள் வேலூரில் ஏற்பாடு செய்திருந்த "ஆர்பாட்டத்திலும், ஊர்வலத்திலும்" கலந்து கொள்ள நான் சென்னையிலிருந்து அவசர, அவசரமாக வந்தேன். மற்ற மக்கள் மன்ற தோழர்களுடன் செங்கொடி நீயும் இணைந்துகொண்டு முழக்கமிட்டாய், ஆனால் உனது "முழக்கங்கள்" அன்று வானதிர கேட்டனவே? அப்போதும் உனக்குள் எழும்பியிருந்த கிளர்ச்சி "வித்தியாசமாக" இருக்கிறதே என்று நாங்கள் எண்ணிப்பார்க்கவில்லையே?
அகஸ்ட் 26 இல், "மூன்று தமிழர் உயிர் காக்கும் இயக்கம்" ஒவ்வொரு மாவட்டத்திலும் "மனிதச் சங்கிலி" என்று அறிவித்திருந்தது. அதை காஞ்சியில் வெற்றிகரமாக ஆக்க " மக்கள் மன்றமும்" ஏனைய அமைப்புகளும் இணைந்து தயார் செய்தன. அந்த மனித சங்கிலி ஆர்ப்பாட்டத்தில், வைகோ கலந்து கொண்டார். என்றைக்கும் இல்லாத அளாவுக்கு, செங்கொடி நீ வைகோ அருகில் போய் நின்று கொண்டு, "பெரும் சத்தத்துடன்" முழக்கங்களை எழுப்பினாயே? அப்போதுகூட நம் த்ழர்களுக்கு உன்னிடம் வந்திருக்கும் "ஆவேசம்" பற்றி எண்ணிப் பார்க்க முடியவில்லையே? அப்போதே நீ இந்த "திட்டத்தை" தீர்மானித்து விட்டாயா, செங்கொடி? இப்படி நீ தொடர்ந்து ஒரு வார காலமாக, "ஆவேசம்" அதிகம் வெளிப்படுத்தி, "பேரரவாலன், முருகன், சாந்தன்" ஆகியோரை காப்பாற்ற பெரும் அளவில் போராட்டங்களில் பங்கெடுத்து வந்தாயே? அவை எல்லாம் உன்னிடம் இப்படி "உன்னையே மாய்த்துக் கொள்ளும்" திட்டம் ஒன்று இருப்பதாக எங்களுக்கு தெரியவில்லையே?
செங்கொடி, நீ "எத்தனை நாள்" திட்டமிட்டாய்? என்று எண்ணிப் பார்க்க முடியாத "கையாலாகதவர்களாய்" நாங்கள் ஆகிவிட்டோம். எங்களை இப்படி "அழவைத்துவிட்டு" நீ மட்டும் "கொள்கை" தீப்பொறியை உடலில் தாங்கிச் சென்று விட்டாயே? நீ இளம் தழியாக மட்டுமில்லை. சிறிய தங்கையா மட்டும் இல்லை. நீ "உரிமை வேண்டும் தமிழர்களின்" ஒட்டுமொத்த தமிழர் தாயா?

செங்கொடி, நீ திட்டமிடுவதில் எங்களை மிஞ்சிவிட்டாய்.


நாங்கள் ஏதோ நாற்பதுஆண்டு அனுபவத்தில், போராட்டங்களுக்கு திட்டமிடுகிறோம் என்றும், அது அனேகமாக வெற்றிபெறுகின்றன என்றும் எண்ணி இறுமாந்து இருந்தோம். ஆனால் செங்கொடி, நீ திட்டமிட்டு நடந்துகொண்டதில் உன் திட்டத்தை நிறைவேற்றியதில் , அதில் நீ வெற்றிபெற்றதில், நாங்கள் மட்டுமல்ல, இந்த உலகமே வருத்தப்படுகிறது. ஒரு இளம் தோழர் புரட்சிகரமாக வளர்ந்த இளம் பெண் தோழி,,தானே தனித்து திட்டமிடுவதில்,திட்டமிட்டதில், சக தோழர்களையும் கலந்துகொள்ளாமல் திட்டமிட்டதில், அதையும் சகதோழர்களுக்கு தெரியாமலேயே நிறைவேற்றியதில், உனது இளம் வயதில் நீ வெற்றி பெற்றதில் நாங்கள் மகிழ்ச்சி அடையவில்லை. மாறாக ஆளாத்துயரத்தில் வீழ்ந்தோம். ஏன் தெரியுமா? நீ நாம் வைக்கும் கோரிக்கைகாக "உன் உயிரையே" தியாகம் செய்துவிட்டாய். இதை எப்படி செங்கொடி நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியும்? நீ இப்படி உயிரை விடுவதற்கா உனக்கு உன் அக்காமார்கள் மார்க்சையும், லெனினையும், மாவோவையும், பிரபாகரனையும், அறிமுகம் செய்தார்கள்?

இத்தனை நாளும் எந்த விசயமானாலும் உன் தாய் போல உடன் இருந்து உன் வளர்ச்சிக்கு உதவிய உன் அக்கா மகேசிடம் சொல்லாமல், கேட்காமல் நீ எதையாவது செய்தது உண்டா? இப்போது மட்டும் மகேசுக்கு தெரியாமல்,, ஜெசிக்கு தெரியாமல், மகாவிற்கு தெரியாமல், மேகலாவிடம் கூறாமல்,வின்சென்ட் அண்ணனிடம் தெரிவிக்காமல்,நீவீட்டைவிட்டு கிளம்பும்போது வீட்டில் இருந்த நீலாவிடம் சொல்லிக்கொள்ளாமல், எப்படி உன்னால் கிளம்ப முடிந்தது? சின்ன தம்பிகளாக அந்த "கூட்டு வாழ்க்கையில்" உன்னுடன் "மக்கள் மன்றத்தில்" வாழ்ந்துவரும் "கவுதமும், பகத்சிங்கும்" உனக்கு நினைவுக்கு வரவில்லையா? அந்த "குழந்தை கலைஞர்கள்" அடிப்ப்படும்போது ரசிப்பாய்? நீ ஆடிப்ப்படும்போது அந்த குழந்தை செல்வங்கள் ரசிப்பார்களே? எல்லாம் எப்படி மறந்து, இப்படி ஒரு முடிவை எடுத்தாய்? எதிர்களை வீழ்த்தத் தானே நாங்கள் "கதைகள்" சொல்வோம். எப்போதாவது நாமே நம்மையே வீழ்த்திக் கொள்வதை ஏற்றுக் கொண்டுள்ளோமா? உனக்கு மட்டும் அந்த விபரீத எண்ணம்எப்படிவந்தது? நக்சல்பாரி இயக்கம் பல வர்க்க எதிரிகளை அழித்தொழ்த்தது பற்றி வேண்டுமானால் நான் பேசியிருப்பேன். என்றுமே "தன் உயிர் தியாகம்" செய்வதை ஆதரித்து பேசியது இல்லையே? முத்துகுமார் மறைவு உனக்குள் இப்படி விபரீத முடிவை ஊக்குவித்ததா?


உன் முடிவை நீ தேடிக்கொள்வதற்கு முந்திய நாள்,முத்துகுமார் பற்றி அவரது மறைவால் ஏற்பட்ட எழுச்சி பற்றி ஏன் வினவி இருக்கிறாய்?. அது உனக்குள் ஒரு நெருப்பாய் எழுந்து கடைசியில் உன்னை அழித்துவிட்டதா? செங்கொடி, நீ பெரும்பாலான மக்கள் மன்றத்தின் தோழர்கள் சென்னை சென்றுள்ள சூழலில்,இரு சக்கரவாகனத்தை தனியே எடுத்துக் கொண்டு, காஞ்சி நகருக்கு ஏன் கிளம்பியிருகிறாய்?என்றுமே சொல்லாமல் வெளியே செல்லாத நீ அன்று மட்டும் ஏன் யாரிடமும் சொல்லிக்கொள்ளாமலே, வெளியே கிளம்பினாய்? கையில் இருக்கும் இரு சக்கர வாகனத்தை காட்டி பெட்ரோல்பங்கில் பாட்டில் நிறைய பெட்ரோல் வாங்கி ஏன் ஊற்றிக் கொண்டுள்ளாய்? வட்டாட்சியர் அலுவலகத்தில் வழக்கமாக மக்கள் மன்றம் போராட்டங்களை நடத்தி வந்ததால், நீ திட்டமிட்ட போராட்டத்திற்கும் வட்டாட்சியர் அலுவலக வளாகமே உன்னால் தேர்வு செய்யப்பட்டதா? வழமையாக மக்கள் மன்றத்தினர் ஒவ்வொரு ஆர்ப்பாட்டத்திற்கு வரும்போதும், மனுக்கள் கொடுக்க வரும்போதும், வழக்குகள் பலவற்றையும் நடத்த அங்கே இருக்கும் நீதிமன்றத்திற்கு வரும்போதும், தேநீர் குடிக்கும் கடைக்காரர் உனக்கும் பழக்கமானதால், அதை எப்படி தந்திரமாக பயன்படுத்திக்கொண்டாய்? அந்த "தேநீர் கடைக்காரிடம்" போக்குவரத்து நெரிசல் என்பதால், இரு சக்கர வாகனத்தை இங்கே நிறுத்தி செல்கிறேன் என்றும், நாளை அக்கா வரும்போது "சாவியை" கொடுத்து விடுங்கள் என்றும் சொல்லும் தந்திரத் திட்டம் உனக்கு எங்கிருந்து வந்தது? ஞாயிற்று கிழமை என்பதால், ஆள் நடமாட்டம் இல்லை எண்பதை பயன்படுத்திக் கொண்டு, மறைவில் உடலெங்கும் பெட்ரோலை ஊற்றிக் கொண்டு, திடீரென வெளியே தோன்றி " மூவரையும் தூக்கிலிடாதே" என்று உரக்க கூவிக் கொண்டே கீழே வீழ்ந்துள்ளாயே?

எப்படிப் பெண்ணே இத்தனை "திட்டங்களையும்" நீயே போட்டு நீயே நிறைவேற்றி எங்கள் எல்லோரையும் வென்று விட்டாய்? நாங்கள் உன்னிடம் "தோற்று விட்டோம்". .

Thursday, September 1, 2011

சிவப்பில் வளர்ந்து, நெருப்பில் போனாயே....அது சரியா?

செங்கொடி. உன்னை என் அன்பு தங்கை மகேஷ், மக்கள் மன்ற லுவலகம் காஞ்சிபுரம் ஊருக்குள் இருக்கும்போது, பத்து ஆண்டுகளுக்கு முனம்பு ஒரு நாள் அறிமுகம் செய்தாள். நீ ஒரிருக்கையில் உள்ள ஒரு பழங்குடி இருளர் குடும்பத்தில் பிறந்து, தாயை இழந்த நிலையில் மக்கள் மன்றத்தில் இணைக்கப்பட்டாய் என்பதையும் கூறினார். அதற்கு அந்த ஊர் மக்கள் மத்தியில் குடும்ப உறுப்பினர் மத்தியில் எவ்வளவு தூரம் கடினப்பட்டு "இணங்கவைத்து" அழைத்து வந்தோம் என்பதையும் கூறினார். மகேஷ் கடந்த இருபத்தொரு ஆண்டுகளாக தோழமையோடு, அன்பு தங்கையாக பல்வேறு போராட்டங்களில் உடன் வரும்போதெல்லாம் "மக்கள் மன்றத்தை" எப்படி ஒரு "கம்யூனாக" ஜெசியுடன் சேர்ந்து நடத்தி வருகிறார் எனபது எனக்கு தெரியும். கம்யூன் என்றால் "கூட்டு வாழ்கை" அன்பதை புரிந்து கொண்டு நீயும் அங்கே வாழை வந்தாய் எனபது எனக்கு தெரியும். "தாயை" இழந்த நிலையில் சென்கொடியே" உனக்கு தாயாக மகேஷ் இருந்து வளர்த்து வந்ததும் நம் இருவருக்கும் தெரியும்.

நாங்கள் "சிவப்பு" சிந்தனைகளை கற்று களம் வந்தவர்கள். மாவோ, சாரு, சே குவேரா, என்று படித்தவர்கள், தமிழ் மண்ணில் "பெரியாரையும்" இணைத்தே கற்றோம். ஈழ விடுதலை போர், எனகளுக்கு "புலிகளை" அறிமுகம் செய்தபோது, உனக்கும் அதுவே அறிமுகம் ஆனது. "தமிழீழ தேசிய தலைவராக" நாங்கள்மேதகு பிரபாகரனை காணும்போது, நீயும் எங்களுடன் சேர்ந்து அடஹியே எதிரோலித்தாய். "மஞ்சள் நிறத்தில்" புலி கொடியில் பறக்க, " சிவப்பு"தானே பின்னணி வர்ணம்? "மாவோ, சேகுவேரா "ராணுவ தந்திரங்கள்" பிரபாகரனுக்கே "பாடமாக" அமையவில்லையா? அதனால் "சிவப்பு" சிந்தனைகள் நமக்கு அன்னியமில்லை. நாங்கள் என்னதான் பேசிவந்தாலும், ஒவ்வொரு மே தினத்திலும், மக்கள் மன்றம் நடத்திவரும், ஊர்வலங்களிலும், மேடை "நடனங்களிலும்" உன் ஆட்டத்தில் இருந்த "நளினம்" என்னை கவராமல் இல்லை. இத்தனை சிறிய வயதில் இத்தனை அமைதி முகத்தோடு, "செங்கொடி" ஆடும் நடனமும், பாடும் பாட்டும், "திகைக்க"வைத்தன எண்பதை நான் சொல்லாமலும் இல்லை. மக்கள் மன்றத்தில் உள்ளத்தில் நீயே சிறிய வயது சிறுமி. "கவுதம், கார்கி" ஆகியோர் குழந்தைகள் என்பதால் நீதான் சிறிய வயது "போராளியாக" இருந்தாய்.

மக்கள் மன்றத்தினர் போராடும்போதேல்லாம், கைது செய்யப்பட்டால் உன் பெயரும் அதில் இருக்குமே? தளராத "இளம் போராளியாக" நீ இருந்தாய். யாரிடமும் அதிகம் பேசமாட்டாயே? நான் மக்கள் மன்றத்திற்கு வரும்போதெல்லாம், மகாவும், மேகலாவும் வந்து பேசுவார்கள். நீ ஓரத்தில் சிரித்துக்கொண்டே நிற்பாயே? ஏன் "செங்கொடி" பேசமாட்டாயா? என்று ஒரு முறை நான் கேட்டபிரகுதானே பேசத் தொடங்கினாய்? நான் வந்தவுடன் "ஓடிவந்து" முன்னே நின்றுகொண்டு, "தோழர்" என்று கூறிவிட்டு சிரிப்பையே? எங்கே போனது அந்த சிரிப்பு? இப்போது உடலெங்கும் "நெருப்பு சுட்ட வெடிப்புகளுடன்" எப்படி நான் உன்னை "பிணவறையில் சந்தித்தேன்?" எப்படி நான் அழாமல் இருக்க முடியும்? நான் பொதுவாக அழும் குணம் கொண்டவன் அல்ல என்பது உணமைதான்.அதை மாற்றி விட்டாயே? நீ எங்களை விட வலுவாய்ந்தவள்தானே?

சென்னை கோயம்பேடில் "பெண் வழக்கறிஞர்களின்" சாகும்வரை பட்டிநிப்போரில் கலந்து கொள்ள மகேஷ், ஜெசி, மகா,மேகலா, வின்சென்ட் அண்ணன், பாலு என மக்கள் மன்றத்திலிருந்து பலரும் வந்திருந்த அந்த அகஸ்ட் 28 ஆம் நாள், நீ வரவில்லை. அது வெறும் செய்தி என நினைத்தோம். ஆனால் உனக்குள் இப்படி ஒரு "மாபெரும் திட்டம்" இருக்கும் என்று எங்களுக்கு தெரியவில்லையே? "மணி அன்னா என்ன போராட்டம் எடுக்கலாம்" என்று மகேஷ் வினவிய போது, "உயிர் இழப்பு" இல்லாமல் கடுமையான போராட்டங்களை மத்திய அரசை எதிர்த்து எடுக்கவேண்டும் என்று மகேஷிடம் சொல்லி அனுப்பும்போது, நீ எப்படி " அதேநேரத்தில் "உயிர் இழப்பிற்கு" தயார் செய்துகொண்டிருந்தாய்? உனக்கு எப்படி நாங்கள் பேசியது கேட்டது? மகேஷ் காஞ்சி வருவதற்குள் முந்திக்கொண்டாயே?