Friday, July 29, 2011

சீ.பி.எம். திடீரென இலங்கைத் தமிழர் மாநாடு போட காரணம் என்ன?

நாளை அதாவது ஜூலை 30 ஆம் நாள் சென்னையில் "இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு தீர்வு என்ன?" என்பதாக ஒரு மாநாடு போடுகிறார்கள். இது என்ன மார்க்சிஸ்டுகளுக்கு புது அக்கறை என்று கேட்டு விடாதீர்கள். அவர்கள் இத்தனை ஆண்டுகளும் ஏறத்தாழ அறுபது ஆண்டுகளாக அந்த பிரச்னையை "ஆய்வு" செய்துகொண்டு இருக்கிறார்கள். மார்க்சிஸ்டு என்றால் மற்றவர்களைப்போல உடனடியாக ஒரு தீர்வை நம்புவதும், அதை பரப்புவதும், அதையே நடைமுறைப்படுத்த துணிவதும் முடியுமா என்ன? நிதானமாக அங்கே இருக்கும் வர்க்க சக்திகள் பற்றி ஆய்வு செய்து, அதன்பிறகு அங்கே இருக்கும் கம்யுனிஸ்ட் கட்சியிடம் கருத்து கேட்டு, பிறகு அந்த பிரச்சனையில் , கம்யுனிஸ்ட் கட்சி தலைமையில் ஆட்சி நடக்கும் அருகாமை நாடுகளின் கருத்து என்ன என்று தெரிந்து கொண்டு, பிடகு உலக நாடுகள் மத்தியில் என்ன கருத்து இருக்கிறது என்று தெரிந்து கொண்டு, எக்கதிபத்தியங்கள் என்ன நிலைப்பாடு எடுத்திருக்கிறார்கள் என்று கவனித்து, கடைசியாக தாங்கள் வாழும் நாட்டின் அரசு என்ன சொல்கிறதோ அடஹ்ர்கு விரோதம் இல்லாமல் முடிவு எடுக்க வேண்டாமா?


மூச்சு விடாமல் இத்தனை விவரங்களையும் சேர்க்கும் மார்க்சிசிடுகள், அதை தங்கள் "அரசியல் தலைமைக் குழு" விடம் காட்டி, அவர்கள் பொதுச்செயலாளரின் நேரடிப் பார்வைக்கு வைத்த பிறகு, அவர்கள் அத்தனை கருத்துகளையும் "தொகுத்து எழுதி" பிறகுதானே கட்சி முடிவு செய்ய முடியும்? அப்படி எடுக்கும் முடிவும் "தப்பித் தவறி" கூட, "தெலுங்கான" பிரச்சனை பற்றி குழப்பம் ஏற்பட்டது போல, " மேற்கு வங்கத்தில் "கூர்காலாந்த்" பிரச்சனை மீது முடிவு எடுக்காமல் தள்ளிப் போட்டு, "மாநில ஒற்றுமையை " காப்பாற்றியது போல , "பிரிவினைவாதம்" தலைதூக்க அனுமதிக்க கூடாது அல்லவா? அட. மார்க்சிசிடுகளே, நீங்கள் "தெலுங்கானாவில்" எடுத்த முடிவான, "ஒன்றுபட்ட ஆந்திரா" என்பது தெலுங்கான தவிர்த்த, ராயலசீமா, கடலோரம் ஆகிய ஆந்திராவின் பாணனை திமிங்கிலங்களுக்கு, அதாவது ரெட்டிகளுக்கும், கம்மா நாயுடுகளுக்கும், தெலுங்கானா பகுதியில் நிலங்களை ஆதிக்கம் செலுத்தவே உதவும். அதனால்தான் அங்கே " தெலுங்கானாவை ஆதரிக்கும் மாவோவாதிகள்" செல்வாக்கு உயர்கிறது.

தோழர்களே நீங்கள் மேற்கு வங்கத்தில் மாநிலத்தின் ஒற்றுமையை கட்டிக் காக்க எண்ணி, "கூர்காலாந்து " மக்களின் நியாயமான உரிமையை மறுத்துவந்ததால், இன்று மம்தா அதையே ஆயுதமாக்கி, "அதிக சுயாட்சியை கூர்காலாண்டுக்கு" வழங்கி நற்பெயர் பெற்று விட்டார். இது இன்றைய கதை. நேற்று அதாவது 1978 ஆம் ஆண்டு, முழு அஸ்ஸாம் மாநிலமும் "மாணவர் எழுச்சியில்" எழுந்த போது, நீங்கள் அதை எதிர்த்து நிலை எடுத்ததால் உங்களை அந்த மாநிலத்தை விட்டே மாணவர்கள் எழுச்சி விரட்டி அடித்ததே நினைவு இருக்கிறதா? இவாறு எங்கெல்லாம் "சுயாட்சி முழக்கம்" எழுகிறதோ அங்கெல்லாம் ஏதாவது காரணம் சொல்லிக்கொண்டு, அதை நீங்கள் எத்ரித்து வருகிறீர்கள். அதுதான் உங்கள் வரலாறாக இருக்கிறது. "உழைக்கும் மக்களின் ஒற்றுமை" எண்பதை பிரிவினைவாதிகள் உடைத்து விடுவதாக கற்பனைக் கதையை அவிழ்த்துவிடும் நீங்கள் "அடக்கப்படும் தேசிய இனங்களையோ, அடக்கப்படும் பிரதேச மக்களையோ, அதிகாரப் பரவலாக்குதளுகாக போராடும் மக்களையோ கண்டுகொள்வதில்லை. அதன்விளைவு அந்த குறிப்பிட்ட மக்களிடமிருந்து நீங்கள் "தனிமைப்படுவதைதவிர" வேறு வழியில்லை.


இப்போது இலங்கை பிரச்சனை எண் உங்களுக்கு "முக்கியமாக" படுகிறது? இன்று "தமிழ்நாடு "விழித்துக் கொண்டுள்ளது. நீங்கள் இருக்கும் "கூட்டணிதலைமை" இலங்கை விசயத்தில் ஒரு முடிவை எடுத்து உள்ளது. இலங்கை தமிழருக்காக பேசுகிறது. ராஜபக்சே உலக அளவில் "போர்க்குற்றவாளி" என்று அம்பலப்பட்டு கிடக்கிறார். இந்தி பேசும் மாநிலங்களில் கூட "ஹெட்லைன்ஸ் டுடே" வெளியிட்ட "சேனல் நாலு" பகிரங்கமாக போர்குற்றம் பற்றி மக்களிடம் எடுத்து சென்று விட்டது. ஆதியோ ஒட்டி மத்திய அரசும் ஒரு முடிவு எடுத்தாக வேண்டும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. .மார்கிசிடுகளின் தோழர்களாக கருதப்பட்ட "ஜேவிபி கட்சிகூட" தேர்தலில் தோற்று விட்டது. அதனால் தாங்களும் ஏதாவது தமிழருக்கான தீர்வு என்று கூறவேண்டிய கட்டாயம். இல்லாவிடில் சீ.பி.ஐ. என்ற மற்றொரு இடதுசாரி கட்சி, "தமிழருக்கு ஆதரவாக" செல்வது அதிகாரபூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்டுவிடும். அதனால் இலங்கையின் ஒற்றுமையை பாதுகாக்க சீ.பி.எம். இறங்குகிறதா என சந்தேகம் எழுகிறது.

அதனால்தான் தோழர்களே, நீங்கள் லெனின் "தேசிய இனங்கள்" பற்றி கூறியதை படியுங்கள். ஸ்டாலின் " தேசிய இன சுதந்திரம்" பற்றி சொன்னதை செவி மடுங்கள். "பிரிந்து செல்வதற்கான் ஆரிமையுடன் கூடிய சுய நிர்ணய உரிமை" என்ற சொற்கள் உங்கள் கண்களுக்கு புலப்படட்டும். அதை "ஈழத் தமிழர்கள்" எப்படி பெற முடியுமோ அவர்கள் பெற்றுக் கொள்ளட்டும் என்று சொல்லத் தோன்றும். ஆயுதம் தாங்கிய போறோ, அரசியல் ரீதியான போராட்டமோ, எதுவானாலும் அடக்கப்படும் சிறுபான்மை தேசிய இனத்திற்கு "பிரிந்து செல்லும் உரிமையுடன் கூடிய சுய நிர்ணய உரிமை" மட்டுமே விடுதலை வாங்கித் தரும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். அதை அந்த நாட்டு ஈழத் தமிழ் குடிமக்கள் "தமிழீழம்" மூலம் பெற்றுக்கொண்டாலும் அது அவர்களது வழி என்று கூறி குறுக்கே நிற்காதீர்கள். இன்று உலக அரங்கில் "ஏகாதிபத்தியத்தின் வளர்ந்த வடிவமான வல்லரசுகளுக்கு எதிரான சக்தி தேசிய இனங்கள்" தான் எண்பதை உணருங்கள்.

Thursday, July 28, 2011

தலித் கிறித்துவர்களுகாக அனைத்து கிறித்துவர்களும் நடத்தும் பட்டினி?

இன்று சென்னையில் "இந்திய கிறித்துவ மக்கள் கட்சி"சார்பாக ஒரு பட்டினிப்போர். இது டில்லியில் "அனைத்து ஆயர்களும் இணைந்து இன்று நடத்தும் கோரிக்கையை"வலியுறுத்த நடத்தப்பட்டது. கோரிக்கை புதிதல்ல. "தலித் கிறித்துவர்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் செக்க " வலியுறுத்தியே இரண்டு பட்டினிப் போர்களும் நடத்தப்பட்டன. இந்த கோரிக்கை ஐம்பது ஆண்டுகளாக இருந்து வருகிறது. ஏன் இன்னமும் மத்திய அரசு செவி சாய்க்க வில்லை? அதற்கும் அவர்கள் அளித்த "துண்டறிக்கை" பதில் சொல்கிறது. அல்லது விளக்கம் ஒன்றை கூறுகிறது. அல்லது பிரச்னையை புரிந்து கொள்வதற்கான விளக்கத்தை துனடரிக்கையில் வெளியிட்டுள்ளார்கள். அதுவே வேறு ஒரு விளக்கத்தை, அதாவது ஏன் சேர்க்கவில்லை என்ற நமது கேள்விக்கான விளக்கத்தை கூறுவதாக நமக்கு படுகிறது.அதாவது இந்திய அரசியல் சட்டம் முதலில் "இந்து தாழ்த்தப்பட்டோரையும், பிறகு சீக்கிய தாழ்த்தப்பட்டோரையும், பிறகு பவுத்த தாழ்த்தப்பட்டோரையும், தாழ்த்தப்பட்டோர் பட்டியலில்" சேர்த்துக்கொண்டது. ஆனால் ஆயிரம் முறை கத்தியும் "கிறித்துவ தாழத்தப்பட்டோரை" செர்த்த்டுக் கொள்ளவில்லை. ஏன்? ஏன்? ஏன்?

இந்த இடத்தில்தான் இந்திய அரசு இயந்திரத்தை பற்றி புரிந்து கொள்ளவேண்டும். இந்திய அரசியல் சட்டம் பற்றியும் புரிந்து கொள்ளவேண்டும். அரசியல் சட்டத்தில் "யார் இந்துக்கள்?" என்று தெளிவாக அவர்களது விளக்கத்தை கூறி இருக்கிறார்கள். "யார்,யார் முஸ்லிம் இல்லையோ, யார்,யார் கிறித்துவர் இல்லையோ, யார்,யார் பார்சி இல்லையோ, அவர்கள் எல்லாம் இந்துக்கள்". இதுதான் இந்திய அரசியல் சட்டம் கூறும் விளக்கம். அபப்டியானால் " மதம் அற்றவர்களாக" இருக்கும் மனிதர்கள், இந்துவா? "நாத்திகர்களாக" இருப்பவர்கள் இந்துகளா? இது கொடுமையாக இல்லையா? எனக்கு எந்த நம்பிக்கையும இல்லாத"ஒரு மதத்தில் என்னை" சேர்ப்பதற்கு இந்திய அரசியல் சட்டத்திற்கு என்ன உரிமை இருக்கிறது? அது எனது "தனி மனித உரிமையை" மீறுவது ஆகாதா? இப்படித்தான் இவர்கள் "தங்களது இந்து மதத்திற்கு" ஆள் சேர்க்க வேண்டுமா? அப்படியானால் இந்திய அரசு இயந்திரம் "மதசார்பற்றது " இல்லையா? இந்த கேள்விகள் எழ வேண்டும்.


பாகிஸ்தான் அரசை " ஒரு மதச் சார்பு ஆரசு" என்று எல்லோரும் கூறுகிறோம். அவர்களும் அவர்களது அரசியல் சட்டத்திலேயே நேர்மையாக" இஸ்லாம் சார்ந்தது" என்று எழுதி இருகிறார்கள். ஆனால் இந்திய அரசியல் சட்டத்தில் "இது ஒரு மதச் சார்பற்ற அரசு" என்று முகப்பிலேயே எழுதிவிட்டு, "இந்து மதத்தில் இல்லாதவர்களையும் " இந்து மதத்தில் சேர்க்கும் வேலையை ஒரு அரசியல் சட்டமே தனது விளக்கத்தின் மூலம் செய்யுமானால் "இது என்ன அரசியல் சட்டம்" இதுவும் மறைமுகமாக "ஒரு மதச் சார்பு அரசியல் சட்டம்தான்" . இப்படி பகிரங்கமாக் சொல்ல நமக்கு துணிவு வேண்டும். அதையும் தாண்டி, "இந்து மதத்தில் உள்ள தாழ்த்தப்பட்டோருக்கு மட்டுமே இட ஒதுக்கீடு" என்றால் யாரும் இந்து மதத்தை விட்டு போககூடாது என்றும், மற்ற மதத்திற்கு சென்றவர்கள் இந்து மதத்திற்கு திரும்பி வரவேண்டும் என்றும் பொருள் இல்லையா?இது யார் செய்யும் அல்லது செய்ய வேண்டிய வேலை? இந்து மத சாமியார்கள் செய்ய வேண்டிய வேலை அல்லவா? அதை ஒரு அரசு இயந்திரம் செய்தால் அது "ஒரு மத சார்புதானே?"

இந்து மதத்திற்குள் " சீக்கிய மதத்தையும், பவுத்த மதத்தையும்" போட்டு திணித்து இந்த ஆளும் கூட்டம் சித்து விளையாட்டு நடத்துவது ஏன்? இந்திய "நிலவுடமை "சமுதாயத்தில் நில உறவுகளை, "சாதி கட்டுமானங்களால்" இருக்க கட்டிப் போட்டிருகிறார்கள்.அதனால் "ஆதிக்க சாதிகள்" நில உடமையாலர்கலகவும், தாழ்த்தப்பட்டோர் உழைக்கும் கூலிகளாகவும் இருக்கவேண்டும் என்பது அவர்களது "தர்மம்". அதுவே இந்து மத தர்மம். ஆளவே அவர்கள் நில உறவுகளை பாதுகாக்க "இந்து மதத்தை" பதுககிரர்கள். அதைவிட்டு தாழ்த்தப்பட்டோர் வெளிஎரே செல்ல விடாமல் இந்த இட ஒதுக்கீடு கொள்கைகளையும் பயன்படுத்துகிறார்கள். நிலவுடமை சமூகத்திற்கு எதிரான " உழுபவனுக்கே நிலம்" என்ற கொள்கை என்றைக்கு ஒரு புரட்சியின் மூல சாத்தியமாகிறதோ அன்று தான் இந்த "சாதி கட்டுமானம்" உசடையும்.அதுவரை "தலித் கிறித்துவர்களுக்கும்" இட ஒதுக்கீடு கொடு என்ற இந்த நியாயமான கோரிக்கையை நாம் நாடு முழுவதும் கொண்டு செல்வதும், அதற்கு செவி மடுகாத மத்திய அரசை நிர்பந்தம் செய்வது தேவை.

Monday, July 25, 2011

ஏக மகிழ்ச்சியில் கலைஞர்

கருணாநிதி வாழ்க்கையில் சமீபத்தில் அதாவது ஐம்பது ஆண்டுகளாக அடையாத மகிழ்ச்சியை இரண்டு நாட்களாக அடித்துள்ளார் என்றால் அது ஆச்சர்யமான செய்திதானே? திமுக வின் செயற்குழுவும், பொதுக் குழுவும் ,கடுமையான "தேர்தல் தோல்விக்கு" பிறகு கூடும் பொது கலைஞரின் கையாளுதல் "புதிய அணுகுமுறையை" எடுத்தது. "சிறப்பு அழைப்பாளர்கள்" வரிசையில் இதுவரை இலாத முறையில் "ராஜாத்தி அம்மாளை" அமர வைத்திருந்தார். "கனிமொழி" இருக்கவேண்டிய செயற்குழு, பொதுக்குழுவில் ராஜாத்தி மறந்திருக்கிறார் என்பது எல்லா திமுக காரர்களுக்கும் புரிந்தது. ஆனாலும் "இதை எப்படி ஸ்டாலின்" பொறுத்துக் கொள்ள முடியும்? இதை பார்த்தும் எப்படி "தயாநிதி மாறன்" சும்மா இருப்பார்? இதை "அழகிரி ஏற்ற்க்கொல்கிறாரா?"இப்படி கேள்விகள் எல்லாம் திமுக காரகளுக்கு இருந்தது.

அதேபோல "தயாளு என்ன எண்ணுவார்?" என்பது சிலரை அச்சுறுத்தியது. ஏன் என்றால் இந்த ஐம்பத்தொரு ஆண்டு வரலாற்றில், "ராசாத்தியை" கோபாலபுரம் "தயாளு அம்மாள்" என்றுக் கொண்டதே கிடையாது. இப்போது ச்ய்ரகுழு நடக்கும் பொது, "ராஜாத்தி சிறப்பு அழைப்பாளர்" என்ற செய்தி கோபாலபுரத்துக்கார அம்மையாருக்கு எட்டியது. அதை "வில்லங்கமாக" ஒரு சக்தி அங்கே போய் கேட்டது. அதற்கு தயாளு கொடுத்த பதில்தான் எல்லோரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. " ஏன் அவர்களுக்கு தகுதி இல்லையா? ராஜாத்தி சிறப்பு அழைப்பாளராக சென்றது சரிதான்" என்று தயாளு அம்மையார் வாயிலிருந்தே வந்துவிட்டது. "மனைவிக்கும்,துணைவிக்கும்" மத்தியில் திணறி வந்த தலைவர் இந்த செய்தி கேட்டு ஒரே மகிழ்ச்சி அடைந்துள்ளார். கலைஞரைப்போலவே சிந்திக்க மனைவியை தயார் செய்ய இத்தனை ஆண்டு ஆகிவிட்டது போலும்.

திமுக செயற்குழு, பொதுக் குழு படிப்பினைகள்.

வரப்போகிறது. அண்ணன் அழகிரிக்கும், தம்பி ஸ்டாலினுக்கும் தகராறு என்று ஆர்ரோடம் கூறிய எத்ரித்தர்ப்பு செய்திகளுக்கு மத்தியில் கடைசியாக திமுக தனது செயற்குழுவையும், பொதுக்குழுவையும் வெற்றிகரமாக திருச்சியில் நடத்தி முடித்திருக்கிறது. எண்பத்து எட்டு வயதிலும், கலைஞர் அந்த இரண்டு குழுக்களையும் நடத்தி, முரண்பாடுகளைக் கையாண்டு வெற்றிகரமாக திரும்பி உள்ளார். தனது அன்பு மகள் கூட்டணி கட்சியின் "நரித்தந்திர வழியால்" பின்னப்பட்டு "திகார் சிறையில்" அவதிப்படுவதை தாங்க முடியாத ஒரு தந்தை அதையும் நெஞ்சில் ஏந்தி, இந்த இரண்டு பெரும் கூட்டங்களையும் நடத்தி முடித்திருக்கிறார்.

ஸ்டாலினுடைய ஆட்கள் திட்டமிட்டு, "செயல்தளைவராக" ஸ்டாலினை கொண்டு வார எடுத்த முயற்சிகள் முதல் நாள் "செயற்குழு" வில் "பொன்முடி, த.எ.வேலு"மூலம் வெளிப்பாட்ட போதும், "பொதுக் குழு"வில் கோவை ராமநாதன் மூலம் வெளிப்பட்ட போதும் "ஒரு உரத்த குறளை" கிளப்பி தலைவர் அதை அடக்கி விட்டார். அடஹ்ர்கு பேராசிரியர் அன்பழகனும், துரைமுருகனும் துணை செய்தனர். அழகிரி பேசவேண்டிய அவசியமே இல்லாமல் ஸ்டாலினது " பட்டத்துக்கு வரும் முயற்சியை" தலைவரே கையாண்டு தீர்த்து வைத்து விட்டார். அற்ற்ஹை தீர்மானிக்க ஒரு "குழுவை" போட்டு விட்டார். அது "தொடர்ந்து வெடிக்கும்" என்பது வேறு செய்தி. இப்போதைக்கு, "இப்போ, இல்லாட்டா எப்போ" என்று பாட்டு பாடிவந்த ஸ்டாலின் குழுவினருக்கு தோல்விதான். இதுதான் கலிஞர் என்பது நிரூபணமானது மீண்டும்.

புலம் பெயர்ந்த தமிழர் வலைப்பின்னல் தொடங்கியது.

தமிழர்கள் பத்து கோடிபேர் உலகம் முழுவதும் இருந்தாலும், ஈழத் தமிழர்களின் செயல்பாடுகள் மட்டுமே உலகை பேசவைத்துள்ளன. புலம் பெயர்ந்த தமிழர் என்ற சொல்லுக்கு கூட, ஈழத் தமிழர்கள் புலம் பெயர்ந்த நாடுகளில் வாழ்ந்தாலும் விடாமல் தமிழின உணர்வை வெளிப்படுத்தி வருவதை உலகம் அறியும். இந்தியாவின் எல்லைகளுக்கு உட்பட்டு இருக்கும் தமிழ்நாட்டிலிருந்து வெளியேறி உலகம் முழுவதும் சிதறிக்கிடக்கும் தமிழர்களின் நிலைமைகளை ஒருங்கிணைக்க எண்ணி, "உலகத் தமிழர் அமைப்பு" என்ற ஒன்றை ஏற்படுத்தியுள்ள ராஜ்குமார் பழனிச்சாமியும், இரா.செழியனும் ஒரு கருத்தரங்கை சென்னையில், ஈழப்படுகொலை நாளான ஜூலை 23 ஆம் நாள் கூடினார்கள்.

அதில் "இந்தியாவிலிருந்து புலம் பெயர்ந்து சென்றுள்ள தமிழர்கள்" நிலைமை பற்றியும் பேச பலரையும் அழைத்திருந்தார்கள். ஆனாலும் அங்கே "ஈழத் தமிழர் " பற்றிய கருத்துக்கள்தான் அதிகம் வெளிப்பட்டன. முதலில் சென்னை பல்கலைக் கழகப் பேராசிரியர் மணிவண்ணன், ஒரு உரையை நிகழ்த்தினார். அது "ஈழத் தமிழர் இனப்படுகொலை" பற்றியது. அடுத்து நாவே நாட்டிலிருந்து வந்த பிரபு கண்ணனும், மனித உரிமை ஆர்வலர் டி.எஸ்.எஸ்.மணியும், " புலம் பெயர்ந்து இருக்கும் இந்தியத் தமிழர்களது" நிலை பற்றி பேசினார்கள். அதில் "தமிழர்களின் அடையாளம்" பற்றியும் பேச்சு வந்தது. "தமிழர் விரோத சக்திகள் இன்று திட்டமிட்டு, மத ரீதியாக தமிழர்களைப் பிரிக்கிறார்கள்" என்ற செய்தியையும் சொன்னார்கள். முஸ்லிம் தமிழர்களையும், கிறித்துவ தமிழர்களையும், தமிழின அடையாளத்திலிருந்து பிரிக்க ஒரு "சதி" நடப்பதாகவும், அதற்கான "பரப்புரை" செய்யப்படுவதாக்கவும்கூட கருத்துக்கள் வெளிவந்தன.

அத்தகைய முயற்சிகள், "சிங்கள சூழ்ச்சி" என்பதாக இலங்கையில் வர்நிக்கப்படவேண்டும் என்றும், இந்திய அரசின் உளவுத்துறை சூழ்ச்சி என்று காணப்படவேண்டும் எனவும் அங்கே கூறப்பட்டது. அதுதவிர "தமிழ்நாட்டில் ஆயிரம் ஆண்டுகளாக இரண்டறக் கலந்துவிட்ட, தெலுங்கு, கன்னட, மலையாள அடிப்படையை" ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கொண்டிருந்த அல்லது பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு இடம் பெயர்ந்த மக்கள், தம்ழ்நாட்டு தமிழர் பண்பாடுகளுடன் இரண்டறக் கலந்து "தமிழர்களாகவே" மாறிவிட்ட போதும் அவர்களை "மாற்று மொழியினர்" என்று முத்திரை குத்தி உடைக்கும் போக்கு இருக்கிறது என்றும் கூறப்பட்டது. அத்தகைய போக்கு டில்லி அரசால் அவர்களது உளவுத்துறையால் வரவேற்கப் படுகிறது என்பதும் எடுத்து வைக்கப்பட்டது. அதாவது பல பத்து ஆண்டுகளாக "தமிழர் வாழ்வியலுக்காக" போராடிவரும் சக்திகளை புறந்தள்ள இப்படி ஒரு சூழ்ச்சி செய்யப்படுகிறது என்றும் அங்கே கூறப்பட்டது.

அதனால் "தமிழர் அடையாளத்தை" புரிந்து கொள்வதில் ஸ்டாலின் கோரியுள்ள விளக்கம் எடுத்துக் கொள்ளப்படவேண்டும் எனக் கோரப்பட்டது. அதில் "ஒரே எல்லைக்குள், ஒரே பொருளாதார முறையில், ஒரே பண்பாட்டில், ஒரே மொழியில் இணையும் மக்கள் கூட்டம்" ஒரே தேசிய இனம் என்று கோரப்பட்டது நினைவு கூறப்பட்டது.அந்த கூட்டத்தில் உரையாற்றிய மருத்துவர் எழிலன், " பார்ப்பன சக்திகளிடம்" எச்சரிக்கையாக இருக்கவேண்டும் எண்பதை வலியிருத்தினார். இந்திய அரசு இப்போது "ஒற்றையாட்சியை நோக்கி" செல்கிறது என்றார். பார்ப்பனர் அல்லாத சக்திகளும் "தமிழர் விரோத பார்ப்பனீய அணுகுமுறைகளை" எடுத்துள்ளதை வழக்கறிஞர் பாண்டிமாதேவி நினைவு படுத்தினார். திருமுருகன் காந்தி பேசும்போது, " ஹிலாரி கிளிண்டன், ஜெயலலிதா, ராஜபக்சேவின் பிரதிநிதியாக இருக்கும் ஏன்.ராம்" ஆகியோர் செய்யும் செயல்களை கவனம் வேண்டும் என்றார். ராஜபக்சேவை போர்க்குற்றவாளி என அறிவிப்பதை விட, தமிழீழம் வேண்டும் என்பதே நமது குறிக்கோள் என்று அவர் கூறினார்.

பேராசிரியர் சரஸ்வதி பேசும்போது, " ராஜபக்சேவை போர்குற்றவாளி என்று அறிவிப்பதும், தமிழீழம் அடைவதும்" எதிர் எதிரானது அல்ல என்றும், இரண்டும் "ஒரே நாணயத்தின் இரண்டு வெவ்வேறு பக்கங்கள்" என்றும் கூறினார். ஹெட்லைன்ஸ் டுடே ஊடகத்திலிருந்து வந்த " ராஜேஷ் சுந்தரம்" ஊடகங்களில் "சாதகமான" சக்திகளை புரிந்து கொண்டு அவர்கள் மீது செயலாற்ற வேண்டும் என்றார். விடுதலைப் புலிகளின் " கொரில்லா தந்திரமும், போர் தந்திரமும்" ஊடககங்கள் இடையேயும், பரப்புரையிலும் கையாளப்படவேண்டும் என்றார். "தமிழர்களுக்கான கல்வி' என்ற தளிப்பில், வழக்கறிஞர் பாண்டிமாதேவியும், காரை மைந்தனும் பேசினார்கள். " "தாய் தமிழ் பயிற்றுமொழிக் கல்வியை" அவர்கள் வலியுறுத்தினர். கல்வி கற்றவர்கள் இன உரிமை விசயத்தில் முன்னே நிற்க வேண்டும் என்று பாண்டிமாதேவி வலியுறுத்தினார்.

கடைசியாக தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன. அவற்றில் " தமிழர்கள் மதம் தாண்டி சிந்திப்பதும், பழமை பண்பாட்டை உடைப்பதும் அவசியம்" என்று கூறப்பட்டது."சாதிகளை உடைப்பதும், பெண்ணடிமைத்தனத்தை உடைப்பதும்" தேவை என்பது வலியுறுத்தப் பட்டது.தமிழ்நாட்டு சட்டப்பேரவை கொண்டுவந்த " போர்குற்றவாளிகளை தண்டிப்பதையும், பொருளாதார தடையை இலங்கைக்கு அறிவிப்பதையும்" வரவேற்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 1981 ஆம் ஆண்டு எம்/ஜி.ஆர். அறிவித்த "உலகத் தமழ்ச் சங்கம்" பத்து கோடி நன்கொடையை அப்போது பெற்றதாயும், அதற்கு பதினாலு ஏக்கர் நிலம் மதுரையில் நீதிமன்றம் முன்னால் வழங்கப்பட்டதையும், அவை தஞ்சை தமிழ்ப் பலகலைக் கழகத்தின் க்கட்டுப்பாட்டில் இருப்பதையும், அதை மாற்றி களைஞர் ஆட்சி " உலகத் தமிழ் செம்மொழி தொல்காப்பியர் பேரவை" என்று ஏற்படுத்தியதையும் சுட்டிக் காட்டி, அதில் எம்.ஜி.ஆர்.செய்த திட்டத்தை இன்றைய தமிழக அரசு மீண்டும் கொண்டுவர கூட்டம் கேட்டுக் கொண்டது.

"நாடு கடந்த தமிழீழ அரசு "பற்றிய விளக்கத்தை பேரா.சரஸ்வதி அளித்தார். அப்போது அந்த "நாடு கடந்த தமிழீழ அரசாங்க தோழமை மையம்' இந்தியாவில் ஏற்படுத்தி செயல்படுகிறோம் என்பதையும் எடுத்துக் கூறினார். திருமுருகன் தனது உரையில் " நிறுவனங்களை தமிழர் நாளுக்காக" ஏற்படுத்துவது பற்றி கூறினார். மொத்தத்தில் ஐமப்துக்கு மேற்பட்ட தமிழின ஆர்வலர்கள் கலந்து கொண்ட கூட்டமாக அது இனிது நிறைவுற்றது.

குட்டிமணி,ஜெகன்,தங்கத்துரை கொலைகள் சென்னையில் நினைவு.

1983 ஆம் ஆண்டு 25 ஆம் நாள் வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழ்க் கைதிகளை, சிங்கள காடையர்கள், சிங்கள கைதிகள், சிங்கள ராணுவத்தினர் இணைந்து சிறைக்குள் அவர்களது அறைகளுக்குள் புகுந்து தாக்கினார்கள். வெட்டினார்கள். கண்களைப் பறித்தார்கள். படுகொலை செய்தார்கள். அதில் டெலோ இயக்கத்தின் தலைவர்களாக இருந்த "குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன்" ஆகியோர் குறிப்பாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர்.குட்டிமணி தனது மரணதண்டனையை எதிர்பார்த்து இருக்கும்போதே, தனது கண்களை தானம் செய்ய விரும்புவதாகவும், தன் கண்கள் மாறப்போகும் "தமிழ் ஈழத்தை" காணவேண்டும் என்றும் கூறியிருந்தார். அதனாலேயே அவர்களது "கண்களை சிங்களக் காடையர்கள்" பறித்து எடுத்து அவர்களை கொலை செய்தனர்.

இந்த நாளில், அந்த தமிழீழத் தியாகிகளின் நினைவாக, சென்னை மயிலாப்பூர் நொச்சிக்குப்பத்தில் அவர்களது படங்களை வைத்து, அனைத்து இந்திய மீனவர் சங்கங்களின் கூட்டப்பினர்" மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். அதில் "நாடு கடந்த தமிழீழ அரசாங்க தோழமை மையம் அமைப்பாளர் பேரா.சரஸ்வதி" , "உலகத் தமிழர் பேரமைப்பு பொருளாளர் சந்திரேசன்" , அகில இந்திய பாரம்பரிய மீனவர் சங்க தலைவர் எஸ்.எ.மகேஷ், மனித உரிமை ஆர்வலர் டி.எஸ்.எஸ்.மணி, வழக்கறிஞர் அருள், தமிழ்நாடு மீனவர் முன்னேற்ற சங்கம் தலைவர் கபடி.மாறன், பெரியார் திராவிடர் கழகம் தென் சென்னை மாவட்ட எயலாளர் தபசி குமரன், மற்றும் மீனவர் சங்க முன்னோடிகள் கலந்து கொண்டார்கள். ஆர்வம் மிகுதியால் அங்கே வந்த காவல்துறை அதிகாரிகளும் முதலில் திகைத்துவிட்டு பிறகு "குட்டிமணி, ஜெகன்" பற்றி கேட்டு தெரிந்து கொண்டது வித்தியாசமாக இருந்தது.

Monday, July 18, 2011

விடுதலை பெற்ற தெற்கு சூடானும், தமிழீழ விடுதலையும்.

மேற்பட் தலைப்பில் சென்னையில் சந்க்கிழமை அன்று ஒரு அரனுக்கு கூட்டத்தை, "நாடு கடந்த தமிழீழ அரசாங்க தோழமை மையம்" சென்னை அண்ணாசாலையில், "தேவநேயப் பாவாணர் நூல் நிலையக் கட்டிடத்தில்" தோழமை மைய அமைப்பாளர் பேரா.சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது. அதில் திட்டமிட்டபடி, "தமிழக சட்டமன்றத்தில் ஆளும் கூட்டணியின்" தோழமைக் கட்சிகளான "புதிய தமிழகம்", "இந்தியக் கம்யுனிஸ்ட் கட்சி" "மனித நேய மக்கள் கட்சி", "கொங்கு இளைஞர் பேரவை" ஆகியவை கலந்துகொண்டு உரையாற்றினர். இது "கொள்கை வகுக்கும் அவையின்" உறுப்பினர்களை பேசவைத்து ஏற்பாடு செய்யப்ப்பட்ட கூட்டம் என்பதால் "அரசியல் முக்கியத்துவம்" பெற்றதாக இருந்தது.


"தெற்கு சூடான் விடுதலை" பெற்றதை சுட்டிக்காட்டி, அதேபோல "தமிழீழமும் விடுதலை" பெறவேண்டும் என்ற கருத்தமைப்புடன் இந்த கூட்டம் நடத்தப்பட்டது. கலந்துகொண்ட "பல்வேறு கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களும்" அத்தகைய கருத்தையே முன்வைத்து உரையாற்றினார்கள். வழக்கறிஞர் பாண்டிமாதேவி, வரவேற்பு உரை நிகழ்த்தினார். அதில், மருத்துவர் கிரிஷ்ணசாமி, நஞ்சப்பன், தனியரசு, அஸ்லாம் பாட்சா ஆகியோர் "தமிழீழ மக்களுக்காக" தன்கள் கட்சிகள் மூலம் செயல்பட்டு வரும் வகை, வகையான செய்திகளைக் கூறி வரவேற்றார்.. திருமுருகனும், மகேஷும், மணிவண்ணனும், தமிழீழ மக்களுக்காக செயல்பட்டுவரும் விவரங்களை எடுத்துக் கூறி வரவேற்றார்.

மே 17 இயக்க திருமுருகன் பேசும்போது, ராஜபக்சே போர்க்குற்றவாளி என்று கூறி தஹ்ண்டிக்கவேண்டி இவர்களிடம் நாம் கேட்கவேன்ம்டாம், மாறாக தமிழீழம் கிடைத்துவிட்டால் நாமே ராஜபக்சேவை தண்டிப்போம் என்றார். அந்த கருத்தை மறுத்து உரையாற்றிய அகில இந்திய பாரம்பரிய மீனவர் சங்க தலைவர் எஸ்.எ.நாகேஷ், " அதுதவரான கருத்து" என்றார். ராஜபக்சேவை தண்டிக்கவும் வேண்டும், தமிழீழம் பெறப் போராடவும் வேண்டும் என்றார். அதையே பின்னால் வந்த "புதிய தமிழகம் தலைவர் மருத்துவர் க.கிரிஷ்ணசாமி, " முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் கொண்டுவந்த தீர்மானமான போர்க்குற்றவாளி ராஜபக்சேவை தண்டிக்க கோரும் தீர்மானம்" மீது தான் தான் முதலில் கருத்து டேஹ்ரிவித்து பேசினேன் என்றார். உலகம் முழுக்க "தேசிய இணைகளின் பிரச்சனைகள் " வரும்போதெல்லாம் அதை ஆடஹ்ரிக்கும் உலக நாடுகள் ஏன் "தமிழனுக்கு" மட்டும் ஆடஹ்ரவு தஹ்ருவதில்லை எண்பதை சமூக ஆராய்ச்சி செய்து பார்க்க வேண்டும் என்று அவர் அப்போது கூறினார்.


அந்த கேள்விக்கு விடை அளித்த அடுத்த பேச்சாளரான டி.எஸ்.எஸ்.மணி," தமிழ் தேசிய இனம் மட்டுமே உலகில் போராடும் தேசிய இனங்களில், கடல் படையையும், வான்படையையும் கொண்டிருந்தது " எவ்ன்று கூறி தமிழ் தேசிய தலைவர் மேதகு பிரபாகரனால் மட்டுமே அது சாத்தியப்பட்டது என்றார். பெரியார் வளர்ப்பில், தமிழ் தேசியம் மட்டுமே, "சாதிகளுக்கு எதிராகவும், பெண்ணடிமைக்கு எத்ரிராகவும்" கிளம்பிய ஒரே "தேசிய இன எழுச்சி" என்றார். அதமால்தான் உலக ஏகாதிபத்திய நாடுகள், தமிழ் தேசிய இனத்தை வளர விடாமல் சதி செய்கின்றனர் என்றார். ஆயுதப் போராட்டத்தில் இருந்து அரசியல் போராட்ட்டத்திற்கு வந்திருக்கும் தமிழர்களைக் கண்டு, உலக ஏகாதிபத்திய சக்திகள் அதிர்ச்சி அடைந்து "தமிழின விரோதப் போக்கை" மேற்கொண்டிருந்தன என்றும், அதனால்தான் அவர்களுக்கு "ஒன்றுபட்டு தமிழினத்தை அழிக்க" வாய்ப்பு கிட்டியது என்றார். "தமிழர் அடையாளத்தை அழிக்க இப்போது "மதம், சாதி" போன்ற தந்திரங்களை 'தமிழின எதிரிகள்" பாவிக்கிறார்கள் என்றார்.


அடுத்து உரையாற்றிய தியாகு, " தெற்கு சூடான் நிலைமையையும், தமிழீழ நிலைமையையும்" ஒப்பிட்டார். தெற்கு சூடான் விடுதலையை அமெரிக்கா ஆதரிப்பது 'எண்ணை அவலத்திற்காக மட்டும்" என்று காண்பது தவறு என்று "திருமுருகன் கருத்துக்கு" மறுப்பு அளித்தார். இஸ்ரேலை அமெரிக்கா ஆதரித்தது எண்ணை வாழ்த்திற்கா? என்று கேள்வி எழுப்பினார். தெற்கு சூடான் மக்களின் தியாகத்தை நாம் "கொச்சை படுத்தக்கூடாது" என்றார். அதையே பின்னால் வந்த "தனியரசும், நஞ்சப்பனும்" கூறினர். மனித நேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரான அஸ்லாம் பாச்சா, "தமிழீழம் மலர்வது தவிர்க்க முடியாதது" என்றார். கொங்கு இளைஞர் பேரவை சட்டமன்ற உறுப்பினரான தனியரசும் அதையே வலியுறுத்தினார்.

சென்னை பலகலைக் கழகத்தின் அரசியல் துறை பேராசிரியர் மணிவண்ணன்,"தமிழனின் இறையாண்மையை" வேண்டி போராடியே ஆகவேண்டும் என்றார். நிறைவாக பேசிய நஞ்சப்பன், "இந்திய கம்யுனிஸ்ட் கட்சி, ராஜபக்சேவின் போர்குற்றங்கள் பற்றி அகில இந்திய ரீதியில் கொண்டு சென்றிருப்பதை" விளக்கினார். டில்லியில் அவர்கள் நடத்திய போராட்டத்தில் பேசிய அந்த கட்சியின் பொதுச்செயலாளர் பரதன், " இலங்கையில் தமிழர்களுக்கு தாயகம் அமைய வேண்டும்" என்று கூறியதை நினைவு கூர்நதார். நன்றி அறிவிப்பு செய்ய "பெரியார் திராவிடக் கழகத்தை" சேர்ந்த தபசி குமரன் வந்திருந்து சிறப்பாக் உஅரை நிகழ்த்தி நிகழ்ச்சியை இனிதே முடித்தார்.

Thursday, July 14, 2011

நாடு கடந்த தமிழீழ அரசாங்க தோழமை மையம்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்க தோழமை மையம்.

16 --07 --2011 அன்று சனிக்கிழமை மாலை ஐந்து மணிக்கு, சென்னை அண்ணாசாலை- தேவநேயப் பாவாணர் அரங்கில்," விடுதலை பெற்ற தெற்கு சூடானும்,தமிழீழ விடுதலையும்" என்ற தலைப்பின் கீழ், தமிழக சட்டமன்றத்தில், "போர்குற்றவாளிகளை ஐ.நா. அவையில் அறிவிக்க டில்லி அரசை நிர்ப்பந்திக்கும்" தீர்மானத்திற்கு ஆதரவளித்த "ஆளும் கட்சியின் கூட்டணி கட்சிகளின் சட்டமன்ற உறப்பினர்கள்" உரையாற்றுவார்கள். தமிழக சட்டமன்றத் தீர்மானத்தில், " போர்குற்றம் செய்த இலங்கையின் மீது பொருளாதார தடைவிதிக்க வலியுறுத்திய" மேற்கண்ட சட்டமன்ற கட்சித் தலைவர்கள், "ஈழத் தமிழர்களுக்கு நிரந்தரத் தீர்வான" தமிழீழம் மலர வழிகாண வலியுறுத்துவார்கள். புதிய தமிழகம், இந்திய கம்யுனிஸ்ட் கட்சி, கொங்கு இளைஞர் பேரவை, மனித நேய மக்கள் கட்சி ஆகியவற்றின் சட்டமன்ற கட்சித் தலைவர்கள், "நாடு கடந்த தமிழீழ அரசாங்க தோழமை மையம்" நடத்தும் கருத்தரங்கில் "தெற்கு சூடானின் வழியில் தமிழீழம்" என்ற விளக்க உரை நிகழ்த்துவார்கள்.

தேசிய இன விடுதலை வரலாற்றை சென்னை பல்கலைக் கழக பேராசிரியர் மணிவண்ணன் விவரிப்பார். பேராசிரியர் சரஸ்வதி தலைமை தாங்குவார்." யாழினி" என்ற குறும்படம் "தமிழீழ விடுதலைப் போரில்" கைம்பெண்களாக ஆக்கப்பட்ட ௮௦௦௦௦ தமிழ்ப்பெண்கள் உருவான நிலைமையை சித்தரிக்கிறது.ஐந்து மணிக்கு "யாழினி" குறும்படம் திரையிடப்படும். அதை அடுத்து கருத்தரங்கம் நடைபெறும்.

Wednesday, July 13, 2011

தெற்குசூடான் விடுதலையும்,தமிழீழ விடுதலையும்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்க தோழமை மையம், வருகிற 16 ஆம் நாள் சனிக்கிழமை மாலை ஐந்தரை மணிக்கு சென்னையில் " தேவநேயப் பாவாணர் நூல் நிலையக் கட்டிடத்தில்" ஒரு கருத்தரங்கு ஏற்பாடு செய்துள்ளனர்." தெற்கு சூடான் விடுதலையும், தமிழீழ விடுதலையும்" என்ற தலைப்பில், " கொள்கை வகுக்கும் அவையின்"உறுப்பினர்கள கலந்துகொள்ளும் கருத்தரங்கை ஏற்பாடு செய்து ள்ளனர் அதில் சென்னை பல்கலைக் கழகப்பேராசிரியர் மணிவண்ணன், புதிய தமிழக சட்டமன்றக் கட்சித்தலைவர் டாக்டர் கிரிஷ்ணசாமி, அகில இந்திய பார்வர்ட் பிளாக் சட்டமன்ற கட்சித் தலைவர் கதிரவன், இந்தியக் கம்யுனிஸ்ட் கட்சி சட்டமன்ற கட்சித்துணை தலைவர் குணசேகரன், மனித நேய மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் அஸ்லாம் பாட்சா, கொங்கு இளைஞர் பேரவை சட்டமன்ற கட்சி தலைவர் தனியரசு, ஆகியோர் உரை நிகழ்த்த உள்ளனர். நாடு கடந்த தமிழீழ அரசாங்க தோழமை மையம் அமைப்பாளர் பேராசிரியர் சரஸ்வதி தலைமை தாங்குவார். தமிழ் உணர்வாளர்கள் அனைவரும் வருக.

Monday, July 11, 2011

கொலையை திசைதிருப்பும் கருப்பு ஆடு?

வழக்கறிஞர் சங்கரசுப்பு மகன் "சதிஷ்குமார் " படுகொலை செய்யப்பட்டது அனிவருக்கும் தெரிந்த உண்மையாக ஆகிவிட்டது. சதிஷ்குமார் கொலையில் மறைந்து கிடக்கும் மர்மங்களை ஒவ்வொன்றாக "முடிச்சு அவிழ்க்க" சீ.பி.ஐ. விசாரணை உதவும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பும். சாதாரண வட்டார காவல்துறையால் கவனம் செலுத்தி ஒரு கொலையை கண்டுபிடிக்க "திணறும்போது" மாநில அரசு அந்த வழக்கை "சீ.பி.சீ.ஐ.டி.இடம் ஒப்படைக்கிறது. அதேசமயம் வழக்கை க்மொடுத்தவர்கள் அல்லது பாதிக்கப்பட்டவர்கள், வழக்கை சரியாக வட்டார அல்லது மாநில காவல்துறையினர் கையாள மாட்டார்களோ என்று சந்தேகப்பட்டால் அவர்கள் மத்திய அரசின் கையில் உள்ள "சீ.பி.ஐ. விசாரணையை" கோருகின்றனர். அவ்வாறு சிபியை கைகளில் கொடுக்கப்படும் வழக்குகள் சரியான "குற்றவாளியை" கண்டுபிடித்துவிடும் என்பது ஒரு நம்பிக்கை.

இந்த "சதிஷ்குமார்" படுகொலையில் முதலில் "காணமல் போனவர்" என்பதாகத்தான் காவல்துறை தனது கவன்த்தை காட்டியது. ஏழாம் நாள் காணாமல் போனால், இரண்டு நாட்கள் பெற்றோர்களும், அவருக்கு துணையாக நண்பர்களும், வழக்கறிஞர்களும், இறங்கி " நீதிமன்றத்திலும், தெருவிலும், வழக்கு போடுவதும், போராடுவதும்" என்று தமிழகம் முழுக்க திரண்டு தங்கள் ஒற்றுமையை காட்டிய பிறகுதான், நீதிமன்ற உத்தரவும், "பிணப் பரிசோதனைக்கு" சிறப்பு மருத்துவரை நியமித்ததும், சிபிஐ கைகளில் வழக்கை கொடுப்பதும் என்று "தீர்ப்புகளை" வழங்கியது.இது "சாதாரண" குடிமக்களுக்கு வழங்கப்படுமா என்ற கேள்வி ஒருபுறம் இருக்கிறது. அதாவது பிரபல வழக்கறிஞர் வீட்டில் "காவல்துறை அத்துமீரலோ" அல்லது "சமூகவோரித்த" அத்துமீரலோ நடக்கும்போது, போராடி, வழக்காடி கிடைக்கின்ற தீர்ப்புகள் சாதாரண குடிமக்களுக்கு கிடைப்பதில்லை என்றால், அத்தகைய ஒரு "சமூகத்தை" எதிர்ஹ்த்டுதான் சங்கரசுப்பு போராடிவருகிறார். அவரை "நக்சலைட்" என்றும், "மாவோவாதி" என்றும் காவல்துறை முத்திரை குத்துகிறது.


இப்போது அம்பலமாகி இருக்கும் செய்தி மிகவும் ஆபத்தானதாக இருக்கிறது. கொல்லப்பட்ட சதிஷ்குமார் "தற்கொலை" செய்துகொண்டதாக "பொய்யான" சாட்சிகளை உருவாக்க "திருமங்கலம் காவல்துறை ஆய்வாளர் சுரேஷ்பாபு" முயற்சி செய்தது அம்பலமாகி உள்ளது. அதாவது இந்த சுரேஷ்பாபு பதிமூன்றாம் தேதி ஏரியில் கிடைத்த "சதீஷ் சடலத்தை" கிடைத்த உடனே ஊடகத்தார் முன்பும், பெற்றோர் முன்பும் " விசாரணை அறிககையை" அதாவது சடலத்தின் உடலில் கிடைத்த "தடயங்களை குறிக்கும் அறிககையை" பதிவு செய்யாமல் மாலை நேரத்தை கடக்க விடுகிறார். பிறகு இரவு மூன்று மணிக்கு அந்த அறிககையை தயார் செய்கிறார். அதில் சடலத்தின் சட்டை பையில் "இரண்டு செவன் ஒ கிளாக் பிளேடு" இருந்ததாக எழுதுகிறார். இது சடலம் கிடைத்த மாலை நேரத்தில் எடுக்கப்பட்ட எந்த புகைப்படத்திலும், காணொளியிலும் காணவில்லை. அடுத்த நாள் " போஸ்ட்மார்டம் " செய்வதற்கு நீதிமன்றம் சிறப்பு மருத்துவரை அனுமதித்த பிறகு, அந்த "போஸ்ட்மார்டம் அறிக்கையிலும்" தடயமாக அப்படி பிளேடுகள் இருந்ததாக காட்டப்படவில்லை. பிறகு " சிபியை விசாரணையில் கேட்டால் முன்னுக்கு பின் முரணாக அந்த சுரேஷ் பாபு" கூறுகிறார்.

ஆனால் "பதினாறாம் தேதி" நீதிமன்றம் சிபியை விசாரணைக்கு உத்தரவிட்ட பிறகு இந்த சுரேஷ்பாபு "நீதிமன்றத்தில் இரண்டு செவன் ஒ கிளாக் பிளேடுகளை" கொண்டுவந்து ஒப்படைத்துள்ளார். ஏன் இப்படி அவர் செய்யவேண்டும்? வருக்கு பின்னால் இருக்கும் "பெரிய தஹிகாரி" யார்? "தமிழக காவல்துரியின் உயர் அதிகாரி" எவ்வளவுதான் நேர்மையாக இருந்தாலும், கீழே இருக்கும் பலம் கொண்ட அதிகாரிகள் "ஐந்து ஆண்டுகள் கருப்பு ஆடுகளாக "செயல்பட்டு பழகிப் போனவர்கள் இந்த "படுகொலையின்" பின்னே இருக்கிறார்களா? அவர்களுக்கு சிறிய அதிகாரி சுரேஷ்பாபு உதவி செய்கிறாரா? "பழிவாங்கும் படலத்தை" வழக்கறிஞர் குடும்பம் மீது "பாய்ச்சியுள்ள" காவல்துறையின் "கருப்பு ஆடுகள்" யார்? யார்? இதுற்ற்ஹான் சொபயை விசாரணையில் வரவேண்டும். "தாமதமில்லாமல்" அது வெளி வருமா?

Sunday, July 10, 2011

வடஇந்திய ராணுவக் குற்றத்தையும், தமிழ அதிகாரி சிரம் ஏற்கிறாரா?

சென்னையில் தில்சன் என்ற குடிசைவாழ் தமிழ் சிறுவன் அந்நியாயமாக "சுட்டுக் கொல்லப்பட்டான்" என்று தமிழ்நாடே கொந்தளித்தது. தமிழக முதல்வரும் " சிறுவன் என்ன தீவிரவாதியா? அவனை சுட்டுக் கொள்ள? குற்றம் செய்த ராணுவ வீரர், தமிழக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்" என்று கூறினார். இதனால் டில்லி அதிகம் கவலை அடைந்தது. வன்னி சென்று தமிழர்களை படுகொலை செய்த இந்திய ராணுவத்தின் கொலை வெறி தொடர்ச்சிதான் இங்கும், ஏழைச் சிறுவனது உயிரை எடுத்துள்ளது என்பது ஊடகங்களின் மற்றும் தமிழர்களின் புரிதலாக இருந்தது. சுட்ட ராணுவ அதிகாரி அடையாளம் காணப்பட்டார் அவர் பெயர் அஜய்சிங் என்று வாரம் இருமுறை ஏடுகள் சனிக்கிழமை வெளியிட்டன. அற்ற்ஹாவது அவர்களுக்கு அதற்கு இரண்டு நாட்கள் முன்பே அந்த செய்தி கிடைத்து விட்டன.

அப்படி இருந்தும் திடீரென "சனி இரவு உண்மைக் குற்றவாளி என்று தமிழ் ராணுவ அதிகாரி எனும் ஒய்வு பெற்ற கந்தசாமி ராமராஜனை சரணடைந்தார்" என்று கொண்டுவந்து நிறுத்துகிறார்கள். ஏற்கனவே " ராஜபக்சே அரசின் போர்குற்றங்கள் உலகப் பிரபலம் அடைந்துள்ள" நிலையில், அவற்றை நடத்த "இந்தியப் பேரரசு நேரடியாக முழுமையாக ஈடுபட்ட செய்தி" குறைந்த பட்சம் உலகத் தமிழர்கள் மத்தியிலும், இந்தியத் தமிழர்கள் மத்தியிலும் அம்பலப்பட்டு நிற்கும் போது, இப்படி ஒரு செயலை, "தமிழக சட்டமன்றம் போர் குற்றங்களை எதிர்த்து தீர்மானம்" போட்டுள்ள நேரத்தில் அதர்கு இந்தியா முழுவதும் பொது மக்கள் அப்பிபிராயம் திரண்டு வரும் காலத்தில், சென்னையில் இந்திய ராணுவ அதிகாரி அதிலும் "வடநாட்டு அதிகாரி ஒரு தமிழ் சிறுவனை அந்நியாயமாக சுட்டுக் கொன்றான்" என்ற செய்தி தமிழ் மக்கள் மத்தியில் இந்திய ராணுவம் பற்றிய ஒரு எதிரான போக்கைத்தான் உருவாக்கும் என்று டில்லி கவலை பட்டது.

டில்லியின் இந்த கவலை, தமிழக அரசியல்வாதிகள் மத்தியில் உருவாக்கி உள்ள " இலங்கையின் போர்குற்றங்கள் பற்றிய ஆங்கில காட்சி ஊடக திரையிடல் மூலம் எழுந்துள்ள டில்லி எதிர்ப்பு மேலும் வலுப்பெற்றுள்ளதாக" கிடைத்த அவர்களது சொந்த ஆய்வின் மூலம் அதிகமானது. அதை ஒட்டி டில்லி "தமிழக அரசியல் அதிகாரத்தை தொடர்பு கொள்ளாமல், அதிகார மட்டத்தில்" தங்களது உரிமையுடன் தொடர்பு கொண்டு, கலந்து பேசி உள்ளதாக தெரிகிறது. அதில் வழங்கப்பட்டுள்ள ஆலோச்டனைகளின் படியும், பரிமாற்றங்களின் படியும் "தமிழக உயர்மட்ட காவல் அதிகாரி" இத்தனை நாளும் செய்யாத நேரடி வருகையை அந்த "ராணுவ குடியிருப்பு வளாகத்திற்கு" சனி காலையில் செய்கிறார். ஏற்கனவே சம்பவம் நடந்த நேரத்திலேயே ஊடகத்தாருக்கு முன்னிலையிலேயே "ராணுவ அதிகாரிகள் அந்த சம்பவ இடத்து மரத்தின் அடியில் குண்டு கண்டுபிடிக்கும் கருவிகளை i வைத்தக் கொண்டு ஆராய்ச்சி" செய்ததையும், சில இழை, தளைகளை போட்டு அந்த இடத்தை மறைத்ததையும் நேரில் கண்ணால் நாமே பார்த்தோம்.

.அதேவேலையை இப்போது தமிழக உய்த்யர் அதிகாரி முன்னிலையில் செய்ய இத்தனை நாள் கடந்து அவசியம் இல்லை. ஆனால் "குற்றவாளி மாற்றப்பட " இந்த வருகை தேவைப்பட்டது" போல.வாகனத்தில் வந்த வடநாட்டு அதிகாரி "அஜாய்சிங்" திட்டிவிட்டு போய்விட்டாராம். உடனே அந்த அடுத்தவீட்டு "ஒய்வு பெற்ற தமிழ் அதிகாரி" கந்தசாமி ராமராஜன் தன் கையில் இருந்த துப்பாக்கியால் குறி பார்த்து சுட்டாராம்.மீண்டும் தமழர்களும், தமிழ்நாடும் ஏமாற்றப் படுகிறார்களா?

Friday, July 8, 2011

தயா பதவி பறிப்பும், சக்சேனா கைதும் ஒரே நேரத்திலா?

இது என்ன? அந்த குழுமம் மீது மேலிருந்தும், கீழிருந்தும் ஒரே நேரத்தில் தாக்குதலா? ஏன் இந்த விபரீதம்? தயைதி ௨௦௦௬ ஆம் ஆண்டில் ஐ.டி.அமைச்சராக இருந்தபோது தமிழ்நாட்டை சேர்ந்த "ஏர்செல்" நிறுவனத்திற்கு கேட்ட "உரிமங்களும்" கொடுக்காமல், வற்ப்புறுத்தி மலேசியாவின் "அஸ்ட்ரோ ஆனந்தகிரிஷ்ணனிடம்" விற்க வைத்தார் என்பது முதல் குற்றச்சாட்டு. அதன்பிறகே 'அந்நிய நேரடி மூலதனத்தை" ஐம்பது விழுக்காடு உயர்த்தி, அதை அடிப்படையாகக் கொண்டு, சன் டி.டி.எச்.இற்கு, 765 கோடி மூலதனத்தை அந்த அஸ்ட்ரோ ஆனந்தகிரிஷ்ணனின் "மக்சிஸ்" நிறுவனத்திலிருந்து பெற வழி செய்தார் என்பது குற்றச்சாட்டு. அதன்பிறகே "மாக்சிஸ்" நிறுவனத்திற்கு பல வடநாட்டு "உரிமங்களை" வழங்கினார் என்கிறது சீ.பி.ஐ. இதை உச்சநீதிமன்றத்தில், "தாயாவை விசாரிப்பதற்கு முன்ப எப்படி சீ.பி.ஐ. சொல்லலாம் எனபதுதான் "தயா தரப்பு" வாதம். அதையேதான் "தளபதி ஸ்டாலினும்" கேட்கிறார்.

சிவசங்கரன் கூறிய குற்றச்ச்காட்டுகளை வைத்துக் கொண்டு எப்படி சீ.பி.ஐ. இப்படி ஒரு முடிவுக்கு வரலாம் எனபதே அவர்கள் தரப்பு வாதம். அதுவே திமுக தலைவர் தரப்பு வாதம் அல்ல. அவர் " ஊடகங்கள் எப்படி விசாரணை நடத்தி தீர்ப்பு கூறலாம்" எனபதுதான். ஊடகங்கள் என்றால், கலைஞர் நடத்தும் " காட்சி ஊடகமும், அச்சு ஊடகமும்" வருமல்லவா மாறன் சகோக்கள் நடத்தும், " இருபது காட்சி ஊடகங்களும், முப்பது எப்.எம். ரேடியோக்களும், அச்சு ஊடகங்களும்" வருமல்லவா? எதை கலைஞர் சொல்கிறார்? அமிர்தமும், ஆசிர்வாதமும், கூறிய செய்திகள வைத்து, " கனிமொழியை'' கைது செய்யலாம் என்றால் இது ஏன் ஓடாது என்று சீ.ஐ.டி.காலனி தரப்பு கேட்காத? தயா விசயத்தில்கட்சி பாதுகாக்கும் என்ற சொள்ளை கூறத் தயாராக இல்லாத கலைஞரை" கேள்வி கேட்டு, '' தயாவிற்கு ஆதரவாக''' பதில் சொல்ல வைத்ததும் ஊடகங்கள் தானே?" அப்படியானால் ஊடகங்கள் உதவுகின்றனவா? ஒப்த்திரவம் செய்கின்றனவா?


அதேநேரம் " சாக்ஸ்'' மாட்டியதும் நடந்துள்ளதே? அவர்கள் செய்த முன்னாள் வினைகள்தானே" விளையாடி இருக்கிறது? திரை உலகத்தை எந்த அளவுக்கு " துன்புறுத்தி" வந்தார்கள்? இப்போது எல்லாம் சேர்ந்து வந்து தாக்குகிறதே? அதிலும் "கலாநிதியும்"சேர்ந்து மாட்டுகிறாரே? திரை உலக பிரமுகர்கள் எத்தனை பேர் புழுங்கி தவித்தார்கள்? "'தாயாரிப்பாளர் சங்கதேர்தலில்" வெற்றி பெற்ற " கே.ஆர்.ஜி. போன்றவர்களுக்கு அளிக்கப்பட வாக்கு சீட்டுகளை, "சன் குழும" கும்பல் ஒன்று வந்து " கிழித்துப்போட்டு" தாங்கள் அறிவித்த " நிர்வாகிகளை" நிரந்தர மாக்கினார்களே? அதை செய்தது ஐயப்பன் என்ற சாக்ஸ் ஆள்தான் ஏறு இப்போது காவல்துறை கூறுகிறதே? அது போதாதென்று " நித்யானந்தா" கும்பல் மீண்டும் வழக்கு தொடுக்கிறார்களே?அதிலும் "கலாநிதியையும்" சேர்த்து பேசுகிறார்களே? இவையெல்லாம் ஒரே நேரத்தில் வார வேண்டுமா? "சாமியார்களின் ஆபாசத்தை" காட்சி ஊடகங்களிலும், அச்சு ஊடகங்களிலும் வெளியிட்டு "வணிகம்" செய்யலாமா? என்று பொதுமக்களும் கேட்பார்களே? அதால் இந்த இரண்டும் ஒரே நேரத்தில் வந்தது "வினை விதைத்தவன் வினையைத் தானே அறுப்பான்" என்று கேட்கத் தோன்றும்.Download:

Monday, July 4, 2011

ஹெட்லைன்ஸ் டுடே வெளியிடும் " கொலைக் களம்"

ஹெட்லைன்ஸ் டுடே வெளியிடும் " கொலைக் களம்"
இங்கிலாந்தில் உள்ள "சேனல்-4 "என்ற அலைவரிசை நிறுவனத்திடம் "இலங்கையில் கொலைக்களம்" என்ற ஆவணப் படத்தை விலைக்கு வாங்கிய இந்திய தொலைக்காட்சியான ஹெட்லைன்ஸ் டுடே அந்த படத்தை "ஒரு விவாதத்துடன்" திரையிட இருக்கிறது. அதாவது ஜூலை -7 ஆம் நாள் இரவு 10 மணிக்கும், ஜூலை- 8 ஆம் நாள் இரவு 11 மணிக்கும், ஜூலை- 9 ஆம் நாள் இரவு 10 ௦ மணிக்கும், மூன்று பாகங்களாக பிரித்து, அவற்றின் மீது ஒரு நடுவருடன் பல புள்ளிகளிடம் விவாதம் நடத்த உள்ளனர்.

இந்தியராணுவ வீரரை, தமிழக காவல்துறையிடம் ஒப்படை?

தில்சான் என்ற சிறுவனை அநியாயமாக சுட்டுக் கொன்றது ஊரெல்லாம் தெரிந்து விட்டது. அதனால் தமிழக முதல்வர் "துப்பாக்கி சூடு நடத்தி கொலை செய்த "இந்திய ராணுவ வீரரை" தமிழக காவல்துறை வசம் ஒப்படைக்க வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டார். "சட்ட-ஒழுங்கு " பிரச்சனை நடந்த ஒரு சம்பவத்தில், அந்த வட்டாரத்திற்கு பொறுப்பான காவல்துறையிடம், "குற்றம் சாட்டப்பட்டவரை" ஒப்படைக்க வேண்டும் என்ற வேண்டுகோள், சட்ட -ஒழுங்கை பாதுகாப்பதற்கான ஒரு அறிவிப்புதான். ஆனால் அதை "திமிர்" பிடித்த இந்திய ராணுவ துறை ஏற்குமா? என்ற கேள்விதான் நிற்கிறது. அதுவும் நடந்த சம்பவத்தை "தவறானது" என்று ஒப்புக்கொண்ட ராணுவ அதிகாரியான " பிரிகேடியர் சஷி நாயர்" அந்த துப்பாக்கி சூட்டை "தமிழக காவல்துரையினர்கூட" செய்ஹ்டிருகலாம் என்று ஊடகவியலாளர்களிடம் கூறினாரே அதுதான் " கடுமையான தாக்குதல்"

அப்படி "தமிழக காவல்துறை" பற்றி திமிருடன் கூறிய ஒரு ராணுவ அதிகாரியை அனுப்பி, ஊடகத்தரிடம் "சமாளி" என்று அனுப்பி வைத்த, " தெற்கு மண்டல ராணுவ முகாம்" எப்படி தமிழக முதல்வரின் வேண்டுகோளை ஏற்று தங்களது " ராணுவ வீரரை" தமிழக காவல்துறையிடம் ஒப்படைக்கும் என்பதே இப்போது கேள்வி. துப்பாக்கி சூடு நடத்திய ராணுவ வீரர் அந்த நிகழ்ச்சி நடக்கும்போது, " குடித்திருந்தாரா" என்ற கேள்வி வேறு இப்போது எழுந்துள்ளது. ஏன் என்றால், "மஞ்சள் நிற முழு கால் சராயும், கருப்பு நிற டி-சட்டை எனும் மேல் சட்டையும் அணிந்திருந்த ஒரு சிவப்பு நிற இளைஞனான ராணுவ வீரர் தான்" அந்த துப்பாக்கி சூட்டை நடத்தினார் என்ற சந்தேகம் அந்த இடத்தில் நின்றவர்கள் மத்தியில் கசிந்துள்ளது. அந்த "கொடுமதி படைத்தவனை" இந்திய ராணுவம் தமிழக காவல்துறையிடம் ஒப்படைக்குமா? அல்லது காப்பாற்றுமா? என்ற கேள்வியும் அத்துடன் எழுந்துள்ளது.

Sunday, July 3, 2011

சென்னையில் வன்னியா?, காஷ்மீரா?

இந்திரா நகரும், சத்தியாவாநிமுத்து நகரும் சென்னையில் உள்ள குடிசைப் பகுதிகள். அங்கே ஆயிரக்கனக்கில் ஏழை மக்களும், தலித் மக்களும் வாழ்ந்து வருகிறார்கள். அந்த இடம் பிரபல மன்றோ சிலை அருகே உள்ளது. இந்திய ராணுவம் அந்த வட்டாரத்தில் தனது அலுவலகங்களை வைத்திருக்கிறது. அதன் அருகே ராணுவத்தில் வேலை செய்பவர்களது குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். அதை " குடிமக்கள் வாழும் இடம்" என்று ராணுவத்தினர் அழைக்கிறார்கள். அந்த இடத்தில் இன்று மதியம் அந்த சம்பவம் சென்னையையே குலுக்கியது. 13 வயது பய்யன் ஒருவன் துப்பாகியால் சுடப்பட்டான் என்பதுதான் அந்த செய்தி. அந்த பய்யன் "மாநகராட்சியில் அடிமட்ட பணியாளரான ஒரு பெண்ணின்" மகன். "சுத்தப்படுத்தும் பணிப்பெண்ணின் மகனை" சுத்தமாக படுகொலை செய்த ராணுவம் என்றுதான் செய்தியை கேள்விப்பட்டோம்.


அந்த பகுதிக்கு விரைந்த போது, ஊடகவியலாளர்களின் கூட்டம் தவிர அங்கே நின்ற குடிசை வாழ் மக்கள் நமது காவல்துறையால் அப்போதுதான் "தடியடி" மூலம் கலைக்கப்பட்டுல்லார்கள் என்று தெரிய வந்தது. "பாதாம் மரத்தில்" காய் பறிக்க எறிய பையனை ராணுவத்தினர் சுட்டு விட்டனர் என்று கேள்விப் பட்டோம். அங்கே வந்த மாநகர ஆணையர் ஊடகங்களை சந்திக்காமலேயே பறந்து விட்டாராம். துணை ஆணையர் தாமரைகாண்ணன் சந்தித்தாராம். அடிபட்டதுதான் நடந்தது என்றாராம். சுட்டுக் கொல்லப்பட்டதை மறைத்தாராம். அடிபட்ட பையனை அவனது உறவினரே மருத்துவமனை எடுத்து சென்றனராம். ராணுவம் அதற்கு கூட உதவவில்லை. அதற்கு பின், ஒரு "ராணுவ அதிகாரி" அங்கே வந்தார். சுவற்றுக்கு வெளியே, சுதந்திரம் இல்லாத ஊடகவியலாளர்கள் காத்திருக்க, அந்த அதிகாரி சுவற்றுக்கு உள்ளே இருந்தே பேசினார். ஊடகவியலாளர்களை உள்ளே அனுமதித்து, அவர்களிடம் உரையாட அந்த திகாரிக்கு மனம் இல்லை. கம்பிகள் வழியே காமெராக்களை ஊடகவியலாளர்கள் நுழைத்துக் கொண்டு, ராணுவ திகையின் நேர்காணலை பதிவு செய்தனர்.


" இது ராணுவ குடிமக்கள் வாழும் பகுதி. இங்கே ராணுவத்தினர் யாரும் துப்பாக்கி இல்லாமல்தான் பாதுகாப்பு பணி செய்து வருகிறோம்" என்றார். " அங்கே பொய் வாசலில் பாருங்கள். எங்கள் காவலர்கள் கையில் தடி தான் இருக்கும். நாங்கள் இங்கே துப்பாக்கி இல்லாமல்தான் காவல் காக்கிறோம்" என்றார் அந்த பிரிகேடியரான சஷி நாயர். " இங்கே சில சிறுவர்கள் போயிருக்கிறார்கள். அவர்கள் சுவர் எரிக் குத்தித்து, இந்த வாதாம் மரத்திலிருந்து எதையோ பறிக்கவோ, அல்லது உள்ளே வந்து விளையாடவோ முயற்சித்திருக்கலாம்" என்றார். அப்போது துப்பாக்கி சத்தம் கேட்டிருக்கிறது" மற்ற பையன்கள் ஓடிப் போய் விட்டார்கள். ஒரு பையன மாத்திரம் உள்ளேயே மாட்டிக் கொண்டான். அவன் சுருண்டு விழுந்துவிட்டான். அவனை அவனது உறவினர்கள் மருத்துவம்னனைக்கு எடுத்து சென்று விட்டனர்." இவாறு அந்த ராணுவ அதிகாரி கூறினார்.

"அதற்கு பிறகு மருத்துவமனையிலிருந்து அந்த சிறுவனுக்கு துப்பாக்கி குண்டு பாய்ந்திருக்கிறது என்று காவலர்கள் கூறினார்கள்" "யார் சுட்டார்கள் என்று தெரியவில்லை. இங்குள்ள காவல்துரையாகவும் இருக்கலாம். யார் குற்றவாளியானாலும், நாங்கள் விடமாட்டோம். ஏன் மகன் அடிபாட்டதுபோலத்தான் நான் உணர்கிறேன்" என்று ஒரு அரசியல்வாதியைப் போல அந்த ராணுவ பிரிகேடியர் சஷி நாயர் கூறினார். இந்த இந்திய ராணுவம் "தமிழர்களையும், தமிழ்நாட்டு மக்களையும், என்ன ணைத்துக் கொண்டு இருக்கிறது? இங்கொரு காஷ்மீரை உருவாக்கவோ, அல்லது வன்னி பகுதியை உருவாக்கவோ, அல்லது வட கிழக்கு மாநோலத்தைப்போல கையாளவோ முயற்சிக்கிறதா? என்ற கேள்விதான் எழுகிறது.