Wednesday, June 29, 2011

இந்தியாவின் அணில் சிங்களத்திற்கு பாலம் போடுகிறதா?

ஏற்கனவே "ரணில் என்ன டில்லியின் அணிலா?" என்று நாம் கேள்வி எழுப்பியிருந்தோம். மூன்று வாரங்களுக்கு முன்பு டில்லி வருவதற்காக சென்னை வந்த "ரணில் விக்கிரமா சிங்கே" என்ற இலங்கையின் எத்ரிகட்சியான "ஐக்கிய தேசிய கட்சி"யின் தலைவர் " அரசத்தலைவர் மஹிந்த ராஜபக்சேவிற்கு" ஆதரவாக சென்னை விமான நிலையத்தில் பேசினார். அதன்பிறகு டில்லி சென்றார். அங்கே "தெற்காசியாவின் விஸ்தரிப்புவாத ஆதிக்க சக்திகளின்" பிரதிநிதிகளை சந்தித்தார். அவர்கள் ஏற்கனவே "அமெரிக்காவின் உலக ஆதிக்கவாதத்திற்கு" இணங்கிப் போனவர்களாக இருந்தனர்.

அதனால் "ரணிலுக்கு அமெரிக்கா ஆலோசனைகளே இந்திய ஆலோசனைகள்" என்ற பெயரில் வழங்கப் பட்டன. அவர் அதை எடுத்துக் கொண்டு, கொழும்பு சென்றார். அங்கே தனது "ஐ.தெ.க." கட்சியின் செயற்குழுவில், "ராஜபக்சே உலக அரங்கில் காலியாய்விட்டதால், தங்கள் கட்சிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது" என்று கூறினாராம். அதற்கும் அங்கே எத்ரிப்பு வந்ததாம். ரணில் ஏற்கனவே சொல்லிக் கொடுத்திருந்த "சிங்கள மேலான்மை" வாதத்தில் திளைத்திருந்த உறுப்பினர்கள் " நமது கட்சி நலனை விட நாட்டு நலனே" முக்கியம் என்று எதிர்வாதம் செய்ததாக கூறுகிறார்கள்.ஆனாலும் "ரணில் முயற்சி செய்து ஐ.நா. நிபுணர் குழு அறிககையை சிங்கள மொழியில் மொழிபயர்த்து வெளியிடவும், சேனல்_4 படங்களை, சிங்கள மக்களிடம் கொண்டு செல்லவும் " திட்டமிடுவதாகவும் செய்திகள் வருகின்றன.


அதற்குள், ரணில், டில்லி ஆலோசனைப் படி, " இந்திய அரசின் விசுவாசியான" சந்திரிகா குமாரதுங்கேயுடன் ரகசியமாக பேசியதாகவும், அவரிடமும் "இந்திய அரசின் திட்டத்தை" கூறியதாகவும் தெரிகிறது. அதேபோல ஏற்கனவே "ராஜபக்சே குடும்பத்தால்" பாதிக்கப்பட்டுள்ள " ஜெ.வி.பி." யுடனும் , ரணில் ஆட்கள் பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிகிறது. அமெரிக்கா சொல்லியும் கேட்காமல், இந்திய அரசு சொல்லியும் கேட்காமல் இருக்கும் "மகிந்தா" கும்பல், "சீனாவிற்கு" அதிகமான வணிகம் கொடுப்பதை "தாங்கமுடியாத" அமெரிக்காவும், டில்லியும், "ராஜபக்சேவிற்கு" பதில் ஆள் தேடுவதில் இத்தனை வேலைகளையும் திட்டமிடுகிறார்கள் என்றும் கேள்விப்பட முடிகிறது.


உலக அரங்கில் "காலியாகி வரும் ராஜபக்சே கும்பலை" நீக்கிவிட்டு " சிங்களத்தை" வேறு ஒரு வகையில் இவர்கள் காப்பாற்ற நினைத்தாலும், "தமிழர்களின் தாகத்தை" தணிக்க "தமிழீழம் மட்டுமே" தீர்வாக இருக்கும்.

உளவுத்துறைகளுக்குள் உள்ள மோதல் இதழியலாலரை கொன்றதா?

மும்பையில் ஊடகவியலாளர் ஜெ.டே கொடூரமாக சாலைப் பயணத்திலேயே குறிவைத்து சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற சம்பவம் பெரிய அளவில் பேசப்படுகிறது. முதலில் "சோட்டா ஷகீல்" மீது சந்தேகம் என்று ஏடுகளில் காவலர் கூறினார்கள். வெகுண்டெழுந்த "சோட்டா ஷகீல்" தன்னிடம்தான் இதே காவல்துறையினர் இந்த கொலை பற்றிய செய்திகளை எடுத்துக் கூக்க கூறினர் என்று ஒரு ஆங்கில ஏட்டிற்கு "மறைவிடத்திலிருந்து" பேட்டி அளித்தார். அப்போதே யார் இந்த சோட்டா ஷகீல்? என்று நமது வாசகர்கள் கேள்வி எழுப்பியிருக்க வேண்டும். ஆனால் எழுப்ப வில்லை.


இப்போது "சோட்டா ராஜன்" குழுவினர் எழு பேர் இந்த கொலையை செய்தவர்கள் பிடிபட்டுள்ளார்கள் என்றும், அதில் மூன்று பேர் ராமேஸ்வரத்தில் பிடிபட்டதையும்,கொலையை எப்படி செய்தார்கள் எனவும் விளக்கி இருந்தனர். "சோட்டா ராஜன்" தொலைபேசியில் " ஒரு நடவடிக்கை" இருக்கிறது என்று கூறி, அதற்கான "பணத்தையும், கைத்துப்பாகிகளையும்" குறிப்பிட்ட இடத்தில் பெற்றுக் கொள்ளுமாறும் கூறியதை அவர்கள் பின்பற்றி, "கொள்ளப்படவேண்டியவரின்" மோட்டார்சைக்கில் என்னையும், ஆறடி உயரமானவர் என்ற அடையாளத்தையும் பெற்றுக் கொண்டு " செயலுக்கு" சென்றதாக கூறியிருந்தனர்.

அப்படியானால் சோட்டா ராஜன் யார் என்றாவது நமது மக்கள் வினவி இருக்க வேண்டும். அதையும் கேட்கவில்லை. பிறகு " ஜெ.டே என்ற அந்த ஊடகவியலாளர் ஏன் ஐரோப்பா சென்றார் என்றும், அங்கே யாரை சந்தித்தார் என்றும், பல கேள்விகளை ஏடுகள் வெளியிட்டார்கள். அதில் " தாவூது இப்ராஹீம்" கூட்டாளியை அவர் வெளிநாட்டில் சந்தித்தார் என்றும், சந்திக்க நேரம் கிடைத்தும் சந்திக்க வில்லை என்றும் செய்திகள் வெளியிடப்படுகின்றன. அதற்கும் சோட்டா ராஜன் கொலை செய்ய சொன்னதற்கும் என்ன சம்பந்தம்? தாவூது இப்ராஹிமிடம் அந்த ஊடகவியலாளர் "சோட்டா ராஜன்" பற்றிய விவரங்களை போட்டுக்கொடுத்திருப்பார் அல்லது போட்டுக்கொடுப்பார் என்ற சந்தேகத்தால் கொல்லப்பட்டார் என்று அந்த செய்தி விளக்குகிறது.


அப்படியானால் " தாவூது இப்ராஹிமிற்கும், சோட்டா ராஜனுக்கும்" அப்படி என்ன பகை? யார் இவர்கள்? ஏற்கனவே "துபாயில்" தாவூது இப்ராஹீம் மீது "சோட்டா ராஜன்" துப்பாக்கி சூடு நடத்த முயற்சித்தார் என்று ஒரு செய்தி சில ஆண்டுகளுக்கு முன்பு வந்தது நினைவுக்கு வரவேண்டும். அப்போதே சூடு பட்டது, "தாவூதின் தம்பி மீதுதான்" என்று விளக்கம் வந்ததையும் நினைவுக்கு கொண்டுவர வேண்டும். எதற்காக அவர்களுக்குள் சண்டை வரவேண்டும்? "தாவூது இப்ராஹிமின்" கூட்டத்தில்தான் "சோட்டா ராஜன்" ஒரு காலத்தில் இருந்தான். அதன் பிறகு "கும்பலுக்குள்" வந்த முரண்பாட்டில் வெளியேறினான். ஆனால் "சோட்டா ஷகீல்" தாவூது இப்ராஹிமின் கூட்டத்தில்தான் இன்னமும் இருக்கிறான்.

"தாவூது இப்ராகிம்" தனது "அனைத்து நாட்டு வணிக வலைப்பின்னலில்" பல உதவிகளை பாகிஸ்தானின் உளவு நிறுவனமான "ஐ.எஸ்.ஐ. இடம் பெற்றுக் கொல்வது இயல்பான காரியமாக இருக்கிறது. அதனால் இந்திய அரசால் தாவூது மீது ஒரு "அச்சம்" இருந்து வருகிறது. "தாவூது இப்ராகிம்" மும்பையின் பிரிக்க முடியாத "வணிக வலைப்பின்னலுடன்" இருப்பது இந்திய அரசிற்கு தெரியும். மும்பையின் "திரைப்படத்துறை, பங்கு சந்தை, ஊடகத்துறை, அரசியல் தலைவர்கள்" ஆகியோருடன் "தாவூதிற்கு" உள்ள பின்னிப்பிணைந்த உறவு தெரியாதவர்கள் இந்திய உளவுத்துறை அல்ல.

ஆனால் "அரசியல் காரணங்களுகாக" இந்திய அரசின் உளவுத்துறையான "ஐ.பி.யும், ரா வும்" இந்த பாகிஸ்தானின் உளவுத் துறையான "ஐ.எஸ்.ஐ. யை எதிர்ப்பதற்காக" தாவூது இப்ராஹிம்மை பகைத்துக் கொள்கிறார்கள். அதனால் தாவூதும் பாக் உளவுத்துறைக்கு அதிகமாக உதவுகிறார். இதனால் "தாவூதுடன் முரண்பட்ட சோட்டா ராஜனை" இந்திய வெளிவிவகார உளவுத் துறையான "ரா" தனது கையாளாக பயன்படுத்தி வருகிறது. அதில் ஏற்பட்ட " துப்பாக்கி சூடுதான்" துபாயில் நடந்த ஒன்று. இப்போது "சோட்டா ஷகீல்" கதைக்கு வருவோம். அவர் இன்னமும் "தாவூதின் கும்பலில்" இருப்பவர். அதனால்தான் இந்த கொலையில் "சோட்டா ராஜன்" சம்பந்தப்பட்டது தெரிந்த உடனேயே "சோட்டா ஷகீலை" காவல்துறை அணுகி உதவி கேட்டது.

உதவியும் கேட்டுவிட்டு, தனக்கு எதிராக "கதையை" மாற்றிவிட காவல்துறை முயற்சித்த போதுதான் "சோட்டா ஷகீல்" ஊடகம் மூலம் பதிலடி கொடுத்தார். இப்போது கொலையை செய்தது "சோட்டா ராஜன்"கும்பல்தான் என்று காவல்துறையே ஒப்புக்கொள்ளவேண்டிய நிலைமை. ஏன் என்றால் கொள்ளப்பட்டது ஒரு "ஊடகவியலாளர்". சோட்டா ராஜன் மீது சந்தேகப்பட்டால் "சோட்டா ஷகீலிடம்" உதவி கேட்பது என்ற நிலையில்தான் "காவல்துறை" செயல்படுகிறது எண்பதை இந்த இடத்தில் நாம் புரிந்து கொள்ளவேண்டும். இரண்டு " நிழல் உலக தாதாக்கள்" இருந்தால் இருவரையும் ஒழிக்க முடியாத காவல்துறை, ஒருவர் பற்றி ஒருவரிடம் செய்தி எடுப்பார்கள் எண்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஏன் இரண்டு "நிழல் உலக தாதாக்களையும்" காவல்துறையால் ஒழிக்க முடியவில்லை? இரண்டு கும்பலும், "அரசியல்வாதிகளின்" அரவணைப்பில் மட்டுமே, காவல்துறையின் பெரிய அதிகாரிகளது துணையில் மட்டுமே, பவனி வருபவர்கள். அதானால் இந்த "அதிகாரவர்க்கம்" என்றைக்குமே "நிழல் உலக தாதாக்களை" ஒழிக்காது. அதேநேரம் அவர்களுக்குள் "மோதலை"உருவாக்கி அதில் பிழைப்பு நடத்துவார்கள். இங்கே " சோட்டா ஷகீல்" எங்கே இருந்து "செயல்படுத்துகிறார்" என்பது வெளியே தெரியாது. அதேபோல "சோட்டா ராஜன்" எங்கேயிருந்து "செயல்படுத்துகிறார்" என்பதும் யாருக்கும் தெரியாது.


ஆனால் அது எல்லாமே "இந்திய உளவுத்துறையான "ரா" மற்றும் "ஐ.பி." யின் பெரிய அதிகாரிகளுக்கு தெரியும். ஆனாலும் அவர்கள் "பிடிக்க மாட்டார்கள்" தாங்கள் தங்களது முதலாளிகளான "இந்திய அரசிற்கு" சில அவசியமான "வன்முறை வேலைகளை" செய்வதற்காக அந்த "தொடர்புகளை" தங்களிடமே வைத்துக் கொள்வார்கள். அதாவது "அரசின் இந்த உளவுத்துறைகள்" இயங்கும் "நிழல் தாதாக்களை" விட கொடியவர்கள். ஏன் என்றால் "தாதாக்கள்" மக்களிடம்தான், மக்கள் மத்தியில்தான் வாழவேண்டும். ஆனால் "உளவுத்துறை" குண்டர்கள் "நமது வரிப்பணத்தில்" எங்கே வேண்டுமானாலும் "மேட்டுக் குடியாக" வாழலாம்.

இப்போது "தாவூதுக்கு சோட்டா ராஜன்" பற்றிய தகவல்களை கூறுவார் என ஒரு ஊடகவியலாளர் சுடப்பட்டு கொள்ளப்பட்டது வெளியே வந்திருக்கிறது. இதே கதையில் அந்த ஊடகவியலாளர் பற்றியும் பல செய்திகள் உண்டு. அதை அடுத்த கட்டுரையில் காணலாம்.

சென்னைமெரீனா நினைவேந்தல் பற்றி குமுதம் விவரிப்பு

கீழே காணும் இணைய தளத்தில், " பெருந்தீயாய் சுட்டெரிக்கட்டும்" என்ற தலைப்பில் உள்ள "காணொளியை" காணவும். அது ஜூன் 26 இல் கடற்கரை மணலில் நடந்த பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் "மெழுகுவர்த்தி ஏந்தல்" நிகழ்வையும், அது பற்றிய நேர்காணல்களையும் காட்டும். அதில் "திருமுருகன், புலமைப் பித்தன், விடுதலை ராஜேந்திரன்,திருச்சி வேலுசாமி, புகழேந்தி தங்கராஜ், தாமரை, அய்யநாதன், டி.எஸ்.எஸ்.மணி, வேல்முருகன், சீமான்,காசிஅனந்தன் ஆகியோர் நேர்காணல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. இந்த பெரும் சேவையை, "குமுதம் டாட் காம்" செய்துள்ளது. ஏகலைவனின் முயற்சியால் இந்த தொகுப்பு நிறைவாகி உள்ளது. http://nerudal.com/

Monday, June 27, 2011

ஈழத்தமிழ் மக்களுக்காக, தொப்புள்கொடி உறவுகளின் தோழமை.

ஜூன்-26ஐ.நா.அறிவித்த"அனைத்துநாட்டுசித்திரவதை எதிர்ப்பு நாள்".
அன்று இந்தியாவின் சென்னையில் "தமிழ் உறவுகள்" நடத்திய மாபெரும் "மெழுகு வர்த்தி நினைவேந்தல்" நிகழ்வு ஒரு பெரும் ஆதரவை "ஈழத் தமிழ் உறவுகளுக்கு" ஏற்படுத்தியிருக்கிறது. பல்லாயிரக்கணக்கில் தமிழ் மக்கள், பெண்கள், ஆண்கள், குழந்தைகள் உட்பட பங்கு கொண்டு, மெரீனா கடற்கரையில் "மழைத்தூரல்களுக்கு" நடுவே அமைதியாக அமர்ந்து "கைகளில் மெழுகுவர்த்திகளை" ஏந்தி, தெரிவித்த "தோழமை" உலகின் மனச்சாட்சியை உலுக்குவதாக அமைந்தது.



திருமுருகன் எடுத்த முன்முயர்ச்சிக்கு பல்வேறு தமிழ் அமைப்புகளும், மீனவர் அமைப்புகளும், தனி மனிதர்களும், கொடுத்த ஆதரவு "உலகம் முழுவதும் உள்ள தமிழரை ஒன்றாக சேர்ப்பதாக" இருந்தது. திரைப்பட இயக்குனர் மணிவண்ணன் இது பற்றி கூறும்போது, "இது எந்த ஒரு தலைவருக்கோ, அல்லது அமைப்ப்ற்கோ வந்த கூட்டமல்ல.ஈழத்தமிழருக்கு ஆதரவாக தமிழ்நாட்டு
மாக்கள் கொடுத்தஆதரவு"என்றுகூறினார்.குறிப்பிட்ட நேரத்திற்கு வராத தலைவர்கள், தாமதமாக வரும்போது, அதுவே அவரகளது நுழைவு ஏற்படுத்திய சல,சலப்பையும், அதனால் ஏற்பட்ட நெரிசலும், கட்டுப்பாட்டை குலைக்கவே உதவின. அதில்; இருக்கையிலிருந்த முக்கியமானவர்கள் கூட பாதிக்கப்படும் நிகழ்வு நடந்திருக்கக்கூடாது. ஆனாலும் அதையும் தாண்டி, அந்த மாபஐம் தமிழ் மக்கள் கூட்டம் அமைதியாக கலந்து கொண்டு கொடுத்த ஆதரவு மெய் சிலிர்க்கும்படி இருந்தது.

காசி அனந்தன், பழ.நெடுமாறன், புலமைப் பித்தன், வேல்முருகன்,சீமான், பேராசிரியர். சரஸ்வதி, விடுதலை ராஜேந்திரன், திருச்சி வேலுசாமி, ஓவியர் வீரசந்தானம், மருத்துவர் எழிலன்,மீனவர் தலைவர்கள் மகேஷ், ரூபேஷ், மாறன், சரவணன், திருமுருகனுடன் பணியாற்றிய ராஜ்குமார் பழனிச்சாமி, உமர், ராஜா ஸ்டாலின், ம.திமுக. வேளச்சேரி மணிமாறன், மல்லை சத்தியா, தாமரை, தியாகு, டேவிட்பெரியார்,புலம்பெயர்ந்த தமிழர்கள்,ராவணன்,குணசேகரன்,பாண்டிமாதேவி, ஏகலைவன், அரக்கோணம் விமலா, நெல்லை சிவகுமார், அன்பு தென்னரசு, டி.எஸ்.எஸ்.மணி, ஓவியர் புகழேந்தி, வா.மு.சேதுராமன், தெய்வநாயகம், ஓவியர் புருஷோத்தமன், தவசி குமரன், தனசேகரன், இன்னும்பல பிரமுகர்கள் கலந்துகொண்டது சிறப்பு சேர்த்தது.


நினைவு தூண்கள் இரண்டு "மறைந்த தமிழ் தியாகிகளுக்காக" உருவாக்கப்பட்டிருந்தது எல்லோரையும் அமைதி கொள்ள வைத்தது. மலர்கள் தூவப்பட்ட படுக்கைகளில், மணலில் "மெழுகுவர்த்தியை" வைத்து எரியூட்டிய நிகழ்வுகள் நெகிழ் வைத்தன. துண்டறிக்கைகளையும், சுவரொட்டிகளையும், இணையதள பரப்புரைகளையும், குறுன்செய்திகளையும், நேரடி அணுகுமுறைகளையும், பல அமைப்புகளின் தலைவர்களையும் சந்திப்பதன் மூலம் மட்டுமே இந்த நிகழ்ச்சி ஒழுங்கு செயப்பட்டது. இதன்முழு காரணமாக,முன்முயர்ச்சியாக இருந்தவர் என்றவகையில் திருமுருகனை பர்ராட்டாமல் இருக்க முடியாது.

Friday, June 24, 2011

முதல்வரின் தீர்மானத்திற்கு வலுச்சேர்க்க மெரினாவில் கூடுவோம்.

ஜூன் 26 என்பது "அனைத்து நாட்டு சித்திரவதைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நாள்". அந்த நாள் இன்றைய சூழலில், ராஜபக்சேவின் "தமிழின அழிப்பு உலகம் முழுவதும் அம்பலமாகி உள்ள" நேரத்தில், முக்கியத்துவம் பெறுகிறது. அதாவது இலங்கையின் திர்க்கட்சியாக இருந்தாலும், "சிங்கள பௌத்த பேராண்மை கொள்கையை" உறுதியாக தூக்கிப் பிடிக்கும் ரணில் விக்ரமசிங்கே சென்னை விமான நிலையத்தில் ஊடகவியலாளர்களிடம், " ஐ.நா. போர்விதி மீறல் ஒப்பந்தத்தில் கையெழுத்து போடாத இலங்கை அரசை எந்த ஒரு போர் விதி மீறல் தீர்மானமும்" கட்டுப்படுத்தாது என்று கூறினான்.


அதேசமயம் உலகம் முழுவதும், "ஐ.நா.வின் சித்திரவதை எதிர்ப்பு ஒப்பந்தத்தில் "இலங்கை கையெழுத்து போட்டுள்ளது என்ற குரல் எழும்பியது. அந்த " சித்திரவதைக்கு எதிரான அனைத்து நாட்டு ஒப்பந்த நாள் " ஜூன் 26 இல் வருவதால், அதே நாளில், தமிழின உணர்வாளர்கள் ஒன்று கூடி, சென்னை கடற்கரை மெரினாவில், கண்ணகி சிலைக்கு பின்புறம் கடற்கரை மணலில், மாபெரும் "மெழுகுவர்த்தி ஏந்தல் நிகழ்வினை" நடத்த திட்டமிட்டுள்ளனர். இது "தமிழக சட்டப்பேரவை நிறைவேற்றிய தீர்மானத்தையும்? வலுப்படுத்துவதாக அமையும். டில்லியின் முழுமையான "தலையீடுகளையும்" தாண்டி, முதல்வர் செல்வி.ஜெயலலிதா நிறைவேற்றிய "தனித் தீர்மானமான" போர்குற்றம் செய்தவர்களை, "போர் குற்றவாளிகள்" என்று அறிவிக்க கோருவது, தில்லியையும், கொழும்பையும் அச்சுறுத்தி உள்ளன.


டில்லியும், கொழும்பும் அந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பை மறைமுகமாக கொடுத்து வரும்போது, "சட்டப் பேரவை தீர்மானத்திற்கு முழுமையாக தமிழக மக்கள் மன்றம் வலுச் சேர்கிறது" எண்பதை இந்த ஞாயிறு கடற்கரை அணிதிரட்டல் மூலம் தமிழ் மக்கள் நிரூபிப்பார்கள்.

நிரூபமா ராவ் அமெரிக்காவின் எடுபிடியா?

நிருபமா ராவ் இந்திய வெளிவிவகார செயலாளராக வந்தார். முக்கியமாக இலங்கை அரசின் தமிழின அழிப்பு வேலைகளை செய்வதற்கு துணை சென்றார். அதில் இந்திய அரசின் நலனை நிலை நிறுத்தினார். இலங்கையில் தமிழின அழிப்பை நடைமுறைப்படுத்த, அந்த போருக்கு முழு உதவியையும் செய்தது இந்திய அரசு என்றால், அதற்கான டிப்படையை போட்டுக்கொடுத்து, உலக அளவிலான " பயங்கரவாதத்திற்கு எதிரான போர்"என்ற பெயரைக் கொடுத்தும் அமெரிக்காவின் கைங்கரியம்தான். ஐரோப்பிய நாடுகளிலும், இங்கிலாந்திலும்,இந்தியாவிலும், "புலிகளை பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தி" தடை செய்ய ஏற்பாடு செய்ததும் அமெரிக்காதான் என்பது இப்போது பகிரங்கமாகி உள்ளது.


இத்தகைய சூழலில், நிரூபமா ராவ் அமெரிக்காவின் எதிர்பார்ப்பிற்கு இணங்க " இலங்கை-இந்திய உறவை" பேணி பாதுகாத்தார் என்பதால், அதில் இலங்கையை சீனா பக்கம் முழுமையாக சார்ந்து நிற்க விடாமல் கையாண்டார் என்பதால் அது அமெரிக்காவின் நலனை பேணுவதில் உள்ள கெட்டிகாரத்தனம் என்றுதான் புரியப்படவேண்டும். அதுமட்டுமின்றி "இந்தியாவில் முக்கிய பதவிகளுக்கு வருவோரை" தேர்வு செய்யும்போது, சிறந்த உளவுத் துறை வைத்திருப்பதாக டில்லியால் நம்பப்படும் அமெரிக்கா சொல்கின்ற நபர்களை அந்த பதவிகளில் போடுவது இந்திய அரசுக்கு வாடிக்கைதான்.


அவ்வாறுதான் "எம்.கே.நாராயணனும், சிவசங்கர மேநோனும், நிரூபமா ராவும் தேர்வு செய்யப்பட்டார்கள். அன்ஹா விசவாசத்தை நிரூபமா அராவ் முறையாக காட்டுவார். இப்போது "காஷ்மீர் பிரச்சனயை" அமெரிக்கா விரும்பும் பாணியில் கையாளத் தொடங்கியுள்ளார். பாகிஸ்தானுடன் உள்ள நட்பை அமெரிக்கா விரும்பும்படி பேசி வருகிறார். அதேபோல "அமெரிக்கா விரும்புவது போல, மியான்மரில், சூ கியூ வுடன் பேசச் சென்று அவரை நிதானப்படுத்தி அங்குள்ள ராணுவ ஆட்சியாளர்களையும் காப்பாற்றி உள்ளார். இத்தகைய வேலைகளை அவசர் அவசரமாக செய்வதன் மூலம், தான் அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரக தூதுவராக போக தகுதி உள்ளவர் எண்பதை நிரூபித்து கொண்டுள்ளார்

Thursday, June 23, 2011

கனிமொழிக்கு அன்று கோபம், தணித்தார் கலைஞர்

கனிமொழிக்கு உச்சநீதிமன்றத்தில், பிணை கிடைக்கவில்லை. அது பெரியதொரு இழப்பு. ஏன் என்றால் சிறையில் உள்ளவர்கள் எப்போதுமே பிணிக்கு, மேல் முறையீடு என்று அடுத்த கட்ட உயர்ந்த நீதிமன்றத்திற்கு செல்ல அவசரப்பட மாட்டார்கள். ஏன் என்றால் உயர்ந்த நீதிமன்றத்தில் ஒரு முறை பிணை மறுப்பு வந்துவிட்டால், அடுத்து பிணை போட மிக தாமதமாக ஆகும்.இது உள்ளே இருய்க்கும் எல்லா கைதிகளுக்கும் தெரிந்த செய்தி. வெளியே உள்ளவர்களுக்கு தெரியாது, விளங்காது. அதே விசயம்தான் கனிமொழி விசயத்திலும் நடந்தது.


கனிமொழியும், சரத் குமார் ரெட்டி யும், தங்களுக்கு உச்சநீதிமன்றத்தில் பிணிக்கு முறையிடக்கூடாது என்பதில் உறுதியாக கூறி வந்தனர். அவர்களுக்கு இந்த ரகசியம், சிறைக்குள் சென்ற உடனேயே பல கைதிகளின், மற்றும் சிறைத்துறை காவலர்களின் ஆலோசனைகளில் தெரிந்து விடும், தெரிந்து விட்டது. அதனால் அதில் உறுதியாக இருந்தனர். ஆனால் அமைச்சர் ஜகத் ரட்சகனும், டில்லியில் ராஜாத்தி குழுவிற்கு உதவி வரும் துறை என்பவரும் அதற்கு எதிராக ஏதோ தாங்கள் அதிக அக்காரை கொண்டவர்களாக காட்டிக்கொண்டு, உச்சநீதிமன்றம் செல்ல வற்புறுத்தினர். அவர்களுக்கு இதன் விவரம் தெரியாது. களிஞருக்கும், ராஜாத்திக்கும் விவரம் புரியவில்லை. ஏற்கனவே இவர்களை ஏமாற்றி ஒரு பெரிய அதிகாரி இப்போது அகதிகள் முகாமிற்கு அனுப்பப் பட்டவர் பல பத்து கோடிகளை சம்பாதித்து விட்டார் என்ற கருத்தும் இருய்க்கிறது.


உச்சநீதிமன்றம் மறுத்தது மட்டுமின்றி, குடர்ப்பத்திற்கை தாக்கலான பிறகுதான் கீழ் கோர்டில் பிணிக்கு அணுக வேண்டும் என்று வேறு கூறி விட்டது. இது பெரிய அடி. சிறைக்குள் உள்ளே இருப்பவர்களுக்கு தான் அதன் அருமை தெரியும். கனிமொழிக்கு பயங்கர கோபம். தந்தையிடம் கடுமையாக பேச எண்ணி இருந்தார். அது களிஞருக்கும் தெரிந்து விட்டது. அதனால்தான் அவர் முதலில் கனிமொழியை தனியாக பத்து நிமிடம் சந்தித்தார். அப்போது முதலில் கலிஞர் கண்ணீர் விட்டு விட்டார். பாவம். மகளும் கண்ணீர் விட்டு விட்டார். திட்டு .வாங்காமல் தான் தஹ்ப்பித்த பிறகுதான், ராசாத்தியை உள்ளே அனுமதித்து அவருடன் பத்து நிமிடங்கள் மகளை சந்தித்து உரையாடினார்.


எப்படியோ, கனிமொழியை பழிவாங்க எண்ணிய குடும்பத்தின் பிற உர்ப்பினர்களுக்கு இது திருப்தியைத் தந்திருக்கும். ஆனால் அவர்களுக்கும் வருகிறது வரலாறு என்று கணிம்ழிகுழுவினர் கூறுகிறார்கள்.

Monday, June 20, 2011

கனிமொழிக்கு பிணை மறுப்பு யாருக்கு எதிரானது?

கனிமொழி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை ஸ்பெக்ட்ரம் ஊழலில் சீ.பி.ஐ. சம்பந்தப்படுத்தி கித்து செய்துள்ளது. அவர்தான் 'கலைஞர் டிவி.க்கு" முக்கிய ஆலோசகர் என்றும், அவர்தான் கலைஞர் டிவி.யை இயக்கியவர் என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அப்படிக் குற்றம் சட்ட எதுவாக "அமிர்தம்" கொடுத்த சாட்சியையும், "ஆசிர்வாதம்" கொடுத்த சாட்சியையும் சீ.பி.ஐ. கூறுகிறது. நமக்கு தெரிந்து "கலைஞர் டி.வி.க்கு பின்னாலிருந்து இயக்கியவர் அல்லது அதற்கான முயற்சியை செய்தவர் இதே அமிர்தம் என்பதுதான். அமிர்தத்திற்கு, தயாநிதி மேலும், கலாநிதி மேலும்தான் அதிக பாசம் உண்டு. அவர்களது "சன் டி.வி.க்கு எதிராக கலைகர் டி.வி.யை நிறுத்துவதில் கனிமொழிக்கு பங்கு உண்டு என்று அவர் நினைக்கலாம் அல்லது கோபப்படலாம்.


அதற்காக அவர் அப்படி ஒரு "சாட்சியத்தை" கொடுத்திருக்கலாம். ஆனாலும் முழுமையாக "குடும்பத்திற்குள்" ஒருவர் அவர். அவரை " குடும்பத் தலைவர்"தான் கேட்க முடியும் அல்லது "திசி திருப்ப" முடியும். ஆனால் "கனி வெளியே வந்தால்" சாட்சிகளை "கலைத்துவிடுவார்" என்பதுதான் சீ.பி.ஐ.யின் குற்றச்சாட்டு. "ராஜாத்தி குடும்பத்தை சேர்ந்த கனி" எப்படி "தயாளு குடும்பத்தை சேர்ந்த அமிர்தத்தை" கலைக்க முடியும்? இரண்டு குடும்பத்திற்கும் ஆகாது என்பது நாடறிந்த உண்மை. "கலைஞர்" மட்டும்தான் "அமிர்தம் என்ற சாட்சியை"கலைக்கும் வல்லமை கொண்டவர். அப்படியிருக்கையில் அவரை உள்ளே வைக்காமல் , கனியை சிறையில் வைப்பதனால் எப்படி "சாட்சியை" கலைக்காமல் சீ.பி.ஐ பார்த்துக் கொள்ளும்?


அடுத்த "சாட்சி" திருச்சிகாரரான "ஆசிர்வாதம்". அவர் " கனிமொழி அடிக்கடி கலைஞர் டி.விக்கு வந்து போவார்" என்று சாட்சி சொன்னாராம். இது எப்படி "கனிமொழியை குற்றவாளியாக ஆக்கும்?" இந்த "சாட்சியான ஆசிர்வாதம்"என்பவர் ஆ.ராஜாவின் உதவியாளராக இருந்தவர். அவர் முன்னால் ரயில்வே ஊழியர். இப்போது ஒய்வு பெற்றுவிட்டார். இவர் ஏதோ நம்மூர் அதிகாரி ஆயிற்றே என்று டில்லியில் இவரை நம்பி ஆ.ராஜா தனது உதவியாளராக வைத்திருந்தார். பொதுவாக ராஜா நம்பி பழகிய பல உடையார் சமூக நண்பர்களில் இவரும் ஒருவர்..இவர் ராஜாவிடம் முரண்பட்டு வந்தபோது, "தயாவால்" அணுகப்பட்டு, ராஜாவிடம் இருந்த "பல ஆவணங்களையும், போடோ படங்களையும்" கூட எடுத்துக் கொண்டு "தயாவிடம்" கொண்டு பொய் கொடுத்து விட்டார். அதனால்தான் அவர் "தயாவின்" போட்டியாளர் "கனிக்கு" எதிராக "சாட்சி" சொல்லியுள்ளார்.இந்த "ஆசிர்வாதத்தை" கனி பிணையில் வந்தால் மட்டும் கலைத்து விடமுடியுமா?

"ஆசிர்வாதம், அமிர்தம்" ஆகியோரை கலைக்கும் திறமை அல்லது பலம், "குடும்பத் தலைவருக்கு" மட்டுமே உள்ளது. அவர் வெளியே இருக்கும் போது, கனி வெளியே வந்தால் கலைத்து விடுவார் என்பது எத்தனை ஏமாற்று? தவிர கலைஞர் கூற்றுப்படியே , தனது மகள் எந்த குற்றமும் அறியாதவர் என்றும், அவரை கலைஞர் டி.வி.யில் அவரது விருப்பத்திற்கு மாறாக "பங்குதாரர்" ஆகியது தான் தான் என்றும் பகிரங்கமாக கூறியுள்ளாரே? ஆப்டியானால் "விசாரிக்கப் படவேண்டியவர்" கலைஞர்தானே? எதற்கு கனிமொழியைபோய் துன்புறுத்துகிறார்கள்?

இப்போது உச்சநீதிமன்றம் கனிமொழிக்கும் , சரத்குமார் ரெட்டிக்கும் "பிணை மறுத்துவிட்டது" . விசாரணை நீதிமன்றத்தில், " பெண் என்ற காரணத்தை காட்டி, 437 பிரிவின் கீழ், குற்றப்பத்திரிகை வைத்த பிறகு, "பிணை கேளுங்கள்" என்று ஒரு நல்ல ஆலோசனையையும் கூறியள்ளது. இந்த ஆலோசனை சிலரது " வயிற்ரை கலக்கத் "தொடங்கியுள்ளது. ஒரு பெரும் "ஊடக பெருசசாளி" விரைவில் கைதாவார் என்ற செய்தி இருக்கிறது. அந்த மூன்றாவது குற்றப்பத்திரிகையில் அவர் மாட்டுவார் என்றும் தெரிகிறது. அவருக்கும் இதே நிலைதானே உச்சநீதிமரம் கூட எடுக்கும். அல்லது எடுக்க வேண்டும். அவரையும் "விசாரணை நீதிமன்றத்தில்" பிணை கேளுங்கள் என்றுதான் கூறும். ஆனால் அவருக்கு "பெண் என்ற அடிப்படையில்" எந்த பிரிவின் கீழும் பிணை கேளுங்கள் என்று கூறா முடியாதே? இதுதான் "தன் வினை தன்னை சுடுமா?"

சரி. "குடும்பத் தலைவர்" கனி மாட்டினால் பரவாயில்லை. தன் மகன் "கழகத்திற்கு பட்டத்து இளவரசனாக" வரவேண்டும் என்று ஆசைப்படுகிறாராமே? அதனால்தான் வெறும்" நீலிக் கண்ணீர்" மட்டுமே கனிமொழிக்காக விடுகிறார் என்று சீ.ஐ.டி. காலனி நினைக்கிறதே? இந்த "உச்சநீதிமன்ற பிணை மறுப்பு" யாருக்கு எதிரானது?

Sunday, June 19, 2011

"ஜெ" அறிவித்த குழுவில், கல்வி வியாபாரிகள்.

வார,வார நமக்குத்தான் எதுவும் புரிவதில்லை. "சமச்சீர் கல்வி" என்றால் என்ன என்று சென்ற ஆட்சியாளர்களுக்கு புரிந்த செய்தியில், கலைஞரின் கவிதைகளும், கட்டுரைகளும் உள்ளடக்கம் என்பதுனமக்கு புரியவில்லை. முத்துகுமரன் குழு அறிககையை அல்லது அவரது பர்ந்துரைகளை ஏற்காமல் இருப்பது சமச்சீர் கல்வி என்பதும் நமக்கு புரியாமல் இருந்தது. அதற்குப் பெயர் " பொதுப் பாடத் திட்டம்தான் " என்பது முற்போக்கு எழுத்தாளர்களுக்கு புரிந்தது போல நமக்கு புரியவில்லை. ஒன்றாம் வகுப்புக்கும், ஆறாம் வகுப்புக்கும் மட்டும் ஏன் அதை கொண்டு வந்தார்கள் என்பது நமக்கு புரியவில்லை.மற்ற வகுப்புகளுக்கு கொண்டுவர நிறைய தயாரிப்புப்பணி அவசியமா என்பது நமக்கு புரிய வில்லை. அப்படியானால் இந்த உச்சநீதிமன்றம எப்படி இரண்டு வாரங்களுக்குள் மற்ற வகுப்புகளுக்கும் தயார் எய்யுங்கள் என்று கூறினார்கள் எனபது நமக்கு புரியவில்லை.


"கல்வியாளர்கள்தானே சமச்சீர் கல்வியை" திட்டமிட முடியும் என்று நாம் நினைத்தால், உச்சநீதிமன்றமும் அப்படி ஒரு அறிவிப்பு கொடுத்தால், தமிழக முதல்வர், " கல்வி வியாபாரிகளை" அந்த குழுவில் நியமித்து இருக்கிறார்களே? அதுவும் புரியவில்லை. முதல்வர் விவரம் தெரியாதவரா? அவர் நியமித்தால் அதில் "அர்த்தம்" இருக்கும் எனபது நமக்கு புரிகிறது. இரணூற்று மூன்று தொகுதிகளின் மக்களது வாக்குகளால் வெற்றி பெற்றவரை நாம் எப்படி சந்தேகிக்க முடியுமெனப்தும் நமக்கு தெரிகிறது. அதனால் அவர் செய்ததில் அர்த்தம் இருக்கும். அது என்ன அர்த்தம்? " கல்வியாளர்கள் என்று அதிகாரிகளால் அடையாளம் காட்டப்பட்டோரில்" இந்த நல்ல " கல்வியாளர்களை" முதல்வர் குழுவிற்காக தேர்ந்தெடுத்து இருப்பாரோ? அதில் வேறு வழி இல்லாமால், "பத்மா சேஷாத்ரி" முதலாளியும், டி.வி.எ.சீ. முதலாளியும் இடம் பெற்று இருப்பார்களோ? அதுதான் புரியவில்லை.


இந்த " மேட்டுக் குடி கல்வி நிலையங்களில்" முதல் தலைமுறை மாணவர்கள் அருகே கூட போக முடியாதே? படித்த பட்டம் பெற்ற பெற்றோர்களை நேரில் நேர்காணல் கண்டுதானே இந்த குறிப்பிட்ட பள்ளிகளில் மாணவர் செர்ர்க்கையை நடத்துவார்கள்? அப்படிப்பட்ட " அனுபவத்தை கொண்டு " யார்கள் "சமச்சீர் கல்வி திட்டத்தை" உருவாக்குவார்களோ? இதுவும் நல்லமுயர்ச்சிதான். "சமச்சீர் கல்வி" வரக்கூடாது என்பதற்காக, "தங்கள் கல்வி நிலையத்தில்" உயர்தர கல்வி கற்றுத்தருவதாக விளம்பரம் செய்தே வியாபாரம் செய்யும் இந்த முதலாளிகள் கையாலேயே " சமச்சீர் கல்வியை" உருஆக்குவது என்பது நல்ல தந்திரம் தானே? "திருடன் கையிலேயே சாவியா?" என்று கீட்டு விடாதீர்கள். "பொதுத் தொகுதியில்" தலித்தை நிறுத்தி வெற்றிபெற வைக்கவில்லையா? அதுபோல எண்ணிக்கொள்ளுங்கள். எண்ணுவது என்னவோ நல்லாத்தான் இருக்கு. ஆனால் யதார்த்தம் கொஞ்சம் இடிக்கிறதே? என்கிறீர்களா?


தமிழக அரசு கடந்த சில ஆண்டுகளாக ஒரு "அரசானை" போட்டுள்ளது. அதில் " தனியார் சுய நிதி கல்வி நிலையங்கள்" வறுமையின் எல்லைக்கோட்டிற்கு கீழே உள்ள மாணவர்களுக்கு 25 விழுக்காடு , இடம் ஒதுக்க வேண்டும் என்று இருக்கிறது. மேற்கண்ட "நல்ல கல்வி வியாபாரிகள்" அதை ஒதுக்கி உள்ளார்களா? இனொரு விபரீதமான அரசாணையையும் போட்டுள்ளது.அதில் " கிராமப்புற ஏழை எளிய மாநார்களில், யாரெல்லாம் முதல் மதிப்பெண் பெறுகிறார்களோ, அவர்களில் முதல் "ஐந்து விழுக்காட்டை" அந்த மாவட்ட "சிறந்த தனியார் கல்வி நிலையத்தில்" சேர்த்து, அவர்களுக்கு அரசே மாவட்ட ஆட்சித் தலைவர் மூலம் கட்டணம் கட்ட வேண்டும்" என்றும் உள்ளது. இது சென்ற ஆட்சியில் " பகிரங்கமாக தனியார் கல்வி வியாபாரிகளை" அங்கீகரிக்கும் அரசானை இல்லையா? சரி. அந்த ஆணையை எத்தனை "தனியார் வியாபாரிகள்" அமுல்படுத்தினார்கள்?


இப்போது "கல்வியாளர்களாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள வியாபாரிகள்" அத்தகைய அரசாணைகளை நிறைவேற்றி உள்ளனனரா? கல்வியாளர்கள் என்று நாம் நினைக்கும் "முத்துகுமர்ந்களோ" " எஸ்.எஸ்.ராஜகோபாலன்களோ" கல்வி வியாபாரத்தை எதிர்ப்பதால் " குழுவிற்கு வர தகுதியை இழந்து விட்டார்களோ?" சரி. கலைஞர் ஏற்படுத்திய, " கோவிந்தராஜன் குழு" பள்ளி கட்டணத்தை கறார் செய்ததால், "ரவிராஜ் பாண்டியன்" என்ற சொந்தகார நீதியரசரை சென்ற ஆட்சி கட்டண நிர்ணயத்திற்கு போட்டதே? அவர் சரியாக "ஸ்டாலின் மகள்" கல்வி வியாபாரம் செய்தால் "மழலை படிப்பிற்கே" 24000 ரூபாய் கட்டவேண்டும் என்றும், ஈரோடு பள்ளியில் 32000 ரூபாய் கட்டவேண்டும் என்றும் அறிவித்து உள்ளதே? இது எந்த "சமச்சீர்?"


மொத்தத்தில் இந்த " தனியார் கல்வி வியாபாரிகள்" எல்லோரும் சேர்ந்து கல்வி வணிகத்தை திறம்பட செய்ய முனைந்தால், அடஹ்ர்கு பெற்றோரும், அரசியல்வாதிகளும் உறுதுணையாக இருப்பதுமட்டும்தானே புரிகிறது.

Friday, June 17, 2011

சமச்சீர்காரர்களுக்கு சமச்சீர் இல்லையா?

தமிழ்நாட்டில் சச்சரவில் உள்ள விவாதம் " சமச்சீர்கல்வி"பற்றியது. எல்லோரும் சமச்சீர் கல்வியை ஆதரிப்பதாக கூறிரார்கள். அது உண்மையா? கலைஞர் அரசு "சமச்சீர் கல்வி"யை அமுல் படுத்தியதாக , அதாவது ஒன்றாம் மற்றும் ஆறாம் வகுப்புகளுக்காவது அமுல்படுத்தியதாக திமுக கூறுகிறது. அது "சமச்சீர் கல்வியே" அல்ல என்றும், அது ஒரு " பொதுப்பாடம்"தான் என்றும் சிபிஎம் ஆதரவாளர்கள் கூறுகின்றனர். "சமச்சீர் கல்விக்காக" திமுக ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட " முத்துகுமரன் குழுவோ" தான் கொடுத்த நூற்று ஒன்பது ஆலோசனைகளில் எந்த ஒருஆலொஸநலையையும் திமுக ஆட்சி அமுல்படுத்த வில்லை என்று கூறுகிறது.


"சமச்சீர் கல்வியை" ஆதரிக்க வேண்டும் என்று ஆசைப்படும் ஒவ்வொரு தமிழ்மகனும் எது சமச்சீர் கல்வி என்றே தெரியாமல் முழிக்கிறார்கள்.அதிமுக ஆட்சியில் ஏதோ சமச்சீர் கல்விக்கு எதிராக கைகள் நகர்த்தப்படுவதாக அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் அது என்ன என்றே புரியவில்லை. உயர்நீதிமன்றம் சமச்சீர் கல்விக்கு ஆதரவு என்றும், அதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றம் சென்றது என்றும் அங்கும் சமச்சீ ர்கல்விக்கு ஆதரவாகத்தான் தீர்ப்பு வந்துவிட்டது என்றும் எல்லோரும் படிக்கிறார்கள். ஆனால் அந்த சமச்சீர் கல்வி எது, அதை எப்படி அமுல்படுத்துவது என்பது யாருக்கும் தெரிந்துவிட்டதா எபது நமக்கு தெரியவில்லை.

" என் எழுத்துக்களை" எதிர்க்கத்தான் அந்த "அம்மா" சமச்சீர் கல்வியை எத்ரிக்கிறார் என்று கலைஞர் அனுதாப லையை ஏற்படுத்த முயல்கிறார். ஆனால் ஜெயலலிதாவோ, கல்வி அமைச்சரோ தாங்கள் "சமச்சீர் கல்விக்கு" எதிரி அல்ல என்று கூறுகிறார்கள். திமுக அமுல்படுத்தியது "அரைவேக்கட்டுத்தனமானது" என்று கல்வி அமைச்சர் கூறியுள்ளார். அபப்டியானால் சிபிஎம் சொல்வது போலத்தான் அதிகவும் கூறுகிறது என்று அர்த்தமா? அந்த அறைவீகாட்டு கல்வியை அதிமுக வேண்டாம் என்றும், சிபிஎம் "வேம்டும்" என்றும் கூறுகிறார்களே?


இன்று ஒரு செய்தி. சென்னை சாந்தோம் "மாநகராட்சி பள்ளியில்" ஒன்றாம் வகுப்பிற்கு "பிழைகளே" சேரவில்லை. பக்கத்தில் இருக்கும், மீனவ, மற்றும் தலித், மற்றும் ஏழை குழந்தைகளைக் கூட "பெற்றோர்கள்" தனியார் பள்ளிகளில் சேர்த்து விட்டனர். இப்படி ஒரு மனோ நிலை பெற்றோர் மத்தியில் இருக்குமானால் அது "சமச்சீர் கல்விக்கு" கிடைக்கும் ஆதரவா? இவாறு நமது மக்கள் மத்தியில் "மாநகராட்சி பள்ளிகளைவிட" தனியார் பள்ளிகள் சிறந்தது என்ற யானோ நிலை இருக்குமானால் எங்கிருந்து சமசீர் கல்வியை கொடுவர முடியும்? தஹ்னியார் கல்வி வணிகர்களை எப்படி விரட்ட முடியும்? " சமசீர் கல்வியின்" நோக்கம் அதுதானே?


முதலில் அதிகமாக "சமச்சீர் கல்வி"பற்றி பேசும் சிபிஎம், சிபியை, கட்சிகளின் தோழர்கள் தங்கள் குழந்தைகளை எந்த பள்ளிகளில் சேர்த்துள்ளார்கள் என்று பார்க்க வேண்டும். அவர்களை "மாநகராட்சி பள்ளிகளில்" குழந்தைகளை சேர்க்க சொல்லி வற்புறுத்த வேண்டும். அடுத்து "தலித்" இயக்கங்களின் தோழர்களும், முற்போக்கு பேசும் "கல்வியாளர்களும்"தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க வேண்டும். பிறகுதான் நாம் திமுக, அதிமுக கட்சிகாரர்களை பார்த்து அவர்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க சொல்ல முடியும். அபப்டி செய்துவிட்டால், தானாகவே "கல்வி வணிகர்கள்" ஓடிப்போய் விடுவார்களே? அத்தகைய கட்டமைப்பு வந்தவுடன் "சமச்சீர் கல்விக்கான" சூழல் ஏற்பட்டுவிடுமே?

Thursday, June 16, 2011

நுணலும் தினசரி தன் வாயால் கெடும்

நுணல் என்பது "தஹ்வைலையின்" ஒரு வகை. வயல்வெளிகளில், தவளைகள் வழக்கமாக் கால்வாய்களில் ஓடும். சிறிய வாய்களைக் கொண்ட குழிகளில், ஓட்டைகளில், பள்ளங்களில், அந்த தவளைகள் ஓடி ஒளிந்து கொள்ளும். பாம்புகள் தன்கள் இரையைத் தேடி அங்கே வரும். தவளைகள் பாம்புகளுக்கு நல்ல இரை. " நுணல்" என்ற தவளை வகை," குவா, குவா" என்று கத்தும். அப்படி கத்தும்போது, இரை தேடி அவரும் பாம்புகளுக்கு அவை இருக்கும் இடம் தெரிந்து விடும். அதனால் அந்த நுனல்கள் மாட்டிக்கொள்ளும். பாம்புகள் அவற்றை விழுங்கி விடும். இதைத்தான்" நுணலும் தன் வாயால் கெடும்" என்று கூறுவார்கள்.


பதவியை இழந்த பிறகு, தனது கழகத்தையும் எதிர்க்கட்சியாகக்கூட ஆக்காத நிலையில், திமுக தலைவர் கலைஞர் இப்போது தினசரி என்ன வேலை செய்வது என்பதில் திக்கு, முக்காடுகிறார். அதனால் வழமையாக தான் எழுதும் உடன்பிறப்புக்கான கடிதத்தில், பல செய்திகளை தீட்டி வருகிறார். ஆனால் ஒவ்வொரு நாளும் அவர் எழுதுவது, அவரையே வசமாக மாட்டிவிடுவதாக அமைந்துவிட்டது. உதாரணமாக "கச்சத்தீவு விவகாரத்தில், தான் எந்த தவறும் செய்யவில்லை" என்று நியாயப்படுத்த அவர் எடுத்திருக்கும் முயற்ச்சிகள், அவரையே அகல பாதாள பள்ளத்தில் கொண்டுபோய் தள்ளுவதாக அமைந்து விட்டது. கச்சத்தீவை தாரை வார்த்ததற்கு தன் மீது குற்றம் சாட்டும் முதல்வர் ஜெயலலிதாவிற்கு பதில் சொல்வதாக கலைஞர் எழுதுகிறார்.

அப்போது "ஜெயலலிதா ஒருகாலத்தில் கூறிய சொற்களையெல்லாம்" இப்போது திருப்பி எடுத்தாண்டு அதன்மூலம் அவரும், தன்னைப் போலத்தான் கூறினார் என்று நியாபடுத்த முனைந்துள்ளார். அதில் ஒரு இடத்தில், " அனைத்துநாட்டு எல்லையைத் தாண்டி தங்களுக்கு தேவைப்படும் மீன்கள் கிடைப்பதால், அங்கே செல்லவதற்கு, தெரிந்தோ, தெரியாமலோ, மீனவர்கள் சென்று விடுகிறார்கள்" என்று ஜெயலலிதா சொன்னதாக மேற்கோள் காட்டிய கலைஞர், "அதேபோலத்தான் தானும் சொன்னதாக" தெரிவித்து, " வரம்பு மீறி மீனவர்கள் போகிறார்கள்" என்று கலைஞர் எழுதியுள்ளார். இப்படித்தான் சென்றமுறை, " பேராசை பிடித்து மீனவர்கள் எல்லை மீறுகிறார்கள்" என்று கலிஞர் எழுதி, மீனவர்களின் கோபத்திற்கு உள்ளானார். இப்போது இப்படி சொல்லி மீண்டும் மீனவர்களின் கோபத்திற்கு உள்ளாகிறார். ஆனால் அதற்கு ஜெயலலிதாவை தவறாக மேற்கோள் காட்டுகிறார். ஜெயலலிதா மீனவர்கள் செயலை நியாயப்படுத்தி பேசியிருந்ததை தான் மீனவர்களை தாக்கி பேச பயன்படுத்துகிறார். அது திருப்பி அடிக்கிறது.

மறுநாள், கேள்வியும் நானே, பதிலும் நானே என்ற பாணியில், முரசிளியில், உடன்பியாரப்புகளுக்கு எழுதும் கடிதத்தில், " பீம்சிங் இது என்ன புதுக்குழப்பம்" என்ற தஹ்ளைப்பில், " செம்மொழி நிறுவனம்" பற்றி எழுதுகிறார். அதில், "என்னவெல்லாம் ஊழல் நடந்துள்ளது" என்பதும், "நானூறு கோடி ரூபாயும் வீணாக செலவு செய்யப்பட்டது" என்ற உண்மையும் டேஹ்வையில்லாமல் அவரது எழுத்தின் எதிர் விளைவாக கிளப்பப்பட்டுள்ளது. இப்படித்தான் அவர் " நுணலும் தன் வாயால் கெடும்" என்ற பழமொழியை, " நுணலும் தினசரி தன் வாயால் கெடும்" என்று மாற்றி அமைத்துள்ளார்.

Tuesday, June 14, 2011

திமுக உயர்மட்ட கூட்டத்தில் நடந்த " போட்டி காய் நகர்த்தல்" என்ன?

திமுக உயர்மட்ட கூட்டம் " களிஞறது காங்கிரஸ் மீதான கோபத்தை" காட்டப் போகிறது என்ற யூகம் எப்படி பொய்யானது? கலைஞர் " காங்கிரஸ் அரசாங்கத்திலிருந்து திமுக தனது அமைச்சர்களை பின்வாங்கிக் கொள்ளவேண்டும்" என்று " தீர்மானம்" போடலாம் எனச் சொல்லவில்லையா? சொனார். ஏன் சொன்னார்? தனது மகள் கனிமொழி மீது இலாத, பொல்லாத வழக்கை போட்டு அவரை உள்ளே தள்ளியது தயாநிதிதான் என்ற ஆழமான கருத்தை, வலுவாக வைத்துள்ள கலைஞர் அப்படி ஒரு தீர்மானத்தை திமுக உயர்மட்ட குழுவில் கொண்டுவந்து, அதன்மூலம் " தயாநிதி உட்பட அனைத்து அமைச்சர்களையும்" மத்திய அரசிலிருந்து திரும்ப பெற்றுவிடலாம் என்று கணக்கு போட்டு ஒரு திட்டத்தை கொடுவந்தார். ஆனால் அந்த " உயர்மட்ட குழு" கூட்டத்தில், நேற்றைய தனது நம்பிக்கையான "ஸ்டாலினை" நம்பாமல், இன்றைய தனது நம்பிக்கையான " அழகிரியை" மட்டுமே நம்பி , அழகிரி பக்கத்திலேயே ஒருக்களித்து அமர்ந்திருந்த " அழகிரியின் நேற்றைய எதிரி, தயாநிதி மாறன் " காதில் பேசி, பேசி, அழகிரியை முடுக்கி விட்டு பேசவைத்தார்.

அதில் " மத்திய மைச்சர் பதவியை இழந்தால் தயாநிதி திஹார் சிறை போவது விரைந்து நடக்கலாம், அனால் அந்த மத்திய அமைச்சர் பதவியை இழந்தால் அழகிரியும் உடனடியாக புழல் சிறை செல்ல வேண்டியது வரும் " என்ற கருத்தில் அழகிரி பேசி அந்த கலைஞரின் தீர்மனத்திர்த்கு முற்றுப் புல்லிவைத்துவிட்டார். இந்த விசயத்துய் வெளியே வந்து கூறியதற்காக அந்த முனால் சட்டத்தின் மீது கோபமாகவும் இருக்கிறார்களாம்.

உச்சநீதிமன்றம் எழுப்பிய கேள்விக்கு விடை.

கலைஞர் காட்சி ஊடகத்திற்கு சென்ற 200 கோடி ரூபாயும் எங்கே போயிற்று என்றும், அதுதான் லஞ்சப்பணம் என்று குற்றம் சாட்டும் சீ.பி.ஐ. அந்த பணத்தை கைப்பற்றியுள்ளதா என்றும் உச்சநீதிமன்றம் எளிதாக கேள்வி கேட்டு விடலாம். அதற்கான உண்மை பதிலை அவர்கள், எப்படியாவது சீ.பி.ஐ. யை நெருக்கி, அதுவும் ராஜாத்தி குடும்பத்தினரை நெருக்கி பெற்றுவிடலாம். கனிமொழிக்கு பிணை கிடைக்க வேண்டும் என்றால், அவருக்கு அந்த பணத்தில் சம்பந்தம் இல்லை என்ற உணமையையும் யாராவது வெளியே சொல்லிவிடலாம். அந்த உணமையைத்தான் அந்த " பாட்டியாலா நீதிமன்றத்தில்" ராஜாத்தி அம்மையார் புலம்பி, புலம்பி சொல்கிறார்களே. ஆனால் அது யாருக்கு போனது என்பதுதானே கேள்வி. கனிமொழியும் தனது நண்பர்களிடம், அந்த பணத்தில் ஒரு பைசா கூட தான் கைநீட்டி வாங்கவில்லை என்ற உண்மையை சொல்லிவந்தார். ஆனால் யாருக்கு போனது என்று சொல்லவில்லையே?

தனதையையும், குடும்பத்தையும், கழகத்தையும் காப்பாற்றுவதற்காக கனிமொழி அந்த உண்மையை சொல்லவில்லை. அப்படியானால் எப்படி கனிமொழி மீது மட்டும் பழி விழுந்தது? அவருக்கு சம்பந்தம் இல்லாத பணத்தை, கலைஞர் காட்சி ஊடகத்தில் தனக்கு சம்பந்தம் இல்லாதபோதே , உணமிக்கு மாறாக யார் பொட்டுக் கொடுத்து? சீ.பி.ஐ. சொல்கிறது, " அமிர்தம்தான் கனிமொழி கலைஞர் காட்சி ஊடகத்தில் முக்கியமாக இயக்கியவர் என்று கூறினார் " . அப்படியானால் உண்மையில் கலைஞர் காட்சி ஊடகத்தை முழுமையாக இயக்கிய முக்கியத்தர்களில் ஒருவர் " அமிர்தம்" என்பது பொய்யா? அப்படியானால் " அந்த 200 கோடியில், அமிரதத்திற்கு ஐம்பது கோடியும், அவர் மகன் குனாநிதிக்கு ஐம்பது கோடியும், ஸ்டாலின் மகன் உதயநிதிக்கு ஐம்பது கோடியும், அழகிரி மகன் தயாநிதி அழகிரிக்கு ஐம்பது கோடியும், ஆக மொத்தம் இரநூறு கோடியும் கை மாறியது" என்று சீ.பி.ஐ. கண்டுபிடித்ததாக சொல்வது உண்மையா இல்லையா? அப்படி கண்டுபிடித்தால் அதற்காக " மன்னர் குடும்பதிற்குள் உள்ள " பெண்கள் குடும்பத்தை, ஆண்கள் குடும்பம் பழி வாங்கியதை, பெண்கள் குடும்பம் போட்டுக் கொடுத்துவிட்டது" எனபதா?

Sunday, June 12, 2011

"ஜெ தீர்மானத்தை" அலட்சியப்படுத்தியவனும், அவதூறு செய்தவனும்.

தமிழக முதல்வர் செல்வி.ஜெ.ஜெயலலிதா, " ராஜபக்சே கும்பலை போர் குற்றவாளிகள்" என்று ஐ.நா. சபை அறிவிக்க, மத்திய அரசு ஆவண செய்யவேண்டும் என்ற ஒரு தீர்மானத்தை, தமிழக சட்டப்பேரவையில், " தனி தீர்மானமாக" தானே முன்மொழிந்து ஏகமனதாக நிறைவ்டேரியது உலகத் தமிழர் மத்தியில் " பெரு மகிழ்ச்சியை" ஏற்படுத்தியது. அப்படிப்பட்ட தீர்மானத்தை முதலிலேயே " தடுக்க வான செய்த" இந்திய நாட்டின் தலைமை அமைச்சர் அலுவலகம், பிறகு " தயங்கி, தயங்கி" தேசிய பாதுகாப்பு ஆலோசகர் " சிவசங்கர் மேநோனை" அனுப்பி அமைதியாக முதல்வரிடம் பேசியது.


ஆனால் "கொழுப்பு சென்ற மேநோனுக்கு" என்ன நேர்ந்ததோ தெரியவில்லை. தேவை இல்லாமல், தமிழக முதல்வரை " இழிவு படுத்த முயன்றுள்ளார்" தானும், நிரூபமா ராவும் ராஜபக்சே கும்பலுடன் பேசிய பேச்சில், தங்கள் பக்கம், " இந்திய நலனும், அவர்கள் பக்கம் இலங்கை நலனும்" பேசப்பட்டன என்றும், தமிழ்நாட்டு தீர்மானம் மற்றும் எந்த தனி நபர் கருத்துக்களும்" விவாதிக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளார். இது தமிழ்நாட்டு " சட்டமன்றத்தையும், மக்களையும்" அவமானப்படுத்தும் பேச்சு. இந்த மேனன் " தமிழ்நாட்டு முதல்வரை இழிவு படுத்தி விட்டு மீண்டும் இங்கே நுழைய விடகூடாது", இப்படித்தான் தமிழர்கள் என்ன முடியும்.


இந்த மேனன் இப்படி என்றால், இன்னொரு அமெரிக்க கைக்கூலி இங்கே இருக்கிறார். அவர் பெயர் சு.சாமி. அந்த ஆள் " சட்டமன்ற தீர்மானத்தை" மிகவும் கேவலமாக பேசியுள்ளான். அது போன்ற " கடந்தகால மனிதஉரிமை மீறல்கள்" பற்றி பேசக்கூடாது என்கிறான். புலிகளை பாதுகாக்க அவர்கள் பற்றி கூறாமல், தீர்மானம் போடப்பட்டுள்ளது என்கிறான். ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, மின்சார பிரச்சனை, சட்ட-ஒழுங்கு பிரச்சனையைத்தான் கவனிக்க வேண்டும் என்கிறான். அதாவது" தமிழர்களுக்கு ஆதரவாக தீர்மானம் போடாதே" என்கிறான். இந்த அமெரிக்க கைக்கூலி "ராஜபக்செக்கும் கைக்கூலி" எண்பதை காட்டுகிறான். அதே நோக்கில், இன்னொரு மன்மோகன் கைத்தடி தனது தமிழ் நாளேட்டில், தலையங்கம் எழுதியுள்ளார். அதிலும், " பொருளாதார தடை விதித்தால் சீனா நுழைய ஏதுவாகிவிடும்" என்று எழுதி, மன்மோகன் கரத்தை பலப் படுத்தியுள்ளார்.

இவ்வாறாக " தலைமை அமைச்சர் அலுவலகம்" தான் எடுத்த முயற்ச்சியை தாண்டி, ஒன்றுக்கு, இரண்டு தீர்மானங்களை தொடர்ச்சியாக இரண்டு நாளும்" போட்டு விட்டார்களே என்று கடுப்பாகி பேசுகிறார்கள். அதில் " கச்சதீவு தீர்மானமும்" சேர்ந்தது அவர்களுக்கு குற்ற உணர்வை தூண்டுகிறது. இந்த எதிரிகளை தமிழர்கள் அடையாளம் காண வேண்டும்.

கலைஞர் துப்பிய கோழை எச்சம்.

கொள்கை பரப்பு செயலாளரை சிறையில் தள்ளினார்கள். தலைவர் செயற்குழுவை கூட்டினார். கொ.ப.செ.க்கு ஆதரவு கொடுத்தார். சிறைக்கு அனுப்பியவர்கள் மீது தலைபருக்கு கோபம் வரவில்லை. பிறகு மாடியில் மனைவியையும், மகளையும் விசாரித்துக் கொண்டே அவர்கள் " தொகுதி பேரம்" பேசினார்கள். கேட்டதை விட்டுக்கொடுத்த தலைவருக்கு கோபம் வரவில்லை. ஆத்து மகளை சிறையில் தள்ளினர். தலைவர் அழுதார். ஆனால் சிறையில் தள்ளியவர்கள் மீது தலைவருக்கு கோபம் வரவில்லை. தொடர்ந்து மகளுக்கு " பிணையை மறுத்தார்கள்". தலைவருக்கு கோபம் வந்து விட்டது என்று தொண்டர்கள் நினைத்தார்கள்.


தலைவர் " உயர் மட்டக் குழுவை" கூட்டினார். இதுவரை தானே முடிவு எடுக்க முடியாமல் இருந்ததால் மட்டும்தான் " குட்டக் குட்ட குனியும் கூட்டமடா" என்று நினைத்து தொடர்ந்து குத்துகிறார்கள். இந்த முறை தலைவர் " வெளியே வார முடிவு எடுப்பார்" என்று தொண்டர்கள் நம்பினார். தலைவர் " காங்கிரஸ் மீது" தப்பில்லை என்றார். இது " கோழைத்தனமா"? தலைவர் " துப்பிய கோழையா"?

Friday, June 10, 2011

திமுகவை விட்டு மன்னர் குடும்பம் விலக வேண்டும் என்ற கோரிக்கை எழவில்லையே?

திமுக ஒரு இலட்சியத்திற்காக உருவாக்கப்பட்டது என்பதாகத்தான் அண்ணாவால் அறிவிக்கப்பட்டது. அதை நம்பித் தான் தமிழ்நாட்டு மக்களும் அந்த திமுகவை இந்நாள் வரையில் ஆட்சிக்கு கொண்டுவருகிறார்கள். எதிர்கட்சியாக அல்லது எதிரி கட்சியாக ஆக்கினாலும் திமுகவை தமிழ்நாட்டு மக்கள் ஏதோ ஒரு லட்சியம் கொண்ட கட்சி என்பதாக எண்ணுகிறார்கள். அவரகளது எண்ணத்தில் மண் விழும்படி இப்போது கலைஞர் அந்த கட்சியை இழுத்துச் சென்றுள்ளார். இன்று அது அவரது " குடும்ப கட்சி" என்பதாக ஆகிவிட்டது.


அவர்களது குடும்பத்தினர் அவரது அறிவுரைப்படி செய்த " ஊழல்களால்" அந்த கழகம் இப்போது தோல்வி அடைந்தது மட்டுமின்றி, தலைமையில் உள்ள ஒவ்வொரு அமைச்சராக சிறைக்கு செல்லும் அளவு, திமுகவின் "மரியாதை" கேவலப்பட்ட்டு வருகிறது. இது உண்மையான "திமுக உடன்பிறப்புகள்" செரிக்க முடியாமல் திணறுகிறார்கள். அவர்கள் கழகத்தை தொடர்ந்து எடுத்துச் செல்ல தயாராய் இருக்கிறார்கள். கலைஞரும், அவரது குடும்பத்தாரும் கழகத்திலிருந்து விலகிக் கொண்டு, கழகத்தை " அண்ணாவின் உணமையான உடன்பிறப்புகள் " கைகளில் ஒப்படைக்க தயாரா? இதுவே அவர்களது வாதம்.

Thursday, June 9, 2011

திமுக இனி தமிழருக்கான கட்சி இல்லையா?

ஜூன் எட்டாம் நாள் ஒரு " காலகட்டம்" முற்றுப் பெற்றது. அதாவது திமுக என்ற கட்சி, மு.க. தலைமையில் செயல்பட்டுக்கொண்டிருந்த கட்சி, " தமிழர்களுக்காக, தமிழர் நலனுக்காக," செயல்படுகிறது என்ற மாயை, பல பத்தாண்டுகளாக இருந்துவந்த "மாயை" 2009 ஆம் ஆண்டு வன்னியில் நான்காவது போர் தோற்கடிக்கப் பட்ட நேரத்திலேயே, " அம்பலமாகி" இருந்தாலும், உலகத் தமிழர்கள் அந்த திமுக தலைவரை " போர்க் குற்றவாளி பட்டியலில்" சேர்த்திருந்தாலும், மிச்ச, சொச்சம் இருந்த " தமிழின எச்சங்கள்" அந்த எண்பத்தெட்டு வயது முதியவர் மீது இருந்துவந்தது. அதுவும் இந்த நாளில் " முழுமையாக நீக்கப்பட்டு விட்டது" இனி திமுக தலைமையை " தமிழர் நலனுக்கானது" என்று எவராவது இந்த பூமிப் பந்தில் " தனது நாக்கை போட்டு சொல்ல முடியாது"


தமிழின அழிப்பு போரை நடத்திய " ராஜபக்சே கும்பலை" ஐ.நா. சபை "போர்குற்றவாளிகள்" என்று அறிவிக்க, மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்ற " தீர்மானம்" , தமிழக சட்ட மன்றத்தில், "ஏகமனதாக" நிறைவேற்றப் பட்டது. இது ஒரு " வரலாற்று தீர்மானம்" . தோற்றத்தில் இந்த "தீர்மானம்" ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையை பாதுகாக்க, அரசியல் உரிமையை அறுதியிட, தமிழர் விரோதிகளை தண்டிக்க, எனபது போல தோற்றமளிக்கிறது. ஆனால் இது உண்மையில் " தமிழ்நாட்டு மக்களது மானத்தைகாப்பதர்கான" தீர்மானம். ஏன் என்றால் " கருணாநிதி ஆட்சி, ஈழத் தமிழர்களை கொன்று குவிப்பதை வேடிக்கைபார்த்ததால், ஈழத் தமிழர் மீதான போரை இந்திய பேரரசு நடத்தியபோது, உடன் சென்றதால், ராஜபக்சே உடன் கை குலுக்கியதால், ராஜபக்சேவை நியாயப் படுத்தியதால், ராஜபக்சேவை இந்திய அரசு அனைத்து நாட்டு அரங்கில் காப்பாற்றிய போது,மவுனம் சாதித்ததால், ஈழரைக் கோடி தமிழ் மக்களின் மானமும் கப்பலேறியிருந்தது"



உலகெங்கும் இருக்கும் பல தமிழ் உணர்வாளர்கள், " துரோகி கருணாநிதி இருக்கும் தமிழ்நாட்டு மண்ணில் காலடி எடுத்து வைக்க மாட்டோம்" என்று உருதியாகாரிவித்து இருந்தார்கள். அவர்களது உணர்வுகளை புரிந்து கொண்ட தமிழ்நாட்டு மக்கள் , இந்த தேர்தலில் அந்த "கருணாநிதிக்கும் அவரது குமபலை சேர்ந்த ஒவ்வொரு கட்சிக்கும் "கல்தா "கொடுத்து இருந்தார்கள்" அதன் எதிரொலியே இந்த " தீர்மானம்" அகவே இது " தமிழ்நாட்டு மக்களின்" மானத்தை காப்பதற்கான தீர்மானம். அதே சமயம் இந்த " தீர்மானம்" இன்று அகில உலக அரங்கிலே நடக்கும் " தமிழர் விடுதலை அரசியல் போராட்டத்திற்கான" . ஒரு " போர் பிரகடனம்" எதிரை "போர் குற்றவாளி என அறிவிக்க சொல்வதும் " ஒரு " போர் பிரகடனம் தானே"

Tuesday, June 7, 2011

"ஜெ" ஐ ஏமாற்ற ராஜபக்சேயின் புதிய தூதர்.

தமிழ்நாட்டில் மக்கள் எல்லாம் " போர் குற்றவாளிகளுக்கு" எதிராக வழங்கிய தீர்ப்பால் " ஜெர்யலலிதா" பதிவுக்கு வந்துவிட்டார் எனபது ராஜபக்சேவிற்கு முதல் அடியாக இருந்தது. அப்போதும் டில்லி மீது நம்பிக்கை வைத்து கொழும்பு காய் நகர்த்தியது. ஆனால் தில்லியோ எப்படியாவது " ஜெயலிதாவை நண்பராகிக் கொள்ளுங்கள்" என்று அறிவுரை சொன்னது. அடஹ்ர்குப் பின் எடுக்கும் பல முயற்சிகளும் கொழும்பிற்கு வெற்றியைத் தரவில்லை. தனது புதிய " காய் நகர்த்தலுக்கு" ஆள் தேடி அலைந்தது.

இப்போது " மிலிந்த மோர்கோடு" என்ற ஒரு நபரை கண்டுபிடித்துள்ளது. அவர் இப்போது ராஜபக்சேவின் "மூத்த ஆலோசகராக" பொறுப்பேற்றுள்ளார். அந்த " மிலிந்த" ஏற்கனவே "ஐக்கிய தேசிய கட்சியின்" வெளிவிவகார அமைச்சராக இருந்தவர். அதாவது " ரணில் விக்கிரம சின்காவின்" வலது கரமாக இருந்தவர். அது மட்டுமின்றி பில் கிளிண்டனின் மனைவியின் சகோதரியை மணமுடித்தவர். இப்படிப்பட்ட ஒரு அரை அமெரிக்கா ஆளை ஏன் பிடித்தார் மகிந்தா? இத "மிலிந்த" உலக அளவில் பிரபல அரசியல் தூதராம். அமெரிக்காவின் " டைம்ஸ்" ஏட்டின் உலகத்தலைவர் என்ற பெருமையை பெற்றவராம். எதையும் சாதிப்பதில் வல்லவராம்.

அந்த " மிலிந்த" இப்போது " சந்திரபாபு நாயுடுவை" பிடித்துவிட்டாராம். அவர் மூலம் " ஜெயலலிதாவிடம்" நேரம் பெற்று சந்திக்க ஏற்பாடு செய்கிறாராம். அதற்கு ஏமாறுபவர் என தமிழக முதல்வரை இவர்கள் நினைத்து விட்டார்கள். இந்த " மலிந்த" "நேசனல் டிரஸ்ட் " என்ற நிறுவன முதலாளி. இவர் பேசி, பேசியே அடுத்தவர்களை இனங்கவைப்பதில் வல்லவர் என்பது ராஜபக்சேவின் கணக்கு. ஆனால் " தமிழக மக்களின் இன உணர்வை புரிந்துள்ள ஜெயலளித்ஜா இதற்கு இணங்கப் போவது இல்லை" அப்படி இனஅகினால் அதைப்வைத்து தமிழ் மக்கள் உணர்வுகளை கலைஞர் பயன்படுத்திவிடுவார் எனபது கூடவா ஜெயலலிதாவிற்கு புரியாது?

இந்திய அரசின் செயலால் சிக்கிக் கொண்டார் ராஜபக்சே.

இலங்கை அதிபர் மாளிகை செய்யும் அனைத்து செட்டைகளையும் பொறுத்துக் கொண்டிருக்க இப்போது இந்திய அரசின் தலைமை தயாராக இல்லை. ஏற்கனவே சில, பல விசயங்களில் இரண்டு நாட்டு அரசாங்கங்களுக்கும் முரண்பட்டு முற்றி வருகிறது. இந்திய அரசு கேட்கும் ஒவ்வொரு ஒப்பந்தந்தையும் அப்படியே கொடுக்க இலங்கை தயாரில்லை. சீனாவிற்கு இலங்கை அரசு கொடுக்கும் ஒவ்வொரு ஒப்பந்தமும் இந்திய அரசுக்கு உடன்பாடாக இல்லை.சமீ[பத்தில் இந்திய அரசு அறிவித்த " ஈழத்தமிழருக்கு அதாவது போரில் இடம் பெயர்ந்தவர்களுக்கு, இந்திய அரசின் உதவியுடன் அவரவர் இடங்களில் வீடு கட்டிக் கொடுக்கும் திட்டம்" அபப்டியே நடுத்தெருவில் நிற்கிறது. அதற்கு காரணம் இலங்கை அரசு அந்த வீடு கட்டிக்கொடுக்கும் "அரசு சாரா நிறுவனத்திடம்" இந்திய அரசு நேரடியாக நிதியைக் கொடுக்க கூடாது என்றும், தன் வழியே தான் கொடுக்க வேண்டும் என்றும் சொன்னது இந்திய அரசை நிலை குலையச் செய்துவிட்டது.

மன்னார். திரிகோணமலை, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, ஆகிய மாவட்டங்களில் அங்குள்ள " அரசு பிரதிநிதிகள்" [ கவர்மென்ட் ஏஜெண்டுகள்] இடங்களை அடையாளம் காட்டிய பிறகும் அந்த வேலை தொடங்காமலேயே நிற்கிறது. இவையெல்லாம் இலங்கை அரசின் கடும் பிடிவாதத்தால் என்று இந்திய அரசு நினைக்கிறது. அதேபோல பல வணிக ஏற்பாடுகளும் கிடப்பில் போடப்பட்டுள்ளன. "பிடிபட்ட போராளிகளை, சரணடைந்த போராளிகளை விடுதலை செய்வதிலோ, இடம் பெயர்ந்த தமிழ் மக்களை அவர்களது சொந்த பகுதிகளுக்கு குடியமர்த்துவதிலோ எந்த வித முன்னேற்றமும் இல்லை என்பது இந்திய அரசை எரிச்சலூட்ட வைத்திருக்கிறது. அதுதவிர " ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையின் மீது ராஜபக்சே மீது நடவடிக்கை எடுக்க" அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் வற்புறுத்தும் போது, இந்திய அரசும் ராஜபக்சேக்கு ஆதரவாக இல்லை எனபது இலங்கை அரசை கொபத்த்ஜிற்கு உள்ளாகியுள்ளது.


இத்தகைய சூழலில், கே.பி. மூலம் ஒரு நேர்காணலை ராஜபக்சே அரசு இந்திய ஊடகங்களிலேயே கொடுப்பதும், அதில் ராஜீவ் கொலை [பற்றி கண்டபடி கே.பி.பேசுவதும், இந்திய அரசுக்கு புதிய தலைவலியை கொடுத்துள்ளது. ஏற்கனவே கே.பி.யை எங்களிடம் ஒப்படையின்கள் என்று கேட்டுக் கொண்டிருந்த இந்திய அரசு இப்போது அடஹ்ற்கான காய் நகர்த்தலை தொடங்கி விட்டது. அனைத்து நாட்டு அரங்கில் " இன்டர்போல்" மூலம் தேடப்படும் " கே.பி. யின் சிவப்பு ஓரங்கட்டும் அறிக்கை" யை { ரெட் கார்னர் ரிப்போர்ட்} இந்திய அரசு இப்போது இலங்கை அரசுக்கு அனுப்பி உள்ளது. அதற்கு " கே.பி. எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை" என இலங்கை அரசு பொய் சொல்ல முடியாது. ஏன் என்றால் " கே.பி. நேர்காணலை இந்திய ஊடகத்திற்கு சமீபத்தில் ஏற்பாடு செய்தது இலங்கை அதிபர் மாளிகைதான்" என்ற உண்மை ஊரறிந்த உணமையாக இருக்கிறது. அவசரத்தில் தமிழக முதல்வரை நெருக்கும் எண்ணத்தோடு அத்தைகைய நேர்காணலை, இலங்கை அதிபர் மாளிகை ஏற்பாடு செய்திருந்தது. இ[பொது அதனாலேயே மாட்டிக்கொண்டது.


இப்போது இலங்கை அதிபரின் நேரடி கண்காணிப்பில் உள்ள " அமளி மாளிகையில்" பசில் ராஜபக்சே பொறுப்பில் கே.பி. இருப்பது தெரிந்துவிட்டதால், ராஜபக்சே வசமாக சிக்கிக் கொண்டார். அதனாலேயே இப்போது அனுப்பப்பட்டுள்ள இன்டர்போல் அறிக்கைக்கு " கே.பி.ஐ இந்தியா கையில் ஒப்படிக்கவேண்டிய நிர்ப்பந்தத்தில் ராஜபக்சே இருக்கிறார்" அதனால் வருகிற பதினாறாம் நாள் இலங்கை செல்லும் சிவசங்கர் மேநோனும், நிரூபமா ராவும் இதுபோன்ற பல சிக்கல்களை பேச இருக்கின்றனர்.,

Friday, June 3, 2011

இந்தி வெறியன், ஊழலை எதிர்க்க முடியாது.

"யோகா குரு" என்பதாக அழைக்கப்படும் " ராம்தேவ்" இப்போது " பட்டினிப் போராட்ட பூச்சாண்டி" காட்டி, இந்திய மக்களையே " ஊடகங்கள் " மூலம் ஈர்க்கப் பார்க்கிறார். இங்கே " நாடு மாபெரும் ஊழல்களை எதிர்கொள்ளும் நேரத்தில் " அதற்கு மாற்று தேட வேண்டிய கட்டாயம் ஆள்வோருக்கு ஏற்பட்டு உள்ளது. நாட்டு மக்களது உணர்வுகளை மதிக்காத அரசாங்கம் என்ற வப்பெயரைப் பெறுவதற்கு இந்திய அரசு தயாராக இல்லை. ஏன் என்றால் " ஊடகங்கள்" வளர்ந்துள்ள இன்றைய சூழலில், இந்திய மக்களது உணர்வுகள் மத்திய அரசால் சரியாக எதிரோளிக்கப்பட வில்லை என்று உலக சமூகம் எண்ணினால், இந்தியாவிற்கு கொடுக்கப்படும் நிதி உதவிகள் தடைப்படும் என்ற அச்சம் மத்திய அரசிற்கு உள்ளது.


அதனால்தான் " காங்கிரசில் ஒரு சாராரும்" அதேபோல இங்கே தொடர் சுரண்டலில் ஈடுபட்டுவரும் " கார்பரேட்களும்" இந்த " ஊழல் விவகாரத்தை" தற்காலிகமாக நிறுத்தி வைக்க, அதாவது இந்திய மக்கள் மத்தியில் ஒரு மாயையை ஏற்படுத்த முயல்கிறார்கள். அதற்காக " தயார்" செய்யப்பட்டவர்தான் " அன்னா ஹசாரே" என்று கூறினார்கள். அவரும் " சோனியாவால் " ஆசிர்வதிக்கப்பட்டார். ஆனால் அவரை பா.ஜ.க. கும்பல் ஏற்றுக் கொள்ளவில்லை. இப்போது " ராம்தேவ்" கிளம்பி இருக்கிறார். நடுத்தர மக்களாக உள்ள பல இந்துக்கள் அவரை நம்பி களத்தில் குதிக்கிறார்கள். அதுவே அவரது பலம். அதைக்கண்டு மத்திய அரசு அஞ்சுகிறது.அதனால்தான் மொத்த அமைச்சர்கள் அவர் பின்னால் ஓடுகிறார்கள். ஆனால் " திக்விஜய் சிங் " கடுமையாக அந்த ராம்தேவை அம்பலப்படுத்துகிறார்.


ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க., போன்ற இந்துத்துவா சக்திகள் " பாபா ராம்தேவை" ஆதரிக்க தொடங்கியவுடன், காங்கிரஸ், திக்விஜய் டிங் மூலம் ராம்தேவை விமர்சிக்க சொல்கிறது. அவரும், " ராம்தேவ் ஒன்று சந்நியாசியாக இருக்க வேண்டும். அல்லது அரசியலுக்கு வரவேண்டும்" என்று கூறியுள்ளார். " ராம்தேவ் ஒரு சந்நியாசி போல இல்லாமல் ஏன் நிறைய கோடிகணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை வைத்துக்கொண்டுள்ளார்? " என்று திக்விஜய் டிங் கேட்கிறார். ராம்தேவ் தனக்கு வரும் வருமானங்கள் எங்கிருந்து வந்தன என்றும் எவ்வளவு வந்தன என்றும் பகிரங்கமாக தெரிவிக்க தயாரா? என்றும் திக்விஜய் டிங் கேட்கிறார். ராம்தேவை ஒரு வியாபாரி என்று டிக்விஜைசிங் கூறிவிட்டார்.



இந்த நேரத்தில் ராம்தேவ் கூறியுள்ள கோரிக்கைகளில், " ஆங்கிலத்தை நீக்கி விட்டு, இந்தியை இந்தியா முழுவதும் கொண்டு வரவேண்டும்" என்று கூறியுள்ளார். அதை திக்விஜய் சிங் என்ற " இந்தி பேசும் மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ்காரர்" தெளிவாக மறுக்கிறார். இந்தியாவில் இந்தி மொழி பேசாத மாநிலங்கள் பல இருக்கின்றன என்று திக்விஜய் சிங் கூறியுள்ளார். இந்தியாவில், தமிழ்நாடு உட்பட, தென்னிந்தியா முழுவதும் மட்டுமின்றி, மகாராஷ்டிரா, குஜராத், ஒரிசா, மேற்கு வங்கம், திரிபுரா, அஸ்ஸாம், நாகாலாந்து, மணிப்பூர், அருணாச்சலப் பிரதேசம், மிசோரம், காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், போன்ற பல்வேறு மாநிலங்களில் " இந்தி மொழி" மக்களால் பேசப்படும் மொழி அல்ல. இந்த உண்மை " ராம்தேவ்" போன்ற " கோடீஸ்வர சந்நியாசிகளுக்கு" தெரியாமல் இருக்கலாம். அங்கே ஒரு தமிழ்நாட்டின் திருச்ச்சியைச்சேர்ந்த உதவியாளர், " கொவிந்தாச்ச்காரியார்" இருக்கிறாரே, அவருக்கும் தெரியாதா? எப்படி ஒரு " இந்தி வெறியன்" ஊழலை ஒழிக்க போராட முடியும்?

யாருடன் " கூடா நட்பு" யாருக்கு " கேடாய் முடியும்"?

தமிழ்நாட்டின் மூத்த அரசியல்வாதி கலைஞருக்கு இன்று பிறந்த நாள். அவர் அதையொட்டி சில சீரிய கருத்துக்களை அறிவித்துள்ளார். அதில் " அரசியல் மறுமலர்ச்சிக்காக உழைக்கும் தொண்டர்கள், கூடா நட்பு, கேடாய் விளையும் எண்பதை உணரவேண்டும்" என்று அப்போது கலைஞர் அறிவித்தார்.
இன்று அவருக்கு " பிறந்த நாள்" கலைஞர் " திருவாரூர்" வாக்காளர்களால் சட்ட மன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.இன்று தமிழக ஆளுநர் உரை சட்டமன்றத்தில் நடந்தது. ச.ம.உ.வான கலைஞர் சட்டப்பேரவை சென்றிருந்தால், தோல்வியையும் மறந்து ஆளுநருடன் கை குலுக்கி இருந்தால், முதல்வர் ஜெயலலிதாவே அவருக்கு " பிறந்த நாள்" வாழ்த்து சொல்லும் நிர்ப்பந்தம் வந்திருக்கும். அதை கலைஞர் ஏனோ செய்யவில்லை.


அப்படி தமிழக சட்டப்பேரவைக்கு " ஆரோக்கியமான சூழல்" ஒன்று உருவாவதைக்கூட "கூடா நட்பு" என்று அவர் எண்ணிவிட்டாரோ, என எண்ணிவிட வேண்டாம். " கனிமொழி" க்கு இப்படி ஒரு ஆலோசனையை கலைஞர் வழங்கி இருக்கிறாரோ என்றும் எண்ணிவிட முடியாது. ஏன் என்றால் கனிமொழி சிக்கியிருக்கும் "கலைஞர் டிவி "யின் பங்கு,பண விவகாரத்தில், " தான்தான் கனிமொழியை வற்ப்புறுத்தி, பங்குதாரர் ஆக்கினேன்" என்று கலைஞரே சொல்லியிருக்கிறார். ஆகவே " தான் பெற்ற அனுபவத்தை பிறருக்கு" புரிய வைக்க கைஞர் கூறும் " படிப்பினை" யாக அதை நாம் எடுத்துக் கொள்ளலாம். அப்படி எடுத்துக் கொண்டால், " தயாநிதி மாறனைக் கொண்டுவந்து அரசவையிலே அமரவைத்து" எண்பதை கூடா நட்பு என்று அவர் கூறியிருக்கலாம். அதைவிட " காங்கிரஸ் கட்சியை நம்பி" வைத்துக்கொண்ட உறவு, கூட்டணி, நட்பு என்பது இப்போது சீ.பி.ஐ. பெயரில், நிர்ப்பந்தம், குற்றச்சாட்டு, சதி, கைது, சிறை, என்று தொடர் தொல்லைகளாக வருகிறதே, அதனால் தமிழ் மக்கள் மத்தியிலும் கடுமையான கேட்ட பெயர் வாங்க வேண்டி இருக்கிறதே என்று அவர் எண்ணியிருக்கலாம்.


"காங்கிரஸ் உடன் கூடா நட்பு" இப்போது திமுக வை " நடுத்தெருவிற்கு" கொண்டுவந்து நிறுத்தி விட்டதே என எண்ணித்தான் கலைஞர் கூறியிருக்க வேண்டும். அது " கேடாய் முடியும்" என்றும் கூறிவிட்டார். இன்று தனது பிறந்த நாளில், டில்லி சென்று " கனிமொழியை" சந்திக்கலாம் என்றும், " கணிம்ழி\ஹிக்கு" இன்று பிணை தரும் தீர்ப்பு வெளியாகும் எனவும் கூறப்பட்ட கூற்றுக்கள் உண்மையல்ல என்று ஆன பிறகு, அது அதாவது " காங்கிரஸ் நட்பு என்ற கூடா நட்பு" இப்போது திமுக விற்கும் தனக்கும், தனது குடும்பத்திற்கும் " கேடாய் முடிந்துவிட்டது" என்பதைத்தான் அவர் குறிப்பிடுகிறார் எனப் புரிகிறது.

தலைவர் பிறந்த நாளில், தொண்டர்கள் ஆவேசம்.

தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவரின் 88 ஆவது பிறந்த நாளில், காலையில் " அன்னா சதுக்கத்தில்" கூடிய திமுக தொண்டர்கள் ஒருவருக்கொருவர் ஆத்திரத்தோடு அளவளாவிக் கொண்டது, " கழகத்தை அழிக்கத் துணிந்த தயாநிதி சகோக்கள் பற்றித்தான்" என்றி அந்த திமுக பிரமுகர் கூறினார். தாங்கள் உயிரினும் மேலாக வளர்த்த கழகத்தை, எங்கிருந்தோ வந்து உள்ளே நுழைந்து, தயாநிதி மாறன் மூத்த திமுக முன்னோடிகளுக்கு இருந்த இடத்தை பிடித்து, தலைவரிடம் அக்கறை உள்ள திமுக போல நடித்து, அதன்மூலம் " மத்திய அமைச்சர்" பொறுப்பையும் வாங்கி விட்டார் என்று அங்கலாய்த்தனர்.


கலைஞரின் மருமகன் முரசொலி மாறன் மீது கழக உடன்பிறப்புகளுக்கு அதிகமான மரியாதை உண்டு. அதைப் பயன்படுத்தி, அவரது மகன் என்ற பெயரில் இந்த கடைந்தெடுத்த வியாபாரி கழகத்திற்குள் நுழைந்து விட்டார் என்றும் கூறினர். கழகத்திற்காக எந்த ஒரு தியாகத்தையும் செய்யாத இந்த கலா-தயா சகோக்கள் உள்ளே நுழைந்து, மத்திய அமைச்சரவையை பெற்றதனால் அவர்கள் டில்லிக்கு செல்லப் பிள்ளை ஆகிவிட்டனர் என்றனர். அவர்களுக்கு மட்டுமே தெரிந்த " தொலைத் தொடர்பு " அமைச்சகத்தை அடம்பிடித்து வாங்கிக் கொண்டபோதுகூட எங்களுக்கு அந்த " தந்திரம்" புரியவில்லை என்கின்றனர். தாங்கள் நுகர்ந்து பார்த்து கண்டுபிடித்த ஸ்பெக்ட்ரம் விவகாரம் கூடத் தலைவருக்கு மிகத் தாமதமாகத் தான் தெரிந்து இருக்கிறது என்றனர். திமுக " இந்தி எதிர்ப்பு" போரில் ஈடுபட்டதனால், அதன் ஒவ்வொரு தீவிர உறுப்பினரும் " இந்தி மொழிப் பாடம்" கற்காமலேயே இருப்பார்கள். ஆனால் எங்கோ போய் தான் மட்டும் இந்தி பாடம் கற்றுக் கொண்டு வந்துவிட்ட " தயாநிதி" அதன்மூலம் டில்லி தலைவர்கள் மத்தியில் சரளமாக பேசுவதும், பழகுவதும் செய்து " தான்தான் திமுக" என்பதுபோல ஒரு பாவலா கட்டிவந்திருக்கிறார் என்றும் குற்றம் சாடினர்.


தலைவர் பிறந்த நாளில் " உடன்பிறப்புகளின்" ஆதங்கம் இப்படித்தான் வெளிப்பட்டது. அதனால் தயாநிதிக்கும், ஆ.ராஜாவிற்கு வந்த சிறை வரவேண்டும் என்றும், சரத்குமார் ரெட்டி நிலையில் இருக்கும் கலாநிதிக்கு சரத் நிலை வரவேண்டும் என்றும், கலாநிதி மனைவி காவேரிக்கு, கணிம்ழிக்கு கிடைத்த நிலை கிடைக்கவேண்டும் எனவும் அவர்கள் வேண்டி நின்றனர். இது அந்த வரலாற்று தடங்கள் கொண்ட கழகத்தின் பாதையில் ஒரு பெரும் " அதிர்ச்சியாகத்தான்" இருந்தது

Thursday, June 2, 2011

சபாஷ். சரியான போட்டி. நீயா? நானா? யார் திஹார் சிறையில்?

மன்னர் குடும்பம் " ராஜா ராஜா சோழனின்" வாரிசாம். உண்மை. உண்மை. ஏன் என்றால் ராஜா ராஜா சோழன் எந்த வகையிலும் நல்லவன் கிடையாது. பெண்களை இழிவுபடுத்த, " பொட்டுக் கட்டுதலை" கொண்டுவந்தவன். தலித்களை இழிவு படுத்த அவர்களது " நிலங்களை பறித்தான்". 'அந்தணர்களை வளர்த்துவிட" அவர்களுக்கு "பிரும்ம தேசத்தையும் ", " சதுர்வேத மங்கலத்தையும்" கைமேல் கொடுத்தான்/ அந்த ராஜா ராஜா சோழனின் வாரிசாக தன்னை வரித்துக்கொண்டவர்களுக்கு, இதே போல ராஜராஜசோழனின் குணங்கள் இருக்கத்தானே செயயும்?

இப்போது அந்த இளைய அரசரின் அன்பு மருமகன் "தயா" தனது மாமா ஸ்டாலினை தூக்கி பிடித்து வந்தவர், தானே வசமான பொறியில் சிக்கிக்கொண்டார். ஸ்பெக்ட்ரம் ஊழலில், 2004 முதல் 2007 வரை " தயாநிதி மாறன்" தான் அந்த " தோளைத் தொடர்பு அமைச்சகத்திற்கு" அமைச்சராக இருந்தவர்." ஆகவே அப்போது நடந்த அனைத்து ஊழகளுக்கும் பொறுப்பு அவர்தான். 2001 ஆம் ஆண்டு விற்கப்பட்ட அதே விலைக்கு, நான்கு ஆண்டுகள் கழித்தும் கொடுப்பது என்பது, " வளர்ந்துள்ள சந்தையின் தன்மையை " கணக்கில் எடுக்காமல், வாங்குகின்ற "தனியாருக்கு " பெருத்த லாபத்தையும், அரசுக்கு பெருத்த நட்டத்தையும் ஏற்படுத்த முனைவது ஆகும்.


அப்படிப்பட்ட ஒரு " கடுமையான ஊழலை" செய்த " தயா" 2007 ஆம் ஆண்டு தனது பதவி பறிப்புக்கு பிறகு, தனது அமைச்சரவையை கைப்பற்றிய தனது " தாத்தாவின்" ஆளான " ஆ.ராஜாவை" பூத்துக் கொடுப்பதற்காகவே தனது சொந்த அச்சு ஊடகமான " தினகரனில்" மற்றும் தனது சொந்த காட்சி ஊடகமான " சன் டி.வி.யில்" ஸ்பெக்ட்ரம் ஊழல் என்று அன்றாடம் வெளியிட்டு அந்த விஷயத்தை பொதுமக்கள் பார்வைக்கு கொண்டு வந்தார். அதேபோல இப்போது " ஸ்பெக்ட்ரம் ஊழலில்" ஆ.ராஜாவும், கனிமொழியும், சரத் குமார் ரெட்டியும் சிக்கி சிறைக்கு சென்றபோது, அகமகிழ்ந்து, தனது அரசியல் போட்டியாளர், வணிக போட்டியாளர், மைச்சர் பதவி போட்டியாளர் ஆகியோர் மாட்டிவிட்டார்களே என்று அதிகமாக மகிழ்ந்தவரும் இவரே.


அதனால்தான் " கலைஞர் டி.வி.யில்" மேலாண்மை இயக்குனராக இருந்த " சரத் குமார் ரெட்டியை" , அவரது முதலாளிகளில் ஒருவரான " மு.க. அழகிரி" சிறையில் பார்க்க சென்ற போது, இப்போது அழகிரியின் நண்பர் போல நடித்துவரும், தயாநிதி உடன் சென்றதால், சிறைக்குள் கொடுத்துவிட்ட மனுவில் உள்ள பெயர்களை பார்த்த சரத்குமார் ரெட்டி, " இத்தனைக்கும் காரணமான தயாநிதியை சந்திக்க மாட்டேன்" என்று கூறிவிட்டதால், அழகிரி மாத்திரமே உள்ளே ச்நேறு பார்ஹ்து வந்த கதை வெளியே வந்து விட்டது.


இப்போது " தெஹெல்கா" வெளியிட்ட பெரிய கட்டுரையும், அடுத்து " டைம்ஸ் நொவ்" , "ஹெட்லைன்ஸ் டுடே ", "சீ.ஏன்.ஏன்.-ஐ.பி.ஏன்." போன்ற காட்சிஊடகங்கள் நாடெங்கும், உலகமெங்கும் வெளியிட்ட செய்திகள், அனைத்தையுமே கொடுத்தது " சீ.பி.ஐ." தான் என தெரிய வந்துள்ளது. எப்போது உச்சநீதி மன்றம் 2001 இலிருந்து,ஸ்பெக்ட்ரம்விற்பனை பற்றிய விசாரணையை நடத்துங்கள் என்று கூறியதோ, அன்றிலிருந்தே , " தயாநிதி காலத்து" விவகாரங்களும் சீ.பி.ஐ.யால் விசாரிக்கப்பட ஆரம்பிக்கப்பட்டது என்று இப்போது வெளி வ்ந்திருக்கிறது.


"ஏர்செல்" நிறுவனம் சிவசங்கரனிடம் இருந்தது. இந்த " சிவசங்கரன்" தயாவின் அப்பாவான முரசொலி மாறனின் " காய் நகர்த்தலுக்கு" இணங்கி சென்றவர். அவர் " ஸ்டேர்லிங் கம்ப்யுடர் " என்ற பிரபல நிறுவனத்தை வைத்திருந்தவர் என்பது அனைவரும் அறிந்த பழைய கதை. முரசொலி மாறன் " வணிகத் துறை " அமைச்சராக இருந்த போது, சில சித்து விளையாட்டுக்களை செய்தார். தமிழ்நாட்டில் " நாடார் சமூகம்" தனது கடுமையான உழைப்பால் வணிகத்தில், " பனியாக்கள், செட்டியார்கள்" எட்ட முடியாத ஒருஉயர் நிலையை எட்டி இருந்தது.அதனால் தனக்காக ஒரு வங்கியையே உருவாகியது.


அந்த வங்கிதான் " தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி". அந்த வங்கியின் பண்குதாரர்களுக்குள் எழும்பிய முரண்பாட்டை, " வணிக அமைச்சர்" கவனித்தார். அதை வசப்படுத்த நினைத்தார். தனக்கு நெருக்கமான " வட இந்திய முதலாளிகளுக்கு" அதாவது " சிந்தி முதலாளிகளுக்கு" அந்த "சுயம்பு தமிழர்" வங்கியை தாரை வார்த்து கொடுக்க திட்டமிட்டார். தனது வணிக தந்திரங்களுக்கு " நாடார் சமூகத்தின் " சுயசார்பு பொருளாதார வளர்ச்சி" தடையாக இருக்கும் என்று " முரசொலி மாறன்" எண்ணியிருந்திருக்கிறார். அதனால்தான் " வட இந்திய வணிகர்களிடம்" சுயமாக எழுந்துள்ள ஒரு தமிழர் வங்கியை ஒப்படைக்க முடிவு செய்தார். அதற்காக அவர் " சிவசங்கரனை" பயன்படுத்திக் கொண்டார்.


" ஸ்டேர்லிங் சிவசங்கரன்" அன்றே மாறனின் சதிக்கு பலியாகி விட்டார். அதன் பிறகு " நாடார் சமூகமே" எழுந்து " தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியை" மீட்க போராடிய போது, " முரசொலி மாறனே" இடைத்தரகராக வந்து அதை தீர்த்து வைத்தார். அதே சிவசங்கரன், " தயாநிதியின் அமைச்சரவை காலத்தில்" ஏர்செல் நிறுவனம் மூலம், மகன் மாறனிடம் வருகிறார். ஏர்செல் நிறுவனத்திற்கு " பல வடநாட்டு நகர்களில் இணைப்பு" கேட்கிறார். தந்தையின் கையாளுதல்களுக்கு, ஒத்துழைத்த சிவசங்கரனை, மகன் கைகழுவ திட்டமிட்டார்.


ஏர்செல் என்ற பெரிய நிறுவனம் தயாவின் கண்ணை உறுத்தியது. அதை வேறு பெரிய வெளிநாட்டு முதலாளிக்கு விற்றால் அதில் " பங்கு" கிடைக்குமே என்று எண்ணினார். தந்து அமைச்சர் பதவியை பயன்படுத்தி என்ன செயலாம் என மகன் சிந்தித்தார். அப்பன் ஒரு " தமிழர் சமூகம்" பொருளாதார ரீதியாக எழுந்து நிற்பதை உடைத்தவர். மகன் ஒரு தனிநபர் " தமிழ் முதலாளி" வைத்திருக்கும் பெரிய நிறுவனத்தை காலி செய்ய திட்டமிட்டவர். " தயா" தனது நண்பரான மலேசியாவின் " அஸ்ட்ரோ" காட்சி ஊடக வலைப்பின்னலை வைத்திருக்கும் " அனந்த கிரிஷ்ணனுக்கு" உதவி செய்து அதில் பங்கு எடுக்க எண்ணினார்.

அனந்தகிரிஷ்நனோ வெளிநாட்டுக்காரர் வெளிநாட்டு பங்குகள் நமது " தொலை தொடர்பில் " 24 விழுக்காடுதான் இருக்கலாம்..அப்போது நிதி மைச்சராக இருந்த தனது நண்பர் " ப.சிதம்பரத்திடம்" ஆலோசனை கேட்கிறார் தயா. சிதம்பரமும் அன்றைய பிரதமர் மன்மோகனுக்கு விருப்பமான " அந்நிய நிதி முதலீட்டை" கூட்டுவது என்பது பொருத்தமாக இருக்கும் எனவும், ஆலோசனை தந்து " நிதி அமைச்சகத்திலிருந்து" அதற்கு அனுமதியையும் வழங்கியிருக்கிறார். இவாறு அதில் ஒரு " கூட்டு கொள்ளை" நடந்திருக்கிறது.


வெறும் 800 கோடிக்கு ஏர்செல் தந்து பங்குகளை விற்க " தயாநிதி" நிர்ப்பந்தம் செய்திருக்கிறார். அந்த ரகசிய செய்தியை இப்போது சீ.பி.ஐ. அதிகாரிகளிடம் அவரே கூறிவிட்டார். பங்குகளை வாங்கியதோ " அஸ்ட்ரோ அனந்தகிரிஷ்ணனின்" இன்னொரு நிறுவனமான " மாக்சிஸ்". அதை வாங்கிய ஆஸ்ட்ரோ தனக்கு "இந்தியா முழுவதும் இணைப்புகள் வேண்டும்" என்று தொலை தொடர்பு அமைச்சகத்திடம் கேட்டுக் கொண்டது.உடனடியாக் அதை தயா வழங்கினார். அதர்கு பதில் சில காலம் கழித்து, " சன் டிரெக்ட் " நிறுவனத்துக்கு அந்த "மாக்சிஸ்" ஒரு பெரும் தொகையை அதாவது " 725 கோடியை மூலதனமாக கொடுத்தது.


இது ஊழல் இல்லையா என்பதே இப்போது கேள்வி. எப்படியோ இந்த ஊழலில் ஒரு " தமிழின விரோதப் போக்கும்" தொடர்ந்து அந்த குறிப்பிட்ட மாறன் குடும்பத்தாரால் செய்யப்பட்டது என்பது புரியப்படவேண்டும். அதன் பிறகே " தமிழ் முதலாளிகளாக" எழுகின்ற நாடார் சமூகத்தின் பிரதிநிதியாக " ராஜாத்தியும், கனிமொழியும்" தோன்றுகிறார்களே என்ற ஆத்திரத்தில் அவர்களையும் அழிக்க தனது நச்சு ஆயுதங்களை அந்த " குடும்பம்" பயன்படுததியது. எல்லாமே இப்போது " பூமராங்" என்று திருப்பி அடிக்கிறது. சோனியா கைவிட்டு விட்ட நிலையில், சீ.பி.ஐ. தாய்வை மட்டுமா உள்ளே தள்ளும்? கலாவும், மனிவியும் என்ன ஆவார்கள்?

Wednesday, June 1, 2011

சிங்கள வணிகர்களின் கைக்கூலியா கருணா?

வடக்கிலும், கிழக்கிலும் தமிழர் பகுதிகளில், சிங்களவன் குடியேற்றம் எப்படி சரி? தமிழர் பகுதி கடைகளை சிங்களவன் ஆக்கிரமிப்பு செய்வது எப்படி முறை? நல்லூர் முருகன் கோவிலில் கூட , வணிகம் செய்ய சிங்களவன் நுழையலாமா? இது தமிழரின் வாழ்வியல், பண்பாட்டு, நடைமுறைகளுக்கு ஆபத்தல்லவா? கோவிலை புனிதமாக என்னும் தமிழரின் பண்பாட்டிற்கு இழுக்கு அல்லவா? இப்படி உலகத் தமிழர் அனைவரும் குரல் எழுப்பும் வேளையில், ஒரு துரோகியின் குரல் மட்டும் வேறுபட்டு கேட்கிறது.


கொழும்பு நகரில் இதுவரை தொண்ணூறு விழுக்காடு தமிழ் முஸ்லிம்கள் வணிகம் செய்து வந்தனர். போருக்கு பிறகு சிங்களம் அந்த முஸ்லிம் தமிழர்களை விரட்டி விட்டு, சிங்கள வணிகர்களால் நிரப்பி வருகிறது. இப்போது கொழும்பு நகரில் அறுபது விழுக்காடுதான் முஸ்லிம் தமிழர்கள் வணிகம் செய்கிறார்கள். இதை எதிர்த்து தமிழர்கள் குரல் கொடுத்தால், அதற்கு விரோதமாக ஒரு தமிழர் துரோகி, குரல் எழுகிறது. அந்த குரல், "கொழும்பில் தமிழர்கள் வணிகம் செயயலாம் என்றால், வடக்கில் ஏன் சிங்களர்கள் வணிகம் செய்யக்கூடாது" என்று வினவுகிறதாம். அந்த பெரிய துரோகக் குரலுக்கு சொந்தக்காரர்தான் " கருணா " என்ற துரோகி.

ஒன்று செய்யலாம். வடக்கு கிழக்கிலிருந்து சிங்களர்களை கருணாவே விரட்டிவிடு. கொழும்பிலிருந்தும் தமிழர்களை நாங்கள் திரும்பப் பெற்றுக் கொள்கிறோம். சரிதானே. உன் இனத்துடன் வாழை முடியாது என்பதற்காகத்தானே விடுதலை கேட்கிறோம்.

தன்வினை தன்னைசுடும். ஓட்டப்பம் வீட்டைசுடும்--அறிவாலயம் முனகல்.

நாலாவது வன்னிப்போரை நடத்துவதிலும், தமிழினத்தை அழிப்பதிலும் அவர்களுக்குள் இணைப்பு இருந்தது. ஆனால் அதன்பிறகு, அவர்கள் தங்களுக்குள்ளே "பனிப்போர்" நடத்தத் தொடங்கினர்.அதுவே " பழிப்போர் " ஆக மாறியது. ஒருவரை ஒருவர் ஸ்பெக்ட்ரம் ஊழலில் தாக்கிக் கொண்டனர். குடும்பக் கழகத்திற்குள்ளே இந்த" கூத்து " நடந்தது. குடுமத் தலைவர் அவ்வப்போது, "பலியாடுகளுக்கு" வக்காலத்து வாங்கி வந்தார்." பலியாடுகள் " இரண்டும், " பட்டி" யில் அடைக்கப்பட்டன. " ஆடுகளைப் பார்க்க " ஊடக பெருச்சாளிகள், தங்கள் குடும்ப " ஓநாய்களை" அனுப்பி வைத்தன. ஓநாய்களும் பறந்து சென்று அங்கே " பட்டியிலிருக்கும் " ஆடுகளை, அதிலும் பெண் ஆட்டை பார்த்து, பார்த்து கண்ணீர் விட்டன.

மனதிற்குள் " பலியாடுகள் மூன்றும்" பழிவாங்கிய பெருச்சாளிகளை முறைத்துப் பார்த்துக் கொண்டே இருந்தன. "சமயம் உங்களுக்கும் வரத்த்தானே செய்யும்" என்று பலியாடுகளும், தாய் ஆடும் கருவிக் கொண்டன. "பாரம்பரிய முதலாளி" விடுவதாய் இல்லை. எழு ஆண்டுகளுக்கு முன்னால் " இளைய பெருச்சாளி" இலாக்க வாங்கியபோது, போட்டியில் தோற்றத்தை மறந்து விடவில்லை அந்த முதலாளி. அதை அந்த " குடும்பத் தலைவரிடம்" போட்டுக் கொடுத்துத் தானே இலாகாவையே பறிக்க முடிந்தது. இப்போது தனக்கு பொருள் குவித்தவர்கள் " பலி ஆடுகளாக" " பட்டி" யில் அடைக்கப் பட்டதற்கு " பழி வங்க" அந்த "பாரம்பரிய முதலாளி" காய் நகர்த்த மாட்டாரா?

வசமாக மாட்டிக் கொண்டனர் " பெருச்சாளி சகோதரர்கள்". எல்லா ஊடகங்களிலும் "எச்சரிக்கை மணி" அடித்து விட்டார்கள். அடுத்து " பெருச்சாளி சகோக்களுக்கும்" தலைநகரிலேயே " பட்டி" தயாராகி விடும். இது மேலிடக் கட்டளையாம். இவர்கள்தானே " நாலு ஆண்டுகளுக்கு முன்பு தங்கள் " அச்சிலும், காட்சியிலும்" அமப்லப்படுத்தியவர்கள். அதன்மூலம் " போட்டியாளர்களை " முதல் பலி" கொடுக்க ஏற்பாடு செய்தவர்கள். இப்போது, " ஆட்டை கடித்து, மாட்டை அக்டித்து, மனிதனை" கடிக்க அந்த மேலிடம் வருகிறதே. " வினை விதைத்தவன் வினை அறுப்பான்" " திணை விதைத்தவன் திணை அறுப்பான்" பட்டினத்தார் சொன்னார்- " ஓட்டப்பம் வீட்டைச் சுடும்" இதுதான் இப்போது " அறிவாலயத்தின் அகமகிழ்வு"